வெள்ளி, 30 டிசம்பர், 2016

5,11ல் ராகு கேது பெரும் வலிமையும், தனது திசையில் தரும் பலாபலன்களும் !


சுய ஜாதகங்களில் நவகிரகங்கள் ராசியில் வலிமை பெற்று இருப்பதும் ( ஆட்சி, உச்சம், நட்பு ,சமம்) ராசியில் வலிமை அற்று இருப்பதும் ( நீச்சம், பகை ) சுப கிரகங்களுடன் சேர்க்கை பெற்று இருப்பதும், பார்வை பெற்று இருப்பதும், அசுப கிரகங்களின் சேர்க்கை பெற்று இருப்பதும், பார்வை பெற்று இருப்பதும், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நடைமுறையில் வரும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் யோக அவயோக பலாபலன்களை தரும் என்ற கருத்து உள்ளது, இது முற்றிலும் ஜாதக கணிதத்திற்கு முரண்பட்ட கருத்தாகவே ஜோதிடதீபம் கருதுகிறது, அதாவது சுய ஜாதகத்தில் வலிமை ( ஆட்சி, உச்சம், நட்பு ,சமம்) பெற்ற கிரகத்தின் திசை நடக்கும் பொழுது யோக பலன்களையும், வலிமை ( நீச்சம், பகை ) அற்ற கிரகத்தின் திசை நடக்கும் பொழுது அவயோக பலன்களையும் தரும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது, இது சிறிதும் ஏற்புடையது அல்ல, ஏனெனில் ஒருவருக்கு நடைபெறும் யோக அவயோக நிகழ்வுகளை நிர்ணயம் செய்யவது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே, கீழ்கண்ட மிதுன லக்கின ஜாதகருக்கு 11ல் அமர்ந்த ராகு பகவான் அந்த பாவகத்தை மிகுந்த வலிமையுடையதாக திகழ செய்கிறார், இவரது ஜாதகத்தில் மிகுந்த வலிமையுடைய பாவகம் எதுவெனில் 5,11 எனலாம், சாயா கிரகங்கள் முறையே 11,5 என்ற நிலையில் அமர்ந்து சம்பந்தப்பட்ட பாவகத்திற்கு 100% விகித வலிமையை தருகின்றனர், எனவே தனது திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலத்தில் சாயா கிரகங்களான ராகுகேது ஜாதகருக்கு தரும் பலன்கள் என்ன? என்பதை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.


லக்கினம் : மிதுனம்
ராசி : கன்னி
நட்ஷத்திரம் : அஸ்தம் 1ம் பாதம்

ஜாதகருக்கு ராகு திசை தற்போழுது நடைமுறையில் உள்ளது ( 10/07/2002 முதல் 09/07/2020 வரை ) 11 ல் வலிமை பெற்று அமர்ந்துள்ள ராகு திசை ஜாதகருக்கு தனது திசையில் 6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருக்கின்றது, எனவே தற்போழுது நடைபெறும் ராகு திசையில் ஜாதகர் 6ம் பாவக வழியில் இருந்து கடன்,உடல் நலம், எதிரி தொல்லை என மிகுந்த இன்னல்களையும் மன உளைச்சல்களையும், 9ம் பாவக வழியில் இருந்து கல்வியில் தடைகளையும், காரிய தடைகளையும், தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கத்தையும், பெரியோர் மற்றும் பெற்றோர் வார்த்தைகளை மதிக்காமல் நடந்து சமூகத்தில் வீண் அவ பெயரையும் சம்பாதிக்கும் நிலையை தந்து கொண்டு இருக்கிறது, மேலும் தனது பித்ருக்கள்  வழியிலான சாபங்களையும், அறிவு பூர்வமற்ற செயல்களினால் தனது வாழ்க்கையை தானே கெடுத்துக்கொள்ளும் நிலையை தந்து கொண்டு இருக்கின்றது, 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு ஏற்படும் இழப்புகள் கொஞ்சம் அதிக அளவிலேயே உள்ளது, மேலும் மன அழுத்தம் மன போராட்டம், எதிர்ப்புகளை சமாளிக்க இயலாத சூழ்நிலை, விபத்து, பொருள் இழப்பு என கடுமையான இன்னல்களுக்கு ஜாதகர் ஆளாக்கிக்கொண்டு இருக்கிறார், ஜாதகருக்கு ஏற்படும் இழப்புகளை ஜாதகரால் தவிர்க்கவே இயலவில்லை, ஊரில் உள்ள உறவுகளும், சொந்த பந்தங்களும் ஜாதகரை மதிப்பதில்லை , அனைவருக்கும் எதிரி என்ற சூழ்நிலையை தற்போழுது நடைபெறும் ராகு திசை 6,9,12ம் பாவக வழியில் இருந்து வழங்கி கொண்டு இருக்கின்றது, இது சாயா கிரகங்களில் 11ல் வலிமை பெற்ற ராகு பகவான் தனது திசையில் தரும் பலன்கள்.

ஜாதகருக்கு கேது திசை பல வருடங்களுக்கு பிறகு வந்தாலும் மற்ற கிரகங்களின் திசையில், புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமத்தில் தரும் பலன்களை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற கேது ஜாதகருக்கு புத்திர ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பது சிறப்பான நன்மைகளை தரும் அமைப்பாகும், பலர் சுய ஜாதகத்தில் 5ல் அமரும் ராகு கேது புத்திர பாக்கியத்தை தடை செய்யும் என்பர், ஆனால் 5ல் வலிமை பெற்று அமரும் ராகு கேது ஜாதகருக்கு முதல் குழந்தையாக ஆண் வாரிசை வழங்கும், ஒருவேளை 5ல் வலிமை அற்று ராகு கேது அமர்ந்து இருப்பின் ஜாதகருக்கு ஆண் வாரிசை நல்காது பெண் குழந்தை உண்டு என்பது அனுபவபூர்வமான உண்மை, மேற்கண்ட ஜாதகருக்கு 5ல் வலிமை பெற்ற கேது தனது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமத்தில் 2,4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று  ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகருக்கு ஜீவனம் மற்றும் தொழில் வழியில் இருந்து சிறப்பான நன்மைகளை தரும் அமைப்பாகும், கேது தனது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமத்தில் ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவதால் ஜாதகர் 2ம் பாவக வழியில் கை நிறைவான வருமானமும், செய் தொழில் முதலீடும், அபரிவிதமான லாபங்களை பெறுவார், 4ம் பாவக வழியில் இருந்து சொத்து சுக சேர்க்கை, வண்டி வாகன யோகம், இடம் வீடு புதிய சொத்துக்கள் மற்றும் சுகபோக யோகங்களை பெறுவார், தனது தாய் வழியில் இருந்து சிறப்பான நன்மைகளை பெறுவார், 10ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அபரிவிதமான தொழில் வளர்ச்சியையும், சிறப்பு மிக்க முன்னேற்றங்களையும், தங்கு தடையின்றி பெறுவார், சுய கவுரவம் மேலோங்கும், அதிகார பதவிகள் ஜாதகரை தேடி வரும், இது சாயா கிரகங்களில் 5ல் வலிமை பெற்ற கேது பகவான் தனது திசையில் தரும் பலன்கள்.

எனவே சுய ஜாதகத்தில் 5,11ல் சாயா கிரகங்கள் அமர்ந்த போதிலும், தனது  திசையில் அமர்ந்த பாவக பலனை ஏற்று நடத்தவில்லை என்பதை கவனத்தில் கொள்க, மேலும் தனது திசையில் ராகு 12ம் பாவக பலனையும், கேது 10ம் பாவக பலனையும்  ஏற்று நடத்துவதே உண்மை இதை முறையாக ஜாதக கணிதம் கொண்டு உணர்ந்து பலாபலன் காண முற்படுவதே, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சரியான வாழ்க்கையை அமைத்து தர உதவும் சிறப்பான நன்மைகளையும்  நல்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 27 டிசம்பர், 2016

இல்லற வாழ்வை நரகம் ஆக்கும் பொருத்தமில்லா வாழ்க்கை துணை !


" நித்தியகண்டம் பூர்ணஆயுசு " என்ற நிலைக்கு ஆளாக்கும் வல்லமை பெற்றது சுய ஜாதக வலிமை அறியாமல் வாழ்க்கை துணையை தேர்வு செய்வது என்பது, பொதுவாக பருவவயதில் வரும் இனக்கவர்ச்சியை மட்டும் அடிப்படையாக கொண்டு இல்லற (காதல் ) வாழ்க்கையில் இணையும் அன்பர்களுக்கு! ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் ஆக மொத்தம் 90 நாட்களில் இல்லற வாழ்க்கை தனது இறுதி அத்தியாயத்தை எழுத ஆரம்பித்தது விடும், கணவன் செய்வது மனைவிக்கு பிடிக்காது, மனைவி செய்வது கணவனுக்கு முற்றிலும் பிடிக்காமல், வாக்குவாதம் அதிகரிக்கும், சமாதானம் செய்ய முற்படுபவரின் கருத்துக்கள் தம்பதியரின் காதுகளுக்கு சென்று அடைவதற்குள், மணவாழ்க்கையில் பிரிவை நோக்கி இருவரும் சென்றுவிடுவார்கள், நலம்விரும்பிகளின் ஆலோசனைகள் யாவும் வீண் விரையம் ஆகும், பெற்றோரின் ஆதரவு உள்ளவர்கள் அடிப்படை ஜீவனத்திற்கு யாதொரு சிரமமும் இன்றி வாழ்வதற்கு வழி உண்டு, பெற்றோர் ஆதரவை இழந்தவர்களின் அஸ்த்திவாரமே ஆட்டம் காணும், தன்னிடம் பல திறமைகள் இருப்பினும் யாவும் ஜாதகருக்கோ ஜாதகிக்கோ உகந்த நேரத்தில் பலன் தாராது, மேலும் பிரிவினால் வந்த மன அழுத்தம், மனஉளைச்சல் ஜாதகரையும், ஜாதகியையும் வெகுவாக பாதிக்கும், உடல் நலம் கெடும், மனநலம் பாதிக்கும், பொருளாதார சிக்கல்கள் மற்றும் எதிர்காலத்தை பற்றியான கவலைகள் பூதாகரமாக கிளம்பி நிற்பதை, அந்த தருணத்தில் தான் உணரும் வாய்ப்பை பெறுவார்கள், விதியின் வலிமையை உணர்வார்கள், பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்களில் சேர்ந்து வாழும் வாய்ப்பு கொஞ்சம் அதிகம், காதல் திருமணங்களில் அந்த வாய்ப்பு என்பதே இல்லை, திருமண வாழ்க்கையை நடத்தி வைத்த நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வெறும் பார்வையாளராக மட்டுமே இருப்பார்கள் என்பதை உணருவதற்க்கே இவர்களுக்கு வெகு காலம் ஆகும், இதனால் "ஜோதிடதீபம்" காதலுக்கு எதிரி என்ற எண்ணம் வேண்டாம், சுய ஜாதகம் வலிமை பெற்ற காதலர்களின் வாழ்க்கையே மென்மேலும் பன்மடங்கு யோக வாழ்க்கையை பெற்று இருக்கிறது, சுய ஜாதகம் வலிமை அற்று பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் கூட விவாகரத்துக்கு சென்று இருக்கின்றது, இது அவரவர் ஜாதக வலிமையை அடிப்படையாக கொண்டது.

கீழ்கண்ட தம்பதியரின் வாழ்க்கையும் அப்படிப்பட்டதே, உறவுகளால் இல்லற வாழ்க்கையில் இணைந்தவர்களின் தற்போதைய நிலை பரிதாபத்திற்க்கு உரியது, தசவித பொருத்தம் கண்டும், சுய ஜாதக வலிமை அற்றதால் இல்லற வாழ்க்கையில் குறுகிய காலத்தில் பிரிவை நோக்கி சென்றுகொண்டு இருக்கின்றனர், இந்த தம்பதியர், இவர்களது சுய ஜாதக வலிமையையும், நடைபெறும் திசாபுத்திகள் தரும் பலாபலன்களை பற்றியும், இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

இல்லற வாழ்க்கை இனிமையாக அமைய தம்பதியரின் சுய ஜாதகத்தில் வலிமை பெற்று இருக்க வேண்டிய பாவகங்களை கருத்தில் எடுத்துக்கொள்வோம் அன்பர்களே :

1) குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகம் வலிமை பெறுவது வரன் வதுவின் சங்கமத்தில் அவசியமாகிறது, இனிமை நிறைந்த வார்த்தைகளும், சிறப்பான குடும்ப வாழ்க்கையையும் நல்கும் வலிமை பெற்றது என்பதனால் தம்பதியரின் ஜாதகங்களில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது மிக மிக முக்கியமாகிறது. ( பெரும்பாலும் தம்பதியருக்குள் வரும் பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணமாக இருப்பதே வாய்தானே )
2) பூர்வபுண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் வலிமை பெறுவது தம்பதியரின் அறிவு திறனையும், தமக்கு ஏற்படும் இன்னல்களை களைவதற்கு உண்டான சமயோசித புத்திசாலித்தனத்தையும், பொறுமையான குணத்தையும் நல்குவது புத்திர ஸ்தானம் எனும் ஐந்தாம் பாவக வலிமையே, மேலும் தனது குலம் செழிக்க திருமணம் ஆனா சில வருடங்களிலேயே நல்ல வாரிசை வழங்குவதும் பூர்வபுண்ணியம் எனும் ஐந்தாம் பாவகமே, மேலும் தம்பதியரின் ஒருமித்த கருத்து மற்றும் அறிவு திறனை ஒரே நேர்கோட்டில் இணைப்பது மேற்கண்ட 5ம் பாவகமே என்பதனால் பூர்வபுண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் மிக மிக முக்கியமாகிறது.
3) களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் பாவகம் வலிமை பெறுவது தம்பதியரின் வாழ்க்கையை நகமும் சதையும் போன்ற உணர்வை தருவது, இருவரின் மனமும் உடலும் ஒன்றற ஜீவசக்தி விரையம் இன்றி கலக்க உதவுவது களத்திர ஸ்தானமே என்றால் அது மிகையில்லை, களத்திர ஸ்தானம் வலிமை பெறுவது எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது இணையை பிரியாமல் சேர்ந்து வாழும் யோகத்தை வழங்குவது ( பெரும்பாலான காதலர்களின் வாழ்க்கையை வெற்றிபெற வைப்பதற்கு களத்திர ஸ்தான வலிமையே அடிப்படையாக அமைகிறது ) மேலும் தம்பதியர் இருவரின் வாழ்க்கையில் கவுரவம் மரியாதை, சமூக மதிப்பை பெரிய அளவில் வாரி வழங்குவது களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவக வலிமையே, சுய ஜாதகத்தில் 7ம் பாவகம் வலிமை குன்றி இருப்பின் தனது வாழ்க்கை துணையை தானே தேர்வு செய்வது என்பது கண்ணை கட்டிக்கொண்டு பாலும் கிணற்றில் விழுவதற்கு சமமானது என்பதை அணைத்தது யுவன் மற்றும் யுவதிகளும் கருத்தில் கொள்வது அவசியமாகிறது.
4) ஆயுள் ஸ்தானம் எனும் எட்டாம் பாவகம் வலிமை பெறுவது தம்பதியரின் ஆயுளை விருத்தி செய்யும் என்பதுடன், திருமணத்திற்கு பிறகான திடீர் அதிர்ஷ்டங்களை உறுதி செய்யும், கணவன் மனைவி வழியில் இருந்தும், மனைவி கணவன் வழியில் இருந்தும் பெரும் தனசேர்க்கையை பற்றி தெரிவிக்கும் பாவகம் என்பதால், தம்பதியரின் சுய ஜாதகத்தில் மேற்கண்ட ஆயுள் பாவகம் வலிமை பெறுவது அவசியமாகிறது, மேற்கண்ட பாவகம் வலிமை இழக்கும் பொழுது பரஸ்பரம் கணவன் மனைவிக்கு வரும் திடீர் இழப்புகளையும், விபத்து மற்றும் மருத்துவ செலவுகளையும் தவிர்க்க இயலாது, பெரும்பாலும் ஆயுள் பாவகம் வலிமை இழந்த வாழ்க்கை துணையை பெரும் அன்பர்களின் வாழ்க்கையில் விதி வெகுவாக விளையாடும், ( மனைவியோ கணவனோ ) காலடி எடுத்து வைத்த நேரம் அனைத்தும் இழந்து ஆண்டியாய் போனது அந்த குடும்பம் என்று ஊரார் பரிகாசிக்கும் நிலையை தந்துவிடும்.
5) அதிர்ஷ்டம் மற்றும் லாபம் எனும் பதினொன்றாம் பாவகம் வலிமை பெறுவது பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் கொண்டுள்ள தன்னம்பிக்கை, ஈடுபாடு, முற்போக்கு சிந்தனை, எதையும் நேர்மறை எண்ணங்கள் கொண்டு சிந்திக்கும் வல்லமை, அதிர்ஷ்டம் மற்றும் லாபத்தின் முழு பலனை தம்பதியர் அனுபவிக்கும் யோகம், எதிர்கால வாழ்க்கையை யோகம் நிறைந்ததாக அமைத்துக்கொள்ளும் சரியான திட்டமிடுதல்கள் என தாம்பத்திய வாழ்க்கையின் 100% விகித வெற்றியை நிர்ணயம் செய்வது தம்பதியரின் ஜாதகத்தில் உள்ள லாபஸ்தானம் எனும் 11ம் பாவக வலிமையே, எனவே தம்பதியரின் சுய ஜாதகத்தில் லாப ஸ்தானம் வலிமை பெறுவது மிக மிக அவசியமாகிறது.
6) அயன சயன ஸ்தானம் எனும் பனிரெண்டாம் பாவகம் வலிமை பெறுவது தாம்பத்திய வாழ்க்கையில் உடல் ரீதியாக வழங்கும் சந்தோஷங்களையும், மனநிறைவையும், நிம்மதியான யோக வாழ்க்கையையும் நிர்ணயம் செய்கிறது, தம்பதியரின் சுய ஜாதகத்தில் மேற்கண்ட அயன சயன ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது, தாம்பத்திய வாழ்க்கையில் அந்நியோன்னிய இல்லற இன்பங்களை வாரி வழங்கும், உடல் மனம் ரீதியான உணர்வுகளை பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் மதித்து நடந்துகொள்ளும் யோகத்தை தரும், தாம்பத்திய வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் வல்லமையை தம்பதியர் இருவருக்கும் தரும், நல்ல ஆன்மீக வெற்றியையும், இறை அருளின் பரிபூர்ண ஆசிகளையும் வழங்கும் வல்லமை கொண்டது, மேற்கண்ட பாவகம் வலிமை இழக்கும் பொழுதே தாம்பத்திய அந்நியோன்னிய வாழ்க்கையில் மனக்கசப்பை தருகிறது, இல்லற வாழ்க்கையில் பேரிழப்புகளையும், தவறான உறவுகள் வழியில் இன்னல்களை தேடிக்கொள்ளும் சூழ்நிலைக்கு ஆர்ப்படுகிறார்கள், இதனால் இல்லற வாழ்க்கை 200% விகித இன்னல்களை சந்திக்கிறது என்பது கவனிக்க தக்க விஷயமாகிறது.


