சனி, 30 ஜூலை, 2016

ஞானகாரகன் கேது திசை நடைபெற்றால், ஜாதகருக்கு இன்னல்கள் மற்றும் துன்பங்களே பலாபலன்களாக நடைபெறுமா?


ஞானகாரகன் கேது திசை நடைபெற்றால், ஜாதகருக்கு இன்னல்கள் மற்றும் துன்பங்களே பலாபலன்களாக நடைபெறுமா?

சாயாகிரகமான கேது திசை ஒருவரது சுய ஜாதகத்தில் நடைமுறைக்கு வரும் பொழுது, சம்பந்தப்பட்ட ஜாதகர் இன்னல்கள் மற்றும் துன்பங்களை அனுபவிக்கும் சூழ்நிலையை தரும் என்பதும், கேது திசை நடைபெறும் காலம் முழுவதும் ஜாதகர் அதிக அளவில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும் என்பதும், இல்லறவாழ்க்கையில் அதிக துன்பங்களை தந்து ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபடும் சூழ்நிலையை தரும் என்பதும் முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, கேது திசை ஒருவருக்கு தீமையான பலன்களை மட்டுமே தரும் என்று எந்த ஒரு ஜோதிட மூல நூல்களும் அறுதியிட்டு சொன்னதாக நினைவு இல்லை, மேலும் கேது பகவானின் திசை சுய ஜாதகத்தில் நடைமுறைக்கு வரும் பொழுது, சுய ஜாதகத்தில் பாவக வலிமையை தவிர்த்தது, தனிப்பட்ட பலாபலன்களை வாரி வழங்க வாய்ப்பில்லை.

 இது நவகிரக திசாபுத்திகள் அனைத்திற்கும் பொருந்தும், எந்த ஒரு கிரகத்தின் திசாபுத்தியும் சுய ஜாதகத்தில் உள்ள பாவக பலனை ஏற்று நடத்தும் வல்லமையே பெற்று இருக்கினறன என்பதை கருத்திக்கொள்வது நல்லது, மேலும் பாவ கிரகங்களான, சூரியன்,செவ்வாய்,சனி,ராகு,கேது ஆகியவைகளின் திசாபுத்தி காலங்கள் ஒருவருக்கு அவயோகங்களையும் இன்னல்களையும்  தரும், சுப கிரகங்களான குரு,சுக்கிரன்,சந்திரன்,புதன் ஆகியவைகளின் திசாபுத்தி காலங்கள் ஒருவருக்கு நன்மைகளையும் யோகங்களையும் வழங்கும் என்பதும் பொதுவான கருத்துக்களே, இதற்கும் சுய ஜாதக பாவக வலிமை மற்றும் நவகிரகங்கள் வழங்கும் பலாபலன்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை, கேது திசை ஒருவருக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே!


லக்கினம் : மீனம் 
ராசி : கடகம் 
நட்ஷத்திரம் : பூசம் 1ம் பாதம் 

மேற்கண்ட மீன லக்கின ஜாதகருக்கு எதிர்வர இருக்கும் கேது திசை தரும் பலாபலன்களை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! ஜாதகருக்கு கேது திசையானது வலிமை பெற்ற 5,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக சம்பந்தம் பெற்று, அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு யோகம்  மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும், குறிப்பாக ஜாதகருக்கு கேது திசை காலம் முழுவதும் 5ம் பாவக வழியில் இருந்து அறிவு சார்ந்த முயற்ச்சிகளில் வெற்றி, அறிவு மற்றும் புத்திசாலித்தனத்தால் ஆதாயம், மகிழ்ச்சி நிறைந்த யோக வாழ்க்கை, குடும்ப வாழ்க்கையில் சந்தோசம், குழந்தைகள் வழியில் இருந்து யோகம், வண்டி வாகன யோகம், கற்ற கல்வி வழியில் இருந்து சகல யோகங்களையும் பரிபூர்ணமாக அனுபவிக்கும் யோகத்தை தரும், ஜாதகர் எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் வெற்றிமேல் வெற்றி தரும், செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்ப்பும், நல்ல வாரிசு யோகமும் உண்டாகும், தன்னம்பிக்கையும் அறிவு திறனும் ஜாதகரின் வாழ்க்கையில் வெற்றிகளை வாரி வழங்கும்.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் ஆசைகள் யாவும் நிறைவேறும், திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் பிரபல்ய யோகம் கிட்டும், வாழ்க்கை துணை வழியில் இருந்து திடீர் அதிர்ஷ்டம் மூலம் சொத்து சேர்க்கை உண்டாகும், வாழ்க்கை துணையின் ஆதரவு ஜாதகருக்கு பரிபூர்ணமாக நன்மைகளை வாரி வழங்கும், குறுகிய காலத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும், எதிர்ப்புகள் அனைத்தும் ஜாதகருக்கு சாதகமாக மாறும், நீண்ட ஆயுள் மற்றும் சிறந்த உடல் நலம் என ஜாதகருக்கு திருப்தியான யோக பலன்கள் நடைமுறைக்கு வரும், வெளிநாடுகளில் இருந்து ஜாதகருக்கு சிறப்பான வருமான வாய்ப்புகளும், தொழில் முன்னேற்றமும் உண்டாகும், வாழ்க்கை துணை நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் ஜாதகர் மிக சிறந்த வெற்றியாளனாக பிரகாசிக்கும் யோகத்தை தரும், ஜாதகரின் அறிவு திறன் பெரும் அனைத்து வெற்றிகளுக்கும் காரணமாக அமையும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் தொழில் வெற்றிகள் நிர்ணயம் செய்யப்படும் கேது திசை முழுவதும் ஜாதகரின் வாழ்க்கையில் நல்ல தொழில் முன்னேற்றங்கள் ஏற்ப்படும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும், புதிய தொழில்கள் புதிய சிந்தனைகள் ஜாதகரின் வாழ்க்கையில் சகல யோகங்களையும் வாரி வழங்கும், 11ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமாக அமைவது, ஜாதகரின் கௌரவம் மற்றும் அந்தஸ்தை பிரகாசிக்க செய்யும், முயற்ச்சிக்கும் எந்த செயலும் ஜாதகருக்கு வெறியையும், கைமேல் நல்ல பலன்களையும் வாரி வழங்கும், ஜாதகரின் வாழ்க்கை தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சிறந்த திருப்புமுனையை அமைத்து தரும், கேது திசை காலத்தில் ஜாதகர் பூர்வபுண்ணிய ஸ்தானம், ஆயுள் ஸ்தானம் மற்றும் லாப ஸ்தான வழியில் இருந்து பரிபூர்ண யோகங்களை 100 சதவிகிதம் தங்குதடையின்றி பெறுவார் என்பது உறுதியாகிறது.

எனவே சுய ஜாதகத்தில் கேது திசை நடைமுறைக்கு வரும் பொழுது, அது ஏற்று நடத்தும் பாவக வலிமையை கருத்தில் கொண்டு, சம்பந்த பட்ட ஜாதகருக்கு பலன்கான முற்படுவதே சாலசிறந்தது, குத்து மதிப்பாக பாவ கிரகத்தின் திசை அனைத்தும் தீமையை செய்யும் என்று கருதுவதும், பலன் காண்பதும் முற்றிலும் ஜாதக கணிதம் அறியாத கற்பனை மட்டுமே, அதில் ஏதும் உண்மை இருக்க வாய்ப்பில்லை, ஜாதகத்தில் ஒருவருக்கு நடக்கும் திசை புத்தி அவரது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவக வலிமையின் அடிப்படையிலேயே நிர்ணயம் செய்யபடுகிறது, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பவகங்களின் பலன்களை ஏற்று நடத்தும் திசாபுத்திகள் ஜாதகருக்கு யோகத்தையும், வலிமை அற்ற பாவகங்களின் பலன்களை ஏற்று நடத்தும் திசாபுத்திகள் ஜாதகருக்கு அவயோகத்தையும் தாம் சம்பந்தம் பெற்ற பாவக வழியில் இருந்து தருகிறது என்பதே முற்றிலும் உண்மை அன்பர்களே, எனவே நடைபெறும் திசாபுத்தி எதுவென்றாலும் அவை ஏற்று நடத்தும் பாவக வலிமையை கருத்தில் கொண்டு பலன்கானுவதே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சரியான பலாபலன்களை சொல்வதற்கு ஏதுவானதாக அமையும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 29 ஜூலை, 2016

ஜாதக ஆலோசனை, திருமணம் எப்பொழுது? வாழ்க்கை துணை எப்படி அமையும்?


ஜாதக ஆலோசனை : 

சந்தேகங்களும் அதற்க்கு உண்டான உண்மை விளக்கங்களும்.

Opinions from other Astrologers about my horoscope:

1. Marriage will happen before Aug 2016.
2. No possibilities of marriage in kethu thissai.I should do marriage before kethu thisai starts.
3. Marriage possibilities would be less in my horoscope.
4. Suriyan in 7th house in my horoscope, so i will have problems in my marriage, marriage life. I have kalathira dosham and sarpa dosam. Sun is placed badly in 7th house, so problem will be more in my life.
5. Last minute marriage will cancel.If i marry also,I will stay alone for long time without wife.
6. I have pen(women) sabam in my horoscope. So, i could choose the girl who is a widower or divorcee or short time separated girl from husband or inter caste girl or engagement cancelled girl.
7. I should do only job. I should not invest money in business, if i do business, there will be a huge loss.
8. I will have extra affair or may be possibility of second marriage.
9. I have less luck in my horoscope.
10.I will loose my properties and wealth.
11.Future wife will be short tempered nature. Marriage life will not be happy.
12.Some problems will come in before marriage.
13.Rahu in 2nd place and kethu in 8th place, so i have sarpa dosam. Because of this, marriage is getting delayed.
14.I will loose many big opportunities in my life.

15.I will get a very old age wife.


1) நிச்சயமாக நடக்க வாய்ப்பில்லை, ஏனெனில் தற்போழுது நடைபெறும் புதன் திசையும் தங்களுக்கு விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது, புதன் திசையில் நடைபெறும் சனி புத்தியும் தங்களுக்கு விரைய ஸ்தான பலனையே ஏற்று நடத்துகிறது, எனவே தங்கள் எடுக்கும் திருமண முயற்ச்சிகள் யாவும் தோல்வியையே தழுவும்.

2) கேது திசையில் திருமணம் செய்ய வாய்ப்பில்லை என்பது, முற்றிலும் தவறான கருத்து, ஏனெனில் கேது திசை தரும் பலாபலன்கள் பற்றியும், கேது திசை ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமை பற்றியும் அறியாமல் சொல்லும் பொது பலனாகவே இது உள்ளது, தங்களது ஜாதகத்தில் அடுத்து வரும் கேது திசை தங்களுக்கு லாப ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்துவது தங்களுக்கு அதிர்ஷ்டமிக்க யோகவாழ்க்கையை வாரி வழங்கும், மேற்கண்ட கூற்று முற்றிலும் தவறானது, கேது திசை தங்களுக்கு முழு அளவில் யோகத்தையே தருகிறது, ( கேது திசை வழங்கும் பலாபலன்கள் பற்றி தனி பதிவு இடப்படும் ) மேலும் கேது திசைக்கு முன்னாள் தற்போழுது நடைபெறும் புதன் திசையும் சரி, புதன் திசை சனி புத்தியும் சரி தங்களுக்கு விரைய ஸ்தான  பலனையே நடத்துவதால் நிச்சயம் திருமணம் நடைபெற வாய்ப்பில்லை என்பதை உணருங்கள், தங்களுக்கு எதிர்வரும் கேது திசையே  யோகம் மிகுந்த திருமண வாழ்க்கையை அமைத்து தரும்.

3) இது தங்களது ஜாதக வலிமைக்கு புறம்பான உண்மையற்ற கருத்து, சுய ஜாதகத்தில் ஒருவருக்கு குடும்பம் எனும் 2ம் பாவகமும், களத்திரம் எனும் 7ம் பாவகமும் கடுமையாக பாதிக்கப்பட்டால் மட்டுமே ( பாதக ஸ்தான தொடர்பை பெற்று, நடைபெறும் திசா புத்திகளும் ஜாதகருக்கு பாதிக்கப்பட்ட 2,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே) ஜாதகருக்கு திருமண வாழ்க்கை இல்லை என முடிவு செய்யலாம், தங்களது சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் வலிமை உடனும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் மிக மிக வலிமையுடன் இருப்பது, மனதிற்கு உகந்த இல்லற வாழ்க்கையை வாரி வழங்கும், இது கேது திசையில் கேது புத்தியிலேயே நடைமுறைக்கு வரும்.

4) சூரியன் 7ம் பாவகத்தில் அமர்ந்தாலே தீமையை மட்டுமே செய்யும் என்ற கூற்று முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, தங்களது சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் மிகவும் வலிமை பெற்று உள்ளது எனவே, இங்கு அமர்ந்த சூரியபகவான் தங்களுக்கு நன்மைகளையும் யோகத்தியுமே நல்குவார், குறிப்பாக வெளிநாடு, வெளியூர் வழியில் இருந்து யோகம் உண்டாகும், களத்திர ஸ்தானம் தங்களுக்கு உபய மண் தத்துவத்தில் அமைவது, தங்களது வாழ்க்கை துணை வழியில் இருந்து பரிபூரண யோகங்களை அனுபவிக்க வல்லவர் என்பதை தெளிவுபடுத்துகிறது, மேலும் இங்கு அமர்ந்த சூரிய பகவானால் தங்களுக்கு எவ்வித இன்னல்களும் இல்லை, இல்லற வாழ்க்கையிலும் யாதொரு துன்பமும் நிகழாது என்பதை கருத்தில் கொள்வது தங்களுக்கு  நன்மையை தரும், மேலும் களத்திர ஸ்தானம் வலிமை பெற்றுள்ளது யோகமே, இதில் யாதொரு களத்திர தோஷமும் இல்லை, சர்ப்ப தோஷமும் இல்லை என்பதே உண்மை.

5) திருமண முயற்ச்சிகள் கடைசி நேரத்தில் தோல்வியை தந்தத்திற்கு தற்போழுது தங்களுக்கு நடைபெறும் திசை மற்றும் புத்தி (புதன்,சனி  ) வலிமை அற்ற விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்திடுவது, மட்டுமே காரணமாக சொல்ல இயலும், ஆகவே தற்போழுது  நடைபெறும் திசை மற்றும் புத்தி சாதகமாக தங்களுக்கு இல்லாமல் இருப்பதே இதற்க்கு முழு முதற் காரணமாக அமைந்து விடுகிறது, மேலும் வாழ்க்கை துணை இல்லாமல் வெகு காலம் எல்லாம் தாங்கள் அவதிப்படும் நிலையை தாராது, நடைபெறும் புதன் திசை சனி புத்தி  நிறைவுக்கு பிறகு வரும் கேது திசை, கேது புத்தியில் நல்ல வாழ்க்கை துணை அமையும் .

