செவ்வாய், 21 மே, 2013

சுய ஜாதகத்தில் 12 வீடுகளும், அவற்றின் பலனை ஏற்று நடத்தும் திசா புத்திகளும் !



ஒருவருடைய சுய ஜாதக அமைப்பில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் நிலையின் அடிப்படையிலேயே , நடந்த நடக்கின்ற நடைபெற இருக்கின்ற திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் ஆகியன பலனை வழங்குகிறது என்றால் அது மிகை ஆகாது , இதை அடிப்படையாக கொண்டு காணும் பொழுது , ஒவ்வொருவரின் சுய ஜாதகத்திலும் 12 பாவகங்களும் நல்ல நிலையில் இருப்பது அவசியம் என்பது உறுதியாகிறது .

எனவே ஒருவருடைய சுய ஜாதக பலனை நிர்ணயம் செய்யும் பொழுது பனிரெண்டு பாவகங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது அவசியம், மேலும் அவருடைய சுய ஜாதகத்தில் தற்பொழுது நடை பெரும் திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் ஆகியவை எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்பதை தெளிவாக தெரிந்து கொள்வது , ஜாதக பலனை மிக துல்லியமாக எடுத்துரைக்க உதவி புரியும் .

ஒருவரின் சுய ஜாதக அமைப்பின் படி நவ கிரகங்கள் ராசி கட்டத்தில் எந்த பாவகத்தில் அமர்ந்திருக்கிறது, என்பதனை லக்கினம் ஆரம்பிக்கும் பாகையின் அடிப்படையில் கண்டுணர்ந்து பலன் நிர்ணயம் செய்வது, சம்பந்த பட்ட ஜாதகருக்கு ஜாதக ரீதியான துல்லியமான பலனை சொல்ல உதவும் , ராசியை அடிப்படையாக வைத்தோ , லக்கினத்தை அடிப்படையாக வைத்தோ (லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை கருத்தில் கொள்ளாமல்) பலன் காணுவது அமாவசை அன்று நிலவை தேடுவதற்கு நிகரான ஒன்றாக கருத வேண்டி வரும் , லக்கினம் ஆரம்பிக்கும் பாகையின் அடிப்படையில் ஜாதக ஆய்வு செய்தால் மட்டுமே ஒவ்வொரு கிரகமும் எந்த பாவகத்தில் அமர்ந்திருக்கிறது என்ற உண்மை நிலை புரியும் , மேலும் ஒவ்வொரு பாவகத்தின் வலிமையை பற்றி தெளிவாக உணர்ந்துகொள்ள இயலும் .

மேற்கண்ட அமைப்பில் ஜாதக கணிதம் நிர்ணயம் செய்த பின்பு திசா புத்திகளின் பலாபலன்களை துல்லியமாக நிர்ணயம் செய்ய இயலும், உதாரணமாக கீழ்க்கண்ட ஜாதக அமைப்பை எடுத்துகொண்டு லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் நிலையை பற்றியும் , திசா புத்திகள் எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்பதனை பற்றியும் சற்றே சிந்திப்போம் .

ஜாதகர் பிறந்த தேதி : 27/06/2012
ஜாதகர் பிறந்த நேரம்: 07 : 52 pm 
ஜாதகர் பிறந்த இடம் : சேலம் 


இந்த ஜாதக அமைப்பின் படி 1,7,10 ம் வீடுகள் முறையே ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நல்ல நிலையிலும் ( ஜீவன ஸ்தானம் உபய ராசி என்பதால் 33சதவிகித யோக பலன்களையே தரும் ).

2,3,5,9,11ம் வீடுகள் முறையே அதிர்ஷ்டம் எனும் லாப ஸ்தானமாகிய 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் சிறப்பான நிலையிலும் ( லாப ஸ்தானம் சர ராசி என்பதால் 100 சதவிகித யோக பலன்களை வாரி வழங்கும்).

4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் சிறப்பான நிலையிலும் ( சுக ஸ்தானம் சர ராசி என்பதால் 100 சதவிகித யோக பலன்களை வாரி வழங்கும்).

6ம் வீடு சத்துரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பாதிப்படைந்த நிலையிலும் ( சத்துரு ஸ்தானம் உபய ராசி என்பதால் 33 சதவிகித தீமையான பலன்களே தரும் என்பதால் அதிக கவலை தேவையில்லை )

8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பாதிப்படைந்த நிலையிலும் ( விரைய ஸ்தானம் உபய ராசி என்பதால் 33 சதவிகித தீமையான பலன்களே தரும் என்பதால் அதிக கவலை தேவையில்லை ) சுய ஜாதக நிலை பலன்களை வழங்கிக்கொண்டு இருக்கிறது .

