திங்கள், 26 செப்டம்பர், 2022

மேஷத்திற்க்கு பேரதிர்ஷ்டம் மற்றும் உலகப்புகழ் - ( சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 முதல் 2025 வரை )

மேஷம் - சனிப்பெயர்ச்சி 2023 முதல் 2025 வரை

 நீதிமான் சனி பகவான் மேஷத்திற்க்கு லாப ஸ்தானமான 11ம் இடத்தில்  (தனது வர்க்க ) கும்ப ராசியில் சஞ்சரிக்கும் இந்த அற்புதமான நேரம் என்பது தன்னிறைவான யோகவாழ்க்கையையும், பேரதிஷ்டத்துடன் கூடிய உலகப்புகழ் பெரும் தன்மையையும் 100% விகிதம் வாரி வழங்குகிறார், எனவே மேஷ ராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்கள் தங்களது வாழ்க்கையை மிகுந்த விழிப்புணர்வுடன் திட்டமிட்டு, மிகச்சிறப்பாக தங்களது யோக வாழ்க்கையை நிர்ணயம் செய்துகொள்வது என்பது அவசியமானது என்பதை இந்த அற்புதமான நேரத்தில் அறிவுறுத்த "ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது.

 லாப ஸ்தானமான 11ல் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் மேஷ ராசி மற்றும் லக்கினத்தை பெற்ற அன்பர்கள் அனைவருக்கும் இனிவரும் இரண்டரை வருடம் நீடித்த அதிர்ஷ்டத்தை மட்டும் தன்னிறைவாக வாரி வழங்குவது வரவேற்கத்தக்கது, குறிப்பாக முற்போக்கு சிந்தனை தங்களது வாழ்க்கையில் வியக்கத்தக்க நல்ல மாற்றங்களை வாரி வழங்கும், மனதில் அதீத தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும், புதிய திட்டமிடுதல்கள், புதிய யுக்திகள், புதிய சிந்தனைகள் தங்களின் வாழ்க்கையில் அளவில்லா சுபயோகங்களை வாரி வழங்கும், தங்களின் மூத்த சகோதரன் சகோதரி வழியில் இருந்து வரும் உதவிகள் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை தன்னிறைவாக வாரி வழங்கும், பொருளாதார முன்னேற்றத்தை யூகிக்க இயலாத வண்ணம் மேம்படுத்தும், தெளிவான திட்டமிடுதல்கள் தங்களின் தொழில் மேன்மையை உறுதிப்படுத்தும், செயல்திறனில் அதீத உத்வேகம் உண்டாகும், புகழ் பெற்ற பெரிய மனிதர்களின் உதவியும் ஆதரவும் தங்களை தேடி வரும், செயற்கரிய காரியங்களை செய்து உலகப்புகழ் பெறுவதற்கான சந்தர்ப்பமும் வாய்ப்புகளும் உங்களது காலடியில் வந்து நிற்கும், இயற்கையாவே அதீத ஆளுமை திறன் கொண்டுள்ள மேஷ ராசியை சார்ந்த அன்பர்களுக்கு அதிர்ஷ்டம் அறிவு சார்ந்த நிலையில் இருந்து நற்பலன்களை நீடித்து வாரி வழங்கும், புதிய வேலைவாய்ப்பு, புதிய தொழில் வாய்ப்பு, கூட்டு தொழில் வழியில் இருந்து பெரும் ராஜயோக வாழ்க்கை, தொழில் ரீதியான உழைப்பிற்க்கான அங்கீகாரம் மற்றும் பொதுமக்கள் ஆதரவு, அரசாங்க உதவி, பொருள் சேர்க்கை, முதல் தரமான பொருளாதார முன்னேற்றம், தமக்கு கீழ் பணியாற்றும் வேலையாட்கள் ஒத்துழைப்பு, தெளிவான சிந்தனை, சிறந்த திட்டமிடுதல்கள் போன்ற விஷயங்களால் தங்களின் முன்னேற்றம் என்பது உறுதிப்படுத்தப்பட்ட தன்மையில் பிரகாசிக்கும் தன்மையை தாங்களே உளமார உணருவீர்கள் என்பது கவனிக்கத்தக்கது, தாம் எடுத்துக்கொண்ட லட்சியங்கள் காரியங்களில் வெற்றி மேல் வெற்றியை சுவீகரிக்கும் வல்லமை பெற்ற மேஷ ராசியை சார்ந்த அன்பர்களுக்கு இனிவரும் இரண்டரை வருடம் தன்னிறைவான அதிர்ஷ்டங்களை மட்டுமே வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு விஷயம் எனவே மேஷ ராசி அன்பர்களே சற்று விழிப்புணர்வுடன் இருந்து தங்களது வாழ்க்கையை வெற்றி பெறுங்கள்.

 சனி பகவான் தனது 6ம் பார்வையால் சுக ஸ்தானமான 4ம் பாவகத்தை வசீகரிப்பது, எதிர்வர்க்க கிரகம் என்ற போதிலும் மேஷ ராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு புதிய இடம் வீடு வண்டி வாகன யோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும், ஆண்களுக்கு தனது தாயார் வழியில் இருந்து வரும் மாத்ரு மூலஸ்தான யோகம் என்பது வியக்கத்தக்க சுபயோகங்களை தன்னிறைவாக வாரி வழங்கும், இதுவரை குடியிருக்க சொந்த வீடு இல்லாமல் போராடிய மேஷத்தை சார்ந்த அன்பர்களுக்கு எதிர்ப்பாராத விதமாக சகல வசதிகளும் வாய்ந்த சொந்த வீடு அமையும், தங்களது தாய் வழி சொத்துக்களை முழுமையாக சுவீகரிப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகும், எதிரிகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் சிம்ம சொப்பனமாக திகழும் யோகம் உண்டாகும், போட்டி பந்தயங்களில் வெற்றி, தேர்வுகளில் மிகப்பெரிய தேர்ச்சி, வழக்குகளில் வெற்றி, சுய முயற்சி கொண்டு வாழ்க்கையில் சகலவிதமான சொத்துக்களையும் குறுகிய காலத்தில் பெரும் யோகம், எதிர்பாராத அந்நிய தேச நபர்கள் வழியில் இருந்து வரும் சுபயோகம், தெளிவான முடிவுகள் வழியில் இருந்து தாங்கள் பெரும் அதீத நன்மைகள் என்ற வகையில் சிறப்புகளை இனிவரும் இரண்டரை வருடம் தங்களுக்கு முழுமையாக வாரி வழங்கும், பெண்களுக்கு தனது தகப்பனார் வழியில் இருந்து சொத்து சுக சேர்க்கை, ஆடை ஆபரண சேர்க்கை, பொருளாதார உதவிகள், புதிய வீடு வண்டி வாகன சேர்க்கை, சுய கவுரவம் மதிப்பு மரியாதை தேடிவரும், கல்வி காலங்களில் உள்ள பெண்களுக்கு அபரிவிதமான தேர்ச்சி உண்டாகும், வெளிநாடு வெளியூர் சென்று வருவதற்கான நல்லதொரு வாய்ப்பு வந்து சேரும், எதிர்ப்புகள் வழியில் தங்களுக்கான எதிர்காலம் உருவாகும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள், முயற்சிக்கான வெற்றியும் தங்களுக்கு வந்து சேரும் என்பது அற்புதமான விஷயமாகும், தங்களின் குணநலன்கள் செயல்பாடுகளில் சுய மதிப்பீடு செய்துகொள்வது தங்களுக்கான முன்னேற்றத்தின் தன்மையை வெகுவாக சிறப்பிக்கும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள், விடாமுயற்ச்சி விஸ்பரூப வெற்றி என்ற வகையில் தங்களுக்கு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், பொருளாதார வகையில் கேட்ட இடத்தில் இருந்து பணம் வந்து சேரும், தங்களுக்கு கடன் சார்ந்த உதவிகள் கேட்ட இடத்தில் இருந்து கிடைக்கும், வங்கி கடன் உதவி தேடி வரும், தொழில் சார்ந்த வகையில் எதிர்பார்த்த கூட்டாளிகள் தங்களுக்கு சிறப்பான உதவிகளை வழங்குவார்கள், செய்யும் தொழில் வழியில் கடின உழைப்பை வெளிப்படுத்தி வெற்றி காணும் சுபயோகமான நேரமிது, சனிபகவானின் சத்ரு ஸ்தான பார்வை வழியில் 100% விகித சுபயோகங்களையே மேஷ ராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்கள் சுவீகரிக்க இருக்கின்றனர் வாழ்த்துக்கள்.

