சனி, 28 ஜூன், 2014

பாவக வலிமையின் அடிப்படியில் திருமண பொருத்தம் காணும் முறை !




 ஒருவரின் சுய ஜாதகத்தை கொண்டு 12 பாவகங்களின் அடிப்படையில் திருமண பொருத்தம் காணும் முறையினை  இந்த பதிவில் ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!

 வரனின் ஜாதகம் :


லக்கினம் : மகரம் 
ராசி : துலாம் 
நட்சத்திரம் : சித்திரை 3ம் பாதம் 

வதுவின் ஜாதகம் :


லக்கினம் : விருச்சிகம் 
ராசி : மிதுனம் 
நட்சத்திரம் : திருவாதிரை 3ம் பாதம் 

 மேற்க்கண்ட ஜாதகங்களில் நட்சத்திர பொருத்தம் காணும் பொழுது 10 பொருத்தத்திற்கு 7 பொருத்தங்கள் உண்டு, இருப்பினும் பாவக வலிமை அடிப்படையில் ஜாதகத்திற்கு பொருத்தம் காணும் பொழுது, இரண்டு ஜாதகத்திற்கும் சிறிதும் பொருத்தம் இல்லை என்பதே உண்மை, பாரம்பரிய ஜோதிடத்தில் செவ்வாய் தோஷம் என்று பொருத்தம் இல்லை என்று திருமணத்தை நிராகரித்தாலும், உண்மையான காரணம் அதுவல்ல.

 ஒருவரின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் எனில் அடிப்படையில் கவனிக்க வேண்டிய விஷயம் வரன் வது இருவரின் ஜாதகத்திலும் குடும்பம் ஸ்தானம் எனும் 2ம் பாவகமும், களத்திரம் ஸ்தானம் எனும் 7ம் பாவகமுமே, மேற்கண்ட ஜாதகங்களில் அடிப்படையில் சிறப்பாக இருக்க வேண்டிய இந்த இரண்டு பாவகமும் வரனின் ஜாதகத்தில் 2,7ம் பாவகம் கடுமையாக பாதிக்க பட்டு இருக்கின்றது, வதுவின் ஜாதகத்தில் 7ம் பாவகம் கடுமையாக பாதிக்க பட்டு இருக்கின்றது.

 வரனின் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம், களத்திர ஸ்தானமான 7ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம், எனவேதான் ஜாதகருக்கு 35 வயது கடந்தும் இன்னும் திருமணம் அமையவில்லை, மேலும் தற்பொழுது நடைபெறும் குரு திசை, செவ்வாய் புத்தி  ( 10/12/2013 முதல் 16/11/2014 வரை ) அதிர்ஷ்ட ஸ்தானம்  என்று அழைக்க படும் 11ம் வீடு பதாக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும், குடும்பம் மற்றும் அயன சயன சுகம் தரும் 2,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனை வழங்கி கொண்டு இருப்பதால், ஜாதகரின் திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக  மாற்றி கொண்டு இருக்கின்றது.

 சுய ஜாதகத்தில் 2,7ம் பாவகங்கள் பாதிக்கபட்டு இருந்தாலும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி பாதிப்படைந்த 2,7ம் பாவக பலனை ஏற்று நடத்தாமல் இருந்து, நல்ல நிலையில் இருக்கும் பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால் திருமண தடை ஏற்ப்பட வாய்ப்பு இல்லை, ஜாதகருக்கு சிரமத்தின்  பெயரிலாவது திருமண வாழ்க்கை அமையும், சரியான பருவ வயதில் பாதிப்படைந்த 2,7ம் பாவகத்தின் பலனை நடத்தும் எனில், ஜாதகரின் வாழ்க்கையில் திருமணம் என்பது கனவில் மட்டுமே சாத்தியம்.

 வதுவின் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகம் ஓரளவிற்கு வலிமை பெற்று அமைந்த போதிலும், களத்திர ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகம் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகியின் திருமண வாழ்க்கைக்கு தடையாக வந்து நிற்கிறது, ஜாதகிக்கு குடும்பம் அமையும் என்ற போதிலும், ஜாதகிக்கு வரும் கணவன் நல்லவராகவும், உயரிய குணம் கொண்டவராகவும்  இருப்பார் என்று சொல்வதிற்கு இல்லை என்பதே உண்மை.

மேலும் ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் சனி திசை ( 17/03/2008 முதல் 17/03/2027 வரை ) 2,5,8,11ம் விடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெற்று நன்மையை செய்த போதிலும், தற்பொழுது நடைபெறம் கேது புத்தி ஜாதகிக்கு சாதகமாக இல்லை கேது புத்தி ( 28/11/2013 முதல் 06/01/2016 வரை ) 1,3,7,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனை தருவது 1ம் பாவக வழியில் இருந்து ஜாதகி நல்ல  சூழ்நிலையில் இல்லாததும் , 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகள் தோல்வியை தழுவும் சூழ்நிலையையும், 7ம் பாவக வழியில் இருந்து திருமண தடையையும், 9ம் பாவக வழியில் இருந்து இறை அருளின் கருணை அற்ற அமைப்பையும் தருகின்றது, ஆக தற்பொழுது நடை பெரும் கேது திசை ஜாதகிக்கு திருமண வாழ்க்கையை அமைத்து தர வாய்ப்பு இல்லை என்பதும், திருமணம் செய்ய எடுக்கும் முயற்சிகள் யாவும் தோல்வியை தரும் என்பதும் உறுதியாகிறது.

 அடுத்து வரும் பதிவில் மேலும் சில ஜாதகங்களை ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 27 ஜூன், 2014

சுய ஜாதக ரீதியாக திருமண பொருத்தம் காண்பது எப்படி ?






 திருமணம்  பொருத்தம் காண்பதில் பல்வேறு குழப்பங்கள், தற்பொழுது இருப்பது எதார்த்தமான உண்மையே! வரன் வீட்டில் ஜாதகம் பொருத்தம் காணும் ஜோதிடர் பொருத்தம் உள்ளது என்கிறார், வதுவின் வீட்டில் ஜாதக பொருத்தம் காணும் ஜோதிடர் பொருத்தம் இல்லை என்கிறார், திருமண பொருத்தம் காண்பதில் ஜோதிடர்களுக்கு இடையே இவ்வளவு கருத்து வேறுபாடு ஏற்ப்படும் பொழுது, திருமண பொருத்தம் காண வந்தவர்களின் நிலை என்னவாகும், மேலும் பாரம்பரிய முறைப்படி திருமணம் பொருத்தம் காணும் ஜோதிடர்கள் ஜாதக ரீதியாக கவனிக்கும் விஷயங்களை பற்றியும், இதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பதை பற்றி இந்த பதிவில் ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !

1) நட்சத்திர பொருத்தம் :

 பாரம்பரிய ஜோதிடத்தில் ஜாதக பொருத்தம் காணும் பொழுது அடிப்படையாக, அனைத்து ஜோதிடர்களும் கவனத்தில் எடுத்துகொள்ளும் விஷயம் நட்சத்திர பொருத்தமே என்றால் அது மிகையில்லை, இதன் வழியே பொருத்தம் காண வந்த வரன் வது, இருவரின் ஜெனன நட்சத்திரத்தை வைத்து   

( தினம்,கணம்,மாகேந்திரம்,ஸ்திரீ தீர்க்கம்,யோனி,ராசி,ராசி அதிபதி,வசியம்,ரஜ்ஜு,நாடி,வேதை ) 

எனும் 11 பொருத்தங்களை இருவரின் நட்சத்திரங்களுக்கும் கண்டு, குறைந்த பட்சம் 7 நட்சத்திர பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம் என்று பரிந்துரைகின்றனர்.

குறிப்பு : 

 நட்சத்திர பொருத்ததில் ரஜ்ஜு, வசியம், யோனி,மாகேந்திரம்,ஸ்திரீ தீர்க்கம் ஆகியவை மிக முக்கிய பொருத்தமாக கவனிக்க படுகிறது, ரஜ்ஜு பொருத்தம் இல்லை எனில் பொருத்தம் இல்லை என்று திருமணம் தவிர்க்க படுகிறது.

2) ராகு கேது தோஷம் :

ராகு கேது தோஷம் தற்பொழுது வரன் வது இருவரின் பெற்றோர்களும் ஜாதக ரீதியாக கவனிக்கும் அளவிற்கு இருக்கின்றது, லக்கினத்தில் இருந்து 1,2,5,6,7,8,12ம் ராசிகளில் ராகு கேது அமர்ந்தால் அந்த ஜாதகம் ராகு கேது தோஷம் உள்ள ஜாதகம் என்று நிர்ணயம் செய்யபடுகிறது, மேலும் வரன் வது இருவரின் ஜாதகத்திலும் ராகு கேது தோஷம் உள்ளதாக இணைப்பது திருமண வாழ்க்கையை சிறப்ப அமைத்து தரும் என்பது பாரம்பரிய ஜோதிடர்களின் கணிப்பு, ராகு கேது தோஷம் இல்லாத ஜாதகத்துடன், ராகு கேது தோஷம் இருக்கின்ற ஜாதகத்தை இணைப்பது சரியான பொருத்தம் அல்ல என்பதும் இவர்களின் கருத்து, மேலும் அப்படி இணைக்கும் ஜாதகம் திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக மற்றும் என்பதும் இவர்களின் கருத்து.

3) செவ்வாய் தோஷம் :

லக்கினத்தில் இருந்து செவ்வாய் பகவான் 2,4,7,8,12ம் ராசிகளில் இருந்தால், செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகம் என்றும், வரன் வது இருவரின் ஜாதகத்திலும் செவ்வாய் பகவான் லக்கினத்தில் இருந்து மேற்கண்ட ராசிகளில் இருப்பதை போலவே தேர்வு செய்து திருமணம் செய்வது, இருவரின் திருமண  வாழ்க்கையை சிறப்பாக நீடிக்க செய்யும், தவறி செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்தை, செவ்வாய் தோஷம் அற்ற ஜாதகத்துடன் இணைத்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தால், மணவாழ்க்கையில் பிரச்சனைகளும், பிரிவும் ஏற்ப்படும் என்று சொல்பவர்களும் உண்டு, இதற்க்கு ஒருபடி மேலே சென்று உயிருக்கு ஆபத்து ஏற்ப்படும் என்று சொல்பவர்களும் உண்டு, ஆக செவ்வாய் தோஷம் பலரது திருமண வாழ்க்கைக்கு தடையாக இருப்பது கண்கூடாக தெரிகிறது.

4) ஏக திசை சந்திப்பு :

 வரன் வது இருவருக்கும் சம காலத்தில் ஒரே திசை நடைபெறுவது, திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை அதிகரிக்கும், திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றிவிடும், ஏக திசை சந்திப்பு என்பது தற்பொழுது, பல ஜோதிடர்களால் அறிவுறுத்த படுகிறது, வரன் வதுவுக்கும் ஒரு திசை நடைமுறையில் இருந்தால் திருமணம் வேண்டாம் என்று தவிர்த்து விடுகின்றனர் ஆக ஏக திசை சந்திப்பு என்பதும், பலரது திருமண தடைக்கு  காரணமாக அமைகிறது.

5) ஏழரை சனி :

வரன் வதுவுக்கு சனிபகவான் சந்திரனுக்கு ஏழரை சனியாக சஞ்சாரம் செய்யும் பொழுது திருமணம் செய்வது, மிகுந்த துன்பத்தை ஏற்ப்படுத்தும் ஏழரை சனி காலத்தில் திருமணம் செய்வது மிகுந்த துன்பத்தையே ஏற்ப்படுத்தும் என்று செல்பவர்களும் உண்டு, ஆக திருமண தடைக்கு ஏழரை சனியும் ஒரு காரணமாக அமைகிறார் என்றால் அது மிகையில்லை.

மேலும் லக்கினத்தில் இருந்து 2,7ல் சனி அமர்ந்தாலும் ஜாதகருக்கு திருமணம் நடை பெறாது அல்லது திருமணம் தாமதம் ஆகும் என்று சொல்பவர்களும்  உண்டு, ஆக ஒருவருக்கு திருமணம் நடைபெற மேற்கண்ட விஷயங்களை எதிர்கொண்டு, மேற்கண்ட பொருத்தங்கள் நல்ல நிலையில் அமைந்து, வரன் வதுவிர்க்கு பிடித்து, பெற்றோர்களுக்கு சம்பந்தம் பிடித்து, திருமண வாழ்க்கை அமைவதற்குள் பிறந்த நாள் கண்டு விடும்.