6) தங்களுக்கு எந்த ஒரு பெண்ணின் சாபமும் இல்லை ( அப்படி இருப்பின் சுய ஜாதகத்தில் 2,7,8ம் பாவகங்கள் காட்டி கொடுத்துவிடும் ) மேலும் விதவை பெண்ணை திருமணம் செய்யும் அளவிற்கு தங்களுக்கு எந்த ஒரு குறையும் ஜாதக ரீதியாக இல்லை, வேற்று ஜாதியில் திருமணம் செய்யும் நிலையும் தங்களுக்கு வாராது, கணவனை குறுகிய காலத்தில் பிரிந்த பெண்ணையும் திருமணம் செய்யும் நிலையும் வாராது, ஒருவேளை இதை சொன்னவர்களுக்கு வேண்டுமானால் பெண் சாபம் இருக்க கூடும், அதனால் தான் மேற்கண்ட பலனை தங்களுக்கு வழங்கி உள்ளனர்.

7) சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவதும், லாப ஸ்தானம் மிகவும் வலிமை பெறுவதும் தங்களுக்கு நல்ல தொழில் வெற்றிகளை வாரி வழங்கும், இது திருமணத்திற்கு பிறகும், கேது மற்றும் சுக்கிரன் திசையில் நடைமுறைக்கு வரும், ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருக்கும் ஜாதகர்கள் சுய தொழில் செய்ய அருகதை உடையவர்கள், லாப ஸ்தானம் வலிமை பெறுவது செய்யும் தொழில் வழியில் இருந்து நல்ல லாபங்களை முன்னேற்றத்தையும் வாரி வழங்கும், தாங்கள் ஓர் இடத்தில் பணிபுரிவதை விட சுய தொழில் செய்வது சகல நிலைகளில் இருந்து லாபத்தை வாரி வழங்கும், அதற்க்கு உண்டான வாய்ப்புகள் தங்களுக்கு வந்துகொண்டு இருக்கின்றது வாழ்த்துக்கள்.

8) இரண்டாவது திருமணத்துக்கு தங்களுக்கு வாய்ப்பில்லை, உங்களுக்கு விருப்பம் இருந்தால் முயற்ச்சி செய்யலாம், அதற்க்கு " ஜோதிடதீபம் " பொறுப்பு ஏற்காது.

9) ஒருவரது ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் பாவகம் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதை விட  வேறு அதிர்ஷ்டம் உலகில் இல்லை எனலாம், தங்களுக்கு 1,5,7,8,11ம் வீடுகள் அனைத்தும் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, அதிர்ஷ்டத்தின் தன்மையை தங்களது ஜாதகத்திற்கு இறைஅருள் பரிபூரணமாக வாரி வழங்கி உள்ளது, ஆனால் என்ன தற்போழுது நடைபெறும் புதன் திசை தங்களுக்கு லாப ஸ்தான பலனை ஏற்று நடத்தவில்லை, அடுத்து வரும் கேது மற்றும் சுக்கிரன் திசைகளில் அதிர்ஷ்டத்தின் முழு பலாபலன்களை தாங்கள்  பரிபூர்ணமாக அனுபவிக்கலாம் என்பது வரவேற்க தக்க அம்சமாகும், (அவயோகம் பெற்றவர்களிடம் தாங்கள் ஆலோசனை பெற்றால் மேற்கண்ட கருத்தைத்தான் தங்களுக்கு வழங்குவார்கள்.)

10) தங்களின் அறிவு சார்ந்த முடிவுகள் மட்டுமே தங்களுக்கு சுக குறைவை தரும், எந்த விதத்திலும் தங்களுக்கு பொருள் இழப்பு, சொத்து இழப்பு, மற்றும் பொருளாதார இழப்பு வர வாய்ப்பில்லை.

11) தங்களது களத்திர ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது, தங்களுக்கு வரும் வாழ்க்கை துணையின் விசாலமான மனப்பக்குவம் கொண்டவர் என்பதை உறுதி செய்கிறது, மேலும் அழகும் அறிவும் ஒருங்கே அமையப்பெற்ற பொறுமைசாலியாக இருப்பர் என்பதும் தெளிவாகிறது. தங்களது இல்லற வாழ்க்கை 100% விகித மகிழ்சசியுடன் சிறப்பாக இருக்கும் என்பதே உண்மை.

12) ஒன்றும் வராது, ஏனெனில் சுய ஜாதகம் மிகவும் வலிமையுடன் உள்ளது, இதை சொன்னவர்களுக்கு வேண்டுமானால் ஏதாவது வராதது வரக்கூடும்.

13) 2ல் ராகு,8ல் கேது இருப்பது தங்களது ஜாதகத்தில் வலிமையாக உள்ளதா? வலிமை அற்று உள்ளதா? என்பதில் தெளிவு தேவை, தங்களது ஜாதகத்தில் 2ல் உள்ள ராகு தங்களுக்கு சிறப்பான நன்மைகளை வழங்குகிறார், 8ல் உள்ள கேது சற்று இன்னல்களை தருகிறார் அவ்வளவே, இதில் சர்ப்ப தோஷத்திற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை, சாயா கிரகங்கள் வழங்கு பலாபலன்கள் பற்றிய தெளிவு இல்லாத பொழுது, சர்ப்ப தோஷம் என்று கூறிவிடுவது சிலரது இயல்பாக உள்ளது என்பதே முற்றிலும் உண்மை, இதற்கும் தங்களது திருமண தாமதத்திற்கு யாதொரு காரணமும் இல்லை, ராகு வின் வலிமையை தங்களுக்கு வரும் வருமானத்தை கொண்டு தாங்களே சுய மதிப்பீடு செய்யலாம், ராகு கேது பற்றி விரிவாக பதிவு செய்யப்படும்.

14) அப்படி ஒரு நிகழ்வு தங்களின் வாழ்க்கையில் நடைபெறாது, ஏனெனில் லாப ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது தங்களின் வாழ்க்கையில் அனைத்து வாய்ப்புகளையும் பரிபூரணமாக அனுபவிக்க வைக்கும், குறிப்பாக அடுத்து வரும் கேது திசை மற்றும் சுக்கிரன் திசை தங்களின் வாழ்க்கையில் யோகங்களை வாரி வழங்கும்.

15) களத்திர ஸ்தான வலிமை மற்றும் களத்திர ஸ்தான அதிபதி ஆகியவை தங்களுக்கு மிகவும் சிறப்பாக இருப்பது நிச்சயம் இளம் வயது வாழ்க்கை துணையை பெற்று தரும், மேற்கண்ட கூற்றில் சிறிதும் உண்மை இல்லை அன்பரே, கேது திசை சுக்கிரன் திசை இரண்டு திசைகளும் தங்களுக்கு லாப ஸ்தான பலனை வாரி வழங்குவது அதிர்ஷ்டகரமான எதிர்காலத்தை வாரி வழங்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை அன்பரே!

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 26 ஜூலை, 2016

களத்திர ஸ்தானமும், குடும்ப ஸ்தானமும் பாதிக்கப்பட்டால் ஜாதகரின் நிலை என்னவாகும் ?

  


இது ஒரு சிறந்த கேள்வி, சுய ஜாதகத்தில் 2ம் பாவகமான குடும்ப ஸ்தானமும், 7ம் பாவகமான களத்திர ஸ்தானமும், ஒரு ஜாதகருக்கு பாதிக்கப்பட்டு இருப்பின் ஜாதகரின் குடும்பம் மற்றும் வாழ்க்கை துணை வழியில் இருந்து இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், பாதிப்பானது ஒருவேளை பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருந்தால் ஜாதகர் குடும்ப ஸ்தான வழியில் இருந்தும் களத்திர ஸ்தான வழியில் இருந்து தங்க இயலாத கடுமையான இன்னல்களையும், நெருக்கடிகளையும் வாரி வழங்கும், மேலும் மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை ஜாதகர் தவிர்க்க இயலாது என்பது வருத்தத்திற்கு உரியது, எனவே சுய ஜாதகத்தில் 2ம் வீடான குடும்ப ஸ்தானமும், 7ம் வீடான களத்திர ஸ்தானமும் பாதிக்கப்பட்டோ அல்லது பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றோ இருந்தால், ஜாதகர் தமது குடும்பம் மற்றும் களத்திர வாழ்க்கையை மிக சிறப்பாக கையாள வேண்டும், ஏனெனில் மேற்கண்ட பாதிப்பானது இருபக்கமும் கூர்மையான முனையுள்ள கத்திக்கு நிகரானது, சிறிது கவனக்குறைவாக கையாண்டாலும் இருபக்கமும் சேதாரம் மிக அதிக அளவில் இருக்கும் என்பதை நினைவில் கொள்வது நலம் தரும்.

பொதுவாக சுய ஜாதகத்தில் மற்ற பாவகங்கள் பாதிக்கப்படும் பொழுது, ஜாதகருக்கு வரும் பாதிப்பானது, ஜாதகருடன் சென்றுவிடும் அல்லது அதற்க்கு சரியான தீர்வு காண இயலும், ஆனால் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தான வழியில் இருந்து வரும் இன்னல்களானது இல்லற வாழ்க்கையில் உள்ள இரு நபர்களால் கையாளப்படுவதால், தீர்வு காண மிகுந்த முயற்சசிகளை மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளிவிடும், குறிப்பாக குடும்ப ஸ்தானம் பாதிக்கப்படும் பொழுது தம்பதியரின் வாழ்க்கையில் வீண் வாக்குவாதங்கள் அதிகரிக்கும், பொருளாதார தடைகளும், வருமான வாய்ப்புகளும் வெகுவாக குறையும், நிதி பற்றா குறை ஜாதகரையும் ஜாதகரை சார்ந்தவர்களையும் நிலைதடுமாற செய்யும், ஜாதகரின் எண்ணங்கள் யாவும் நிறைவேறாமல் போக வாய்ப்புண்டு, தனது வாழ்க்கையை தான் நிர்ணயம் செய்ய இயலாமல், மற்றவருக்காக வாழும் சூழ்நிலையை தரும் அல்லது மற்றவரை சார்ந்து வாழும் சூழ்நிலையி தரும், சுயமாக செயல்பட இயலாமல், மற்றவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் துர்பாக்கிய  நிலையை தரும், அதில் இருந்து மீண்டு வரவும் இயலாது, எனவே ஏக்கம் நிறைந்த திருப்தி இல்லாத வாழ்க்கையையே ஜாதக எதிர்கொள்ளும் சூழ்நிலையை  தரும், பொருளாதார தேவைகளை நிறைவேற்றி கொள்ள மற்றவர்களின் உதவிகளை நிச்சயம் நாடவேண்டிய சூழ்நிலையி தரும், குடும்பத்தில் ஜாதகரின் பேச்சு பலரது நிம்மதியை வெகுவாக குலைக்கும், அனைவரிடத்திலும் வெறுப்பை சம்பாதிக்கும் நிலையை தரும்.

 இல்லறவாழ்க்கை அமைவதில் அதிக அளவில் தடைகளை தரும், தமக்கு உகந்த ஓர் வாழ்க்கை துணையை சுயமாக ஜாதகரோ, ஜாதகியோ தேர்ந்து எடுக்க இயலாது, தேர்ந்தெடுத்தாலும் அது அவருக்கு பொருத்தமானவராக அமைவாரா என்பது கேள்விக்குறியே ? குடும்ப ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது என்பது ஜாதகரின் குடும்ப வாழ்க்கையில் மிகுந்த துர்பாக்கியத்தை வாரி வழங்கும், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் சிரமங்களுக்கு ஒரு அளவு இருக்காது, பொருளாதார நெருக்கடிகள் ஜாதகரை கடுமையாக பாதிக்கும், வீண் வாக்குவாதங்கள் ஜாதகரை மிகப்பெரிய சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகளையும் சந்திக்கும் சூழ்நிலைக்கு ஆளாக்கும், இல்லற வாழ்க்கையில் நிம்மதியின்மை ஜாதகரை வெகுவாக பாதிக்கும், தன்னம்பிக்கை சுய மரியாதை அனைத்தையும் இழக்கும் சூழ்நிலையை தரும், ஜாதகரின் வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்காது, பொருளாதார தேவைகளை  பூர்த்திசெய்ய ஜாதகர் தனது வாழ்நாள் முழுவதையும் விரையம் செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவர், இதற்க்கு காரணமாக ஜாதகரை சார்ந்தவர்களே இருப்பார்கள் என்பது கண்கூடான உண்மை, மேலும் ஜாதகரை பொருளாதார சிக்கல்களில் மிக எளிதாக சிக்கவைத்துவிடுவார்கள், ஜாதகரின் லட்ச்சியங்களும், ஆசைகளும் இறுதி வரை வெறும் கனவாகவே நிலைத்துவிடும்.

களத்திர ஸ்தான பாதிப்பு என்பது ஜாதகரை தனது விருப்பப்படி வாழ்க்கை துணை,நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளை தேர்வு செய்யும் தன்மையை தந்துவிடும், தேர்வு செய்த பிறகுதான் தெரியும் ஜாதகரின் வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் தான் செய்த தவறான தேர்வுகளான வாழ்க்கை துணை,நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளே காரணம் என்பது, இதில் நண்பர்களையும், கூட்டாளிகளையும் ஜாதகர் தவிர்த்துவிட வாய்ப்புண்டு வாழ்க்கைத்துணையை தவிர்ப்பது என்பது சற்று கடினமான விஷயமாக அமைந்துவிடும், மேலும் தனது வாழ்க்கை துணையின் வழியில் இருந்து ஜாதகர் அவயோக பலன்களை நிச்சயம் எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுவர், பெரும்பாலும் சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் பாதிக்கப்பட்டு இருக்கும் அன்பர்களின் வாழ்க்கையில் திருமணம் வெகுவாக தாமதப்படுகிறது, அல்லது தமக்கு சற்றும் பொருத்தம் அற்ற  வாழ்க்கைத்துணை மூலம் இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தருகிறது.