ஜாதகருக்கு பிறப்பு முதல்  11/05/2016 தேதி முடிய சந்திரன் திசையே நடை பெற்று கொண்டு இருக்கிறது , இந்த சந்திரன் திசை ஜாதகருக்கு எந்த பாவகத்தின் பலனை செய்கிறது என்பதை கவனிக்க வேண்டும் மேலும் ஜாதகர் சிறு குழந்தை பருவம் என்பதால் இதை அனுசரித்து பலனை நிர்ணயம் செய்வது அவசியம் தற்பொழுது நடை பெரும் சந்திரன் திசை ஜாதகருக்கு 8,12ம் வீடுகள் விரைய பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலன்களை தந்து கொண்டு இருப்பது அவ்வளவு நன்மையை தர வாய்ப்பில்லை,மேலும் பனிரெண்டாம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஒன்பதாம் பாவகமாக வருவது ஜாதகருக்கு தான் செய்த பாக்கியத்தின் பலன்களை அனுபவிக்க இயலாது சூழ்நிலையையும் , உடல் ரீதியான சில தொந்தரவுகளையும் தர கூடும் , மேலும் தனது தகப்பனாருக்கு தேவையற்ற அவ பெயரை ஏற்ப்படுத்தகூடும் , இருப்பினும் இவற்றின் தாக்கம் என்பது மிக குறைந்த அளவிலேயே இருக்கும் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடையலாம் .

11/05/2016 தேதிக்கு மேல் நடை பெரும் செவ்வாய் திசை பற்றி சிறிது ஆய்வு செய்வோம், 2,3,5,9,11ம் வீடுகள் முறையே அதிர்ஷ்டம் எனும் லாப ஸ்தானமாகிய 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று செவ்வாய் திசை பலன்களை வழங்குகிறது இது மிகவும் சிறந்த விஷயம் குறிப்பிட்ட பாவக அமைப்பில் இருந்து ஜாதகர் 100 சதவிகித பலன்களை தங்கு தடையின்றி அனுபவிக்கும் தன்மை உண்டாகும் , இதனால் ஜாதகருக்கு நல்ல கல்வி அமையும் , எடுக்கும் முயற்ச்சிகள் வெற்றி பெரும் , குல தேவதையின் அருளும் நல்லோர் ஆசியும் கிடைக்கும் , எங்கு சென்றாலும் ஜாதகர் நற்பெயர் எடுக்கும் யோகம் உண்டாகும் , அடிப்படையில் ஜாதகருக்கு இந்த செவ்வாய் திசை நீண்ட அதிர்ஷ்ட வாழ்க்கையை அமைத்து தரும் என்பது உறுதியாகிறது.

எனவே மேற்கண்ட முறையில் ஜாதக பலன்களை துல்லியமாக கணிதம் செய்து சொல்லும் பொழுது ஜாதகர் தனது வாழ்க்கையை செம்மையாக அமைத்து கொள்ள உதவும் என்பது ஜோதிட கலையின் சிறப்பு அம்சம் . மேலும் சந்திரன் திசையில் ஜாதகர் உடல் நிலை அமைப்பில் அதிக கவனமாக இருந்து அவர்களது பெற்றோர்கள் ஜாதகரை கவனமுடன் பார்த்துக்கொள்ள ஜோதிட கலை இந்த இடத்தில் கை கொடுக்கும் , ஜாதகரின் தகப்பனார் தேவையில்லாமல் மாற்றவர்கள் விஷயந்தில் தலையீடு செய்து அவ பெயரை சம்பாதித்து கொள்ளாமல் எச்சரிக்கையாக இருந்து கொள்ள ஜோதிட கலை அறிவுறுத்தும் , வீண் விரையன்களை தவிர்க்க உதவி புரியும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969




 

திங்கள், 20 மே, 2013

சாய கிரகங்களான ராகு கேது வழங்கும் யோக பலன்களும், 4,10ம் பாவக வழியில் ஜாதகர் பெரும் நன்மைகளும் !



சாயா கிரகங்கள் என வர்ணிக்கப்படும் ராகு கேதுவின் வலிமையை பற்றி தெளிவாக புரிந்துகொள்ள உதவும் ஜாதகம் இது என்றால் அது மிகையாகாது.