மேற்கண்ட ஜாதக பொருத்தங்களில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பதை பார்ப்போம் அன்பர்களே !

1) நட்சத்திர பொருத்தம் :

 நட்சத்திர பொருத்தம் என்பது திருமண வாழ்க்கையை 100% சரியாக அமைத்து தருவதில்லை என்பது முற்றிலும் உண்மை, நட்சத்திர பொருத்தம் 11 பொருத்தம் அமைந்து திருமணம் செய்தவர்கள் வாழ்க்கையில் பிரிவு என்ற நிலைக்கு செல்வதற்கு காரணம் என்ன?  என்பதை அவர்களின் சுய ஜாதகத்தை ஆய்வு செய்தால் நிச்சயம் புரியும், மேலும் ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றாலும் கூட திருமணம் செய்யலாம் என்பது ஜோதிடதீபத்தின் கருத்து.

2) ராகு கேது தோஷம் :

 ராகு கேது எனும் இரண்டு கிரகங்களும் சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு எந்த பாவகத்தில் அமர்கின்றனர், அப்படி அமரும் ராகு கேது கிரகங்கள் ஜாதகருக்கு எவ்வித யோக அவயோக பலன்களை வழங்குகின்றனர் என்பதை முதலில் தெளிவாக கணிதம் செய்து பலன்களை நிர்ணயம் செய்வது அவசியம், மேலும் ராகு கேது கிரகங்கள் திருமண வாழ்க்கையில் எவ்வித தடைகளையும், சிரமங்களையும் தருவதில்லை என்பதே உண்மை, குறிப்பாக 2,7ல் அமர்ந்த ராகுவோ கேதுவோ 2,7ம் பாவகத்தை 100% பாதிப்பிற்கு உள்ளாக்கினால் மட்டுமே திருமண வாழ்க்கையில் சிரமங்களை ஏற்ப்படுத்துகிறது.

 மேலும் அப்படிபட்ட ஜாதகங்களை 2,7ம் பாவகங்கள் நல்ல நிலையில் இருக்கும் ஜாதகங்களுடன் இணைத்தால் மட்டுமே திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும் , 2,7ம் பாவகங்கள் இருவருக்கும் பதிக்கப்படுமாயின் திருமண  வாழ்க்கை எப்படி சிறப்பாக அமையும்? உதாரணமாக 2,7ம் பாவகங்கள் இருவருக்கு ராகு கேது கிரகங்களால் பாதிக்கப்படும் பொழுது, இந்த  இருவரின் ஜாதகத்தை இணைத்தால் ராகு கேது கிரகங்கள் எப்படி நன்மையை செய்யும்? தோஷம் உள்ள ஜாதகத்தை தோஷம் அற்ற ஜாதகத்துடன் இணைத்தால் தானே தோஷம் உள்ளவர் நன்மை பெறுவார்.

3) செவ்வாய் தோஷம் :

 செவ்வாய் பகவான் 2,4,7,8,12 ராசிகளில் இருந்தால் ஜாதகருக்கு தோஷத்தை தருவார் என்பதெல்லாம் முற்றிலும் தவறான கருத்தாகவே ஜோதிடதீபம் கருதுகிறது, ஒரு வேலை 2,7ம் பாவகங்களுக்கு அதிபதியாக செவ்வாய் இருந்து, அவர் தனது வீட்டிற்கு 2,6,8,12ம் ராசிகளில் மறைந்தாலோ , அல்லது பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றாலோ, ஜாதகருக்கு 2,7ம் பாவக வழியில் இருந்து இன்னல்களை தரக்கூடும் .

 4) ஏக திசை சந்திப்பு :

 இதை போன்ற ஒரு நகைசுவை வேறு எதுவும் இல்லை எனலாம், ஏனெனில் ஒருவருக்கு நடக்கும் திசை அவருக்கு எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்பது தெரியாமல் போகும் பொழுதே, ஏக திசை சந்திப்பு என்று ஜோதிடர்களும் குழம்பி, பொருத்தம் காண வந்தவர்களையும் குழப்புகின்றனர்,  உதாரணமாக வரன் வது இருவருக்கும் ஒரே திசை நடப்பில் இருந்தாலும், நடைபெறும் திசை நல்ல பாவகங்களின் தொடர்பை பெற்று பலனை தந்துகொண்டு இருக்கும் என்றால், சம்பந்தபட்ட இருவருக்கும் யோகத்தையே வழங்கும், ஒரு தீமையும் நடைபெறாது. ஆக ஒருவருக்கு நடைபெறும் திசை எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்பதில் தெளிவு பெற வேண்டியது ஜோதிடர்களே !

5) ஏழரை சனி :

 அன்பர்களே ஒருவருக்கு ஒரு தீய பலன்கள் நடைபெற்றால் அதற்க்கு காரணம் சனி பகவான்தான் என்று நிர்ணயம் செய்யும், மனப்பான்மை உள்ளதனால் இந்த குழப்பம் உருவாகிறது, ஏழரை சனிகாலத்தில் திருமணம் செய்த பல தம்பதியர் மிகவும் சிறப்பான மணவாழ்க்கையில் நடத்திக்கொண்டுதான் இருக்கின்றனர், ஆக ஏழரை சனிக்கும் திருமண வாழ்க்கைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை, மேலும் 2,7ல் சனி இருந்தால் திருமணம் இல்லை என்றும், திருமணம் தாமதமாகும் என்றும் நிர்ணயம் செய்வது முற்றிலும் தவறான ஜோதிட கணித முறையாகும்.

குறிப்பு :

 ஒருவரின் திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்வது 2,7ம் பாவகமே என்றால் அது மிகையில்லை, வரன் வது இருவரின் ஜாதகத்தில் 2,7ம் பாவகம் நல்ல நிலையில் இருந்தால் மேற்கண்ட விஷயங்கள் பற்றி   நாம் ஆய்வு செய்ய தேவையில்லை, அவர்களுக்கு துணிந்து திருமணம் செய்து வைக்கலாம், திருமண வாழ்க்கையில் மிகவும் சந்தோசமாக நடத்தி செல்வார்கள், பிரிவு என்பதே நிச்சயம் இல்லை எனலாம், மேலும் அவர்களின் சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் வலிமை பெற்று அமைந்தால் தம்பதியருக்கு உடனடியாக புத்திர சந்தானம் உண்டாகும்.

பொதுவாக திருமண பொருத்தம் காணும் பொழுது நட்சத்திர பொருத்தம் காண்பதை விட ( ஏனெனில் நட்சத்திர பொருத்தம் திருமண வாழ்க்கையில் 5% பலனை மட்டுமே தரும் ) ஜாதகங்களில் 12 பாவகங்களின் வலிமை உணர்ந்து திருமண பொருத்தம் காண்பது இல்லற வாழ்க்கைக்கு சிறப்பை சேர்க்கும், தாம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சி பொங்கும். மேற்கண்ட பொருத்தங்கள் இருந்தும் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையாமல் மணமுறிவை நோக்கி  செல்ல காரணம் ஜாதக பொருத்தம் இல்லாமல் இருப்பதே என்றால் அது மிகையல்ல.

 பாவகங்கள் வலிமையின் அடிப்படையில் திருமண பொருத்தம் காணும் முறையினை, நாம் அடுத்த பதிவில் உதாரணத்துடன் காண்போம் அன்பர்களே!

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 26 ஜூன், 2014

ராகு கேது பெயர்ச்சி சுய ஜாதகத்தில் இலக்கின ரீதியாக வழங்கும் நன்மைகள் ! - பகுதி 1





சாய கிரகமான ராகு கேது தற்பொழுது கால புருஷ தத்துவத்திற்கு 6ம் ராசியான கன்னியிலும் 12ம் ராசியான மீனத்திலும் பெயர்ச்சி பெறுகின்றனர், பெயர்ச்சி பெற்ற நாளில் இருந்து 18 மாதங்கள் மேற்க்கண்ட ராசிகளில் கேட்சர ரீதியான நன்மை தீமை பலன்களை ஒவ்வொரு அன்பர்களுக்கும் வாரி வழங்க காத்து இருக்கின்றனர், மேலும் சந்திரன் அமர்ந்த ராசியை அடிப்படையாக வைத்து ராகு கேது பெயர்ச்சி பலன்களை கணிதம் செய்வதை விட லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, பலன்களை நிர்ணயம் செய்வதே சால சிறந்தது, இதன் அடிப்படையில் ஒவ்வொரு லக்கினத்திற்கு ராகு கேது கிரகங்கள் எவ்வித யோக, அவயோக பலன்களை வழங்குகிறார்கள், என்பதை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே!

 1) மேஷ லக்கினம் :

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியான மேஷத்தை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி தரும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம் அன்பர்களே! ஜோதிடதீபம் ராகு கேது கிரகங்கள் பற்றி இதற்க்கு முன் பதிவு செய்த பதிவுகளில் ராகு கேது தான் அமரும் இடத்திற்கு உண்டான பலன்களை தானே ஏற்று நடத்தும் என்பதிற்கு இணங்க தற்பொழுது மேஷ லக்கினத்திற்கு ராகு 6ம் பாவகத்திலும், கேது 12ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்கின்றனர்.

6ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் ஜாதகருக்கு எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார், உடல் நல பாதிப்பை தந்த போதிலும் விரைவில் குணம் பெரும் யோகத்தை தருவார், எவ்வித தடையும் இன்றி அனைத்திலும் வெற்றியை  வாரி வழங்கும் தன்மையை ராகு இங்கு சஞ்சாரம் செய்யும் காலங்களில் ஜாதகருக்கு வழங்குகிறார், வழக்கு, பிரச்சனைகளில் இருந்து ஜாதகருக்கு  100% சாதகமான பலன்களை வாரி வழங்குகிறார், தன்னம்பிக்கை அதிகருக்கும், நல்ல வேலையாட்கள் அமைவார்கள், சொத்து சம்பந்தபட்ட வழக்குகளில் ஜாதகருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும், மேலும் ஒவ்வொரு மாதமும் ஜாதகருக்கு ஏதாவது ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பு வந்துகொண்டே இருக்கும் இதன் மூலம் ஜாதகருக்கு எதிர்பாராத பொருட் சேர்க்கை, தன சேர்க்கை கிடைத்து கொண்டே இருக்கும் புதன் கேந்திர அதிபதியாக வருவதால், ஜாதகருக்கு கன்னியில் சஞ்சாரம் செய்யம் 18 மாதங்களுக்கும் ராகு யோகத்தை தருகிறார்.

 12ல் சஞ்சாரம் கேது பகவான் ஜாதகருக்கு மன நிம்மதி என்ற அமைப்பில் இருந்து அதிக இனல்களை தரக்கூடும், தேவையற்ற விரையம், நிறைய செலவுகள், பங்கு சந்தை, முதலீடு செய்வதால் இழப்பு, அனைவராலும் தொல்லை தொந்தரவு, எதிர்பாராத விபத்து போன்ற இன்னல்கள் ஜாதகரை வெகுவாக பாதிக்கும், மற்றவர்களை நம்பி செய்யும் காரியங்கள் யாவும் தோல்வியை தர கூடும், தொலைதூர பயணங்களால் ஜாதகர் பதிப்புகளை சந்திக்க கூடும், மறைமுக எதிரிகளால் துன்பமும் தொல்லைகளும் ஏற்ப்பட வாய்ப்பு உண்டு, மருத்துவ செலவுகள் அதிகரிக்கும், நிம்மதியான உறக்கம் கிடைக்க ஜாதகர் வெகு பிரயத்தனம் செய்ய வேண்டி வரும், அலைச்சல் அதிகமாகும், ஜாதகராலும் ஜாதகரை சார்ந்தவர்களாலும் அதிக இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும்.