களத்திர ஸ்தானம் பாதக ஸ்தான தொடர்பை பெரும் ஜாதகர்கள், தமது வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் அவசரம் மற்றும் திடீர் முடிவுகளை மேற்கொள்வது உகந்தது அல்ல, ஏனெனில் முற்றிலும் தவறான, தனக்கு சிறிதும் பொருத்தமற்ற வாழ்க்கை துணையை தேர்வு செய்துவிடும் சூழ்நிலையை தந்துவிடும், மேலும் அவர்கள் வழியில் இருந்து சொல்லவொண்ணா துன்பங்களுக்கு ஆளாகும் நிலையினை தந்துவிடும்,  இதனால் ஜாதகரின் உடல் மனம் இரண்டும் கடுமையாக பாதிக்கும், வாழ்க்கையில்  சூழ்நிலை கைதியாக வாழும் தன்மையை தரும், இல்லறவாழ்க்கையில் மிகவும் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையையும், திருமணத்திற்கு முன்புவரை இருந்த வாழ்க்கைக்கும், திருமணத்திற்கு பிறகான வாழ்க்கைக்கும் இடைவெளி அதிகரிக்கும், தாம் செய்த தவறான முடிவுகளால்  தமது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் இன்னல்களை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவர், ஜாதகரின் முழு சுதந்திரமும் பறிபோகும், எதிர்த்து போராடும் திறன் இன்றி கூனி குறுகி சமுதாயத்தில் அவயோக வாழ்க்கையை வாழும் நிலையை தரும், குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானங்கள் சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பின்,  சம்பந்தப்பட்ட ஜாதகர் மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெற்ற ஜாதகரை வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே வாழ்க்கை சிறப்பாக அமையும், ஒருவேளை 2,7ம் பாவகங்கள் பாதிக்கப்பட்ட ஜாதகரையோ ஜாதகியையோ தேர்வு செய்தால் வாழ்க்கை மிகப்பெரிய சூன்யமாக மாறிவிடும், பெரும்பாலும் தற்கொலை போன்ற முடிவுகளை மேற்கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்படும் அன்பர்களின் சுய  ஜாதகங்களில் லக்கினமும் பாதிக்கப்பட்டு, மேற்கண்ட பாவகங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதை காண முடிகிறது.

சுய ஜாதகத்தில் 2,7ம் பாவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட ஓர் ஜாதகத்தை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே!


லக்கினம் : தனுசு 
ராசி : மிதுனம் 
நட்ஷத்திரம் : மிருகசீரிடம் 3ம் பாதம் 

ஜாதகருக்கு குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம், களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம், ஜாதகர் வெகு சுதந்திரமாக சில முடிவுகளை மேற்கொண்டு தனது வாழ்க்கைக்கு இன்னல்களை தாமே வரவைத்துக்கொண்டார், தமது சுய விருப்பப்படி வாழ்க்கை துணையை தேர்வு செய்தார், ஆரம்பித்தில் இனித்த இல்லற வாழ்க்கை 60 நாட்களுக்கு பிறகு கசந்தது, "மோகம் 30 நாள் ஆசை 60 நாள்" என்ற பழமொழி ஜாதகருக்கு நடைமுறைக்கு வந்தது, கருத்து வேறுபாடுகளும், மன கசப்பும் இல்லற வாழ்க்கையில் கட்டாய பிரிவினை வழங்கியது, ஜாதகரின் எதிர்கால திட்டமிடுதல்கள் அனைத்தும் பொய்த்து போனது, கல்வி தொழில் மற்றும் உடல் நலம்  கடுமையாக பாதித்தது, ஜாதகரை அவரது வாழ்க்கை துணை குறிப்பிட்ட சிலமாதங்களில் நன்றாக பயன்படுத்திக்கொண்டு, பல நன்மைகளை பெற்றுக்கொண்டார், தான் ஏமாறுவதும் ஜாதகருக்கு தெரியவில்லை, தெரிந்த பொழுது ஒன்று செய்ய இயலாத சூழ்நிலை, வாழ்க்கையில் அவசரப்பட்டு எடுத்த முடிவிற்க்கான பலாபலன்களை அனுபவிக்கும் பொழுது "நித்திய கண்டம் பூரண ஆயுசானது " ஜாதகரின் வாழ்க்கை. லட்ச்சியங்கள் ஆசைகள் அனைத்தும் காற்றில் பறந்தது, நிம்மதி இல்லாமல் அவல நிலையை தந்து, உறவுகளின் ஏளன பேச்சிற்கு ஆளாக்கியது, எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியானது.

இதற்க்கு எல்லாம் ஜாதகரின் களத்திர பாவகம், பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது காரணமாக அமைந்தது, ஜாதகர் தேர்ந்தெடுத்த வாழ்க்கை துணை, மிக எளிதாக ஜாதகரை உதாசீனம் செய்து தமது சுய ரூபத்தை காட்ட ஆரம்பித்தார், இதனால் ஜாதகர் எந்த ஒரு முடிவும் செய்ய இயலாத சூழ்நிலைக்கு ஆளானார், அதிக மனஅழுத்தம், மனபோராட்டம் ஆகியவை ஜாதகரின் உடல் நலத்தை வெகுவாக பாதித்தது, இயல்பு வாழ்க்கைக்கு ஜாதகரால் திரும்ப இயலாத நிலை உருவானது, தனது சேமிப்பு அனைத்தும் கரைந்து, வேலையும் பறிபோனது, உறவுகள் வழியில் எதிர்ப்பு, பெயருக்கு களங்கம், நிம்மதி இன்மை என ஜாதகர் பல விதங்களில் இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டார், இதற்க்கெல்லாம் காரணமாக சுய ஜாதகத்தில் 2,7ம் பாவக வலிமை அற்ற நிலையை கூறினாலும், 7ம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று தற்போழுது நடைபெறும் லக்கினாதிபதி திசையான குரு திசை பாதக ஸ்தான பலனையே வாரி வழங்குவது, ஜாதகர் அனுபவிக்கும் இன்னல்களுக்கு எல்லாம் முழு முதற்காரணமாக அமைந்துவிட்டது.

சுய ஜாதகத்தில் 2,7ம் பாவகங்கள் பாதிக்கப்படுவது ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட  பாவக வழியில் இருந்து இன்னல்களை தரும் என்பதை மறுப்பதற்கு இல்லை, ஆனால் சரியான பருவ வயதில் நடைபெறும் திசாபுக்திகள் ( 16 முதல் 26 வயது வரை ) பாதிக்கப்பட்ட 2,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் களத்திர வாழ்க்கை சிங்கத்தின் வாயில் அகப்பட்ட புள்ளிமானின் நிலைக்கு  பொருத்தமானதாக மாறிவிடும், எனவே சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானங்கள் வலிமை நிலையை, ஜோதிடர் உதவி கொண்டு தெளிவடைந்து, ஒருவேளை மேற்கண்ட பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருப்பின் சுயமாக எந்த ஒரு முடிவும் எடுக்காமல், பெரியோர் ஆசியையும், ஜோதிடர்களின் அறிவுரைகளையும் ஏற்றுக்கொண்டு, இனிய இல்லறம் காண "ஜோதிடதீபம்" அறிவுறுத்துகிறது, மேற்கண்ட பாதிப்பான நிலையில் இருந்து விடுபட சரியான பரிகாரங்களை நாடி நலம் பெறவும், சரியான வாழ்க்கை துணையை தேர்வு செய்யவும் தெய்வீக கலையான "ஜோதிட சாஸ்த்திரம்" நிச்சயம் தங்களுக்கு சிறப்பான வழிகாட்டுதல்களை வாரி வழங்கும் என்பதை நினைவில் கொள்க.

குறிப்பு :

திருமண வாழ்க்கை என்பது மிக சாதாரணமாக எதிர்கொள்ளும் விஷயம் அல்ல என்பதை இளம் வயதில் உள்ள அனைவரும் கருத்தில் கொள்வது நலம் தரும், வாழ்க்கை துணையின் ஜாதகம் தங்களுக்கு மிகச்சரியாக பொருந்தி இருந்தால் தங்களின் வாழ்க்கையில் வரும் யோக நிகழ்வுகளுக்கு எவ்வித குறையும் இருக்காது, சகல நிலைகளில் இருந்து முன்னேற்றமும், இல்லற வாழ்க்கையில் இன்பமும் வந்து சேரும், மாறாக பாதிக்கப்பட்டு இருந்தால் தங்களின் சுய ஜாதகம் வலிமை பெற்று இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் நன்மைகளை ஓரளவு பெற இயலும், ஒருவேளை தங்களின் ஜாதகமும் பாதிக்கப்பட்டு இருந்தால், இல்லற வாழ்க்கையில் துன்பத்தை தவிர்க்க இயலாது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 25 ஜூலை, 2016

நவகிரக திசாபுக்திகள் எனது ஜாதகத்திற்கு வழங்கும் யோக அவயோக நிலையை பற்றி விளக்கம் தர வேண்டுகிறேன் !


கேள்வி :

2க்கு உடைய சூரியன் திசை மிகுந்த சிரமங்களையே தந்துள்ளது, எதிர்வரும் லக்கினாதிபதி சந்திரன் திசை மற்றும் அதற்க்கு பிறகு வரும் மற்ற திசைகள் எனக்கும் நன்மையை தருமா? தீமைகளை தருமா ? எனக்கு நன்மைகளை தரும் திசாபுக்திகள் எவை? என்பதனையும், தீமைகளை தரும் திசாபுக்திகள் எவை? என்பதனையும் விளக்கம் தர வேண்டுகிறேன்.

பதில் :

சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் ஒருவருக்கு தனிப்பட்ட ஆளுமையின் கீழ் பலாபலன்களை வழங்க இயலாது, தங்களின் சுய ஜாதக பாவக வலிமையின் அடிப்படையிலேயே, யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், குறிப்பாக நவகிரகங்களில் சுப கிரகங்களின் திசா புக்திகள் நன்மையையும் யோகத்தையும் வழங்கும் என்பதும், அசுப கிரகங்களின் திசா புக்திகள் தீமையையும் அவயோகத்தையும் வழங்கும் என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதே, நமது சுய ஜாதகத்தில்  உள்ள பாவகங்களின் வலிமையின் தன்மையையே நவகிரகங்கள் தனது திசா புத்தி காலங்களில் நடைமுறைக்கு கொண்டு வருகிறது, இதில் நமது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்களின் பலனை ஏற்று நடத்தும் பொழுது ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து நன்மைகளும் யோகங்களும் சம்பந்தப்பட்ட பாவக வலிமைக்கு ஏற்ப நடைமுறைக்கு வருகின்றது, வலிமை அற்ற பாவகங்களின் பலனை ஏற்று நடத்தும் பொழுது ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து தீமைகளும் அவயோகங்களும்சம்பந்தப்பட்ட பாவக வலிமைக்கு ஏற்ப நடைமுறைக்கு வருகின்றது.

 எனவே சுய ஜாதகத்தில் 12 பாவகங்களின் வலிமை என்னவோ அதுவே திசாபுக்திகளில் நடைமுறைக்கு வரும் என்பதே  உண்மை, மாறாக நவகிரகங்களின் திசா புக்திகள் தனிப்பட்ட முறையில் பலாபலன்களை வழங்குவதில்லை, மேலும் ஒருவர் பிறக்கும் பொழுதே இவருக்கு இதுதான் என்று விதி வழியில் சுயஜாதகம் நிர்ணயம் செய்யப்படுகிறது, தங்களது கேள்விக்கு வருவோம் தங்களுக்கு சுய ஜாதக படி நவ கிரகங்களின் திசாபுக்திகள் வழங்கும் பலாபலன்கள் பற்றி விளக்கம் தேவை, அதைப்பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், தங்களுக்கு நவ கிரகங்களின் திசாபுக்திகள் நன்மையையும் யோகத்தையும் தருவது எவை? தீமையையும் அவயோகத்தையும் தருவது எவை என்பதை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் .


லக்கினம் : கடகம்
ராசி : சிம்மம்
நட்சத்திரம் : மகம் 2ம் பாதம்

தங்களது ஜாதகத்தில் வலிமை மிக்க பாவக  தொடர்புகள் :

1,3,4,9,12ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.
5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம்.
6,10ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.
7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்.

தங்களது ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் : 

2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம்.
11ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.

நன்மைகளை தரும் பாவகங்கள் :

மேற்கண்டவற்றில் ஜீவன ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் வீடுகளான 1,3,4,9,12ம் வீடுகள் வழியில் இருந்து 100% விகித நன்மைகள் தங்களுக்கு நடைபெறும்.

5ம் பாவக வழியில் இருந்து 70% விகித நன்மைகளும் யோக பலன்களும் தங்களுக்கு நடைமுறைக்கும் வரும்.

6,10ம் பாவக வழியில் இருந்து 40% விகித நன்மைகளும் யோக பலன்களும் தங்களுக்கு நடைமுறைக்கும் வரும்.

7ம் பாவக வழியில் இருந்து 100% விகித நன்மைகளும் யோக பலன்களும் தங்களுக்கு நடைமுறைக்கும் வரும்.

தீமைகளை தரும் பாவகங்கள் :

2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு 2,8ம் வீடுகள் வழியில் இருந்து 70% விகித தீமைகளும் அவயோக பலன்களும் நடைமுறைக்கு வரும்.

11ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு பாதக ஸ்தான வழியில் இருந்து 200% விகித தீமைகளும் அவயோக பலன்களும் நடைமுறைக்கு வரும்.

வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து தங்கள் எவ்வித யோகங்களை பெறுவீர்கள் என்பதை பற்றியும், வலிமையற்ற பாவக வழியில் இருந்து தங்கள் எவ்வித அவயோகங்களை பெறுவீர்கள் என்பதை பற்றியும் நேரில் " ஜாதக ஆலோசனை " பெரும் பொழுது தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

அடுத்து நவ கிரகங்கள் தனது திசாபுத்தி காலங்களில் எந்த? பாவக பலனை ஏற்று  நடத்துகிறது ? என்பதை பற்றி இனி ஆய்வுக்கு எடுத்து கொள்வோம்.

தங்களது ஜெனன காலத்தில் கேது திசை நடைமுறையில் இருந்திருக்கின்றது, இந்த கேது திசை தங்களுக்கு வலிமை பெற்ற களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்தியது யோகம் தரும் அமைப்பாகும், இதனால் தங்களின் குழந்தை பருவம் சிறப்பாக இருந்திருக்கும், குறிப்பாக உடல்  ஆரோக்கியம் மற்றும் வளரும் சூழ்நிலை மிக மிக சிறப்பாக அமைந்திருக்கும்.

2வதாக நடைபெற்ற சுக்கிரன் திசை 20 வருட காலம் தங்களுக்கு வலிமை பெற்ற ( 6,10ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் )  பாக்கிய ஸ்தான பலனை ஏற்று நடத்தியிருக்கின்றது, எனவே தங்களின் கல்வி காலமும், இளமை பருவம் சிறப்பாக சென்று இருக்கும், மேலும் தங்கள் இந்த காலங்களில் கல்வியில் சிறந்து விளங்கும் தன்மையை தந்திருக்கும், ஆன்றோர் பெரியோர் ஆதரவு வெகுவாக தங்களுக்கு நன்மைகளை வழங்கி இருக்கும்.

3வதாக தற்போழுது நடைபெறும் சூரியன் திசை தங்களுக்கு வலிமை அற்ற ( 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் ) ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்துவது, தங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்கிய பொழுதும், வீண் விரையங்களையும், திடீர் இழப்புகளையும், உடல் நல குறைவையும் தவிர்க்க இயலாது, மேலும் குடும்ப வாழ்க்கையிலும், வருமானம் சார்ந்த விஷயங்களிலும் இன்னல்கள் அதிக அளவில் வர வாய்ப்புண்டு.