 சனி பகவான் தனது சமசப்த பார்வை வழியில் மேஷ ராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தை சிம்ம ராசியை வசீகரிப்பது கலைத்துறையில் இயல் இசை நாடக துறையில் உள்ள நபர்களுக்கு அபரிவிதமான அதிர்ஷ்ட வாய்ப்புகளை நல்குவதுடன் பொருளாதார ரீதியான முன்னேற்றத்தையும் தன்னிறைவாக வாரி வழங்குகிறார் என்பது கவனிக்கத்தக்கது, கலைகளில் தேர்ச்சியையும் காதலில் வெற்றியையும் பெரும் யோகமும் உண்டாகும், குலதெய்வ நல்லாசி, குழந்தைகள் வழியிலான சுபயோகங்கள், சந்ததி தழைக்க நல்லதொரு ஆண் வாரிசு, ஆராய்ச்சி மற்றும் பட்டய படிப்பில் மிகப்பெரிய வெற்றி என்றவகையில் சுபயோகங்களை முழுமையாக வழங்குகிறார், தனது துறை சார்ந்த ஞானம் என்பது இந்த நேரத்தில் மேஷ ராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு வெகுவாக கைகொடுக்கும், சமயோசித புத்திசாலித்தனம் தங்களது வாழ்க்கையில் மிகுந்த சுபயோகங்களை வழங்குவதுடன் கவுரவ பதவிகளை அலங்கரிக்கும் யோகம் உண்டாகும், எழுத்து பத்திரிகை துறையில் உள்ள நபர்களுக்கு இனிவரும் காலம் அபரிவிதமான வெற்றிவாய்ப்புகளையும், மக்களின் அங்கீகாரத்தையும் தன்னிறைவாக வாரி வழங்குகிறார், எதிர்ப்புகள் யாவும் வெற்றிகொள்ளும் தன்மையில் தங்களின் செயல்திறன் இருக்கும், தொழில் நுட்பம் மருத்துவ துறை சார்ந்த அன்பர்களுக்கு எதிர்பாராத வளர்ச்சியும், புதிய கண்டுபிடிப்புகள் வழியில் இருந்து ராஜயோக பலன்களையும் சுவீகரிக்க இருக்கின்றனர், பொது காரியங்களில் ஈடுபடும் சமூக நலன் செயல்பாட்டாளர்கள் இனிவரும் காலங்களில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு என்ற விஷயத்தில் பிரகாசிப்பார்கள், மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும், கற்ற கல்வியில் தங்களுக்கு இருக்கும் ஞானமும், முயற்சி வழியில் தங்கள் பெரும் வெற்றியும் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்புமுனையாக அமைந்து, ராஜயோக வாழ்க்கையை நல்கும், வெளியூர் வெளிநாடு பயணங்கள் மிக எளிதாக அமையும், வெளிநாடு வேலைவாய்ப்பு தங்களுக்கு தேடிவந்து அமையும், பயணங்கள் மூலம் எதிர்பார்த்த நன்மைகளும், பொருளாதார வளர்ச்சியும் உண்டாகும், தனது சிறப்பு தகுதிகளை வெகு அற்புதமாக வெளிப்படுத்தும் யோகம் உண்டாகும், அரசு துறை வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த அன்பர்களுக்கு இனிவரும் காலங்களில் தேடிவந்து சுபயோகங்களை நல்கும், கண்ணியமான செயல்பாடுகள் மூலம் மக்கள் ஆதரவை வெகு விரைவில் பெற்று முன்னேற்றம் பெறுவீர்கள், பூர்வீக சொத்துக்கள் தங்களுக்கு விரைவாக எவ்வித பிரச்னையும் இன்றி வந்து சேரும், முறையான கவுரவ பதவிகளும், தொழில் வழியிலான முன்னேற்றங்களும் எவ்வித தடையும் இன்றி தங்களை வந்து சேரும் என்பது சிறப்பான விஷயம், திருமண தடைகள் நீங்கி நல்லதொரு இல்லற வாழ்க்கை அமையும்.

சனி பகவானின் பத்தாம் பார்வை மேஷ ராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு ஆயுள் ஸ்தானமான விருச்சிக ராசியை வசீகரிப்பது  புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை நல்கும், குறிப்பாக ஆயுள் காப்பீட்டு, வாகன காப்பீடு, மருத்துவ காப்பீட்டு போன்ற துறைகளில் உள்ள அன்பர்களுக்கு வியக்கத்தக்க சுகபோகங்களை தன்னிறைவாக வாரி வழங்குவது கவனிக்கத்தக்கது, வெளிநாடுகளில் இருந்து வரும் வருமான வாய்ப்பு அதிகரிக்கும், பொருளாதார ரீதியாக திடீர் அதிர்ஷ்ட்ம் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அந்தஸ்த்தை வாரி வழங்கும், தங்களின் வாழ்க்கை துணை, எதிர்பாலின சேர்க்கை, நண்பர்கள், கூட்டாளிகள் மூலம் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய நன்மைகளை சுவீகரிக்கும் யோகம் உண்டாகும், புதிதாக தொழில் துவங்க நினைக்கும் அன்பர்களுக்கு நல்லதொரு வாய்ப்புகளை சனிபகவான் திடீரென வழங்குகிறார் என்பதை கருத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படுங்கள், இதுவரை வேலைவாய்ப்பற்ற அன்பர்களுக்கு தகுதி திறமைக்கான சரியான வேலைவாய்ப்பை பெருகிண்றீர்கள் என்பது கவனிக்கத்தக்கது, வெளிநாடு சார்ந்து ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்யும் அன்பர்கள் இனிவரும் காலம் அற்புதமான முன்னேற்றங்களை வாரி வழங்கும், உடல் நலம் சார்ந்த இன்னல்களை வெகுவாக அனுபவித்துக்கொண்டு இருக்கும் அன்பர்களுக்கு சரியான மருத்துவர் வழியில் சரியான மருத்துவம் கிடைக்கப்பெற்று குணம் பெறுவீர்கள் விரைவில், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு பதவியும் பொறுப்பும் தேடிவரும், மிகப்பெரிய ஆளுமை கொண்டுள்ள பதவிகளை அலங்கரிக்கும் யோகம் உண்டாகும், எதிராளி மூலம் சிறப்பான நன்மைகளே வந்து சேரும், எதிரிகள் செயல்பாடுகள் தங்களுக்கு நன்மையை வாரி வழங்கும், நீண்ட ஆயுள் உண்டாகும், பயணங்களில் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொண்ட பிறகே பயணங்களை மேற்கொள்ளுங்கள், இடம் பொருள் சொத்து வண்டி வாகனம், ஆடை ஆபரண சேர்க்கை போன்றவை இனிவரும்  காலங்களில் வெகு அபரிவிதமாக வந்து சேரும், உறவுகளின் ஆதரவும், சொந்தபந்தங்கள் ஆதரவும் தங்களுக்கு முழுமையாக வந்து சேரும் என்பதுடன், பல சுபகாரியங்களை முன்னின்று ஏற்று நடத்தும் யோகம் உண்டாகும், சனிபகவானின் திடீர் அதிர்ஷ்டம் தரும் யோக வாழ்க்கை இனி  தங்களுக்கே என்றால் அது மிகையாகாது.

குறிப்பு :

 மேற்சொன்ன சனிப்பெயர்ச்சி பலன்கள் யாவும் மேஷ ராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு சுய ஜாதகத்தில் நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற  11,4,5,8ம் வீடுகளின் பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள், சுய ஜாதக பலாபலன்களே முக்கியத்துவம் வாய்ந்தது.

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

09443355696 

வெள்ளி, 23 செப்டம்பர், 2022

படையப்பா நீலாம்பரியும் பாதக ஸ்தானமும் !

 

 ஏழரைசனி பாதகஸ்தானம் எது ஜாதகருக்கு தாங்க இயலாத துன்பத்தை தரும்?

கேள்வி : 

 ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம், ஏழரைசனி, கண்டகச்சனி, அஷ்டமசனி, அர்த்தாஷ்டமசனி, களத்திரதோஷம் போன்றவற்றை விட சுய ஜாதகத்தில் அதீத கஷ்டங்களை தரும் அமைப்பு உண்டா ?

பதில் :

 ஒரு ஜாதகர் வாழ்க்கையில் தாங்க இயலாத துன்பங்களை அனுபவிக்கிறார் என்றால் அதற்க்கு அடிப்படை காரணம் ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம், ஏழரைசனி, கண்டகச்சனி, அஷ்டமசனி, அர்த்தாஷ்டமசனி, களத்திரதோஷம் போன்றவை அல்ல அன்பர்களே மேற்சொன்ன தோஷங்கள் யாவும் சுய ஜாதக வலிமை சார்ந்த எந்த ஒரு புரிதலும் இல்லாமல் சொல்லப்படும் தவறான கருத்துக்கள், ஒருவரின் வாழ்க்கையினை 200% விகித பாதிப்பை தந்து எதிர்காலத்தையே கேள்விக்குறி ஆக்கும் வல்லமை என்பது பாதக ஸ்தானத்திற்க்கு மட்டுமே உண்டு என்பதை "ஜோதிடதீபம்" அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறது, அடிப்படையில் பொதுமக்களுக்கு பாதக ஸ்தானம் பற்றிய தெளிவான புரிதலும் விழிப்புணர்வும் இல்லை என்பதால் மேற்சொன்ன தோஷங்கள் காரணம் என முன்னிறுத்தப்பட்டு தவறான புரிதலை மக்களுக்கு ஏற்படுத்தப்படுகிறது, சுய ஜாதக வலிமை சார்ந்த விஷயங்கள் மூடி மறைக்கப்படுகிறது, சரி பாதக ஸ்தானம் என்றால் என்ன ? இதனால் வரும் பாதிப்பு எத்தகையது என்பதை இந்த கட்டுரையின் மூலம் நாம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே ! 

