சனி, 16 ஏப்ரல், 2022

துலாம் 2022-2023 ராகுகேது பெயர்ச்சி பலன்கள் !


மேஷ ராசியில் ராகுபகவான் சஞ்சாரம் : 

 சாயா கிரகங்களான ராகுகேது பெயர்ச்சியின் மூலம் 100%சதவிகிதம் சுபயோக பலன்களை மட்டுமே சுவீகரிக்கும் லக்கினங்களில் ஒன்றான துலாம் ராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு இனிவரும் காலம் சுபயோக காலமே என்றால் அது மிகையில்லை, துலாம் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான ராகு பகவான், தான் சஞ்சாரம் செய்யும் 7ம் பாவகத்தை 100% விகிதம் வலிமை சேர்க்கும் அமைப்பில் தனது இயக்க நிலையை செயல்படுத்தும் காரணத்தால், துலாம் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு திருமண யோகம் வெகு சிறப்பாக அகைகூடி வரும், கூட்டு தொழில் வழியில் இருந்து அபரிவிதமான சுபயோகங்களும் லாபங்களும் வந்து சேரும், தனது தனி திறனை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் இனிவரும் காலங்களில் வெகு சிறப்பாக  அமையும், ஜாதகரின் செயல்திறனும் சுறுசுறுப்பும் மிகப்பெரிய வெற்றி வாய்ப்புகளை வாரி வழங்கும், அரசியல் ராணுவம் காவல் பாதுகாப்பு தீயணைப்பு மருத்துவம் போன்ற துறைகளில் பணியாற்றி கொண்டு இருக்கும் அன்பர்களுக்கு இனிவரும் காலம் அதீத வெற்றிவாய்ப்புகளுடன் கூடிய நன்மைகளையும் முன்னேற்றங்களையும் வாரி வழங்கும், தனது சுய சிந்தனை திறன் மேலோங்கும், மற்றவர்களை சார்ந்து  வாழாமல் தனது சுய உழைப்பின் மூலம் வெற்றிக்கொடி நாட்டும் யோகம் உண்டாகும், புதிய வாய்ப்புகள், புதிய சிந்தனைகள் தங்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை, எதிர்பாராத அதிர்ஷ்டம் தங்களின் வாழ்க்கையை பன்மடங்கு முன்னேற்றத்தை நோக்கி அழைத்து செல்லும், தன்னம்பிக்கை, மனோதைரியம், எதிர்ப்புகளை வெற்றிகொள்ளும் தன்மை, சுய முன்னேற்றத்தில் அதிக ஆர்வம், தொழில் நுட்பம் சார்ந்த அறிவு விருத்தி பெரும் தன்மை என்ற வகையில் சகல சௌபாக்கியங்களையும் ராகுவின் களத்திர ஸ்தான சஞ்சாரம் வழங்கும்.

 துலாம் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு 7ம் பாவக வழியில் இருந்து தனது  வாழ்க்கை துணை மூலம் மிக பெரிய நன்மைகள் நடைமுறைக்கு வரும், இல்லற வாழ்க்கையில் இன்னல்களை சந்தித்துக்கொண்டு இருந்த அன்பர்களுக்கு சிறப்பான இல்லற வாழ்க்கை அமையும், பிரிந்து இருந்த தம்பதியர் ஒன்று சேர்ந்து வாழ்க்கையை வெற்றிகொள்ளும் தருணம் இது புது வாழ்க்கை தங்களின் மகிழ்ச்சிக்கு அடிப்படை ஆதாரமாக அமைவதுடன், எதிர்பாராத நன்மைகளையும் பெறுவீர்கள் குறிப்பாக நல்ல புத்திர பாக்கியம், புதிய சொத்துக்களை வாங்கும் யோகம், புதிய தொழில் அல்லது வேலைவாய்ப்பை பெரும் யோகம் உண்டாகும், நண்பர்கள் உதவி, தொழிலாளர்கள் ஒத்துழைப்பு, கூட்டாளிகள் ஆதரவு என சிறப்பான யோக வாழ்க்கையை பெறுவதுடன், தனது திட்டமிடுதல்களை வெகு சிறப்பாக நிறைவேற்றும் யோகம் உண்டாகும், சுய சிந்தனை வழியிலான நடவடிக்கைகள் வெகு அற்புதமான நன்மைகளை முழுமையாக வாரி வழங்கும், எதிர்பார்ப்புகள் நிறைவேறும், முயற்சிக்கான பலன்கள் முழுமையாக வந்து சேரும், பொதுமக்கள் ஆதரவு வழியிலான வெற்றிகள் தங்களின் சமூக அந்தஸ்த்தை அதிகரிப்பதுடன் உயர் பதவிகளையும் அலங்கரிக்கும் யோகம் உண்டாகும், தன்னிடம் உள்ள தொழில்நுட்ப அறிவு துலாம் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு எதிர்பாராத புதிய வாய்ப்புகளை வழங்குவதுடன், பொருளாதார முன்னேற்றத்தை வெகு சிறப்பாக வாரி வழங்கும் என்பதில் சந்தேகமில்லை, வெளிநாடு பயணங்கள் மூலம் மிக பெரிய அளவிலான நன்மைகளையும் திறமைக்கான அங்கீகாரமும் நிச்சயம் கிடைக்க பெறுவீர்கள், ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியிலான நன்மைகள் என்பது வெகு அற்புதமாக அமைவதுடன், அதீத லாபமும் உண்டாகும், தொழில் வழியிலான நன்மைகள் பன்மடங்கு தங்களுக்கு முன்னேற்றத்தை வாரி வழங்கும், தனி திறமை கொண்டு இனிவரும் 18மாதமும் வெற்றிகளை சுவீகரிப்பீர்கள், ராகு பகவானின் களத்திர ஸ்தான சஞ்சாரம் தங்களுக்கு ராஜயோக பலன்களை தன்னிறைவாக வாரி வழங்கும்.