ஜாதகி


லக்கினம் : மீனம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : சுவாதி 3ம் பாதம்

ஜாதகிக்கு அடிப்படையில் லக்கினம் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த இன்னலுக்கு ஆளாக்கும், லக்கினம் வலிமை இழப்பது ஜாதகிக்கு உகந்தது அல்ல, மேலும் ஜாதகி தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து இழப்புகளை பெரிய அளவில் சந்திக்கும் சூழ்நிலையை தரும், குடும்ப ஸ்தானமும் ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகியின் குடும்ப வாழ்க்கையை வெகுவாக பதம் பார்க்கும், ஜாதகியின் வார்த்தைகள் குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இன்மையை தரும், பொருளாதார சிக்கல்களை கடுமையாக, ஜாதகிக்கு ஜாதகியின் கணவருக்கும் தரும், 5ம் பாவக வலிமை பெறுவது ஜாதகிக்கு சிறப்பான விஷயம் என்றாலும், இது நடைமுறைக்கு வர ஜாதகிக்கு நல்லதொரு குழந்தை ( ஆண் ) பாக்கியம் அமைவது அவசியமாகிறது, களத்திர ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது எண்ணிலடங்கா துன்பங்களை வாழ்க்கை துணை வழியில் இருந்தும், எதிர்ப்பால் இன அமைப்பினரிடமும் ஜாதகி சந்திக்கும் துர்பாக்கிய நிலையை தரும், நண்பர்கள்,உறவுகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து கடுமையான இன்னல்களுக்கு ஆளாக்கும், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் உயிர் பயத்தை தரும், ஆயுள் பாவகம் வலிமை பெறுவது தன் கணவனுக்கு திடீர் யோகங்களை தரும், ஜாதகிக்கு பூர்ண ஆயுள் அமைப்பை தரும், இருப்பினும் தனது கணவரால் ஜாதகிக்கு யாதொரு நன்மையையும் இல்லை என்பது கவனிக்க தக்கது, லாப ஸ்தானம் வலிமை இழப்பது ஜாதகிக்கு அதிர்ஷ்டம் அற்ற வாழ்க்கையையும், தன்னம்பிக்கை இன்மையையும், பிற்போக்குத்தனமான செய்கையினால் தனது வாழ்க்கையை தானே கெடுத்துக்கொள்ளும் சூழ்நிலையை தரும், அயன சயன ஸ்தானம் வலிமை இழப்பது, தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தியற்ற நிலையையும், மன கட்டுப்பாடு இன்றி சிந்திக்கும் தன்மையையும், வீண் விரையங்களையும், அனைவராலும் கடுமையான தொல்லைகளை சந்திக்கும் சூழ்நிலையையும் தரும், இல்லற வாழ்க்கையில் தேவையில்லாத சகவாசத்தை தந்து, விரைவாக குடும்ப வாழ்க்கைக்கு மூடு விழா நடத்தும், ஆனால் தற்போழுது நடைபெறும் சனி திசையும், புதன் புத்தியும் ஜாதகிக்கு 5,10ம் பாவக வழியில் இருந்து யோகத்தை தருவது வரவேற்க தக்க அம்சமாகும்.

ஜாதகர்


லக்கினம் : மிதுனம்
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : அஷ்வினி 1ம் பாதம்

ஜாதகருக்கு லக்கினம் மற்றும் குடும்ப ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகும், மேலும் 5ம் பாவகம் வலிமை பெறுவது சிறப்பான விஷயம் 100% விகித யோகத்தை பூர்வ புண்ணிய ஸ்தான வழியில் இருந்து தரும், களத்திர ஸ்தானம் வலிமை இழப்பது வாழ்க்கை துணையுடனான நெருக்கத்தை குறைக்கும், வாழ்க்கை துணை வழியில் திடீர் இழப்பை தரும், ஆயுள் பாவகம் வலிமை பெறுவது, ஜாதகருக்கு நீண்ட ஆயுளையும், வாழ்க்கை துணையை நிந்தனை செய்யும் தன்மையை தரும், லாப ஸ்தானம் வலிமை இழப்பது எதிர்பார்த்த வாய்ப்புகள் கைநழுவி செல்லும், தன்னம்பிக்கை குறையும், பிற்போக்கு தனமான வாதம் ஜாதகரின் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும், அயன சயன ஸ்தானம் வலிமை இழப்பது தாம்பத்திய வாழ்க்கையில் மனக்கசப்பை ஏற்படுத்தும், மன நிம்மதி குறையும், எதிர்பால் உறவுகள் மூலம் ஜாதகரின் வாழ்க்கை அதிக அளவிலான இன்னல்களையும், சிக்கல்களையும் வழங்கும், தம்பதியருக்குள் மகிழ்ச்சி இன்மையும், கவர்ச்சி இன்மையும் அதிகரித்து பிரிவில் கொண்டுவந்து நிறுத்தும், ஜாதகருக்கு சில பாவகங்கள் வலிமை பெற்ற போதிலும், ஜாதகரின் சகவாச தோஷம் ஜாதகரை படுகுழியில் தள்ளும்.

மேற்கண்ட தம்பதியரின் வாழ்க்கையில் சுய ஜாதக வலிமை இன்மையே பிரிவை நோக்கி அழைத்து சென்றுகொண்டு இருக்கின்றது, இதற்க்கு தம்பதியரின் சுய ஜாதக வலிமை இன்மையே மிக முக்கிய காரணமாக அமைகிறது, தற்போழுது நடைபெறும் சூரியன் திசை சனி புத்தி வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினாலும், அடுத்து வரும் புதன் புத்தி தம்பதியரின் இல்லற வாழ்க்கைக்கு சிறப்பான நன்மைகளை வழங்க வாய்ப்பு இல்லை என்பதே முற்றிலும் உண்மை.

குறிப்பு :

திருமணத்திற்கு முன்பு சுய ஜாதக பாவக வலிமையை அறிந்து, இல்லற வாழ்க்கையை ஏற்று கொள்வதே புத்திசாலித்தனம், இதில் தவறு இழைத்தால் வாழ்நாள் முழுவதும் மிகப்பெரிய தவறு செய்தத்திற்கு உண்டான இன்னல்களை தம்பதியர் சந்திக்க வேண்டி வரும், தம்பதியரின் ஒருவரது ஜாதகமாவது பாவக ரீதியாக வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 26 டிசம்பர், 2016

திருமண பொருத்தம் : வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் முன் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் !


" திருமணம் ஆயிரம் காலத்து பயிர் " என்ற முது மொழிக்கு ஏற்ப, தனது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையவும், தனது சந்ததிகளின் வாழ்க்கை சிறப்பு மிக்க எதிர்காலத்தை பெறவும், வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது மிகுந்த கவனம் வேண்டும், வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் தவறு இழைப்பது, "முதல் கோணல் முற்றிலும் கோணல்" என்ற நிலைக்கு சம்பந்தப்பட்டவரை அழைத்து சென்று விடும், பொதுவாக திருமண பொருத்தம் காண்பதில் தசவித பொருத்தத்திற்கு ( நட்ச்சத்திர பொருத்தம் ) தரும் முக்கியத்துவத்தை சற்று சுய ஜாதக பாவக வலிமைக்கும் தருவது அவசியமாகிறது, ஏனெனில் சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே முதன்மை வகிக்கின்றது, நட்ச்சத்திர பொருத்தத்தின் தாக்கம் இல்லற வாழ்க்கையில் மிக குறைந்த அளவிலேயே இருக்கும், ஆனால் சுய ஜாதக பாவக வலிமையே இல்லற வாழ்க்கையில் வரும் நன்மை தீமை, யோக அவயோகங்களுக்கு முழு காரணமாக அமையும் என்பதனால் வரன் வது ஆகியோரின் சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு இல்லற வாழ்க்கையில் இணைப்பது சாலச்சிறந்தது.


லக்கினம் : மேஷம்
ராசி : விருச்சிகம்
நட்ஷத்திரம் : கேட்டை 4ம் பாதம்

மேற்கண்ட வதுவை தேர்வு செய்த மணமகனின் சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானம் மற்றும் புத்திர ஸ்தானம் மிகுந்த வலிமை பெற்று இருப்பது வரவேற்க தக்க அமசமாகும், எனவே ஜாதகர் தேர்வு செய்த வாழ்க்கை துணை ஜாதகருக்கு யோகங்களை தரும் பொருத்தம் உள்ளவரா என்பதை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

ஜாதகிக்கு 1,7ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது லக்கின வழியில் இருந்து நிறைவான யோகங்களையும், அதிபுத்திசாலித்தனம் கொண்டவராகவும் இருப்பர், களத்திர ஸ்தான வழியில் இருந்து நல்ல யோகங்களையும், சிறந்த அறிவுக்கூர்மை கொண்ட வாழ்க்கை துணையையும், கடவுள் அனுகிரகம் பரிபூர்ணமாக கொண்ட ஒரு வாழ்க்கை துணையை பெறுபவர் என்பது சிறப்பான விஷயமாகும்.

2,8,9ம் வீடுகள் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, குடும்ப ஸ்தான வழியில் இருந்து மிகுந்த யோகங்களை பெரும் ஜாதகி என்பதுடன், தனது குடும்ப வாழ்க்கையில் சகல சம்பத்துக்களையும் நிறைவாக பெறுபவர் என்பது உறுதியாகிறது, ஆயுள் பாவக வழியில் இருந்து பூர்ண ஆயுளை கொண்டவர் என்பதும், தனது கணவன் வழியில் இருந்து நிறைவான நன்மைகளை தங்கு தடையின்றி பெறுபவர் என்பதும் உறுதியாகிறது, பாக்கிய ஸ்தான வழியில் இருந்து நல்ல பெருந்தன்மையான மன நிலை, அனைவரையும் அனுசரித்து செல்லும் யோகம், பெரியோர் ஆசிர்வாதம், கடவுளின் பரிபூர்ண அருளாசியை பெரும் யோகம், சுய கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் நிறைந்த நடவடிக்கை மூலம் அனைவரையும் வசீகரிக்கும் யோகத்தை தரும்.

5ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகியின் அறிவு திறனும், சமயோசித புத்திசாலித்தனமும், தனது வாழ்க்கை துணைக்கும், தனது குடும்பத்திற்கும், இந்த சமுதாயத்திற்கும் பெரிய அளவில் பயன்தரும், மேலும் தனது குழந்தைகளுக்கு சிறப்பு மிக்க எதிர்காலத்தை அமைத்து தரும் வல்லமையை பெற்றவர் என்பதும் உறுதியாகிறது, ஜாதகியை திருமணம் செய்துகொள்ளும் அன்பருக்கு பரிபூர்ண யோகங்களை வழங்கும் சிறப்புக்களை பெற்ற ஜாதகி  என்பது உறுதியாகிறது, மேலும் ஜாதகியின் அறிவு திறன்,கல்வி மற்றும் அதி புத்திசாலித்தனம் ஆகியவை ஜாதகியின் வாழ்க்கையில் சகல யோகங்களை வாரி வழங்கும், சிறந்த நிர்வாக திறமை கொண்டவர், இல்லற வாழ்க்கை மிக சிறப்பாக எடுத்து செல்லும் யோகம் பெற்றவர்.

சுய ஜாதகத்தில் 12ம் வீடு மட்டும் பாதிக்கப்படுவது, ஜாதகியின் தாம்பத்திய வாழ்க்கையில் நிகழும் சிறுசிறு குறைபாடுகளை தெளிவு படுத்துகிறது, எனவே 12ம் வீடு உபய ராசி என்பதனால் இதனால் யாதொரு பாதிப்பு வாராது என்பதை கருத்தில் கொண்டு திருமண வாழ்க்கையில் இணைக்கலாம், மேலும் வரனின் சுய ஜாதகத்தில் 12ம் வீடு வலிமை பெற்று இருப்பது தாம்பத்திய வாழ்க்கை சார்ந்த இன்னல்களை களைந்து, ஒற்றுமை நிறைந்த தாம்பத்திய வாழ்க்கையும், மகிழ்ச்சி நிறைந்த குடும்ப வாழ்க்கையையும் வழங்கும் என்பதினால், இவர்களை இல்லறவாழ்க்கையில் 100% விகிதம் இணைக்கலாம்.

மேலும் தற்போழுது நடைபெறும் சூரியன் திசை, எதிர்வரும் சந்திரன் திசை மிகவும் வலிமை பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்துவதால், திருமண வாழ்க்கை  மற்றும் இல்லற வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும் என்பது கவனிக்கத்தக்க  அம்சமாகும்.