ஒரு ஜாதகத்தில் ஜென்ம லக்கினம் முதல் பனிரெண்டு பாவகமும் உயிர்ப்புடன் இருப்பது ஜாதகருக்கான யோக வாழ்க்கையை வாரி வழங்கும், இதில் ஜென்ம லக்கினம் முதல் பனிரெண்டு பாவகம் ஏதாவது ஒன்றோ, சில பாவங்களோ பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது சம்பந்தப்பட்ட பாவகம் செயல் இழப்பத்துடன், ஜாதகர் பாதக ஸ்தான சம்பந்தம் பெற்ற வீடுகள் வழியில் இருந்து அதீத 200% விகித இன்னல்களை எதிர்கொண்டே ஆக வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது, உதாரணமாக படையப்பா நீலாம்பரியின் கதாபாத்திரம் சரியான எடுத்துக்காட்டு, வாழவேண்டிய வயதிலும் இவர்கள் வாழ்வதில்லை, வாழ வேண்டிய வழிமுறையையும் இவர்கள் அறிவதில்லை இதன் பாதிப்பை இவர்களை சார்ந்தவர்களும் எதிர்கொள்ளும் சூழ்நிலை தருவது கவனிக்கத்தக்கது.

ஜென்ம லக்கினம் பாதக ஸ்தான சம்பந்தம் பெறுவது 

 ஜாதகர் உடல் நலம் மன நலம் பாதிப்பு வளரும் சூழ்நிலை சிறப்பில்லை, பெற்றோருடன் வாழ இயலாத சூழ்நிலை, அறிவு பூர்வ செயல்திறன் குறைவு, ஆன்ம பலம் குறைந்து முரண்பட்ட வாழ்க்கையை ஜாதகர் சுவீகரிக்கும் தன்மை, தனது வாழ்க்கையினை தானே கெடுத்துக்கொள்ளுதல் என்ற வகையில் கடினமான இன்னல்களை வாரி வழங்கும்.

உதாரணமாக : 

லக்கினம் : மேஷம் 

ராசி : கன்னி 

நட்ஷத்திரம் : உத்திரம் 4ம் பாதம் 

 ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ஜென்ம லக்கினம் எனும் முதல் பாவகமே பாதக பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் ( சரலக்கினம் 11, ஸ்திரலக்கினம் 9, உபயலக்கினம் 7 ) அடிப்படையில் பெற்றோருடன் வளரும் சூழ்நிலை அமையவில்லை, போதை வஸ்துக்களால் உடல் நலம் கடுமையாக பாதிப்பு, கல்வியில் தடை, தொழில் தடை, முரண்பட்ட இல்லற வாழ்க்கை அதனால் பிரிவு, கவுரவம் அந்தஸ்த்து வெகுவாக பாதிக்கப்பட்டு, ஜாதகர் மனநல ஆலோசணை பெற்று ஜீவிக்கும் தன்மையிலும் போதை பழக்கத்தில் இருந்து வெளிவர இயலாத சூழ்நிலை என ஜாதகரே தனது வாழ்க்கைக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி கொண்டார் என்பது கவனிக்க தக்கது.

 ஜாதகருக்கு நடைபெறும் ராகு திசை ( 08/12/2006 முதல் 08/12/2024 வரை ) நல்ல வேலை இந்த வலிமை அற்ற பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தவில்லை என்பது ஆறுதலான விஷயம் நடைபெறும் ராகுதிசையும், மேற்கண்ட ஜென்ம லக்கினம் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தி இருந்தால் இவரது வாழ்க்கை அதோகதிதான் என்பதை எவராலும் தடுக்க இயலாது என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறோம்.

 ஒருவரது ஜாதகத்தில் ஜென்ம லக்கினம் முதல் பனிரெண்டு வீடுகளில் எந்த ஒரு வீடும் ( சரலக்கினம் 11, ஸ்திரலக்கினம் 9, உபயலக்கினம் 7 )  பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற கூடாது, அப்படி சம்பந்தம் பெற்றாலும் நடைமுறையில் உள்ள திசா புத்திகள் எதிர்வரும் திசா புத்திகள் கடுமையாக பாதிக்கப்பட்ட  பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தக்கூடாது என்பது மட்டுமே ஜாதகர் வாழ்வதற்கான வழி, இல்லையெனில் ஜாதகரின் வாழ்வு முன்னேற்றம் தொழில் பொருளாதாரம், இல்லற வாழ்க்கை, மனநிம்மதி, மனஉறுதி, செயல்பாடு, முயற்சி, கவுரவம், அந்தஸ்து, மதிப்பு மரியாதை யாவற்றையும் இழந்து நடுத்தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்திவிடும் என்பது கவனிக்க தக்கது, இதில் இருந்து ஜாதகர் மீண்டு வருவது என்பது இயலாத காரியம் என்பதை அன்பு நேயரின் கேள்விக்கு பதிலாக வழங்குகிறோம்.

எனவே ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம், ஏழரைசனி, கண்டகச்சனி, அஷ்டமசனி, அர்த்தாஷ்டமசனி, களத்திரதோஷம் போன்றவற்றை விட சுய ஜாதகத்தில் அதீத கஷ்டங்களை தரும் அமைப்பு என்பது பாதக ஸ்தான தொடர்பு என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறோம் அன்பரே!

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

9443355696

புதன், 21 செப்டம்பர், 2022

தாலி கட்டிய கணவனுக்கு பேரிழப்பை தரும் - மாங்கல்ய தோஷம் !

 

 திருமண பொருத்தம் காண்பதில் நட்ச்சத்திர பொருத்தம் 10 என்பது 5% இனக்கவர்ச்சி மற்றும் மனம் சார்ந்த பொருத்தத்தை மட்டுமே நிர்ணயம் செய்யும் , ஜாதக பொருத்தம் என்பதே  100% விகிதம் இல்லற வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்யும் என்பதை கருத்தில் கொண்டு திருமண வாழ்க்கையில் இணைவது நலம் தரும் அன்பர்களே!

ஜாதக பொருத்தம் என்றால் என்ன ?

 சுய ஜாதகத்தில் வரன் ( ஆண் ), வது ( பெண் )  இருவரது இல்லற வாழ்க்கையை வெகு சிறப்பாக நிர்ணயம் செய்யும் வல்லமை 5வீடுகளுக்கு உண்டு  ( 2,5,7,8,12ம் பாவகங்கள் ) மேற்சொன்ன 2ம் பாவகம் வலிமை பெரும்பொழுது குடும்பம் தழைத்தோங்கும், வருமானம் மிகும், குடும்பத்தில் மகிழ்ச்சி, பொருளாதார தன்னிறைவு, இனிமையான வாக்கு வன்மை, இனிமையான பேச்சு, ஆறுதல் தரும் வார்த்தை, அன்பான சொற்கள், எதையும் எதிர்கொள்ளும் வல்லமை என்ற வகையிலும், 5ம் பாவகம் வலிமை பெரும் பொழுது சிறந்த நுண்ணறிவு திறன், அற்புதமான ஆண் வாரிசு, சுப நிகழ்வுகளை நிகழ்த்தும் தன்மை, கல்வியில் வெற்றி, கலையில் தேர்ச்சி, அறிவு திறன் கொண்டு வாழ்க்கையை நடத்தி செல்லும் தன்மை, மற்றவர் உதவி, உறவுகள் ஆதரவு, பூர்வீக சொத்தை சுவீகரிக்கும் தன்மை, சிறந்த நற்ப்பெயர், குடும்பத்தில் அங்கீகாரம், நினைத்ததை சாதிக்கும் வல்லமை என்ற வகையிலும்.

 7ம் பாவகம் வலிமை பெரும் பொழுது தனித்திறன் கொண்டு யாரையும் சார்ந்து வாழாமல் சுய வாழ்க்கையிலும் இல்லற வாழ்க்கையிலும் வெற்றி பெரும் யோகம், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் தன்மை, தாம்பத்திய வாழ்க்கையில் சிறப்பு, ஒற்றுமை குறையாத இல்லற வாழ்க்கை, தனி திறன் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் சுவீகரிக்கும் தன்மை, எதிர்ப்புகளை வெற்றி கொள்ளும் யோகம், சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் பெரும் தன்மை என மிகுந்த சிறப்பை தரும், 8ம் பாவகம் வலிமை பெரும் பொழுது பெண்ணிற்கு மாங்கல்யம் பலப்படும், கணவனுக்கு நீண்ட ஆயுளை தரும், மனைவி வழியில் இருந்து கணவனும், கணவன் வழியில் இருந்து மனைவியும் பொருளாதார தன்னிறைவை வாரி வழங்கும், இணைபிரியா இல்லற வாழ்க்கையை நல்கும் பொருளாதார தன்னிறைவையும், தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் வாரி வழங்கும், 12ம் பாவகம் வலிமை பெரும்பொழுது இல்லற இன்பம் பெருகும், தெய்வீக சக்தி மேலோங்கும், மனநிறைவான இல்லற வாழ்க்கை, திருப்தியான தாம்பத்தியம், போதும் என்ற மனம், விசாலமான மனம், திருப்திகரமான செயல்பாடுகள், இருப்பதை  கொண்டு மன நிறைவு பெரும் யோகம், நினைத்ததை அடையும் பேராற்றல் என இல்லற வாழ்ககையில் சகல சௌபாக்கியத்தையும் வாரி வழங்கும் மேற்சொன்ன 5பாவகங்களும் சிறப்பாக அமையும் பொழுது.