ஆனால் 4வதாக நடைபெற இருக்கின்ற சந்திரன் திசை தங்களுக்கு வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்திடுவது சிறப்பான எதிர்காலத்தையும், 5வதாக நடைபெற இருக்கின்ற செவ்வாய் திசை தங்களுக்கு களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவது எதிர்பாராத யோகங்களையும், 6வதாக நடைபெற இருக்கின்ற ராகு திசை தங்களுக்கு வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது தொழில் ரீதியான வெற்றிகளையும், 7வதாக நடைபெற இருக்கின்ற குரு திசை தங்களுக்கு வலிமை பெற்ற பூர்வ புண்ணிய ஸ்தான வழியில் இருந்து யோக பலன்களையும், வாரி வழங்கும். இதில் மேற்கண்ட திசைகள் மட்டுமல்ல புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்களும் மேற்கண்ட பாவக தொடர்பு வழியில் இருந்து நன்மைகளையே செய்யும்.

ஆனால் 8வதாக வரும் சனி திசை தங்களுக்கு ( திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ) வலிமை அற்ற பாதக ஸ்தான (11ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்) பலனை  ஏற்று நடத்துவது தங்களுக்கு 11ம் பாவக வழியில் இருந்து கடுமையான 200% விகித இன்னல்களை வாரிவழங்கும், எனவே சனி திசை மற்றும் மற்ற திசைகளில் வரும் சனிபுத்தி,சனிஅந்தரம் மற்றும் சனிசூட்சமங்கள் தங்களுக்கு மிகுந்த இன்னல்களுக்கும், துன்பத்திற்கு ஆளாக்கும், பாதக ஸ்தான வழியில் இருந்து கடுமையான இன்னல்களை வாரி வழங்கும்.

9வதாக வரும் புதன் திசை தங்களுக்கு வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலன்களையும், வலிமை அற்ற ஆயுள் பாவக பலனையும் ஏற்று நடத்துவது தங்களின் வாழ்க்கையில் ஜீவன ஸ்தான வழியில் இருந்து நன்மைகளையும் யோகங்களையும், ஆயுள் பாவக வழியில் இருந்து தீமைகளையும் அவயோகங்களையும் வாரி வழங்கும்.

நடைபெறும் திசாபுத்திகள் தங்களுக்கு வழங்கும் நன்மை தீமைகள் பற்றியும், யோக அவயோகங்கள் பற்றியும் துல்லியமாகவும், விளக்கமாகவும் தெரிந்து கொள்ள நேரில் ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்.

குறிப்பு :

தங்களது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12பாவகங்கள் மிகவும் வலிமையுடன் இருப்பின் தங்களுக்கு நடைபெறும் நவகிரகங்களின் திசாபுக்திகள் எதுவாயினும் நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, மாறாக சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலு குறைவாக இருந்தாலோ, பாதக ஸ்தான தொடர்பை பெற்று இருந்து நடைபெறும் திசாபுக்திகள் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால், ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து தீமைகளும் அவயோக பலன்களும் நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசை சுபக்கிரகத்தின் திசை என்றாலும் அதற்க்கு விதிவிலக்கு கிடையாது, தாம் ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து  நிச்சயம் அவயோக பலன்களையே வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

சனி, 23 ஜூலை, 2016

சுயதொழில்,கூட்டுதொழில் அல்லது அடிமைதொழில் இதில் பொருத்தமான தொழிலை ஜாதகரீதியாக தேர்வு செய்வது எப்படி ?


சுய ஜாதக ரீதியாக தனக்கு உகந்த தொழிலை தேர்வு செய்யவில்லை எனில் சம்பந்தப்பட்ட ஜாதகரின் நிலையானது, நமது கிராமங்களில் சொல்லும் செலவடையான " பாடும் பட்டது போல், வீடும் கெட்டது போல் " என்ற பழமொழிக்கு உதாரணமாக அமைந்துவிடும், தமக்கு உகந்த தொழிலை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதக பாவக வலிமை 100% விகிதம் சரியான வழிகாட்டுதல்களை வழங்குகிறது என்றால் அது மிகையல்ல, ஒரு ஜாதகர் தனது சுய ஜாதகம் கொண்டு தமக்கு உகந்த சுயதொழில்,கூட்டுதொழில் அல்லது அடிமைதொழிலை தேர்வு செய்வாராயின், சம்பந்தப்பட்ட ஜாதகரின் தொழில் முன்னேற்றத்தை எந்த சக்தியாலும் தடைசெய்ய இயலாது, ஏனெனில் இறைஅருள் விதித்த கர்மத்தை செய்ய தகுதி உடையவர் ஆகிறார், இதனால் ஜாதகரின் ஜீவன முன்னேற்றம் மென்மேலும் வளர்ச்சி பாதையில் வெற்றிநடை போடும் என்பதில் சந்தேகம் இல்லை, மேலும் ஜாதகரின் உழைப்பும், லட்ச்சியங்களும் மிகவிரைவாக சாதிக்கும் வல்லமையை தரும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் சரியான காலநேரத்தில் பரிபூர்ணமாக நிறைவேறும், பொருளாதார தடைகள் அற்ற தன்னிறைவான வசதிவாய்ப்புகளை ஜாதகர் சிறப்பாக பெறுவதற்கு வழிவகுக்கும்.

சுய ஜாதகத்திற்கு சற்றும் பொருந்தாத தொழிலை தேர்வு செய்வது என்பது ஜாதகரை செக்குமாட்டிற்கு பொருத்தமான நிலையையும், குறுகிய வட்டத்தில் ஜீவிக்கும் சூழ்நிலையையும், ஜாதகரின் லட்ச்சியங்கள் மற்றும் கனவுகள் "கானல்நீராக" மாறிவிட வாய்ப்புண்டு, தாம் செய்யும் தொழிலில் விருப்பமும், கடமை உணர்வும், அதீத ஆர்வமும் கொண்டதாக அமையும் பொழுதே ஜாதகரின் ஜீவன முன்னேற்றம் என்பது அபரிவிதமான வெற்றிகளை நல்கும், விருப்பம்,ஈடுபாடு,கடமை மற்றும் ஆர்வம் இன்றி செயல்படும் எந்த ஒரு காரியமும் சிறப்பான நன்மைகளை தந்துவிட நிச்சயம் வாய்ப்பில்லை, ஏனெனில் புது சிந்தனைகள் மற்றும் புதிய யுக்திகளை கண்டுணரும் வாய்ப்பினை ஜாதகருக்கு ஜீவன பாவகம் வழங்குவது கேள்விக்குறியே, தமக்கு உகந்த தொழிலை தேர்வு  செய்யும்பொழுது ஜாதகரின் வளர்சசி ஓர் சீரிய முன்னேற்றத்துடன் வளர்ச்சிப்பாதையில் சிறப்பாக வெற்றிநடைபோடும்.

  ஒருவரின் சுய ஜாதகத்தில் பாவக வலிமைக்கேற்ப, தமக்கு பொருத்தமான தொழிலை நிர்ணயம் செய்வது எப்படி? என்பதை ஒரு உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !


லக்கினம் : சிம்மம் 
ராசி : மேஷம் 
நட்ஷத்திரம் : பரணி 2ம் பாதம் 

1) ஜாதகர் சுய தொழில் செய்ய தகுதி உள்ளவரா? 

சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவக வலிமை நிலையை கருத்தில் கொண்டால் ஜாதகர் சுய தொழில் செய்ய தகுதி உள்ளவரா? என்பதை நிர்ணயம் செய்யலாம், மேற்கண்ட ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவாகத்துடன் தொடர்பு பெறுவது, ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு வலிமை அற்று இருப்பது தெளிவாகிறது, எனவே ஜாதகர் சுய தொழில் செய்தால் நிச்சயம் திடீர் பேரிழப்பும் வீண் விரையமுமே ஏற்படும், மேலும் ஜாதகர் தான் செய்யும் சுய தொழில் மூலம் அதிக மன உளைசலுக்கும், கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கும் ஆளாகும் சூழ்நிலையை பெரிய அளவில் தரும், ஜாதகரின் ஜீவன ஸ்தானம் தொடர்பு பெறுவது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் ராசியான கடகமாக அமைவது ஜாதகரின் சொத்து,வீடு, வண்டி,வாகனம் மற்றும் சுக போகங்கள் அனைத்தையும் சுய தொழில் செய்வதால் விரையமாக்கும் சூழ்நிலையை தரும், மேலும் சொத்து,வீடு,வண்டி,வாகனம் மற்றும் நீர் தத்துவம் சார்ந்த தொழிலை தேர்வு செய்து செய்தால் ஜாதகருக்கு நிச்சயம் தொழில்  ரீதியாக மிகப்பெரிய தோல்வியே கிட்டும் என்பதை கவனத்தில் கொள்வது சாலச்சிறந்தது.

2) ஜாதகர் கூட்டு தொழில் செய்ய தகுதி உள்ளவரா ?

சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் பாவக வலிமை நிலையை கருத்தில் கொண்டால் ஜாதகர் சுய தொழில் செய்ய தகுதி உள்ளவரா? என்பதை மிக துல்லியமாக நிர்ணயம் செய்யலாம், மேற்கண்ட ஜாதகருக்கு களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் வீடு தமது பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது வரவேற்கத்தக்க அம்சமாகும், எனவே ஜாதகர் சுய தொழில் செய்ய முழு தகுதி உடையவர் ஆகிறார், மேலும் ஜாதகரின் களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியான கும்பத்தில் நிற்பது, ஜாதகர் கூட்டு தொழில் மூலம் லாபங்களை அதிர்ஷ்டங்களை ஸ்திரமாக பெறுவார் என்பதை தெளிவுபடுத்துகிறது, ஸ்திர காற்று ராசியான கும்பம் ஜாதகருக்கு பரிபூர்ண வெற்றிகளை கூட்டு தொழில் மூலம் வாரி வழங்கும் என்பது உறுதியாகிறது, ஜாதகரின் அறிவு திறனும் தொழில் வல்லமையும் கூட்டு தொழில் மூலம் விருத்தி அடையும், மேலும் திருமணத்திற்கு பிறகு வெற்றிகரமான ஜீவன வாழ்க்கையை பெரும் யோகம் பெற்றவர்களின் சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் மிகவும் வலிமையாக இருக்கும் என்பது மறுக்க இயலாத உண்மை அன்பர்களே, ஜாதகர் தனது அறிவு திறன்,சமயோசித புத்திசாலித்தனம் மற்றும் புதியசிந்தனை, புதிய யுக்திகளை கையாண்டு கூட்டு தொழில் மூலம் பன்மடங்கு லாபங்களை பெறுவார் என்பது மிக தெளிவாக தெரிய வருகிறது.

3) ஜாதகர் அடிமை தொழில் செய்ய தகுதி உள்ளவரா ?

சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை அற்று காணப்படும் பொழுது, ஜாதகர் அடிமை தொழில் செய்யவும் தகுதி அற்றவர் என்பது உறுதியாகிறது, ஏனெனில், ஒரு இடத்தில் நிலையாக பணியாற்றும் வாய்ப்பினை தாராது, பல இடங்களில் ஓடி அலைந்து திரியும் நிலையை தந்துவிடும், இதனால் ஜாதகரின் திட்டமிடுதல்கள், செயல் திறன் வெகுவாக குறையும், கெளரவம் பார்க்காமல் சுய மரியாதை இழந்து செய்யும் வேலையை ஜாதகரே விரும்பி ஏற்றுக்கொண்டால் இது சாத்தியம், அது இந்த ஜாதகத்திற்கு பொருந்தி வர வாய்ப்பில்லை ஏனெனில் ஜாதகரின் லக்கினம் சிம்மம், கட்டுப்பாடு அற்ற சுதந்திர நிலையை கையில் ஏந்தும் அன்பர்கள், இந்த சிம்ம லக்கினத்தை சார்ந்தவர்கள், இந்த ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு மட்டுமே கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றது, ஆனால் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் வீடுகள் முறையே 2,6,8,12 பாவகங்கள் ஆகும் என்பதால் ஜாதகர் கூட்டு தொழில் மூலமோ அல்லது வெளிநாடுகளில் உயர்பதவி மூலமோ ராஜயோகங்களை அனுபவிக்கும் வல்லமை பெற்றவர் என்பதை சிறப்ப சுய ஜாதக பாவக வலிமை தெளிவுபடுத்துகிறது, மேலும் சுய ஜாதகத்தில் 1,5,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது எவ்வித சூழ்நிலையிலும், தனக்கு உகந்த தொழிலை தாமாகவே தேர்வு செய்து வெற்றிகாணும் யோகம் பெற்றவர் என்பது உறுதியாகிறது, அதிர்ஷ்டம் இவர் பக்கம் நிற்பதால் வாழ்க்கையை மிக சிறப்பாக எதிர்கொண்டு நன்மைகளையும், ஜாதகத்திற்கு உற்ப்பட்ட யோகங்களையும் பரிபூர்ணமாக அனுபவிக்கும் வல்லமை பெற்றவர் என்பது தெளிவாகிறது.

குறிப்பு :

ஜாதகருக்கு தற்போழுது நடைமுறையில் உள்ள சந்திரன் திசையும், அடுத்தது வரும் செவ்வாய் திசையும் கூட்டுதொழில்  அல்லது வெளியூர், வெளிநாடுகளில் சிறப்பான தொழில் அல்லது வேலை வாய்ப்பினை நல்கும்,  அதற்கு அடுத்து வரும் ராகு திசை ஜாதகரை கூட்டு தொழில் மூலம் பரிபூரண யோகத்தை வாரி வழங்கும் என்பது உறுதியாகிறது, ஜாதகருக்கு "ஜோதிடதீபம்" வழங்கும் அறிவுரை உடனடியாக ஜாதகர் திருமணம் செய்து கொள்வது சகல நிலைகளில் இருந்தும் நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

வியாழன், 21 ஜூலை, 2016

தொழில் தேர்வு, ஜீவன ஸ்தான வலிமை, நடைபெறும் திசை வழங்கும் பலாபலன்கள் !


" உத்தியோகம் புருஷ லட்சணம் " ஒரே வாக்கியத்தில் ரத்தினைசுருக்கமாக ஓர் ஆண் மகனுக்கு ஜீவனத்தின் அவசியத்தை முன்னோர்கள் தெளிவாக உணர்த்திவிட்டனர், சரியான இளம் வயதில் தாம் விரும்பிய தொழிலை தேர்வு செய்து, ஆர்வமுடனும் முழு அர்ப்பணிப்பையும்  தமது சுய உழைப்புடன் விதைத்தால், அதன் பலனானது மிகப்பெரிய விருச்சமாக நம்மையும் காத்தருளும், தம்மை நாடி வருவோரையும் காத்தருளும், கடனுக்காக பணியாற்றும் தன்மையானது தொழில் விருத்தியையும், அடிப்படை முன்னேற்றத்தையும் வெகுவாக பாதிக்கும், இன்றைய சூழ்நிலையில் தமக்கு உகந்த தொழிலை தேர்வு செய்து வெற்றிகரமாக நடத்தும் யோகம் எத்தனை அன்பர்களுக்கு வாய்க்கிறது என்பதை சிந்தனைக்கு எடுத்துக்கொண்டால் மிக மிக குறைவான சதவிகித அளவிலேயே உள்ளது தெளிவாக தெரிய வரும்.

 சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் மற்றும் அதற்க்கு உதவி செய்யும் சில பாவகங்களின் தன்மை ஆகியவை வைத்தே ஒருவரின் தொழில் முன்னேற்றம் நிர்ணயம் செய்யப்படுகிறது, சுய ஜாதகங்களில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு, நல்ல தொழில் வெற்றிகளை வழங்குவதில் தவறுவது இல்லை, ஜீவன ஸ்தானம் வலிமை அற்ற நிலையில் உள்ள அன்பர்களுக்கு நல்ல தொழில் அல்லது ஜாதகருக்கு உகந்த தொழில் அமைவது குதிரை கொம்பாகவே உள்ளது, ஒருவரின் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எவ்வித வலிமை பெற்று இருக்கின்றது என்பதில் தெளிவு பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில், தமக்கு உகந்த தொழில் வாய்ப்பினை பெறுவதற்கு துல்லியமாக வழிகாட்டும், மேலும் ஜீவன வழியில் இருந்து யோக பலன்களை பரிபூர்ணமாக பெறுவதற்கு உண்டான வழிமுறைகளை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு இந்த பதிவில் ஆய்வு செய்வோம் அன்பர்களே !



லக்கினம் : ரிஷபம் 
ராசி : மகரம் 
நட்ஷத்திரம் : திருவோணம் 4ம் பாதம் 

ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை பெறுவது ஜாதகர், தன் உடல் உயிர், வளரும் சூழ்நிலை, சுய அறிவு திறன், தனிப்பட்ட திறமைகள், திட்டமிடுதல்கள், திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வல்லமை என ஜாதகரை சிறப்பாக இயக்கும், மேற்கண்ட ஜாதகத்தில் ஜாதகருக்கு லக்கினம் எனும் முதல் வீடு சம்பந்தம் பெறுவது ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகத்துடன், எனவே ஜாதகர் இயற்கையாகவே சுய தொழில் செய்து அதில் நிச்சய வெற்றியை பெறுவார் என்பது தெளிவாகிறது, லக்கினம் வலிமை பெறுவது ஜாதகரை மற்ற பாவக வழியில் இருந்து வரும் யோகங்களை அனுபவிக்கும் வல்லமையை பெற்று தரும், மேலும் ஜாதகரின் எண்ணங்கள் யாவும் நடைமுறைக்கு வரும், மேலும் உடல்,மனம்,அறிவு ஆகியவற்றை எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக இயங்க வைக்கும், ஜாதகர் தொழில் செய்வதற்கெனவே படைக்கப்பட்டவர் என்பது லக்கினம் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதில் இருந்தே தெளிவாக அறியலாம், லக்கினம் முதல் கேந்திரம்/கோணமாக அமையும்.

அடுத்து சுக ஸ்தானம் எனும் நான்காம் வீடு வலிமை பெறுவது ஜாதகர் தான் ஈட்டிய செல்வத்தை நுகரும் சக்தி கொண்டவரா? அற்றவரா? என்பதை மிக தெளிவாக அறிவித்துவிடும், மேலும் ஜாதகரின் குண நலன்கள், சொத்து சுக போகம், வண்டி வாகனம், வீடு நிலம் போன்றவற்றின் மூலம் ஜாதகர் பெரும் லாபம் மற்றும் நன்மைகளை தெளிவு படுத்தும், மேற்கண்ட ஜாதகருக்கு மாத்ரு ஸ்தானமான 4ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, தனது உழைப்பின் மூலம் சொத்து,வீடு,வண்டி,வாகன யோகத்தை பெற தகுதியானவர் என்பதும், மேற்கண்ட விஷயங்களில் இருந்து தொழில் வாய்ப்பினை பெரும் யோகம் பெற்றவர் என்பதும் தெளிவாகிறது, சுய ஜாதகத்தில்  4ம் பாவகம் வலிமை பெறுவது சுக போக வாழ்க்கையையும், வீடு வண்டி வாகன யோகத்தையும் நல்கும், மேலும் ஜாதகரின் குண நலன்களும் மற்றவர்களுடன் ஜாதகர் பழகும் தன்மை நிலையை பற்றியும், தனது தாய் வழியில் இருந்து யோகங்களையும் வாரி வழங்கும், சுக ஸ்தானம் மூன்றாம் கேந்திரமாக அமையும்.

அடுத்து களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் வீடு வலிமை பெறுவது ஜாதகர் பொதுமக்களுடன் கொண்டுள்ள நல்லுறவையும், நண்பர்கள் மற்றும் தொழில் முறை கூட்டாளிகள் வழியில் இருந்து பெரும் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பையும் தெளிவுபடுத்தும், மேலும் ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் ஜீவன உதவிகளையும், வியாபார வழியில் இருந்து பெரும் முன்னேற்றங்களையும், வெளியூர் வெளிநாடுகளில் இருந்து பெரும் ஆதரவு, தொழில் விருத்தியையும் தெளிவு படுத்தும், வியாபாரத்தில் பொதுமக்கள் செல்வாக்கினை உறுதிப்படுத்தும், மேற்கண்ட ஜாதகருக்கு களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு தமது பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு வியாபாரம் மற்றும் மக்கள் செல்வாக்கு ஆகியவற்றை சிறப்பாக வழங்கும் என்பதும், தமது வாழ்க்கை துணை வழியில் இருந்தும், நண்பர்கள் வழியில் இருந்தும், தொழில் முறை கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்தும் மிகுந்த யோகங்களை அனுபவிக்கும் வல்லமை பெற்றவர் என்பது தெளிவாகிறது, களத்திர ஸ்தான வலிமை ஜாதகருக்கு சமூகத்தில் நன்மதிப்பையும் சிறப்பான அறிமுகத்தையும், பெருமை மிக்க வரவேற்பையும் பெற்றுத்தரும், சுய ஜாதகத்தில் ஒருவருக்கு களத்திர ஸ்தானம் ஆறாம் கேந்திரமாக அமையும்.

அடுத்தது ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் வீடு வலிமை பெறுவது ஜாதகரின் தொழில் வல்லமையை வெளிப்படுத்தும், ஜாதகர் தனது தொழிலில் கொண்டுள்ள ஆர்வத்தையும் கடின உழைப்பையும் ஜீவன ஸ்தான வலிமை மூலம் உணரலாம், தொழில் ஞானம் என்பது ஜாதகருக்கு ஜீவன ஸ்தான வலிமையின் அடிப்படையிலேயே அமைகின்றது, தனது தொழில் பற்றிய விசாலமான பார்வை, அதன் வளர்ச்சி மீது ஜாதகர் கொண்டுள்ள அக்கறை மற்றும் திட்டமிடுதல்கள், போட்டியாளர்கள் மூலம் வரும் எதிர்ப்பை கிரகித்து வலிமையை வெளிப்படுத்தும் தன்மை, தொழில் மீது கொண்டுள்ள பற்று மற்றும்  நிலையான உண்மை தன்மை, பிரபல்யம் பெரும் யோகம், அபரிவிதமான விருத்தி என தாம் செய்யும் தொழில் வழியில் ஜாதகர் பெரும் முன்னேற்றத்தின் தன்மையை மிக தெளிவாக ஜீவன ஸ்தான வலிமையின் அடிப்படையில் புரிந்துகொள்ள இயலும், மேற்கண்ட ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு தமது பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது, சிறப்பான தொழில் வெற்றிகளை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, மேலும் ஜீவன ஸ்தானம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு லாப ஸ்தானமாக அமைவதும், ஸ்திர காற்று தத்துவத்தில் நிற்பதும், ஜாதகரின் தொழில் விருத்தியை தமது அறிவு திறன் கொண்டு நிர்ணயம் செய்வார் என்பதும், அது பரிபூர்ணமாக ஜாதகருக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் என்பதும் வரவேற்கத்தக்கது, பொதுமக்கள் விரும்பும் ஆடை ஆபரணங்கள், உயர் ரக சொகுசு பொருட்கள், கேளிக்கை கருவிகள், வீட்டு உபயோக பொருட்கள், மூலம் ஜாதகர் தன்னிறைவான தொழில் முன்னேற்றத்தை பெறுவார் என்பது உறுதியாகிறது, சுய ஜாதகத்தில் ஒருவருக்கு ஜீவன ஸ்தானம் எட்டாம் கேந்திரமாக அமையும்.

ஜாதகர் 1ம் பாவக வழியில் இருந்து வட்டிதொழில், வாக்கின் வழியில் தொழில், நிலம் இடம் சார்ந்த தொழில் செய்யவும், 4ம் பாவக வழியில் இருந்து, வண்டிவாகனம், வீடு, மற்றும் வீட்டு உபகரண பொருட்கள் விற்பனை, உதிரி பாகங்கள் விற்பனை தொழில் செய்யவும், 7ம் பாவக வழியில் இருந்து ஏற்றுமதி இறக்குமதி, வெளியூர் வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்கள் விற்பனை, பொழுது போக்கு அம்சங்கள் சார்ந்த தொழில்கள் செய்யவும், 10ம் பாவக வழியில் இருந்து தரகு தொழில், பங்கு வர்த்தகம், அறிவு சார்ந்த வர்த்தகங்கள், சந்தை முதலீடு, பெரிய அளவிலான நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றும் தொழில்கள், மின்னணு, கணினி சார்ந்த தொழில்கள் செய்யவும் தகுதி பெற்றவர் ஆகிறார், மேற்கண்டவற்றில் ஜாதகரின் விருப்பமே தொழில் விருத்தியை  மிகவும் சிறப்பாக நிர்ணயம் செய்யும்.

சுய ஜாதகத்தில் ஜீவனத்தை வழங்கும் பெரும்பாலான பாவகங்கள் மிகவும் வலிமையுடன், இருப்பது ஜாதகருக்கு சிறப்பான தொழில் முன்னேற்றத்தை வாரி வழங்கும் என்ற போதிலும், நடைபெறும் திசை அல்லது எதிர்வரும் திசை தரும் பலாபலன்கள் ஜாதகரின் தொழில் வெற்றியை 100% விகிதம் நிர்ணயம் செய்யும், மேலும் சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் எனும் 5ம் பாவகம் பாதிக்கப்படுமாயின் மேற்கண்ட யோக பலன்களை தனது பூர்விக்கத்தில் இருந்து பெறுவதற்கு பகிதரான முயற்சசிகளை மேற்கொண்டாலும் நடைமுறைக்கு வாராது, மேலும் தடைகளும் இடர்பாடுகளும் வெகுவாக அதிகரிக்கும், தொழில் செய்வதற்கு தடையாக யாராவது ஒருவர் காரணமாக இருந்துகொண்டே இருப்பார்கள், பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று தொழில் துவங்குவது ஜாதகரின் ஜீவன முன்னேற்றத்தை சிறப்பாக அமைத்து தரும், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றத்தையும், கைநிறைவான லாபங்களை ஜாதகர் தொடர்ந்து பெரும் யோகத்தை தங்கு தடையின்றி வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 18 ஜூலை, 2016

வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் முன் அவர்களது ஜாதகத்தில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள் !


திருமண வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்வது, தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையே அன்றி வேறு எதுவும் இல்லை அன்பர்களே, இன்றைய சூழ்நிலையில் திருமண பந்தம் பற்றிய தெளிவும் புரிதலும் வெகுவாக குறைந்துள்ளது என்பது, பொருத்தம் காண வரும் அன்பர்களின் கேள்விகளில் இருந்தே தெளிவாக தெரிய வருகிறது, மேலும் ஒருவருக்கு திருமணம் என்பது எவ்வித நன்மைகளையும் யோகங்களையும் வாழங்குகிறது என்ற விழிப்புணர்வும் வெகுவாக குறைந்துள்ளது, இல்லற வாழ்க்கையில் இணையும் பொழுது கட்டுப்பாடின்றி இயங்கி கொண்டு இருந்த இளைஞன், பொறுப்பு மிக்க குடும்ப தலைவனாக பிரகாசிக்கிறார், தம்மை நம்பி வந்த  தனது வாழ்க்கை துணையையும், தமக்கு அமையும் வாரிசுகளையும், தம்மை ஈன்ற பெற்றோர்களையும் காப்பாற்றும் மிகப்பெரிய பொறுப்பு உள்ளதை, சொந்த பந்தங்கள் மற்றும் உறவுகள் ஒன்று கலந்த தனது திருமண விழாவில் அனைவர் முன்னிலையிலும் உணரும் அருமையான வாய்ப்பை பெறுகின்றார், ஒரு பெண்ணை வாழ்க்கையை துணையாக ஏற்றுக்கொண்ட பிறகு ஜாதகனின் இயக்கமும் செயல்பாடுகளும் வெகுவாக, குறுகிய காலத்தில் பல மாற்றங்களை சந்திக்கிறது, சமுதாயத்தில் இதுவரை சாதாரணமாக இயங்கிக்கொண்டு இருந்த இளைஞன், பொறுப்பு மிக்க மாமனிதனாக செயல்படும் யோகத்தை நல்குவதே திருமணம் எனும் சுப நிகழ்வே, இவ்வளவு பெருமை வாய்ந்த திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்ய நட்ச்சத்திர பொருத்தங்கள் மட்டுமே போதுமானதாக இருக்கும் என்ற கூற்று நிச்சயம் பொருத்தமற்றதாகவே  இருக்கும் என்று "ஜோதிடதீபம்" கருதுகிறது.

திருமண வாழ்க்கையில் ஓர் ஆண் மகனுக்கு வாழ்க்கை துணையாக அமையும் வதுவின் ஜாதக வலிமையை பற்றியே, நமது சாஸ்திரங்களும், புராணங்களும் சிலாகித்து பேசிக்கொண்டு இருக்கின்றது என்றால் அதுமிகையில்லை, காரணம் இல்லற வாழ்க்கையின் இனிமையையும், தனது கணவனின் கவுரவம், அந்தஸ்து மற்றும் முன்னேற்றகரமான யோக வாழ்க்கைக்கும் ஆதாரமாக விளங்குவது பெண்களின் ஜாதகத்தில் உள்ள யோகங்கள் மற்றும் ஜாதக வலிமையே, அடிப்படையில் ஜீவனத்திற்க்கே சிரமப்பட்டு கொண்டு இருக்கும் சில அன்பர்களின் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றத்தை வாரி வழங்கும் வல்லமை அவருக்கு அமையும் மனைவியின் ஜாதக வலிமைக்கு நிச்சயம் உண்டு, இதை போன்றே பொருத்தமற்ற வாழ்க்கை துணையை தேடியதின் விளைவாக மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை கூட இழந்து, ஒரு வேலை உணவிற்க்காக சிரமகதியில் ஜீவித்திக்கொண்டு இருக்கும் சில அன்பர்களை நாம் கண்டு இருக்கின்றோம், எனவே திருமண பந்தம் என்பது ஒரு குறுகிய வட்டத்தில் நின்றுவிடும் விஷயம் அல்ல என்பதில் தெளிவு பெற்று திருமண பொருத்தம்  காண்பதும், அதன் அடிப்படையில் இல்லற வாழ்க்கையில் இணைவதும் தம்பதியர் வாழ்க்கையில் 16 வகை செல்வங்களையும் பரிபூர்ணமாக வாரி வழங்கும்.