இந்த குழந்தையின் ஜாதக அமைப்பில் சாயா கிரகங்களான  ராகு கேது முறையே மகரம் மற்றும் கடகம் என்ற ராசிகளில் அமர்ந்து சம்பந்தபட்ட பாவக அமைப்பிற்கு 100 சதவிகித யோகபலன்களை தரும் நிலையில் இருக்கின்றனர் , பொதுவாக ஜாதக பலன்கள் காணும் அமைப்பை வைத்து பார்க்கும் பொழுது இந்த சாயாகிரகங்கள் அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானம் என்று அழைக்கப்படும் 11ம் பாவகத்தில் ராகுவும், பூர்வபுண்ணியம் என்று அழைக்கப்படும் 5ம் பாவகத்தில் கேதுவும் அமர்ந்த பலன்களை தரும் அமைப்பை கொண்டுள்ளதாக பல ஜோதிடர்களின் கணிப்பாக இருக்க கூடும் .

உண்மையில் ராகு கேது எனும் சாயா கிரகங்கள் , பாவக அமைப்பின் படி பாகை வாரியாக கணிதம் கொண்டு பார்க்கும் பொழுது மகரத்தில் உள்ள 10ம் பாவகத்தில் ராகுவும், கடகத்தில் உள்ள 4ம் பாவகத்தில் கேதுவும் அமர்ந்திருக்கின்றனர் என்பதே சரியான ஜோதிட கணிதம் , மேலும் ஜாதகருக்கு சரியான பதில் சொல்ல இதுவே உதவும்.

ஏனெனில் ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் என்பது தனுசு ராசியில்  259.16.01என்ற பாகையில் ஆரம்பித்து , மகரத்தில் 286.46.10 பாகையில் நிறைவு பெறுகிறது , இதற்க்கு உட்பட்ட 276.24.26 பாகையில் மகர ராசியில் , ராகு அமர்ந்து இருப்பது ஜீவன ஸ்தானத்தில் தனது ஆளுமையை செலுத்துகிறது என்பது உறுதி ஆகிறது .

மேலும் ஜாதகருக்கு சுக  ஸ்தானம் என்பது மிதுனத்தில் 79.16.01என்ற பாகையில் ஆரம்பித்து , கடகத்தில்  106.46.10 பாகையில் நிறைவு பெறுகிறது , இதற்க்கு உட்பட்ட 96.24.26 பாகையில்கேது அமர்ந்து இருப்பது சுக ஸ்தானத்தில் தனது ஆளுமையை செலுத்துகிறது என்பது உறுதி ஆகிறது .

ஆக மேற்க்கண்ட ஜாதகத்தில் கேந்திர வீடுகளான ஜீவன ஸ்தானத்தில் ராகுவும் , சுக ஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்து 100 சதவிகித நல்ல நிலையில் இருப்பது தெளிவாகிறது , எனவே ஜாதகருக்கு இவர்களால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்பதை இனி பார்ப்போம் .

 காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு  ஜீவன ஸ்தானமான மகரத்தில் ராகு நல்ல நிலையில் அமர்ந்து ஜாதகருக்கு ஜீவன  ஸ்தானத்திற்கு  100 சதவிகித நன்மையை செய்வதால் , ஜாதகரின் வாழ்க்கையில் தனது தகப்பனார் அமைப்பில்  இருந்து கிடைக்க வேண்டிய அனைத்தும் 100 சதவிகிதம் எவ்வித தங்கு தடையும் இன்றி கிடைக்கும் , தனது தகப்பனாருடன் ஜாதகர் நல்ல நடப்பு மற்றும் பாசத்துடன் பழகும் யோகம் உண்டாகும் , தனது தகப்பனார் மீது அளவுகடந்த நன்மதிப்பையும் , மரியாதையும் ஜாதகர் கொண்டு இருப்பார் , ஜாதகர் பிறந்ததில் இருந்து ஜாதகரின் தகப்பனாருக்கு அளவில்லா ஜீவன முன்னேற்றத்தை வாரி வழங்கும்.