குறிப்பு :

மன இயல்புகளை மட்டும் வெளிப்படுத்தும் நட்சத்திர பொருத்தம், தாம்பத்திய வாழ்க்கையின் வெற்றியை  நிர்ணயம் செய்யாது. லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே, தம்பதியரின் வாழ்க்கையில் சகல யோகங்களையும் நல்கும், எனவே திருமண பொருத்தம் காண்பதில் நட்சத்திர பொருத்தம் எனும் தசவித பொருத்தங்கள் 5 % விகித சம்பந்தத்தையும், சுய ஜாதக பாவக ( வலிமை ) பொருத்தங்கள் 100% விகித சம்பந்தத்தையும் தரும் என்பதால், சுய ஜாதக வலிமை அடிப்படையில் திருமண பொருத்தம் காண்பதே தாம்பத்திய வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.
   
வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 19 டிசம்பர், 2016

ஏழரை சனியின் தாக்கமா? சுய ஜாதக வலிமை இன்மையா ?



 பொதுவாக நாம் அதிக அளவில் இன்னலுறும் நேரங்களில் ஜோதிட ஆலோசனை பெரும் பொழுது பெரும்பாலும் சந்திரனுக்கு 12,1,2ல் சனி பகவான் சஞ்சாரம் செய்துகொண்டு இருப்பின், ஏழரை சனி காலம் இதன் காரணமாகவே தாங்கள் அதிகம் இன்னல்களை சந்திக்க வேண்டி  உள்ளது, எனவே சனி ப்ரீத்தி பரிகாரங்களை மேற்கொள்ளுங்கள் என்ற வழிகாட்டுதல்களை "ஜோதிடர்கள்" வழங்குவது உண்டு, இந்த கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, ஒருவர் இன்னல்களை சந்திப்பதற்கும், சனி ராசிக்கு 12,1,2ல் சஞ்சாரம் செய்வதற்கும் யாதொரு சம்பந்தம் இல்லை என்பதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு படுத்த விரும்புகின்றோம், ராசிக்கு நவகிரகங்களின் சஞ்சார நிலையை கருத்தில் கொண்டு பலன் நிர்ணயம் செய்வது முற்றிலும் உண்மைக்கு புறம்பான பலாபலன்களை கூறுவதற்கு வழிவகுத்துவிடும், லக்கினத்தை அடிப்படையாக கொண்டும், 12 பாவகங்களை கருத்தில் கொண்டும் சுய ஜாதக பலன் அறிய முற்படுவதே சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் நன்மைகளையும், சரியான திட்டமிடுதல்கள் மூலம் முன்னேற்றங்களையும் பெறுவதற்கு வழிவகுக்கும்.


லக்கினம் : ரிஷபம்
ராசி : தனுசு
நட்ஷத்திரம் : மூலம்

ஒருவருக்கு கடுமையான நெருக்கடிகளையும், இன்னல்களையும் வழங்குவது, ராசிக்கு சில இடங்களில் இருந்து சஞ்சாரம் செய்யும் கிரகங்களின் தாக்கம் என்பது உண்மையல்ல, ஒருவருக்கு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் நிலை வெகு பரிதாபத்திற்க்கு உரியதாக மாறிவிடும், கிரகங்களின் கோட்சார வழங்கும் இன்னல்களை விட ( ஏழரை சனி, அஷ்டம சனி, ஜென்ம குரு ) பல நூறு மடங்கு இன்னல்களை தந்து விடும், மேற்கண்ட ஜாதகருக்கு  தற்போழுது நடைபெறுவது சந்திரன் திசை, இவர் தரும் பலன்களை கருத்தில் கொண்டு இந்த ஜாதகத்தை ஆய்வு செய்வோம்.

பொதுவாக எந்த ஒரு ஜாதகருக்கும், சுய ஜாதகத்தில் 12 பாவகங்களும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற கூடாது, அப்படியே சம்பந்தம் பெற்றாலும், நவ கிரகங்களின் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம் பாதக ஸ்தானத்துடன்  சம்பந்தம் பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தாமல் இருப்பின் ஜாதகர் யோகம் பெற்றவரே, மாறாக நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் பாதக ஸ்தானத்துடன்  சம்பந்தம் பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால், ஜாதகரின் கத்தி அதோ கதிதான், சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து ஜாதகர் 200% விகித இன்னல்களை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுவார், எவராலும் மேற்கண்ட பாதிப்பில் இருந்து காப்பாற்ற இயலாது என்பதே உண்மை நிலை.

மேற்கண்ட ஜாதகருக்கு சந்திரன் திசை ( 24/07/2011 முதல் 23/07/2021 வரை ) நடைமுறையில் உள்ளது, நடைபெறும் சந்திரன் திசை ஜாதகருக்கு 3,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 11ம் வீடு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், முறையே விரையம், பாதக ஸ்தான பலனை நடத்திக்கொண்டு இருக்கின்றது, எனவே ஜாதகர் மூன்றாம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகளில் தோல்விகளையும், வீரியமிக்க செயல்திறன் அற்ற சூழ்நிலைகளையும் வழங்குகிறது, மேலும் சுய முயற்சி தடை பெரும், நிம்மதி அற்ற சூழ்நிலையை உருவாக்கும், 12ம் பாவக வழியில் இருந்து மனநிம்மதி இழப்பு, வீண் விரையம், அதிக மன போராட்டம், தெளிவற்ற வாழ்க்கை முறை, அதிக அளவிலான தொல்லைகள், பொருள் இழப்பு, சுய கட்டுப்பாடு மற்றும் உறுதியின்மையை தரும், மேற்கண்ட இன்னல்கள் ஜாதகருக்கு 100% விகிதம் நடைமுறைக்கு வரும், அடுத்து பாதக ஸ்தான தொடர்பை பெரும் லாப ஸ்தான வழியில் இருந்து ஜாதகரின் ஆசை மற்றும் எண்ணங்கள் யாவும் நிராசையாக மாறிவிடும், தன்னம்பிக்கை வெகுவாக கெடும், மூட நம்பிக்கை மற்றும் பிற்போக்கு தனமான எண்ணங்களால் ஜாதகர் சூழப்பட்டு தனது வாழ்க்கையே தானே பாதிப்பிற்கு உள்ளாக்குவார், ஜாதகருக்கு  வரும் இன்னல்களின் தாக்கம் பெரிய அளவிலான அமைப்பில் இருக்கும், துன்பத்தில் ஜாதகர் அனலில் இட்ட புழு போல் தவிக்க நேரும், சுய ஜாதகத்தில் அதிர்ஷ்டம் மற்றும் லாபத்தை குறிக்கும் 11ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் அதிர்ஷ்டமற்ற வாழ்க்கையை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், மேலும் இதன் பாதிப்பு ஜாதகருக்கு 11ம் பாவக வழியில் இருந்து  200% விகிதம் இருக்கும் என்பது வருந்தத்தக்கது.

மேற்கண்ட ஜாதகத்தை ஆய்வு செய்த ஜோதிடர்கள் ஜாதகருக்கு ஏழரை சனியின் தாக்கத்தினாலே பெரும் இன்னல்களை சந்தித்து கொண்டு இருக்கின்றார் என்பதாக கூறியிருக்கின்றனர், நடைபெறும் சந்திரன் திசை தரும்  விரையம் மற்றும் பாதக ஸ்தான பலனை பற்றி யாதொரு விஷயமும் கூறவில்லை என்பது கவனிக்க தக்கது, உண்மையில் மேற்கண்ட ஜாதகருக்கு விரைய ஸ்தானம் மற்றும் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தும் சந்திரன் திசையே 200% சதவிகித இன்னல்களை வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றார், எனவே  ராசியை அடிப்படையாக கொண்டும் நவ கிரகங்களின் கோட்சர நிலையை கொண்டும் பலன் காண்பதை தவிர்த்து, சுய ஜாதக பாவக வலிமையை கருத்தில் கொண்டும், நடைபெறும் திசை ஏற்று நடத்தும் பாவக வலிமையை கருத்தில் கொண்டும், அந்த பாவகங்களுக்கு நவகிரகங்களின் கோட்சாரம் வழங்கும் பலாபலன்களை கருத்தில் கொண்டும் சுய ஜாதக பலன் காண முற்படுவதே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு துல்லியமான பலாபலன்களை கூற உதவி புரியும்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் ரிஷபம்!


  சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும் இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

ரிஷப லக்கினம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு இரண்டாம் ராசியான ரிஷப ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சி, ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், மேஷ லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், பொறுமையின் சிகரமாக விளங்கும் ரிஷப லக்கின அன்பர்களுக்கு, இதுவரை களத்திர பாவகத்தில் சஞ்சாரம் செய்த சனி பகவான் தங்களுக்கு மிகுந்த அளவில் இன்னல்களை கடந்த காலங்களில் வழங்கி இருக்க கூடும், குறிப்பாக வாழ்க்கை துணை, எதிர்ப்பால் இனம், பொதுமக்கள் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் என்ற வகையில் இன்னல்களை தந்து இருக்க அதிக வாய்ப்பு உண்டு, தற்போழுது ஆயுள் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சனிபகவான் தங்களுக்கு முழு முதல் யோகங்களை நல்கும் வல்லமையை பெறுவதால் யாதொரு துன்பமும் நிகழ வாய்ப்பு இல்லை மேலும், ஜீவன ஸ்தான அதிபதி தனது பாவகத்திற்கு 11ல் சஞ்சாரம் செய்வது அளவில்லா யோகங்களை வாரி வழங்கும் அமைப்பை தரும், இது வரை தொழில் மற்றும் ஜீவன வழியில் இன்னல்களை சந்தித்து கொண்டு இருந்த அன்பர்களுக்கு, அளவில்லா யோகங்களை வாரி வழங்குவர், கவுரவம் மற்றும் சுய மரியாதை அதிகரிக்கும், தொழில் வளர்ச்சி என்பது மிக பெரிய அளவில் அமையும், வேலைவாய்ப்பு அற்ற அன்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி தன்னிறைவான ஜீவன முன்னேற்றத்தை வாரி வழங்கும், திடீர் முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்டங்கள் தங்களை தேடிவரும், சமூகத்தில் நற்பெயரும் அந்தஸ்தும் அதிகரிக்கும், பொதுவாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு ஏற்றமிகு யோககாலமாக இந்த சனி பெயர்ச்சி அமையும், தடைபெற்ற காரியங்கள் யாவும் தங்களுக்கு தடையின்றி நடைபெறும், தெளிவான சிந்தனையும், திட்டமிட்ட செயல்பாடுகளும், தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய நன்மைகளை வாரி வழங்கும், வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரிய சொத்துக்களும், தனசேர்க்கையும் வந்து சேரும், வாழ்க்கை துணை, உறவுகள், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து வரும் ஆதரவு தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத சுகபோகங்களை வாரி வழங்கும், தங்களின் வாழ்க்கையை மதிப்பு மிக்கதாக மாற்றும் வல்லமை இந்த சனி பெயர்ச்சிக்கு உண்டு என்பதை நினைத்து மகிழ்ச்சி கொள்ளலாம்.

1ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் (ரிஷபம் ராசி மற்றும் சுக்கிரன் ) ஒரே வர்க்கம் என்பதனால் ரிஷப லக்கின அன்பர்களுக்கு, மிதம்மிஞ்சிய கடமை உணர்வை வழங்குவார், பொறுப்புணர்வுடன் செயல்பட்டு அனைத்து காரியங்களிலும் வெற்றியை பெரும் யோகத்தை நல்குவார், உடல் ஆரோக்கியம், மன நலம் மேம்படும், புதிய சிந்தனை மற்றும் புதிய யுக்திகள் தங்களின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யும் , சுய மரியாதை, புகழ் கீர்த்தி என தங்களின் பெயருக்கு அதிக வலு சேர்க்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், விழிப்புணர்வு மற்றும் சுறுசுறுப்பு  தங்களின் முன்னேற்றத்தை உறுதி செய்யும், பண புழக்கம் அதிகரிக்கும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், உறவுகள் வழியில் தன உதவிகளையும் பெரிய அளவில் கிடைக்க பெரும், தங்களின் வார்த்தைகளுக்கு நல்ல மதிப்பு மரியாதை இருக்கும், வாக்கு வன்மை அதிகரிப்பதால் அனைவரிடமும் நன்மதிப்பு உண்டாகும், திடீர் திருமணம் நடைபெற வாய்ப்பு அதிகம் உண்டு என்பதால், சுப செலவுகள் அதிக அளவில் ஏற்படக்கூடும், கல்வி காலங்களில் உள்ள மாணவ மாணவியருக்கு சிறப்பான திடீர் வெற்றிகளை வாரி வழங்கும், புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும், புதிதாக துவங்கும் தொழில் வழியில் இருந்து நல்ல  வருமான வாய்ப்புகள் வந்து சேரும், உறவுகள் வழியில் இருந்து ஒற்றுமையும், உதவிகளும் தேடிவரும், தங்களின் ஆசைகள் யாவும் திடீரென நிறைவேறும், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம் தங்களின் புகழ் மிக்க யோக வாழ்க்கையை சிறப்படைய செய்யும், பல புண்ணிய திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டாகும்.

2ம் பாவகத்தை தனது  7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் (மிதுன ராசி மற்றும் புதன் )  ஒரே வர்க்கம் என்பதனால் ரிஷப லக்கின அன்பர்களுக்கு, கை நிறைவான வருமானங்களை வாரி வழங்குவர், வியாபர விருத்தி எதிர்பாராத யோகங்களை நல்கும், தனிப்பட்ட தேவைகள் யாவும் நிறைவேறும், அதிக செல்வ சேர்க்கை, சௌபாக்கியம் தேடிவரும், எதிர்ப்புகள் அனைத்தும் களைந்து தங்களின் வாழ்க்கையில் வெற்றிகளை வாரி குவிக்கும் வாய்ப்புகளை இந்த சனி பெயர்ச்சி நல்கும், குறிப்பாக தரகு, கமிஷன், ஏஜென்ட் போன்ற விஷயங்களில் ஜீவனம் செய்யும் அன்பர்களுக்கு குறைவில்லா  வருமான வாய்ப்புகளை வாரி வழங்குவார், அறிவார்ந்த செயல்களில் ஈடுபாடும், ஆர்வமும் அதிகரிக்கும், புதிய கண்டுபிடிப்புகள் மூலம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை சந்திக்கும் யோக காலமாக கருதலாம் , அனைவரிடத்திலும் சகஜமாக பழகும் யோகத்தை நல்கும், அடிப்படையில் இருந்து தங்களின் ஜீவன வாழ்க்கை மாற்றம் தரும், தேர்வு, தேர்தல், போட்டி பந்தயங்கள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி உண்டாகும், திருமண தடைகளை சந்தித்து கொண்டு இருந்த அன்பர்களுக்கு நல்லதொரு இடத்தில் இருந்து வாழ்க்கை துணை அமையும், பொதுமக்கள் ஆதரவு தங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை வாரி வழங்கும், செய்யும் செயல்கள் யாவிலும் வெற்றியே உண்டாகும், திரை துறை, கலை துறையில் உள்ள  அன்பர்களுக்கு ஏற்றமிகு யோக வாழ்க்கையை இந்த சனி பெயர்ச்சி நல்கும் , தெளிவான சிந்தனையுடன் வரும் நல்ல வாய்ப்புகளை ரிஷப லக்கின  அன்பர்கள் அனைவரும் பெற்று நலம் பெற வேண்டிய நேரம் இது என்றால்  அது மிகையில்லை.