துலாம் ராசியில் கேது பகவான் சஞ்சாரம் :

துலாம் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு ஜென்ம லக்கினமான 1ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான கேது பகவான், தான் சஞ்சாரம் செய்யும் பாவகத்தை 100% விகிதம் வலிமை சேர்ப்பது வரவேற்கத்தக்கது, பொதுவாக ஜென்ம லக்கினத்தில் சாய கிரகமான ராகு மற்றும் கேது சஞ்சாரம் செய்தால் முழு அளவில் நன்மைகளை மட்டுமே வழங்கும், அது பிறப்பு ஜாதகம் என்றாலும் சரி, கோட்சார ரீதியாக என்றாலும் சரி, அந்த வகையில் ஜென்ம லக்கினத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் துலாம் லக்கின அன்பர்களுக்கு உடல் நலம் வெகு சிறப்பாக அமையும், மனவலிமை அதிகரிக்கும், சுய ஞானம் வெளிப்படும், அறிவு சார்ந்த முயற்சிகள் வெற்றியை வழங்கும், சமயோசித புத்திசாலித்தனம் வெகு அற்புதமாக வேலை செய்யும், இயற்கையாகவே சுய நலத்துடன் பொதுநலன் கலந்து சிந்திக்கும் துலாம் லக்கின அன்பர்களுக்கு கேதுவின் சஞ்சாரம் தானும் நலன் பெற்று தன்னை சார்ந்தவர்களும் நன்மை பெரும் அமைப்பிலான காரியங்களில் ஈடுபடுவார்கள், வியாபாரிகளுக்கு அற்புதமான ராஜயோக பலன்களை வழங்குவது கவனிக்கத்தக்கது, தொட்டது அனைத்தும் துலங்கும், வெற்றிபடிக்கட்டுகளில் வீறுநடையிட்டு செல்லும் யோகம் உண்டாகும், தன்னிறைவான வருமான வாய்ப்பை பெறுவதுடன், அனைவரையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் அற்புதமான வாய்ப்பை பெற்று மகிழ்வார்கள், இவர்களின் பேச்சுக்கு அனைவரும் செவி சாய்ப்பார்கள், மாற்று மதத்தினர் மூலம் மிகப்பெரிய அளவிலான ஜீவன  முன்னேற்த்தை பெரும் யோகம் உண்டாகும், அயல்நாடுகளில் தொழில் ரீதியான நடவடிக்கைள் மூலம் புதிய தொழில் முதலீடு செய்யும் யோகம், நீண்ட கால லட்சியங்களை தன்னிறைவாக வெற்றிகொள்ளும் வாய்ப்பு, கடல் கடந்து ஜீவனம் செய்யும் வாய்ப்பு, திரைகடல் ஓடி திரவியம் தேடும் தன்மை என்றவகையில் அபரிவிதமான யோகங்களை கேது பகவான் தனது ஜென்ம லக்கின சஞ்சார நிலையில் இருந்து வாரி வழங்குவர் என்பதில் சந்தேகம் இல்லை.

