வியாழன், 31 மே, 2018

சுபயோகம் நிறைந்த வாழ்க்கை துணையின் ஜாதகம், இல்லற வாழ்க்கையை மகிழ்விக்குமா ?

 

 சுபயோகம் நிறைந்த வாழ்க்கை துணையின் ஜாதகம், இல்லற வாழ்க்கையை மகிழ்விக்குமா? என்றால் நிச்சயம் மகிழ்விக்கும் இதில் மாற்று கருத்து இல்லை, தமக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகம் மிகவும் வலிமையுடன் இருப்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் சுய ஜாதகத்தில் உள்ள குறைகள் யாவையும் நிவர்த்தி செய்து இனிமையான இல்லற வாழ்க்கையை வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே, பொதுவாக நமது சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் 2,5,7,8,12ம் வீடுகள் வலிமையற்று இருப்பின், நமக்கு வரும் வாழ்க்கை துணையின் சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் மிகவும் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, நமது ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் வலிமையுடனும், நமது வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் மேற்கண்ட பாவகங்கள் வலிமையுடன் இருப்பின் நமது இல்லற வாழ்க்கை எவ்வித இன்னல்களையும் சந்திக்காமல் சுபயோகங்கள் நிறைந்த பரிபூர்ண தாம்பத்தியத்தை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !



லக்கினம் : மேஷம்
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : ஆயில்யம் 4ம் பாதம்.

ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,7,9ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு 1ம் பாவக வழியில் இருந்து எதிர்ப்புகள், எதிரிகள் மறையும் தன்மையை தரும், வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் அபரிவித வளர்ச்சியை தரும், கணவர் வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கை ஜாதகிக்கு பரிபூர்ண நிம்மதியையும், மனநிறைவையும் தரும், வெளிநாடுகளில் இருந்து வரும் யோக வாழ்க்கை ஜாதகிக்கு தன்னிறைவான பொருளாதர மேன்மையை வாரி வழங்கும், நீண்ட ஆயுள் உண்டு, வெற்றி புகழ் கீர்த்தி யாவும் ஜாதகிக்கு தேடி வரும், பொதுமக்கள் வழியிலான ஆதரவு ஜாதகிக்கு மிகுந்த சிறப்புகளை தரும், வியாபார விருத்தி என்பது ஜாதகிக்கு மிக சிறப்பாக அமையும், கணவரின் ஆதரவுடன் வாழ்க்கையில் மிகுந்த நன்மைகளை பெரும் யோகத்தை தரும், தெய்வீக அனுக்கிரகம் ஜாதகிக்கு நல்ல மதிப்பு மிக்க பதவிகளை வாரி வழங்கும், கணவருக்கு அதிர்ஷ்டம் உண்டாகும், வாழ்க்கை துணையுடன் இணைபிரியா தாம்பத்திய வாழ்க்கையை வழங்கும், கூட்டு முயற்சிகள் யாவும் வெற்றி தரும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகி நல்ல ஆரோக்கியம் நிறைந்த வாழ்க்கை துணை, அவரின் முழு ஆதரவு, சக்தி வாய்ந்த கூட்டாளி, வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் அதிர்ஷ்டம், வியாபாரத்தில் பரிபூர்ண வெற்றி, கூட்டு வியாபாரம், கூட்டு தொழில் வழியில் அபரிவித லாபம், கணவருக்கு அதிர்ஷ்டம், சமூக அந்தஸ்து மற்றும் உயர்பதவிகளை பெரும் அமைப்பு, இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி, நண்பர்கள் உதவியை பெறுதல், மதிப்பு மிக்க பொறுப்புகள் தேடிவரும் யோகம் எதிர்பாராத நன்மைகளை ஜாதகி பெறுவதற்கான வாய்ப்புகள், இல்லற வாழ்க்கையில் வெற்றி, எதிர்ப்புகளை கடந்து சுபயோகங்களை தன்னிறைவாக பெரும் யோகம் என்ற வகையில் சிறப்புகளை தரும்.

 9ம் நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் பொதுமக்களுடன் சுமூக உறவு, பொது விவகாரங்களில் அதீத ஈடுபாடு, நம்பிக்கை மற்றும் கண்ணியம் நிறைந்த வியாபார ஆளுமை, அதிர்ஷ்டம் நிறைந்த கூட்டாளிகள், மிகசிறந்த நிர்வாக திறமை, மதிப்பு மிக்க செயல்கள் மூலம் வெற்றி பெரும் யோகம், தன்னம்பிக்கையும் தைரியமும் ஒருங்கே அமையப்பெற்ற ஜாதகி, தெய்வீக அனுக்கிரகமும், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதமும் ஜாதகிக்கு  யோகம் மிக்க சுப வாழ்க்கையை நல்கும், கல்வியில் தேர்ச்சி, ஆராய்ச்சி மற்றும் பட்டைய படிப்புகளில் மேன்மையை பெரும் யோகத்தை தரும்.

3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு தனது சகோதரவழி ஆதரவு உண்டாகும், எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றியை தரும், சகல சௌபாக்கியங்களுடன் வாழ்க்கையில் குறுகிய காலத்தில் மேன்மையை பெறவும் யோகம் உண்டாகும், மனதைரியமும், தன்னம்பிக்கையும் ஜாதகியின் வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்கு நல்ல தீர்வுகளை  தரும், நினைக்கும் காரியங்கள் வெற்றி பெரும், பல தொழில் செய்யும் யோகமும், சிறந்த நிர்வாக திறமையையும் தரும், எதையும் தாங்கும் மன வலிமை உண்டாகும், எதிரிகளை வெல்லும் யோகம் உண்டு, நல்ல மன நிலை, சிறந்த சிந்தனை, உண்மை சத்தியத்தை மதித்தல், தைரியம், பயணங்களில் விருப்பம், கல்வியால் மேன்மை, புதிய இடம், புதிய சிந்தனை, புதிய  சூழ்நிலைகளில் ஜாதகியின் வெற்றி அதிகரிக்கும், வியாபாரம், தரகு தொழில், ஏஜென்சி துறையில் அதீத லாபங்களை வாரி வழங்கும், ஜாதகி மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் நல்ல வெற்றியை தரும்.

4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு 4ம் பாவக வழியில் இருந்து நல்ல தொழில் முன்னேற்றத்தை வாரி வழங்கும், பெயரும் புகழும் அதிகரிக்கும், நல்ல குணம் ஜாதகியின் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகளை வாரி வழங்கும், மண் மனை வண்டி வாகனம், சொத்து சுக சேர்க்கை, ஆள் வசதி, சிறந்த நிர்வாக திறமை, அனைத்து சுக போகங்களையும் பெரும் அமைப்பு, பெரிய சொத்துக்கள், விளையாட்டில் ஆர்வம், அரசு கவுரவம், சமூக வாழ்க்கையில் வெற்றி, அரசியலில் ஆதாயம், தனது பெயரில் இயங்கும் சொத்துக்கள் வழியில் இருந்து வரும் வருமானம், அசையும் அசையா சொத்துக்கள் வழியிலான லாபங்கள், சுய உழைப்பால் வாழ்க்கையில் முன்னேற்றம் காணும் தன்மை என்ற வகையில் சிறப்புகளை தரும்.

10 ம் பாவக வழியில் இருந்து உத்தியோகம், வியாபாரம், தொழில் முதலியவற்றில் அபரிவித லாபங்கள், கம்பீரம், தீர்க்கமான வாத திறமை, வாக்கு வன்மை மூலம் வெற்றி பெரும் யோகம், கவுரவம் குறையாத யோக வாழ்க்கை, மென்மையான  குணம் மூலம் தொழில் விருத்தியை பெரும் யோகம், சுய தொழில் அல்லது வியாபாரம் செய்வதன் மூலம் அபரிவித நன்மைகளையும் லாபங்களை  பெரும் யோகத்தை தரும், கவுரவ பதவிகள் ஜாதகிக்கு தேடி வரும், அனைவரிடமும் நட்ப்புறவு, சுமுகமான சூழ்நிலையை கையாளும் தன்மையை தரும், கவுரவம் மிக்க பதவிகள் ஜாதகிக்கு தேடிவரும், சிறந்த நிர்வாக திறமையின் மூலம் ஜாதகி அபரிவித வெற்றிகளை பரிபூர்ணமாக பெறுவார்.

2,5,6,8,11,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை தரும், இருப்பினும் 12ம் பாவகம் உபய ராசி என்பதால் ஜாதகிக்கு வரும் இன்னல்கள் யாவும் மிக குறைந்த ( 30% ) சதவிகிதத்திலேயே இருக்கும் என்பதால், பெரிய பாதிப்புகள் எதுவும் வர வாய்ப்பில்லை, 2ம் பாவக வழியில் இருந்து வார்த்தைகள் மூலம் வீண் பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு, குறிப்பாக கணவருடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது, கையில் வரும் வருமானத்தை  சேமிக்கும் பழக்கத்தை நடைமுறைக்கு  கொண்டுவருவது அவசியமாகிறது, இல்லையெனில் கடுமையான நிதி நெருக்கடிகளை எதிகொள்ளும் சூழ்நிலையை தரும், அவசியமற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது, நிதி நிர்வாகம் சிறப்பாக அமைவது ஜாதகிக்கு மிகுந்த நன்மையை தரும், குடும்ப வாழ்க்கையில் வரும் சிறு சிறு இன்னல்களுக்கு தானே நிவர்தியை தேடிக்கொள்வது நல்லது, கலைகளில் நல்ல ஈடுபாட்டையும், தேர்ச்சியையும் தரும்.

5ம் பாவக வழியில் இருந்து ஜாதகி பூர்வீகத்தில் ஜீவிக்கும் வரை யாதொரு  நன்மைகளையும் பெற இயலாது, இதனால் பெரும் நஷ்டமும், வீண் விரையங்களையும் சந்திக்கும் சூழ்நிலை உருவாகும், ஜாமீன் கொடுப்பதால் மிகப்பெரிய இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், குழந்தைகள் வழியிலான பிரச்சனைகள், புத்திர பாக்கிய தடைகளை பூர்விகத்தில் ஜாதகி ஜீவிக்கும் வரை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், மன நிம்மதி மனப்போராட்டம் அதிகரிக்கும், குல தெய்வத்தின் ஆசீர்வாதம் இன்மையால் ஜாதகிக்கு  வரும் நன்மைகள் யாவும் தவறிவிட வாய்ப்பு அதிகம், ஜாதகியின் சமயோசித அறிவு திறனும், புத்திசாலித்தனமும் முழு அளவில் பயன் தாராது என்பதால் பூர்வீக ஜீவனத்தை தவிர்ப்பது நல்லது, வெளியூர் அல்லது வெளிநாடுகளில் ஜாதகிக்கு சிறப்பான வாழ்க்கை அமையும்.

6ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு கடன் சார்ந்த இன்னல்கள் அதிகரிக்கும், கடன் கொடுப்பது வாங்குவது இரண்டும் மிகப்பெரிய இன்னல்களை தரும், வேலையாட்கள் மூலம்  அதீத தொல்லைகள்  உண்டாகும், தேவையற்ற வீண் செலவுகள், எதிர்பாராத மருத்துவ செலவினங்கள் ஜாதகிக்கு பெரும் இன்னல்களை தரும், நோய் எதிர்ப்பு திறன் குறைவு என்பதால் உடல் நலனில் அதிக அக்கறை கொள்ளவது நல்லது, எவரிடமும் பகைமை பாராட்டாமல் அனுசரித்து செல்வது ஜாதகிக்கு நல்ல மன நிம்மதியை தரும்.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு விபத்து மூலம் மருத்துவ செலவினங்களை அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பான பயணம் அவசியமாகிறது , மனக்குழப்பம், நிம்மதி இழப்பு, உடல் நல பாதிப்பு தேவையற்ற செலவினங்கள் போன்றவை ஜாதகிக்கு அதீத இன்னல்களை தரக்கூடும், மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வது ஜாதகிக்கு தாங்க இயலாத துன்பங்களை தரக்கூடும், தலைவலி மற்றும் கண் சார்ந்த இன்னல்களை தவிர்க்க சரியான தீர்வுகளை தேடுவது ஜாதகிக்கு நன்மைகளை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகி விரக்தி மனப்பான்மையை விட்டு விட்டு, நல்ல நம்பிக்கைகளை மனதில் மேற்கொள்வது நன்மையை தரும், தேவையற்ற கவலைகள் ஜாதகிக்கு வரும் அதிர்ஷ்டங்களை தடை செய்யும், அனைவராலும் இன்னல்கள் உண்டாகும் என்பதால் ஜாதகி விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவத்தை அதிகரித்துக்கொள்வது சகல நன்மைகளையும்  தரும், தனக்கு வரும் நல்ல வாய்ப்புகளை எந்த காரணத்தை கொண்டு ஜாதகி தவிர்க்க கூடாது, தெளிவான சிந்தனை, சிறந்த முடிவெடுக்கும் தன்மை ஜாதகியின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகி நிறைய வீண் செலவுகள், பங்கு சந்தை லாட்டரியில் நஷ்டம், பெரும் முதலீடுகளில் ஏற்படும் பேரிழப்புகள், திருப்தி இல்லாத மனநிலை, அதீத கற்பனைகள், வீண் மன பயம் போன்றவை ஜாதகியின் முன்னேற்றத்திற்கு பெரும் தடைக்கற்களாக அமையும், நல்ல உறக்கம் அமைவது என்பது ஜாதகிக்கு பிரச்சனையாக அமையும், பொது வாழ்க்கையில் சில எதிர்ப்புகளை சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

சுக்கிரன் திசை தரும் பலன்கள்  ( 21/07/2001 முதல் 21/07/2021 வரை ) 

ஜாதகிக்கு சுக்கிரன் தனது திசையில் 5,6,8ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மேற்கண்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை தருவது நல்லதல்ல, 5ம் பாவக வழியில்  இருந்து பூர்வீக பாதிப்பும், கற்ற கல்வி பலன் தராத நிலையும், எதிர்பார்ப்புகள் யாவும் முழுமையை பெறாத தன்மையையும் உண்டாகும், 6ம் பாவக வழியில் இருந்து உடல் நலம் பாதிப்பது, எதிர்ப்பு மற்றும் எதிரி தொந்தரவு ஆகியவை ஜாதகியை வெகுவாக பாதிக்கும், 8ம் பாவக வழியில் இருந்து மற்றவர்களின் இழப்பு ஜாதகியை வெகுவாக பாதிக்கும், திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது, நிதி நிலை பாதிப்பை தரும், விபத்தை தவிர்க்க இயலாது, மருத்துவ செலவினங்கள் வீண் விரயத்தை தரும்.