 பல தொழில் செய்யும் யோகம் உண்டாகும், மேலும் ஜாதகர் செய்யும் செயல்கள் யாவும் கவுரவமாகமும் , மதிப்பு மிக்க  செயல்களாகவும் , அனைவரையும் கவரும் விதத்திலும் இருக்கும் , ஜிவனத்தில் அமரும் ராகு ஜாதகருக்கும் , ஜாதகரின் தகப்பனாருக்கும்  தொழில் , வேலை , ஜீவனம் என்ற அமைப்பில் இருந்து 100 சதவிகித முன்னேற்றத்தை தங்கு தடையின்றி வாரி வழங்கும் என்பதில் சிறிதும்  சந்தேகம் இல்லை , இந்த முன்னேற்றம் என்பது ஜாதகருக்கு வெகு விரைவில்  குறுகிய காலத்தில் அமையும் என்பது சிறப்பான விஷயம் .

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமான கடகத்தில் கேது நல்ல நிலையில் அமர்ந்து ஜாதகருக்கு சுக ஸ்தானத்திற்கு 100 சதவிகித நன்மையை செய்வதால் , ஜாதகரின் வாழ்க்கையில் தனது தாயார் அமைப்பில் இருந்து கிடைக்க  வேண்டிய சிறந்த உயர்கல்வி , சுகமான வாழ்க்கை , சிறந்த சொகுசு வண்டி  வாகனம் , சொத்து சுக சேர்க்கை , தன்னம்பிக்கையான மன நிலை , ஸ்திரமான புத்தி , நல்ல மன நிலை , உடல் ரீதியாக வரும் நோய் நொடிகளில் இருந்து விரைவான குணம் பெரும் அமைப்பு என்ற வகையில் அதிக நன்மைகளை  விரைந்து தரும் .

குறிப்பாக ஜாதகரின் தாயாருக்கு இது மிக சிறந்த அமைப்பு , அவர்களின் ஆரோக்கியம் மேம்படும் , நிம்மதியான வாழ்க்கை கிட்டும் , தாயாரின் அமைப்பில் இருந்து ஜாதகருக்கு சிறந்த அரவணைப்பும் , பாசமும் தடையின்றி கிடைக்கும் , ஜாதகரின் சிறந்த ஒழுக்கத்திற்கு காரணமாக தாயின் அறிவுரைகளும் , ஜாதகரின் வெற்றிக்கு காரணமாக தாயின் ஆலோசனைகளும் உறுதுணையாக இருக்கும் , மகரத்தில் அமரும் ராகு ஜாதகருக்கு சிறந்த சொத்து சுக சேர்க்கைகளை , தனது சுய உழைப்பின் மூலம் பெற்று தரும் , கடகத்தில் அமரும் கேது ஜாதகருக்கு பரந்த மனப்பான்மையையும் , விட்டுகொடுக்கும் தன்மையையும் , மற்றவர்களிடம் பரிவு காட்டும் நல்ல குணத்தையும் தரும் .

ராகு கேது இருவரும் ஒருவரது சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் அமர்வது சிறப்பு , இதை போன்று தகப்பனை குறிக்கும் 10ம் பாவகத்துடனும் , தாயை குறிக்கும் 4ம் பாவகத்துடனும் , சம்பந்தம் பெறுவது ஜாதகர் சிறந்த மாமனிதனாக வளர வழிவகுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை , ஒருவருக்கு நல்ல பெற்றோர் அமைந்துவிட்டால் , அவர் தனது வாழ்க்கையை  எவ்வித சூழ்நிலைகளையும் சமாளித்து வெற்றி பெரும் யோகம் உண்டாகும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969


வெள்ளி, 17 மே, 2013

முற்ப்போக்கு சிந்தனையும் , நேர்மறை எண்ணங்களாலும் வாழ்க்கையில் வெற்றி பெரும் ஜாதக நிலை !



இறை அருளின் கருணையினால் ஒருவருடைய சுய ஜாதக அமைப்பில் , உடல் உயிர் என்று வர்ணிக்கப்படும் லக்கினம் எனும் முதல் பாவகம் லக்கினத்துடன் தொடர்பு பெறுவதும் , பூர்வ புண்ணியம் எனும் ஐந்து களத்திர ஸ்தானம் எனும் ஏழு, பாக்கிய ஸ்தானம் எனும் ஒன்பது மற்றும் லாப ஸ்தானம் எனும் பதினொன்றாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றத்தை தந்து , ஜாதகரின் சிந்தனையினாலும் , செயல்பாட்டினாலும் ஜாதகத்தில் உள்ள யோக நிலைகளை முழுவதும் அனுபவிக்கும் ஆற்றலை தரும் .