எனவே திருமண பொருத்தம் காண்பதில் நட்ச்சத்திர பொருத்தம் இல்லாவிட்டாலும் ஜாதக பொருத்தம் இல்லையெனில் திருமணம் செய்வது என்பது இல்லற வாழ்க்கையில்  மிகுந்த பேராபத்தை வாரி வழங்கும் என்பதை கருத்தில் கொள்க.

 உதாரணமாக :

லக்கினம் : கும்பம் 

ராசி : தனுசு 

நட்ஷத்திரம் : மூலம் 4ம் பாதம் 

ஜாதகிக்கு சந்திரன் திசையில் திருமணம் தாமதமாக வலுக்கட்டாயமாக நடைபேற்றது ( இரண்டாம் தாரமாக ) திருமணம் நடந்த நாள் முதல் இல்லற வாழ்க்கையில் "நித்தியா கண்டம் பூர்ண ஆயுசு" என்ற நிலையில் இன்னல்களும் துன்பங்களும்  அதிக அளவில் சந்திக்கும் சூழ்நிலையை தந்தது மனோகாரகன் சந்திரன் திசை, காரணம் சந்திரன் தனது திசையில் 1,4,7,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 100% விகித இன்னல்களை தந்ததுடன் தனது கணவனுக்கு உயிர் ஆபத்தையும் விபத்துகள் மூலம் ஏற்படுத்தி மருத்துவ செலவினங்களை கடுமையாக வாரி வழங்கியது, மாங்கல்ய  ஸ்தானம் என்பது ஜாதகிக்கு கால புருஷனுக்கு 6ம் ராசியான கன்னி என்பதால் கணவர் ஜாதகிக்கு ஜென்ம வைரியாக செயல்படுவது கவனிக்கத்தக்க விஷயம்.

மேலும் கணவன் மனைவி பிரச்சனை பிரிந்து சென்று இன்னலுறும் தன்மை, வீண் மனக்கசப்பு மன அழுத்தம் என்ற வாயில் அதீத இன்னல்களை வாரி வழங்கியது சந்திரன் மகா திசை மேலும் 5ம் பாவக வலிமை இருவருக்கும் நால்லதோர் ஆண் வாரிசை வழங்கி சிறப்பித்த போதிலும், கணவன் மனைவி உறவு சிறப்பிக்கவில்லை, தாம்பத்திய வாழ்க்கையை குறிக்கும் 12ம் பாவகம் கடுமையாக  பாதிப்பது ஜாதகிக்கு அதீத மனஉளைச்சல்களை வாரி வழங்கியது, மனஅழுத்தம் மனப்போராட்டம், மனபயம் போன்றவற்றால் ஜாதகி இன்னலுற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதெற்கெல்லாம் காரணம் ஜாதகிக்கு 2,5 ம் பாவகங்கள் வலிமை பெற்ற போதிலும், 7,8,12ம் பாவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதே காரணம், மேலும்  சந்திரன் சூரியன் மகா திசையில் வலிமை அற்ற 1,4,7,8ம் வீடுகள் மாங்கல்ய ஸ்தானமான 8ம் பாவக பலனை ஏற்று நடத்தியதும், மாங்கல்ய தோஷம் கடுமையாக பாதித்ததும் அடிப்படை காரணமாக அமைந்தது என்றால் அது  மிகையாகாது.

பெண்ணின் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருப்பின், ஆணின் ஜாதகத்தில் மேற்கண்ட 5பாவகங்களும் வலிமையுடன் இருப்பதும், நடைபெறும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே இல்லற வாழ்க்கை  சிறப்பாக அமையும், இல்லையெனில் இல்லற வாழ்க்கை என்பது கடுமையாக  பாதிப்பதுடன் விவாகரத்து வரை செல்லும் என்பதை தவிர்க்க இயலாது கணவனுக்கு உயிர் ஆபத்தையும், விபத்துக்களையும் தரக்கூடும் என்பது திருமண பொருத்தத்தில் விழிப்புணர்வு பெற வேண்டிய அமைப்பாகும்.

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

09443355696

#மாங்கல்யதோஷம் #ரஜ்ஜுபொருத்தம், #ஆயுள்ஸ்தானம் #திருமணத்தடை #தாமததிருமணம் #மறுமணம் #திருமணதோஷம் #விவாகரத்து #பொருத்தம் #நட்ச்சத்திர_பொருத்தம் #ஜாதகபொருத்தம்

தத்து பரிகாரம் செய்வது ஏன்? செய்வதால் பெற்றோர் மற்றும் குழந்தைக்கு யோக வாழ்க்கை கிட்டுமா?

 


குழந்தைகள் ஜாதகத்தில் பெற்றோரை குறிக்கும் பாவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்து, நடைமுறையில் அல்லது எதிர்வரும் திசா புத்திகள் பாதிக்கப்பட்ட தகப்பன்தாய் ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே சம்பந்தப்பட்ட குழந்தையை தத்து பரிகாரம் செய்வது பெற்றோர் மற்றும் குழந்தைக்கு சுபயோகங்களை வாரி வழங்கும், குழந்தையின் ஜாதகத்தில் பெற்றோரை குறிக்கு பாவகங்கள் பாதிக்கப்படாத நிலையில் தத்து பரிகாரம் செய்து தருவது என்பது முற்றிலும் ஜோதிட சாஸ்திரத்திற்கு முரண்பட்ட செயலாகும், இதனால் சம்பத்தப்பட்ட குழந்தைக்கு பெற்றோர் ஸ்தான வழியில் இருந்து வரும் சுபயோகங்களும் "யோகபங்க" நிலையை பெற்று  ஜாதகத்தில் உள்ள நன்மை மற்றும் யோக வாழ்க்கை தடைபட்டு போக வாய்ப்பு உள்ளது, முறையான ஜாதக ஆலோசனை அற்று செய்யும் காரியங்கள் யாவும் மிக பெரிய இன்னல்களையும் துன்பங்களையும் அதிகரிப்பதற்கே வாய்ப்பு உள்ளது என்பதை நாம் இந்த கட்டுரையில் அறிவுறுத்த விரும்புகிறோம். 

சுய ஜாதகத்தில் ஆண் குழந்தைகளுக்கு தாய் ஸ்தானமாக 4ம் பாவகமும், தகப்பன் ஸ்தானமாக 10ம் பாவகமும்,  பெண் குழந்தைகளுக்கு தாய் ஸ்தானமாக 10ம் பாவகமும், தகப்பன் ஸ்தானமாக 4ம் பாவகமும், பெற்றோர் ஸ்தானமாக அமையும், ஒரு குழந்தையின் ஜாதகத்தில் மேற்கண்ட 4,10ம் பாவகம் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது குழந்தையின் பெற்றோருக்கு கொடும் வைரியாக செயல்படும், பிறவியில் இருந்தே பெற்றோருக்கு பரம எதிரியாக செயல்படும் அல்லது பெற்றோர் அந்த குழந்தைக்கு ஜென்ம எதிரியாக செயல்படுவார்கள், உதாரணமாக குழந்தைகள் பெற்றோரை தாக்குவது உயிர் பயத்தை தருவது, பொருளாதார சிக்கல்களை உருவாக்குவது அல்லது பெற்றோர் அந்த குழந்தையை வஞ்சிப்பது சிசு கொலை செய்வது, கருவில் இருக்கும் பொழுதே கருச்சிதைவு செய்வது போன்ற நிகழ்வுகள் உண்டாகும், பெற்ற இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு இன்று தண்டனையை ஏற்று கொண்டு இருக்கும் பெண்மணியை தமிழகத்தில் உள்ள நம் அனைவருக்கும் நன்கு தெரியும்.