2) ரிஷப லக்கினம் :

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு இரண்டாம் ராசியான ரிஷபத்தை  லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி தரும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம் அன்பர்களே! ரிஷப லக்கினத்திற்கு 5ல் ராகுவும், 11ல் கேதுவும் இனி வரும் 18 மாதங்கள் சஞ்சாரம் செய்ய இருக்கின்றனர், இந்த 18 மாதங்களிலும் ரிஷப இலக்கின ஜாதகர்களுக்கு எவ்வித யோக அவயோக  பலன்களை வழங்க இருக்கின்றனர் என்பதை பார்ப்போம்.

 உண்மையில் இந்த ராகு கேது பெயர்ச்சி காலத்தில் 18 மாதங்களும் 100% யோகத்தை அனுபவிக்கும் அன்பர்கள் இந்த ரிஷப லக்கினத்தை சார்ந்தவர்களே என்றால் அது மிகையில்லை, ஏனெனில் 5ல் அமரும் ராகு ஜாதகருக்கு இறை அருளின் பரிபூரண நல்லாசிகளை வாரி வழங்குவதும், 11ல் அமரும் கேது மிகுந்த அதிர்ஷ்டங்களை வாரி வழங்குவதுமே காரணமாக அமையும், 5ல் அமரும் ராகு ஜாதகருக்கு நல்ல நினைவாற்றலையும், சிறந்த சிந்தனை ஆற்றலையும் வாரி வழங்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், உதவி செய்ய பலர் முன் வருவார்கள், எங்கு சென்றாலும் ஜாதகர் வெற்றி மேல் வெற்றியை பெரும் யோகத்தை தரும், விளையாட்டு துறையை சார்ந்தவர்கள் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெறுவார்கள்.

 கலை துறையை சார்ந்தவர்கள் அபரிவிதமான வளர்ச்சியை பெரும் யோக காலம் இது தன்னம்பிக்கை அதிகரிக்கும், இயல் இசை நாடக துறையை சார்ந்த ரிஷப இலக்கின அன்பர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து குவியும், பொருளாதார ரீதியாகவும், உலக புகழ் பெரும் யோகத்தையும் இந்த 18 மாதங்களில் ராகு பகவான் வாரி வழங்குவார் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை, குழந்தை பாக்கியம் அற்ற தம்பதிகளுக்கு புத்திர சந்தானம் உண்டாகும் , பங்கு சந்தை சார்ந்த தொழில்களில் இருப்பவர்கள் அபரிவிதமான வளர்ச்சியை பெரும் யோக காலம் இது, பாரம்பரிய தொழில்களில் செய்துவருபவர்கள் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெறுவாரகள், விவசாயம் செழித்து வளரும்.

 11ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் ஜாதகருக்கு 18 மாதங்களும் அதிர்ஷ்ட வாய்ப்புகளை வாரி வழங்குவார், எதிர்பாராத தனசேர்க்கை உண்டாகும், ஜாதகர் மன நிலை மிகவும் தெளிவாக இருக்கும், எடுக்கும் ஒவ்வொரு காரியம் யாவும் ஜாதகருக்கு சாதகமாக அமைந்து வெற்றி மேல் வெற்றி தரும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஜாதகர் மிகவும் சிறப்பாக இருப்பார், ஜாதகரின் நேர்மறை எண்ணங்கள் ஜாதகருக்கு வெற்றி வாய்ப்புகளை 100% வெற்றியை வாரி வழங்கும், எதிலும் லாபம், வியாபர விருத்தி, சுப விரையம், திருமண வாய்ப்பு கைகூடும் யோகம், செல்வசெழிப்பு, வருமுன் காப்பது, நினைத்த எண்ணம் ஈடேறும் வாய்ப்பு, தாம்பத்திய வாழ்க்கையில் முன்னேற்றம், கணவன் மனைவி நல்லுறவு, பொதுமக்கள் ஆதரவு என்ற வகையிலும், ஆன்மீக வெற்றி, தெய்வீகத்தால் லாபம் என்ற வகையிலும் ரிஷப இலக்கின அமைப்பை பெற்றவர்களுக்கு யோகத்தை வாரி வழங்கும்.

 குறிப்பு :

 அன்பர்களே மேற்கண்ட யோக அவயோக பலன்கள் யாவும், சுய ஜாதகத்தில் மேஷ லக்கினத்திற்கு தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம், மேஷ லக்கினத்திற்கு 6,12ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், இதை போன்றே யோக அவயோக பலன்கள் யாவும், சுய ஜாதகத்தில் ரிஷப லக்கினத்திற்கு தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம், 5,11ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒரு வேலை தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம் மேற்கண்ட பாவாக பலன்களை நடத்த வில்லை எனில் மேற்கண்ட யோக அவயோக பலன்கள் யாவும் நடைபெறாது என்பதை நினைவில் நிறுத்தவும்.

 மேலும் சுய ஜாதகரீதியாக லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை அடிப்படையாக கொண்டு ராகு கேது பெயர்ச்சி பலன்களை நிர்ணயம் செய்வது, ஜாதக பலன்களை மிகவும் துல்லியமாக கணிதம் செய்ய உதவி புரியும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 22 ஜூன், 2014

திருமண வாழ்க்கை தாமதமாக காரணம் ஏன்? சிறப்பாக விரைவில் திருமணம் நடைபெற பரிகாரம் என்ன ?




சுய ஜாதக ரீதியாக ஒருவருக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடும், களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் பாவகமும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகும் பொழுது மட்டுமே திருமணம் தாமதமாகின்றது அல்லது திருமணம் நடைபெறாமலே ஜாதகர் சிரமத்திற்கு உள்ளாகும் சூழ்நிலை தருகின்றது, அதாவது சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் 6,8,12ம் பாவக்த்துடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ தொடர்பு பெரும் பொழுது ஜாதகரின் திருமண வாழ்க்கை கேள்விக்குரியதாக மாறிவிட வாய்ப்பு அதிகம், மேலும் திருமணத்திற்காக ஜாதகர் எடுக்கும் முயற்சிகள் யாவும் தோல்வி மேல் தோல்வியை தந்து ஜாதகரை கலங்கடிக்கும்.

உதாரணமாக :



 மேற்கண்ட மகர இலக்கின ஜாதகருக்கு குடும்ப ஸ்தானம் என்று அழைக்க பெரும் 2ம் வீடும், களத்திர ஸ்தானம் என்று அழைக்க பெரும் 7ம் வீடும் முறையே, விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தமும், பாதக ஸ்தானமான 11ம் பாகத்துடன் சம்பந்தமும் பெறுவது ஜாதக ரீதியான அதிக இன்னல்களை வாரி வழங்கும், 2ம் வீடு ஜாதகருக்கு விரைய ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று குடும்ப வாழ்கையை அமைத்து தர தடை செய்கிறது, 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று திருமண வாழ்க்கை அமைவதை கேள்விக்குறியாக மாற்றுகிறது.

 மேலும் ஜாதகருக்கு தற்பொழுது 35 வயது ஆகிறது இதுவரை ஜாதகருக்கு பார்த்த வது அனைத்தும் ஏதாவது ஒரு வகையில் தட்டி சென்று கொண்டே இருக்கிறது, ஜாதகரும் செய்யாத பாரிகாரம் கிடையாது, செல்லாத கோவில் கிடையாது எனலாம், ஜோதிடர்கள் சொல்லும் அனைத்து பரிகாரங்களையும் ஜாதகர் செய்தும் கூட ஜாதகருக்கு திருமண வாழ்க்கை கைகூடி வரவில்லை   இதற்க்கு என்ன காரணம் என்பதை இந்த பதிவில் ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே !

 சுய ஜாதகத்தில் குடும்பம் எனும் 2ம் வீடு பதிக்கபட்டும், களத்திரம் எனும் 7ம் பாவகம் பாதிக்கபட்டும் இருந்த போதிலும், ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் திசை மற்றும் புத்தி மேற்கண்ட பாவகத்தின் பலனை தராமல் இருந்திருந்தால் ஜாதகருக்கு ஏதாவது ஒரு வகையில் திருமணம் நடந்திருக்க வாய்ப்பு உண்டு ஆனால் தற்பொழுது நடைபெறும் குரு திசை ( 10/04/2001 முதல் 10/04/2017 வரை ) 1,7 ம் வீடுகள் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவதும், குரு திசையில் தற்பொழுது நடைபெறும் செவ்வாய் புத்தி (10/12/2013 முதல் 16/11/2014 வரை ) 2,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவதும் ஜாதகரின் திருமண வாழ்க்கைக்கு வரும் தடைகளுக்கு மிக முக்கிய காரணமாக கருதலாம், சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் பாதிக்க பட்டு தற்பொழுது நடைபெறும் திசை புத்தி அந்த பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகரின் திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றுகிறது.

 ஜாதகர் செய்த பரிகாரங்கள் பலன் தராமல் போவதற்கு காரணம் என்ன ? சுய ஜாதகத்தில்  11ம் பாவகத்திற்க்கு அதிபதியாக வரும் கேது பகவானும், 12ம் பாவகத்திற்க்கு அதிபதியாக வரும் சந்திர பகவனும் சேர்ந்தே ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து அதிக தீமைகளை செய்கின்றனர், மேலும் சுய ஜாதகத்தில் கேது சந்திரன் மட்டுமே மிகவும் கடுமையாக பாதிக்க பட்டு உள்ளனர், எனவே  ஜாதகர் செய்த பரிகாரங்கள் யாவும் மேற்கண்ட கிரகங்களுக்கு உண்டானதாக இருந்திருக்க வாய்ப்பு இல்லை, எனவேதான் ஜாதகருக்கு பரிகாரங்கள் சரியான பலனை தரவில்லை.

பரிகாரம் :

 கேது பாதிக்க படும்பொழுது ஜாதகர் தனது சுய ஜாதகத்திற்கு, கால புருஷ தத்துவ அமைப்பில் எந்த பாவகதிர்க்கு தொடர்பு பெறுகிறார் என்பதை நன்கு கவனித்து அதற்க்கு உண்டான பிரிதி பரிகாரங்களை தனது லக்கினத்திற்கு 1,4,7,10 ம் வீடுகள் வலிமை பெற்று இருக்கும் நாழிகைகளில் நிவர்த்தி செய்துகொள்வது உடனடி விரைவான பலனை தரும்.

 சந்திரன் பாதிக்க படும் பொழுது கால புருஷ தத்துவ அமைப்பில் எந்த பாவகதிர்க்கு தொடர்பு பெறுகிறார் என்பதை நன்கு கவனித்து அதற்க்கு உண்டான பிரிதி பரிகாரங்களை தனது லக்கினத்திற்கு 1,5,9ம் வீடுகள் வலிமை பெற்று இருக்கும் நாழிகைகளில் நிவர்த்தி செய்துகொள்வது உடனடி விரைவான பலனை தரும்.

 எனவே ஜாதகர் செய்த பரிகாரங்கள் யாவும் சரியான பலனை தர இயலாமல் போனதற்கு ஜாதக அமைப்பில் பாதிக்க பட்ட பாவகங்கள் எவை எவை என்பதனை தெளிவாக உணராமல், பதிக்க பட்ட கிரகங்களுக்கு செய்யாமல் நல்ல நிலையில் இருக்கும் கிரகங்களுக்கு செய்ததின் காரணமாகவே பலன் தரவில்லை என்பது மட்டும் உண்மை.

 தனது சுய ஜாதக ரீதியாக பாதிக்க பட்ட கிரகம் எதுவென்று உணர்ந்து சம்பந்த பட்ட  கிரகங்களுக்கு முறையான பிரிதி பரிகாரங்களை மேற்கொள்ளும் பொழுது ஜாதகர் எவ்வித கிரக பாவக பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தாலும் அதில் இருந்து வெகு விரைவாக மீண்டு வந்து, சம்பந்த பட்ட கிரக அமைப்பில் இருந்தும், பாவக அமைப்பில் இருந்தும் மிகுந்த நன்மையையும் யோகத்தையும் 100%  பெறுவார் என்பது மட்டும் உறுதி.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


வியாழன், 19 ஜூன், 2014

குரு பெயர்ச்சியும் யோக வாழ்க்கையும் !




வணக்கம் அன்பர்களே !

