வெள்ளி, 26 ஏப்ரல், 2013

நல்ல நேரம் பார்த்து அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்றுகொள்வது, குழந்தைக்கு யோக வாழ்க்கையை தருமா ?



இதை விட கேலிக்கூத்தான ஒரு விஷயம் எதுவும் இல்லை என்றே சொல்லலாம் , முன்பெல்லாம் ஒரு பெண்ணிற்கு சுக பிரசவம் என்பது எளிதாக இருந்தது , இதற்க்கு காரணம் பெண்களின் மன நிலையும்  உடல் நிலையும்  அதற்க்கு ஏற்ற வகையிலே சிறப்பாக அமைந்து இருந்தது , மேலும் மருத்துவர்கள் இயற்கையாக குழந்தை பிறப்பினையே வலியுறுத்தினர் தம்மை நாடி வரும் மக்களுக்கு, தனது நேர்மையின் அடையாளமாக .

 ஆனால் இன்றோ இதற்க்கு மாறாக சில மருத்துவர்கள் இயற்கையாக சுக பிரசவம் பெரும் அமைப்பை பெண்கள் பெற்று இருந்தாலும், அவர்கள் அறுவை சிகிச்சையே பரிந்துரை செய்கின்றனர் , இதற்க்கு காரணமாக பல விஷயங்களை சொல்லலாம் 

1) குழந்தை இயற்கையாக சுகமாக பிறந்தால் மருத்துவமனைக்கும் , தனக்கும் பெரிய வருமானம் இல்லாமல் போய்விடும் என்ற ஒரு காரணத்தினாலும் .

2) குழந்தையின் பெற்றோர்களின் வேண்டுகோளுக்கு இணங்கியும் .

3) ஜோதிடர்கள் சொல்லும் நல்ல நேரத்தில் தமது குழந்தை பிறந்தால் உலகத்தையே கட்டி ஆண்டுவிடும் என்ற தவறான எண்ணத்தினாலும்.

4) இந்த நேரத்தில் குழந்தை பிறந்தால் சிலருக்கு ஆகாது என்ற தவறான ஜோதிட ஆலோசனையின் பேரிலும் .

இன்னும் பல சொல்ல இயலாத காரணத்தினாலும் இயற்கையான குழந்தை பிறப்பை மருத்துவர்கள் , அல்லது குழந்தையின் பெற்றோர்கள் தவிர்த்து விடுகின்றனர் என்பதே உண்மை .

சில தொலைகாட்சி ஜோதிட நிகழ்சிகளில் இன்றைக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்க நல்ல நேரம் என்ற குறிப்பு வேறு தருகின்றனர் , கலிகாலத்தின் அலங்கோலம்தான் இது என்ற எண்ணமே நமக்கு தோன்றுகிறது . 

இயற்கையின் பேரழிவுகளையும் , பூமியில் மலை பொழியும் தருணங்களையும் , குழந்தை பிறக்கும் நேரத்தினையும் எவராலும் சரியாக கணிக்க இயலாது,  இதை பெரியோர்களே மலைபேரும், பிள்ளைபேரும்  மகாதேவனுக்கே  தெரியாது என்று செலவடையாக சொல்லி வைத்துள்ளார்கள் , ஆக நல்ல நேரம் பார்த்து குழந்தை பிறப்பை நிர்ணயம் செய்வது என்பது முற்றிலும் இயலாத காரணம் , இதற்க்கு சரியான உதரணங்களை கிழே கொடுத்துள்ளோம் , 

எடுத்துகாட்டாக ஜோதிடர் கொடுத்த ஒரு 3 நிமிட நல்ல நேரத்திற்கு உட்பட்ட காலகட்டத்தில் பிறக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் , நொடியிலும் குழந்தையின் பலன்கள் வேறுபடுவதை பாருங்கள் :


ஜாதகம் 1 :

இந்த குறிப்பிட்ட தேதியில் (26/04/2013) குறிப்பிட்ட நேரத்தில் (12:55:33) பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் 1,3,7,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மேற்கண்ட பாவக வழியில் தீமையான பலன்களை தருகிறது , 6,12ம் வீடுகள் ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 2ம் வீடு விரைய பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 4,10 ம் வீடுகள் ஜீவன ஷ்தானத்துடன் சம்பந்தம் பெற்றும் , 5,8ம் வீடுகள் குடும்ப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த நன்மையை தருகிறது .