ஒரு குழந்தையின் ஜாதகத்தில் மேற்கண்ட 4,10ம் பாவகம் திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது குழந்தையின் பெற்றோருக்கு ஆயுள் அமைப்பை பாதிப்பதுடன் திடீர் இழப்புகளையும் பொருளாதார சிக்கல்கல்களையும் கடுமையாக வாரி வழங்கும், விபத்து மறுத்த்துவ செலவினங்கள், பெற்றோர் பிரிவு வளரும் சூழ்நிலை பாதிக்கப்படும் தன்மை என மிகுந்த இன்னல்களை வாரி வழங்குவதுடன் பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இடையிலான உறவு நிலையும் பாதிக்கப்படும் பெற்றோர் மற்றும் குழந்தைகள் பாசம் பற்று அற்று ஒரு நிலையிலா உறவு என்ற துர்பாக்கிய நிலையை தந்துவிடும், உதாரணமாக வெளிநாடுகளில் குழந்தைகள் இங்கே வயதான காலத்தில் மற்றவர்கள் உதவியை நாடி தவிக்கும் பெற்றோர், அல்லது முதியோர் இல்லத்தில் பெற்றோர் அவர்களது சொத்தை அனுபவிக்கும் பெற்றோர் என்ற நிலையில் தற்போழுது தமிழகம் நகர்ந்து கொண்டு இருக்கின்றது.

ஒரு குழந்தையின் ஜாதகத்தில் மேற்கண்ட 4,10ம் பாவகம் வீண் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது பெற்றோர் மற்றும் குழந்தை இரு அமைப்பினரும் அதீத மனஅழுத்தம், மனப்போராட்டம், வீண் விரைய செலவு, வீண் மருத்துவ செலவு, உதவி இன்றி தவிக்கும் சூழ்நிலை, எதிர்ப்புகள் வழியில் போராட்டம், அனைவராலும் தொல்லை துன்பம், எதிர்பாரா திடீர் இழப்பினால் அனைத்தையும் இழந்து இன்னலுறும் தன்மை, சட்ட சிக்கல் மூலம் தண்டனைக்கு ஆளும் தன்மை, தெளிவில்லாத சிந்தனை, குழம்பிய மனநிலை, நிலையற்ற தன்மையினால் வாழ்க்கையில் இன்னலுறும் தன்மை, பொதுவாழ்க்கையில் அவப்பெயர், எதிர்ப்புகளால் அனைத்தையும் இழந்து நிற்கும் சூழ்நிலை என கடுமையான இன்னல்களை தரும், உதாரணமாக சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் தனது அப்பா வெற்றியாளர் என்று நெகிழ்ந்த பெண் குழந்தை, மேற்சொன்ன நிலைகளுக்கு குழந்தைகளின் ஜாதகம் காரணம் அல்ல, குழந்தைகள் ஜாதகத்தின் மீது பழிபோட்டு கட்டுரையை எழுதவில்லை "ஜோதிடதீபம்" சம்பந்தப்பட்ட பெற்றோரின் சுய ஜாதகத்தில் குழந்தைகளை குறிக்கும் 5ம் பாவகம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும், இந்த விஷயத்தை குழந்தைகளின் ஜாதகத்தில் பெற்றோரை குறிக்கும் 4,10ம் பாவகங்கள் தனது பாதிப்பின் நிலையில் இருந்து நமக்கு அறிவுறுத்தும்.

ஒரு குழந்தையின் ஜாதகத்தில் மேற்கண்ட 4,10ம் பாவகம் 200%விகித இன்னல்களை வழங்கும் பாதக ஸ்தானமான ( சார லக்கினம் 11ம் வீடு, ஸ்திர லக்கினம் 9ம் வீடு, உபய லக்கினம் 7ம் வீடு பாதக ஸ்தானமாக அமையும் ) 11,9,7 பாவகத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது பெற்றோர் மற்றும் குழந்தை இரு அமைப்பினரும் தாங்க இயலாத 200% விகித இன்னல்களை தரும் அமைப்பு இதுவே ஆகும், பெற்றோர் குழந்தை இருவரும் கடுமையாக பாதிக்கப்படும் துர்பாக்கிய நிலையை தரும், தனது கண்முன் பெற்றோர் இழப்பும், பெற்றோர் கண்முன் குழந்தை இழப்பும் ஏற்படும் துர்பாக்கிய நிலையை ஏற்படுத்தும் தன்மை பெற்றது, இந்த அமைப்பை பெற்ற குழந்தைகளை வெகு விரைவாக தத்து பரிகாரம் செய்துவிடுவதே சாலச்சிறந்தது, இது மேற்சொன்ன பாதிப்புகளில் இருந்து இறை அருள் இருவரையும் காத்து அருள் புரியும்.

இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

லக்கினம் : கடகம் 

ராசி : சிம்மம்

நட்ஷத்திரம் : மகம் 1ம் பாதம் 

 மேற்கண்ட பெண் குழந்தையின் ஜாதகத்தில் தகப்பன் ஸ்தானமான 4ம் வீடு  பாதக ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெற்று 200% சதவிகிதம் பாதிக்கப்பட்டு இருப்பதுடன், தாய் ஸ்தானமான 10ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை 100% சதவிகிதம் பாதிக்கப்பட்டு இருப்பதுடன் எதிர்வரும் சுக்கிர மகா திசை ( 02/10/2023 முதல் 02/10/2043 ) வரை  வலிமை அற்ற கடுமையாக பாதிக்கப்பட்ட ( தகப்பன் ஸ்தானமான 4ம் வீடு  பாதக ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெற்று 200% சதவிகிதம் பாதிக்கப்பட்டு உள்ளது ) தந்தையின் ஸ்தான பலனை பாதக வழியில் தர இருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது, இது தனது தந்தைக்கு சுக்கிரன் திசை ஆரம்பித்தவுடன் 200% சதவிகிதம் இன்னல்களை தரும், பாதக ஸ்தானம் கால புருஷனுக்கு 2ம் ராசியான ரிஷபமாக அமைவது குடும்பத்தை கடுமையாக பாதிப்பதுடன், பொருளாதார வீழ்ச்சியை கடுமையாக தரும், இது இந்த குழந்தையின் தகப்பன் ஜாதகத்திலும் வலிமையற்ற பாவக பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருக்கும்.

நடைபெறும் கேது திசை வலிமை பெற்ற 5 மற்றும் 7ம் பாவக பலனை ஏற்று நடத்துவது  நன்மையை தந்த போதிலும் எதிர்வரும் சுக்கிரன் திசையே மிகுந்த இன்னல்களையும் தகப்பனுக்கு உயிர் ஆபத்தையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

எனவே சம்பந்த பட்ட பெற்றோர் தமது பெண் குழந்தையை முறையாக சதுர் வேதி  சொல்லும் அறிவுரையை ஏற்று தானதர்மம் செய்து முறைப்படி மகாலட்சுமிக்கு வெள்ளிக்கிழமை அன்று "தத்து பரிகாரம்" செய்யும் பொழுது மேற்கண்ட 200% விகித இன்னல்களில் இருந்து பெற்றோரும் குழந்தையும் கடவுள் அனுக்கிரகம் மூலம் முழுமையாக காப்பாற்ற படுவார்கள் என்பது ஜோதிட சாஸ்திரம் காட்டும் நல்வழியாகும்.

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

09443355696


செவ்வாய், 20 செப்டம்பர், 2022

சனிமகா திசா மற்றும் புத்தி யாரை கடுமையாக பாதிக்கும் !

 

 நவ கிரகங்களின் திசா புத்தி அந்த்ரம் மற்றும் சூட்ஷம காலங்கள் ஒரு ஜாதகருக்கு தனித்துவம் வாய்ந்த தன்மையில் நன்மை தீமைகளை வழங்கும் என்று கருதுவது சுய ஜாதக வலிமை அறியாமல் கூறப்படும் தவறான கருத்துக்கள், சுப கிரகங்களின் திசா புத்திகள், கேந்திர கோணங்களில் அமர்ந்த கிரகங்களின் திசா புத்திகள், சுப கிரக சேர்க்க பார்வை பெற்ற கிரகங்களின் திசா புத்திகள் ஒரு ஜாதகருக்கு நன்மைகளை வாரி வழங்கும் என்பது  சுய ஜாதகத்தில் ஜென்ம லக்கனம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை உணராமல் கூறப்படும் உண்மைக்கு புறம்பான கருத்துக்கள், இதை போன்றே அசுப கிரகங்களின் திசா புத்திகள் ஒரு ஜாதகருக்கு இன்னல்களை மட்டுமே வழங்கும் என்பதும் சுய ஜாதக உண்மைக்கு புறம்பானது.

 நவ கிரகங்களின் திசா புத்திகள் சுய ஜாதகத்தில் ஜென்ம லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையை தனது பலனாக ஏற்று நடத்துமோ அன்றி, தனிப்பட்ட முறையில் நன்மை தீமைகளை வழங்குவது என்பது ஜோதிட உண்மைக்கு புறம்பான கருத்து என்பது கவனிக்க தக்கது, எனவே ஒவ்வொரு ஜாதகருக்கு தனது ஜாதகத்தில்

 1) ஜென்ம லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் எவ்வித வலிமையுடன் உள்ளது வலிமை பெற்று இருக்கின்றதா? அல்லது வலிமை அற்று இருக்கின்றதா? என்பதை தெளிவாக அறிந்து கொள்வது ஜோதிட ரீதியான விழிப்புணர்வை தரும் 

2) நடைபெறும் திசா புத்தி சுய  ஜாதகத்தில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது அது தரும் பலன் நன்மையா ? தீமையா ? என்பதில் தெளிவு பெறுவது நமது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள வழி வகை செய்யும்.