5ம் பாவகத்தை தனது  10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் (கன்னி ராசி மற்றும் புதன் )  ஒரே வர்க்கம் என்பதனால் ரிஷப லக்கின அன்பர்களுக்கு சிறு சிறு நன்மைகளை தந்த போதிலும், புத்திர ஸ்தான வழியில் இருந்து கடுமையான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், குறிப்பாக தங்களின் குழந்தைகள் மற்றும் வாரிசுகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை காட்டவேண்டிய நேரமிது, அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் தங்களின் கவனம் மிக அதிகம் இருப்பது நல்லது, அவர்களுக்கு வரும் உடல் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு  உடனடி தீர்வு காணவில்லை எனில் தங்களுக்கு பொருள் இழப்பும், மன நிம்மதியும் வெகுவாக பாதிக்கும், எனவே இந்த சனி பெயர்ச்சி காலத்தில் தங்களது குல தேவதைக்கு செய்ய வேண்டிய முறைகளை சிறப்பாக செய்து, தங்களுக்கும் தங்களது குழந்தைகளுக்கும் வர இருக்கும் இன்னல்களில் இருந்து விடுபட " ஜோதிடதீபம் " அறிவுறுத்துகிறது, மேலும் தங்களின் சிந்தனை ஆற்றல்  வெகுவாக குறையும் என்பதாலும், சோம்பேறித்தனம் அதிகரிக்கும் என்பதாலும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்து வருவது தங்களுக்கும், தங்களை சார்ந்தவர்களுக்கும் மிகுந்த நன்மைகளை தரும், தங்களின் பூர்வீக சொத்துக்களை முறையாக பராமரிப்பதுடன், வீண் விரையம் செய்யாமல் காப்பாற்றுவது தங்களுக்கு நல்லது, மேலும் மற்றவர்கள் ஆலோசனைகள் பேரில் செய்யும் காரியங்கள் யாவும் தங்களின் வாழ்க்கையில் பெரும் இழப்பை தரும் என்பதால், சுய முடிவில் அதிக அக்கறை கொள்வது நல்லது இல்லை எனில் ஏமாற்றங்களை தவிர்க்க இயலாது, கடன் சார்ந்த இன்னல்களில் இருந்து தாங்கள் விலகி இருக்க வேண்டிய நேரம் இது, ஆன்மிகம் மற்றும் தெய்வீகத்தில் அதிக நாட்டம் கொள்வது தங்களுக்கு சிறப்புகளை வாரி வழங்கும், தாங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் பலமுறை ஆலோசனையின் பேரில் நடைமுறைப்படுத்துவதே, தங்களின் வாழ்க்கைக்கு உகந்த நன்மைகளை வழங்கும், பொருள் விரயங்களை தவிர்க்கவும், விபத்துகளை தவிர்க்கவும் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணங்களை மேற்கொள்வது தங்களுக்கு நல்லது, ஆன்மீக பெரியோரின் ஆசி தங்களுக்கு வரும் இன்னல்களை  வெகுவாக குறைக்கும், நல்ல மன நிம்மதியை தரும்.

குறிப்பு :

 ரிஷப லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 8,1,2,5ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 8,1,2,5ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் ரிஷப லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 16 டிசம்பர், 2016

வாழ்க்கையின் முன்னேற்றங்களை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தின் பங்கு !


"ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
  கருதி இடத்தான் செயின்"

(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.

அந்த கால நேரத்தை துல்லியமாக அறிந்துணர்ந்து செயல்பட உதவுவதே, ஜோதிட சாஸ்த்திரம் என்றால் அது மிகையில், சுய ஜாதகத்தை கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கொண்டு ஒருவரின் வாழ்க்கையில் நடைபெற்ற, நடைபெறுகின்ற, நடைபெறக்கூடிய நன்மை தீமை, யோக அவயோகங்களின் தன்மையை பற்றி ஜோதிடகணிதம் கொண்டு தெளிவுற கூற இயலும், குறிப்பாக ஒரு ஜாதகரின், உடல் நலம், மனநலம், கல்வி, தொழில், திருமணம், பொருளாதர முன்னேற்றம், புத்திரபாக்கியம், சொத்துசுகம், வண்டி வாகன  யோகம், புகழ் அந்தஸ்து, மனநிம்மதி மற்றும் ஆன்மீக வெற்றி என ஜாதகர் ஜாதகர் வினவும் ஒவ்வொரு கேள்விக்கும் துல்லியமான பதில்களை நல்குவதே, ஜோதிடசாஸ்த்திரம், சுய ஜாதக ஆலோசனையின் அடிப்படையில் மேற்கொள்ளும் காரியங்கள் நிச்சயம் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தன்னிறைவான யோக வாழ்க்கையை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, கீழ்கண்ட ஜாதகருக்கு, சுய ஜாதக வலிமையின் அடிப்படையில், வழங்கும் ஆலோசனை பற்றியும், அவரது கேள்விகளுக்கு உண்டான பதில் பற்றியும் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


ஜாதகரின் கேள்வி :

தனது ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமை ?

1,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது லக்கினம் மற்றும் பாக்கிய ஸ்தான வழியில் இருந்து 200% விகித இன்னல்களையும்.

2,4,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, குடும்பம்,சுகம்,சத்ரு,ஜீவனம் மற்றும் விரைய ஸ்தான அமைப்பில் இருந்து ஸ்திரமான இன்னல்களையும்.

3,5,7ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, வீரியம், பூர்வபுண்ணியம், களத்திர ஸ்தான வழியில் இருந்து மிகுந்த யோக பலன்களையும்.

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஆயுள் பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களையும் ( ஆயுள் பாவகம் சர நெருப்பு தத்துவ ராசி என்பதால் ஜாதகருக்கு பூர்ண ஆயுள் என்றபோதிலும் பித்தம் சார்ந்த உடல் தொந்தரவுகளை ஜாதகர் வாழ்நாள் முழுவதும் சந்திப்பார் )

11ம் வீடு அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிதம் மிஞ்சிய யோக பலன்களை அளவில்லாமல் வாரி வழங்கும்.

எனவே ஜாதகர் 3,5,7,11ம் வீடுகள் வழியில் இருந்து பரிபூர்ண நன்மைகளையும்,

2,4,6,8,10,12ம் வீடுகள் வழியில் இருந்து இன்னல்களையும், 1,9ம் பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களையும் அனுபவிக்கும் சூழ்நிலையை தரும்.


தற்பொழுது நடைபெறும் திசா புத்தி வழங்கும் பலன்கள் ?

தற்போழுது நடைபெறும் குரு திசை ( 14/11/2003 முதல் 14/11/2019 வரை ) ஜாதகருக்கு 2,4,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகரின் வாழ்க்கையில் குடும்பம்,சுகம்,சத்ரு,ஜீவனம் மற்றும் விரைய ஸ்தான அமைப்பில் இருந்து ஸ்திரமான இன்னல்களை தொடர்ந்து வழங்கி கொண்டு இருக்கின்றது இதனால் ஜாதகரின் கல்வி பாதிக்கப்படும், வண்டி வாகனங்கள் மூலம் விரைய செலவு, உடல் உபாதை, விபத்து, தொழில் வேலை வாய்ப்பு இன்மை, மனஅழுத்தம் மற்றும் அதிக மன போராட்டங்களை வழங்கும்.

தற்போழுது நடைபெறும் செவ்வாய் புத்தி( 14/07/2016 முதல் 20/06/2017 வரை ) 3,5,7ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, வீரியம், பூர்வபுண்ணியம், களத்திர ஸ்தான வழியில் இருந்து எடுக்கும் முயற்ச்சி மற்றும் காரியங்களில் வெற்றி, குல தேவதை மற்றும் புத்திசாலித்தனம் மூலம் யோகம், நண்பர்கள் மற்றும் எதிர்ப்பால் இன அமைப்பினர் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகம் உண்டாகும், எதிர் வரும் சனி திசை ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவதால் மிகுந்த எச்சரிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்வது நல்லது.

ஜாதகருக்கு உகந்த  தொழில்  

சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்களான பாக்கியம் மற்றும் லாப ஸ்தானம் தொடர்பான ஜீவன வாழ்க்கையை ஜாதகர் கூட்டாகவோ, அல்லது அடிமை தொழிலாகவோ ஏற்று ஜீவனம் முன்னேற்றம் பெறுவதே உகந்தது, குறிப்பாக ஜாதகர் ஆசிரிய பணி அல்லது வாக்கு வன்மையை தொழிலாக ஏற்று ஜீவனம் செய்யலாம், உணவு பொருட்கள் சார்ந்த தொழிலை தேர்வு செய்து கூட்டு முயற்சியில் நலம் பெறலாம், நீர் தத்துவம் சார்ந்த தொழில்கள் ஜாதகருக்கு பன்மடங்கு லாபம் தரும் இருப்பினும் தனிப்பட்ட முறையில் தொழில் செய்வது உகந்தது அல்ல கூட்டு முயற்ச்சியே நல்ல பலன் தரும், தானிய வியாபாரம் ஜாதகரின் வாழ்க்கையில் சகல நலன்களையும், மிதமிஞ்சிய முன்னேற்றங்களை வாரி வழங்கும்.

குறிப்பு :

எதிர்வரும் சனி திசை ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்த்துவது உகந்தது அல்ல என்பதை ஜாதகர் உணர்வது அவசியமாகிறது, மேலும் தனது குடும்பத்தில் உள்ள பெரியோர் சொல்லும் வார்த்தைகளை மதித்து நடந்து வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் மேஷம்!



 சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும் இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

மேஷ லக்கினம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியான மேஷ ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சி, பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், மேஷ லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், இதுவரை ஆயுள் பாவகத்தில் சஞ்சாரம் செய்த சனி பகவான் தங்களுக்கு மிகுந்த அளவில் இன்னல்களை கடந்த காலங்களில் வழங்கி இருக்க கூடும், ஆனால் இனி வரும் காலங்களில் தங்களின் லாப ஸ்தான அதிபதி தனது பாவகத்திற்கு 11ம் ராசியில் சஞ்சாரம் செய்வது மீதம் மிகுந்த லாபத்தை தரும், தன்னம்பிக்கையும், மனோ தைரியமும் அதிகரிக்கும், புதிய முயற்சிகள் கைகூடி வரும், புதிய வாய்ப்புகள் தங்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை தரும், கட்டுப்பாடு அற்ற சுதந்திர வாழ்க்கையில் பரிபூர்ண நன்மைகளை தாங்கள் இனிவரும் காலங்களில் அனுபவிக்கும் யோகத்தை தரும், அரசு அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தில் உள்ளோருக்கு அளவில்லா நன்மைகளையும் யோகத்தையும் வாரி வழங்கும், காவல் மற்றும் பாதுகாப்பு சார்ந்த துறைகளில் உள்ளோருக்கு இனிவரும் காலம் பல யோக பலன்களை தார் முனைப்புடன் இருப்பது உறுதியாகிறது, அதிர்ஷ்டம் மற்றும் லாபம் இரண்டும் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை தரும், தங்களின் சுய கட்டுப்பாடு, ஒழுக்கம் மற்றும் ஸ்திரமான மனஉறுதி அதிகரிக்கும் காலம் இதுவே, மேலும் குறுகிய கால யோக பலன்கள் மிக விரைவாக தங்களுக்கு நடைமுறைக்கு வரும், எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் தங்களின் வாழ்க்கையில் சகல நலன்களையும் வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, தொழில் துறையில் உள்ள அன்பர்களுக்கு அபரிவிதமான லாபங்களும் சிறப்பான முன்னேற்றங்களும் உண்டு, தங்களின் ஜீவன ரீதியான திட்டமிடுதல்களுக்கு, இனி வரும் காலம் நல்ல முன்னேற்றங்களை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, இந்த சனி பெயர்ச்சி லக்கின பாவகத்திற்கு யாதொரு நன்மை தீமையை வழங்க வில்லை என்பதனால் தங்களின் உடல் நலம் மற்றும் மனநலம் சிறந்து விளங்கும், சனி பகவானின் பாக்கிய ஸ்தான சஞ்சாரம், தங்களின் வாழ்க்கையில் நற்பெயரையும், புகழையும் பெற்று தரும், சமூகத்தில் பெரிய மனிதர் என்ற அந்தஸ்த்தை வழங்கும், நல்லோர், ஆன்மீக பெரியோர், முன்னோர் ஆசிர்வாதத்துடன் வாழ்க்கையில் தடைகளை தகர்த்துஎறிந்து முன்னேற்றப்பாதையில் வெற்றிநடை போடும் யோக காலமாக இதை கருதலாம்.

2ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் (ரிஷபம் ராசி மற்றும் சுக்கிரன் ) ஒரே வர்க்கம் என்பதனால் மேஷ லக்கின அன்பர்களுக்கு தன்னிறைவான வருமான வாய்ப்பை வாரி வழங்குவார், மேலும் சரளமான பேச்சு திறனையும், அனைவர் இடத்திலும் தனது வார்த்தைகளுக்கு மதிப்பு மரியாதையையும் வாரி வழங்கும் தாங்கள் சொல்லும் வார்த்தைகளை கேட்டு அதன்படி நடக்க அனைவரும் தயார் நிலையில் இருப்பார்கள், சரளமான பண வசதி, மிதமிஞ்சிய வருமான வாய்ப்பு, குடும்ப வாழ்க்கையில் சந்தோசம், திடீர் திருமண யோகம், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கை, புதிய சொத்து, புதிய வாகனம் வாங்கும் யோகம் என தங்களின் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் உண்டாகும், எதிர்ப்புகள் அனைத்தும் களைந்து எதிர்பாரா லாபங்களை தங்களுக்கு வாரி வழங்கும், வாக்கு பலிதம் உண்டாகும், தங்கள் வழங்கும் வாழ்த்துக்கள் நடைமுறையில் நல்ல பலன்களை தரும், போதுமான அளவிற்கு பொருளாதார வசதி வாய்ப்புகள் உண்டாகும், தெளிவான முடிவுகளை கையாண்டு, வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை பெறுவதற்கு உண்டான வாய்ப்புகள் வந்து சேரும், பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு பதவிகள் தேடிவரும், இதுவரை வாழ்க்கையில் போராட்டங்களை சந்தித்தது கொண்டு இருந்த அன்பர்களுக்கு, எதிர்பாராத திருப்பங்கள் மூலம் நன்மைகள்  நடைமுறைக்கு வரும், குடும்ப வாழ்க்கையில் சிக்கல்களை சந்தித்து கொண்டு இருந்த அன்பர்களுக்கு சரியான தீர்வு கிடைக்கும், கணவன் மனைவி பிரிவு நிலை மாறி ஒற்றுமையுடன் குடும்ப வாழ்க்கையில் ஜீவிக்கும் யோகம் உண்டாகும், தாம்பத்த்ய வாழ்க்கையில் சகல நலன்களும் உண்டாகும், 6ம் இட சனி பார்வை தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத சுப யோகங்களை வாரி வழங்கும் என்பது கவனிக்க தக்க அம்சமாகும். ( சனி பார்வை இன்னல்களை தரும் என்பது முற்றிலும் தவறான கருத்து, புராண கதைகளுக்கு மட்டுமே இது பொருந்தும் ஜோதிட கணிதத்திற்கு இது முற்றிலும் பொருந்தாது, வலிமை பெற்ற சனி பார்வையும் யோகத்தை நல்கும் )

3ம் பாவகத்தை தனது  7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் (மிதுன ராசி மற்றும் புதன் )  ஒரே வர்க்கம் என்பதனால் மேஷ லக்கின அன்பர்களுக்கு எடுக்கும் காரியங்களில் வெற்றிகளை வாரி வழங்கும், வியாபாரம் செய்துகொண்டு இருக்கும் அன்பர்களுக்கு இனிவரும் காலம் தன்னிறைவான வியாபார விருத்தியை நல்கும், பயணங்கள் மூலம் நல்ல முன்னேற்றமும் விருத்தியும் உண்டாகும், இதுவரை தடைபெற்று வந்த காரியங்கள்  யாவும் தடையின்றி நிறைவேறும், சகோதர வழி ஆதரவு, செல்வசெழிப்பு, கமிஷன் மற்றும் தரகு சார்ந்த தொழில் செய்யும் அன்பர்களின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும், எழுத்து மற்றும் பத்திரிகை துறை, தகவல் தொழில்நுட்ப துறையில் உள்ள அன்பர்களுக்கு இனிவரும் காலம் ஒரு யோக காலமாகவே அமையும், தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள ரகசியங்கள் காக்கப்படும், கல்வி மற்றும்  விளையாட்டு  துறையில் உள்ள நபர்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றங்கள் உண்டாகும், சுய தொழில் மற்றும் சிறு தொழில் செய்யும் அன்பர்களுக்கு இனிவரும் காலம் சிறப்பான முன்னேற்றத்தை வாரி வழங்கும், ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பும், ஆன்மீக பெரியோர்களின் சந்திப்பும் தங்களின் வாழ்க்கையில் அளவில்லா யோகங்களை நல்கும், எதிர்ப்படும் தீமைகள் யாவும் வெகுவாக குறையும், குடும்ப நலன் சார்ந்த திட்டங்கள் தங்களுக்கு சிறப்பான நன்மைகளை தரும், வீரியமிக்க செயல்திறன் மூலம் அறிய பல வெற்றிகளை குவிக்கும் யோக காலமாக இந்த சனி பெயர்ச்சியை கருதலாம், தங்களுக்கு வரும் இடர்பாடுகள் அனைத்தும் காணாமல் போகும், எதிரியும் தங்களிடம் நட்பு பாராட்டும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள், வெகுநாள் லட்சியங்கள் குறுகிய காலத்தில் தங்களுக்கு நிறைவேறும், பொது நலன் சார்ந்த விஷயங்களில் நல்ல ஈடுபாடு உண்டாகும், வணிகமும் செய்யும் தொழிலும் தங்களுக்கு பரிபூர்ண லாபங்களை வாரி வழங்கும், 7ம் இட சனி பார்வை தங்களின் வாழ்க்கையில் மதிப்பு மிக்க செயல்களையும், புகழ் மிக்க பொறுப்புகளையும் நல்கும்.