சுக்கிரன் திசையில் புதன் புத்தி வழங்கு பலன்கள்  ( 21/07/2017 முதல் 21/05/2020 வரை )

புதன் புத்தி ஜாதகிக்கு 3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக வாழ்க்கையை தருவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஜாதகிக்கு நினைக்கும் காரியங்கள் யாவும் பலிதம் பெரும், எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும், நம்பிக்கையும், அதிர்ஷ்டமும் நல்ல சுபயோக சுக வாழ்க்கையை வாரி வழங்கும், தெய்வீக ஆசிர்வாதம் ஜாதகிக்கு நல்ல வெற்றிகளை தரும், முயற்சிக்கும் காரியங்கள் யாவும் பரிபூர்ண நன்மைகளை தரும், வாழ்க்கை புதிய மாற்றங்களை கொண்டுவரும், புதன் புத்தி ஜாதகிக்கு பரிபூர்ண சுபயோகங்களை தன்னிறைவாக தருவது வரவேற்கத்தக்கது.

எதிர்வரும் சூரியன் திசை தரும் பலன்கள் ( 21/07/2021 முதல் 21/07/2027 வரை )

சூரியன் தனது திசையில் 1ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சுபயோக பலன்களை வாரி  வழங்குவது ஜாதகிக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்து சுபயோக சுப வாழ்க்கையை தரும், நல்ல நண்பர்கள், கூட்டாளிகள் மூலம் மிகுந்த நன்மைகள் நடைபெறும், வெளிநாடு வெளியூர் அமைப்பில் இருந்து லாபங்களும் அதிர்ஷ்டமும் உண்டாகும், வியாபாரம் மற்றும் தொழில் முதலியவற்றில் இருந்து வரும் அபரிவித வளர்ச்சி ஜாதகியின் முன்னேற்றத்திற்கு பெரும் உதவிகரமாக அமையும், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் என்பது ஜாதகிக்கு எதிர்வரும் சூரியன் திசை வாரி வழங்கும் என்பதில் சந்தேகமில்லை, சூரியன் திசையில் கணவர், நண்பர்கள், கூட்டாளி, கூட்டு முயற்சி, வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து ஜாதகி 100% விகித சுபயோக பலாபலன்களை சுவீகரிக்கும் வல்லமையை தரும்.

பரிகாரம் :

1) தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வருவது ஜாதகிக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும்.

2) திருவெண்காடு சென்று முக்குண நீராடி நலம் பெறுவது அவசியமாகிறது.

3) குல தெய்வ வழிபாடு எதிர்வரும் ஆடி அமாவாசை தினத்தில் அன்னதானம் செய்து வழிபடுவது சகல சௌபாக்கியங்களையும் தரும்.

4) ஜாதகி பழனி முருகனை வளர்பிறை செவ்வாய் கிழமை அன்று தரிசனம் செய்து சகல நலன்களை பெறலாம்.

5) திருப்பதி வருடம் ஒரு முறை வளர்பிறை திங்கள் அன்று சென்று ஸ்ரீ வாரி பெருமானை தரிசனம் செய்து வருவது பொருளாதார ரீதியான பிரச்சனைகளுக்கும், சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட விரைய ஸ்தான வழியிலான இன்னல்களையும் வெகுவாக தவிர்க்க உதவும்.

குறிப்பு :

மேற்கண்ட ஜாதகிக்கு 1,7ம் வீடுகள் மிகவும் வலிமையுடன் காணப்படுவதும், எதிர் வரும் சூரியன் திசை வலிமை பெற்ற களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவதும் மிகுந்த சுபயோகங்களை நல்கும், இதனால் ஜாதகியின் கணவருக்கும், ஜாதகிக்கு பரஸ்பரம் யோக வாழ்க்கை அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், வாழ்க்கை துணையின் ஜாதகம் மிக மிக வலிமையுடன் இருப்பது, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு பரிபூர்ண சுபயோகங்களை வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355969

செவ்வாய், 29 மே, 2018

செவ்வாய் தோஷம் என்ன செய்யும் ( 8ல் செவ்வாய் ), செவ்வாய் திசை தரும் பலாபலன்கள் என்ன ?

 

  சுய ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 2,4,7,8,12ல் செவ்வாய் அமர்வது "செவ்வாய் தோஷம்" என்றும், இங்கு அமரும் செவ்வாய் பகவான் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு கடுமையான தோஷத்தை தரும் என்றும், சம்பந்தப்பட்ட ஜாதகர் இதனால் செவ்வாய் அமர்ந்த பாவக வழியில் இருந்து பெரிய அளவிலான பாதிப்புகளை எதிர்கொள்ளவேண்டி வரும் என்பது பொது கருத்தாக உள்ளது, இது முற்றிலும் தவறான கருத்தாக ஜோதிடதீபம் கருதுகிறது, சுய ஜாதகத்தில் 2,4,7,8,12ம் பாவகங்களின் செவ்வாய் பகவான் அமர்ந்த போதிலும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே ஜாதகர் இன்னலுற நேரும், மேற்கண்ட பாவகங்கள் மிகவும் வலிமையுடன் இருப்பின் சம்பந்த பட்ட பாவக வழியில் இருந்து மிகுந்த சுபயோகங்களை ஜாதகர் அனுபவிக்கும் நிலையை தரும், மேற்கண்ட பாவகங்களில் செவ்வாய் அமர்ந்து சுபயோகங்களையும், அவயோகங்களையும் தரும் அமைப்பை பற்றி, ஒரு சில உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : மகரம்
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : கிருத்திகை 1ம் பாதம்

மேற்கண்ட ஜாதகருக்கு மேலோட்டமாக பார்க்கும் பொழுது செவ்வாய் பகவான் லக்கினத்தில் இருந்து 8ல் அமர்ந்து இருப்பதை போன்ற தோற்றத்தை  தரும், ஆனால் ஜாதகருக்கு ஆயுள் ஸ்தானம் எனும் 8ம் பாவகம் சிம்ம ராசியில் 143:29:52 பாகையில் ஆரம்பித்து கன்னி ராசியில் 177:38:14 பாகையில் நிறைவு பெறுகிறது, செவ்வாய் பகவான் சிம்ம ராசியில் உள்ள 139:22:02 பாகையில்  களத்திர ஸ்தானத்திற்க்கு உற்ப்பட்ட 7ம் பாவகத்தில் அமைந்திருப்பது ஜாதகருக்கு செவ்வாய் 8ல் அமர்ந்தத்திற்க்கான பலனை நல்காது, செவ்வாய் 7ல் அமர்ந்ததிற்க்கான பலாபலன்களையே  வழங்கும், எனவே ஜாதகருக்கு செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதே மிகவும் சரியான ஜோதிடகணிதமாகும்.

சுய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தில் அமர்ந்து இருப்பதும், 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 100% விகித வலிமையுடன் காணப்படுவதும் ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை களத்திர ஸ்தான வழியில் இருந்து சுவீகரிக்கும் வல்லமையை தரும், ஜாதகருக்கு 7ம் பாவக வழியில் இருந்து நல்ல வாழ்க்கை துணை, நல்ல நண்பர்கள் சேர்க்கை, சிறந்த கூட்டாளிகள், வெளிநாடுகளில் இருந்து வரும் யோக வாழ்க்கை மற்றும் பொருளாதர முன்னேற்றங்கள், கூட்டு முயற்சியில் மூலம் கிடைக்கும் அபரிவித வெற்றி வாய்ப்புகள், பொதுமக்கள் மூலம் கிடைக்க பெரும் ஆதரவு மற்றும் அதீத லாபங்கள், மிகவும் சக்தி வாய்ந்த கூட்டாளிகள் அமையும் யோகம் என்ற வகையில் ஜாதகருக்கு களத்திர ஸ்தான வழியில் இருந்து பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும்.

மேலும் ஜாதகருக்கு திருமணத்திற்கு பிறகான வளர்ச்சி என்பது மிகவும் அபரிவிதமானதாக அமையும், எதிர்பாலின அமைப்பினரால் ஜாதகர் தொடர்ந்து சுபயோகங்களை பெற்றுக்கொண்டே இருப்பர் என்பது கவனிக்கத்தக்கது, கூட்டு தொழில் மிகப்பெரிய வளர்ச்சியையும், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றங்களையும் வாரி வழங்கும், தெய்வீக அனுக்கிரகத்தால் ஜாதகர் மிகுந்த சுபயோகங்களை பெறுவார், ஜாதகரின் களத்திர ஸ்தானம் கடகத்தில் 12 பாகைகளையும், சிம்மத்தில் 23 பாகைகளையும் கொண்டு மிகவும் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கான யோக பலன்களை மிகவும் அபரிவிதமாக வாரி வழங்கும், மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 7ம் பாவகத்தில் " மங்களன் " எனும் செவ்வாய் பகவான் அமர்ந்து இருந்த போதிலும் ஜாதகருக்கு தான் அமர்ந்த பாவகம் வலிமை பெற்றுள்ளதால், களத்திர ஸ்தான வழியில் இருந்து சுபயோகங்களையே பரிபூர்ணமாக அனுபவிப்பார் என்பதை மிக உறுதியாக சொல்லலாம்.

நடைபெறும் செவ்வாய் திசை ஜாதகருக்கு வழங்கும் பலாபலன்கள் : ( 11/09/2012 முதல் 12/09/2019 வரை )

 செவ்வாய் பகவான் ஜாதகருக்கு தனது திசையில் 5,11ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு அளவிலான சுபயோகங்களை நல்குவது ஜாதகருக்கு மிகுந்த சிறப்புகளை வாரி வழங்கிக்கொண்டு இருக்கிறது, குறிப்பாக 5ம் பாவக வழியில் இருந்து கல்வியில் வெற்றியும், சமயோசித புத்திசாலித்தனமா செய்கையின் மூலம் அபரிவித லாபங்களை, குலதெய்வ ஆசியின் மூலம் அபரிவித நன்மைகளையும் பரிபூர்ணமாக பெரும் யோகத்தை தரும், ஜாதகருக்கு 11ம் பாவக வழியிலான அதிர்ஷ்டம் சொத்து சுக சேர்க்கை, வண்டி வாகன யோகம், எதிர்பாராத பொருள் வரவும், நல்ல குணம், தெய்வீக அனுக்கிரகம் என்ற வகையில் மிகுந்த சுபயோகங்களை வாரி வழங்கும், எனவே மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 7ல் செவ்வாய் அமர்ந்த போதிலும், களத்திர ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு சிறப்புகளையும், நடைமுறையில் உள்ள செவ்வாய் திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதால் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும் பரிபூரணமாக பெற்று கொண்டு இருக்கின்றார்.

குறிப்பு :

 ஜாதகருக்கு செவ்வாய் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பினும், செவ்வாய் தோஷம் இல்லை என்பதும், செவ்வாய் தனது திசையில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தி சுபயோகங்களை வாரி வழங்குகிறது என்பதும் கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஆனால் எதிர்வரும் ராகு திசை ஜாதகருக்கு மிகுந்த இன்னல்களை தரும் என்பதை " ஜோதிடதீபம் " இந்த பதிவின் மூலம் எச்சரிக்கை செய்கிறது, எதிர்வரும் ராகு திசை ஜாதகருக்கு 10ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையான இன்னல்களை ஜீவன ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்க தயார் நிலையில் உள்ளது என்பதால், ஜாதகருக்கு மிகுந்த எச்சரிக்கையை உடன் வாழ்க்கையை எதிர்கொள்வது சகல நலன்களையும் தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 21 மே, 2018

சனிமஹா திசை தரும் பலன்களும், சுய ஜாதகத்தில் பாவக வலிமையும் !


சுய ஜாதக பலன்கள்

நடைமுறையில் உள்ள சனி திசை ஏற்று நடத்தும் பாவக தொடர்பு எது ? சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலை எப்படி உள்ளது, எதிர்வரும் புதன் திசை தரும் பலாபலன்கள் மற்றும் எதிர்கால வாழ்க்கை எப்படி அமையும் ?

லக்கினம் : மேஷம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : ஸ்வாதி 3ம் பாதம்



சுய ஜாதகத்தில் பாவக தொடர்புகள்

1ம் வீடு உயிர் உடலாகி லக்கின பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு, சிறப்பான வளரும் சூழ்நிலையையும், நீண்ட ஆயுளையும், நல்ல மனம், சிறந்த குணம், ஆரோக்கியம், உடல் நலம், யோகம் நிறைந்த வாழ்க்கை வளம் என மிகுந்த நன்மைகளை தரும், ஜாதகி மேற்கொள்ளும் காரியங்களில் பரிபூர்ண வெற்றியையும், கீர்த்தியையும் தரும், லக்கினம் மேஷம் என்பதாலும் சர நெருப்பு ராசியின் இயக்கம் என்பதாலும், சுய கட்டுப்பாடு, தெய்வீக அனுக்கிரகம், லட்சியங்களை அடைதல், ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை, நினைத்ததை அடையும் யோகம் என பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும், வாழ்நாள் முழுவது, சிறப்பான சுபயோகங்களை நல்கும் அமைப்பாக கருதலாம்.