3) நடைபெறும் திசா புத்திகள் கோட்சார ரீதியாக சுய ஜாதகத்தில் செல்லும் நட்ஷத்திரம் நமக்கு தரும் பலன் என்ன ? 

இந்த மூன்று விஷயங்கள் தெளிவு பெறுவது நமது வாழ்க்கையை வெகு சிறப்பாக நாமே நிர்ணயம் செய்ய வழிவகை செய்யும்

உதாரணமாக : 


லக்கினம் : துலாம் 

ராசி : மகரம் 

நட்ஷத்திரம் : திருவோணம் 1ம் பாதம் 

 மேற்கண்ட ஜாதகருக்கு அறிவுறுத்த பட்ட ஆலோசணை என்பது துலாம் லக்கினம் மகர ராசி யோகாதிபதி ராசியாதிபதி சனி திசை சுபயோகங்களை வாரி வழங்கும் என்ற ஆலோசனை வழங்கப்பட்டு இருக்கிறது குத்துமதிப்பாக, இதை கருத்தில் கொண்ட ஜாதகர் குரு திசை வழங்கிய அனைத்து பொருளாதர விஷயங்களை, சொத்து போன்றவற்றை முதலீடு செய்து குறுகிய காலத்தில் அனைத்தையும் இழந்து தவிக்கும் சூழ்நிலைக்கு ஆளாகி இருக்கிறார் குரு மகாதிசை ( 05/07/1996 முதல் 05/07/2012 வரை ) சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற 4,10ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக தொடர்பை பெற்று யோக வாழ்க்கையை நல்கி இருக்கின்றது.

யோகாதிபதி ராசியாதிபதி ஜாதகருக்கு பேரிழப்பை தந்தது ஏன் ? என்பதை  ஆய்வு செய்யும் பொழுது ஜாதகருக்கு சனி திசை (  05/07/2012 முதல் 06/07/2031 வரை ) தற்போழுது 1,3,5,7,11 ஆகிய வீடுகள் துலாம் லக்கினத்திற்கு பாதக ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்தில் 200% விகிதம் இன்னல்களை வாரி  வழங்கி உள்ளது, ஜென்ம லக்கின வழியில்   உடல் நலம் மனநலம் பாதிப்பு , சூழ்நிலை எதிர்கொள்ள இயலாத தன்மை, சுய அறிவு சார்ந்த முடக்கம், சரியான திட்டமிடுதல்கள் இல்லாத தன்மை, தவறான முடிவுகளை மேற்கொள்ளுதல், மூன்றாம் பாவக வழியில் இருந்து சரியான விஷயங்களை  கிரகிக்கும்  வல்லமை அற்று போகுதல், முயற்சிகள் யாவும் கடுமையான இன்னல்களை வழங்குவது, போதிய திட்டமிடுதல்கள் இல்லாதது, வருங்காலத்தை யூகிக்க முடியாத தன்மை, பூர்வ புண்ணிய ஸ்தான வழியில் இருந்து  சமயோசித அறிவு திறன் செயல் இழப்பு, பூர்வீகத்தில் குடியிருப்பதால்  அனைத்தையும் இழந்து தவிக்கும் சூழ்நிலை, ஆண் வாரிசு அற்ற நிலை, களத்திர ஸ்தான வழியில் இருந்து தனி திறன் இன்மை கூட்டு முயற்சி பாதிப்பு இல்லற வாழ்க்கை பாதிப்பு  வீண் விரையம் மற்றவர்களை நம்பி ஏமாந்து போகுதல்  என கடுமையான பாதிப்புகள், லாப ஸ்தான வழியில் இருந்து அதிர்ஷ்டம் இன்மை, பிற்போக்கு தனமான எண்ணங்கள், தோல்வி மனப்பான்மை, வீண் பயம், எதிர்மறை எண்ணங்களால் வாழ்க்கையில் இன்னலுறும் தன்மை என கடுமையான பாதிப்புகளை ஜாதகர் எதிர்கொள்ளும் சூழ்நிலையை சனி மகா திசை வழங்கி உள்ளது.

சனி பகவானும் கோட்சார ரீதியாக தற்போழுது சந்திரன் மற்றும் செவ்வாய்  சாரத்தில்  சென்று திடீர் இழப்பு மற்றும் பேரிழப்பை பொருளாதர ரீதியாக வழங்குவது  ஜாதகருக்கு மிகுந்த நெருக்கடியை தரும் நிலையாகும்.

எனவே சுய ஜாதக வலிமை உணர்ந்து, திசை புத்தி ஏற்று நடத்தும் பாவக வலிமையை கருத்தில் கொண்டு, கோட்சார கிரகங்கள் செல்லும் சார பலன் தரும் நன்மை தீமையை உணர்ந்து சுய ஜாதக ஆலோசனை பெரும்பொழுது நமது  வாழ்க்கையை நாம் வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம் என்பதில் சந்தேகம் இல்லை வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

9443355696

திங்கள், 19 செப்டம்பர், 2022

மனையடி சாஸ்த்திரம் - குடும்ப தலைவன் மற்றும் ஆண் வாரிசை பாதிக்கும் தென்மேற்கு !

  

 தமிழர்களுக்கான மனையடி சாஸ்திரம் என்பது அவர்களது நிம்மதி மற்றும் இன்பகரமான இல்வாழ்க்கையை 100% விகிதம் சிறப்பிக்கும் வல்லமை பெற்றது, இதில் ஒரு குடும்ப தலைவனின் மற்றும் ஆண் வாரிசு இருவரின் வெற்றிகரமான யோக வாழ்க்கையை உறுதிப்படுத்தும் இடமானது தென்மேற்கு பகுதியாகும், இந்த பாகம் சிறப்பாக அமையும் பொழுது, குடும்ப தலைவனின் பொருளாதார முன்னேற்றம், சுயஒழுக்கம், குடும்பத்தை கட்டிக்காக்கும் வல்லமை, நிலையான வருமானம், பேராண்மை, தெய்வீக அனுகூலம், குலதெய்வ ஆசீர்வாதம், நல்லதொரு யோகமிக்க ஆண் வாரிசை பெரும் தன்மை, தெய்வீக சிந்தனை, கவுரவ பதவிகள், குடும்ப உறுப்பினர்களுக்கான தேவைகளை நிறைவேற்றும் வல்லமை, சுபகாரியங்களை முன்னின்று நடத்தும் யோகம், பொருளாதார தன்னிறைவு, நீண்ட ஆயுள், சிறந்த உடல் ஆரோக்கியம், கல்வி கேள்விகளில் தேர்ச்சி, நல்லறிவு, நிறைவான செல்வவளம், பொது வாழ்க்கையில் வெற்றி, போட்டி பந்தயங்களில் தேர்ச்சி, எடுக்கும் காரியங்கள் யாவிலும் வெற்றிமேல் வெற்றி, வல்லமை மிக்க இனிமையான பேச்சு திறன், அரசியல் யோகம், வெளிநாடு வெளியூர் பயணம் மூலம் சுபயோகங்கள், மனதிற்கு உகந்த நல்ல இல்லற வாழ்க்கை துணை, பொது வாழ்க்கையில் புகழ் பெரும் யோகம், எதிர்பாராத அதிர்ஷ்டங்கள், தன்னம்பிக்கை புத்துணர்வு, புதிய முயற்சிகள், புதிய சிந்தனைகள் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் சுவீகரிக்கும் வல்லமையை தரும், சுய ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி பெற்று சம்பந்தப்பட்ட குடும்ப தலைவனுக்கு அல்லது ஆண் வாரிசுக்கு சிறப்பான யோக வாழ்க்கையை நல்கும்.