ஜாதகம் 2 :

இந்த குறிப்பிட்ட தேதியில் (26/04/2013) குறிப்பிட்ட நேரத்தில் (12:56:33) பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் 1,3,7,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மேற்கண்ட பாவக வழியில் தீமையான பலன்களை தருகிறது ,8ம் வீடு ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 6,12ம் வீடுகள் பூர்வ புண்ணிய  பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையான பலனை தருகிறது , 2ம் வீடு விரைய பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 4,10 ம் வீடுகள் ஜீவன ஷ்தானத்துடன் சம்பந்தம் பெற்றும் , 5,ம் வீடு குடும்ப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த நன்மையை தருகிறது .



ஜாதகம் 3 :

இந்த குறிப்பிட்ட தேதியில் (26/04/2013) குறிப்பிட்ட நேரத்தில் (12:57:33) பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் 1,3,7,9ம் வீடுகள் பாக்கிய  ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மேற்கண்ட பாவக வழியில் நன்மையான  பலன்களை தருகிறது , 6ம் வீடு பூர்வ புண்ணிய பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 8ம் வீடு ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 2ம் வீடு எதிரி பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 4,10, 12ம் வீடுகள் விரைய ஸ்தானத்துடன்  சம்பந்தம் பெற்றும் தீமையையும் , 5ம் வீடு குடும்ப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த நன்மையை தருகிறது .11ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று அதிக தீமையான பலனையும் தருகிறது .




ஆக நிமிடத்திற்கு நிமிடமும் , நொடிக்கு நொடியும் பலன்கள் மாறும் பொழுது நிச்சயம் தங்களின் குழந்தை குறித்த நேரத்தில் அறுவை சிகிச்சையின் மூலம் பெற்றுகொள்வது என்பது நிச்சயம் இயலாத காரியம் , மேலும் இடத்திற்கு இடம் அதற்கு உண்டான அமைப்பில் ஜாதக பலன்கள் மாறுபடும் எனவே குறித்த நல்ல நேரத்தில் குழந்தை பிறப்பை எவராலும் நிர்ணயம் செய்ய இயலாது, ஜோதிடர் சொல்லும்  நல்ல நேரத்தில் எவராலும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுகொள்ள இயலாது என்பதே உண்மை .

பொதுமக்கள் இதை உணருவது அவசியம் யாரோ ஒரு ஜோதிடர் சொல்கிறார் என்பதற்காக தங்களின் குழந்தையின் விதி நிச்சயம் மாறிவிட வாய்ப்பு இல்லை , முடிந்த அளவிற்கு தங்களது  குழந்தை இயற்கையாக பிறப்பதற்கு என்ன வழி உள்ளது என்பதை பற்றி  மட்டும் சிந்தியுங்கள் அல்லது மருத்துவ துறைக்கு தன்னை அர்ப்பணித்து  கொண்டு நேர்மையாக மருத்துவம் பார்க்கும் நல்ல மருத்துவரை நாடி இயற்கையாக குழந்தை பிறப்பை பெறுவதற்கு என்ன வழி என்பதை  பற்றி சரியான ஆலோசனை பெறுங்கள்.

ஜோதிட தர்மத்தை முறையாக கடை பிடிக்கும்  எந்த ஒரு ஜோதிடனும் குழந்தை பிறப்பிற்கு  நேரம் குறித்து தருவதில்லை, காரணம் பிறப்பு இறப்பு என்பது ஒருவரின் வினை பதிவின் படி இயற்கையால் நிர்ணயம் செய்யபடுவது என்பதே உண்மை , ஜோதிடன் என்பவன் தங்களின் விதி பாதையில் உள்ள உண்மை நிலைகளை , சாதக பாதக அமைப்புகளை உள்ளது உள்ளபடி சொல்பவரே அன்றி விதியை மற்றும் அளவிற்கு சக்தி படைத்தவர் அல்ல , இறை நிலைக்கு அப்பாற்பட்ட சிறப்பு சக்தி படைத்தவரும் அல்ல , அவரும் தங்களை போன்றே ஒரு சாதாரண மனிதன் என்பதை மறந்துவிட வேண்டாம் அன்பர்களே இதை போன்றே ஜோதிடமும் நமது வாழ்க்கையில் நடைபெறும் நன்மை தீமையை சரியாக எடுத்து சொல்லும் ஒரு கணித அறிவியல் மட்டுமே . 