2,4,5,7,8,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு 2ம் பாவக வழியில் இருந்து நல்ல வாழ்க்கைத்துணை, நிறைவான வருமானம், கல்வியில் வெற்றி, நல்ல உத்தியோகம், வியாபார மூலம் நல்ல முன்னேற்றம், கவுரவம் அந்தஸ்து, இனிமையான வாக்குவன்மை, புகழ், அரசு கவுரவம், அனைத்திலும் வெற்றி, செய்தொழில் வழியிலான அபரிவித வருமானங்கள், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, எதிர்காலத்திற்க்கான சேமிப்பு என சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும்.

4ம் பாவக வழியில் இருந்து நல்ல தொழில் முன்னேற்றம், கைநிறைவான வருமானம், பெயரும் புகழும் தேடிவரும் யோகம், மண் மனை, வண்டி வாகன யோகம், திடீர் சொத்து சுக சேர்க்கை, வேலையாட்கள் மூலம் லாபம், சிறந்த நிர்வாக திறமை, பெரிய சொத்து சுக சேர்க்கையை பெறுதல், விளையாட்டில் ஆர்வம், அரசு கவுரவம், அரசியல் சார்ந்த உதவிகள், எதிர்பாராத அதிர்ஷ்டம் என்ற வகையில் சிறப்புகளை தரும், நல்ல குணம் ஜாதகிக்கு சிறந்த யோக வாழ்க்கையை  வாரி வழங்கும்.

5ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு நல்ல புத்திர  பாக்கியம், நிறைந்த அறிவு, கல்வியில் வெற்றி, செல்லும் இடங்களில் இருந்து வரும் ஆதரவு, அருங்கலைகளில் தேர்ச்சி மற்றும் புகழ், நாடகம், சினிமா துறையில் லாபம் , குழந்தைகளால் லாபம் மற்றும் அதிர்ஷ்டம், விளையாட்டில் அதீத ஆர்வம், வாழ்க்கையில் சிறப்பான மேன்மைகளை பெறுதல், புத்திசாலித்தனம் மிக்க செயல்பாடுகள், குல தெய்வத்தின் ஆசி மூலம் வாழ்க்கையில் சகல  சௌபாக்கியங்களையும் பெரும் அமைப்பு, புதிய சிந்தனை மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம், அபரிவித்த வளர்ச்சி என ஜாதகிக்கு பரிபூர்ண சுபயோகங்களை வாரி வழங்கும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு நல்ல வாழ்க்கை துணை, வெளிநாடுகளில் இருந்து வரும் செல்வாக்கு, வெளிநாடுகளில் தொழில் முன்னேற்றம், அரசியல் மற்றும் வியாபாரத்தில் வெற்றி, சமூக வாழ்க்கையில் எதிர்பார்த்த அந்தஸ்து கிடைத்தல், பொதுவாழ்க்கையில் முன்னேற்றம், திடீர் செல்வாக்கு, பல தொழில் செய்யும் யோகம், கூட்டு தொழில், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் அபரிவித வளர்ச்சி, செய்யும் காரியங்கள் யாவிலும் தனித்தன்மையான செயல்பாடுகள், வெளியூர் அல்லது வெளிநாடு சென்ற பிறகு வரும் பொருளாதார தன்னிறைவு என ஜாதகிக்கு களத்திர ஸ்தான  வழியில் இருந்து சுபயோகங்களை அதிக அளவில் வந்து சேரும்.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு  நல்ல அந்தஸ்தை விரைவாக பெரும் யோகம், வசதிமிக்க வேலைவாய்ப்பு அல்லது தொழில் வாய்ப்பு, பதவியில்  திடீர் உயர்வு, நீண்ட ஆயுள், எதிர்ப்புகள் அனைத்தையும் எதிர்கொண்டு திடீரென அபரிவித வளர்ச்சியை பெரும் தன்மை, தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் ஆதரவு மற்றும் பொருளாதர உதவிகள், நல்ல நண்பர்கள் உதவி, பொது மக்கள் செல்வாக்கு மூலம் கவுரவ பதவிகளை பெரும் யோகம், மருத்துவ உபகரணம்,மற்றும் மருந்துகள் மூலம் நல்ல லாபம், இன்சூரன்ஸ் துறையில் பெரும் அபரிவித லாபம் மற்றும் தொழில் வாய்ப்புகள் என ஜாதகிக்கு ஆயுள் பாவக வழியில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்கும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகி செய்யும் தொழில் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை தரும், மிகப்பெரிய பதவிகளை வகிக்கும் யோகம் உண்டு, அரசு ஆதரவு, தனியார் துறையில் இருந்து வரும் சிறப்பான தொழில் வாய்ப்புகள், தன்னம்பிக்கை மாறா மனநிலை, தொழில் வழியிலான சொத்து சுக சேர்க்கை வண்டி வாகன யோகம், மனதில் எண்ணிய எண்ணங்கள் யாவும் பலிதம் பெரும் தன்மை, தெய்வீக அனுக்கிரகம், அதிர்ஷ்டத்தின் முழு வலிமையை ஜாதகி அனுபவிக்கு வல்லமை, தொழில் மூலம் மிகப்பெரிய வளர்ச்சியை பெரும் யோகம் உண்டாகும்.

3,6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு 3ம் பாவக வழியில் இருந்து மருந்துகள் மூலம் அபரிவித லாபம் உண்டாகும், அறிய கலைகள் மூலம் செல்வாக்கும் தனசேர்க்கையும் உண்டாகும், விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் ஜாதகியின் வளர்ச்சிக்கு பேருதவியாக அமையும், வேற்று மதத்தினர் அல்லது அயலார் மூலம் நன்மையையும் லாபத்தையும் பெற ஜாதகிக்கு வாய்ப்பு அதிகம், பயணங்கள் மூலம் நல்ல வாய்ப்புகளையும், புதிய கண்டுபிடிப்புகள் மூலம் அபரிவித லாபங்களை, தர்ம சிந்தனை மற்றும் சத்தியத்தை மதித்து நடக்கும் வல்லமையும் ஜாதகிக்கு உண்டாகும்.

6ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு கடன் சார்ந்த பிரச்சனைகள் பெரும் சிரமங்களை தரக்கூடும், வேலையாட்கள் சிலநேரங்களில் இன்னல்களை ஏற்படுத்த கூடும், உடல் நல பாதிப்பு வயிறு சார்ந்து தருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு, தேவையற்ற செலவுகள், எதிரிகள் தொந்தரவு, மறைமுக எதிர்ப்பு, எதிர்பாராத திடீர் செலவு, மறுத்துவ செலவினங்கள் என்று ஜாதகிக்கு சற்று பாதிப்பை அதிக அளவில் தரக்கூடும், எவரிடமும் பகைமை பாராட்டாமல் தனது வெற்றியில் குறிக்கோளாக இருப்பது ஜாதகிக்கு சகல நலன்களையும் தரும்.

9 ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு வெளிநாடுகளில் இருந்து பரிபூர்ண யோகத்தை வாரி வழங்கும், சொந்த இடத்தைவிட்டு வெகு தொலைவு சென்ற பிறகு பரிபூர்ண  சுபயோகங்களை வாரி வழங்கும், மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வது ஜாதகிக்கு மிகப்பெரிய இன்னல்களையும், வீண் அவப்பெயரையும் பெற்றுத்தரும் என்பதால் மிகுந்த கவனமுடன் இருப்பது சகல சௌபாக்கியங்களையும் தரும்.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு நிறைய வீண் செலவுகள், பங்கு சந்தை மற்றும் லாட்டரி மூலம் பெரும் நஷ்டத்தை தரும், திருப்தி இல்லாத வாழ்க்கை பெரும் சிரமங்களை தரக்கூடும், அனைவராலும் அதிக தொல்லைகளையும் துன்பங்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், மனநிம்மதி இழப்பும், மனஅழுத்தமும் ஜாதகியின் அதிர்ஷ்டத்தை வெகுவாக பாதிக்கும், முதலீடுகளில் கவனமில்லை எனில் ஜாதகி பெரும் துன்பத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்க கூடும்.

10ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது வியாபாரம் சார்ந்த முன்னேற்றங்கள் வெகு அற்புதமாக அமையும், ஆலோசனை மற்றும் நிர்வாகம் சார்ந்த விஷயங்களில் அபரிவித்த தனித்தன்மையை வாரி வழங்கும், நிதி ஆலோசனை, நிதி மேலாண்மை இரண்டிலும் சிறந்து விளங்கும் தன்மையை தரும், பொது வாழ்க்கையில் எதிர்பாரா வெற்றிகள் உண்டு, இடம் மற்றும் சூழ்நிலை மாற்றத்தில் அதீத விருப்பம் உண்டாகும், பொருளாதரா வளர்ச்சி எதிர்பார்த்த வாறே அமையும்.

தற்போழுது நடைமுறையில் உள்ள சனி திசை தரும் பலன்கள் : ( 26/11/2008 முதல்  27/11/2027 வரை )

சனி பகவான் தனது திசையில் 10ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாகும், தொழில் ரீதியான வெற்றிகளையும், சமூக அந்தஸ்த்தையும் பரிபூர்ணமாக தரும், எதிர்பார்த்த நன்மைகள் ஜாதகிக்கு நடைமுறைக்கு வரும் உடல் ஆரோக்கிய பாதித்த போதிலும் ஜாதகியின் முயற்சிகள் நல்ல விருத்தியை தரும், பொருளாதர முன்னேற்றம் என்பது வியக்கத்தக்க வகையில் அமையும் என்பது கவனிக்கத்தக்கது.

சனி திசை சுக்கிரன் புத்தி ஜாதகிக்கு 4ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஜாதகி தொழில் ரீதியாக மேற்கொள்ளும் முயற்சிகள் நல்ல வெற்றிகளை நல்கும், வண்டி வாகனம், வீடு சொத்து சுக சேர்க்கை பெற நிறைய வாய்ப்புகள் வந்து சேரும், சூரியன் புத்தி 6,12ம் பாவக வழியில் இருந்து இன்னல்களையும், சந்திரன் புத்தி களத்திர பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும், செவ்வாய் புத்தி 4,7ம் பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும், ராகுபுத்தி லக்கின வழியில் இருந்து சுபயோகங்களையும், குரு புத்தி 7ம் பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும், வாரி வழங்க காத்துகொண்டு இருப்பது ஜாதகி மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாகும்.

எதிர்வரும் புதன் திசை தரும் பலன்கள் : ( 27/11/2027 முதல் 26/11/2044 வரை )

புதன் தனது திசையில் 3ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஓரளவிற்கான சுபயோகங்களை நல்குவது ஜாதகிக்கு நன்மை என்ற போதிலும், சிறு சிறு விரயங்களை தவிர்க்க இயலாது, இருப்பினும் வியாபார முன்னேற்றம் என்பது மிகவும் சிறப்பாக அமையும், செய்யும்  தொழில் வழியிலான லாபம் நிச்சயம் உண்டு.

பரிகாரம் :

1) ஜாதகி திருவெண்காடு சென்று முக்குண நீராடி நலம் பெறுவது அவசியமாகிறது.
2) தினமும் சூர்ய நமஸ்காரம் செய்து வருவது சகல சௌபாக்கியங்களையும் வாரி  வழங்கும்.
3) குல தெய்வ வழிபாடு, பித்ரு வழிபாடு எதிர்வரும் ஆடி அமாவாசை தினத்தில் அண்ணதானம் செய்து வழிபடுவது அவசியமாகிறது.
4) வருடம் ஒருமுறை பழனி சென்று முருக பெருமானை ராஜ அலங்கார தரிசனம் செய்து வழிபடுவது அவசியமாகிறது.
5) சர்ப்ப சாந்தி பரிகாரம், ஜாதகிக்கு மென்மேலும் பரிபூர்ண ராஜயோகத்தை வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 19 மே, 2018

7ல் ராகு அமர்ந்து இருப்பது திருமண தடைகளை தருமா ? இல்லற வாழ்க்கை அமையாதா ?


கேள்வி :

  7ல் ராகு இருப்பதனால் திருமணம் செய்வது வெகு சிரமம் என்றும், நீங்க திருமணம் செய்துகொள்ளாமல்  இருப்பது நல்லது என்று என்னை பயமுறுத்திவிட்டார், திருமணம் எனக்கு நடக்குமா ? தங்களிடம் இருந்து ஒரு நல்ல பதிலை எதிர் பார்க்கிறேன். எனது எதிர் காலம்,  குடும்ப வாழ்க்கை பற்றி பயம் கொள்ளும் விதமாக  ஏதும் சொல்லாமல், நல்ல வழிகாட்டுதல்களை கூறவும், இலங்கையில் எனது ஜாதகத்தை பார்த்த அனைவரும் என்னுடைய நட்சத்திரம் விசாகம் 4ம் பாதம் என்று கூறுகின்றனர் இது சரியானதா ? நடைபெறும் திசை எதிர்வரும் திசை தரும் பலன்கள் என்ன ?