 தென்மேற்கு பகுதி பாதிக்கப்படும் பொழுது சம்பத்தப்பட்ட குடும்ப தலைவனும் ஆண்வாரிசும் கடுமையாக பாதிக்கப்படுவர் உடல் நலம் வெகுவாக பாதிக்கும், கல்வியில் தடை உண்டாகும், ஆண் வாரிசு அற்ற துர்பாக்கிய நிலையை தரும், ஆண்வாரிசு இருப்பின் அவரது வளரும் சூழ்நிலை பாதிக்கும் உடல் மனம் இரண்டும் கடுமையாக பாதிக்கப்படும், சிந்தனை திறன் குறையும், அறிவு சார்ந்த விஷயங்கள் யாவும் பாதிக்கப்படும், தெய்வீக அனுக்கிரகம் அற்று ஒழுக்கக்கேட்டை தரும், குடும்ப தலைவனின் சுய ஒழுக்கம் பாதிக்கும், குடும்ப வாழ்க்கை கேள்விக்குறியாகும், கற்ற கல்வி பயனற்று போக்கும், தேர்ச்சி பெற்ற கலை ஜாதகனுக்கு பயன்தராது முரட்டு தனமும் மூர்க்கத்தனம் மேலோங்கி தனது வாழ்க்கைக்கு தானே தீவினையை தேடிக்கொள்வார், முரண்பட்ட தாம்பத்திய வாழ்க்கையை ஏற்று மிகப்பெரிய பொருளாதர சீர்குலைவை குடும்ப தலைவர் மற்றும் வாரிசுகள் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும் வருமானம் வந்த போதிலும் யாவும் வீண் விரயமாகும், ஆண் வாரிசு அமைவது என்பது குதிரை கொம்பாக அமையும், குடும்பத்தில் நிம்மதி கெடும், உடல் நலம் கடுமையாக பாதிக்கும், குடும்ப தலைவனின் உடல் நலமும் மனநலமும் வெகுவாக பாதிக்கும், சந்ததி அற்ற  நிலையையும், விழிப்புணர்வு அற்ற போதையான மனோ நிலையையும் குடும்ப தலைவனுக்கும் ஏற்படுத்தும் சுய ஜாதகம் வலிமை பெற்று இருப்பின் ஓரளவு நலம் உண்டாகும் இல்லையெனில் இவரோடு சந்ததி முடிவுக்கு வரும், சமுதாயத்தில் குடும்ப தலைவனுக்கான தகுதியை இழந்து வீண் அவப்பெயரை சந்திக்கும் சூழ்நிலையை தரும் என்பது கவனிக்கத்தக்கது.

இதற்கான தீர்வு என்பது குடும்ப தலைவரின் சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு மனையடி சாஸ்திரம் அறிவுறுத்தும் சிறு சிறு மாற்றங்களை செய்து குடும்ப தலைவன் மற்றும் ஆண் வாரிசின் சுபயோக வாழ்க்கையை உறுதி செய்ய முடியும், சுய ஜாதகம் வலிமை அற்ற நிலையிலும் நாம் குடியிருக்கும் வீட்டில் தென்மேற்கு பகுதி சிறப்பாக இருந்தால் குடும்ப தலைவன் மற்றும் வாரிசுகளின்  முன்னேற்றம் என்பது வெகு அற்புதமான சுபயோகங்களை தன்னிறைவாக வாரி வழங்கும், சந்ததி என்பது வாழையடி வாழையாக தழைத்து ஓங்கி நிற்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
09443355696

சனி, 10 செப்டம்பர், 2022

களத்திரகாரகன் சுக்கிரதிசை திருமண தடையை தருவது ஏன் ?



கேள்வி :

களத்திரகாரகன் சுக்கிரதிசை திருமண தடையை தருவது ஏன் ? கடந்த ஐந்து வருடங்களாக திருமண முயற்சி செய்துகொண்டு இருக்கின்றோம் அனைத்திலும் தோல்வி, சுக்கிரன் திசை ஆரம்பித்தவுடன் திருமணம் நடக்கும் என்றனர் ஆனால் யாதொரு பலனும் நடைபெறவில்லை, காரணம் என்ன? தீர்வு என்ன?


பதில் :

லக்கினம் : மீனம் 
ராசி : மீனம் 
நட்ஷத்திரம் : உத்திரட்டாதி 2ம் பாதம் 

 பொதுவாக நவகிரகங்களின் திசா புத்தி தனிப்பட்ட முறையிலான நன்மை தீமை பலாபலன்களை தரும் என்று கருதுவது சுய ஜாதக வலிமை சார்ந்த நிலையை கருத்தில் கொள்ளாமல் கூறப்படும் கற்பனை கதைகளே என்றால் அது  மிகையாகாது, ஒருவரது சுய ஜாதகத்தில் சுப கிரகம் என்றாலும் சரி, அசுப கிரகம் என்றாலும் சரி தனிப்பட்ட தன்னமையில் நன்மை தீமைகளை வழங்காது என்பதை  அனைத்து அன்பு நேயர்களுக்கு நினைவில் நிறுத்துவது அவசியமானது, சுய ஜாதகத்தில் ஜென்ம லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் பலாபலன்களையே நடைமுறைப்படுத்தும் என்பதை கருத்தில் கொள்வது நல்லது, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் அசுப கிரகத்தின் திசையும் ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து நன்மைகளை வாரி வழங்கும், வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் சுபக்கிரகத்தின் திசா புத்தி சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களையும் வாரி வழங்கும்.

 எனவே நமக்கு நடைபெறும் நவக்கிரகத்தின் திசா புத்தி எந்த பாவக பலனை ஏற்று நடத்தும் என்பதை கருத்தில் கொண்டு பலன் காண முற்படுவதே சால சிறந்தது, அந்த வகையில் அன்பு நேயர் தங்களின் சுய ஜாதகத்தில் தற்போழுது நடைமுறையில் உள்ள சுக்ர திசை தரும் பலன் என்ன ? என்பதை கருத்தில் கொண்டு பார்ப்போம்.

 சுக்ர திசை ( 21/12/2018 முதல் 21/12/2038 வரை ) நடைமுறையில் உள்ளது, நடைபெறும் சுக்ர திசை தரும் பலன் என்பது தங்களுக்கு உண்மையில் மிக சிறப்பான வலிமை பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்துவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சம் ஆகும், சுக்கிரன் தனது திசையில் 1,3,6 ஆகி வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜென்ம லக்கின வழியில் இருந்து உடல் நலம் மனநலம், வெற்றி புகழ் கீர்த்தி, எதிர்பார்ப்புகள் நிறைவேறுதல், அறிவார்ந்த முயற்சிகள் பலிதம் பெறுதல் என்ற நிலையில் சுபயோகங்களை தன்னிறைவாக வழங்குகிறது.

மூன்றாம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகள் வெற்றி, லட்ச்சியங்களை அடைதல், ஆசைகள் நிறைவேறுவது, கல்வி கேள்விகளில் தேர்ச்சி, அரசு ஆதாயம் என்ற வகையில் சிறப்புகளையும், சத்துரு ஸ்தான வழியில் இருந்து கடின உழைப்பு, போட்டி பந்தயம் தேர்வு ஆகியவற்றில் நல்ல வெற்றியையும், அரசு ஆதாயங்களை சிறப்பாக சுவீகரிக்கும் வல்லமையும் தருவது வரவேற்க தக்க சிறப்பு நிலையாகும்.

இருப்பினும் சுக்கிரன் திசை தங்களுக்கு இல்லற வாழ்க்கையை நல்கும் 2,5,7,8,12ம் பாவக பலனை சிறிதும் ஏற்று நடத்தவில்லை என்பதோடு, சுய ஜாதகத்தில்  இல்லற வாழ்க்கையை குறிக்கும் மேற்சொன்ன வீடுகள் தங்களுக்கு மிகவும் கடுமையாக பாதிக்க பட்டு உள்ளது, குடும்பம் மற்றும் ஆயுள் ஸ்தானமான 2,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம்  பெற்று 100% விகிதம் பாதிக்கப்பட்டு உள்ளது, மேலும் புத்திர பாக்கியம் களத்திரம் மற்றும் அயன சயன ஸ்தானமான 5,7,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை பெற்று 100% விகிதம் பாதிக்கப்பட்டு உள்ளது, சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் 2,5,7,8,12 ஆகிய வீடுகள் யாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்க வேண்டிய  மிக முக்கியமான விஷயம் ஆகும்.

தங்களின் திருமண தடைக்கு அடிப்படை காரணம் சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் 2,5,7,8,12 ஆகிய வீடுகள் யாவும் கடுமையாக பாதிக்கப்பட்டதே காரணம் என்பதை கருத்தில் கொள்ளவும், சுக்கிர திசைக்கும் தங்களது திருமண தாமதத்திற்கும் யாதொரு காரணமும் இல்லை என்பதை  கருத்தில் கொள்க, தங்களது ஜாதகத்தில் 2,5,7,8,12 ஆகிய வீடுகள் யாவும் கடுமையாக பாதிக்கப்பட்டதிற்க்கான தீர்வை, முறையான பரிகாரங்களை மேற்கொள்ளும் பொழுது தங்களுக்கான திருமண தடை நீங்கி நல்லதொரு இல்லற வாழ்வை பெறுவீர்கள் முறையான ஆலோசனைகளுக்கு நேரில் தொடர்பு கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 8 செப்டம்பர், 2022

திருமணத்தடை ஏன்? ராகு திசை தரும் பாதிப்பா?

கேள்வி :

ராகு திசை தரும் பலன் என்ன? திருமணம் தாமதம், தடை ஆக காரணம் என்ன? 


லக்கினம் : கன்னி 

ராசி : கன்னி 

நட்ஷத்திரம் : உத்திரம் 4ம் பாதம் 

பதில் : 

திருமண வாழ்க்கை ஒருவருக்கு சிறப்பாக சரியான வயதில் அமைய சுய ஜாதகத்தில் ஜென்ம லக்கினத்தில் இருந்து 2,7ம் வீடுகள் வலிமை இழக்க கூடாது, மேலும் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியான ரிஷபம் மற்றும்  காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் எந்த விதத்திலும் பாதிக்க படமால் இருப்பதுடன் நடைமுறையில் உள்ள திசா புத்திகள் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது சிறப்பான நற்பலன்களை வழங்கும், தங்களது ஜாதகத்தில் இந்த அமைப்பு எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்வோம்.