மருத்துவ தர்மத்தை முறையாக  கடைபிடிக்கும் எந்த ஒரு மருத்துவனும் இயற்கையாக குழந்தை பிறப்பிற்கு  வாய்ப்பு இருக்கும் பொது அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்வதில்லை என்பதே முற்றிலும் உண்மை , மேலும் இயற்கையாக பிறக்கும்  குழந்தையின் வளரும் சூழ்நிலையும் , அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும்  குழந்தையின் வளரும் சூழ்நிலையும் அதிக அளவிலே வித்தியாசம் படுகிறது  என்பதை மக்கள் இங்கு கவனிக்க வேண்டும் .

இயற்கையாக பிறக்கும் குழந்தையின் மன ஆற்றல் , உடல் நிலை , அறிவு திறன்  மிகவும் பலம்கொண்டதாக இருக்கிறது என்பது பல ஆராய்ச்சிகள் நமக்கு  உணர்த்துகிறது , இது பற்றி தெளிவு பெற கூகிள் ஆண்டவரை தொடர்பு  கொள்ளுங்கள் அன்பர்களே !

இயற்கையாக குழந்தை பிறப்பு அமையாததிர்க்கு சில முக்கிய காரணங்களாக அறிஞர்கள் சொல்வது :

1) சரியான வயதில் திருமணம் செய்யாமல் தவிர்ப்பது .
2) தேவையான  உடல் உழைப்பு அற்ற நிலை 
3) குழந்தை பிறப்பை தள்ளிபோடுவது .
4) தேவையான அளவிற்கு ஊட்ட சத்து உணவுகளை எடுத்துகொள்ளதது .
5) மனோ ரீதியான பிரச்சனைகள் .
6)​ தன்னம்பிக்கை அற்ற நிலை 
7) கருவுற்று இருக்கும் பொழுது பொற்றோர்களின் ஆதரவு இல்லாத சூழ்நிலை ஆகியவற்றை  குறிப்பிடலாம் .

எனவே அன்பர்களே தங்களின் குழந்தை இயற்கையாக பிறப்பதே குழந்தைக்கும் அதன் தாயிக்கும் மிகுந்த நன்மையை தரும் , தங்களின் குழந்தை  இயற்கையாக பிறப்பதே நல்லது , ஒருவேளை அதற்க்கு வாய்ப்பு இல்லை எனும்பொழுதே அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள் அது மருத்துவரின்  ஆலோசனையாக இருக்கட்டும், ஜோதிடரின் ஆலோசனையாக  இருப்பது சிறந்ததல்ல என்பதே முற்றிலும் உண்மை .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969

வியாழன், 11 ஏப்ரல், 2013

பூர்வபுண்ணிய பாதிப்பும், புத்திர பாக்கியம் எனும் ஆண் வாரிசு யோகமும் !




சுய ஜாதக ரீதியாக ஒருவருடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் 100 சதவிகித வலிமை பெறுவது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும் அமைப்பாக கருதலாம் , எடுத்துகாட்டாக ஒருவர் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் எனில் பூர்வ புண்ணியம் வலிமை பெற்று இருக்க வேண்டும் , நல்ல நினைவாற்றல் , தன்னம்பிக்கை , உறவுகள் அல்லாத மற்றவர்களின் ஆதரவு , தெளிவான சிந்தனை திறன் மற்றும் செயல்பாடுகள் , வருமுன் கணிக்கும் புத்திசாலித்தனம் , தனது முன்னோர்களின் சொத்து சுகங்களை பெரும் யோகம் , முன்னோர்களின் நல்ல குணங்களை தான் அப்படியே பெற்று இருக்கும் அமைப்பு என்ற அமைப்பில் மிகுந்த நன்மைகளை வாரி வழங்குவது பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகமே என்றால் அது மிகையாகாது . 