 ஜென்ம லக்கினத்தில் வலிமை பெற்று சஞ்சாரம் செய்யும் கேதுபகவான் துலாம் லக்கின அன்பர்களுக்கு நினைத்த காரியங்களில் வெற்றியை தருவதுடன் ஆன்மீகத்தில் அபரிவிதமான நன்மைகளையும் வழங்குவார், பல புண்ணிய திருத்தலங்களுக்கு மிக எளிதாக சென்றுவரும் யோகம் உண்டாகும், மனமும் உடலும் தங்களுக்கான ஒத்துழைப்பை வெகு அற்புதமாக வாரி வழங்கும், எதிரிகள் தொந்தரவு அகன்று அவர்களின் ஆதரவும் தங்களுக்கு கிடைக்கும், நேற்றுவரை எதிரியாக இருந்தவர்கள் இன்று நண்பர்களாவர், உதவி செய்ய யாருமற்ற நிலை மாறி சகல நிலைகளில் இருந்தும் உதவிகள் தேடிவரும், உடலிலும் முகத்திலும் புத்துணர்ச்சி அதிகரிக்கும், வருமுன் யூகிக்கும் அறிவுத்திறன் அதிகரிக்கும், விழிப்புணர்வு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு மேலோங்கும், பல தொழில் செய்யும் யோகமும், தெய்வீக ஆற்றல் மூலம் சுபயோகங்களை சுவீகரிக்கும் சந்தர்ப்பமும் தேடி வரும், பொது வாழ்க்கையில் வெற்றி உண்டு பொதுமக்கள் ஆதரவும் உண்டு, சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும், நிலையான அதிகார பதவியும் இந்த நேரத்தி கிடைப்பதற்கான யோகம் உண்டு, எதிர்பாலின சேர்க்கை வழியில் பல முன்னேற்றங்களை தாங்கள் சுவீகரிக்க முடியும், குழந்தைகள் வழியில் இருந்தும், வாழ்க்கை துணை வழியில் இருந்தும் சுபயோகங்கள் நடைமுறைக்கும் வரும், இருப்பினும் தோல் மற்றும் ஒவ்வாமை போன்ற தொந்தரவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு, நோய் எதிர்ப்பு திறன் அதிகரிப்பதுடன், உடல் நலம் வெகு அற்புதமாக அமையும், இதுவரை இருந்துவந்த உடல் வருத்தங்கள் யாவும் நீங்கும் என்பது கவனிக்கத்தக்கது, கேதுவின் ஜென்ம  லக்கின சஞ்சாரம் வியாபார விருத்தியை தருவதுடன், உடல் நலம் மனவலிமை மேம்பட செய்வார் இனிவரும் 18 மாதமும்.

குறிப்பு :

மேற்சொன்ன ராகுகேது பெயர்ச்சி பலன்கள் என்பது தங்களது சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா புத்தி களத்திர ஸ்தானம் மற்றும் ஜென்ம லக்கின பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசா புத்தி களத்திர ஸ்தானம் மற்றும் ஜென்ம லக்கின பலனை ஏற்று நடத்தவில்லை எனில் கோட்சார ரீதியாக யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில்கொள்க 

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

0944335569

வியாழன், 7 ஏப்ரல், 2022

கன்னி 2022-2023 ராகுகேது பெயர்ச்சி பலன்கள் !

 


மேஷ ராசியில் ராகுபகவான் சஞ்சாரம் : 

 கன்னி லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான ராகு பகவான், தான் சஞ்சாரம் செய்யும் 8ம் பாவகத்தை 100% விகிதம் வலிமை சேர்க்கும் அமைப்பில் தனது இயக்க நிலையை செயல்படுத்தும் காரணத்தால், கன்னி லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்கள் வந்து சேரும், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கை உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது என்பதை எண்ணி கன்னி லக்கின அன்பர்கள் மகிழ்ச்சி கொள்ளலாம், தனது வாழ்க்கை துணை, தனது நண்பர்கள் கூட்டாளிகள், பொதுமக்கள், தனது தனி திறமை கொண்டு சுபயோகங்களை முழுமையாக சுவீகரிக்கும் யோகத்தை ராகு பகவான் வாரி வழங்குவது வரவேற்கத்தக்கது, மேலும் கன்னி லக்கினத்தை சார்ந்த அன்பர்களின் தொழில்நுட்ப அறிவு இவர்களுக்கு மேலைநாடுகளில் அதீத செல்வாக்கையும் வரவேற்பையும் தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதால் பொறியியல் துறை மற்றும் தகவல் தொழிநுட்ப துறை சார்ந்தவர்களுக்கு இது ஒரு அற்புதமான நேரம், தங்களின் புதிய முயற்சிகள் யாவும் மிகப்பெரிய அளவிலான வெற்றிகளை தரும், ராணுவம், காவல், தீயணைப்பு, மருத்துவம் மற்றும் பாதுகாப்பு துறையை சார்ந்த கன்னி லக்கின அன்பர்களுக்கு திடீர் பதவி உயர்வும், எதிர்பாராத அதிர்ஷ்டவாய்ப்பும் மிகப்பெரிய நன்மைகளை வாரி வழங்கும், போராட்ட வாழ்க்கையை எதிர்கொண்டு இன்னல்களை அனுபவித்த கன்னி லக்கின அன்பர்களுக்கு இனிவரும் காலம் மிகுந்த சுபயோகங்களை நல்கும், தங்களது வாழ்க்கை துணை மற்றும் நண்பர்கள் வழி ஆதரவும் ஒத்துழைப்பும், இனிவரும் காலங்களில் தங்களை ஓர் சாதனையாளராக மாற்றும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, ஆயுள் விருத்தி பெரும், உடல்நலம் மேலோங்கும், எதிர்பாராத சுப நிகழ்வுகள் தங்களுக்கு அதீத மனமகிழ்வை தரும். 