சகோதரிக்கு வணக்கம் தங்களது சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் வீடுகளான 2,5,7,8,12ம் வீடுகளில் 2ம் வீட்  தனது சுய பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமையுடனும், 5,7ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த வலிமையுடனும் இருப்பது சிறப்பான அமைப்பாக கருத்தில் கொள்ளலாம், ஏனெனில் 2ம் பாவக வழியில் இருந்து நல்ல குடும்ப வாழ்க்க்கையும், 5ம் பாவக வழியில் இருந்து நல்ல புத்திர பாக்கியமும், 7ம் பாவக வழியில் இருந்து நல்ல வாழ்க்கை துணையையும் சுவீகரிப்பதற்கான வாய்ப்பை நல்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் மாங்கல்ய ஸ்தானம் மற்றும் அயன சயன ஸ்தானமான 8,12ம் வீடுகள் தங்களுக்கு விரைய ஸ்தானமான  12ம் பாவக தொடர்பை பெறுவது  மிகுந்த மாங்கல்ய தோஷத்தை தரும் அமைப்பாகும், இது தங்களுக்கான திருமண தாமதம் மற்றும் தடைக்கு அடிப்படை காரணம் ஆகும், மேலும் தங்களுக்கு தற்போழுது நடைமுறையில் உள்ள ராகு திசை (08/09/2015 முதல் 08/09/2033 வரை) சுய ஜாதகத்தில் ஏற்று நடத்தும் பாவக தொடர்பு என்பது 4,6,8,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனை ஏற்று நடத்துவது மிகுந்த இன்னல்களை தரும் அமைப்பாகும், இதுவும் தங்களின் திருமண வாழ்க்கை தடை பெறுவதற்கு அடிப்படை காரணமாகும், மேலும் ராகு திசையில் தற்போழுது  நடைமுறையில் உள்ள சனி புத்தியும் ( 14/10/2020 முதல் 21/08/2023 வரை) தங்களுக்கு 4,6,8,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனை ஏற்று நடத்துவது மேலும் இன்னல்களை தரும் அமைப்பாகும், இதுவே தங்களது திருமண தடை மற்றும் தாமதத்திற்கு அடிப்படை காரணம் என்பதை  கருத்தில் கொள்ளவும், இதற்கான தீர்வை முறையாக ஆலோசணை பெற்று நலம் பெறுங்கள்.

குறிப்பு : 

தங்களது சுய ஜாதகத்தில் திருமண தடையை தவிர்க்க திசா நாதன் ராகு புத்தி நாதன் சனி இருவரில் ஒருவர் ராகு அல்லது கேதுவின் நட்ஷத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் திருமண முயற்சிகளை மேற்கொள்ள நல்லதொரு இல்லற வாழ்க்கை அமையும், மணமகன் வரும் திசை? அவரது வீடு இருக்கும் திசை, தொலைவு ? ஆகிய விபரங்களை ஆலோசணையின்பொழுது தெளிவு படுத்துகிறோம் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

9443355696


சனி, 3 செப்டம்பர், 2022

பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தில் சாயா கிரகமான ராகு பகவான் அமரும் பொழுது ஜாதகருக்கு குழந்தை பாக்கியம் இல்லையா ?

 


கேள்வி : 

பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தில் சாயா கிரகமான ராகு பகவான் அமரும் பொழுது ஜாதகருக்கு குழந்தை பாக்கியம் இல்லையா ?

5ல் ராகு அல்லது கேது புத்திர தோஷம் உருவாகும் ராகு இருந்தால் புத்திரர் உண்டாக்குவதே இல்லை, அப்படி பிறந்தாலும் 10 அல்லது 15 வயதில் மரணத்தை தழுவி புத்திர சோகம் உண்டாகும் ஆனால் கேது இருந்தால் தாமதப்பட்டு குழந்தை உண்டாகும், ஆனால் திருமணம் ஆகி 10 அல்லது 15 ஆண்டுகள் தாமதப்பட்டு குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு, இது உண்மையா ?

பதில் :

ஜோதிடம் மற்றும் சுய ஜாதக வலிமை சார்ந்த எந்த ஒரு புரிதலும் இல்லாமல் கூறப்படும் முரண்பட்ட தவறான கருத்து இது, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே!

அதற்க்கு முன் அன்பர்களின் சுய ஜாதகத்தில் 5ல் ராகு அமர்ந்து, ஐந்தாம் இடம் தங்களது ஜாதகத்தில் மீனம் தனுசு, ரிஷபம் துலாம், மிதுனம் கன்னி (சூரியனுடன் 16 பாகைக்கு மேல் சேராத புதன் ) கடகம் (வளர் பிறை சந்திரன்) ஆகிய ராசிகளாக அமைந்து இருப்பின் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகள் யாவும் ஆண் குழந்தைகளாக அமையும், மேற்கண்ட 5ம் பாவகத்தில் அமரும் ராகு தனது முழு வலிமையையும் 5ம் பாவகத்தின் மீது செலுத்தி அந்த பாவகத்தை 100% விகிதம் வலிமை அடைய செய்வதால் 5ம் பாவகம் வலிமை பெற்று, புகழ் பெற்ற சுபயோகங்கள் நிறைந்த ஆண் வாரிசை தங்களுக்கு வாரி வழங்கும் எனபது நிதர்சனமான உண்மை, எனவே 5ல் ராகு அமரும் பொழுது புத்திர பாக்கியத்தை தடை செய்யும் என்பது கட்டுக்கதை, ஜோதிடம் சார்ந்த யாதொரு உண்மையும் இல்லை என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.



லக்கினம் : மிதுனம் 

ராசி : கன்னி 

நட்ஷத்திரம் : உத்திரம் 3ம் பாதம் 

மேற்கண்ட ஜாதகருக்கு 5ல் ராகு அமர்ந்து இருப்பதால் புத்திர பாக்கியம் இல்லை, மேலும் 5ல் நின்ற ராகு திசை நடைமுறையில் உள்ளதால் புத்திர பாக்கியமே கிடையாது என்ற காரணத்தை முன்னிறுத்துகின்றனர், இது எந்த  அளவிற்கு உண்மை என்பதை இந்த பதிவில் காண்போம், ஜாதகருக்கு ஜென்ம லக்கினம் மிதுன ராசியில் 83:11 பாகையில் ஆரம்பித்து கடக ராசியில் 109:21 பாகையில் நிறைவு பெறுகிறது அதாவது மிதுன ராசியில் 06:49 பாகையும், கடக ராசியில் 19:21 பாகையும் கொண்டது ஜாதகரின் ஜென்ம லக்கினம்.

இதை கருத்தில் கொண்டு ஜாதகரின் 5ம் பாவக நிலையை ஆய்வு செய்யும் பொழுது  ஜாதகருக்கு 5ம் பாவகம் துலாம் ராசியில் 202:56 பாகையில் ஆரம்பித்து விருச்சிக ராசியில்  233:57 பாகையில் நிறைவு பெறுகிறது, அதாவது துலாம் ராசியில் 07:04 பாகையும் விருச்சிக ராசியில் 23:57 பாகையும் கொண்டது ஜாதகரின் 5ம் பாவகம், ஆனால் ராகு அமர்ந்து இருப்பது  துலாம் ராசியில் 191:05 பாகையில், இது ஜாதகருக்கு துலாம் ராசியில் நான்காம் பாவகமாக  அமைகிறது என்பதை கருத்தில் கொள்வது அவசியம், மேலும் இதுவே உண்மை நிலையும் கூட, எனவே ராகு பகவான் துலாம் ராசியில் உள்ள 4ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றார் என்பது உறுதி ஆகிறது, ஒருவேளை 5ம் பாவகத்தில் அமர்ந்து இருப்பின் பூர்வபுண்ணிய ஸ்தானம் 100% வலிமை பெற்று ஜாதகருக்கு ஆண் வாரிசாகவே பிறக்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு விஷயம்.

மேலும் ஜாதகருக்கு 5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிக வலிமையுடன் காணப்படுகிறது  இது ஜாதகருக்கு நல்ல ஆண் வாரிசை நல்குவதுடன், ஜாதகரின் தன் துறை சார்ந்த நுண்ணறிவு திறனை சிறப்பாக வெளிப்படுத்தும், ஜாதகருக்கு 5ல் ராகு அமரவில்லை, துலாம் ராசியில் உள்ள நான்காம் பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றார் என்பதே உண்மை  நிலை இதை அன்பர்கள் கருத்தில் கொண்டு சுய ஜாதக விழிப்புணர்வு  பெறுங்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 

9443355696 

உங்கள் வாழ்வில் நடந்ததை, நடக்கப்போவதை துல்லியமாக கூறும் ஜோதிடர் - நாள்: ...