 பிரகஸ்பதி என்று தேவர்களால் அழைக்க பெரும் குருபகவான் இன்று கால புருஷ தத்துவத்திற்கு 3ம் ராசியான, மிதுன ராசியில் இருந்து  கால புருஷ தத்துவத்திற்கு 4ம் ராசியான கடகத்திற்கு பெயர்ச்சி ஆகிறார், இனிவரும் ஒரு  வருட காலம் சர நீர் ராசியில் அமர்ந்து தனது 5ம் பார்வையாக விருச்சிகத்தையும், 7ம் பார்வையாக மகரத்தையும், 9ம் பார்வையாக மீனத்தையும் வசீகரித்து, தான் அமர்ந்த இடத்தில் இருந்து எவ்வித யோக பலன்களை வழங்குகிறார் என்பதை இன்று ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !




கடகத்தில் அமர்ந்த குரு தரும் பலன்கள் :

 கால புருஷ தத்துவத்திற்கு 4ம் ராசியான கடகத்தில் குருபகவான் பயணம் செய்யும் காலம் முழுவதும் மிகுந்த சிறப்பான நன்மைகளையே தருவார் என்பது உறுதியாகிறது, மேலும் சந்திரன் என்பவர் குருவின் வர்க்கத்தை சார்ந்தவர் என்பதாலும், இருவரும் ஒரே வர்க்கத்தின் அடிப்படையில் வருபவர்கள் என்பதாலும் ராஜயோக பலன்கள் மக்களுக்கு மிகுதியாக கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை, மேலும் கடகம் சர நீர் ராசியாக இருப்பதால் மக்களுக்கு மனதில் நல்ல எண்ணங்களும், சிறந்த சிந்தனைகளும் அதிகரிக்கும், ஆன்மீக வாழ்க்கையில் அதிக அளவில் மக்களின் சிந்தனை செல்லும், இறை அருளின் கருணை அனைவருக்கும் பரிபூர்ணமாக கிடைக்கும்.

 கால புருஷ தத்துவத்திற்கு நான்காம் வீடு என்பதால், அனைத்து தரப்பு மக்களுக்கும் சுகமான வாழ்க்கையும், நல்ல இருப்பிடமும் வசதி மிக்க வீடு, வண்டி வாகனமும்  மிக எளிதில் அமையும், மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும், நாட்டில் மழையின் அளவு அதிகரித்து நாடு செழித்து ஓங்கும், விவசாயம் நன்கு செழித்து வளரும், உணவு பொருட்கள் விலை குறைந்து மக்கள் நலம் பெறுவார்கள், குறிப்பாக கட்டிடம் மற்றும் கட்டிடம் சார்ந்த தொழில்கள் மிகப்பெரிய அளவில் பிரகாசிக்கும், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை அதிகரிக்கும், வண்டிவாகன தொழில், ஆடை ஆபரண தொழில்கள் மிகப்பெரிய முன்னேற்றத்தை சந்திக்கும், ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள் வளர்ச்சி பெரும் கடகத்தில் அமர்ந்த குரு அனைவருக்கும் வளமான வாழ்க்கையை தருவார், குறிப்பாக கல்வி துறை சிறந்து விளங்கும்.

5ம் பார்வையாக விருச்சிகத்தை வசீகரிக்கும் குரு தரும் பலன்கள் :

 கால புருஷ தத்துவத்திற்கு 8ம் ராசியான விருச்சிகத்தை 5ம் பார்வையாக வசீகரிக்கும் குரு பகவன், மக்களுக்கு திடீர் தான பிரப்தியை தரக்கூடும், விருச்சிகம் ஸ்திர நீர் ராசியாக அமைவது மக்களுக்கு குழப்பமற்ற ஸ்திரமான மன நிலையை தரும், ஸ்திரமான நம்பிக்கையும், எண்ணங்களும் மக்களுக்கு சகல நன்மைகளையும் வாரி வழங்கும் எதிர்பாராத வகையில் என்றால் அது மிகையில்லை, குறிப்பாக வாழ்க்கை துணை வழியில் இருந்து அனைவரும் மிகுந்த நன்மைகளை பெறுவார்கள், மழை அளவு மிகுதியாகி நாட்டில் விவசாயம் செழித்து வளரும், இன்சூரன்ஸ் துறை எதிர்பாராத வளர்ச்சியை பெரும், வங்கி மற்றும் பைனான்ஸ் துறையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்ப்பட அதிக வாய்ப்பு உண்டு.

  கால புருஷ தத்துவத்திற்கு எட்டம் வீடு என்பதால், மன வாழ்க்கையில் பிரிவை நோக்கி சென்று கொண்டு இருந்த தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்ட வாழ்க்கையில் ஒன்று இணைந்து தமது வாழ்க்கையை சிறப்பாக வாழும் தன்மையை பெறுவார்கள், சமுதாயத்தில் காவல் துறை மற்றும் நீதி துறை மிகவும் சிறப்பு பெரும், மக்கள் வெகு விரைவில் சகல நலன்களையும் பெறுவார்கள், மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் தங்கு தடையின்றி கிடைக்கும், வெளிநாடுகளில் இருந்து மிகப்பெரிய நன்மைகள் மக்களுக்கு கிடைக்கும், உடல் நல குறைவால் இதுவரை பாதிக்க பட்டு இருந்த அனைவரும் வெகு விரைவில் உடல் நலம் பெறுவார்கள், குருவும் செவ்வாயும் ஒரே வர்க்கத்தை சார்ந்தவர்கள் என்பதால் யோக பலன்கள் மிகுதியாகவே இந்த குரு பெயர்ச்சி வாரி வழங்கும்.

7ம் பார்வையாக மகரத்தை வசீகரிக்கும் குரு தரும் பலன்கள் :

 கால புருஷ தத்துவத்திற்கு 10ம் வீடாகவும் சர மண் தத்துவ ராசியான மகரத்தை, 7ம் பார்வையாக வசீகரிக்கும் குருபகவான் சிலருக்கு ஜீவன ரீதியான தொந்தரவுகளை தர கூடும், சிறுதொழில்கள் செழித்து ஓங்கும் ஆனால் பெரிய அளவில் தொழில் செய்பவர்கள் சற்றே பாதிக்கும் சூழ்நிலை தர கூடும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில்களை செய்பவர்கள் மிகுந்த லாபம் அடைவார்கள், அடிமை தொழில் செய்யும் அனைவருக்கும் இது ஒரு பொற்காலமாக கருதலாம், விவசாயம் சார்ந்த தொழில்களும் சிறு விவசாயிகளும் மிகப்பெரிய வளர்ச்சியை பெறுவார்கள், இரும்பு சார்ந்த தொழில்கள் சற்றே பின்னடைவை சந்திக்க கூடும், தங்கம் வெள்ளி போன்ற உலோகங்கள் விலை குறைய அதிக வாய்ப்பு உண்டு.

 கால புருஷ தத்துவத்திற்கு பத்தாம் வீடு என்பதால், நீதி நேர்மை மேலோங்கும், அரசியலில் மிகப்பெரிய மாற்றம் மற்றும் நிர்வாக திறன் வலிமை பெரும், உலக அரங்கில் பாரதத்தின் புகழ் பெருமைபடுத்த படும், அடிப்படையில் சிறு தொழில் செய்யும் அன்பர்களின் வாழ்கை தரம் வெகுவாக உயரும், பெண்களுக்கு கௌரவமும், அந்தஸ்தும் உண்டாகும், நினைத்த காரியங்கள் யாவும் பலிதம் பெரும், குழந்தைகளின் வாழ்க்கை மிகவும் செழிக்கும் கல்வியில் புதுமைகள் பல ஏற்ப்பட வாய்ப்பு உண்டு, மண்ணிற்கு கிழ் கிடைக்கும் பொருட்கள் யாவும் சற்று விலை குறைய வாய்ப்பு அதிகம், இதுவரை திருமணம் கைகூடாத அனைவருக்கும் திருமண வாழ்க்கை இந்த குரு பெயச்சி காலத்தில் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெறும், குருபகவானும் சனிபகவானும் வேறு வேறு வர்க்கம் என்பதால் நன்மையான பலன்கள் சற்றே குறைய வாய்ப்பு உண்டு.

9ம் பார்வையாக மீனத்தை வசீகரிக்கும் குரு தரும் பலன்கள் :

 கால புருஷ தத்துவத்திற்கு 12ம் வீடாகவும் உபய நீர் ராசியான  மீனத்தை 9ம் பார்வையாக ( தனது வீட்டை தானே ) வசீகரிக்கும் குருபகவான் மக்கள் அனைவருக்கும் நல்ல மன நிம்மதியையும், குழப்பமற்ற மனநிலையையும், குடும்ப வாழ்க்கையில் மன மகிழ்வினையும், ஆன்மீக வாழ்க்கையில் உள்ளோருக்கு சாந்தியையும் சமாதானத்தையும் ஏற்ப்படுத்துவார், குற்ற செயல்கள் குறைந்து மக்கள் மன நிம்மதி பெறுவார்கள், தீய பழக்க வழக்கத்திற்கு ஆளான பலர் மனம் திருந்த நல்ல வாய்ப்புகளை வாரி வழங்குவார், மனதில் உள்ள குறைகள் யாவும் தீர்ந்து மக்கள் சந்தோஷமான வாழ்க்கை சிறப்பாக வாழ்வார்கள், ஆன்மீகம் செழித்து வளரும், அறியாமை எனும் இருள் விலகி இறை அருள் என்ற வெளிச்சம் பெருகும், அயன சயன சுகம் மக்களுக்கு சிறப்பாக கிடைக்கும், ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபடுவோர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் அதிகரிக்கும், கோவில் வழிபாடுகள்  சிறப்பு பெரும், பழைய புராதன கோவில்கள் எழுச்சி காணும்.

 கால புருஷ தத்துவத்திற்கு 12ம் வீடு என்பதால், மக்கள் மனதில் அச்சம் குறைந்து , தைரியம் மேலோங்கும், திடீர் தான வரவு, புதையல்கள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம், மக்களுக்கு ஆன்மீக நாட்டமும், இறை நிலை உணர்வும் அதிகரிக்கும், போலிகள் மறைந்து உண்மை உயிர் பெரும், வெளிநாடுகளில் வேலை செய்பவர்களின் வாழ்க்கையில் சிறந்த நன்மைகளை பெரும் காலம் இது, குறிப்பாக ஆன்மீக பெரியோர்கள் மக்களை நல்வழி படுத்துவார்கள், யோகம் மற்றும் கலைகள் செழித்து ஓங்கும், இயல், இசை, நாடக துறைகள் அபரிவிதமான வளர்ச்சியை பெரும், மக்களின் மனதில் சந்தோசம் அதிகரிக்கும், தேவையற்ற மன கவலைகள் குழப்பங்கள் நீங்கி மக்கள் அனைவரும் அறிவில் விழிப்பு நிலை பெறுவார்கள்.

குறிப்பு :

கடகத்தில் பெயர்ச்சி பெற்று தனது பயணத்தை தொடர்ந்து இருக்கும் குரு பகவான் பொதுவாக அனைவருக்கும் 90% நன்மையையே தருவார், இருப்பினும் குரு பெயர்ச்சி பலன்களை ராசியை அடிப்படையாக  வைத்து காண்பதை விட, பிறந்த லக்கினத்தின் அடிப்படையில் , தற்பொழுது நடைபெறும் திசை மற்றும் புத்தி வழங்கும் பாவகத்தின் பலன்கள் வழியில் குரு எவ்வித தொடர்பை பெறுகிறார்,  என்பதை கொண்டு சுய  ஜாதக பலன்களை துல்லியமாக கணிதம் செய்து காண்பதே சரியானது. இதுவே ஜாதக பலனையும், குரு பெயர்ச்சி பலனையும், துல்லியமாக சொல்வதற்கு ஏதுவாக அமையும் .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

பெண்களின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் பாதிக்கப்பட்டால், ஜாதகி களத்திர ஸ்தான வழியில் இருந்து அனுபவிக்கும் இன்னல்கள் !

  


 பொதுவாக பெண்களின் சுய ஜாதகத்தில் வாழ்க்கை துணையை குறிக்கும் களத்திர ஸ்தானம் 6,8,12ம் பாவகத்துடனோ,  பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு கடுமையான பதிப்பை தரும், குறிப்பாக திருமண வாழ்க்கை அமைவதர்க்கே அதிக கால தாமதத்தை எடுத்து கொள்ளும், அல்லது தனது விருப்ப பிரகாரம் பெற்றோர் அனுமதியின்றி திருமண வாழ்க்கையை ஜாதகியே அமைத்துகொள்ளும் சூழ்நிலையை  உருவாக்கும், ஜாதகி தனது விருப்பபடி அமைத்து கொள்ளும் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க இயலுமா? என்றால் அதுவும் கேள்வி குறியே !