இறை அருளின் கருணையினால் இயற்கையாகவே பொருத்தமான தேர்வை செய்து  இல்லறவாழ்க்கையில் இணைந்து வெற்றிகண்ட ஒரு தம்பதியரின் ஜாதகத்தை இன்று ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!


ஜாதகர் 
லக்கினம் : தனுசு 
ராசி : கும்பம் 
நட்ஷத்திரம் : சதயம் 4ம் பாதம் 

ஜாதகி 
லக்கினம் : மேஷம் 
ராசி : கன்னி 
நட்ஷத்திரம் : உத்திரம் 4ம் பாதம் 

மேற்கண்ட ஜாதகத்திற்கு உரிய தம்பதியர் இருவரின் ஜாதக வலிமையும் மிகவும் சிறப்பாக அமைந்திருப்பது இறையருள் கொடுத்த நன்கொடையாகும், குறிப்பாக ஜாதகியின் சுய ஜாதக வலிமை போற்றுதலுக்கு உரியது, தம்பதியர் இருவரும் விருப்ப மணம் செய்துகொண்டவர்கள், திருமணத்திற்கு முன்பு வரை ஜாதகர் ஜீவன ரீதியாக அதிக சிரமங்களை அனுபவித்துக்கொண்டு இருந்தவர், திருமணத்திற்கு பிறகு ஜாதகரின் தொழில் விருத்தி என்பது பன்மடங்கு உயர்ந்தது, குறுகிய காலத்தில் பொருளாதார தன்னிறைவை தங்கு தடையின்றி அனுபவிக்கும் யோகத்தை தந்தது, தன்னம்பிக்கை மற்றும் சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை தம்பதியர் இருவரும் பெற்றனர், இல்லற வாழ்க்கையில் குறைவில்லா நிலை, நல்ல பெண் குழந்தைகள், அவர்கள்  வழியில் இருந்து யோகம், புதிய சொத்து சுக சேர்க்கை, வியாபாரத்தில் விருத்தி உலகம் முழுவதும் பிரபல்யம், செல்லும் இடங்களில் எல்லாம்  நல்ல வரவேற்பு என ஒரு முழுமை பெற்ற யோக வாழ்க்கையை தம்பதியர் பெறுவதற்கு அவர்களது சுய ஜாதக வலிமையே  காரணமாக அமைந்தது என்றால் அது மிகையில்லை.

தம்பதியரின் யோக வாழ்க்கையை நிர்ணயம் செய்த சுய ஜாதக வலிமையை பற்றி இனி ஆய்வு செய்வோம் அன்பர்களே!

இல்லற வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்யும் பாவகங்களின் வலிமையை பற்றி பார்ப்போம், சுய ஜாதகத்தில் 1,2,5,7,8,12ம் பாவகங்கள் வலிமை பெறுவது தம்பதியரின் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும்  முன்னேற்றம் தரும், மேலும் இந்த அமைப்பு வாழ்க்கை துணையாக வரும் வதுவின் ஜாதகத்தில் சிறப்பாக அமைந்து இருப்பது, தமது கணவனின் வாழ்க்கையில் மிகப்பெரிய யோகங்களையும், முன்னேற்றங்களையும் பரிபூரணமாக வாரி வழங்கும், கணவனின் ஜாதகம் வலிமை அற்று இருந்த போதிலும் மனைவியின் ஜாதக வழியில் இருந்து ஜாதகர் தன்னிறைவான பொருளாதார முன்னேற்றத்தையும், வசதி வாய்ப்புகளையும் அனுபவிக்க இயலும், மேலும் நேற்றுவரை மிக சாதாரணமாக இருந்த மனிதனை கூட ஒரு பெண்ணின் ஜாதக வலிமை, அவரை வெற்றி பெற்ற மனிதனாக சமூகத்திற்கு வழங்கும்  வல்லமை பெற்றது, அதே போல் பெண்ணின் ஜாதகம் வலிமை இன்றி இருப்பின் மிகப்பெரிய தனவந்தனையும், கடைநிலைக்கு தள்ளிவிடும் வாய்ப்புண்டு.

மேற்கண்ட தம்பதியரின் ஜாதகத்தில் :

லக்கினம் இருவரது ஜாதகத்திலும் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, தமது முயற்ச்சியில் சற்றும் தளர்வடையாமல் போராடும் குணத்தையும், அதன் வழிகளில் இருந்து வெற்றி வாகையை சூடும் யோகத்தையும் நல்குகிறது, மேலும் தமது லட்ச்சியங்களை முழு முயற்சசியுடன் வென்று எடுக்கும் சூட்ஷம அறிவு திறனையும், அதற்கு உண்டான உடல் மற்றும் மன வலிமையையும் வாரி வழங்குகிறது, தம்பதியரின் ஒருமித்த கருத்து இவர்களின் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றத்தை வாரி வழங்குகிறது, இதற்கு ஆதாரமாக இருவரது ஜாதகத்திலும் லக்கினம் என்பது முறையே உபய நெருப்பாகவும், சர நெருப்பாகவும் ஒரே தத்துவத்தில் பொருத்தம் பெற்று வலிமை சேர்க்கிறது.

குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் குடும்ப வாழ்க்கைக்கு சரியான  பொருத்தமான தேர்வை குல தேவதையின் அருளாலும், இறை நிலையின் கருணையினாலும் சரியான நேரத்தில் கண்டுணர்ந்து தேர்வு செய்யும் வாய்ப்பை வழங்கியது, ஜாதகியின் 2ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம்  பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது பித்ருக்களின் நல்லாசியினாலும், பெரியோர் செய்த புண்ணியத்தினாலும் தமக்கு பொருத்தமான கணவனை தேர்வு செய்யும், யோகத்தை ஜாதகிக்கு வழங்கியது, இருவரின் ஜாதகத்திலும் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் வலிமை பெறுவது வருமானத்திற்கும், பொருளாதார  முன்னேற்றத்திற்கும் குறைவில்லா யோகத்தை தந்தது, தம்பதியருக்குள் வாக்குவாதம் இல்லாத இனிமையான பேச்சு இல்லற வாழ்க்கையில் இனிமையை வாரி வழங்கியது, தம்பதியருக்குள் உண்டான புரிதலும் ஆறுதல் வார்த்தைகளும், தேறுதல்களும் இல்லறவாழ்க்கையில் நல்ல  நம்பிக்கையும், மன நிம்மதி மற்றும் மன தைரியத்தையும் வழங்கியது, எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் வல்லமையை தம்பதியருக்கு தந்தது, இதற்கு இருவரின் ஜாதகத்திலும் 2ம் பாவகம் வலிமையாக இருப்பது காரணமாக அமைந்தது.

புத்திர ஸ்தானம் எனும் 5ம் பாவகம் இருவரின் ஜாதகத்திலும் முறையே பூர்வ  புண்ணியம் எனும் 5ம் பாவகத்துடனும், பாக்கிய ஸ்தானம் எனும் 9ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெற்றது, நல்ல குழந்தை பாக்கியத்தை வாரி வழங்கியது, இருப்பினும் ஆண் வாரிசு இல்லை இதற்கு என்ன காரணம் என்று இறுதியில் விளக்கம் தரப்படும், சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் வலிமை பெறுவது தம்பதியரின் வாழ்க்கையில் நல்லோர் ஆதரவையும், இறை அருளின் கருணையையும் பரிபூரணமாக பெரும் யோகத்தை தந்தது, மேலும் தம்பதியரின் அறிவு திறனும் சமயோசித புத்திசாலித்தனமும் சிறப்பாக பிரகாசிக்கும் வல்லமையை தந்தது, வருமுன் காக்கும் சிறப்பு சக்தியும், வரும் இன்னல்களில் இருந்து மீண்டுவரும் யோகத்தையும் வாரி வழங்கியது, குறிப்பாக ஜாதகர் தனது அறிவு திறன் மூலம் பல வெற்றிகளை பெற்றார், அதற்கு ஜாதகியின் முன்யோசனைகள் ஆதாரமாக விளங்கியது.

களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் இருவரது ஜாதகத்திலும் முறையே ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகத்துடனும், வீரிய ஸ்தானம் எனும் 3ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு திருமணத்திற்கு பிறகு நல்ல  தொழில் வாய்ப்புகளையும், தொழில் விருத்தியையும் நல்கியது, ஜாதகருக்கு சமூகத்தில் நல்ல அந்தஸ்த்து, கவுரவம், செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல வெற்றிகளை வாரி வழங்கியது, ஜாதகரின் தொழில் வெற்றிகளை நிர்ணயம் செய்ய, அவரது வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையே  காரணமாக அமைந்தது, மேலும் ஜாதகிக்கு தான் கொண்ட லட்ச்சியங்களையும் கனவுகளையும் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் யோகத்தை தந்தது, திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை தம்பதியருக்கு மிகப்பெரிய யோகங்களை வாரி வழங்கியது, பிரிவில்லா தாம்பத்திய வாழ்க்கையை இருவரும் சுவீகரிக்கும் யோகம் உண்டாக இருவரின் ஜாதகத்திலும் களத்திர ஸ்தான வலிமை ஆதாரமாக விளங்கியது.

ஆயுள் ஸ்தானம் எனும் 8ம் பாவகம் இருவரது ஜாதகத்திலும் முறையே, ஆயுள்  பாவகமான 8ம் பாவகத்துடனும், பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெறுவது, நீண்ட ஆயுளையும், மனைவி வழியில் இருந்து யோகங்களையும் ஜாதகருக்கு வழங்கியது, இருவரும் பூர்ண ஆயுள் பலத்துடன் ஜீவிக்கும் யோகத்தை வழங்கியது, தம்பதியர் ஒருவருக்கு ஒருவர் பெரும் வருமான வாய்ப்புகளையும் ஆயுள் பாவகமே நிர்ணயம் செய்தது.

அயன சயன ஸ்தானமான 12ம் பாவகம் இருவரது ஜாதகத்திலும் முறையே, பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடனும், களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெறுவது, தம்பதியருக்குள் பிரியமான யோக வாழ்க்கையை வாரி வழங்கியது, நல்ல மன நிம்மதியையும், நிறைவான மன நிலையையும், கவலைகள் இல்லா ஏகாந்த வாழ்க்கையையும் வாரி வழங்கியது, அயன சயன ஸ்தானம் வலிமை பெறுவது தம்பதியருக்குள் உள்ளன மன நிறைவையும், மன ஓற்றுமையையும் வாரி வழங்கும்.

மேற்கண்ட ஜாதகங்களில் பெரும்பாலான பாவகங்கள் மிகவும் வலிமையுடன் இருப்பது வரவேற்க தக்க அமசமாகும், மேலும்   நடைபெற்ற திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்தியதும், நடத்திக்கொண்டு இருப்பதும் யோக வாழ்க்கைக்கு  குறைவில்லா நிலையையே தந்துகொண்டு இருக்கின்றது, மேலும் சரியான திசை வாயிற்படி கொண்ட வீட்டில் ஜாதகர் குடியிருப்பதும் ஒரு நல்ல விஷயமாகும்.

குறிப்பு :

தம்பதியர் இருவருக்கும் சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானம் எனும் 5ம் பாவகம் வலிமை பெற்றும் "ஆண்" வாரிசு இல்லை என்ற நிலைமைக்கு தம்பதியர் தமது பூர்வீகத்தை விட்டு வெளிநாட்டில் குடியிருப்பதே காரணமாக அமைந்துவிட்டது, சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் வலிமை பெறுவது நல்ல ஆண் வாரிசை நல்கும், பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று வசித்தால், இந்த பாக்கியம் பலன் தாராமல் போக வாய்ப்புண்டு.

 எனவே திருமண வாழ்க்கையில் வெற்றியை நிர்ணயம் செய்வது சுய ஜாதக பாவக வலிமையே அன்றி வேறு எதுவும் இல்லை அன்பர்களே! நட்ச்சத்திர பொருத்தம் ஓர் சிறிய அளவில் மட்டுமே ( 5%விகிதம் ) பலன் தரும், லக்கினம் முதல் 12 பாவக வலிமையே இல்லற வாழ்க்கையில் இனிமை சேர்க்கும் என்பதில் அனைவருக்கும் விழிப்புணர்வு தேவை, இனிவரும் காலங்களில் சுய ஜாதகத்தில் பாவக வலிமைக்கு முக்கியதுவம் தந்து திருமண பொருத்தம் கண்டால் நிச்சயம் தாம்பத்திய வாழ்க்கை 100% விகித வெற்றியை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை அன்பர்களே, மேலும் திருமணம் என்பது தம்பதியரின் நல்வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் என்பதால், சரியான பொறுத்த நிர்ணயம் மிக மிக அவசியமான ஒன்று என்பதை கவனத்தில் கொள்க.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696  

வெள்ளி, 15 ஜூலை, 2016

தொழில் முன்னேற்றமும்,நடைபெறும் சுக்கிரன் திசை வழங்கும் பலன்களும் !



ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் பாவக தொடர்பு அதன் வலிமையும் மிக முக்கிய காரணியாக அமைகிறது என்றால் அது மிகையில்லை, "அவன் இன்றி அணுவும் அசையாது" என்பதற்கு இணங்க சுய ஜாதக வலிமையின் அடிப்படையிலேயே நடைபெறும் யோக அவயோகங்கள் நிர்ணயம் செய்யப்படுகிறது என்றால் அது மிகையில்லை, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களும் வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும் என்றால் அது மிகையில்லை, ஒருவேளை சுய ஜாதகத்தில் சில பாவகங்கள் பாதிக்க பட்டு இருப்பின் நடைபெறும் திசா புத்திகள் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தாமல் இருந்தால், ஜாதகருக்கு மிகுந்த நன்மையை தரும்.
 மாறாக பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை தவிர்க்க இயலாது, பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை ஜாதகர் மிக சிறப்பாக எதிர்கொண்டு நன்மையை பெறுவதற்கு ஆயத்தப்படுவதே சிறப்பானதாக ஜோதிடதீபம் கருதுகிறது, கீழ்கண்ட ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, ஜாதகர் தமது சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் எவ்வித யோக அவயோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை பெறுகிறார், திசா புத்திகள் வழங்கும் பலாபலன்கள் என்னவென்பதை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் !