பதில் :

 திருமண தடைகள் ஏற்படுவதற்கு ராகு பகவான் களத்திர ஸ்தானமான 7ம் வீட்டில் அமர்வது மட்டுமே காரணமாக அமைந்து விடாது, சுய ஜாதகத்தில் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியான ரிஷபம், 7ம் ராசியான துலாம், இரண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டோ அல்லது சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு  குடும்ப ஸ்தானமான 2ம் பாவகம் மற்றும் களத்திர ஸ்தானமான 7ம் பாவகம் கடுமையாக பாதிக்கப்பட்டோ இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் திருமண தடைகளை சந்திக்கும் சூழ்நிலை உருவாகலாம், மேலும் நடைமுறையில் உள்ள திசாபுத்திகள் வலிமை அற்ற பாவகங்களின் பலனை நடைமுறைப்படுத்தினால் ஜாதகர் திருமணம் சார்ந்த முயற்சிகளில் தடைகளையும், தாமதங்களையும் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படலாம், தங்களுக்கு திருமணம் தாமதமாக என்ன காரணம் ? என்பதனை இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பரே !


லக்கினம் : விருச்சிகம்
ராசி : விருச்சகம்
நட்ஷத்திரம் : அனுஷம் 1ம் பாதம்

தங்களது சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சம் என்ற போதிலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷபம் பாதக ஸ்தான தொடர்பை பெற்று 200% விகிதம் வலிமையற்று காணப்படுகிறது, மேலும் களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெற்று 200% விகிதம் வலிமையற்று காணப்படுகிறது, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடான துலாம் பாதக ஸ்தான தொடர்பை பெற்று 200% விகிதம் வலிமையற்று காணப்படுகிறது, தங்களது சுய ஜாதக அமைப்பின்படி, லக்கினத்திற்கு 2ம் வீடான குடும்ப ஸ்தானம் மட்டும் மிகுந்த வலிமையுடன் இருக்கிறது, இல்லற வாழ்க்கையை குறிக்கும் மற்ற வீடுகளான 5,7,8,12ம் வீடுகள் மிகவும் வலிமை அற்று காணப்படுகிறது, குறிப்பாக 1,5,7,11,12ம் வீடுகள் அனைத்தும் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது தங்களுக்கு 1,5,7,11,12ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னலைகளை தரும் அமைப்பாகும், தங்களின் திருமண முயற்சிகளில் வரும் தோல்விகளுக்கு, திருமண தடைகளுக்கும் அடிப்படை காரணமாக விளங்குவதும் இதுவேயாகும்.

தங்களது சுய ஜாதகத்தில் 2,3,10ம் பாவகங்களை தவிர மற்ற அனைத்து பாவக்கங்களும் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ளுங்கள், திருமண தடைகளுக்கு ராகு ஓர் காரணமாக இருந்தாலும், அது மட்டுமே முழு காரணமாக அமைந்துவிடாது, சுய ஜாதகத்தில் வெகுவான பாவகங்கள் கடுமையான பாதிப்பை பெற்று இருப்பது கவனிக்கத்தக்கது, சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு 2ம் வீடான குடும்ப ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பதால், தங்களுக்கு நல்ல இல்லறமும் , சிறப்பான குடும்பமும் அமையும் இதில் மாற்றம் இல்லை தாங்கள் தேர்வு செய்யும் மணப்பெண்ணின் சுய ஜாதகத்தில் 2,5,7,8,12ம் பாவகங்கள் மிகவும் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, தங்களின் சீரிய முயற்சி நல்லொதொரு வாழ்க்கை துணையை அமைத்து தரும்.

சுய ஜாதகத்தில் பெரும்பாலான பாவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது  தங்களின் திருமண வாழ்க்கைக்கு பல தடைகளை தந்தபோதிலும், குடும்ப ஸ்தான வலிமை தங்களுக்கு நல்ல இல்லற வாழ்க்கையை சிறப்பாக அமைத்துத்தரும் என்பதில் சந்தேகம் இல்லை, மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு செவி சாய்க்காமல் சுய ஜாதகம் வலிமை பெற்ற ஓர் வாழ்க்கை துணையை தேர்வு செய்து, இனிமையான இல்லறம் காணுங்கள் வாழ்த்துக்கள் அன்பரே !

 நடைமுறையில் உள்ள புதன் திசை தங்களுக்கு 3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவக தொடர்பை பெற்று முழு வீச்சில் சுபயோக பலன்களையும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றி வாய்ப்பையும், சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் அதே வேளையில் 4,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த இன்னல்களை தருவது தங்களுக்கு வெகு சிரமங்களை தரும் அமைப்பாகும், வீடு, வண்டி வாகனம், சொத்து  சுக சேர்க்கை போன்ற அமைப்பில் சிரமங்களையும், வீண் செலிவினங்கள், எதிர்பாராத திடீர் இழப்பு, மருத்துவ செலவுகள், என்ற வகையில் துன்பங்களை  தரக்கூடும், தன்னம்பிக்கையும், சுய கட்டுப்பாடும் தங்களின் வாழ்க்கையில் அளவில்லா சுபயோகங்களை வாரி வழங்கும், நல்ல வாழ்க்கை துணையை தேடி அமைத்துக்கொள்வது, தங்களின் வாழ்க்கையில் பரிபூர்ண நன்மைகளை  வாரி வழங்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

 எதிர்வரும் கேது திசை தங்களுக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தாது தங்களுக்கு சிறப்பான நன்மைகளை தரும் என்ற போதிலும், அதற்க்கு பிறகு வரும் சுக்கிரன் தசை 20 வருடம் தங்களின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் பாவக தொடர்பை பெறுவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும் ( சுக்கிரன் திசை 20 வருடமும் 3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவக தொடர்பை பெற்று முழு வீச்சில் சுபயோக பலன்களை  நல்குகிறது ) எனவே எதிர்காலம் தங்களுக்கு மிகவும் பிரகாசமாக உள்ளதால் எஜென்ஜி, தரகு, கமிஷன் மற்றும் வியாபாரம் சார்ந்த முன்னேற்றங்களை பெற தயார் நிலையில் இருப்பது அவசியமாகிறது.

குறிப்பு :

  ஜாதகர் முறையான பிரீதி பரிகாரங்களை மேற்கொண்டு சகல நலன்களையும் பெறுக, ஜாதகருக்கு தற்போழுது நடைமுறையில் உள்ள சந்திரனின் அந்தரம் சிறப்பான மாற்றங்களை வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது, திருமணம் சார்ந்த முயற்சிகளை முறையாக மேற்கொண்டு வாழ்க்கையில் நலம் பெறுக .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வியாழன், 17 மே, 2018

குழந்தையின் ஜாதகத்தில் 9க்கு உடையவன் 8ல் மறைந்தால் தகப்பன் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா ?


கேள்வி :

 வணக்கம் அய்யா ,

எனது குழந்தையின் ஜாதகத்தில் ( ஆண் ) 9பதுக்கு உடைய கிரகம் புதன் ( மகர லக்கினம் ) 8ல் மறைவு பெற்றுள்ளது ( சிம்மத்தில் ) எனவே எனக்கு ஆயுள் பங்கம் ஏற்படும் என்றும், குழந்தையின் வாழ்க்கையும் சீரழியும் என்று ஜாதகம் பார்க்க சென்ற இடத்தில் ஜோதிடர்கள் கூறியுள்ளனர், இது உண்மையா ? மேலும் எனது குழந்தையின் ஜாதகத்தில் 2ல் கேது 8ல் ராகுவுடன் புதன்,சந்திரன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை, கடுமையான ராகுகேது தோஷத்தையும், 7ல் சூரியன் குழந்தைக்கு கடுமையான களத்திர தோஷத்தையும் தரும் என்கின்றனர் இது உண்மையா? எனது குடும்பத்தினர் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.


லக்கினம் : மகரம்
ராசி : சிம்மம்
நட்ஷத்திரம் : மகம் 3ம் பாதம்

எனது குழந்தையின் ஜாதகத்தில் ( ஆண் ) 9பதுக்கு உடைய கிரகம் புதன் ( மகர லக்கினம் ) 8ல் மறைவு பெற்றுள்ளது ( சிம்மத்தில் ) எனவே எனக்கு ஆயுள் பங்கம் ஏற்படுமா ?

பதில் :

சுய ஜாதக வலிமையை உணராமல், நவகிரகங்கள் ராசிகளில் அமர்ந்திருக்கும் நிலையை மட்டும்  கருத்தில் கொண்டு, பிதற்றும் வாய்ஜாலமாகவே இதை "ஜோதிடதீபம்" கருதுகிறது, தங்களது கேள்வியில் 9பதுக்கு உடைய கிரகம் 8ல் மறைவு என்பதாக உள்ளது, இதை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம், தங்களது குழந்தையின் ஜாதகத்தில் 9ம் வீட்டிற்கு அதிபதி புதன் என்று வைத்துக்கொண்டாலும், அவர் லக்கினத்திற்க்கு 7ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கிறார் என்பதே உண்மை, ஏனெனில் ஜாதகருக்கு ஆயுள் ஸ்தானம் எனும் 8ம் பாவகம் சிம்ம ராசியில் 144:53:10 பாகையில் ஆரம்பித்து கன்னி ராசியில் 178:39:51 பாகை வரை வியாபித்து நிற்கிறது, ஆயுள் பாவகத்திற்கு உற்பட்ட பாகையில் புதன் அமராமல், சிம்ம ராசியில் 7ம் பாவகத்திற்கு உற்பட்ட ( 7ம் பாவகம் கடக ராசியில் 110:29:54 பாகையில் ஆரம்பித்து சிம்ம ராசியில்  144:53:10 பாகை வரை வியாபித்து நிற்கிறது ) 132:59:33 பாகையில் அமர்ந்திருப்பதால் 9 பதுக்கு உடைய கிரகம் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தில் அமர்ந்திருப்பதே உண்மை நிலை மேலும் தனது பாவகத்திற்கு ( 9ம் பாவகத்திற்கு ) 11ல் அமர்ந்திருப்பது மிகுந்த சுபயோகங்களை 9ம் பாவக வழியில் இருந்து தரும் என்பதே உண்மை, 9ம் பாவகம் என்பது தகப்பனை குறிக்காது, தகப்பன் வழியிலான பாக்கியத்தை ( முன்னோர்கள் செய்த நற்பதிவுகள் ) குறிக்கும் என்பதால் தாங்களும் தங்களது குடும்பமும் யாதொரு கலக்கமும், பயமும் கொள்ளத்தேவையில்லை, தங்களின் உயிருக்கு தங்களின் குழந்தையின் ஜாதகத்தால் சிறு இடையூறும் ஏற்படாது என்பதை உறுதியுடன் கூற கடமைப்பட்டுள்ளது.

 மேலும் குழந்தையின் ஜாதகத்தில் தாய் தகப்பனை குறிக்கும் 4,10ம் வீடுகள் முறையே 4,10ம் பாவகங்களுடனே சம்பந்தம் பெறுவதால் பெற்றோருக்கு மிகுந்த சுபயோகங்களை நல்கும் யோக ஜாதகமாகவே காணப்படுகிறது என்பதால் தங்களுக்கும் தங்களது குழந்தைக்கும் மிகுந்த நன்மையையும், யோக வாழ்க்கையுமே  வாரி வழங்கும், இதுபோன்ற மூடநம்பிக்கைகளை சிறிதும் தாங்களும், தங்களது குடும்பமும் நம்பாமல் இருப்பது தங்களது வாழ்க்கையில் சிறப்புகளை சேர்க்கும்.

2ல் கேது 8ல் ராகுவுடன் புதன்,சந்திரன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை, கடுமையான ராகுகேது தோஷத்தையும், 7ல் சூரியன் குழந்தைக்கு கடுமையான களத்திர தோஷத்தையும் தரும் என்கின்றனர்  இதனால் குழந்தையின் வாழ்க்கையும் சீரழியுமா ?

பதில் :

 சுய ஜாதகத்தில் ராகு கேது வலிமை பெற்று இருப்பது மிகுந்த நமைகளை தரும் குறிப்பாக, தங்களது குழந்தையின் ஜாதகத்தில் பாவக கணிதத்தின் அடிப்படையில் 2ல் கேதுவும், 8ல் ராகுவும் அமரவில்லை, லக்கினம் ( கும்பம் ) மற்றும் களத்திர ( சிம்மம்) ஸ்தானமான 1,7ம் பாவகத்தில் அமர்ந்திருப்பதே உண்மை நிலை, மேலும் லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்துள்ள கேது மற்றும் ராகு பகவான்  தாம் அமர்ந்த பாவகத்திற்கு  100 % விகித வலிமை சேர்க்கும் விதத்தில் அமைந்து இருப்பது குழந்தைக்கு 1,7ம் பாவக வழியில் இருந்து பரிபூர்ண சுபயோகங்களை வாரி வழங்கும், மேலும் ராகு பகவானுடன் சேர்ந்த சந்திரன்,புதன் மற்றும் சுக்கிரன் போன்ற கிரகங்கள் தரும் சுபயோகங்களை தனது பலனாக சுவீகரித்து ராகு பகவானே தருகிறார் என்பது ஜாதகத்தில் உள்ள சிறப்பு அம்சமாகும்.

சூரியன் கடகத்தில் உள்ள சத்துரு ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதால், களத்திர ஸ்தானம் சார்ந்த கவலைகளை தவிர்த்துவிடுவது நல்லது, சுய களத்திர ஸ்தானம் ராகு பகவானால் 100% விகித வலிமையுடன் திகழ்வதால், களத்திர பாவக வழியில் இருந்து பரிபூர்ண நன்மைகளையும் சுபயோகங்களை  தங்கு தடையின்றி பெறுவார் என்பதனையும், ஜாதகருக்கு யாதொரு களத்திர தோஷமும் இல்லை என்பதையும்  தெளிவுபடுத்த "ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது நண்பரே !