  மேலும் களத்திர ஸ்தானம் பாதிக்க பட்ட ஜாதகி 25 வயதிற்கு முன்பு  அமையும் திருமண வாழ்க்கை, வாழ்க்கை துணை வழியில் அதிக இன்னல்களை அனுபவித்து இறுதியில் இருவருக்கும் மனமுறிவே சரியானது என்று முடிவெடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளபடுவார், களத்திர ஸ்தானம் பாதிக்கபட்ட ஜாதகி எக்காரணத்தை கொண்டும், திருமண வாழ்க்கை பற்றி தானாக முடிவெடுப்பது இறுதியில் துன்பத்திலேயே கொண்டு விடும் என்பது மட்டும் நிச்சயம், திருமண வாழ்க்கை பற்றி இவர்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் இறுதியில் இவர்களுக்கும் துன்பத்தையும், இவர்களை சார்ந்தவர்களுக்கும் துன்பத்தையே தரும் என்பதும் மட்டும் உறுதி.

உதாரணமாக :




  மேற்கண்ட தனுசு  இலக்கின ஜாதகிக்கு 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், தற்பொழுது நடைபெறும் சனி திசை சுக்கிரன் புத்தி ( 24/01/2013 முதல் 25/03/2016 வரை ) 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தந்து கொண்டு இருப்பது ஜாதகிக்கு திருமண தடையை அதிக அளவிலேயே தரும், ஜாதகிக்கு திருமணம் சம்பந்தபட்ட விஷயங்களில் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பெரிய அளவில் பின்னடைவையே தரும், மேலும் லக்கினம் எனும் முதல் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகியே  தனக்கு வரும் வரன்களை தட்டி கழிப்பார், தனக்கு உகந்த வரன் இதுவல்ல என்ற எண்ணத்திலேயே, பெரியவர்களின் பேச்சை கேட்காமல் தனக்கு அமையும் திருமணம் வாழ்க்கை தானே உதறி தள்ளுவார்.

7ம் வீடு பதாக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகின் நண்பர்கள் அல்லது உறவினர்களால் ஏதாவது ஒரு வகையில், இவரது திருமணம் அமையாமல் கால தாமத்தை ஏற்ப்படுத்துவார்கள், ஆக ஜாதகியின் உறவினர்களும், நண்பர்களும் ஜாதகிக்கு அமைய இருக்கும் திருமணத்தை ஏதாவது  ஒருவகையில் தடுத்து நிறுத்துவார்கள், எனவே இந்த காலகட்டத்தில் வயதான பெரியோர்களின் நல்லாசியும், ஆன்மீக பெரியோர்களின் நல்லாசியும், ஜாதகியின் திருமண வாழ்க்கையில் ஏற்ப்படும் தடைகளை தகர்த்து, இனிமையான திருமண வாழ்க்கையை அமைத்து தரும்.

குறிப்பு :

 எந்த ஒரு ஜாதகத்திலும் களத்திர ஸ்தானம் பாதிக்க பட்டு இருப்பின், அந்த ஜாதகருக்கு அமையும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் எக்காரணத்தை கொண்டும், குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் பாதிக்க படாமல்  இருப்பதும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் பாதிக்க படாமல் இருப்பதும், களத்திர ஸ்தானம் பாதிக்கபட்ட ஜாதகருக்கு மிகுந்த நன்மையை தரும், ஒரு வேலை அவருக்கு அமையும் வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் களத்திர ஸ்தானம் பாதிக்கபட்டு இருப்பின் திருமண வாழ்க்கை விரைவில் மணமுறிவுக்கு வழி வகுத்துவிடும்.
  
வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


புதன், 18 ஜூன், 2014

சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் பாவகங்கள் வழியில் இருந்து ஜாதகர் அடையும் இன்னல்கள் !





 சுய ஜாதகத்தில் 12 பாவகங்களில் எந்த ஒரு பாவகமும், பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் வாழ்க்கையில் சம்பந்தம் பெரும் பாவக வழியில் இருந்து 200% இன்னல்களை அனுபவிக்க வைத்துவிடும், சர லக்கினத்திற்கு 11ம் பாவகம் பாதக ஸ்தானமாகவும், ஸ்திர லக்கினத்திற்கு 9ம் பாவகம் பாதக ஸ்தானமாகவும், உபய லக்கினத்திற்கு 7ம் பாவகம் பாதக ஸ்தானமாகவும், இறை அருளின் கருணையினால் காலபுருஷ தத்துவத்தின் படி வகுக்கபட்டு இருக்கின்றது.

உதாரணமாக : 

 துலாம் ராசியை ( சரம் ) லக்கினமாக கொண்ட ஜாதகருக்கு, பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெரும் வீடுகள் வழியில் இருந்து ஜாதகர் அனுபவிக்கும் இன்னல்கள் பற்றி இந்த பதிவில் ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !




 மேற்கண்ட துலாம் இலக்கின ஜாதகருக்கு 1,5,7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது 1,5,7,11ம் பாவக வழியில் இருந்து 200% இன்னல்களை அனுபவிக்க வைக்கும், இதில் வருந்த தக்க விஷயம் என்னவென்றால் தற்பொழுது நடைபெறும் சூரியன் திசை ( 06/07/2011 முதல் 05/07/2017 வரை ) 1,5,7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனை தருவது, ஜாதகரை 1,5,7,11ம் பாவக வழியில் அதிக துன்பத்திற்கும் இன்னல்களுக்கும் ஆட்படுத்தும்.

 1ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது : 

  ஜாதகர் சிறு வயதில் இருந்து  நல்ல வளரும் சூழ்நிலையை அமையாது, உடல் நிலை மன நிலை இரண்டும் வெகுவாக பாதிக்கபடும், குறிப்பாக ஜாதகர் பித்தம் சம்பந்த பட்ட பிணிகளால் அடிக்கடி பாதிப்பிற்கு உள்ளாகும் தன்மையை தரும், ஜாதகரின் எண்ணங்கள் யாவும் எதிர்மறையாக அமையும், தன்னம்பிக்கை வெகுவாக குறையும் மனோ ரீதியான பிரச்சனைகளுக்கு  தீர்வு காண முடியாமல் தனது மனம் சொன்ன படி செயல்பட்டு, தனது உடலையும் அறிவையும் தானே கெடுத்து கொண்டு, தன்னை சார்ந்தவர்களுக்கும் துன்பத்தை தருவார், மேலும் ஜாதகர் சுயமாக முடிவு எடுக்க இயலாமல் மற்றவரின் கட்டு பாட்டிலேயே இயங்கும் சூழ்நிலையை தரும், எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேற வாய்ப்பு மிக மிக குறைவு.

5ம் வீடு  பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது : 

 முதலில் ஜாதகரை தனது பூர்வீகத்தில் இருந்து வெளியேற்றிவிடும், பரதேச ஜீவன வாழ்க்கையை மேற்கொள்ளும் நிலையை தரும், தனது பரம்பரை வழி அறிவாற்றலையும் சிந்தனை திறனையும்  இழந்து சிரமமான வாழ்க்கையை மேற்கொள்ளும் தன்மையை தரும், முரண்பட்ட கருத்துக்களால் குடும்பத்தில் குழப்பமும் சச்சரவும் அதிகரிக்கும், குல தேவதையின் சாபத்திற்கு ஆளாகி பல  இன்னல்களை ஜாதகர் அனுபவிக்கும் நிலையை தரும், ஜாதகருக்கு உதவி செய்ய எவரும் அற்ற சூழ்நிலையை தரும், அடிப்படையில் தனது அறிவாற்றலை எவ்விதத்திலும் பயன்படுத்த இயலாத சூழ்நிலையை தரும், உறவுகள் மற்றும் நண்பர்களிடம் பகைத்துகொள்ளும் சூழ்நிலையை ஏற்ப்படுத்தும்.

7ம் வீடு  பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது : 

 ஜாதகரின் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும், ஆண்களாக இருப்பின் தாமத திருமணம் அல்லது இருதார யோகம் என்ற நிலைக்கு தள்ளிவிடும், பெண்களாக இருப்பின் கணவனை இழந்து தவிக்கும் சூழ்நிலையை தரும் அல்லது கணவனுடன் சேர்ந்து வாழும் வாய்ப்பை தட்டி பறிக்கும், ஜாதகரின் நண்பர்கள் அனைவரும் ஜாதகரை ஏதாவது ஒரு வகையில் ஏமாற்றி கொண்டே இருப்பார்கள்.

 ஜாதகருக்கு கூட்டு தொழில் மற்றும் கூட்டு முயற்ச்சி என்பது எந்த ஒரு சூழ்நிலையிலும் நன்மையை தராது, ஜாதகரின் வெளி வட்டார பழக்க வழக்கங்கள் யாவும் ஜாதகருக்கு துன்பத்தையே தரும், அரசியலில் ஈடுபட்டால் ஜாதகர் அனைத்தையும் இழந்து  நடுத்தெருவில் நிற்கும் சூழ்நிலையை தரும், வெளிநாடு சென்று ஜாதகர் ஜீவனம் செய்வது மிகப்பெரிய இழப்பினையே தரும், தன்னம்பிக்கை வெகுவாக குறையும்.

 11ம் வீடு  பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது : 

 ஜாதகர்  தனக்கு வரும் வாய்ப்புகளையும், அதிர்ஷ்டங்களையும் உதறி தள்ளும் சூழ்நிலையை தரும், எடுக்கும் முயற்சிகள் யாவும் தோல்வி மேல் தோல்வியே தரும், ஜாதகர் பிற்போக்கு சிந்தனை மற்றும் முயற்ச்சி இன்மையால் வாழ்க்கையை சிறப்பாக வாழும் வாய்ப்பை தவரவிடுவார், லாட்டரி, சூது, பங்கு சந்தை, யூக வணிகம் போன்றவற்றில் இறங்கினால் ஜாதகர் அனைத்தையும் இழந்து வாடும் சூழ்நிலையை தரும், ஜாதகர் அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை நம்புவது சால சிறந்தது, தன்னை விட வயதில் மூத்தவர்களின் அறிவுரையை ஏற்று வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியம்.

நடை பெரும் திசை பாதக ஸ்தான பலனை தரும் பொழுது ஜாதகர் செய்ய வேண்டியவைகள் :

தற்பொழுது நடை பெரும் சூரியன் திசை ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை தரும் என்பதால், 1) ஜாதகர் இலக்கின பாவக வழியில் சுய கட்டுப்பாட்டையும், ஒழுக்கத்தையும் கடைபிடிப்பதும், உடல்நலனில் அக்கறை எடுத்து கொள்வதும் அதிக நன்மையை தரும், 2) 5ம் பாவக வழியில் இருந்து குல தெய்வ வழிபாட்டினை முறையாக செய்வது சகல  நலன்களையும் தரும், ஆன்மீக குருவிடம் முறையாக தீட்சை பெறுவது சிறந்த நன்மைகளை வாரி வழங்கும்.

 3) 7ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் கூட்டு முயற்ச்சியில் ஈடுபடாமல் தனித்து இயங்குவதும், பொது காரியங்களில் ஈடுபடாமல் இருப்பதும், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் இன்னல்களை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு நன்மையை செய்து 7ம் பாவக வழியில் இருந்து ஜாதகரை மீட்டு எடுக்கும், 4) 11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அதிர்ஷ்ட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்வதும், சூது, பங்கு வர்த்தகம், யூக வணிகத்தில் ஈடுபடாமல் இருப்பது சகல நிலைகளில் இருந்தும் நன்மையை வாரி வழங்கும்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


வெள்ளி, 6 ஜூன், 2014

சுய ஜாதக ரீதியாக நவ கிரகங்களின் வலிமை மற்றும் வலிமை அற்ற தன்மையை அறிந்துகொள்வது எப்படி ?