6ம் பாவகத்தை தனது  10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் (கன்னி ராசி மற்றும் புதன் )  ஒரே வர்க்கம் என்பதனால் மேஷ லக்கின அன்பர்களுக்கு வரும் எதிர்ப்புகள் அனைத்தும் மிகுந்த நன்மையையே வாரி வழங்கும், உடல் நலம் சார்ந்த இன்னல்கள் இருப்பின் இனிவரும் காலங்களில் படிப்படியாக குறையும், மருத்துவ செலவினங்கள் வெகுவாக குறையும், கடன் மற்றும் கொடுக்கல் வாங்கல் மூலம் பொருளாதார நிலைமை விரைவில் சீரடையும், தனிப்பட்ட முயற்சிகள் தங்களுக்கு நல்லதொரு வெற்றியை தரும், இதுவரை நல்ல வேலை இன்றி தவித்தவருக்கு உடனடியாக சிறப்பான வேலை அமையும், வெளிநாடு யோகமும், கூட்டு தொழில் மூலம் முன்னேற்றமும் உண்டாகும், திடீர் பதவி தங்களை தேடிவரும், கலைத்துறையில் உள்ள அன்பர்களுக்கு சீரான முன்னேற்றங்களை நல்கும், விவசாயம் மற்றும் உணவு பொருட்கள் சார்ந்த தொழில்களை செய்து வரும் அன்பர்களுக்கு அளவில்லா  முன்னேற்றங்களை தரும், மருத்துவம் சார்ந்த தொழில்களில் உள்ள அன்பர்களுக்கு  சிறப்பான முன்னேற்றம் உண்டாகும், குறுகிய காலத்தில் நல்ல பிரபல்யம் உண்டாகும், நீண்ட நாள் உடல் தொந்தரவுகளுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும், மீளா கடனில் தவித்த அன்பர்களுக்கு நல்லதொரு தீர்வு கிட்டும், உறவுகள் வழியில் உதவிகளும், பொதுமக்கள் ஆதரவின் மூலம் நன்மைகளும் தங்களுக்கு தேடிவரும், 10ம் இட சனிப்பார்வை தங்களின் உடல் நலனில் நல்ல முன்னேற்றத்தையும், தொழில் ரீதியான விருத்தியையும் வாரி வழங்கும்.

குறிப்பு :

 மேஷ லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 9,2,3,6ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 9,2,3,6ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேஷ லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 9 டிசம்பர், 2016

காலம் நேரம் ஜாதகருக்கு சாதகமாக ( திசா,புத்தி ) இல்லை எனில், சுய ஜாதகத்தில் யோகங்கள் இருந்தாலும் பலன் ஏதுமில்லை !


 சுய ஜாதகத்தில் பல வித சுப யோகங்கள் இருந்த போதிலும் நடைபெறும் திசை அல்லது புத்தி யோகங்களை தரும் பாவக பலனை ஏற்று நடத்தாமல், வலிமை இழந்த அவயோக பலன்களை தரும் பாவகங்களின் பலன்களை ஏற்று நடத்தினால் ஜாதகரின் வாழ்க்கை மிகுந்த இன்னல்களுக்கும், துன்பத்திற்கும் ஆளாகும் ( நடைபெறும் திசை புத்தி முழு சுப கிரகங்களான குரு,சுக்கிரன்,சந்திரன்,புதன் என்றாலும் இதற்க்கு விதிவிலக்கு அல்ல) , குறிப்பாக திசை மற்றும் புத்தி ஏற்று நடத்தும் பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து ஜாதகர் இன்னல்களை எதிகொள்ளும் நிலைக்கு தள்ளபடுவார், சுய ஜாதகத்தில் யோகங்கள் இருப்பினும் அதனால் ஜாதகருக்கு யாதொரு நன்மையையும் நடைபெறாது, குறிப்பிட்ட பாவக பலனை ( பாதிக்கப்பட்ட ) ஏற்று நடத்தும் திசா புத்திகள் காலம் முடிந்து, வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் திசா புத்தி காலம் நடைமுறைக்கு வரும் பொழுதே ஜாதகர் யோக பலன்களை அனுபவிக்க இயலும், வலிமை பெற்ற பாவக ஏற்று நடத்தும் திசா புத்திகள் எவை எவை என்று உணர்ந்து காற்று உள்ளபொழுதே துற்றி கொள்ளவேண்டும், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம்.


லக்கினம் : கன்னி
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : ஆயில்யம் 1ம் பாதம்

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறுவது சுக்கிரன் திசை ( 28/12/2000 முதல் 28/12/2020 வரை ) சுக்கிரன் தனது திசையில் 6,10ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது வரவேற்க தக்க அம்சமாகும், குறிப்பாக வலிமை பெற்ற லாப ஸ்தான பலனை ஏற்று நடத்தும் சுக்கிரன் திசை ஜாதகருக்கு அளவில்லா யோகங்களை நல்கியது, பொருளாதார ரீதியான நன்மைகள் ஜாதகருக்கு பன்மடங்கு கிடைத்தது, முன்னோர்கள் சொத்தை விற்று ரொக்கமாக பெரும் தொகை கைக்கு வந்து சேர்ந்தது, சுக்கிரன் திசை சூரியன் புத்தியில் ஒரு பெரும் தொகையும், சுக்கிரன் திசை செவ்வாய் புத்தியில் ஒரு பெரும் தொகையும் ஜாதகருக்கு கையில் கிடைக்கப்பெற்றார், சூரியன் புத்திக்கு அடுத்து வந்த சந்திரன் புத்தியில் ஜாதகருக்கு நண்பர்கள் கூட்டாளிகள் மற்றும் எதிர்ப்பால் இன சேர்க்கைகள் அதிகரித்தது ( 3,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சந்திரன் புத்தி பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தியது இதற்க்கு காரணமாக அமைந்தது ) அவர்களின் ஆலோசனைப்படி செவ்வாய் புத்திக்கு பிறகு வந்த ராகு புத்தியில் ஜாதகர் நடைபோட ஆரம்பித்தார், இது ஜாதகரின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

சுக்கிரன் திசையில் நடைபெற்ற ராகு புத்தி ஜாதகருக்கு 2ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, வந்த வருமானம் கொஞ்சம் கொஞ்சமாக வீண் விரையமாக துவங்கியது, சுக்கிரன் திசையில் ராகு புத்திக்கு அடுத்து வந்த குருபுத்தியும், சனி புத்தியும் ( 27/02/2011 முதல் 28/12/2016 வரை) முழு வீச்சில் 4,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருப்பது ஜாதகரின் வாழ்க்கையில் 4ம் பாவக வழியில் இருந்து இருந்த சொத்து,இடம், வண்டி வாகனம், பொருள் அனைத்தையும் இழக்கும் சூழ்நிலையை தந்தது, 8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு வந்த  திடீர் இழப்புகள் அளவில்லா வண்ணம் அமைந்தது, நண்பர்கள் எதிர்ப்பால் இன அமைப்பினர் மூலம் ஜாதகரின் வாழ்க்கையில் திடீர் இழப்புகள் அதிகரித்தது, 12ம் பாவாக வழியில் இருந்து ஜாதகருக்கு பெரும் தொகை, முதலீடு செய்த இடத்தில் இருந்து வீண் விரையமானது, தொடர் பேரிழப்புகளால் ஜாதகரின் வாழ்க்கை முற்றிலும் முடங்கியது, ஜாதகர் செய்ய நினைத்த தொழில்களில் எல்லாம் தோல்வி மேல் தோல்வி அடைந்தது, வழிகாட்டும் நல்ல அன்பர்கள் இல்லாத சூழ்நிலையில் ஜாதகரின் வாழ்க்கை முழுவதும் நசிந்தது.

ஜாதகருக்கு நடைபெற்று கொண்டு இருக்கும் திசை மிதமிஞ்சிய நன்மைகளை தந்த போதிலும், நடைபெறும் புத்திகள் ஜாதகருக்கு சாதகமற்று இருப்பது, திசை தரும் யோக பலன்களை முழுமையாக அனுபவிக்கும் வல்லமையை இழந்து, வீண் விரையம் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டு இருப்பது வருத்தத்திற்கு உரியது, சுய ஜாதகத்தில் நடைபெறும் திசா புத்திகள் யோக பலன்களை தரும் நேரம் பார்த்து, தொழில் துவங்குவது, புதிய முயற்சிகளில் இறங்குவதே ஜாதகருக்கு உகந்த நன்மைகளை தரும், தனது எண்ணங்கள் மற்றும் லட்ச்சியங்களை முழுவதுமாக அடைவதற்கு உண்டான வாய்ப்புகளை வழங்கும் என்பதை கவனத்தில் கொண்டு, ஜாதகர் நடந்து இருந்தால் வாழ்க்கையில் யாதொரு துன்பமும் நடைபெற்று இருக்க வாய்ப்பில்லை, குறிப்பாக சுய ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவகம் எது என்று தெளிவாக தெரிந்து, சம்பந்தப்பட்ட பாவக வழியிலான உபதேசங்களை தவிர்த்து, வலிமை பெற்ற பாவக வழியிலான அறிவுரைகளை ஏற்று ஓர் ஜாதகர் செயல்பட்டால், நிச்சயம் வெற்றி மேல் வெற்றிதான், மேற்கண்ட ஜாதகருக்கு 3,7ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதே 200% விகித இன்னல்களை தரும் அமைப்பாகும், எனவே ஜாதகர் தனது நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் எதிர்ப்பால் இன அமைப்பினரிடம் மற்றும் சற்று எச்சரிக்கையாக நடந்துகொண்டு இருந்தால், இவ்வளவு பேரிழப்புகளை ஜாதகர் சந்தித்து இருக்க வேண்டிய சூழ்நிலை நிச்சயம் வந்திருக்க வாய்ப்பு இல்லை, மேலும் ஜாதகரின் சொத்தும் அழிந்து இருக்க வாய்ப்பில்லை, சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் ஜாதகருக்கு கடுமையாக பாதிக்கப்படுவது, தனக்கு வரும் வாழ்க்கை துணையை ஜாதகர் தேர்வு செய்யும் பொழுது மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது, இல்லையெனில் ஜாதகரின் வாழ்க்கை நரகம் ஆவதை எவராலும் தடுக்க இயலாது.

இனி வர இருக்கும் சுக்கிரன் திசையில், புதன் புத்தி ( 28/12/2016 முதல் 28/10/2019 வரை ) ஜாதகருக்கு நல்லதொரு யோக வாழ்க்கையை தர இருக்கின்றது இதை ஜாதகர் புரிந்துகொண்டு, வாழ்க்கையில் சகல நன்மைகளையும் பெற ஆயத்தமாக்கலாம், மீண்டும் ஜாதகர் சகவாச தோஷத்தை கையில் எடுப்பராயின், வாழ்க்கையே சூனியம் ஆக வாய்ப்பு உண்டு என்பதை கவனத்தில் கொள்வது நலம், மேலும் தன்னிடம் உள்ள தீய பழக்க வழக்கங்களில்  இருந்து மீண்டு வருவது அவசியமாகிறது, ஏனெனில் ஜாதகரின் யோக நிலை அப்பொழுதுதான் முழு அளவில் பலன்தர ஆரம்பிக்கும், புதன் புத்தி ஜாதகருக்கு 6,10ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சிறப்பான நன்மைகளை தர தயார் நிலையில் உள்ளது கவனிக்க தக்க சிறப்பு அம்சமாகும்.

ஜாதகரின் குல தேவதையும், முன்னோர்கள் செய்த பாக்கியமும் ஜாதகரை காத்து  அருள் புரியட்டும், " வாழ்த்துக்கள் அன்பரே "

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 5 டிசம்பர், 2016

சுய ஜாதகத்தின் படி மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமா ?


 "நிச்சயமாக" இதில் மாற்று கருத்து இல்லை எனலாம், ஒரு ஆண் மகனின் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும், சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் வல்லமை அவருக்கு வரும் யோகம் நிறைந்த மனைவி மூலம் சாத்தியப்படும் என்பதிற்கு நிறைய உதாரணங்கள் உண்டு, தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகர், வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு தேர்வு செய்யும் பொழுது தனது ஜாதகம் வலிமையற்று இருப்பினும், தனது வாழ்க்கை துணையின் ஜாதக வலிமைக்கு ஏற்ற நன்மைகளையும், யோகங்களையும் நிச்சயம் பெற இயலும், மாறாக வாழ்க்கை துணையின் ஜாதகம் வலிமை அற்று இருப்பின் ஜாதகருக்கு எவ்வித யோக பலன்கள் சுய ஜாதகத்தில் இருப்பினும் அதன் பலாபலன்கள் ஜாதகருக்கு பரிபூர்ணமாக நடைமுறைக்கு வாராது என்பதே முற்றிலும் உண்மை, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே!


லக்கினம் : மேஷம் 
ராசி : சிம்மம் 
நட்ஷத்திரம் : மகம் 2ம் பாதம் 

ஜாதகிக்கு 1,3,5,9ம் வீடுகள் உயிர் உடல் என்று வர்ணிக்கப்படும் முதல் பாவகமான லக்கினத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பான நன்மைகளை தரும் அமைப்பாகும், அடுத்து 2ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானம் என்று அழைக்கப்படும் 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாகும், ஆனால் 4,6,7,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 11ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் மிகுந்த இன்னல்களை தரும் அமைப்பாகும், குறிப்பாக ஜாதக 8,12ம் பாவக வழியில் இருந்து 80% விகித இன்னல்களையும், 11ம் பாவக வழியில் இருந்து 200% சதவிகித இன்னல்களையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

அடிப்படையில் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைய சுய ஜாதகத்தில் குறிப்பாக பெண்கள் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானமான 2ம் வீடு, பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் வீடு, களத்திர ஸ்தானமான 7ம் வீடு, ஆயுள் ஸ்தானமான 8ம் வீடு, விரைய ஸ்தானமான 12ம் வீடு ஆகியவை மிகவும் வலிமையுடன் இருப்பது அவசியம், மேலும் லாபம் மற்றும் அதிர்ஷ்டம் என்று அழைக்கப்படும் 11ம் வீடு மிக மிக வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, குடும்ப ஸ்தானம் வலிமை பெறுவது குடும்பத்தில் ஒற்றுமையையும், நல்ல வருமான வாய்ப்பையும், பூர்வ புண்ணியம் வலிமை பெறுவது நல்ல வாரிசையும், சிறந்த அறிவு திறனையும், களத்திர ஸ்தானம் வலிமை பெறுவது கணவருடன் அன்பு நிறைந்த ஒற்றுமை, கருத்து வேறுபாடு அற்ற யோக வாழ்க்கை, இணை பிரியா நிலை, பரஸ்பரம் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொள்ளும் மன நிலை மற்றும் மனஒற்றுமை, தாம்பத்திய வாழ்க்கையில் வெற்றியையும், ஆயுள் ஸ்தானம் வலிமை பெறுவது தனக்கு நல்ல ஆயுளையும் பூர்ண சுமங்கலி யோகத்தையும், தன கணவனுக்கு நல்ல அதிர்ஷ்டம் மற்றும் யோக வாழ்க்கையையும், திருமணதிற்கு பிறகு வாழ்க்கையில்  பெரும் திடீர் முன்னேற்றத்தையும், விரைய ஸ்தானம் வலிமை பெறுவது தாம்பத்திய வாழ்க்கையில் குறையில்லாத நிலையையும், திருப்தியான வாழ்க்கை மற்றும் மனநிறைவையும், மனநிம்மதியையும், குழப்பம் அற்ற மனநிலை மற்றும் நிம்மதியான இல்லற வாழ்க்கையையும் சிறப்பாக வழங்கும்.