 எதிர்பாலின சேர்க்கை வழியிலான பொருளாதார முன்னேற்றமும், தனது வாழ்க்கை துணையிலான வருமான வாய்ப்பும் தேடிவரும், தனது உறவுகள் வழியில் இருந்து வரும் சொத்துக்களை ஆளுமை செய்யும் யோகம் உண்டாகும், உயில் கிரசுவிட்டி போனஸ் போன்ற நிலைகளிலும் காப்பீடு மற்றும் லாட்டரி யோகம் போன்றவற்றில் இருந்தும் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும், புதிய நிலையான சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டு, அதிகாரம் கொண்டு அனைத்தையும் சாதிக்கும் வல்லமையை ராகு பகவான் இனிவரும் காலங்களில் தங்களுக்கு வாரி வழங்குவார், எதிர்ப்புகள் அனைத்தும் தங்களுக்கு சாதகமான பலன்களை வழங்கும், சுரங்கம் மற்றும் கனிம பொருட்கள், கனரக வாகன பொருட்கள், எரிபொருள் சார்ந்த அனைத்து பொருட்கள் வழியில் இருந்தும் தங்களுக்கு வருமானம் அபரிவிதமானதாக வந்து சேரும் , பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு தாங்களே எதிர்பாராத வண்ணம் பொறுப்புகளை வழங்கி தங்களுக்கான அங்கீகாரத்தை உறுதி செய்வதுடன் அதிகாரத்தையும் சிறந்த நிர்வாக திறனையும் மேம்படுத்துவார், வெளிநாடுகளில் இருந்து வரும் தொழில்நுட்ப கருவிகள் மூலம் தொழில் வளர்ச்சியுடன் கூடிய வருமான வாய்ப்பும் அதிகரிக்கும், மருத்துவ உபகரணம் சார்ந்த தொழில் செய்வோருக்கான யோககாலம் இதுவே, மறைமுக தொழில்களில் பணவரவையும், சட்டவிரோத செயல்கள் மூலம் செல்வசேர்க்கையையும் தன்னிறைவாக வாரி வழங்குவதுடன், புராதான பொருட்கள் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்பை வாரி வழங்குவார், ரத்தினம் தங்கம் வெள்ளி போன்ற பொருட்கள் மூலம் தங்களின் வாழ்க்கை வெகு பிரகாசம் அடையும்.

அந்தரங்க வாழ்க்கை தங்களுக்கு எதிர்பாராத நன்மைகளை செய்வதுடன், ரகசியங்கள் காக்கப்படும், ஆழ்மனம் தியானம் போன்றவற்றால் வாழ்க்கையில் உண்மையான ஆன்மீகத்தை கண்டுணரும் வாய்ப்பும் உண்டாகும், செய்தொழிலில் வழியிலான முன்னேற்றம் வெகு சிறப்பாக அமையும், தங்களின் செயல்பாடுகள் அனைத்தும் மற்றவர்களின் பரராட்டுக்குரியதாக மாறும், தெய்வீக அனுக்கிரகம் தங்களுக்கு அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து புத்தம் புது நல்வாழ்க்கையை வாரி வழங்கும், தன்னிலை உணர்ந்தாலும், சுயமதீப்பீடு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு காட்டும் யோகமும் உண்டாகும், குழப்பம் அற்ற சூழ்நிலைகள் தங்களின் முன்னேற்றத்திற்கு உதவிகரமானதாக அமையும், அருங்கலைகளில்  அதீத நாட்டமும், வருமுன் உணரும் மனநிலையும் தங்களின் முன்னேற்றத்திற்கு அடிப்படை ஆதாரமாக அமையும், தங்களின் உடல்நலம் சார்ந்த அனைத்து இன்னல்களும் விரைவாக குணமாகி, சமூகத்தில் மீண்டும் வெற்றிநடை போடும் யோகத்தை ராகு பகவான் வாரி வழங்குவார், தங்களின் சரித்திரத்திற்க்கு முடிவுரை காணவிரும்பிய எதிர்ப்பாளர்களுக்கு பேரிடியாகவும், அவர்களுக்கு  சிம்மசொப்பனமாகவும் திகழ்வதற்க்கான வாய்ப்பை ராகுபகவான் நிச்சயம் தங்களுக்கு தருவார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம், செயல்களில் அதீத சுறுசுறுப்பு, தீர்க்கமான முடிவுகளை கையாளும் தன்மை, சமயோசித அறிவு திறன் போன்றவை இனிவரும் காலங்களில் வெகு அற்புதமாக பிரகாசிக்கும், தெய்வீக ஆற்றல் தங்களின் வாழ்க்கையை வெகு அற்புதமாக ஆளுமை செலுத்தும், குறிப்பாக காளி துர்க்கை போன்ற உக்கர தெய்வங்களின் ஆசிர்வாதம் தங்களது வாழ்க்கையில் வியக்கத்தக்க மாற்றங்களை தன்னிறைவாக வாரி வழங்கும்.