 பொதுவாக ஒருவருடைய ஜாதகத்தில் நவகிரங்கங்களின் வலிமையை பாரம்பரிய ஜோதிட முறையில் அமர்ந்த இடத்தை வைத்தும், அமர்ந்த இடத்தில் பெற்ற நிலையை ( ஆட்சி,உச்சம்,சமம்,நட்பு,பகை,நீசம் ) வைத்துமே நிர்ணயம் செய்கின்றனர், மேலும் லக்கினம் எதுவென்றாலும் நவகிரங்கள் ஆட்சி,உச்சம்,சமம்,நட்பு என்ற நிலையில் இருப்பின் நன்மையை செய்யும் என்றும், பகை, நீசம் என்ற நிலையில் இருப்பின் தீமையை செய்யும் என்றும், லக்கினத்தில் இருந்து 6,8,12ம் பாவகங்களில் இருந்தால், தீமையான பலன்களையே செய்யும் என்ற கோணத்திலேயே ஜோதிடர்களின் கருத்து அமைந்திருக்கிறது, இதன் உண்மை நிலையை பற்றிய சிந்தனையை இந்த பதிவில் ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே!

 ஒருவருடைய சுய  ஜாதகதம் கணிதம் செய்யும் பொழுது உயிர் உடலாகி லக்கினம் என்ற முதல் பாவகத்தை அடிப்படையாக கொண்டே மற்ற பாவகங்கள் இயங்குகிறது, லக்கினம் என்பது ஒரு ஜாதகத்திற்கு மிக முக்கியமான ஒரு அங்கமாக கருத வேண்டும் ஏனெனில் இதன்  அடிப்படையிலேயே மற்ற பாவகன்களின் தன்மையை உணர இயலும், மேலும் எந்த எந்த பாவகங்களில் நவ கிரகங்கள் அமர்ந்து ஜாதகருக்கு யோக அவயோக பலன்களை நவ கிரகங்களின் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்களில் வழங்குகிறார்கள் என்று தெரிந்து கொள்ள இயலும், மேலும் திசை புத்திகள் வழங்கும் பலன்கள் கோட்சார ரீதியான தொடர்பில் எவ்வித நன்மை தீமை செய்கிறது என்பதை இணைத்து துல்லியமான ஜாதக பலன்களை தெளிவாக ஒரு ஜாதகத்திற்கு பலன் நிர்ணயம் செய்துவிட முடியும்.

 பொதுவாக கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ( மேஷம் முதல் மீனம் வரை ) 12 ராசிகளில் நவகிரகங்கள் ஆட்சி,உச்சம்,சமம்,நட்பு,பகை,நீசம் என்ற நிலையை பெறுகின்றனர், இந்த காலபுருஷ தத்துவ அமைப்பில் கிரகங்கள் பெரும் வலிமையை அடிப்படையாக கொண்டு சுய ஜாதகத்திற்கு பலன் நிர்ணயம் செய்வது உண்மைக்கு மாறான பலன்களை நிர்ணயம் செய்யவே வழிவகுக்கும், மேலும் சுய ஜாதகத்தை இது எவ்விதத்திலும் கட்டுபடுத்த இயலாது என்பதே உண்மை, சுய ஜாதக பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது லக்கினத்தை அடிப்படையாக கொண்டு ( லக்கினம் ஆரம்பிக்கும் பாகை மற்றும் மற்ற பாவகங்கள் ஆரம்பிக்கும் பாகை ) பலன் நிர்ணயம் செய்யும் பொழுதே ஜாதகத்திற்கு நவகிரகங்கள் வழங்கும் யோக அவயோக பலன்களை தெளிவாக உணர இயலும்.

உதாரணமாக :



மேற்கண்ட கன்னி இலக்கின ஜாதகருக்கு லக்கினம் முதல் 12 பாவகங்களின் தன்மை மற்றும் நவ கிரகங்கள் 12 பாவகங்களுக்கு வழங்கும் வலிமை ஆகியவற்றை கணிதம் செய்வோம் அன்பர்களே!

1) லக்கினம் :

 ஜாதகருக்கு கன்னி லக்கினம் லக்கினதிபதியான புதன் லக்கினத்தில் இருந்து மிதுனத்தில் உள்ள 9ம் பாவகத்தில் அமர்ந்து ஜாதகருக்கு கோண பலம் பெற்று அவயோக பலன்களை லக்கினத்திற்கு வழங்குகிறார். ( லக்கினம் என்பது ஜாதகருக்கு கன்னியில் 172.30.12 பாகையில் ஆரபித்து துலாம் ராசியில் 202.04.34 பாகையில் முடிவடைகிறது.  9ம் பாவகம் ஜாதகருக்கு ரிஷபத்தில் 51.38.55 பாகையில் ஆரம்பித்து மிதுனத்தில் 81.13.16 பாகையில் முடிவடைகிறது லக்கினதிபதியான புதன் மிதுனத்தில் 9ம் பாவகத்திர்க்கு உற்பட்ட 68.11.52 பகையிலே இருப்பதால் புதனின் அமர்வு நிலை 9ம் பாவகம் என்பதே சரியானது, ராசியை அடிப்படையாக வைத்து புதன் 10ல் இருப்பதாக நிர்ணயம் செய்வது முற்றிலும் தவறானது.)

2) இரண்டாம் வீடு :

இரண்டாம் வீட்டிற்கு அதிபதியான சுக்கிரன் இரண்டாம் பாவகதிர்க்கு 6ல் இருந்து மறைவு பலம் பெற்று ஜாதகருக்கு இரண்டாம் பாவக அமைப்பிற்கு 100 சதவிகித நன்மையை செய்கிறார், எனவே ஜாதகர் இனிமையான பேச்சும், கை நிறைவான வருமானமும் பெறுபவராக காணப்படுவார்.

3) மூன்றாம் வீடு :

மூன்றாம் வீட்டிற்கு அதிபதியான செவ்வாய் தனது வீட்டிற்கு 10ல் அமர்ந்து 100சதவிகித நன்மையை  3ம் பாவகதிர்க்கு வாரி வழங்குகிறார் எனவே ஜாதகர் நல்ல வீரியம் மிக்க தைரியசாலியாகவும், துணிச்சல் மிக்கவராகவும், சகோதர வழியில் இருந்து நன்மையை பெறுபவராகவும் இருப்பார்.

4) நான்காம் வீடு :

நான்காம் வீட்டிற்கு அதிபதியான குரு தனது வீட்டிற்கு 7ல் அமர்ந்து கேந்திர பலம் பெற்று தனது வீட்டை நேரெதிர் பார்வை செய்வதால் 4ம் பாவகம் 100 சதவிகித பாதிப்புக்கு உள்ளாகி, சொத்து சுக இழப்பு, வாகன யோகம் அற்ற நிலை, வசதி வாய்ப்புகள் இருந்து அவற்றை அனுபவிக்க இயலாத தன்மையை தரும்.

5) ஐந்தாம் வீடு :

 ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியான சனி தனது வீட்டிற்கு 10ல் அமர்ந்து கேந்திர பலம் பெற்று 100 சதவிகத தீமையை செய்வதால் ஜாதகர், தனது பூர்வீகத்தில் ஜீவனம் செய்ய இயலாத தன்மையையும், அறிவாற்றல் வழியில் சிறப்பாக செயல்பட இயலாத சூழ்நிலையையும் தரும்.

6) ஆறாம் வீடு :

 ஆறாம்  வீட்டிற்கு அதிபதியான சனி தனது வீட்டிற்கு 9ல் அமர்ந்து கோண பலம் பெற்று 100 சதவிகத தீமையை செய்வதால், ஜாதகர் ஆறாம் பாவக வழியில் இருந்து உடல் நல குறைவு, கடன் பெறுவது கொடுப்பதால் அதிக இன்னல்கள் என்ற அமைப்பில் இருந்தும் எதிரிகள் அமைப்பில் இருந்து துன்பத்தையும் அனுபவிக்கும் நிலையை தரும்.

7) ஏழாம் வீடு :

ஏழாம் வீட்டிற்கு அதிபதியான குரு தனது வீட்டிற்கு 4ல் அமர்ந்து கேந்திர பலம் பெற்று 100 சதவிகித தீமையை செய்வதால் ஜாதகர் களத்திரம், நண்பர்கள், கூட்டாளிகள், வெளியூர், வெளிநாடுகளில் இருந்து அவயோகத்தையும், துன்பத்தையும் அனுபவிக்கும் நிலையை தரும், கூட்டு  முயற்ச்சி மற்றும் திருமண வாழ்க்கை அமைப்பில் தாமதத்தையும் பிரச்சனைகளையும் தரும்.

8) எட்டம் வீடு :

 எட்டம் வீட்டிற்கு அதிபதியான செவ்வாய் தனது வீட்டிற்கு 5ல் அமர்ந்து கோண பலம் பெற்று 100 சதவிகிதம் தீமையை செய்வதால் ஜாதகருக்கு திடீர் இழப்பு,விபத்து,முதலீட்டில் வரும் இழப்பு, எதிர்பாராத உடல் நல குறைவு என்ற வகையில் சிரமங்களை தர கூடும், ஜாதகர் தனது உடல் நிலையை தானே கெடுத்து கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார், விரக்தியான மன நிலையை  கொண்டிருப்பார்.

9) ஒன்பதாம் வீடு :

 ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியான சுக்கிரன் தனது வீடிற்கு 11ல் அமர்ந்து சிறப்பான நிலையில் இருப்பது ஜாதகருக்கு மிகுந்த யோக பலன்களை தரும், ஆன்மீக வெற்றி உண்டாகும், இறை நிலையின் கருணை ஜாதகருக்கு பரிபூரணமாக கிடைக்கும், கோவில் வழிபடு அல்லது குல தெய்வ வழிபாட்டில் ஜாதகருக்கு ஈடுபாட்டினையும், இதன்மூலம் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டாக்கும், முன்னோர்கள் ஆசி  ஜாதகருக்கு பரிபூர்ணமாக நிறைந்து நிற்கும்.

10) பத்தாம் வீடு :

 பத்தாம் வீட்டிற்கு அதிபதியான புதன் தனது வீட்டிற்கு 12ல் மறைவது ஜாதகருக்கு ஜீவன வழியில் இருந்து அதிக இன்னல்களை தரும், நிலையான தொழில் அற்ற சூழ்நிலையும், சுய தொழில் செய்ய இலாத தன்மையையும், அடிமை சேவகம் செய்யும் நிலைக்கும் ஆர்ப்படுத்தும், எதிர்பாராத கௌரவ குறைவு ஏற்ப்பட அதிக வாய்ப்புண்டு, தன்னம்பிக்கு கடுமையாக பாதிக்கும்.

11) பதினொன்றாம் வீடு :

 பதினொன்றாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரன் தனது வீட்டிற்கு 12ல் மறைவது ஜாதகருக்கு வாழ்க்கையில் அதிக போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையை தரும், தன்னம்பிக்கை இழக்கும் விதமாக ஜாதகருக்கு பல நிகழ்வுகள் வரக்கூடும், மூத்த சகோதர அமைப்பில் இருந்து அதிக இன்னல்களை சந்திக்க வேண்டி வரும், பிற்போக்கான சிந்தனைகளில் ஜாதகர் மூழ்கி கிடக்கும் சூழ்நிலையை தரும், எவர் எதை சொன்னாலும் அதை அப்படியே நம்பி வாழ்க்கையில் பாதிப்பிற்கு உள்ளாகும் தன்மையை தரும்.

12) பனிரெண்டாம் வீடு :

 பனிரெண்டாம் வீட்டிற்கு அதிபதியான சூரியன் தனது வீட்டிற்கு 9ல் அமர்ந்து கோண பலம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல, ஜாதகருக்கு நல்ல நிம்மதியான  வாழ்க்கையை தர வாய்ப்பில்லை, மற்றவரை நம்பி முதலீடு செய்வதால் ஜாதகர் கடுமையாக பாதிக்க படுவார், மற்றவர் விஷயங்களில் ஜாதகர் தலையீடு செய்தால் சகல நிலைகளில் இருந்தும் துன்பத்தை எதிர்கொள்ள வேண்டி வரும்.