இவ்வளவு மேன்மைகள் பெற்ற பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் ஒருவருடைய ஜாதகத்தில் புத்திர சந்தானம் எனும் குழந்தை பாக்கியத்தை நிர்ணயம் செய்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் , சுய ஜாதகத்தில் ஒருவருக்கு பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் நல்ல நிலையில் இருப்பது தனது வம்சம் விருத்தி பெற எவ்வித தடையும் இல்லாமல் ( ஆண் )  குழந்தை பாக்கியத்தை வழங்கும் , இதில் சில விதி முறைகள் உண்டு , தம்பதியர் இருவரது ஜாதக அமைப்பிலும் புத்திர ஸ்தானம் வலிமை பெறுவது நன் மக்கட்பேரை தரும் , மேலும் ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று ஜீவனம் செய்யாமல் இருப்பது மிகுந்த நன்மையை தரும் .

பூர்வ புண்ணியம் நல்ல நிலையில் இருந்து  அந்த ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு வெகு தொலைவு சென்று ஜீவனம் செய்துகொண்டு இருக்கிறார் என்ற ஒரு நிலை வரும் பொழுது , ஜாதகருக்கு (ஆண் வாரிசு ) புத்திர சந்தானத்தில் குறை வர வாய்ப்பு உண்டு ஏனெனில் ஜாதகரின் ( நல்ல நிலையில் இருக்கும் ) தனது பூர்வீகத்தை விட்டு வெளியிடங்களில் சென்று ஜீவனம் செய்வது , பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு உண்டான பலன்கள்  ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதுமே நடை பெறாமலே நின்று விடக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு, மேலும் ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் இருக்கிறார் என்றால் நிச்சயம் ஜாதகருக்கு கிடைக்க வேண்டிய நன்மையான பலன்கள் அதிக அளவில் தடை படும் என்பதே உண்மை .

மேலும் பூர்வ புண்ணியம் வலிமை பெற்று நல்ல நிலையில் அமர்ந்து பூர்வ புண்ணிய ஸ்தானம் சர ராசியாக இருப்பின் விரைவான குழந்தை பாக்கியத்தையும் , ஸ்திர ராசியாக இருப்பின் சில மாதங்களிலும் , உபய ராசியாக இருப்பின் சில வருடங்களிலும் நிச்சயம் குலம் விருத்தி பெற ஆண்வாரிசை தந்துவிடும் , எனவே சுய ஜாதக ரீதியாக புத்திர ஸ்தானம் வலிமை பெற்ற அன்பர்கள் எதற்காகவும் கவலை கொள்ள தேவையில்லை .

ஆனால் பூர்வ புண்ணியம் பாதிப்படைந்த அன்பர்கள் ஜாதகத்தில் பூர்வ புண்ணியம்  ஸ்தானம் சர ராசியாக இருப்பின் தம்பதியர் இருவரின் உடல்  ரீதியான மருத்துவ காரணங்களாலும் , குலதேவதை நிந்தனையின் காரணங்களாலும் , முன்னோர்கள் ,சாதுக்கள் , ஐந்தறிவு ஜீவன்களின் சாபத்தாலும், மற்றும் பெண்களின் சாபத்தாலும் தம்பதியருக்கு குழந்தை பாக்கிய தடையை தரக்கூடும் .

பூர்வ புண்ணியம் பாதிப்படைந்த அன்பர்கள் ஜாதகத்தில் பூர்வ புண்ணியம்  ஸ்தானம் ஸ்திர ராசியாக இருப்பின் ஜாதகரின் ஜீவிக்கும் இடமும் அல்லது தனது  பூர்வீகத்தில் குடியிருப்பதாலும் , தம்பதியரின் விருப்பத்தின் பேரில் குழந்தை பிறப்பை தாமதபடுத்துவத்தின் காரணத்தாலும், தம்பதியர் இருவரும் எடுக்கும் தவறான முடிவுகளின் காரணத்தாலும் , தனது குடும்பத்தில் உள்ளவர்களின் தவறான போதனை மற்றும் வழிகாட்டுதலின்  காரணத்தாலும் தம்பதியருக்கு குழந்தை பாக்கிய தடையை தரக்கூடும் .