துலாம் ராசியில் கேது பகவான் சஞ்சாரம் :

கன்னி லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான கேது பகவான், தான் சஞ்சாரம் செய்யும் பாவகத்தை 100% விகிதம் பாதிப்பிற்க்கு ஆளாக்கும் காரணத்தால், குடும்பத்தில் பிரச்சனை, வருமானத்தில் பாதிப்பு, பேச்சில் தடுமாற்றம், வாக்குறுதியை நிறைவேற்ற இயலாத சூழ்நிலை, உறவுகளுடன் சுமூக போக்கை கடைபிடிக்க இயலாத தன்மை, கண்களில் பாதிப்பு, பார்வை குறைபாடு தலை சம்பந்தப்பட்ட நோய் தொந்தரவுகள், குழப்பம் நிறைந்த இல்லற வாழ்க்கை, புரிந்துகொள்ளாத வாழ்க்கை துணை, ஞானம் அற்ற வார்த்தைகள், வீண் வாக்குவாதம், வருமானம் அனைத்தும் வீணாகும் சூழ்நிலை, பொருளாதார சிக்கல்கள், வாழ்க்கையில் வரும் இன்னல்கள், அறிவு சார்ந்த முயற்சிகள் யாவும் பின்னடைவை தரும் சூழ்நிலை, குடும்பத்தில் உள்ள நபர்கள் மூலம் மனநிம்மதி இழப்பு போன்ற இன்னல்களை எவ்வித பார்ப்பட்டசமும் பார்க்காமல் கேது பகவான் வாரி வழங்குவார் என்பதால் கன்னி லக்கின அன்பர்கள் சற்று கவனமாக இருப்பது சிறப்பை தரும், பொதுவெளியில் காரசாரமான விவாதம் மற்றும் வார்த்தை பிரயோகத்தை தவிர்த்து விடுவது நல்லது, ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்யும் அன்பர்கள் இனிவரும் காலங்களில் அதீத எச்சரிக்கை உடன் ஜீவனத்தை மேற்கொள்வது நல்லது, அந்நிய நபர்கள் மூலம்  தங்களின் வாழ்க்கை முடங்கிவிடும் அபாயம் உண்டு என்பதால், முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள் அனைவரிடமும் கவனமாக இருப்பது நல்லது குறிப்பாக பணம் சம்பத்தப்பட்ட  விஷயங்களில் அதீத கவனம் தேவை, கேதுவின் சஞ்சாரம் தங்களின் வருமானம் அனைத்தையும் முடக்குவதற்கான அனைத்து வேலைகளையும் செய்யும் என்பதால், மாற்று வருமானம் சார்ந்த அமைப்புகளில் தங்களின் ஆர்வத்தை செலுத்துவது நல்லது, இதனால் தங்களின் வாழ்ககையில் வரும் பொருளாதர சிக்கல்களுக்கு சரியான தீர்வுகளை தாங்கள் பெற இயலும், நிம்மதி அதிகரிக்கும். 

கன்னி லக்கின அன்பர்களுக்கு இனிவரும் காலங்களில் தங்களின் குலத்தொழில் முடங்கும் அபாயகர உள்ளதால், சிறு கவன குறைவும் தங்களுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும், மற்றவர்களின் குறுக்கீடுகளை தங்களது சொந்த விஷயங்களில் அனுமதிக்க வேண்டாம் என்பதை தங்களுக்கு அறிவுறுத்த விரும்புகிறோம், மேலும் தங்களின் குடும்ப விவகாரங்களில் மற்றவர்களின் தன்னிலையீடு என்பது தங்களுக்கு பிரிவினையை தருவதுடன், இல்லறவாழ்க்கையை கடுமையாக பாதிக்கும், எனவே தங்களின் பிரச்சனைகளை தாங்களே பேசி ஒரு சுமுகமான முடிவுக்கு வருவதும், மற்றவர்களுக்காக சற்று விட்டுக்கொடுத்து செல்வதும் குடும்பம் மற்றும் இல்லற வாழ்க்கையை வெகு சிறப்பாக நடத்தி செல்ல ஓர் வாய்ப்பாக அமையும், கருத்து வேறுபாடு என்பது தங்களுக்கு இந்த நேரத்தில் வீண் வாக்குவாதத்தை பெரிய அளவிலான சண்டை சச்சரவுக்கு காரணமாக அமைந்துவிடும், எனேவ நாவடக்கம் என்பதை  கையாள்வதே சாலச்சிறந்தது, ஆன்மீகத்தில் ஈடுபாடு, ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம் போன்றவை தங்களின் வாழ்க்கையில் புது புத்துணர்ச்சியை தந்து, அகமகிழ்வின் மூலம் சுபயோகங்களை வாரி வழங்கும், எதிர்பார்ப்புகளை வெகுவாக  குறைத்துக்கொள்வதும், இருப்பதை வைத்து திருப்தி அடைவதும் தங்களுக்கான மனநிம்மதியை அதிகரிக்கும், இந்த நேரத்தில் தாங்கள் வைக்கும் அகலகால் மீண்டுவர முடியாத ஆதாளபாதாளத்தில் தள்ளிவிடும் என்பதால் எவரின் கருத்துக்கும், ஆசை வார்த்தைக்கும் செவிசாய்க்காமல், தங்களின் அறிவு சொல்லும் வழியில் நேர்மையாக நடைபோடுவது நல்லது, பொது வாழ்க்கையில் உள்ளோர் மிக கவனமாக இயங்குவது நல்லது இல்லையெனில் வீண் அவப்பெயர் உண்டாக வாய்ப்பு உள்ளது.