லாப ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகியின் அதிர்ஷ்டம் மற்றும் யோக வாழ்க்கையின் தன்மையை உறுதி படுத்தும், மேலும் ஜாதகி கொண்டுள்ள தன்னம்பிக்கை, முற்போக்கு சிந்தனை, வரும் எதிர்ப்புகளை கையாளும் தன்மை, மற்றவர்களுடன் உண்டான நன்னடத்தை, அனுசரித்து செல்லும் குணம், குடும்பம் மற்றும் வாழ்க்கை துணையின் நிலையறிந்து செயல்படும் சமோயோசித புத்திசாலித்தனம், எந்த ஒரு சூழ்நிலையையும் சிறப்பாக கையாளும் வல்லமை, ஒரு திறமைமிக்க நிர்வாகியாக செயல்படும் யோகம் என்ற வகையில் யோக பலன்களை தரும்.

ஆனால் மேற்கண்ட ஜாதகியை திருமணம் செய்த அன்பரின் சுய ஜாதகம் சற்று வலிமையுடன் இருப்பதால் குடும்ப வாழ்க்கை பல பிரச்சனைகளுக்கு இடையில் ஓடிக்கொண்டு இருக்கின்றது, இருப்பினும் ஜாதகியின் கணவர் பல பொருளாதார சிக்கல்களை திருமணம் ஆன சில வருடங்களிலேயே அனுபவித்து கொண்டு இருப்பது கண்கூடான உண்மை, ஜாதகிக்கு சுக ஸ்தான பாதிப்பு நல்ல குணமற்ற தன்மையையும், சுக போகங்களை அனுபவிக்க இயலாத சூழ்நிலையையும், சத்ரு ஸ்தான பாதிப்பு கடன், எதிரி, உடல்நல பாதிப்பையும், களத்திர ஸ்தான பாதிப்பு வாழ்க்கை துணையுடன் உண்டான புரிதல் மற்றும் இணக்கம் அற்ற தன்மையையும், தாம்பத்திய வாழ்க்கையில் இன்னல்களையும், ஆயுள் ஸ்தான பாதிப்பு கணவனுக்கு பேரிழப்புகள், மருத்துவ செலவினம் மற்றும் பொருளாதார சிக்கல்களையும், ஜீவன ஸ்தான பாதிப்பு கௌரவம்,அந்தஸ்து, சுயமரியாதை அற்ற சூழ்நிலைகளையும், சிறப்பான தொழில் முன்னேற்றம் இன்மையையும், விறைய ஸ்தான பாதிப்பு தாம்பத்திய வாழ்க்கையில் நிம்மதி இன்மையையும், அதிக அளவிலான மன போராட்டம், மன உளைச்சல், மன நோய் மற்றும் மனபிரழ்ச்சியை வழங்கி கொண்டு இருக்கின்றது, இதற்க்கு எல்லாம் சிகரம் வைத்தார் போல் தற்பொழுது நடைபெறும் சூரியன் திசையும் ( 06/05/2012 முதல் 07/05/2018 வரை ) எதிர் வரும் சந்திரன் திசையும் ( 07/05/2018 முதல் 06/05/2018 வரை ) 4,6,7,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனையே ஏற்று நடத்துவது, ஜாதகியின் இல்லற வாழ்க்கைக்கு உகந்தது அல்ல என்பது வருந்தத்தக்க விஷயமாகும்.

மேலும் ஜாதகியின் லாப ஸ்தான பாதிப்பு ( பாதக ஸ்தான தொடர்பை பெறுவதால் ) ஜாதகியின் வாழ்க்கையையே மிகப்பெரிய கேள்விக்குறியாக மாற்றும், முரண்பட்ட சிந்தனை, பிற்போக்குத்தனமான செய்கைகள், முட்டாள்தனம், தன்னுடன் உள்ளவர்களை அனுசரித்து செல்லும் பக்குவம் இன்மை, அனைத்திற்கும் கோவம் கொள்ளும் குணம், சிறு விஷயத்தையும் பெரிதாக்கும் தன்மை, குற்ற உணர்ச்சி, குற்றம் கண்டுபிடிக்கும் தன்மை என ஜாதகியே தனது வாழ்க்கையை தானே கெடுத்துக்கொள்ள அதிக வாய்ப்பு உண்டு, எனவே சுக்கிரன் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் நடைபெறும் பாதக ஸ்தான பலனில் இருந்து விடுபட சரியான தீர்வுகளை தேடவில்லை எனில், இல்லறவாழ்க்கை ஜாதகிக்கு கடுமையாக பாதிக்கும், ஜாதகியின் கணவனையும் மிகப்பெரிய பாதிப்பிற்கு உள்ளாக்கும் என்பதுமட்டும் உண்மை.

குறிப்பு :

திருமணம் செய்துகொள்ளும் முன் வரன் வது இருவரும், தனது ஜாதக வலிமையையும், தனது வாழ்க்கை துணையாக வர இருக்கும் ஜீவனின் ஜாதகத்தையும் கருத்தில் கொண்டு இல்லற வாழ்க்கையில் இணைவது சாலச்சிறந்தது, மாறாக 10 பொருத்தத்தை மட்டும் கருத்தில் கொண்டு இல்லற வாழ்க்கையை தேர்வு செய்யும் பொழுது சுய ஜாதகம் வலிமை பெற்று இருப்பின் யாதொரு இன்னல்களும் இல்லை, சுய ஜாதகம் வலிமை இழப்பின், தாம்பத்திய வாழ்க்கை சில நாட்களிலேயே மனக்கசப்பை ஏற்படுத்தி, மணவாழ்க்கையில் பிரிவைத்தந்துவிடும். ( மேற்கண்ட ஜாதகி தனது ஜாதக நிலையை உணர்ந்து தனது கணவனுக்கும் உறவுகளுக்கும் பணிந்து நடந்து சிறப்பாக இல்லற வாழ்க்கையை நடத்த வேண்டும், அதற்க்கு ஜாதகி முறையான பிரீதி பரிகாரங்களை நாடுவதே நலம் தரும் )

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 3 டிசம்பர், 2016

நடைபெறும் புதன் திசை, எதிர்வரும் கேது மற்றும் சுக்கிரன் திசை ஆகியவற்றில் சுப பலன்களை தரும் திசை எது ?


 சுய ஜாதகங்களில் நடைபெறும் நவ கிரகங்களின் திசாபுத்திகள், தனிப்பட்ட முறையில் ஜாதகருக்கு யோகங்களையோ அவயோகங்களையோ வழங்குவதில்லை, சுய ஜாதகத்தில் பாவகங்கள் பெற்ற வலிமையையே நவகிரகங்கள் தனது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமத்தில் ஏற்று நடத்துகிறது, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்களின் பலனை ஏற்று நடத்தும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஜாதகருக்கு ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து யோகம் மற்றும்  நன்மைகளையும், வலிமை அற்ற பாவகங்களின் பலனை ஏற்று நடத்தும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஜாதகருக்கு ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து அவயோகம் மற்றும் தீமைகளையும் தருகின்றது, பெரும்பாலும் சுய ஜாதகத்தில் நடைபெறும் திசை தனது காலங்களில் நீடித்த நன்மை தீமை பலன்களை தருவதில் முதலிடம் பெறுகிறது, புத்தி மத்திம கால நன்மை தீமை பலன்களை தருவதில் இரண்டாம் இடமும், அந்தரம் குறுகிய கால நன்மை தீமை பலன்களை தருவதில் மூன்றாம் இடமும், சூட்சமம் மிக குறுகிய கால நன்மை தீமை பலன்களை தருவதில் நான்காம் இடமும் பெறுகின்றது, இத்துடன் நவ கிரகங்களின் கோட்சார சஞ்சார நிலை தரும் யோக அவயோக நிகழ்வுகளும் கருத்தில் கொண்டு பலன் காண, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தெளிவான பலாபலன்கள் நிச்சயம் கிடைக்க பெறலாம்.

தங்களின் கேள்விகளுக்கு உண்டான பதில்கள் கீழ்வருமாறு :

1) தற்போழுது நடைபெறும் புதன் திசை தங்களுக்கு சுப பலன்களை தரவில்லை எனலாம், ஏனெனில் தற்போழுது நடைபெறும் புதன் திசை தங்களுக்கு 3,4,6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 4,6,12ம் பாவகங்களின் பலன்களை ஏற்று நடத்துகிறது, இது தங்களுக்கு உகந்த அமைப்பு அல்ல, எனவே தங்கள் வீடு,வண்டி வாகனம், கடன், எதிரி தொந்தரவு, மறைமுக எதிர்ப்புகள், தொழில் முடக்கம், எடுக்கும் காரியங்களில் இன்னல்கள் மற்றும் முயற்சிகள் தோல்வி அடையும் சூழ்நிலை, மற்றும் உறக்கமின்மை, சிந்தனை திறன் குறைவு, மனநிம்மதி இன்மை, குழப்பம், தெளிவின்மை, ஆகியவற்றால் இன்னலுற அதிக வாய்ப்பு உண்டு, புதன் திசை தங்களுக்கு விரைய ஸ்தான பலனையே தருவது தங்களுக்கு நிச்சயம் மேற்கண்ட பாவகவழியில் இன்னல்களை தரும்.

புதன் திசையில் தற்போழுது நடைபெறும் சனி புத்தியும் ( 04/06/2014 முதல் 11/02/2017 வரை ) தங்களுக்கு 4,12ம்  பாவக பலனையே ஏற்று நடத்துவது சிறப்பான விஷயம் அல்ல, விரைய ஸ்தான வழியில் தங்கள் வெகுவான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், எனவே தற்போழுது நடைபெறும் புதன் திசையும் தங்களுக்கு சுப பலன்களை தரவில்லை, புதன் திசையில் நடைபெறும் சனி புத்தியும் சுப பலன்களை தரவில்லை, என்பதே உண்மை நிலை.

2) எதிர்வரும் கேது திசை ( 11/02/2017 முதல் 12/02/2024 வரை ) தங்களுக்கு 5,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் நன்மைகளை தருவது வரவேற்க தக்கது, மேலும் தங்களின் லாப ஸ்தானம் சர ராசி மண் தத்துவத்தில் அமைவது 100% சதவிகித யோக பலன்களை தரும் அமைப்பாகும், எனவே தாங்கள் எதிர்வரும் கேது திசை காலங்களில் தங்களின் வாழ்க்கையில் 5ம் பாவக வழியில் சுய அறிவு திறனால் லாபம், அதிர்ஷ்டம், கற்ற கல்வி மற்றும் கலை மூலம் யோகம், அதிபுத்திசாலித்தனத்தால் யோக வாழ்க்கை பெறுதல், குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் மகிழ்க்கரமாக வாழும் சூழ்நிலை, தமது குழந்தைகள் வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கை என்ற வகையிலும், 8ம் பாவக வழியில் இருந்து புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கை, எண்ணம் மற்றும் லட்சியங்கள் நிறைவேறுதல், நெடுநாள் ஆசை பரிபூர்ணமாக நிறைவேறும் யோகம், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பொருளாதர முன்னேற்றம், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து வரும் லாபங்கள், எதிர்பாராத செல்வ சேர்க்கை, திடீர் அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் லாபம் என்ற வகையில் நன்மைகள் உண்டாகும்,

11ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் அனைத்து காரியங்களிலும் தங்களுக்கு வெற்றியும் முன்னேற்றமும் உண்டாகும், லாபங்கள் அபரிவிதமான வந்து சேரும், மனதில் நினைக்கும் காரியங்கள் யாவும் நடைமுறைக்கும் வரும், தன்னம்பிக்கை மற்றும் உற்சாகம் அதிகரிக்கும், பரிபூர்ண யோக வாழ்க்கைக்கு யாதொரு தடையும் ஏற்படாது, சிறப்பான இடத்தில் திருமணம் நடைபெறும், வாழ்க்கை துணை வழியில் இருந்து லாபம் மற்றும் அதிர்ஷ்டங்களை அனுபவிக்கும் யோகத்தை தரும், தற்போழுது நடைபெறும் புதன் திசையை விட எதிர்வரும் கேது திசை தங்களின் வாழ்க்கையில் 5,8,11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும், என்பதில் மாற்று கருத்து இல்லை ( பொதுவாக கேது திசை அனைவருக்கும் இன்னல்களை தரும் என்று சொல்வதுண்டு, இது தங்களின் சுய ஜாதகத்திற்கு சிறிதும் பொருந்தாது என்பதை நினைவில் கொள்க )

3) கேது திசைக்கு அடுத்து வரும் சுக்கிரன் திசை ( 12/02/2024 முதல் 12/02/2044 வரை ) தங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு பலனையும் தரும் திசையாக விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை அன்பரே  ஏனெனில் சுக்கிரன் திசை தங்களுக்கு வலிமை பெற்ற 1,5,7,8,11 வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெற்று யோக பலன்களை தருவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து 100% சதவிகித யோக பலன்களை தங்கு தடையின்றி வாரி வழங்கும், லக்கின வழியில் இருந்து அதிக லாபம் மற்றும் எதிர்பாராத அதிர்ஷ்டம், திடீர் தனசேர்க்கை, மற்றும் பொருளாதார தன்னிறைவு, அனைவரின் ஆதரவை பெரும் யோகம், வருமுன் உணர்ந்து செயல்படும் தன்மை, எண்ணம் நிறைவேறும் யோகம், குழந்தைகள் மூலம் யோக வாழ்க்கை, தன்னம்பிக்கை மிக்க மனநிலை, சோர்வு அறிய யோக வாழ்க்கை, ஆசைகள் அனைத்தும் நிறைவேறுதல் என தங்களின் வாழ்க்கையில் சகல யோகமும் சுக்கிரன் திசையில்  நடைமுறைக்கு வரும்.

 மேலும் களத்திர ஸ்தான வழியில் இருந்து நன்மைகள், வாழ்க்கை துணையின் ஆதரவு, பொருளாதார இன்னல்களில் இருந்து விடுபடும் யோகம், பொதுமக்களின் ஆதரவு, அரசியலில் வெற்றி, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் வாழ்க்கையில் சகல நிலைகளிலும் சுப யோக பலன்களை அனுபவிக்கும் தன்மை, எதிர்ப்புகள் அனைத்தும் தங்களுக்கு சாதகமாக மாறும் யோகம், வியாபாரம் மூலம் அதிர்ஷ்டம், வெளிநாடு மற்றும் வெளியூரில் இருந்து வரும் யோக வாழ்க்கை, கூட்டு முயற்சி மற்றும் கூட்டு தொழில் மூலம் தங்களின் வாழ்க்கையில் பெரும் முன்னேற்றம் என்ற வகையில் சுக்கிரன் திசை தங்களுக்கு சுபயோக பலன்களை வாரி வழங்கும், மேலும் சுக்கிரன் திசை காலத்தில் கேது திசையில் நடைபெற்ற 5,8,11ம் பாவக யோக பலாபலன்களும் நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்கத்தக்கது.