மேற்கண்ட பலன்கள் யாவும் ஒவ்வொரு பாவக அமைப்பிற்கும் அதன் அதிபதிகள் வழங்கும் பலன்களே! மேலும் பாவகங்களில் விழும் நவகிரகங்களின் பார்வைக்கு பலன் தனிபட்ட முறையில் கணிதம் செய்வது அவசியம், பிறகு ராகு கேது கிரகத்தின் வலிமை அமர்ந்த பாவகத்தின் அடிப்படையில் கவனிப்பதும் அவசியம், தற்பொழுது நடைபெறும் திசை ஜாதகருக் எந்த பாவகத்தின் தன்மையை ஏற்று நடத்துகிறது, கோட்சார கிரகங்கள் தற்பொழுது நடைபெறும் திசை ஏற்று நடத்தும் பாவகத்திர்க்கு எவ்வித பலன்களை வழங்குகிறது என்ற விஷயங்களையும் கணிதம் செய்து ஜாதக பலன் காணுவது ஜாதக பலன்களை துல்லியமாக கூற வாய்ப்பளிக்கும்.

மேற்கண்ட ஜாதகத்தில் ராகு கேது என்ற சாய கிரகங்கள் ஜாதகருக்கு தான் அமர்ந்த பாவக அமைப்பிற்கு ( அதாவது லக்கினம் மற்றும் களத்திரம் ) 100 சதவிகித நன்மையை வாரி வழங்குவது சிறப்பான ஒரு விஷயம், ஆக ஜாதகர் லக்கினம் மற்றும் களத்திர ஸ்தான அதிபதிகள் எவ்வித தீய பலன்களை செய்தாலும் 1,7ம் பாவகத்திர்க்கு எவ்வித பாதிப்பையும் தர வாய்ப்பில்லை என்பதே உண்மை.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 4 ஜூன், 2014

ரிஷப லக்கினம் - இலக்கினம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் பெரும் நன்மைகள் !




கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷப ராசியை லக்கினமாக கொண்ட ஜாதகருக்கு, லக்கினம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் இலக்கின வழியில் இருந்து பெரும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!

 ரிஷபம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடாகவும் ஸ்திர மண் தத்துவ ராசியாக அமைவதால் ஜாதகர் மிகவும் பொறுமைசாலியாக திகழ்வார், மண் தத்துவம் ஜாதகரின் உடல் அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கு உதவும், ஜாதகரின் உடல் வலிமையையும் மிகவும் சிறப்பாக இருக்கும், உடல் உறுப்புகளின் இயக்கம் மிகவும் செம்மையாக அமையும், எனவே ஜாதகரின் மன நிலையும் உடல் வலிமையையும் ஜாதகருக்கு ஆயுள் முழுவதும் சிறப்பாக அமைந்து விடும்.

 பொதுவாக ரிஷப லக்கினத்தை சார்ந்தவர்கள், எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையாக கையாளும் தன்மை பெற்றவர்கள், இருந்த இடத்தில் அமர்ந்துகொண்டே சகல அமைப்புகளிலும் வெற்றி காணும்  குணம் கொண்டவர்கள், சிந்தனை செய்யாமல் எந்த ஒரு காரியத்திலும் இறங்கமாட்டார்கள், இவர்களின் பொறுமையும் சிந்தனை ஆற்றலும் படிப்படியான வெற்றிகளை தொடர்ந்து வழங்கி கொண்டே  இருக்கும், பேச்சு திறைமை மிக்கவர்களாக இருப்பார்கள், தனது பேச்சாற்றல் மூலம் மக்களை கட்டிபோடும் வல்லமை பெற்றவர்கள்,

 இவர்களின் வளரும் சூழ்நிலை என்பது மிகவும் வசதிமிக்க இடத்தில் அமையும், சகல செல்வங்களும் பிறவியில் இருந்தே நுகரும் யோகம் பெற்றவர்கள், கலைகளில் அதிக ஈடுபடும், தேர்ச்சியும் அடையும் யோகம் உண்டாகும், தான் எடுத்துக்கொண்ட துறையில் தன்னிகரற்று விளங்கும் யோகத்தை தரும், இசையில் மிகுந்த ஆர்வமும் தன்னிகரற்ற தனி திறமையும் கொண்டவர்கள், பல்வேறு இசை வாத்தியங்களை சிறப்பாக கையாளும் திறன் பெற்றவர்களாக இருப்பார்கள்.

 ரிஷப லக்கினத்திற்கு மேற்கண்ட சிறப்புகள் இருந்த போதிலும், சற்று பயந்த  சுபாவம் கொண்டவர்களாகவே இருப்பார்கள், பிரச்சனைகள் உள்ள இடங்களில் இவர்கள்  இருக்க விரும்புவதில்லை, மேலும் தனிமையில் இருப்பதும் இவர்களுக்கு பிடிக்காத ஒன்றாகவே கருதலாம், இரவில் தனியாக செல்வதற்கு இவர்கள் ஒருபோதும் விரும்புவதில்லை, லக்கினத்துடன் செவ்வாய் அல்லது ராகு சம்பந்தம் பெரும் பொழுது மேர்கண்டதிர்க்கு எதிர்மறையான பலன்களே நடைபெறும், ஜாதகர் எவ்வித பயமும் இல்லாமல் மிகுந்த தைரியாசாலியாகவும் வீரம் மிகுந்தவராகவும் காணப்படுவார்.

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியாக ரிஷபம் அமைவதால், இந்த லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு வாக்கு பலிதம் இயற்கையாக அமைந்துவிடும், தன சேர்க்கை ஜாதகருக்கு தாரளமாக குறைவின்றி வரும், அல்ல அல்ல குறையாத செல்வ சேர்க்கை உண்டாகும், ஜாதகர் சொல்லும் நல்வாக்கு எப்பொழுதும் பலிதம் பெரும், இறைஅருளும் ஜாதகருக்கு இயற்கையாகவே கிடைக்கும், ஆன்மீக பெரியோரின் ஆசிர்வாதம் ஜாதகருக்கு இளம் வயதிலே கிடைக்க பெரும் யோகம் பெற்றவர்கள், இவர்களின் வளர்ச்சி என்பது எவ்வித சிரமங்கள் இன்றி மிகவும் சிறப்பாக அமையும்.

மற்றவர்களை நம்பி ஏமாறுவதற்கு உண்டான வாய்ப்புகள் ஜாதகருக்கு அடிகடி வர கூடும், கள்ளம் கபடம் அற்ற இவரின் குணத்தை பலர் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டபோதிலும், மன்னிக்கும் மனப்பான்மையை இயற்கையாக பெற்று இருப்பார்கள், எவ்வித சூழ்நிலையிலும் நேர்மை மாறாத குணத்தையும், தன்னம்பிக்கையையும் கைவிடாத மன நிலையும் ஜாதகர் பெற்று இருப்பார்.

கலை துறையில் சிறந்து விளங்கும் யோகத்தை தரும், சிறந்த படைப்புகளை மக்களுக்கு எளிதில் "விளங்கும் வண்ணம்" மக்களிடம் கொண்டு செல்லும் ஆற்றல் பெற்றவர்கள் , தனது வித்தியாசமான அணுகு முறையால் பல புதுமைகளை கலைத்துறையில் பயன்படுத்தி  அதில் 100% வெற்றியை பெறுபவர்களும் இவர்களே என்றால் அது மிகையல்ல, இனிமையான குரல் வளம் கொண்டவர்கள் என்பதால் இசை துறையில் நல்ல எதிர்காலம் உண்டு முறையான பயிற்ச்சி ஜாதகருக்கு உலக புகழ் சேர்க்கும்.

ரிஷப ராசியை லக்கினமாக கொண்டு லக்கினம் வலிமை பெரும் அமைப்பை பற்றி  இனி பார்ப்போம் ரிஷப ராசியை லக்கினமாக பெற்றவர்களின் சுய ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் வீடு 1,2,3,4,5,7,9,10 பாவகங்களுடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகர், சம்பந்தபட்ட பாவக அமைப்பில் இருந்து யோக பலன்களை அனுபவிக்கும் தன்மை உண்டாகும், 6,8,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகர், சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து தீய பலன்களை அனுபவிக்கும் நிலை உண்டாகும். பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் சம்பந்தபட்ட பாவக  வழியில் இருந்து 200 மடங்கு தீய பலன்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளபடுவார்.

ஆக ரிஷப லக்கினமாக உள்ள ஜாதகருக்கு லக்கினம் 6,8,12 பாவகத்துடனும், பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெறுவது மட்டுமே அதிக தீமைகளை செய்யும் இலக்கின வழியில் இருந்து, மற்ற பாவகங்களான 1,2,3,4,5,7,9,10 ம் பாவகங்களுடன் தொடர்பு பெறுவது மிகுந்த நன்மையே தரும் இலக்கின வழியில் இருந்து ஜாதகர் யோக வாழ்க்கையை அனுபவிக்கும் தன்மையை தரும்.

குறிப்பு : 

 லக்கினம் எந்த பாவகத்துடன் தொடர்பு பெறுகிறது என்பதை ஜாதகரின் சுய ஜாதகத்தை வைத்தே நிர்ணயம் செய்ய வேண்டும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 3 ஜூன், 2014

சுய ஜாதக அமைப்பில் பாதிக்க பட்ட பாவகங்களில் இருந்து, நன்மை பெற ஜாதகர் என்ன செய்ய வேண்டும் ! பாகம் 2




சுய ஜாதகத்தில் பிறந்த நேரத்திற்கேற்ப பாவகங்களில் அமர்ந்த நவகிரகங்கள், தான் அமர்ந்த இடத்தில் இருந்தும் பார்க்கும் பார்வை அமைப்பில் இருந்தும், 12 பாவகங்களின் தன்மையை நிர்ணயம் செய்கின்றது, நடைபெறும் திசை 12 பாவகங்களின் தன்மையை  ஏற்று ஜாதகருக்கு நன்மை தீமை பலன்களை நடைமுறைக்கு கொண்டு வருகிறது, அப்படி நடைபெறும் நவகிரங்களின் திசை நல்ல நிலையில் இருக்கும் பாவகங்களின் தன்மையை ஏற்று நடத்தும் பொழுது ஜாதகர் யோக பலன்களையும், பாதிக்கபட்ட பாவகங்களின் பலனை ஏற்று நடத்தும் பொழுது அவயோக பலன்களையும் அனுபவிக்க நேருகிறது, மேற்கண்ட பாதிக்கபட்ட பாவகங்களின் பலன் நடைபெறும் பொழுது, ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து வரும் தீமையான பலன்களை தவிர்க்க ஜாதகர் என்ன பரிகாரம் செய்வது ? பாதிக்கபட்ட பாவகங்களில் இருந்து வரும் தீமையை தவிர்த்து நன்மை பெறுவது எப்படி? என்பதை பற்றி இந்த 2ம் பதிவில் காண்போம்.

களத்திற ஸ்தானம் எனும் 7ம் பாவகம் பாதிக்கபட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :

 ஜாதகருக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்து அளவு கடந்த இன்னல்கள் வரும், மேலும் தொழில் முறை கூட்டாளிகள் ஜாதகரை மிக எளிதில் ஏமாற்ற கூடும், நண்பர்களும் ஜாதகருக்கு அதிக இன்னல்களை தருவார்கள், குறிப்பாக ஜாதகர் சமுதாயத்தில் அவ பெயர் ஏற்ப்படுவதர்க்கு உண்டான அனைத்து சூழ்நிலைகளும் ஒரே நேரத்தில் வந்து மிக எளிதில் ஜாதகரை தாக்கும், எதிர்பால் இனத்தினரால் ஜாதகர் அதிக துன்பமும், மனக்கவலையும் அடையும் சூழ்நிலை உண்டாகும், இந்த காலகட்டத்தில் ஜாதகர் வெளி ஊர் அல்லது வெளி நாடு செல்வது ஜாதகரின் வாழ்க்கையை சின்னபின்னமாக்கி விரக்தியின் விளிம்பிற்கே எடுத்து செல்லும், எனவே ஜாதகர் இந்த காலகட்டத்தில் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் அறிவுக்கு மதிப்பளிப்பது, ஜாதகரை துன்பத்தில் இருந்து மீட்டு எடுக்கும்.