லக்கினம் : மிதுனம் 
ராசி : மீனம் 
நட்ஷத்திரம் : ரேவதி 2ம் பாதம் 

ஜாதகருக்கு பாவக தொடர்புகள் :

1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்.

2,4,8,10ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம்.

3ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.

5,11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.

6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.

மேற்கண்ட பாவக தொடர்புகளில் ஜாதகருக்கு வலிமை தரும்  அமைப்புகள் :

2,4,8,10ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம்.

3ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.

5,11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து நன்மைகளையும் யோகங்களையும்  வாரி வழங்கும்.

மேற்கண்ட பாவக தொடர்புகளில் ஜாதகருக்கு வலிமை அற்ற  அமைப்புகள் :

1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்.

6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு  சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து அதிக அளவில் இன்னல்களை  வழங்கும், குறிப்பாக 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 200% விகித இன்னல்களை வாரி வழங்கும்.

ஜாதகரின் கேள்வி தனது ஜீவன மேன்மை பற்றியதாக இருக்கின்றது என்பதால், ஜாதகரின் ஜீவன ஸ்தான வலிமையை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! ஜாதகருக்கு 10ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமை பெற்று இருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகும், மேலும் இந்த அமைப்பு ஜாதகருக்கு சிறந்த ஜீவன மேன்மையை வாரி வழங்கும், குறிப்பாக நல்ல வியாபாரியாக ஜாதகரை பரிணமிக்க செய்யும், தகவல் தொழில் நுட்பம் மற்றும் மின்னணு நுண்ணறிவு தொழில் சார்ந்த வாய்ப்புகளை வாரி வழங்கும், ஜாதகரின் 3ம் பாவகம் ஸ்திர நெருப்பு தத்துவ ராசியில் அமைவது ஜாதகரின் அறிவு திறனின் வல்லமையையும், தான் செய்யும் தொழில் வழியில் இருந்து சகல முன்னேற்றங்களையும் பெரும் யோகத்தையும் தரும், ஜாதகரின் ஜீவன  ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் ராசியிலும், அது தொடர்பு பெரும் 3ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியிலும் அமைவது ஜாதகருக்கு மிகுந்த நன்மை தரும் அமைப்பே! எனவே ஜாதகருக்கு ஜீவன வழியில் இருந்து இன்னல்கள் இல்லை என்பதும், நல்ல வேலை அல்லது தொழில் அமையும் என்பதும் தெளிவாகிறது.

அடுத்தது ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை எவ்வித பலன்களை வழங்குகிறது என்பதை கவனத்தில் கொள்வோம், ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித அவயோக பலனை தருவதே தற்போழுது பிரசனையாகிறது, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்ற போதிலும் தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக  பாதிக்கிறது, மேலும் ஜாதகரின் பாதக ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு, பாக்கியம் என்று வழங்கும் 9ம் ராசியாகவும், உபய நெருப்பு தத்துவ ராசியாக அமைவது ஜாதகர் எதிர் பால் அமைப்பினரிடம் இருந்து இன்னல்களையும், கூட்டாளிகள் மற்றும் நண்பர்கள் வழியில் இருந்து அதிக அளவில் மன கவலைகளையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும், மேலும் பாதக ஸ்தானம் வழங்கும் பலாபலன்களில் இருந்து ஜாதகர் மீண்டுவருவது அவசியமாகிறது, மற்றவர்களால் தமது எதிர்காலம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, மிகவும் எச்சரிக்கை உடன் அணைத்தது விஷயங்களையும் கையாள்வது ஜாதகருக்கு நன்மையை தரும், சுக்கிரன் திசை ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை ஜாதகர் பாதக ஸ்தான வழியில் இருந்து வரும் இன்னல்களின் தாக்கம்  மிகவும் அதிகமாக உள்ளதை மறுக்க இயலாது.

சுக்கிரன் திசையில் கடந்த சந்திரன் புத்தியும் ஜாதகருக்கு விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனை ஏற்று நடத்தியது, ஜாதகரை வருமானத்திற்கு திண்டாடும் சூழ்நிலையை உருவாக்கி, மிகுந்த மன வேதனையையும் மன போராட்டங்களையும் வாரி வழங்கி இருக்கும், தற்போழுது நடைபெறும் செவ்வாய் புத்தி ஜாதகருக்கு நல்ல ஜீவன மேன்மையை பெற்றுத்தரும் என்பதில் சந்தேகம் இல்லை, குறிப்பாக தகவல் தொழில் நுட்ப துறையில் ஜாதகர் நல்ல வேலை வாய்ப்பை பெறுவார் என்பது வரவேற்கத்தக்க அமசமாகும், இனிவரும் எதிர்காலம் ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை, பாதக ஸ்தானம் வழங்கும் பாதிப்பில் இருந்து வெளிவர ஜாதகர் முறையான பிரீதி பரிகாரங்களை மேற்கொள்வதும், பாதக ஸ்தான ஸ்தான பலனை ஏற்று  கொள்வதும் ஜாதகருக்கு நன்மைகளை வாரி வழங்கும்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு 5,11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த யோகங்களை 100% விகிதம் 5,11ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்கும் என்பது கவனிக்க தக்க விஷயமாகும், எனவே ஜாதகர் 5,11ம் பாவக வழியில் இருந்து யோகங்களை பெறுவதற்கு  உண்டான முயற்சசிகளை மேற்கொள்வது சகல நலன்களையும் தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ராகுகேது புத்திர ஸ்தானம் எனும் 5ல் அமர்ந்தால், ஜாதகருக்கு புத்திர பாக்கியம் இல்லையா?

  
  ராகு கேது ஒருவரது சுய ஜாதகத்தில் எந்த பாவகத்தில் அமர்கின்றதோ அந்த பாவகத்தை முழுவதும் தமது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரும் வல்லமை பெற்றவை என்பதை இதற்கு முன் சில பதிவுகளில், ஜோதிடதீபம் பதிவு செய்து விளக்கம் தந்திருக்கும், சாயா கிரகங்கள் ஒருவரது சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானத்தில் அமர்ந்தாலே ஜாதகருக்கு புத்திர பாக்கியம் இல்லை என்று நிர்ணயம் செய்ய இயலாது, ஏனெனில் தாம் அமர்ந்த புத்திர ஸ்தானத்திற்கு வலிமை சேர்க்கும் விதத்தில் ராகுகேதுவின் இயக்கம் இருப்பின், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு 100% விகிதம் புத்திர ஸ்தான வழியில் இருந்து நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும், மாறாக புத்திர ஸ்தானத்திற்கு வலிமையற்று அவயோகங்களை தரும் விதத்தில் ராகுகேதுவின் இயக்கம் இருப்பின், ஜாதகருக்கு 100% விகிதம் புத்திர ஸ்தான வழியில் இருந்து இன்னல்களையும் துன்பத்தையும் தரும், மேலும் ஜாதகருக்கு புத்திர சோகத்தை தருவதிலும் தவறுவதில்லை, சுய ஜாதகத்தில் 5ம்  பாவகம் பாதிப்பை பெறுவது ஜாதகருக்கு யோகம் மற்றும் நன்மைகளை பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை வழங்குவதில் அதிக தடைகளை ஏற்படுத்துவதுடன் வருமுன் உணரும் சக்தியை வெகுவாக குறைக்கின்றது, ஜாதகர் நன்மைகளையும் நல்லோர் ஆதரவையும் பெறுவதற்கு அதிக அளவிலான போராட்டங்களையும், முயற்ச்சிகளையும் மேற்கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்.

 சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் சாயா கிரகங்களால் பாதிப்பை பெறுவது மிகுந்த இன்னல்களையும் துன்பங்களையும் வாரி வாழங்கும், சாயா கிரகங்களால் 5ம் பாவகம் வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சிறந்த புத்திர பாக்கியம், சுய அறிவு திறன் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகம் மற்றும் புத்திகூர்மை, சமயோசித புத்திசாலித்தனம், நுண்ணறிவு, முன்னேற்றத்தில் அக்கறை, பொறுப்பு மிக்க  செயல்பாடுகள், சுயமாக சகல முடிவுகளையும் மேற்கொள்ளும் வல்லமை, தன்னம்பிக்கை மிக்க மன நிலை, எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் யோகம், லட்சியங்களை விரைவாக நிறைவேற்றும் தனி திறமை என்ற வகையில் யோக பலன்களை வழங்கும், மேலும் ஜாதகருக்கு நல்ல ஆண் வாரிசும், தமது குழந்தைகள் வழியில் இருந்து நல்ல முன்னேற்றங்களையும் தங்கு தடையின்றி பெரும் யோகத்தை தரும், அனைவராலும் உதவி பெரும்  தன்மை சிக்கல் மிகுந்த சூழ்நிலைகளை மிக எளிதாக கையாளும் வல்லமையை பெற சுய ஜாதகத்தில் 5ம் பாவக வலிமையே காரணமாக அமையும், எனவே சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களால், 5ம் பாவகம் வலிமை பெறுவதே நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும், மாறாக சாயா கிரகங்களால் 5ம் பாவகம் பாதிக்கப்படுவதும், அல்லது அதற்கு  நிகரான பாதிப்பை பெறுவதும் ( 5ம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ) சம்பந்த பட்ட ஜாதகருக்கு 5ம் பாவக வழியில் இருந்து அளவில்லா துன்பங்களையே தரும், உதாரணமாக கீழ்கண்ட ஜாதகத்தை  ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : ரிஷபம் 
ராசி : மீனம் 
நட்ஷத்திரம் : உத்திரட்டாதி 4ம் பாதம் 

ஜாதகிக்கு 5ம் பாவகமான கன்னியில் கேது, 5ம் பாவக அதிபதி இங்கு கேந்திர அதிபதியாக காணப்படுகிறார் ( சூரியனுடன் சேர்ந்த புதன் ) அடிப்படையில் 5ம் பாவகம் கோண வீடு, அதன் அதிபதி கேந்திர அதிபதி, அங்கு அமர்ந்த கேது 5ம் பாவகத்தை 100% விகித பாதிப்பிற்கு ஆளாக்கும் தன்மையை பெறுகிறார், மேலும் 5,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகியின் 5ம் பாவகத்தை கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது, எனவே மேற்கண்ட ஜாதகி தமது வாழ்க்கையில் அளவில்லா போராட்டங்களையும் இன்னல்களையும் சந்தித்துக்கொண்டு இருக்கின்றார், ஜாதகிக்காக எடுக்கும் சுப முயற்சசிகள் யாவும் பெரிய பின்னடைவையே சந்தித்து கொண்டு இருக்கின்றது.

அடிப்படையில் கல்வியில் தடை, உடல் நல குறைபாடு, வேலை வாய்ப்பில் தடை, திருமண முயற்ச்சிகளில் தடை என ஜாதகிக்கு தொடர்ந்து இன்னல்களே நடைபெற்று கொண்டு இருக்கின்றது, மேலும் சுய ஜாதகத்தில் பெரும்பாலான பாவக தொடர்புகள் பாதிப்பை தரும் அமைப்பில் உள்ளது சிரமங்களை வாரி வழங்கும் எனும் போதில், பூர்வ புண்ணியமான 5ம் பாவகமும், பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகமும் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகிக்கு வரும் இன்னல்களில் இருந்து வெளிவரும் வாய்ப்பையே வழங்காது, மேலும் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவக பாதிப்பிற்கு அதிக அளவில் சாயா கிரகமான கேது பகவானே காரணமாக அமைவது கவனிக்கத்தக்க விஷயமாகும், மேலும் ஜாதகிக்கு 5ம் பாவகம் உபய மண் தத்துவத்தில் இயக்கம் பெறுவது, உடல் நலம் சார்ந்த தொந்தரவுகளையும் வழங்கிக்கொண்டு இருப்பது வருந்தத்தக்கது, ஜாதகிக்கு வரும் எதிர்ப்புகளும், இன்னல்களும் மிகப்பெரிய பாதிப்பை தரும், சுய முன்னேற்றம் என்பது வெகுவாக பாதிக்கப்படும், உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலையை உருவாக்கும் என்பதை ஜாதகி கவனத்தில் கொள்வது நல்லது, சுயமாக ஜாதகி எடுக்கும் முடிவுகள் யாவும் மீளமுடியாத துன்பத்திற்கு ஆளாக்கும் என்பதை கவனத்தில் கொள்வது நலம் தரும்.

மேற்கண்ட ஜாதகத்தில் 5ல் சாயா கிரகமான கேது அமர்ந்து இன்னல்களை தரும் அமைப்பில் இருப்பது ஜாதகிக்கு சாதகமான அமைப்பு அல்ல எனவே தமக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 5ம் பாவகம் 100% விகிதம் வலிமை பெற்று இருந்தால் மட்டுமே புத்திர பாக்கியம் கிட்டும், மாறாக இதை போன்றே 5ம் பாவகம் பாதிக்கப்பட்ட ஜாதகர் வாழ்க்கை துணையாக அமைந்தால் புத்திர பாக்கியம் சார்ந்த இன்னல்களுக்கும், புத்திர சோகம் அனுபவிக்கும் சூழ்நிலைக்கும் ஆளாக்கும் என்பதை கவனத்தில் கொள்வது நலம் தரும், இயற்கையாகவே இந்த ஜாதகிக்கு பெரும்பாலான பாவகங்கள் விரைய  ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது கடுமையான நெருக்கடிகளையும், மன கவலைகளையும் அதிக அளவிலான மன போராட்டங்களையும் வாரி வழங்கும் என்பதால், ஜாதகிக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகம் மிகவும் வலிமை பெற்றதாக இருந்தால் மட்டுமே ஜாதகி தமது வாழ்க்கையில் நன்மைகளையும் யோகங்களையும் பெற வழிவகை உண்டாகும், இதற்கு மாறாக வாழ்க்கை துணையின் ஜாதகமும் பாதிப்பை பெற்று இருந்தால் ஜாதகியின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிட வாய்ப்புண்டு.

ஜாதகிக்கு வரும் இன்னல்களில் இருந்து வெளிவருவதற்கு உண்டான வாய்ப்பை 5ல் அமர்ந்த கேதுபகவானின் வலிமை தடுக்கும், மற்றவர் உதவிகளை பெறுவதற்கு உண்டான வாய்ப்பையும் வழங்காது, ஜாதகியின் சுய ஜாதகமும் வலிமை அற்று காணப்படுவது மேலும் மேலும் இன்னல்களையும், துன்பங்களையும் வாரி வழங்கியவண்ணமே இருக்கும் என்பதால் இனிவரும் காலங்களை ஜாதகி மிக எச்சரிக்கையுடன் கையாள்வது நல்லது, நடைபெறும் சுக்கிரன் திசையும் ( லக்கினாதிபதி திசை பொதுவாக அனைவருக்கும் நன்மையை செய்யும் என்பது இங்கே பொருந்துவதில்லை, எந்த கிரகத்தின் திசை என்றாலும் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நன்மையும் யோகமும் உண்டாகும்) ஆயுள் பாவக பலனையும், விரைய ஸ்தான பலனையும் ஏற்று நடத்துவது ஜாதகிக்கு நன்மையை தரும் நிலை அல்ல என்பதை கருத்தில் கொள்வது  நல்லது, ஜாதகி லக்கினம் மற்றும் களத்திர பாவக வழியில் இருந்து மன கவலைகளையும், சகோதர ஸ்தானம் மற்றும் ஆயுள் பாவக வழியில் இருந்து திடீர் இழப்புகளையும் சந்திக்கும் சூழ்நிலையையே, தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை வழங்குவது வருந்தத்தக்க ஒன்றாகும்.