பூர்வ புண்ணியம் பாதிப்படைந்த அன்பர்கள் ஜாதகத்தில் பூர்வ புண்ணியம்  ஸ்தானம் உபய ராசியாக இருப்பின் ஜாதகர் மற்றவர்களுக்கு இழைக்கும் அநீதிகளாலும் , மற்றவர் பொருளுக்கு விருப்பபட்டு அவர்களை ஏமாற்றுவதினாலும் , தனது பெற்றோரை , சகோதரர்களை , ரத்த உறவுகளை ஏமாற்றுவதினாலும் , தனது குல தேவதையை முறையாக வழிபாடு செய்யாமல் விடுவதினாலும் , பித்ரு கடமைகளை முறையாக கடைபிடிக்காமல் விடுவதினாலும், தம்பதியருக்கு குழந்தை பாக்கிய தடையை தரக்கூடும்.

எனவே அவரவர் சுய ஜாதகத்தின் தன்மையை உணர்ந்து , முறையான செயல்பாடுகளையும் , வழிபாடுகளையும் சரியாக செய்தால் அவர்களுக்கு உறுதியாக இறை அருளின் கருணையினால் தனது குலம் விளங்க புத்திர சந்தானம்  உண்டாகும் என்பதில் சந்தேகம் இல்லை என்பது ஜோதிடதீபத்தின் கருத்து , ஒருவரது சுய ஜாதகத்தில் இந்த புத்திர ஸ்தானம் எந்த நிலையில் உள்ளது என்பது பற்றி நாம் அடுத்த பதிவில் சற்றே சிந்திப்போம் அன்பர்களே !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969

காதல் திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் பார்த்து இல்லற வாழ்க்கை அமைத்து கொள்வது நன்மை தருமா ?



பொதுவாக காதலர்கள் பெற்றோர்  அனுமதியுடன் திருமணம் செய்துகொள்ளும் முன், சில பெற்றோர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்கி ஜாதக பொருத்தம் காண எங்களிடம் வருவது உண்டு, தனது வாழ்க்கையை தனது விருப்பபடி அமைத்துகொள்ளும் காதலர்களின் ஜாதக அமைப்பில் , குடும்ப ஸ்தானமோ அல்லது களத்திர ஸ்தானமோ ஒன்று, ஏதாவது ஒருவகையில் பாதிக்க பட்டு இருக்கிறது ,அல்லது மேற்கண்ட இரண்டு பாவகங்களும் பாதிக்க பட்டு இருக்கின்ற நிலையில் தான் ஜாதகர் தனது வாழ்க்கையை தானே தேர்ந்தெடுத்து கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ள படுகிறார் .

இப்படி பட்ட சூழ்நிலையில் காதலர்களின் சுய ஜாதகத்தில்,  இல்லற வாழ்க்கையை நல்ல முறையில் அமைவதற்கு வழி கோலும் பாவகங்கலான, குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானங்கள் பாதிக்க பட்டு இருந்த போதிலும் , லக்கினம் மற்றும் பூர்வ புண்ணியம் எனும் இரண்டு பாவகங்கள் இரண்டும் வலிமை பெற்று இருப்பது அவசியம் , ஏனெனில் தான் அமைத்து கொண்ட வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்து கொள்ள இந்த இரண்டு பாவகங்கள் 100 சதவிகிதம் உறுதி புரியும் , வாழ்க்கையில் எவ்வித சிரமங்கள் வந்த போதிலும் அவற்றை எல்லாம் மன துணிவுடன் எதிர்கொண்டு , காதல் திருமண வாழ்க்கையில்  வெற்றி பெரும் யோகத்தை தரும் .

மேலும் தனது குலம் விளங்க நல்ல வாரிசு அமையும் , இதன் மூலம் சமுதயத்தில் காதல் தம்பதியரின் வாழ்க்கை மேலும் மேலும் முன்னேற்றம் பெரும் , மதிப்பு ,மரியாதை ,அந்தஸ்த்து , கௌரவம் போன்றவை இயற்கையாக அமையும் , தம்பதியருக்கு  குடும்ப வாழ்க்கையில் ஒரு பிடிப்பும், நம்பிக்கையும் உண்டாகும் . எனவே காதல் திருமணம் செய்துகொள்ளும்  அன்பர்களின் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் களத்திர ஸ்தானம், ஏதாவது  ஒருவகையில் பாதிக்க பட்டு இருக்கும் என்பது உறுதி. ஆனால் லக்கினம் மற்றும் பூர்வ புண்ணியம்  பாதிக்கபடாமல் இருப்பது அவசியம் .