 நல்ல ஆன்மீக குருவின் ஆசியை பெறுவதும், வயதான தம்பதியரின் ஆசியை பெறுவதும் சரியான தீர்வாக இருக்கும், அல்லது வாழ்க்கை துணையின் வழியில் இருந்து வரும் அனைத்து இன்னல்களையும் மனமுவந்து ஏற்றுக்கொண்டு அவருக்கு சகல நன்மைகளையும் செய்து தருவது விரைவான நன்மைகளை தரும், தனது நண்பர்கள், கூட்டாளிகள் வழியில் இருந்து வரும் இன்னல்களை ஏற்றுகொள்வது சமுதாயத்தில் நர்ப்பெயரையும், தொழில் விருத்தியையும் தரும், வெளிநாடு வெளி ஊர் பயணங்களை தவிர்த்து தனது சொந்த ஊரிலேயே இருப்பது சகல நலன்களையும் வாரி வழங்கும்.

ஆயுள் ஸ்தானம் எனும் 8ம் பாவகம் பாதிக்கபட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :


ஜாதகருக்கு திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது, வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது விபத்து, உடல் நிலை பாதிப்பு, தனது பெயரில் இருக்கும் சொத்துகள் திடீர் என இழக்கும் சூழ்நிலை, முதலீடுகள் திடீரென குறையும் தன்மை, வரும் லாபம் அனைத்தும் விரையம் ஆகும் தன்மை, திடீர் நஷ்டம், ஜாதகரும் ஜாதகரை சார்ந்தவர்களும் உடல் ரீதியாக பாதிக்கப்படும் தன்மை என்ற வகையில் துன்பத்தை தரக்கூடும், குறிப்பாக இந்த காலகட்டங்களில் ஜாதகர் பாதுகாப்பற்ற பயன்களை மேற்கொள்வதும், அதிவேகமாக வாகனங்களை இயக்குவது மிகப்பெரிய துன்பத்தையே செய்யும்.

எனவே ஜாதகர் இந்த காலகட்டங்களில் பயணங்களில் அருள் காப்பும், இறை நினைவும் ஜாதகரை விபத்தில் இருந்து காக்கும், உடல் நிலையில் ஜாதகர் எடுத்துகொள்ளும் அக்கறை உடல் ரீதியாக வரும் துன்பங்களில் இருந்து பாதுகாக்கும், உடல் ரீதியாக வரும் சிறு பிரச்சனைகளை ஜாதாகர் சிறிதாக இருக்கும் பொழுதே கவனிப்பது பெரிய துன்பங்களில் இருந்து காப்பற்றும், மற்றவரை நம்பி கொடுக்கும் பணம் மற்றும் பொருள் யாவும் இந்த காலகட்டத்தில்  திரும்பி வர வாய்ப்பில்லாமல் போகும் என்பதால், எவரிடமும் எந்த பொருளும் பணமும் தராமல் இருப்பது நலம், மற்றவரிடம் இருந்து எந்த பொருளையும் வாங்காமல் இருப்பது அதிக நன்மையை தரும் இல்லையெனில் ஜாதகருக்கு இரட்டை செலவினத்தை தரும்.

பாக்கிய ஸ்தானம் எனும் 9ம் பாவகம் பாதிக்கபட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :

ஜாதகருக்கு உதவி செய்ய யாரும் இல்லாமல் தனியாக போராடும் சூழ்நிலையை தரும், தேவை இல்லாமல் பெரியவர்களின் சாபத்திற்கு ஆளாகும் சூழ்நிலை தரும், இறை நிந்தனை, நாத்திகம் போன்றவற்றில் ஜாதகரின் சிந்தனை சிந்திக்க ஆரம்பிக்கும், பெரியோரின் ஆலோசனையை மதிக்காமல் மிகப்பெரிய சிக்கலுக்கு ஜாதகர் ஆளாகி, தானே தனது வாழ்க்கையை கெடுத்து கொண்டு தன்னை சார்ந்தவரையும் கெடுக்கும் குணத்தை தரும், தான் செய்த பாக்கியத்தின் பலன்களை விரையம் செய்யும் சந்தர்ப்ப சூழ்நிலையை ஜாதகரே உருவாக்கி கொண்டு சிரம படும் நிலைக்கு எடுத்து செல்லும், சமுதாயத்தில் அவ பெயர் ஏற்ப்படுவதர்க்கு உண்டான அனைத்து சூழ்நிலைக்கும் ஜாதகரை ஆர்ப்படுத்தும்.

மேற்கண்ட பாவக பலன் நடைபெறும் பொழுது ஜாதகர் பெரியோரின் பேச்சை மதித்து நடந்துகொள்வதும் , அவர்கள் இட்ட கட்டளைக்கு கட்டுப்பட்டு நடப்பதும் சகல நன்மைகளையும் வாரி வழங்கும், குழந்தைகள் முதல் வயதான பெரியவர் வரை அவர்களின் மனம் நோகாமல் நடந்துகொள்வது, மிகுந்த  நற்ப்பெயரை ஜாதகருக்கு பெற்று தரும், ஆன்மீகம் தியானம் போன்றவற்றில் கவனம் செலுத்தி ஜாதகர் தனது மனதை கட்டுக்குள் வைப்பதும், மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிடாமல் தனது வேலையை மட்டும் பார்ப்பது ஜாதகரை சிறப்பான வாழ்க்கைக்கும் முன்னேற்றத்திற்கும் அழைத்து செல்லும் குறிப்பாக குல தெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும் ஜாதகரின் 9ம் பாவக வழி துன்பங்களை போக்கும்.

ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் பாதிக்கபட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :

ஜாதகரின் ஜீவன வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும், அல்லது மற்றவருக்கு அடிமை ஜீவனம் செய்யும் தன்மைக்கு ஆர்ப்படுத்தும், குறிப்பாக ஜாதகரின்  கௌரவம் கடுமையாக பாதிக்க படும், சுயமாக ஜாதகர் செயல்பட இயலாத சூழ்நிலையை தரும், எவ்வளவு கடினமான உழைப்பை செய்தாலும் அதற்க்குண்டான பலன் ஜாதகருக்கு கிடைக்காது, மற்றவர்கள் தட்டி பறிக்கும்  சூழ்நிலை தரும், இந்த காலகட்டத்தில் ஜாதகருக்கும் ஜாதகரின் தகப்பனாருக்கும் 7ம் பொருத்தமாகவே இருக்கும், இருவருக்கும் அதிக கருத்து வேறுபாடுகள், கருத்து மோதல்கள் ஏற்ப்பட 100% சந்தர்ப்பங்கள் உண்டாகும்.

ஜாதகர் இந்த காலகட்டங்களில் சுய தொழில் செய்யாமல் இருப்பது நலம், சுய தொழில் செய்தால் நிர்வாகத்தில் அதிக கவனம் செலுத்துவது பல பிரச்சனைகளில் இருந்து ஜாதகரையும், ஜாதகர் செய்யும் தொழிலையும் மீட்டு எடுக்கும், தொழில் ரீதியாக ஜாதகர் எடுக்கும் ஒவ்வொரு அடியும் மிக கவனமாக வைப்பது நலம் தரும், பணிபுரியும் இடத்தில் எவரிடமும் பகைத்துகொல்லாமல் தனது வேலையை மட்டும் கவனிப்பது சகல நலன்களையும் தரும், கௌரவ குறைவான வேளைகளில் ஈடுபடாமல் இருப்பது மிகுந்த நன்மையை தரும், இந்த கால கட்டத்தில் ஜாதகர் தனது தகப்பனாரின் வார்த்தைக்கும், அவரின் செயலுக்கும் மதிப்பளித்து நடந்துகொள்வது ஜீவன வழியில் இருந்து அதிக நன்மையை செய்யும்.

லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகம் பாதிக்கபட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :

 ஜாதகர் அதிர்ஷ்டத்தை நம்பி செய்யும் காரியங்கள் யாவும் தோல்வி மேல் தோல்வியே தரும், மற்றவர் பேச்சை  கேட்டு செய்யும் காரியங்கள் யாவும் ஜாதகரை படுகுழியில் தள்ளிவிடும், ஜாதகரின் மூத்த சகோதர அமைப்பில் இருந்து அதிக  இன்னல்களை அனுபவிக்க வேண்டி வரும், பங்கு சந்தை சூதாட்டம் போன்றவற்றில் ஜாதகர் ஈடுபட்டால் கையில் உள்ள அனைத்தையும் இழந்து நிற்கும் தன்மையை ஏற்ப்படுத்தும், ரகசிய தொழில்கள் சட்டத்துக்கு புறம்பான தொழில்களில் ஈடுபட்டால் ஜாதகர் விரைவில் அதற்க்கு உண்டான தண்டனையை பெறுவார், ஜாதகரின் பிற்போக்கு சிந்தனை ஜாதகரையும் கெடுத்து ஜாதகரை சார்ந்தவர்களையும் பாதிப்புக்கு  உள்ளாக்கும்.

ஜாதகர் இந்த காலகட்டத்தில் உண்மைக்கும் உண்மைக்கு மாறான விஷயத்தையும் பிரித்து பார்க்கும் திறமையை வளர்த்துகொள்வது நலம் தரும், எந்த ஒரு விஷயத்தையும் அப்படியே நம்பாமல் உண்மை என்னவென்பதை அலசி ஆராய்ந்து முடிவெடுப்பது சகல நலன்களையும் தரும், இந்த காலகட்டத்தில் ஜாதகர் எக் காரணத்தை கொண்டும் தன்னம்பிக்கையை இழக்காமல் இருப்பது, ஜாதகரை சிறப்பான முன்னேற்ற பாதைக்கு  அழைத்து செல்லும், மூட நம்பிக்கையில் அறிவை செலுத்தாமல் உண்மையான விஷயங்களில் அறிவை செலுத்துவது மிகப்பெரிய வெற்றியை ஜாதகருக்கு பெற்று தரும், கடின உழைப்பே ஜாதகரை வாழ்க்கையில் மிகப்பெரிய இடத்திற்கு எடுத்து செல்லும்.

விரைய ஸ்தானம் எனும் 12ம் பாவகம் பாதிக்கபட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :

 ஜாதகரின் மன நிம்மதி என்பது கேள்வி குறியாக மாறிவிடும், ஜாதகருக்கு மனோ ரீதியாக அடிமேல் அடி விழும், ஒன்று போனால் ஒன்று வந்துகொண்டே இருக்கும் , ஜாதகரை சார்ந்த அனைவராலும் ஜாதகர் துன்பத்திற்கு  ஆளாகும் சூழ்நிலை தரும், நிம்மதியான உறக்கம் ஜாதகருக்கு கிடைப்பதற்கு உண்டான வாய்ப்பே இல்லாமல் போய்விடும், இதனால் ஜாதகரின் செயல் திறன் கடுமையாக பாதிக்கப்படும், குறிப்பாக ஜாதகர் போதை  லகிரி வஸ்துகளுக்கு அடிமையாகும் சூழ்நிலையை தரும், தன்னம்பிக்கை குறைவதற்கு உண்டான சூழ்நிலையை தரும், பெரிய அளவில்  முதலீடு செய்யும் பணம் ஒரு நாளில் விரையம் ஆகும் சூழ்நிலையை தரும், தனது குடும்ப அமைப்பில் இருந்து கடுமையான மன நிம்மதி இழப்பை ஏற்ப்படுத்தும்.

ஜாதகர் இந்த காலகட்டங்களில் சுய கட்டுபாட்டை கடைபிடிப்பது அதிக நன்மைகளை தரும், குறிப்பாக மனதை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகுந்த நன்மையை தரும், எக்காரணத்தை கொண்டும் ஜாதகர் தீய பழக்க  வழக்கங்களுக்கு அடிமை ஆகாமல் சுய கட்டுப்பாட்டுடன் இருப்பது, உடலுக்கும் மனதிற்கும் மிகுந்த நன்மையை தரும், தனது ஆன்மீக பலத்தை அதிகரித்துக்கொள்ள  வேண்டிய நேரமிது, தனது ஆன்மீக குருவாக ஒருவரை எடுத்துகொண்டு அவரிடம் முறையாக தீட்சை பெற்று, தியான வழிபாட்டில் கவனம் செலுத்துவது நலம் தரும், தனது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி தராமல் இருந்தால் அமாவசை தவறாமல் தொடர்ந்து தன்னால் இயன்ற அளவு முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வது நலம் தரும்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696