எனவே தங்களுக்கு தற்போழுது நடைபெறும் புதன் திசை அவயோக பலன்களையே வழங்கி உள்ளது, எதிர்வரும் கேது மற்றும் சுக்கிரன் திசை சிறப்பான சுபயோக பலன்களை வழங்க தயாராக உள்ளது என்பது மட்டும் உறுதி எதிர்வரும் கேது,சுக்கிரன் திசை தரும் யோக பலன்களை அனுபவிக்க தங்கள் சரியான திட்டமிடுதல்களுடன் செயல்படுவது உகந்ததாக அமையும் என்பது சரியானதாக இருக்கும் "வாழ்த்துக்கள்" அன்பரே!

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சுய ஜாதகத்தில் மறைவு ஸ்தானங்கள் ( 2,6,8,12 ) வலிமை இழந்தால் ஜாதகருக்கு நன்மை நடைபெறுமா ?


 சுய ஜாதகத்தில் மறைவு ஸ்தானங்கள் எனும் 2,6,8,12ம் வீடுகள் வலிமை இழந்து காணப்படுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு வாழ்க்கையில் நன்மைகளை தரும் என்பது பொதுவான கருத்து, தீய ஸ்தானங்கள் வலிமை இழப்பது ஜாதகருக்கு நன்மைதரும், தீமைகள் வெகுவாக குறையும் என்பது முற்றிலும் ஜாதக கணிதத்திற்கு புறம்பானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களும் வலிமை பெற்று இருப்பதே சம்பந்த பட்ட ஜாதகருக்கு யோகத்தை நல்கும் அமைப்பாகும், துர் ஸ்தானங்கள் என்று அழைக்கப்படும் 2,6,8,12 ம் வீடுகள் வலிமை இழப்பது சம்பந்தப்பட்ட ஜாதகரை மேற்கண்ட பாவக வழியில் இருந்து தரும் இன்னல்களை அதிகரிக்கும், அடிப்படையில் மறைவு ஸ்தானங்களாக கருதப்படும், 2,6,8,12ம் வீடுகள் ஒரு ஜாதகருக்கு இன்னல்களை மட்டுமே தரும் என்று கருதுவது தவறான அணுகுமுறையே, மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெறுவது ஜாதகருக்கு தனது பாவக நிலையில் இருந்து நன்மைகளையும் தரும்  என்பதை கருத்தில் கொண்டு சுய ஜாதக பலன் காண முற்படுவதே சால சிறந்தது.


மறைவு ஸ்தானங்கள் என்று அழைக்கப்படும் 2,6,8,12 பாவகங்கள் வழியில் இருந்து ஜாதகர் பெரும் நன்மைகள் :

1) 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் குடும்ப வாழ்க்கையில் பெரும் மகிழ்ச்சி, சந்தோசம், நிம்மதி, நிலையான வருமானம், இனிமையான பேச்சு திறன், வாக்கு பலிதம், வருமானம் மூலம் ஜாதகர் பெரும் பொருளாதார வளர்ச்சி, ஜாதகருக்கு வருமானம் வரும் வாய்ப்புகள், தொடர் வருமானம், ஜாதகரின் பொருளாதார முன்னேற்றம், ஜாதகரின் வாழ்க்கை துணை ஜாதகருக்கு தரும் ஆதரவு, பொருளாதார திட்டமிடுதல்கள், சேமிப்பு, தனசேர்க்கை, கையிருப்பு, தனலாபம், தொழில் லாபம், அளவற்ற செல்வம், வரவு செலவுகள் சிறப்பு, சொத்துக்கள் மூலம் வருமானம் பெறுதல், கல்வியின் வழியில் வருமானம், அறிவு பூர்வமான செயல்களினால் வெற்றி, என ஜாதகரின் வருமான வாய்ப்புகளை சிறப்படைய செய்ய நிச்சயம் சுய ஜாதகத்தில் 2ம் பாவகம் வலிமை பெறுவது அவசியமாகிறது.

2) 6ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் தமக்கு வரும் உடல் தொந்தரவுகளை எதிர்க்கும் வல்லமை, ஜாதகருக்கு வரும் எதிர்ப்பு மற்றும் சவால்களை சரியான விதத்தில் எதிர்கொண்டு வெற்றி பெரும் யோகம், தேர்வு மற்றும் தேர்தல்களில் வெற்றி, வட்டி வரவு செலவு, கடன் மூலம் யோக வாழ்க்கை, பணியாளர்கள் மூலம் நன்மை மாற்றும் ஒத்துழைப்பு, மருந்து மற்றும் மருத்துவ உபகரணம் மூலம் லாபம், வழக்குகளில் வெற்றி மற்றும் லாபம் சூது மற்றும் பங்கு சந்தைகளில் லாபம், அனைத்திலும் வெற்றி, எந்த தடையும் இனி அனைத்திலும் வெற்றி பெரும் யோகம், சமாதான பிரியர், பணியாற்றுவதில் ஆர்வம், தோல்வி மற்றும் ஏமாற்றங்களே ஜாதகருக்கு வெற்றியாக மாறுதல் என்ற வகையில் நன்மைகளை பெற சுய ஜாதகத்தில் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகம் வலிமை பெறுவது அவசியமாகிறது.

3) 8ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் பூர்ண ஆயுள் பலம், விபத்துகள் மற்றும் இழப்பு அற்ற வாழ்க்கை, உயில் மூலம் லாபம், திடீர் அதிர்ஷ்டம், புதையல் யோகம், இன்சூரன்ஜ், பங்கு வர்த்தகத்தில் லாபம், லாட்டரி மற்றும் பரம்பரை சொத்துக்கள், பெண்கள் வழியில் லாபம், மற்றவர் பணம் கையிருப்பு, எதிர்பாராத யோக வாழ்க்கை, திடீர் தன சேர்க்கை, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கை, அவர்கள் வழியில் கிடைக்கும் சொத்து சுக  சேர்க்கை, வெற்றிகரமான வியாபரம், எதிர்பாராத திடீர் லாபம், மருத்துவ துறையில் செல்வ சேர்க்கை, தந்தை மற்றும் முன்னோர்களின் சொத்துக்களை சுவீகரிக்கும் வல்லமை, அந்நியரின் சொத்துக்களை பராமரிக்கும் மற்றும் அனுபவிக்கும் யோகம், பினாமி வழியிலான சொத்துக்களை நிர்வகிக்கும் யோகம் என்ற வகையில் நன்மைகளை பெற சுய ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகம் வலிமை பெறுவது அவசியமாகிறது.

4) 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அதிக முதலீடுகள் செய்வதால் பெரும் தன்னிறைவான பொருளாதர முன்னேற்றம், திருப்தியான யோக வாழ்க்கை, வெளிநாடுகள் மற்றும் வெளியூரில் பிரபல்யம் மற்றும் சொத்து சேர்க்கை, மருத்துவம் மற்றும் மருந்துகள் மூலம் மிகுந்த லாபம், பயணம் மூலம் லாபங்கள், அறிய இரத்தின சேர்க்கை, புதையல் மற்றும் மண்ணிற்கு கீழ் கிடைக்கும் உலோக பொருள்கள் மூலம் லாபம், மனோதத்துவத்தில் நிபுணத்துவம், புலனுக்கு அப்பாற்ப்பட்ட சக்திகள் இயங்குவதன் மூலம் ஜாதகர் பெரும் யோக வாழ்க்கை, தாம்பத்திய இன்பம், சுகபோகம், கூட்டு செயல்களில் லாபம், திடீர் லாட்டரி யோகமும் தன சேர்க்கையும் உண்டாகும், திடீர் பொருள் வரவு என்ற வகையில் என்ற வகையில் நன்மைகளை பெற சுய ஜாதகத்தில் விரைய ஸ்தானமான 12ம் பாவகம் வலிமை பெறுவது அவசியமாகிறது.

மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 2,6,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதுடன், 5,11ம் வீடுகளும் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் பொருளாதாரம், குடும்பம், சுய முன்னேற்றம், அதிர்ஷ்டம், மற்றும் தன லாபம் ஆகியவற்றை பதம் பார்க்கும் அமைப்பாகும், 5ம் வீடு பாதிப்படைவது, ஜாதகருக்கு புத்திர பாக்கியத்திர்க்கு தடையையும், 11ம் வீடு பாதிப்பது ஜாதகரின் தன்னம்பிக்கை, அதிர்ஷ்டம், சுய லாபங்களை கேள்விக்குறியாக்கும், மேலும் ஜாதகரின் விரைய ஸ்தானம் ஸ்திர ராசியில் அமைவது நிலையான சிரமங்களை மேற்கண்ட பாவக வழியில் இருந்து வாரி வழங்கும்.
 
மேலும் தற்போழுது நடைபெறும் சனி திசை ( 31/12/2012 முதல் 01/01/2032 ) 2,6,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு மிகுந்த சிரமத்தை தனது திசையில் தரும் அமைப்பாகும், சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் பாதிக்கப்பட்டது இன்னல்களை தரும் அமைப்பு என்ற போதிலும், தற்போழுது நடைபெறும் சனி திசை விரைய ஸ்தான பலனையே ஏற்று நடத்திடுவது ஜாதகருக்கு மிகுந்த இன்னல்களை தரும் அமைப்பாகும், தரப்பொழுது நடைபெறும் சனி திசை காலத்தில் ஜாதகர் பெருவாரியான அமைப்பில் குடும்பம் மற்றும் பொருளாதர சிக்கல்களையும், ஜீவன மேன்மையற்ற தன்மையையும் அனுபவித்துக்கொண்டு இருக்கின்றனர், ஜாதகரின் குடும்ப வாழ்க்கையில் வாழ்க்கை துணையுடனனான இன்னல்களையும், வருமானம் சார்ந்த தொந்தரவுகளும் தற்போழுது அதிக அளவில் இருப்பது கவனிக்க தக்கது, மேலும் சுய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் வல்லமையை கூட ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் சனி திசை தரவில்லை என்பது, சனி திசை 2,6,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஸ்திரமான விரைய ஸ்தான பலனை தருவதே அன்றி வேறு எதுவும் இல்லை அன்பர்களே!

எனவே சுய ஜாதகத்தில் மறைவு ஸ்தானங்கள் வலிமை இழப்பது ஜாதகரின் வாழ்க்கையில் மிகுந்த கடுமையான பாதிப்புகளை தரும் என்பதே முற்றிலும்  உண்மை, மாறாக சுய ஜாதகத்தில் மறைவு ஸ்தானங்கள் வலிமை இழப்பது நன்மையை தரும் என்று கருதுவது முற்றிலும் ஜாதக கணிதத்திற்கு புறம்பானதாகவே அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 11 நவம்பர், 2016

சனி திசை தரும் தொழில் முன்னேற்றமும், தொழில் வெற்றிகளையும் வழங்கும் ஜீவன ஸ்தான வலிமையும் !


" உத்தியோகம் புருஷ லட்சணம் " என்ற பழமொழிக்கு உதாரணமாக வாழ வேண்டும் எனில் ஒருவரின் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் மற்றும் அதற்க்கு வலிமை சேர்க்கும் பாவகங்கள் நல்ல நிலையில் இருப்பது அவசியமாகிறது, குறிப்பாக ஜீவன ஸ்தானம் மட்டும் வலிமை பெறுவதை விட சுய ஜாதகத்தில் ஜீவன வாழ்க்கையுடன் தொடர்பு பெரும் பாவகங்களும் வலிமைபெறுவது சிறப்பான நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும், சுயமாக தொழில் செய்து அதில் வெற்றிகரமாக திகழ சுய ஜாதகத்தில் 1,3,4,5,7,9,10,11 வீடுகள் வலிமை பெற்று காணப்படுவது அவசியமாகிறது, லக்கினம் வலிமை பெறுவது ஜாதகரின் தொழில் நிர்வாக வல்லமையை வழங்கும், வீரிய ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகர் தொழில் வகையில் மற்றவர்களுடனான தொடர்பையும், இணக்கமான சூழ்நிலையை சிறப்பாக அமைத்து தரும், சுக ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகர் இடம்,பொருள் மற்றும் சொத்துக்களை நிர்வகிக்கும் வல்லமையையும், சுய பொருள் சேர்க்கையும் வழங்கும், பூர்வபுண்ணிய ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதர் தமது தொழில் மேல் கொண்டுள்ள ஆராவத்தையும், நுண் அறிவு திறனையும், தெளிவான சிந்தனையுடன் கூடிய திட்டமிடுதல்களையும் வழங்கும், தொழில் வழியில் ஜாதகர் பெரும் படி படியான முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும்.
களத்திர ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகர் தனது தொழில் வழியில் செய்யும் வியாபார யுக்திகளையும், பொதுமக்கள், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் ஜாதகர் கொண்டுள்ள உறவை வலுவாக்கும், மேலும் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் ஜாதகரின் தனி திறனை வெளிப்படுத்தும், பாக்கிய ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகர் தனது தொழில் வழியில் நல்ல பெயரையும், நம்பிக்கையையும், பொது மக்கள் மத்தியில்  பிரபல்யம் பெரும் யோகத்தை தரும், ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகருக்கு உகந்த தொழில் எது என்பதை தெளிவு படுத்தும், ஜாதகர் செய்யும் தொழில் வகைகளை நிர்ணயம் செய்யும், ஜாதகருக்குள்ள  உள்ள பன்முக தொழில் வல்லமையை  தெளிவு படுத்தும், தான் செய்யும் தொழில் வழியில் ஜாதகர் பெரும் யோக வாழ்க்கையை நிர்ணயம் செய்யும், ஜாதகர் சுய தொழில் செய்ய உகந்தவரா? கூட்டு தொழில் செய்ய உகந்தவரா? அடிமை தொழில் செய்ய உகந்தவரா? அரசு அல்லது தனியார் துறையில் பணிபுரியும் யோகம் பெற்றவரா? சிறுகுறு தொழில், நடுத்தர தொழில் மற்றும் பெரும் முதலீடுகள் கொண்ட தொழில்களை எதை செய்ய அருகதை கொண்டவர் என்பதை தெளிவுபடுத்தும்.

லாப ஸ்தானம் ஜாதகர் தனது தொழில் மற்றும் சுய ஜாதக வலிமையின் அடிப்படியில் பெரும் லாபங்கள், அதிர்ஷ்டங்கள், சுயமுன்னேற்றம், முயற்ச்சியில் பெரும் வெற்றி, நீடித்த அதிர்ஷ்டம், தனக்கு வரும் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்தி வெற்றிகொள்ளும் யோகம், தேடிவரும் பதவி, புகழ், தொழில் முன்னேற்றம், சூழ்நிலைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் யோகம், சரியான திட்டமிடுதல்கள், மற்றவர்கள் ஆதரவை பரிபூர்ணமாக பெரும் யோகம், தன்னம்பிக்கை மிக்க மனநிலை, முற்போக்கு சிந்தனை, லட்ச்சியம் மற்றும் கனவுகளை நடைமுறைக்கு கொண்டு வரும் வல்லமை, எதிர்ப்புகள் அற்ற யோக வாழ்க்கை, அனைத்து சூழ்நிலைகளையும் சிறப்பாக கையாண்டு வாழ்க்கையில் முன்னேற்றங்களை தங்கு தடையின்றி பெரும் வல்லமை, சுய முன்னேற்றம், அதிபுத்திசாலித்தனம், சரியான திட்டமிடுதல்கள், தொலைநோக்கு பார்வை மூலம் தனது தொழில் முன்னேற்றத்தை சிறப்பாக எடுத்து செல்லும் வல்லமை, ஆராய்ச்சி மனப்பக்குவம், எதையும் சுய அறிவு கொண்டு நிர்ணயம் செய்தல், என ஜாதகர் தொழில் ரீதியாக பெரும் நன்மைகள் அனைத்தையும் ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவதை லாபஸ்தானமே நிர்ணயம் செய்கிறது, ஓர் ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெற்று, நடைபெறும் திசை எதிர்வரும் திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருப்பது, சம்பந்தப்பட்ட ஜாதகரை நிச்ச்யம் சிறந்த தொழில் அதிபராக இந்த உலகத்திற்கு வழங்கும்.

இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம்.


லக்கினம் : தனுசு
ராசி : கும்பம் 
நட்ஷத்திரம் : சதயம் 2ம் பாதம்.

ஜாதகருக்கு மேற்கண்ட கட்டுரையில் கூறியது போன்று அனைத்து பாவகங்களும் மிகவும் வலிமை பெற்று இருக்கின்றது, குறிப்பாக 1,3ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் வியாபர விருத்தி பெரும் யோகம் பெற்றவர் என்பதனையும், 2,5ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் செய்யும் தொழில் நல்ல வருமானமும், நம்பிக்கை மற்றும் நார்ப்பெயர் எடுப்பவர் என்பதனையும், சுய அறிவு திறனும் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு வாழ்க்கையில் சுய முன்னேற்றம் பெறுபவர் என்பதனையும், 4,7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சொத்து சுக சேர்க்கை, வீடு, நிலம் மற்றும் வண்டி வாகன யோகம் மூலம் ஜீவன வாழ்க்கை பெறுபவர் என்பதனையும், கூட்டு முயற்ச்சி மற்றும் கூட்டு தொழிலில் வெற்றி பெறுபவர் என்பதனையும், செய்யும் தொழில் வழியில் நல்ல முன்னேற்றமும் விருத்தியும் பெரும் யோகம் கொண்டவர் என்பதனையும் தெளிவுபடுத்துகிறது, 9ம் வீடு சத்ரு ஸ்தானத்துடன்  சம்பந்தம் பெறுவது குறுகிய கால ஜீவன வெற்றிகளையும், சமூக தொழில் முறை அந்தஸ்த்தையும் பெறுபவர் என்பதனையும் உறுதி செய்கிறது.

11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் 100% சதவிகித தொழில் வெற்றியையும், அளவில்லா லாபம் மற்றும்  அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்குவது, ஜாதகத்திற்க்கே சிகரம் வைத்தார் போல் சிறப்பான யோக வாழ்க்கையை தரும் அமைப்பாகும், மேலும் ஜாதகரின் எண்ணங்கள் மற்றும் கனவுகள் யாவும் நடைமுறைக்கு வரும், தொழில் ரீதியான பெரும் வெற்றிகளை ஜாதகர் பெறுவார், ஜாதகரின் லாப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியாகவும், சர காற்று ராசியாகவும் அமைவது ஜாதகரின் வாழ்க்கையில் வாழ்க்கை துணை,பொதுமக்கள்,நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து சிறப்பான முன்னேற்றங்களையும் அதிர்ஷ்ட வாழ்க்கையையும் பெறுவார் என்பதை  உறுதி செய்கிறது.

தற்போழுது நடைபெறும் சனி திசை ( 06/11/2010 முதல் 06/11/2029 வரை ) வலிமை பெற்ற குடும்பம்,பூர்வபுண்ணியம் மற்றும் லாப ஸ்தான பலன்களையே ஏற்று நடத்துவது ஜாதகரின் தொழில் விருத்தியை பன்மடங்கு வாரி வழங்கும், சகல விஷயங்களில் இருந்து ஜாதகர் அதிர்ஷ்ட வாயுப்புக்களையும், கை நிறைவான வருமான வாய்ப்புகளையும் தங்கு தடையின்றி வழங்கும், சனி திசை ஜாதகருக்கு தொழில் ரீதியாக 100% விகித வெற்றிகளை வழங்குவது வரவேற்க தக்கது, வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 8 நவம்பர், 2016

ராகு திசை வழங்கும் கலைத்துறை வாழ்வு, திரைபட துறையில் ஜாதகரின் வெற்றிகள் !

 
 
இறை அருளின் கருணையினால், கலை துறையில் பல சாதனைகளையும், வெற்றிகளையும் குவித்த பல அன்பர்கள் இருப்பினும், திரையுலக மார்க்கண்டேயர் என்று அழைக்கப்படும் அன்பரின் புதல்வர்களில் முன்னவரின் ஜாதகம் இது, பொதுவாக திரைபட துறையில் பிரபல்யம் பெறுவது என்பது எளிதான ஒன்று அல்ல என்றே சொல்லலாம், கலை துறையில் திரைபட துறை மட்டுமல்ல ஆய கலைகள் 64 ற்கும் இது பொருந்தும், கலைத்துறையில் பிரகாசிக்க இறை அருளின் பரிபூர்ண கருணை நிச்சயம் தேவை, மேலும் சுய ஜாதகம் வலிமை பெறுவது மிக மிக முக்கியம் என்பதில் மாற்று கருத்து இல்லை, இந்த பதிவில் திரையுலக மார்க்கண்டேயரின் புதல்வர்களில் முன்னவரின் ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!


லக்கினம் : ரிஷபம் 
ராசி : மகரம் 
நட்ஷத்திரம் : உத்ராடம் 2ம் பாதம் 

ஜாதகருக்கு ரிஷப லக்கினம், சுய ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானம் என்று அழைக்கப்படும் 8ம் பாவாகத்தை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் மிகவும் வலிமை பெற்று இருப்பது வரவேற்கத்தக்க அமைப்பாகும்,பொதுவாக சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் எனும் 5ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகருக்கு இருக்கும் கலை ஆர்வத்தை தெளிவு படுத்தும், மேலும் ஜாதகர் கலைத்துறையில் பெரும் வெற்றிகளை குறிக்கும், மேற்கண்ட ஜாதகருக்கு 5,11ம் வீடுகள் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெறுவது ஜாதகர் கலைத்துறையில் அதிர்ஷ்டவாழ்க்கையை பெறுபவர் என்பதை உறுதி படுத்துகிறது, 5ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகரை கலைத்துறையில் ஆர்வத்தையும், கடின உழைப்பின் மூலம் வெற்றிகளை பெரும் யோகத்தை தந்தது, மேலும் சுய அறிவு திறன், சமயோசித புத்திசாலித்தனம், தனது செயல்களில் விவேகம் மற்றும் விழிப்புணர்வுடன் செயல்படும் தன்மை, எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு செயல்படுத்தும் வல்லமை, சுய அறிவு கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகம், கற்ற கல்வியை தனது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு சிறப்பாக பயன்படுத்தும் நுண்ணறிவு திறன், அதிபுத்திசாலித்தனம், நல்ல குணங்கள், குல தேவதை மற்றும் கலைமகளின் பரிபூர்ண நல்லாசிகளை பெரும் யோகம் என்ற வகையில் சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், சிறப்பான நினைவு திறனும், அறிவார்ந்த செயல்களும் ஜாதகரின் வாழ்க்கையில் அளவில்லா யோகங்களை வாரி வழங்கும்.

கலைத்துறையில் மக்கள் செல்வாக்கையும், பிரபல தன்மையை பெறுவதற்கு களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் வலிமை பெறுவது அவசியமாகிறது, ஜாதகருக்கு 1,2,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று வலிமை பெறுவது ஜாதகர் லக்கின வழியில் இருந்து மக்கள் செல்வாக்கையும், பொதுமக்களுடனான தொடர்பையும் சிறப்பாக வழங்குகிறது, 2ம் பாவக வழியில் இருந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரம் மூலம் வருமான வாய்ப்பை பெரும் யோகத்தை வழங்குகிறது, ஜாதகரின் பேச்சு மற்றும் இயக்கம் மூலம் வருமான வாய்ப்பை பெரும் யோகத்தை தருகிறது, 7ம் பாவக வழியில் இருந்து மக்கள் தொடர்பு, மக்கள் ஆதரவு, வெகுஜன வசீகரம், பொதுமக்களிடம் பிரபல்யம் அடைதல், வியாபர விருத்தி, வாழ்க்கை துணை ஆதரவு, கூட்டு முயற்ச்சி வெற்றி பெறுதல், கலைத்துறை பிரபல்ய யோகம், எதிர்பாராத வெற்றிகள், தன்னம்பிக்கை மிக்க செயல்பாடுகள், அனைவராலும் விரும்பப்படும் தன்மை, பொறுப்பு மிக்க செயல்கள், நல்ல மனம், சமூக அந்தஸ்து, சமூக நலனில் அக்கறை, சுய முன்னேற்றம், தடைகளை தகர்த்து வாழ்க்கையில் வெற்றி பெரும் யோகம், வெளிநாடுகளில் பிரபல்யம் மற்றும் வியாபர விருத்தி, மக்கள் தொடர்புள்ள பணிகளில் வெற்றிமேல் வெற்றி என்றவகையில் யோகங்களை வாரி வழங்கும், கலைத்துறையில் ஜாதகரின் வெற்றிக்கு மிக முக்கிய காரணிகள் 1,2,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது என்றால் அது மிகையில்லை.

3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் கொண்ட லட்ச்சியங்களில் வெற்றிபெறும் தன்மையை குறிக்கும், ஜாதகருக்கு  வீரிய ஸ்தானம் வலிமை பெறுவது மிகசிறந்த வியாபர நுணுக்கம் பெற்றவர் என்பதும், " காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்ளும் " வல்லமை பெற்றவர் என்பதையும் உறுதிப்படுத்துகிறது, மேலும் ஜாதகர் செய்யும் விஷயங்கள் யாவிலும் வெற்றியை வாரி வழங்கும், ஜாதகரின் முயற்சிகள் எந்த காரணத்தைக்கொண்டும் தோல்வியை தர வாய்ப்பில்லை என்பதால், ஜாதகர் தொடர் வெற்றிகளை பெறுவதற்கு அருகதை பெற்றவர் ஆகிறார், மேலும் கணிதம்,ஜோதிடம்,கலை,இசை போன்றவற்றில் ஈடுபாட்டையும் தேர்ச்சியையும் தரும், தன்னம்பிக்கை மிதமிஞ்சிய அளவில் காணப்படும், ஜாதகர் பெரும் வெற்றிகளுக்கு வீரியஸ்தான ( கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் ராசியாக வருவதும், சர நீர் தத்துவ ராசியாக அமைவதும் கலை துறை வெற்றிகளை வழங்குகிறது ) வலிமையையும் மிக முக்கிய காரணியாக அமையும், மேலும் ஜாதகருக்கு 6,9,12ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, சத்ரு ஸ்தான வழியில் இருந்து எதிர்ப்புகளை வெற்றிகொள்ளும் யோகத்தையும், குறுகிய கால லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை பெரும் நிலையை தருகிறது, பாக்கிய ஸ்தான வழியில் இருந்து ஜாதகருக்கு நற்பெயரும், பெருந்தன்மையான செயல்பாடுகளையும் தருகிறது, அனைவரிடமும் இணக்கமான செயல்பாட்டினையும், அறிவுபூர்வமான செயல்திறனையும் வாரி வழங்கும், பெரியோர் ஆதரவும், நல்ல மனிதர்களின் சேர்க்கையும் ஜாதகரின் வாழ்க்கையில் யோகங்களை வாரி வழங்கும், அயனசயன ஸ்தான வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல நிம்மதியான வாழ்க்கையும், முதலீடுகளில் வரும் திடீர் லாபத்தையும் தரும், போதும் என்ற மனமும், நிம்மதி மிக்க யோக வாழ்க்கையையும் தரும், நிம்மதியான உறக்கம் கிட்டும், யோக கலையில் தேர்ச்சியை தரும், மனதில் நினைத்த எண்ணங்கள் மற்றும் லட்ச்சியங்கள் யாவும் நிறைவேறும்.

தொழில் வெற்றிகளை பெறுவதற்கு சுய  ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது அவசியமாகிறது, இவரது ஜாதகத்தில் 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் ஜீவன வெற்றிகளை உறுதி செய்கிறது, மேலும் ஜாதகர் தனது பெற்றோர்கள் வழியில் இருந்து பெரும் யோகத்தையும் சிறப்பாக நிர்ணயம் செய்கிறது, தன்னிகரில்லா ஜீவன முன்னேற்றத்தை ஜீவன ஸ்தான வலிமையே ஜாதகருக்கு வாரி வழங்குகிறது, 4ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் சுயமாக சொத்து சுக சேர்க்கையை பெரும் வல்லமையை பெறுகிறார், மேலும் ஜாதகருக்கு  சுக ஸ்தானமும், ஜீவன ஸ்தானமும் வலிமை பெற்று ஸ்திர ராசியில் அமைவது நிலையான ஜீவனத்தை வழங்கும் அமைப்பை தருகிறது,மேலும் ஜாதகர் தனது ஜீவன வாழ்க்கையில் தனித்திறமையுடன் செயல்படும் வல்லமையும், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்பினை பெரும் யோகத்தையும் தருகிறது.

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நீண்ட ஆயுளை தந்த போதிலும், வாழ்க்கை துணை வழியில் இருந்து  சிறு சிறு இழப்புகளை தரும், விபத்துகள் மற்றும் மருத்துவ செலவுகளை தரும் என்பது மட்டும் மேற்கண்ட ஜாதகத்தில் உள்ள ஒரே ஒரு குறை எனலாம், ஆனால் இதனால் பெரிய பாதிப்புகள் ஜாதகருக்கு இல்லை.

மேற்கண்ட ஜாதகத்தில் பெரும்பாலும் அனைத்து பாவகங்களும் வலிமை பெற்று இருப்பது சிறப்பான யோகம் என்ற போதிலும், ஜாதகர் கலை துறையில் வாழ்க்கையை துவங்கியதில் இருந்து இன்று வரை தொடர் முன்னேற்றத்தை வழங்கி கொண்டு இருப்பதற்கு காரணம், 19/02/1996 முதல் 19/02/2014 வரை நடைபெற்ற ராகு திசை 3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 5,11ம் வீடுகள் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் 3,11ம் பாவக பலனை ஏற்று நடத்தியதே காரணமாக அமைந்தது, ஜாதகர் கலைத்துறையில் கால் பதித்த நாள் முதல் ராகு திசை முடியும் வரை 3,11ம் பாவக வழியில் இருந்து முழு அளவில் யோக பலன்களை வாரி வழங்கியது ஜாதகரின் கலைத்துறை வெற்றிகளை 100% விகிதம்  உறுதிப்படுத்தியது, மேலும் தற்போழுது நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 6,9,12ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 5,11ம் வீடுகள் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் 3,11ம் பாவக பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருப்பது, ஜாதகர் கலைத்துறையில் குருதிசை முழுவதும் தொடர் வெற்றிகளை எதிர்காலத்திலும் வழங்கும் என்பது ஜாதகருக்கு இறைஅருள் கொடுத்த வரமே, மேலும் இனிவரும் எதிர்காலம் ஜாதகரை தனது துறையில் பன்முகம் கொண்ட திறமைசாலியாக மாற்றி அமைக்கும் என்பது மட்டும் உறுதி, மேலும் ஜாதகருக்கு பாவக அதிபதிகள் என்ற முறையில் செவ்வாய்,குரு,புதன் மற்றும் சுக்கிரன் வலிமை பெற்று யோக பலன்களை வழங்குவது வரவேற்க தக்க அம்சமே, மேலும் குரு திசைக்கு அடுத்து வரும் சனி திசை மட்டுமே ஜாதகருக்கு இன்னல்களை தரக்கூடும்.


குறிப்பு :

கலைத்துறையில் சிறப்பான வெற்றிகளை பெறுவதற்கு சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் மிக மிக வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, மேலும் சுய ஜாதகம் வலிமை பெறுவது ஜாதகரை கலைத்துறையில் புகழ் மிக்க கலைஞனாக நிலை நிறுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696