குறிப்பு :

மேற்சொன்ன ராகுகேது பெயர்ச்சி பலன்கள் என்பது தங்களது சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா புத்தி ஆயுள் ஸ்தானம் மற்றும் குடும்ப ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசா புத்தி ஆயுள் ஸ்தானம் மற்றும் குடும்ப ஸ்தான பலனை ஏற்று நடத்தவில்லை எனில் கோட்சார ரீதியாக யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில்கொள்க 

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

0944335569

சனி, 2 ஏப்ரல், 2022

சிம்மம் 2022-2023 ராகுகேது பெயர்ச்சி பலன்கள் !



மேஷ ராசியில் ராகுபகவான் சஞ்சாரம் : 

 சிம்ம லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான ராகு பகவான், தான் சஞ்சாரம் செய்யும் 9ம் பாவகத்தை 100% விகிதம் பாதிப்பிற்கு ஆளாக்கும் அமைப்பில் தனது இயக்க நிலையை செயல்படுத்தும் காரணத்தால், சிம்ம லக்கின அன்பர்களுக்கு இனி வரும் 18 மாதமும் உடல் மனம் தனித்திறன் மற்றும் செயல்பாடுகள் போன்றவற்றில் பாதிப்பை தரக்கூடும், சிந்தனை திறன் பாதித்து அவசரகதியில் செய்யக்கூடிய காரியங்களில் பெரிய பாதிப்புக்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், பித்ரு தோஷம் குலதெய்வ சாபம் போன்றவை தங்களுக்கு நிகழவிருக்கின்ற சுபகாரியங்களை வெகுவாக பாதிக்கும் என்பதால், பித்ரு வழிபாடு, குலதெய்வ வழிபாடு போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது, எதிர்பாராமல் வரும் தொல்லைகள் தங்களின் மனதை வெகுவாக பாதிக்கும், இயந்திரங்களில் வெகு பாதுகாப்பாக பணியை மேற்கொள்வது நல்லது இல்லை எனில் விபத்தின் மூலம் மருத்துவ செலவினங்களை சந்திக்க நேரும், கவனம் இல்லாமல் வாகனங்களை இயக்குவதும் தங்களுக்கு இன்னல்களை தருவதுடன் வீண் விரயங்களை ஏற்படுத்தும், அதீத கோபமும், அதிக மனஉளைச்சலும் தங்களின் அன்றாட செயல்பாடுகளை கடுமையாக பாதிப்பதுடன் உடல்நலத்தையும் சீர்குலைக்கும் என்பதை கருத்தில் கொள்க, மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையீடு செய்வது என்பது தங்களுக்கு யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக்கொண்டதற்கு சமமான பலன்களை தரும், சம்பந்தம் இல்லாமல் வீண் அலைச்சல், வீண் அவப்பெயர் உண்டாகும், எதிர்ப்புகள் எதிராளிகள் தொல்லை தங்களை கடுமையாக பாதிப்பதுடன், சமூகத்தில் மதிப்பு மரியாதையை கெடுக்கும், எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களுக்கு ஜாமீன் தருவது, தங்களின் குடும்ப வாழ்க்கையை வெகுவாக பாதிப்பதுடன், வாழ்க்கை துணையின் வழியில் விரிசல்களை ஏற்படுத்தும், ராகுவின் சஞ்சாரம் தங்களுக்கு குடும்ப அன்பர்கள், பெரிய மனிதர்கள், ஆன்மீக பெரியோர்களின் வெறுப்புக்கும், சாபத்திற்கும் ஆளாக்கும் என்பதால், பொறுமையை கடைபிடிப்பதுடன் நாவடக்கத்தையும் கையாள வேண்டும் என்பதை தங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

 ராகுவின் பாக்கிய ஸ்தான சஞ்சாரம் சிம்ம லக்கின அன்பர்களுக்கு ஞானம் அறிவார்ந்த செயல்பாடுகளில் பாதிப்பை தருவதுடன், ஆன்மீக வழியில் வெறுப்புணர்வை தரும், இறைநம்பிக்கை பாதிக்கும், நாத்தீக எண்ணங்கள் மேலோங்கும், வாக்குவாதங்களில் ஈடுபாடும் அதனால் வரும் இன்னல்களும் அதிகரிக்கும், பிற்போக்கு தனமான எண்ணங்கள் மேலோங்குவதுடன் மூடநம்பிக்கைகளில் மனம் ஈடுபாடுகாட்டும், ஞானத்தின் தன்மை வெகுவாக பாதிக்கும், அனைவராலும் தொல்லை துன்பங்கள் உண்டாகும், பெரியோர்கள் சொல்லும் அறிவுரைகளை ஏற்பது தங்களுக்கு வரும் இன்னல்களில் இருந்து மீட்டு எடுக்கும், செயற்கரிய காரியங்களை செய்து வெற்றி பெரும் சிம்ம லக்கின அன்பர்களுக்கு இனிவரும் காலம் சற்று சோதனைகளை தரக்கூடும் என்பதை கருத்தில் கொள்க, தாங்கள் நினைத்ததை போல காரியங்கள் நடைபெறாது வெகு தாமதம் ஆகும், தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளில் உள்ள அன்பர்களுக்கு இந்த நேரம் சிறிதும் நன்மையை தர வாய்ப்பில்லை என்பதை கருத்தில் கொள்க, முன்னேற்பாடுகள் சிறப்பாக இல்லை எனில் அனைத்தும் தோல்வியில் முடியும் என்பதை கருத்தில் கொள்க. 