குறிப்பு :

சுய ஜாதக வலிமை என்பது அவரவர் சுய ஜாதகத்தில் பிறந்த தேதி,நேரம் மற்றும் இடம் ஆகிவற்றை அடிப்படையாக கொண்டு, லக்கினம் முதல் 12 பாவகங்கள் பெரும் வலிமையின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுவதாகும், மேலும் இதுவே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு  துல்லியமான பலாபலன்களை காண வழிவகுக்கும், நவகிரகங்களின் ஆதிக்கம்  என்பது பொதுவானது, இது அனைவருக்கும்  சரிநிகர் ஜீவகாந்த சக்தியை வழங்கும் தன்மை கொண்டதாகும், சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்கள் நவகிரகங்களின் ஜீவகாந்த சக்தியை சுவீகரித்து ஜாதகருக்கு யோகங்களையும், சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவகங்கள்  நவகிரகங்களின் ஜீவகாந்த சக்தியை  சுவீகரிக்க வலிமை அற்று அவயோக பலன்களை நடைமுறைப்படுத்தும் என்பதால், நமது சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை பற்றி ஓர் தெளிவான விளக்கம் பெற்று இருப்பது நமது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள உதவும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 16 மே, 2018

கால சர்ப்ப தோஷம், காலசர்ப்ப யோகம், சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களின் ஆளுமை திறன் !


 நவ கிரகங்களில் மிகவும் வலிமையானது கேது, அதற்க்கு மேலான வலிமையை பெற்றது ராகு, சுய ஜாதகத்தில் மேற்கண்ட சாயாகிரகங்களின் ஆளுமை என்பது விவரிக்க இயலாத ஒன்றாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, ஒருவரது ஜெனன ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகுகேது தான் அமர்ந்த பாவகத்தை வலிமை சேர்க்கும் அமைப்பில் இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர், ராகுகேது அமர்ந்த பாவக வழியிலான சுபயோகங்களை தங்கு தடையின்றி சுவீகாரம் செய்வார், அபரிவித நன்மைகளும் சுபயோகங்களும் ஜாதகரை தேடிவரும் வரும் இதில் சிறிதும் மாற்றம் இருக்காது, அதே சமயம் சுய ஜாதகத்தில் தான் அமர்ந்த பாவகத்திற்க்கு வலிமை சேர்க்கவில்லை எனில் ஜாதகரின் பாடு படு திண்டாட்டம் தான், எவ்விதத்திலும் ஜாதகர் சாயாகிரகங்கள் அமர்ந்த பாவக வழியிலான சிறு நன்மைகளையும் பெற இயலாது என்பது கவனிக்கத்தக்கது.

பெரும்பாலும் சுய ஜாதகத்தில் 1,2,5,7,8,12 பாவகங்களின் அமரும் ராகு கேது தோஷத்தை தரும் என்பதாகவும், சாயா கிரகங்களுக்குள் மற்ற கிரகங்கள் அமர்ந்து இருப்பின் கால சர்ப்ப தோஷத்தை தருவதாகவும் பொதுவான கருத்து உள்ளது, இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்பதனை "ஜோதிடதீபம்" அறிவுறுத்த கடமைப்பட்டுள்ளது, மேலும் இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவுபடுத்த உவகை கொள்கிறது, ராகு கேது தோஷம், சர்ப்ப தோஷம் என்று வர்ணிக்கப்பட்ட ஓர் ஜாதகத்தை இன்றை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : கும்பம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : திருவோணம் 1ம் பாதம்

மேற்கண்ட கும்ப லக்கின ஜாதகருக்கு ராகு லக்கினம் எனும் முதல் பாவகத்திலும், கேது களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகத்திலும் அமர்ந்து இருப்பது ஜாதகருக்கு கடுமையான ராகுகேது தோஷத்தை ஏற்படுத்தும் என்றும், லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் ராகு கேது அமர்வது மிகுந்த இன்னல்களை தரும் என்றும், திருமண வாழ்க்கை சிறப்பாக அமையாது மற்றும் இல்லற வாழ்க்கையில் பல இன்னல்களை அனுபவிக்க நேரும் என்றும் ஜாதகருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, பொதுவாக சுய ஜாதகத்தில் 1,2,5,7,8,12 பாவகங்களின் ராகு கேது அமர்வது தோஷம் என்று கருதுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, சுய ஜாதகத்தில் ராகு கேது எந்த பாவகத்தில் அமர்ந்தாலும் சரி, தான் அமர்ந்த பாவகத்திற்கு எவ்வித வலிமையை பெற்று தருகிறது என்று தெளிவு பெறுவது அவசியமாகிறது, இதை  தவிர்த்து 1,2,5,7,8,12 பாவகங்களின் ராகு கேது அமர்ந்து இருந்தாலே தோஷம் என்று கருதுவது முற்றிலும் ஜோதிட கணிதத்திற்கு புறம்பானது, தெளிவான ஜாதக பலாபலன்கள் காணவும் இது உதவாது.

மேற்கண்ட ஜாதகருக்கு லக்கினம் மற்றும் களத்திர பாவகத்தில் ராகு கேது அமர்ந்தாலும், லக்கினம் சம வீடு என்ற முறையில் அங்கு அமரும் ராகு ஜாதகருக்கு முழு வீச்சில் சுபயோக பலன்களை வழங்க அருகதை உடையவர் ஆகிறார், மேலும் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகத்தில் ( கேந்திர ஸ்தானம் ) அமரும் கேது பகவானும் தான் அமர்ந்த பாவகத்திற்க்கு 100% விகித வலிமையை தருவதால், களத்திர ஸ்தான அமைப்பிற்கு முழு வீச்சில் சுபயோக பலன்களை வழங்க அருகதை உடையவர் ஆகிறார், எனவே மேற்கண்ட ஜாதகர் லக்கினம் மற்றும் களத்திரம் என இரண்டு பாவக வழியில் இருந்தும் சாயா கிரகங்களால் 100% விகித சுபயோக பலன்களை அனுபவிக்க வல்லமை உடையவராக திகழ்கிறார்.

மேற்கண்ட அமைப்பு ஜாதகருக்கு லக்கினத்தில் அமர்ந்த ராகு பகவான், லக்கினம்  கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாப ஸ்தானமாக அமைவதாலும், ஸ்திர காற்று ராசியில்  10 பாகைகளும், உபய நீர் ராசியில் 24பாகைகளை கொண்டிருப்பதால் சிறந்த அறிவாளியாகவும், வளரும் சூழ்நிலையில் யோகத்தை பெற்றவராகவும், பரந்த மனப்பக்குவம், பெருந்தன்மையான குணத்தை பெற்றவராகவும் ஜாதகர் திகழ்கிறார், இது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற ராகு பகவானால் வழங்கப்படும் சுபயோகம் ஆகும், மேலும் ஜாதகருக்கு களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த கேது பகவான், களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வபுண்ணிய ஸ்தானமாக அமைவதாலும், ஸ்திர நெருப்பு ராசியில் 10 பாகைகளும், உபய மண் ராசியில் 24பாகைகளை கொண்டிருப்பதால் சிறந்த சுறுசுறுப்பு, சுய கட்டுப்பாடு, தெவீக அனுக்கிரகம், சமயோசித புத்திசாலித்தனம், தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து சுபயோகங்களை பரிபூர்ணமாக பெரும் வல்லமை கொண்டவராக திகழ செய்யும்.

சுய ஜாதகத்தில் ராகு கேது 1,2,5,7,8,12 பாவகங்களின் ராகு கேது அமர்ந்து இருப்பின் தான் அமர்ந்த பாவகத்திற்கு அது தரும் பாலாபலன்கள் என்ன ? என்பதில் தெளிவு பெற்ற பிறகே ஜாதக பலன்களை விவரிக்க வேண்டும், மேற்கண்ட 1,2,5,7,8,12 பாவகங்களின் ராகு கேது அமர்ந்து இருந்தாலே தோஷம் என்று கருதுவது முற்றிலும் ஜோதிடகணிதத்திற்கு புறம்பானது என்பதை கருத்தில் கொள்வது சிறப்புகளை தரும்.

ஜாதகருக்கு திருமணம் தாமதமாக ராகு கேது தோஷம் காரணமல்ல, நடைபெறும் ராகு திசை 4ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் ஜீவன ஸ்தான பலனை மட்டும் ஏற்று நடத்துவதால் ஜாதகருக்கு தொழில் ரீதியான முன்னேற்றங்களை மட்டும் வழங்கிக்கொண்டு இருக்கின்றது, எதிர்வரும் சந்திரன் புத்தி ஜாதகருக்கு திருமண வாழ்க்கையில் இணைவதற்கான அதிர்ஷ்ட வாய்ப்பை நல்கும் என்பது கவனிக்கத்தக்கது, "வாழ்த்துக்கள்"

குறிப்பு :

சுய ஜாதகத்தில் சாயாகிரகங்களான ராகு கேது தான் அமர்ந்த பாவகத்திற்கு வலிமை சேர்க்கும் விதத்தில் இருப்பின் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து 100% விகித சுபயோகங்களை பெறுவார் இதில் மாற்றம் இல்லை,  சுய ஜாதகத்தில் சாயாகிரகங்களான ராகு கேது தான் அமர்ந்த பாவகத்திற்கு வலிமை இழக்கும் விதத்தில் இருப்பின் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து 100% விகித அவயோகங்களை பெறுவார் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை, எனவே சாயா கிரகங்கள் சுய ஜாதகத்தில் தான் அமர்ந்த  பாவக வழியில் இருந்து பெரும் வலிமை என்ன ? என்பதில் தெளிவு பெறுவதே மிக துல்லியமான ஜாதக பலாபலன்களை பெற உதவி புரியும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 15 மே, 2018

திருமணம் தாமதமாக காரணம் என்ன ? யோகமான வாழ்க்கை துணை அமையுமா ? அமையாத ?


 " பருவத்தில் பயிர் " செய்யவில்லை எனில், இல்லற வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும், பொதுவாக தொழில், பொருளாதரம் , சமூக அந்தஸ்து, சுய முன்னேற்றம், வசதி வாய்ப்புகள் போன்றவற்றை முன்னிறுத்தி பருவ வயதில் இல்லறவாழ்க்கையில் இணையாமல் தாமாதப்படுத்துவதும், தள்ளிபோடுவதும் ஆண் பெண் இருபாலருக்கும் பருவ வயது கடந்த பிறகு கடும் நெருக்கடிகளை வாரி வழங்க ஆரம்பித்து விடும், சரியான வரனோ அல்லது வதுவோ அமைவது என்பது குதிரைக்கொம்பாக மாறிவிடும், காலம் கடந்து செய்யும் திருமண வாழ்க்கையில் கடுமையான இன்னல்களை எதிர்கொண்டு வாழ்ந்துகொண்டு இருக்கும் தம்பதியரே அதிகம் உண்டு, குறிப்பாக ஆணுக்கு 27, பெண்ணுக்கு 24 அகவைக்குள் இல்லற வாழ்க்கையில் இணைந்துவிடுவது நல்லது இதற்க்கு அதிகமாக தாமதம் ஆவது என்பது தவறான ஆலோசனையின் பெயரில் நமது வாழ்க்கைக்கு நாமே இன்னல்களை ஏற்படுத்திக்கொள்வதற்கு இணையானதாக அமைந்துவிடும்.

 பொதுவாக சுய ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகள் வலிமை பெற்று இருப்பது ஆண் அல்லது பெண் இருவருக்கும் சரியான பருவ வயதில் இல்லற வாழ்க்கையில் இணையும் வாய்ப்பை நல்கிவிடும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்கப்பட்ட ஆண் அல்லது பெண்ணிற்கு மட்டுமே திருமண வாழ்க்கை என்பது வெகு கால தாமதத்தை ஏற்படுத்தும், குறிப்பாக மேற்கண்ட வீடுகள் பாதிக்கப்பட்டு நடைபெறும் திசாபுத்தியும் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால், ஜாதகரோ, ஜாதகியோ இல்லற வாழ்க்கையில் இணைய இயலாமல், பலவித தடைகளையும் தாமதங்களும் சந்தித்து, எவ்வித சுகபோகங்களையும் சுவீகரிக்க வலிமையின்றி தவிக்கும் சூழ்நிலையை தரும், சுய ஜாதகத்தில் மேற்கண்ட 2,5,7,8,12ம் வீடுகள் வலிமை அற்ற ஜாதகரோ, ஜாதகியோ எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி தனது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகள் வலிமை பெற்று இருப்பதை மட்டும் உறுதி செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் இணைவது சம்பந்தப்பட்ட அன்பர்களுக்கு சகல  சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் என்பதை கவனத்தில் கொள்க, திருமணம் தாமதமாக சுய ஜாதக ரீதியான உண்மையான காரணம் என்ன என்பதனை இன்றை பதிவில் இரு உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : மீனம்
ராசி : மேஷம்
நட்சத்திரம் :  அஸ்வினி 2ம் பாதம்

ஜாதகருக்கு அகவை 43 நடைபெறுகிறது, திருமணத்திற்க்கான முயற்சிகள் யாவும் பெரும் தோல்வியையே சந்தித்தது, ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 2,8ம் வீடுகளை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் மிகவும் வலிமை பெற்று இருப்பின்னும், ஜாதகருக்கு திருமண வாழ்க்கை கைகூடி வரவில்லை என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், இதற்கான காரணத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையற்று காணப்படுகிறது, மேலும் ஜாதகரின் ஆயுள் ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடாக அமைந்து கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது வருந்தத்தக்கது, எனவே ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் ஆயுள் பாவகம் 100% விகிதம் வலிமை அற்றும், காலபுருஷ தத்துவ அமைப்பிற்க்கு களத்திர ஸ்தானமான துலாம் வலிமை அற்றும் இருப்பது ஜாதகரின் திருமண வாழ்க்கை தடைகளுக்கும், தாமதத்திற்க்கும் அடிப்படை காரணமாக விளங்கிறது.