மேற்கண்ட அமைப்பை பெற்ற ஜாதக அன்பர்கள் , தனது வாழ்க்கையை தானே சுயமாக வாழும் வல்லமையை சிறு வயதினில் இருந்தே பெற்று விடுவார்கள், இந்த சிக்கலான சமுக அமைப்பில் இருந்து , தனது வாழ்க்கையை எப்படியும்  செம்மையாக அமைத்து கொண்டு பிறர் வியந்து பாராட்டும் அளவிற்கு சிறப்பாக வாழும் தன்மையை ஜாதகர் பெற்று இருப்பார் என்பது மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம் , மேலும் இவர்களின் முற்ப்போக்கு சிந்தனையும் செயல்பாடுகளும் ஜாதகரை மற்றவர்களிடம் இருந்து தனித்து காட்டும் , பொதுமக்களிடம் இருந்து சிறப்பான வரவேற்ப்பை பெற்று தரும் .

தன்னம்பிக்கை மற்றும் சுய கட்டுபாட்டிற்கும் சிறந்த உதாரணமாக விளங்கும் அன்பர்கள் இவர்களே , இவர்களின் இறக்க சுபாவத்தை பலர் தமது சுய லாபத்திற்காக பயன்படுத்தி கொள்வார்கள் , இருப்பினும் ஜாதகர் அதைபற்றிய கவலை எதுவும் இன்றி தனது செயல் மற்றும் நடவடிக்கை மற்றவரை பாதிக்கா வண்ணம் நடந்து கொள்வார்கள் , மேலும் தனக்கு வரும் துன்பம் மற்றும் சிரமங்களை கூட தனக்கு சாதகமாக மாற்றிகொண்டு வெற்றிகரமாக வாழும் சிறந்த வாழ்க்கையை இறையருள் ஜாதகருக்கு தொடர்ந்து வாரி வழங்கி கொண்டே இருக்கும் .

லக்கினம் முதல் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் தனது வாழ்க்கையில் நடக்கும் நன்மை தீமை விஷயங்களுக்கு தானே காரணம் , தனது வினை பதிவின் அடிப்படையிலேயே அனைத்தும் நடை பெறுகிறது , வரும் இன்ப துன்பங்களுக்கு தானே காரணம் எனும் சிந்தனையை தரும் , மேலும் சுய கட்டுப்பாடு , தன்னம்பிக்கை ஒழுக்கம் என்பது ஜாதகருக்கு சிறு வயது முதற்கொண்டே அடிப்படையாக அமைந்து ஜாதகரின் வாழ்க்கையில் வரும் முன்னேற்றத்திற்கு  உறுதுணையாக அமைந்து விடும் , இதுவே ஜாதகர் சிறப்பாக  வளரும் சூழ்நிலையை தரும் , ஜாதகர் எவ்வித தீய பழக்க வழக்கங்களுக்கு  ஆட்பட மாட்டார் என்பது மட்டும் உறுதி , இவரால் நிச்சயம் மற்றவர்கள்  பாதிக்க வாய்ப்பு இல்லை, இதுவே ஜாதகரை சிறப்பான முன்னேற்றத்திற்கு  எடுத்து செல்லும் .

லக்கினம் ஐந்தாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகரிடம் குடிகொண்டுள்ள இறை நிலையின் அருள் ஆற்றல் ஜாதகரின் முன்னேற்றத்திற்கு 100 சதவிகிதம் உறுதுணை புரியும் , ஜாதகர் சிறு வயது முதற்கொண்டே இறை நிலையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளவராகவும் ஆன்மீக பெரியோர்களின் ஆசியை பெற்றவராகவும் திகழ்வார் , தன்னுடன் சேர்க்கை பெரும் அன்பர்களின் குணம் , எண்ணம் , செயல்  அறிந்து நட்பை வளர்த்துகொள்ளும் தன்மையை தரும் , இதுவே ஜாதகரின்  வாழ்க்கையை மேன்மை படுத்தும் , தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும் , இவர்களிடம் உள்ள ஒரு சிறப்பான விஷயம் , தன்னை சார்ந்துள்ளவர்களின்  தன்மையை முழுமையாக உணர்ந்து கொண்டு அவர்களுக்கு  ஏற்ற விதத்தில் நடந்துகொள்ளும் தன்மையை தரும் , இவர்களுக்கு எல்லா நேரமும் நல்ல நேரமாக விளங்கும் என்பது குறிப்பிடத்தக்க  ஒரு சிறப்பு அம்சம் .