 பாக்கியஸ்தானம் 100% பாதிப்படைவதால் பித்ரு வழிபாடு தங்களுக்கான நெருக்கடிகளை குறைப்பதுடன், சுபகாரியங்கள் வெகு சிறப்பாக நடைமுறைக்கு வரும் குறிப்பாக கல்வியில் வெற்றி, நல்ல வேலைவாய்ப்பு தொழில் முன்னேற்றம், திருமணயோகம், புத்திரபாக்கியம், புதிய வீடு வண்டிவாகனம் சொத்து சுக சேர்க்கை போன்றவை பரிபூர்ணமாக கிடைக்க ஆரம்பிக்கும், தூர தேச பிரயாணங்களை முற்றிலும் தவிர்த்துவிடுவது நல்லது, வெகுதூர பயணங்களை அவசியம் இருந்தால் மட்டும்  மேற்கொள்ளவும், பயணங்களில் பாதுகாப்பு என்பது முக்கியமானது என்பதை கருத்தில் கொள்ளுங்கள், சிறு கவனக்குறைவும் தங்களின் வாழ்க்கையை வெகுவாக பதம்பார்த்துவிடும், மீண்டுவருவதற்கு வெகு காலம் பிடிக்கும் என்பதால் மிக கவனமாக செயல்படுங்கள், பெரியோர் சொல்லும் அறிவுரைகளை ஏற்பதும் ஆன்மீக பெரியோர்கள் ஆசிர்வாதமும், பேராசிரியர்கள் வழங்கும் தீட்சையும் தங்களுக்கு சுபயோகங்களை நல்கும், ராகு தரும் பாதிப்பை வெகுவாக குறைக்கும், கூரிய ஆயுதங்களால் பாதிப்பு உண்டு என்பதால் மிக கவனமுடன் இருப்பது நல்லது, விளையாட்டாக செய்யும் காரியம் பெருவினையமாக முடிந்துவிடும் என்பதை கருத்தில் கொள்க, பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை மட்டுமே தங்களுக்கு சிறப்புகளை தரும்.

துலாம் ராசியில் கேது பகவான் சஞ்சாரம் :

சிம்ம லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான கேது பகவான், தான் சஞ்சாரம் செய்யும் பாவகத்தை 100% விகிதம் வலிமை சேர்ப்பதால், சிம்ம லக்கின அன்பர்களுக்கு தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும், துணிச்சல் மேலோங்கும், எதையும் எதிர்த்து போராடும் குணம் அதிகரிக்கும், எண்ணத்தின் வலிமை மேலோங்கும் மதிப்பு மிக்க செயல்கள் மூலம் நல்ல அங்கீகாரம் கிடைக்கும், எதிர்பாலின சேர்க்கை வழியில் இருந்து பெரும் லாபம் மிக அதிக அளவில் இருப்பதுடன், தங்களின் திட்டமிடுதல்கள் சிறப்பாக நடைமுறைக்கு வரும், வெகு நாள் லட்சியங்கள் யாவும் தங்களுக்கு நிறைவேறும் அற்புதமான நேரமிது, கூட்டுத்தொழில் வழியில் இருந்து வரும் அபரிவிதமான முன்னேற்றம் வெகு சிறப்பாக அமையும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் சார்ந்த அன்பர்களுக்கு இனிவரும் காலம் அபரிவிதமான முன்னேற்றத்துடன் கூடிய வருமான வாய்ப்பை பெரும் அளவில் வாரி வழங்கும், தனித்திறமை வெகு சிறப்பாக வெற்றிகளை வாரி வழங்கும், கூட்டு முயற்சி கூட்டுத்தொழில் போன்றவற்றில் அபரிவிதமான லாபமும் எதிர்பாராத அதிர்ஷ்டமும் வந்து சேரும், வெளிநாடுகளில் இருந்துவரும் தொழில் வாய்ப்புகள் தங்களுக்கான அங்கீகாரத்தை உறுதி செய்யும், தங்களின் உழைப்புக்கான உயர்வும் பொருளாதார சிறப்புகளும் கைகூடி வருவதுடன் புதிய வாய்ப்புகள் தங்களுக்கு வெகுவாக கைகொடுக்கும்.