மேலும் ஜாதகருக்கு ( 01/02/2006 முதல் 01/02/2016 வரை ) நடைமுறைக்கு வந்த சந்திரன் திசை 10 வருடமும் 2ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் தீமையான பலன்களை 2ம் பாவக வழியில் இருந்து வாரிவழங்கியது ஜாதகரின் இல்லற வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றியதுடன் கடும் நிதி பிரச்சனையை தந்தது, சந்திரன் திசை முழுவதுமான திருமண முயற்சிகள் ஜாதகருக்கு மிகப்பெரிய தோல்விகளை தந்தது என்பதே உண்மை, அதற்க்கு அடுத்து தற்போழுது நடைமுறையில் உள்ள செவ்வாய் திசை ( 01/02/2016 முதல் 01/02/2023 வரை ) ஜாதகருக்கு 3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை வழங்கிய போதும், 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் 2,8ம் பாவக வழியிலான இன்னல்களை வழங்கி திருமண தடைகளையும், பொருளாதார சீரழிவுகளை வாரி வழங்கிக்கொண்டு இருப்பது ஜாதகரின் திருமண ஆசைகளுக்கு பெரும் தடைக்கற்களாக அமைந்துவிட்டது, எதிர்வரும் புதன் புத்தியில் ஜாதகரின் சீரிய முயற்சி இருப்பின், திருமண வாழ்க்கை கைகூடி வரலாம், இறை அருள் கருணை புரியட்டும்.

மேற்கண்ட ஜாதகருக்கு 2,8ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமான துலாம் ராசியும் கடுமையாக பாதிக்கப்பட்டும், சந்திரன் மற்றும் செவ்வாய் திசை வலிமையற்ற 2,8ம் பாவக பலனை ஏற்று நடத்தியதுமே ஜாதகரின் திருமண தடைகளுக்கு அடிப்படை காரணம் என்பதை தெளிவுற கூற இயலும், ஜாதகர் யாதொரு எதிர்பார்ப்பும் இன்றி, சுய ஜாதகம் வலிமையுள்ள வாழ்க்கை துணையை தேர்வு செய்ய "ஜோதிடதீபம்" பரிந்துரை செய்கிறது. " வாழ்த்துக்கள் "


லக்கினம் : கன்னி
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : விசாகம் 1ம் பாதம்

ஜாதகிக்கு அகவை 31 நடைபெற்று கொண்டு இருக்கின்றது, திருமணத்திற்க்கான முயற்சிகள் யாவும் படுதோல்வியை சந்தித்துள்ளது, இதற்கான காரணம் ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களையும், 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 100% விகித இன்னல்களையும், 12ம் வீடு விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 80% விகித இன்னல்களை தந்துகொண்டு இருப்பது திருமண தடைகளுக்கான அடிப்படை காரணங்கள், மேலும் தற்போழுது நடைபெறும் சனி திசை 6ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தொழில் வழியிலான நன்மைகளை மட்டுமே வழங்கிக்கொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது, மேலும் சனி திசையில் சந்திரன்,செவ்வாய்,ராகு புத்திகள் வலிமையற்ற பாவக பலனை ஏற்று நடத்தியதும், தற்போழுது நடைபெறும் குரு புத்தி பாதிக்கப்பட்ட 4,8,12ம் பாவக பலனை ஏற்று நடத்துவதும் ஜாதகிக்கு திருமண வாழ்விற்க்கான யாதொரு அறிகுறியையும் காட்டவில்லை என்பது வருத்தத்திற்கு உரியது.

எதிர் வரும் புதன் திசையும் ஜாதகிக்கு 3,7,11ம் வீடுகள் பாதகஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை வாரி வழங்குவது ஜாதகிக்கு உகந்த நன்மைகளை தர சிறிதும் வாய்ப்பில்லை என்பதனால், சுய ஜாதகம் வலிமை பெற்ற ஓர் வரனின் ஜாதகத்தை தேர்வு செய்து இல்லற வாழ்க்கையில் நலம் பெறுவதே சாலச்சிறந்தது என்பதை கவனத்தில் கொள்க.

குறிப்பு :

சுய ஜாதகம் வலிமை அற்று இருப்பின் தனக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகம் மிக மிக வலிமையுடன் இருப்பதாக தேர்வு செய்து திருமண வாழ்க்கையை இனிமையாக அமைத்துகொள்வதே புத்திசாலித்தனம் என்பதை அறிவுறுத்த "ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 14 மே, 2018

ராகு மஹா திசை வழங்கும் ராஜயோக பலன்களும் ! பாத ஸ்தான பாதிப்புகளும் !


சுய ஜாதக பலாபலன்கள்

லக்கினம் : மீனம் 
ராசி : மேஷம் 
நட்ஷத்திரம் : பரணி 3ம் பாதம்


ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,7,10ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின பாவகத்தில் இருந்து பெரும் புகழ் மிக்க பொறுப்புகளை வாரி வழங்கும், மிதம் மிஞ்சிய ஜீவன மேன்மையையும், தொழில் ரீதியான சிறந்த ஞானத்தையும் வாரி வழங்கும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் நல்ல வேலை வாய்ப்பில் சிறப்பான பொருளாதார முன்னேற்றங்களை நல்கும், நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், சிறந்த மனவலிமை ஆகியவை ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் சிறப்பாக அமைந்து இருக்கும், ஜாதகருக்கு வரும் எதிர்ப்புகள் அனைத்தையும் களைந்து வெற்றிநடை போடும் யோகம் உண்டாகும், வளரும் சூழ்நிலையில் சிறப்புகளையும், கவுரவம் குறையாத யோக வாழ்க்கையையும் ஜாதகருக்கு லக்கின பாவகம் வாரி வழங்கும், வருமுன் உணர்ந்து செயலாற்றும் யோகம் ஜாதகருக்கு உண்டு.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும், மனைவி வழியிலான யோகங்களை பரிபூர்ணமாக அனுபவிக்கும் வல்லமை கொண்டவர் என்பதில் மாற்று கருத்து இல்லை, நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியிலான யோகங்களை ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவார் என்பதில் மாற்று கருத்து இல்லை, குறிப்பாக ஜாதகருக்கு வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்துவரும் வருமான வாய்ப்புகள் மிகவும் அபரிவிதமானதா அமைந்து இருக்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஜாதகரின் உழைப்பிற்கு மேலான வருமானம் தேடிவரும், வேற்று மதத்தினர், வேற்று இனத்தினர் மூலம் ஜாதகர் பெரும் நன்மைகளை அளவிட இயலாது என்பது வரவேற்கத்தக்க சிறப்பு அமசமாகும், ஜாதகர் செய்யும் கூட்டு முயற்சிகள் அல்லது வியாபாரம் பெரும் லாபங்களை வாரி வழங்கும், மனதிற்கு இனிய வாழ்க்கை துணையுடன், எதிர்காலத்தை ஜாதகர் நம்பிக்கையுடன்  எதிர்கொண்டு வெற்றிகரமாக வாழாலாம், திருமணத்திற்கு  பிறகான முன்னேற்றம் என்பது ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமையும், சிறந்த தொழில் மற்றும் பொருளாதார முன்னேற்றம் பரிபூர்ணமாக அமையும்.

10ம் பாவக வழியில் சிறந்த தொழில் வாய்ப்புகளையும், சிறந்த வேலை வாய்ப்புகளையும் ஜாதகர் தன்னிறைவாக பெறுவார், எதிர்பாராத வருமான உயர்வையும், கவுரவம் மிக்க பதவிகளையும் ஜாதகர் குறுக்கியகாலத்தில்  பெறுவார், வெளிநாடுகளில் பணியாற்றும் யோகமும் அதன் வழியிலான பொருளாதர தன்னிறைவு ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமையும், ஏற்றுமதி இறக்குமதி  தொழில்களில் சிறந்து விளங்கும் தன்மையை தரும், தனது சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் நபராக ஜாதகர் விளங்குவார், தடைகளை தகர்த்து வெற்றிநடை போடும் யோகம் உண்டு என்பதுடன், ஜாதகர் முயற்சிக்கும் எந்த ஒரு காரியங்களும் நல்ல  வெற்றிகளை தரும், ஜீவன ஸ்தானம் உபய நெருப்பு ராசி என்பதால், தொழில் நுட்பம் மற்றும் நுண்ணறிவு சார்ந்த விஷயங்களில் அபரிவித முன்னேற்றங்களை நல்கும், பரிபூர்ண தொழில் வெற்றிகளை ஜாதகருக்கு தொடர்ந்து வாரி வழங்கும்  என்பதால் ஜாதகர் ஜீவன ஸ்தான வழியில் இருந்து 100% விகித நன்மைகளை பெறுவார்.


2,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து 100% விகித நன்மைகளை வாரி வழங்கும், சுய ஜாதகத்திலே மிகவும் வலிமையுள்ள பாவக தொடர்பாக இதனை கருதலாம், 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அளவுக்கு அதிகமான வருமானம் வந்து சேரும், குறைந்த முதலீடுகளில் அதிக லாபத்தை தரும், இனிமையான  பேச்சு திறன் ஜாதகருக்கு மீதம் மிஞ்சிய நன்மைகளை வாரிவழங்கும், கை நிறைவான வருமானம் ஜாதகருக்கு திடீரென தேடிவரும் வாய்ப்பு அதிகம் உள்ளது, ஜாதகர் முறையான நிதி மேலாண்மை கொண்டவராக திகழ்வது, ஜாதகரின் பொருளாதர தன்னிறைவை பெற குறுகிய காலத்தில்  வழிவகை செய்யும், தனக்கு வரும் எதிர்ப்புகள் அனைத்தையும் தனது பேச்சு திறனால் தனக்கு சாதகமாக மாற்றும் வல்லமையை தரும், வாழ்நாள் முழுவதுமான வருமானம் ஜாதகர் தொடர்ந்து வரும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும் மேலும் ஜாதகருக்கு திருமணத்திற்கு பிறகான வளர்ச்சி மிகவும் அபரிவிதமானதாக அமையும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல குணமும், ஒழுக்கம் நிறைந்த நடவடிக்கையும் பெரும் அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும், நல்ல நண்பர்கள் அவர்கள் வழியிலான முன்னேற்றம், தன்னம்பிக்கை மற்றும் மனதைரியம், தெளிவான சிந்தனை, எடுக்கும் முயற்சிகளில் இருந்து வரும் வெற்றி வாய்ப்பு, உண்மையை மதித்தல், தேடிய விஷயங்கள் ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமையும் தன்மை, லட்சியங்களை அடையும் யோகம், முற்போக்கு சிந்தனை, அதிர்ஷ்டம் நிறைந்த யோக வாழ்க்கை என ஜாதகருக்கு லாப ஸ்தானம் தொடந்து நன்மைகளை வாரி வழங்கி கொண்டே இருக்கும், திட்டமிட்டு செயல்படும் வல்லமை ஜாதகருக்கு அதிகம் உண்டு, எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை ஜாதகருக்கு அடிப்படையிலேயே 11ம் பாவகம் வாரி வழங்கி இருக்கும் என்பது  கவனிக்கத்தக்கது, எதிர்பார்த்த எதிர்பாராத யோகங்களை ஜாதகர் பெறுவார் என்பது கவனிக்கத்தக்கது, தனது வாழ்க்கையை மிக சிறப்பாக திட்டமிட்டு நடத்தி செல்லும் வல்லமை ஜாதகருக்கு நிச்சயம் உண்டு.

3,4ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 3ம் பாவக வழியில் இருந்து மிகுந்த பயத்தையும், முயற்சியின்மையையும் அதிகரிக்கும், ஜாதகரின் உறுதியில்லாத தன்மை வரும் யோக பலன்கள் யாவையும் தடுத்து நிறுத்தும், வீண் மன பயம் ஜாதகரை வெகுவான காரிய வெற்றிகளுக்கு பெரும் தடையாக விளங்கும், மெய் பொருள் காணாது வாழ்க்கையில் மற்றவர்கள் கூறும் கருத்தை கேட்டு பெரும் தோல்விகளை ஜாதகர் சந்திக்க கூடும், தன்னுள்  உள்ள சுய  வலிமையை உணராமல் பல காலம் ஜீவிக்கும் தன்மையை தரும், ஜாதகரை மற்றவர்கள் வெகுவாக பயன்படுத்திக்கொள்ள கூடும் என்பதால், மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது, விடாமுயற்சியுடன் போராடுவதே ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும், கவன சிதறல்களும், ஞாபகம் இன்மையும் ஜாதகரின் தோல்விகளுக்கு காரணமாக அமையும், எனினும் முறையான பயிற்சியும், பரிகாரமும் ஜாதகருக்கு தெளிவான யோக வாழ்க்கையை வாரி வழக்கும், சகோதர வழி ஆதரவு ஜாதகருக்கு அமைவது மிக மிக அரிதானதாக அமையும், சீரிய நல்ல நோக்கங்கள் ஜாதகரின் மனஉறுதி இன்மையால் வெகுவாக பாதிக்கப்படும், வீரியமிக்க செயல்திறன் ஜாதகருக்கு மிக அரிதாகவே அமையும் என்பதால், சரியான தீர்வுகளை ஜாதகர் தேடுவது சகல சௌபாக்கியத்தையும் நல்கும்.

4ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு வரும் நல்ல சுகபோகங்கள் யாவும் மற்றவர்களால் தட்டிப்பறிக்கப்படும், குறிப்பாக ஜாதகர் தனது பெயரில் உள்ள சொத்து சுகம், வண்டி வாகனம் மற்றும் இடம் பொருள்கள் யாவற்றையும் காப்பாற்றிக்கொள்ள வெகுபாடு படவேண்டி இருக்கும் என்பதால், தனது பெயரில் எந்த சொத்துக்களையும் வைத்துக்கொள்ளாமல் இருப்பதே மிகுந்த நன்மைகளை தரும், மற்றவர்களுக்கு கொடுக்கும் பொருட்கள் யாவும் திரும்பி வருவது மிக அரிதானதாக அமையும், வண்டி வாகனங்களில் ஜாதகர் மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் பயணம் மேற்கொள்வது சகல நன்மைகளையும் தரும், மற்றவர்கள் விஷயங்களில் ஜாதகர் தலையீடு செய்யாமல் இருப்பதே மிகுந்த நன்மைகளை தரும், குடியிருக்க நல்ல இருப்பிடம் அமையாது என்பதால், சுய ஜாதகத்தில் வலிமை மிக்க பாவக தொடர்பிலான திசை குறிக்கும் வாயிற்படி கொண்ட வீடுகளில் ஜாதகர் ஜீவனம் செய்வது சகல சௌபாக்கியங்களையும் நல்கும்.

5,8ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு  5ம் பாவக வழியில் இருந்து நல்ல அறிவு திறனை வாரி வழங்கும், சமயோசித புத்திசாலித்தனமும், சிறந்த அறிவு திறனும்ஜாதகரின்  வாழ்க்கையில் கணிக்க இயலாத சுகபோகங்களை வாரி வழங்கும், தனது தொழில் வழியிலான முன்னேற்றங்களை ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவார் என்பதுடன், தனது புத்திகூர்மை கொண்டு செய்யும் தொழிலில் குறுகிய காலத்தில் பெரும் முன்னேற்றத்தை அடைவார், குலா தெய்வத்தின் ஆசியும், இறை அருளின் கருணையும் ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், ஜாதகருக்கு நல்ல வாரிசுகள் அமையும், என்பதுடன் அவர்கள் வழியிலான முன்னேற்றம் மிகவும் அபரிவிதமானதா அமையும், ஜாதகர் கற்ற கல்வி எப்பொழுதும் ஜாதகருக்கு மிகுந்த உறுதுணையாக அமைவதுடன் ஆராய்ச்சி புதிய கண்டு பிடிப்புகள் மூலம் பெரும் செல்வந்தன் ஆவதற்கான வாய்ப்புகளை வாரி வழங்கும், எந்த சூழ்நிலையையும் ஜாதகர் சமாளித்து முன்னுக்கு  வருவார், சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு சிறந்த யோக வாழ்க்கையை வாரி வழங்கும்.

8ம் பாவக வழியில் இருந்து குழந்தைகளால் லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், திடீர் அதிர்ஷ்டம் மூலம் ஜாதகர் பெரும் சொத்து சுக சேர்க்கையை பெறுவார், நீண்ட ஆயுள் உண்டாகும், ஜாதகர் ஆயுள் காப்பீடு, இன்சூரன்ஜ் போனஸ், கிராஜுவிட்டி மூலம் அபரிவிதமான பொருளாதார முன்னேற்றங்கள் உண்டாகும், மருத்துவ உபகரணம் மற்றும் மருந்து பொருட்கள் மூலம் ஜாதகர் நிறைவான வருமான வாய்ப்புகளை பெறுவார், ஏமாற்றங்கள் அனைத்தும் ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளையும் யோகத்தையும் வாரி வழங்கும், தனது வாழ்க்கை துணையின் அறிவும் பொருளாதர உதவிகளும் ஜாதகரின் வாழ்க்கையில் வியக்கத்தக்க மாற்றங்களை வாரி வழங்கும்.

6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து எதிர்ப்புகள் வழியில் இருந்து நன்மைகளை பெரும் யோகத்தை தரும், எதிரிகளும் நண்பர்கள் ஆவார்கள் தெளிவான செயல்பாடுகள் மூலம் வாழ்க்கையில் அனைவரிடமும் நற்பெயர் எடுக்கும் வல்லமையை தரும் மற்றவர்கள் தனம் ஜாதகருக்கு பயனுள்ளதாக விளங்கும் வருமானம் ஜாதகருக்கு தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும் என்பதுடன் குறுகியகால அதிர்ஷ்டங்கள் ஜாதகருக்கு நிதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும், அனைவரிடமும் பகைமை பாராட்டாமல் இருப்பது ஜாதகருக்கு பெருத்த நன்மைகளை வாரி வழங்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் உடல் துன்பங்கள் வெகுவாக குறையும், பெரியோர் ஆசி ஜாதகருக்கு வரும் இன்னல்களை தவிர்க்க உதவும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு சமூகத்தில் பெரிய மனிதர்கள் உதவிகளை பெற்று தரும், ஆன்மீக பெரியோர்களின் ஆசி ஜாதகரின்  வளர்ச்சியை வெகுவாக அதிகரிக்கும், நற்பெயரும் பாராட்டுகளும் ஜாதகருக்கு தேடி வரும், பழமை மிக்க புராதான பொருட்கள் அதிக அளவில் தேடிவரும்  வாய்ப்பு உள்ளது, சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் ஜாதகரனுக்கு பேருதவிகளை வாரி வழங்கும், சிறந்த அறிவாளிகவும், ஒழுக்கம் நிறைந்த பண்பாளராகவும் ஜாதகர் வாழ்நாள் முழுவது இயங்குவார், பித்ருக்கள் ஆசி  ஜாதகருக்கு எதிர்பாராத நன்மைகளை வாரி வழங்கும், தெய்வீக அனுகூலம் உண்டாகும், இடமாற்றம் மற்றும் சூழ்நிலை மாற்றத்தில் அதீத ஆர்வம் உண்டாகும், சிறந்த அறிவாளியாக திகழ்வார்.

12ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு எதிரிகளின் சூழ்ச்சியே சாதகமாக மாறும், சூழ்ச்சிகள் அனைத்தும் ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளையும், சுபயோகங்களையும் வாரி வழங்கும், திடீர் பதவி உயர்வு ஜாதகரின் வாழ்க்கையில் வியக்கத்தக்க நல்ல மாற்றங்களை வாரி வழங்கும், தொழில் துறையில் எதிர்பாராத அதிர்ஷ்டம், செய்த முதலீடுகள் வழியிலான அதீத லாபம், எதிர்ப்புகளை களைந்து மிகப்பெரிய அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஜாதகர் தன்வசம் சுவீகரிக்க செய்யும், இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், போதும் என்ற மனம் ஜாதகருக்கு பரிபூர்ணமாக சுபயோகங்களை நல்கும், தெய்வீக அனுபவமும், ஆன்மீக வெற்றியும் ஜாதகருக்கு பரிபூரண நன்மைகளை வாரி வழங்கும், சிறப்பு மிக்க எதிர்காலத்தை ஜாதகர் நிர்ணயம் செய்யும் வல்லமை உண்டாகும்.

நடைபெறும் செவ்வாய் திசை தரும் பலாபலன்கள் : ( 21/06/2012 முதல் 22/06/2019 வரை )

 5,8ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 5,8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை வழங்குவது வரவேற்கத்தக்க விஷயமாகும், குறிப்பாக ஜாதகரின் கல்வி ஞானம், இறை வழிபாட்டின் மூலம் சுபயோகம் பெரும் அமைப்பு, கற்ற கல்வி வழியிலான தொழில் வாய்ப்புகளை பெறுதல், தெய்வீக அனுக்கிரகம், தன்னம்பிக்கை மற்றும் மனோதைரியம் அதிகரிக்கும் தன்மை, மனதில் உள்ள எண்ணங்கள் யாவும் நிறைவேறும் தன்மை புதிய சிந்தனை, புதிய மாற்றங்களை நோக்கி ஜாதகர் பயணிக்கும் வல்லமை என சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், 8ம் பாவக வழியில் இருந்து எதிர்பார்த்த வாய்ப்புகள் ஜாதகருக்கு பரிபூர்ணமாக கிடைக்கும், வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் செல்வாக்கு அதிகரிக்கும், நிறைவான தானசேர்க்கை ஜாதகருக்கு தேடிவரும், தன்னம்பிக்கையும் மனோ தைரியமும் அதிகரிக்க நிறைய வாய்ப்புகள் உண்டு, நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் ஜாதகருக்கு சீரிய முன்னேற்றங்களை வாரி வழங்கும், கல்வி, வேலை, திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் யாவும்  ஜாதகருக்கு படிப்படியாக அமையவரும் என்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், தற்போழுது செவ்வாய் திசையில் சூரியன் புத்தி ஜாதகருக்கு களத்திர பாவக வழியில் இருந்து வெளிநாடுகளில் யோக வாழ்க்கையும், நண்பர்கள், கூட்டாளிகள் மூலம் அபரிவித வளர்ச்சியும், வாழ்க்கை துணை வழியிலான சுபயோகங்களையும் பெறுவார், எதிர்வரும் சந்திரன் புத்தி ஜாதகருக்கு தொழில் வழியிலான திடீர் அதிர்ஷ்டங்களையும், பெரும் பதவிகளையும் தரக்கூடும், செய்தொழில் வழியிலான முன்னேற்றம் ஜாதகருக்கு அபரிவித யோகங்களை வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது.

எதிர் வரும் ராகு திசை தரும் பலாபலன்கள் : ( 22/06/2019 முதல் 22/06/2037 வரை )

 2,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலாபலன்களை, முழுவீச்சில் வாரி வழங்கும் யோக காலமாக ராகு மஹா திசையை கருதலாம், ராகு தனது திசையில் மிதம்மிஞ்சிய அதிர்ஷ்டத்தையும், அளவில்லா பொருளாதர வளர்ச்சியையும் தரும் என்பதனை " ஜோதிடதீபம் " கட்டியம் கூறுவதுடன், எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக எதிர்கொள்ள ஆலோசனையும் வழங்குகிறது, ஜாதகரின் லாப ஸ்தானம் என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் வீடாகவும், சர மண் தத்துவ அமைப்பிலும் இயங்குவதால் ஜாதகருக்கு 100% விகித யோகங்களை வாரி வழங்கும், நிறைவான வருமானம், செல்வ செழிப்பு, இனிமையான குடும்ப வாழ்க்கை, தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகள், பொது வாழ்க்கையில் வெற்றி என மிகுந்த நன்மைகளையும், லாப ஸ்தான வழியில் இருந்து நீடித்த அதிர்ஷ்டங்களையும், நல்ல குணம் மூலம் மக்கள் செல்வாக்கினையும், தெளிவான சிந்தனை மூலம் புதிய வாய்ப்புகள் மற்றும் புதுவித கண்டுபிடிப்புகள் மூலம் பெரும் செல்வ சேர்க்கையையும் தொடர்ந்து பெரும் யோகத்தை நல்கும், தோல்விகள் அற்ற வெற்றிகரமான யோக வாழ்க்கையை "ராகு மகா திசை" ஜாதகருக்கு வாரி வழங்க காத்துகொண்டு இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

எனவே ஜாதகர் தனது வாழ்க்கையில் ராகு திசை காலத்தில் சுபயோகங்களை அனுபவிக்க தடையேதும் இல்லை என்பதனை ஜோதிடதீபம் வாழ்த்துக்களுடன் உறுதிகூறுகிறது.

பரிகாரம் :

1) சனி மற்றும் சுக்கிர பகவானுக்கு பீரிதி பரிகாரங்களை மேற்கொண்டு நலம் பெறுவது அவசியமாகிறது.
2) தாய் மற்றும் சகோதர வழியிலான பாதிப்புகளை ஜாதகர் சுவீகரித்து, தனது வாழ்க்கையில் தைரியம்,வண்டி வாகன யோகங்களை பெறுவது சிறப்புகளை நல்கும்.
3) திருவெண்காடு சென்று முக்குண நீராடி நலம் பெறுக.
4) பழனி வருடம் ஒருமுறை சென்று " ராஜஅலங்கார " தரிசனம் செய்வது சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.
5) சூரிய நமஸ்காரம் மற்றும் தீட்சை பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் சகல சுகபோகங்களையும் நல்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 12 மே, 2018

ஜாதக ஆலோசனை : சுய ஜாதக பலாபலன்கள் துல்லியமாக பெறுவதற்கான வழிமுறை !


சுய ஜாதக பலாபலன்கள்

லக்கினம் : கும்பம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : திருவோணம் 1ம் பாதம்


ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,4,5,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 1ம் பாவக வழியில் இருந்து மதிப்புக்கு உரிய செயல்களில் ஆர்வம், புகழ் மிக்க பொறுப்புகள், செய்யும் தொழில் வழியிலான லாபங்கள், சுய தொழில் செய்வதன் மூலம் முன்னேற்றம், மிகுந்த மரியாதையுடனான செயல்பாடுகள், அரசு துறை மூலம் ஆதாயம், வெகுமதி கவுரவ பதவிகள், வளரும் சூழ்நிலையில் சிறப்புமிக்க வெற்றி வாய்ப்புகளை பெரும் யோகம், தொழில் துறையில் அபரிவித வளர்ச்சி, நிறைவான பொருளாதார முன்னேற்றம், வியாபாரம் செய்வதன் மூலம் அதீத லாபம், எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம், விசாலமான மனதினால் அனைத்தையும் கட்டியாலும் தன்மை என சுக போகங்களை வாரி வழங்கும், நீண்ட ஆயுள் உண்டு, நல்ல உடல் நலம் மற்றும் மன நலம் ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் சிறப்பாக அமையும்.

4ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் சிறப்பு மிக்க நல்ல குணங்களை பெற்று இருப்பார், நல்ல தொழில் முன்னேற்றம் உண்டாகும், மனதில் நினைத்ததை சாதிக்கும் யோகம் உண்டாகும், பெயரும் புகழும் தேடி வரும், மண் மனை வண்டி வாகன யோகம் உண்டு, நல்ல வேலையாட்கள் அமைவார்கள், பெரிய சொத்துக்களை நிர்வகிக்கும் யோகம் உண்டு, அரசு சார்ந்த கவுரவம் உண்டு, சமூகத்தில் மதிப்பு மிக்க கவுரவ பதவிகள் தேடி வரும், அரசியல் ரீதியான முன்னேற்றம் மிக சிறப்பாக அமையும், தனது சுய உழைப்பின் மூலம் வீடு வண்டி வாகனம், பொருளாதார முன்னேற்றங்களை தன்னிறைவாக ஜாதகர் பெறுவார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

5ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் கலைகளில் அதீத ஆர்வத்ததையும், தேர்ச்சியையும் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு, நல்ல அறிவு ஜாதகரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பேருதவியாக அமையும், சிரமங்கள் தானாக மறையும், சினிமா துறையில் சிறந்து விளங்கும் யோகம் உண்டு, வாழ்க்கையில் யாரும் எதிர்பாராத மேன்மை நிலையை இறை அருளால் ஜாதகர் பெறுவார், புத்திசாலித்தனம் மிக்க  வியாபாரியாகவும், தொழில் வல்லுநராகவும் ஜாதகர் பிரகாசிக்க வாய்ப்பு உண்டு, சுய அறிவு கொண்டு வாழ்க்கையில் எதிர்பார்த்த அதிர்ஷ்டங்களை ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவார்.

10ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் தொழில் வல்லமை அதிகரிக்கும், சிறு தொழிலாக ஆரம்பித்து பெரிய நிறுவனமாக வளரும் யோகம் உண்டு, ஜீவன ஸ்தானம் பெரும் பகுதி உபய நெருப்பு ராசியில் இயங்குவதால், ஜாதகர் தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்களில் நல்ல ஞானம் உள்ளவராக திகழ்வார், தெய்வீக ஆசீர்வாதம் ஜாதகருக்கு மிக சிறந்த தொழில் வாய்ப்புகளை வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது, மிக சிறந்த கல்வியறிவும், ஆராய்ச்சி மனப்பக்குவமும், ஜாதகருக்கு மேன்மையான சுகபோகங்களை வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

2,7,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டம், நண்பர்கள் மூலம் பேருதவிகளை பெரும் யோகம், இனிமையான பேச்சு திறன், கை நிறைவான வருமான வாய்ப்புகள், செல்வ செழிப்பு, பெரிய மனிதர்கள் மற்றும் ஆன்மீக பெரியோர்கள் ஆசிர்வாதம் மூலம் வாழ்க்கையில் இனிமையான குடும்பம் அமையும் யோகம், நல்ல வாழ்க்கை துணை, வாழ்க்கை துணை வழியிலான பொருளாதர உதவிகள் மற்றும் ஆதரவை பெரும் யோகம் என ஜாதகருக்கு குடும்ப ஸ்தான வழியில் இருந்து எதிர்பாராத நன்மைகள் உண்டாகும், திருமணத்திற்கு பிறகான வளர்ச்சி மிக அபரிவிதமானதாக அமையும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் வாழ்க்கை துணை, மிகுந்த யோகம் மிக்கவராக திகழ்வார், மிகுந்த அதிர்ஷ்டசாலியாகவும், முற்போக்கு சிந்தனையுடன் கூடிய தைரியமிக்கவராக இருப்பார் என்பது கவனிக்க தக்க சிறப்பு அம்சமாகும், பொதுமக்களிடம் இருந்து வரும் ஆதரவு ஜாதகருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும், கூட்டு முயற்சி, நண்பர்கள், கூட்டாளிகள் என ஜாதகருக்கு சகல விதங்களில் இருந்தும் நன்மையான பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், தெய்வீக அனுக்கிரகம் ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமைந்து இருக்கும், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஜாதகருக்கு அபரிவிதமான வளர்ச்சி வந்து சேரும், பிரபல்ய யோகம் உண்டு என்பதுடன், ஜாதகர் அரசியலில் பிரகாசிக்கும் வாய்ப்பு உண்டு.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நினைக்கும் எண்ணங்கள் யாவும் நிறைவேறும், குறுகிய காலத்தில் பெரிய வெற்றிகளை பெரும் யோகம் உண்டு, வாழ்க்கை துணை மற்றும் நண்பர்கள் மூலம் அபரிவித செல்வாக்கு உண்டாகும், போனஸ், லாட்டரியில் யோகம், புதையல் யோகம், கடவுளின் கருணை மூலம் பெரும் செல்வத்திற்கு அதிபதியாகும் வாய்ப்பு உண்டு, நீண்ட ஆயுள்  மற்றும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும், தனிப்பட்ட ரகசியங்கள் ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும், வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் ஜாதகருக்கு மிக பெரிய பொருளாதார நன்மைகளை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் மிகுந்த அதிர்ஷ்டசாலி எனலாம், தன்னம்பிக்கையும் முற்போக்கு சிந்தனையும் ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமைந்து இருக்கும், எடுக்கும் காரியங்கள் யாவிலும் வெற்றிமேல் வெற்றி உண்டாகும், தைரியமிக்க செயல்பாடுகள் ஜாதகருக்கு பரிபூர்ண யோகங்களை நல்கும் பொதுமக்களின் ஆதரவு மூலம் பெரும் நன்மைகளை ஜாதகர் பெறுவதுடன் அதீத முன்னேற்றங்களை பெறுவார் என்பது கவனிக்கத்தக்கது, நல்ல குணமும் சிறந்த எண்ணங்களும் ஜாதகரின் வாழ்க்கையை சிறப்பு மிக்கதாக மாற்றும் வல்லமை கொண்டது, வீண் மனபயத்தை தவிர்த்தல் ஜாதகருக்கு சிறப்புகளை சேர்க்கும், நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்வது  ஜாதகருக்கு அபரிவித்த வளர்ச்சியை தரும்.

3,6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது  3ம் பாவக வழியில் இருந்து மருந்துகள் மூலம் நல்ல லாபத்தை தரும், அரிய கலைகளில் தேர்ச்சியையும், மருத்துவ உபகரணங்கள் மூலம் நல்ல லாபத்தையும் தரும், விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் மூலம் லாபத்தை பரிபூர்ணமாக ஜாதகர் பெறுவார் என்பது கவனிக்கத்தக்கது, நீண்ட பயணங்கள் மூலம் எதிர்பார்த்த நன்மைகளை பெறுவார், காதல் வெற்றி, சட்டம் மூலம் லாபம், புதிய கண்டுபிடிப்பு, தர்ம சிந்தனை, சத்தியத்தை மதித்தித்து நடக்கும் குணம் என்ற வகையில் நன்மைகளை தரும், ஜாதகரின் முயற்சிகள் சில நேரங்களில் தோல்வியை தந்த போதிலும், விடாமுயற்சியுடன் போராடுவது பெரிய வெற்றி வாய்ப்பை நல்கும்.

6ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் கடன் கொடுத்தவர்களால் அதீத தொல்லைகள்,  வேலையாட்கள் மூலம் நஷ்டம், வேலை நிறுத்தம் மூலம் கஷ்டம், தேவையற்ற செலவினங்கள், எதிர்பாராத மறுத்து செலவுகள், உடல் நல பாதிப்புகள் என இன்னல்களை தர கூடும், மேலும் கடன் கொடுப்பது வாங்குவது இரண்டும் ஜாதகருக்கு  பேரிழப்புகளை தரும், இருப்பதை  முறையாக கையாண்டு நலம் பெறுவது அவசியமாகிறது, சேமிக்கும் பழக்கம் ஜாதகருக்கு சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், எவரிடமும் பகைமை பாராட்டுவது நல்லதல்ல.

9ம் பாவக வழியில் இருந்து வெளிநாடுகளில் இருந்து நல்ல யோகங்களை பெறஇயலும், பிறந்த ஊரில் இருந்து வெகு தொலைவு சென்ற பிறகே அபரிவித வளர்ச்சி உண்டாகும், வயதில் பெரியவர்களின் ஆலோசனை ஜாதகருக்கு சுபயோகங்களை நல்கும், முறையான பித்ரு வழிபாடு கல்வி,வேலை,திருமணம்,குழந்தை மற்றும் பொருளாதர முன்னேற்றங்களை வாரி வழங்கும், பலமுறை யோசித்து செயல்படுவது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும்.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நிம்மதியற்ற மனநிலையை பெற்றிருப்பர், மன உறுதி வெகுவாக குறையும், நிறைய செலிவினங்கள் ஜாதகரின் பொருளாதரா முன்னேற்றத்தை பாதிக்கும், பங்கு சந்தை, லாட்டரி, சூது மூலம் ஜாதகர் பேரிழப்புகளை சந்திக்க நேரும், திருப்தி இல்லாத  மன நிலை ஜாதகரை கடுமையாக பாதிக்கும், அனைவராலும் எதிர்பாராத தொல்லைகளை அனுபவிக்கும் சூழ்நிலைகளை தரும், விபத்தின் மூலம் மருத்துவ செலவினங்கள் கூடும் என்பதால் பாதுகாப்பான பயணம் ஜாதகருக்கு சிறப்புகளை வாரி வழங்கும் .


நடைபெறும் ராகு திசை ஜாதகருக்கு வழங்கும் பலன்கள் : ( 14/10/2003 முதல் 14/10/2021 வரை )

ராகு பகவான் ஜாதகருக்கு தனது திசையில் 4ம் வீடு ஜீவன ஸ்தானமான  10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை வழங்குவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஏனெனில் ஜாதகரின் தொழில் சார்ந்த வளர்ச்சியை தற்போழுது நடைபெறும் ராகு திசை சிறப்பாக அமைந்து தரும், தனக்கான தொழில் வாய்ப்புகளையும், நுணுக்கங்களையும் அறிந்துகொள்ளும் நேரமிது, தான் செய்யும் தொழிலில் சிறந்த அறிவு திறனையும், அனுபவத்தையும் ஜாதகர் பரிபூரணமாக பெறுவார் என்பதுடன் எதிர்காலத்திற்க்கான சரியான தொழில் நிர்ணயத்தை பெரும் வல்லமையை தரும். ராகு திசையில் தற்போழுது நடைபெறும் சூரியன் மற்றும் சந்திரன்  புத்திகள்  3ம் பாவக வழியில்  இருந்து இன்னல்களை தந்த போதிலும், அடுத்து வரும் சந்திரன் புத்தி ஜாதகருக்கு 11ம் பாவக வழியில் இருந்து மிகுந்த அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும், அடுத்து வரும் செவ்வாய் புத்தி ஜாதகருக்கு 3,6,9,12ம் பாவக  வழியில் சற்று சிரமங்களை தரக்கூடும்.

எதிர்வரும் குரு திசை தரும் பலாபலன்கள் : ( 14/10/2021 முதல் 14/10/2037 வரை )

அடுத்து வரும் குரு திசை ஜாதகருக்கு பரிபூர்ண சுபயோகங்களை வாரி வழங்குகிறது என்றால் அது மிகையில்லை, குரு திசை ஜாதகருக்கு 1,4,5,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 2,7,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் ஏக காலத்தில் ஜீவனம் மற்றும் லாப ஸ்தான பலனை வாரி வழங்குவது, ஜாதகரை குரு திசையில் மிக சிறந்த யோகதாரியாக பிரகாசிக்க செய்யும், ஜாதகருக்கு மேலே குறிப்பிட்ட 1,2,4,5,7,8,10,11ம் பாவக வழியிலான சுபயோகங்கள் நடைமுறைக்கு வரும் காலம் குரு திசை என்பதால், ஜாதகரின் வளர்ச்சி மிக அபரிவிதமானதா அமையும் என்பதில் சந்தேகமில்லை வாழ்த்துக்கள் அன்பரே !

பரிகாரம் :

1) ஜாதகர் வளர்ப்பிறை சனிக்கிழமை அன்று திருவக்கரை சென்று  சனி மற்றும் சுக்கிர பகவானுக்கு வக்கிரக  நிவர்த்தி செய்து நலம் பெறுவது அவசியமாகிறது, இது ஜாதகருக்கு திருமண தடையினை நிவர்த்தி செய்து, தொழில் சார்ந்த நன்மைகளை வாரி வழங்கும்.

2) சுய ஜாதகத்தில் ராகு லக்கினத்தில் வலிமை பெற்று இருப்பதால், ராகு கால வழிபாடு அவசியம் செய்யவும், ராகு காலத்தில் செய்யும் காரியங்கள் மிகப்பெரிய  வெற்றிகளை வாரி வழங்கும் என்பதில் கவனம் கொள்க.

3) தினமும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் மற்றும் ஆதித்ய ஹிருதயம் படிப்பது  சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.

4) " சர்ப்ப சாந்தி "  பரிகாரம் ஜாதகருக்கு லக்கினம் மற்றும் களத்திர பாவக வழியிலான சுபயோகங்களை வாரி வழங்கும்.

5) திருவெண்காடு வளர்பிறை புதன் கிழமை சென்று " முக்குண " நீராடி நலம் பெறுவது அவசியமாகிறது.

6) குல தெய்வ வழிபாடு, பித்ரு வழிபாடு எதிர்வரும் ஆடி அமாவாசை தினத்தில் செய்து நலம் பெறவும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696