ஒருவேளை காதல் திருமணம் செய்து கொள்ளும் அன்பர்களின் ஜாதகத்தில் லக்கினம் மற்றும் பூர்வ புண்ணியம் எனும்  இரண்டு பாவகங்களும் பாதிக்கப்படும் பொழுது  ஜாதகரின் காதல் வாழ்க்கையும் , காதல் திருமண வாழ்க்கையும்  மிகப்பெரிய சிக்கல்களை சந்திக்கவேண்டி வரும் , இதனால் காதலர்களின்  மன உறுதி உடைபடும் , குடும்ப வாழ்க்கை சின்னாபின்னமாகும்  சூழ்நிலையை, திருமணத்திற்கு பிறகு வெகு விரைவில் தரும் . அப்பொழுது காதலர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் காணும்  மன நிலையையும் , விட்டுகொடுக்கும் மனப்பக்குவத்தை இழந்து தங்களது  காதல் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதும் நிலைக்கு வந்துவிடுவார்கள் என்பதே உண்மை .

நல்ல வாழ்க்கை துணை ஒருவருக்கு அமைவது என்பது மற்றவர்களால் நிர்ணயம் செய்யபடுவதில்லை இல்லை என்பதை அனைவரும் இந்த இடத்தில் உணருவது  அவசியம், தனது வினை பதிவிற்கு ஏற்ற விதத்திலேயே  இயற்கையால் நிர்ணயம் செய்யபடுகிறது என்பதே உண்மை , ஒருவருக்கு நல்ல வாழ்க்கை துணை  , நல்ல கூட்டாளிகள் , நல்ல நண்பர்கள் , சிறந்த மக்கள் ஆதரவு அமைவதற்கு , அவரின் சுய ஜாதகத்தில் களத்திர பாவகம் எனும் 7ம் பாவகம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் .

இதை போன்றே நல்ல குடும்ப வாழ்க்கை , கை நிறைவான வருமானம் , இனிமையான  பேச்சு திறன் , வாழ்க்கையில் அனைத்தையும் அனுசரித்து செல்லும்  மன பக்குவத்தையும் , அடிப்படை கல்வியில் சிறந்து விளங்கும் யோகம், தனது வாழ்க்கை துணையுடன் இனிமையான குடும்ப வாழ்க்கை மேற்கொள்ளும் அமைப்பையும் குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவக வழியில் இருந்தே  நடை பெரும், எனவே மேற்கண்ட குடும்ப ஸ்தான அமைப்பில்  இருந்து ஜாதகர் 100 சதவிகித நன்மையை பெற வேண்டும் எனில் குடும்ப  ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகம் சுய ஜாதகத்தில் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருப்பது  அவசியம் .

ஆக ஒருவரின் சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் நல்ல நிலையில்  இருந்தால் ஜாதகர் திருமணம் பெரியோர்களால் நிச்சயக்கபட்டும் , ஒருவரின் சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் பாதிக்கபட்டு  இருந்தால், ஜாதகர் திருமணம் தமது விருப்பபடி காதல் திருமணமாகவும்  அமையும், எனவே காதல் திருமணம் செய்துகொள்ளும் அன்பர்கள் குடும்ப களத்திர ஸ்தான அமைப்பில் இருந்து வரும் இன்னல்களை ஏற்று வாழ்க்கை இனிமையாக வாழும் மனபக்குவத்தை வளர்த்துகொள்வது மிகுந்த நன்மை தரும் , காதல் திருமணம் ஆரம்பத்தில் துன்பமாக இருந்தாலும் சில காலங்களுக்கு பிறகு வாழ்க்கை  மிகவும் இனிமையானதாக மாறிவிடும், என்ற உண்மையை காதல் திருமணம்  செய்துகொண்ட தம்பதியர் இருவரும் உணருவது காதல் திருமண வாழ்க்கை 100 சதவிகித வெற்றி பெற உதவி புரியும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969