லக்கினம் ஏழாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகரின் நண்பர்கள் அனைவரும் நல்வர்களாக திகழ்வார்கள் ,  பொதுமக்கள் ஆதரவு ஜாதகருக்கு பரிபூரணமாக  அமைந்துவிடும் , இவர்கள் வழியே ஜாதகர் அதிக யோக பலன்களை  அனுபவிக்கும் தன்மை உண்டாகும் , ஜாதகரின் செயல்பாடுகளை ஜாதகரின்  நல்ல நண்பர்களும் , பொதுமக்களும் கூர்ந்து கவனிப்பதால் ஜாதகரின்  நடத்தை மற்றும் ஒழுக்கம் மிகவும் சிறப்பாக அமைந்துவிடும் , மேலும்  பொறுப்பான பதவிகள்  அல்லது பொறுப்பான நிர்வாகத்தை ஜாதகர் நிர்வகிக்கும்  யோகத்தை இளம் வயதிலேயே தந்துவிடுவதால் , ஜாதகர் அதில் சிறந்து விளங்கும்  தன்மையை பெறுவதற்காகவே தனது வாழ்க்கையை சிறப்பாக அமைத்து கொண்டு , 100 சதவிகித வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்நாள்  முழுவது வாழும் தன்மை தரும் .

லக்கினம் ஒன்பதாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் தனது முன்ஜென்ம  நல்வினை காரணமாகவும் , தனது பெற்றோர்கள் மற்றும் முன்னேர்கள்  செய்த புண்ணிய பதிவின் காரணமாகவும் வாழ்க்கை பாதை சீரான  ஒரு நேர்கோட்டில் அமைந்துவிடும் , ஜாதகரே நினைத்தால் கூட தீய வழி  பாதையில் செல்ல இயலாது , அடிப்படையிலேயே ஒழுக்கத்தை தனது இரு கண்களாக  பாவிக்கும் தன்மையை தரும் , மானம் ஒன்றே வாழ்க்கை என்ற  சிந்தனையை தரும் , தவறி கூட தனது சொல்லால் , செயலால் மற்றும் சிந்தனையால் பிறருக்கு தீமை செய்யாத மன பக்குவத்தை தரும், ஜாதகர்  மேற்கொள்ளும் காரியங்கள் யாவும் முன்னோர்களின் ஆசியினாலும் , இறை அருளின் கருணையினாலும் வெற்றி மேல் வெற்றியை பெற்று தரும் .

லக்கினம் பதினொன்றாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் தனது வாழ்க்கையில் அதிர்ஷ்ட வாய்ப்புகளை தொடர்ந்து பெற்றுகொண்டே இருக்கும் யோக நிலையை தரும் , குறிப்பாக ஜாதகருக்கு புதையல் , லாட்டரி போன்ற  அமைப்புகளில் இருந்து மிகப்பெரிய முன்னேற்றத்தை தரும் அல்லது  ஜாதகர் தனது நேர்மறை எண்ணங்களால் , புதையலுக்கு நிகரான செல்வ வளங்களை பெரும் புத்திசாலித்தனம் மற்றும் செயல் திறனை வாரி வழங்கும் , ஜாதகரால் முடியாத காரியங்கள் என்பது எதுவும் இல்லை என்ற நிலையை தரும் , தன்னம்பிக்கையும் , மனோதிடத்தையும் இறை நிலை ஜாதகருக்கு மற்றவரை விட கொஞ்சம் அதிகமாகவே கொடுத்துவிடும் , எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளித்து , அதில் வெற்றி பெரும் யோகத்தையும் வாரி வழங்கும் , இவரின் சிந்தனை மற்றும் செயல்பாடுகளின் வீரியத்தை எவராலும் அறிந்து கொள்ள இயலாது , இதுவே ஜாதகரின் வெற்றிக்கு உண்டான  சூட்சமமாக விளங்கும் .

ஆனால் மேற்சொன்ன பாவகங்கள் ஜாதகரின் லக்கினத்திற்கு பாதக ஸ்தானமாக அமைந்துவிட கூடாது அப்படி அமையும் பட்சத்தில் மேற்சொன்ன பலன்களுக்கு  எதிர்மறையான பலன்களே நடைமுறைக்கு வரும் , மேலும் லக்கினம் என்பது 2,6,8,12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு எதிர்மறை எண்ணத்தை ஊக்கபடுத்தி , ஜாதகரை செயல்படாத சூழ்நிலைக்கு தள்ளிவிடும் தன்மையை தர கூடும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969