மேற்கண்ட விஷயங்களை கவனத்தில் கொண்டு தமது வாழ்க்கையை சிறப்பாக முன்னெடுக்க வேண்டியது ஜாதகியின் கடமையாகும், வீண் மாயையில் வீழ்ந்தால் ஜாதகியின் வாழ்க்கை சுய ஜாதக வலிமைக்கு  ஏற்ப நடைமுறைக்கு  வருகிறது என்பதை தவிர வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

சனி, 2 ஜூலை, 2016

திருமண பொருத்தத்தில் ஏகதிசை சந்திப்பும், இனிமையான இல்லறவாழ்க்கையும் !


திருமண பொருத்தத்தில் வரன் மற்றும் வதுவின் ஜாதகங்களில் ஏககாலத்தில் இருவருக்கும், ஒரு கிரகத்தின் திசை நடைமுறையில் இருந்தாலோ, எதிர்காலத்தில் நடைமுறைக்கு வந்தாலோ, அது பொருத்தமற்ற ஜாதக அமைப்பாக கருதப்படுகிறது, இதனால் இல்லற வாழ்க்கையில் பிரிவு நிலை வர கூடும் என்று அறிவுறுத்தப்படுகிறது, மேலும் திருமண பொருத்தம் காணும் பொழுது ஏகதிசை நடைமுறையில் இருப்பின் எவ்வித இன்னல்களை தம்பதியர் அனுபவிக்க நேரும் என்பதை  கீழ்கண்டவாறு பட்டியல் இடுகின்றனர்.

1) வது வரன் ஜாதகத்தில், இருவருக்கும் ஒரே கிரகத்தின் திசை நடைமுறையில் இருப்பின், தம்பதியருக்கு ஒரே மாதிரியான பலன்கள் நடைபெறும், சுப கிரகத்தின் திசை எனில் இருவருக்கும் நன்மை நடைபெறும், அசுப கிரகத்தின் திசை எனில் இருவருக்கும் தீமையான பலனே நடைபெறும், மேலும் எதிர்காலத்தில் இதே நிலை தொடரும்.
2) தம்பதியரின் வாழ்க்கையில் ஒற்றுமை இருக்காது பிரிவை தரும், மனவாழ்க்கை சிரமத்தை தரும்.
3) திருமணத்திற்கு இது பொருத்தம் அற்ற நிலையை தரும்.
4) குழந்தை பாக்கியத்தில் தடையை தரும்.
5) தம்பதியரின் வாழ்க்கையில் பொருளாதார சிக்கல்கள் அதிக அளவில் வரும்.
6) உடல் மனம் மற்றும் பொருளாதார சிக்கல்களை தம்பதியர் இருவரும் சந்திக்கும் சூழ்நிலையை தரும்.
7) மறுமணம் செய்யும் சூழ்நிலைக்கு இருவரையும் ஆளாக்கும்.

வது வரன் ஜாதகத்தில் ஏக காலத்தில் ஒரு கிரகத்தின் திசை நடைபெறுமாயின், மேற்கண்ட காரணங்கள் தம்பதியரின் வாழ்க்கையில் பிரிவு வரும் என்பதால் திருமண பொருத்தம் இல்லை என நிராகிக்கின்றனர், இதைப்பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, கீழ்கண்ட உதாரண ஜாதகங்களை துணைகொண்டு.

வரன் ஜாதகம் 


லக்கினம் : விருச்சிகம் 
ராசி : துலாம் 
நட்ஷத்திரம் : சித்திரை 3ம் பாதம் 

தற்போழுது நடைபெறும் திசை  : குரு ( 10/07/2007 முதல் 10/07/2023 வரை )

வது ஜாதகம் 



லக்கினம் : மிதுனம் 
ராசி : மகரம் 
நட்ஷத்திரம் : திருவோணம் 4ம் பாதம் 

தற்போழுது நடைபெறும் திசை  : குரு ( 23/02/2014 முதல் 23/02/2030 வரை )

மேற்கண்ட ஜாதகங்களுக்கு பொருத்தம் பார்த்த பொழுது, ஜாதகரின் பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்ட விஷயம் யாதெனில், ஜாதகத்தில் இருவருக்கும் தற்போழுது குரு திசை நடைபெறுகின்றது, எனவே ஏக திசை நடைபெறுவதால் திருமண பொருத்தம் இல்லை, மேலும் அடுத்து வரும் சனி திசை இருவருக்கும் அதிக துன்பத்தை தரும், மணமகனுக்கு  சனி திசை ஆரம்பித்தவுடன் ( 10/07/2023) திருமண வாழ்க்கையில் பிரிவை தரும் என்பதால் இருவருக்கும் பொருத்தம் இல்லை, எனவே திருமணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றது.

பொதுவாக திருமண பொருத்தம் காணும் பொழுது மேற்கண்ட கூற்று  ( ஏகதிசை பொருத்தம் ) கடந்த சில வருட காலமாக பிரபல்யம் அடைந்து வருகிறது, தம்பதியர் இருவருக்கும் தற்ப்பொழுதோ, எதிர்காலத்திலோ ஒரு கிரகத்தின் திசை ஏக காலத்தில் நடைமுறைக்கு வந்தால் இல்லற  வாழ்க்கைக்கு உகந்ததல்ல, நிச்சயம் பிரிவை தரும் என்ற கருத்து ஜோதிட உண்மைக்கு புறம்பானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, மேலும் மேற்சொன்ன  7 காரணங்களையும் தவறான கருத்தாகவே உள்ளது என்பதை தெளிவு படுத்த விரும்புகிறது.

மேற்கண்ட இருவரது ஜாதகத்திலும் உள்ள உண்மை நிலையை பற்றி சிந்தனைக்கு  எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

வரனின் ஜாதகத்தில் நடைபெறும் குரு திசை தரும் பலன்கள் :

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் குரு திசை 5ம் வீடு அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று மிகுந்த நன்மைகளை  தான் கற்ற கல்வி வழியில் இருந்து வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது, மேலும் ஜாதகரின் லாப ஸ்தானம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் ராசியாகவும், உபய மண் தத்துவ அமைப்பிலும் உள்ளது, ஜாதகரின் வெற்றிகரமான யோக வாழ்க்கையை தெளிவுபடுத்துகிறது, ஒரு  நல்ல நிறுவனத்தில்  கை நிறைவான வருமானத்துடன் ஜாதகர் சிறப்பாக இயங்கிக்கொண்டு இருக்கின்றார் என்பதை தெளிவு படுத்துகிறது, எனவே ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் குரு திசை லாபஸ்தான பலன்களை வழங்கிக்கொண்டு இருக்கின்றது.

வதுவின் ஜாதகத்தில் நடைபெறும் குரு திசை தரும் பலன்கள் :

ஜாதகிக்கு தற்போழுது நடைபெறும் குரு திசை 6,9ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அபரிவிதமான யோக பலன்களை தந்து கொண்டு இருக்கின்றது, எனவே ஜாதகி 6ம் பாவக வழியில்  இருந்து குறுகிய கால வெற்றிகளையும், திடீர் அதிர்ஷ்டங்களை, பெறுபவர் என்பதையும், 9ம் பாவக வழியில் இருந்து தமது சுய அறிவு கொண்டு கற்ற கல்வி வழியில் இருந்து மிகுந்த நன்மைகளையும் யோகங்களையும் பெறுவதை குறிக்கிறது, மேலும் ஜாதகியின் லாப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியாகவும், சர நெருப்பு தத்துவ  ராசியில் இயங்குவதால் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் ஜாதகியை பிரகாசிக்க செய்யும் அதன் வழியில் இருந்து நன்மைகளும் யோகங்களும் ஜாதகிக்கு நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்க தக்கது, மேலும் முன்னோர்கள் ஆசிர்வாதமும் ஆன்மீக பெரியோர்களின் ஆசியும் ஜாதகிக்கு மிகப்பெரிய புகழையும், பெருமைகளையும் கொண்டு வந்து சேர்க்கும்

வரனின் ஜாதகத்தில் அடுத்து வரும் சனி திசை தரும் பலன்கள் :

2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சனி திசை பலனை தருவது, ஜாதகருக்கு வாக்குவாத தன்மையை அதிகரிக்கும், வருமானம் மேலோங்கும், வீண் செலவுகளை தவிர்க இயலாது, 8ம் பாவாக  வழியில் இருந்து பூரண ஆயுளை தரும், மேலும் ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் ராசியாக, உபய காற்று தத்துவத்தில் அமைவது ஜாதகருக்கு எடுக்கும் முயற்சசிகளில் வெற்றிகளையும், திடீர் அந்தஸ்த்தையும் தரும், எனவே சனி திசை ஜாதகருக்கு 30% விகித  இன்னல்களையும், 70% விகித நன்மையையும் தரும் என்பதால் மன வாழ்க்கையில் நிச்சயம் பிரிவு வாராது. ஆயுள் பாவகம் உபய ராசி என்பதால் இன்னல்கள் பெரிய பாதிப்பை தாராது.

வதுவின் ஜாதகத்தில் அடுத்து வரும் சனி திசை தரும் பலன்கள் :

1,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், யோக பலனை தருவது, ஜாதகிக்கு 1ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டமும்,லாபமும், 11ம் பாவக வழியில் இருந்து நீடித்த அதிர்ஷ்டமும், தன்னம்பிக்கை மிக்க மன ஆற்றலையும், முற்போக்கு சிந்தனையையும், 7ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணை மூலம் மிகுந்த நன்மைகளையும், வாழ்க்கை துணையுடன் சந்தோஷமான யோக வாழ்க்கையையும், 10ம் பாவக வழியில் இருந்து கவுரவம் மிக்க வாழ்க்கையையும், தேடிவரும் அந்தஸ்த்தையும் ஒருங்கே பெரும் யோகத்தை தரும், மேலும் ஜீவன வழியில் இருந்து மிகப்பெரிய முன்னேற்றங்களையும் வாரி வழங்கும் என்பதால் இந்த ஜாதகங்களை திருமணத்தில் இணைக்கும் பொழுது இல்லற வாழ்க்கை நிச்சயம் இனிக்கும் என்பதில் மாற்றம் இல்லை, இதுவே மேற்கண்ட இருவரது ஜாதகத்திலும் உள்ள உண்மை நிலை.

பட்டியல் இட்ட 7  கருத்துக்களுக்கு உண்மை விளக்கங்கள் :

1) வது வரனின் ஜாதகத்தில் இருவருக்கும் ஒரே திசை நடைமுறையில் இருந்தால், இருவருக்கும் நடக்கும் சம்பந்தப்பட்ட கிரகத்தின் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, ஏனெனில் எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது  என்ற அடிப்படை விஷயம் தெரிந்தால் மட்டுமே அது நன்மையை செய்கிறதா? தீமையை செய்கிறதா என்பதில் தெளிவு பெற இயலும், சுப கிரகத்தின் திசை நன்மையை செய்யும் என்று கருதுவதும், அசுப கிரகத்தின் திசை தீமையை செய்யும் என்று கருதுவதும் ஜோதிட உண்மைக்கு புறம்பான கருத்தாக அமையும், மேலும் ஒரு கிரகத்தின் திசை இருவருக்கும் நடைபெற்றால் இருவருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் நடைபெறும் என்று நினைப்பதும் ஜோதிட உண்மைக்கு புறம்பானதே.

2) தம்பதியரின் வாழ்க்கையில் பிரிவை தரும் என்பது முற்றிலும் தவறான கருத்து, தம்பதியரின் இருவரின் சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டால் மட்டுமே இல்லற வாழ்க்கையில் பிரிவு வரும், அதுவும் நடைபெறும் திசாபுத்திகள் பாதிக்கப்பட்ட 2,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே இது சாத்தியம். சுய ஜாதகத்தில் இருவருக்கும் 2,7ம் வீடுகள்  வலிமை பெற்று இருப்பின் பிரிவு என்ற நிலை வர வாய்ப்பே இல்லை என்பது கவனிக்கத்தக்க அமசமாகும்.

3) தம்பதியர் இருவருக்கும் நடைபெறும் ஒரே கிரகத்தின் திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் நிச்சயம் பொருத்தம் உண்டு, 

4) குழந்தை பாக்கியத்திற்கும் திசாபுத்திக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை, சுய ஜாதகத்தில் புத்திர பாக்கியத்தை தரும் 5ம் பாவகம் வலிமை பெற்று இருந்தால், நடைபெறும் திசை வலிமை அற்ற பலனை நடத்தினாலும் தம்பதியருக்கு நல்ல குழந்தை பேறு அமையும், மேற்கண்ட இருவரது சுய ஜாதகத்திலும் 5ம் பாவகம் மிகவும் வலிமையுடன் காணப்படுகிறது.

5) பொருளாதார சிக்கல்களுக்கும் நடைபெறும் ஏக திசை பலாபலன்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை, ஏனெனில் சுய ஜாதகத்தில் பொருளாதார நன்மை தீமைகளை தருவதற்கு பாவக வலிமையே காரணமாக அமையும்.

6) சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டால் மட்டுமே மேற்கண்ட இன்னல்கள் வரக்கூடும், மேற்கண்ட ஜாதகங்களில் இந்த பாவகங்கள் நல்ல வலிமையை பெற்று இருக்கின்றது.

7) சுய ஜாதகத்தில் 1,2,5,7,8ம் பாவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டால் மட்டுமே மறுமணம் அமையும், அதற்கும் 11ம் பாவகம் வழிகாட்ட வேண்டும்.

குறிப்பு :

திருமண பொருத்தம் காணும் பொழுது வரன்வதுவின் ஜாதகங்களில், ஏகதிசை நடைமுறையில் இருந்தால், நடைபெறும் திசை, எதிர்வரும் திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறதா ? வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெற்று பொருத்தம் நிர்ணயம் செய்வதே சாலச்சிறந்தது, மேலும் இருவருக்கும் ஏகதிசை நடைமுறையில் இருந்தால் பொருத்தம் இல்லை என நிர்ணயம் செய்வது, வது வரனின் ஜாதகத்தில் நடைபெறும் திசாபுத்திகள் ஏற்றுநடத்தும் பாவக வலிமையை பற்றியும், அவை தரும் நன்மை தீமையை பற்றியும் சிறிதும் அறியாமல் செய்யும் முடிவே அன்றி வேறு எதுவும் உண்மை இல்லை அன்பர்களே !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696