கமிஷன், எஜென்ஜி, தரகு, காப்பீடு துறை சார்ந்த அன்பர்களுக்கு வருமானம் என்பது கைநிறைவானதாக அமையும், புதிய நபர்கள் மூலம் தொழில் முன்னேற்றம் என்பது தன்னிறைவாக அமைவதுடன் எதிர்பார்த்த லாபமும் வந்துசேரும், பெண்களுக்கான ஆடை ஆபரண தொழில்களில் உள்ள அன்பர்களுக்கு நல்ல விருத்தியை தரும், வரவேற்புடன் கூடிய வருமானம் வெகு சிறப்பாக வந்து சேரும், புதிய தொழில் முனைவோர், புதிய தொழில் செய்ய விருப்பம் கொண்டோருக்கான அற்புதமான நேரம் இது அதற்க்கான சந்தர்ப்பம் மற்றும் வாய்ப்புகள் முழு அளவில் கைகொடுக்கும், இதுவரை இல்லாத முன்னேற்றம் இனிவரும் காலங்களில் தொடர்ச்சியான வெற்றி வாய்ப்புகளை வாரி வழங்கும், பொதுவாக சுய ஜாதகத்தில் வீரிய ஸ்தானமான 3ம் பாவகம் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சகல சௌபாக்கியத்தையும் தனது எண்ணத்தின் வலிமையின் அடிப்படையில் சுவீகரிப்பார்கள், சிம்ம லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு தற்போழுது கோட்சார ரீதியாக கேதுபகவான் 3ம் பாவகத்தை வலிமை சேர்ப்பதால் தங்களின் திட்டமிட்ட செயல்கள் யாவும் முழுமையாக நடைமுறைக்கு வர ஆரம்பிக்கும், கண்ணுக்கு தெரிந்து வரும் சுபயோகங்கள் அனைத்தும் தங்களின் ஆசைகளை நிறைவேற்றும், புதிய சொத்து, புதிய வீடு, புதிய வண்டி வாகனம் யாவும் தங்களுக்கு பரிபூர்ணமாக கிடைக்கும், தனது இளைய சகோதர வழியில் இருந்து வரும் உதவிகள் என்பது தங்களின் வாழ்க்கையில் அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்லும், உறவுகளின் அரவணைப்பு தங்களுக்கு புதிய நம்பிக்கையையும், புதிய உத்வேகத்தையும் முழுமையாக தரும, தொழில் முயற்சி வெற்றி, வேலைவாய்ப்பில் வெற்றி, கல்வியில் வெற்றி என்ற அமைப்பில் தங்களுக்கான சுபயோகங்களை கேதுபகவான் வாரி வழங்க தவறமாட்டார் என்பது உறுதி.

 விளையாட்டு மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் உள்ள சிம்ம லக்கின அன்பர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி வாய்ப்புகள்  முழுமையாக கிடைப்பதுடன், மனவிருப்பங்கள் நிறைவேறும், கேதுவின் சஞ்சாரம் தங்களுக்கு ஒரு வீரியமிக்க செயல்திறனை முழுமையாக வழங்குவதுடன் வெற்றிக்கான அனைத்து கதவுகளையும் திறந்து வைக்கும், துணிச்சல் மிக்க மனோநிலையை பெற்ற சிம்ம லக்கின அன்பர்களுக்கு எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும், பதவி உயர்வு, சமூக மதிப்பு, அரசு அங்கீகாரம் மற்றும் உலகப்பிரபல்யம் ஆகியவை தங்களை தேடிவரும் என்பதால் சற்று பொறுமை காப்பது மட்டுமே தங்களுடைய கடமை என்பதை கருத்தில் கொள்க, எதிர்பாராமல் நிகழும் சிறு மாற்றம் தங்களை வானளவு உயரத்திற்கு எடுத்து செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை, கடின உழைப்பை முன்னெடுக்கும் சிம்ம லக்கின அன்பர்களுக்கு அதற்கான முழு பலன்களையும் கேதுபகவான் வாரி வழங்குவார், தொழில் நுட்ப அறிவை தன்னிறைவாக வாரி வழங்கும் கேது தங்களை விளையாட்டு மற்றும் தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட துறைகளில் ராஜாவாக பரிணமிக்க செய்வார் என்பதில் சந்தேகம் இல்லை, வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வது தங்களின் விழிப்புணர்வு சார்ந்த விஷயம் என்பதை அறிவுறுத்த "ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது.

குறிப்பு :

மேற்சொன்ன ராகுகேது பெயர்ச்சி பலன்கள் என்பது தங்களது சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா புத்தி பாக்கிய ஸ்தானம் மற்றும் வீரிய ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசா புத்தி பாக்கிய ஸ்தானம் மற்றும் வீரிய ஸ்தான பலனை ஏற்று நடத்தவில்லை எனில் கோட்சார ரீதியாக யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில்கொள்க 

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

09443355696