வெள்ளி, 11 நவம்பர், 2016

சனி திசை தரும் தொழில் முன்னேற்றமும், தொழில் வெற்றிகளையும் வழங்கும் ஜீவன ஸ்தான வலிமையும் !


" உத்தியோகம் புருஷ லட்சணம் " என்ற பழமொழிக்கு உதாரணமாக வாழ வேண்டும் எனில் ஒருவரின் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் மற்றும் அதற்க்கு வலிமை சேர்க்கும் பாவகங்கள் நல்ல நிலையில் இருப்பது அவசியமாகிறது, குறிப்பாக ஜீவன ஸ்தானம் மட்டும் வலிமை பெறுவதை விட சுய ஜாதகத்தில் ஜீவன வாழ்க்கையுடன் தொடர்பு பெரும் பாவகங்களும் வலிமைபெறுவது சிறப்பான நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும், சுயமாக தொழில் செய்து அதில் வெற்றிகரமாக திகழ சுய ஜாதகத்தில் 1,3,4,5,7,9,10,11 வீடுகள் வலிமை பெற்று காணப்படுவது அவசியமாகிறது, லக்கினம் வலிமை பெறுவது ஜாதகரின் தொழில் நிர்வாக வல்லமையை வழங்கும், வீரிய ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகர் தொழில் வகையில் மற்றவர்களுடனான தொடர்பையும், இணக்கமான சூழ்நிலையை சிறப்பாக அமைத்து தரும், சுக ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகர் இடம்,பொருள் மற்றும் சொத்துக்களை நிர்வகிக்கும் வல்லமையையும், சுய பொருள் சேர்க்கையும் வழங்கும், பூர்வபுண்ணிய ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதர் தமது தொழில் மேல் கொண்டுள்ள ஆராவத்தையும், நுண் அறிவு திறனையும், தெளிவான சிந்தனையுடன் கூடிய திட்டமிடுதல்களையும் வழங்கும், தொழில் வழியில் ஜாதகர் பெரும் படி படியான முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும்.
களத்திர ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகர் தனது தொழில் வழியில் செய்யும் வியாபார யுக்திகளையும், பொதுமக்கள், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் ஜாதகர் கொண்டுள்ள உறவை வலுவாக்கும், மேலும் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் ஜாதகரின் தனி திறனை வெளிப்படுத்தும், பாக்கிய ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகர் தனது தொழில் வழியில் நல்ல பெயரையும், நம்பிக்கையையும், பொது மக்கள் மத்தியில்  பிரபல்யம் பெரும் யோகத்தை தரும், ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகருக்கு உகந்த தொழில் எது என்பதை தெளிவு படுத்தும், ஜாதகர் செய்யும் தொழில் வகைகளை நிர்ணயம் செய்யும், ஜாதகருக்குள்ள  உள்ள பன்முக தொழில் வல்லமையை  தெளிவு படுத்தும், தான் செய்யும் தொழில் வழியில் ஜாதகர் பெரும் யோக வாழ்க்கையை நிர்ணயம் செய்யும், ஜாதகர் சுய தொழில் செய்ய உகந்தவரா? கூட்டு தொழில் செய்ய உகந்தவரா? அடிமை தொழில் செய்ய உகந்தவரா? அரசு அல்லது தனியார் துறையில் பணிபுரியும் யோகம் பெற்றவரா? சிறுகுறு தொழில், நடுத்தர தொழில் மற்றும் பெரும் முதலீடுகள் கொண்ட தொழில்களை எதை செய்ய அருகதை கொண்டவர் என்பதை தெளிவுபடுத்தும்.

லாப ஸ்தானம் ஜாதகர் தனது தொழில் மற்றும் சுய ஜாதக வலிமையின் அடிப்படியில் பெரும் லாபங்கள், அதிர்ஷ்டங்கள், சுயமுன்னேற்றம், முயற்ச்சியில் பெரும் வெற்றி, நீடித்த அதிர்ஷ்டம், தனக்கு வரும் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்தி வெற்றிகொள்ளும் யோகம், தேடிவரும் பதவி, புகழ், தொழில் முன்னேற்றம், சூழ்நிலைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் யோகம், சரியான திட்டமிடுதல்கள், மற்றவர்கள் ஆதரவை பரிபூர்ணமாக பெரும் யோகம், தன்னம்பிக்கை மிக்க மனநிலை, முற்போக்கு சிந்தனை, லட்ச்சியம் மற்றும் கனவுகளை நடைமுறைக்கு கொண்டு வரும் வல்லமை, எதிர்ப்புகள் அற்ற யோக வாழ்க்கை, அனைத்து சூழ்நிலைகளையும் சிறப்பாக கையாண்டு வாழ்க்கையில் முன்னேற்றங்களை தங்கு தடையின்றி பெரும் வல்லமை, சுய முன்னேற்றம், அதிபுத்திசாலித்தனம், சரியான திட்டமிடுதல்கள், தொலைநோக்கு பார்வை மூலம் தனது தொழில் முன்னேற்றத்தை சிறப்பாக எடுத்து செல்லும் வல்லமை, ஆராய்ச்சி மனப்பக்குவம், எதையும் சுய அறிவு கொண்டு நிர்ணயம் செய்தல், என ஜாதகர் தொழில் ரீதியாக பெரும் நன்மைகள் அனைத்தையும் ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவதை லாபஸ்தானமே நிர்ணயம் செய்கிறது, ஓர் ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெற்று, நடைபெறும் திசை எதிர்வரும் திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருப்பது, சம்பந்தப்பட்ட ஜாதகரை நிச்ச்யம் சிறந்த தொழில் அதிபராக இந்த உலகத்திற்கு வழங்கும்.

இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம்.


லக்கினம் : தனுசு
ராசி : கும்பம் 
நட்ஷத்திரம் : சதயம் 2ம் பாதம்.

ஜாதகருக்கு மேற்கண்ட கட்டுரையில் கூறியது போன்று அனைத்து பாவகங்களும் மிகவும் வலிமை பெற்று இருக்கின்றது, குறிப்பாக 1,3ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் வியாபர விருத்தி பெரும் யோகம் பெற்றவர் என்பதனையும், 2,5ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் செய்யும் தொழில் நல்ல வருமானமும், நம்பிக்கை மற்றும் நார்ப்பெயர் எடுப்பவர் என்பதனையும், சுய அறிவு திறனும் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு வாழ்க்கையில் சுய முன்னேற்றம் பெறுபவர் என்பதனையும், 4,7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சொத்து சுக சேர்க்கை, வீடு, நிலம் மற்றும் வண்டி வாகன யோகம் மூலம் ஜீவன வாழ்க்கை பெறுபவர் என்பதனையும், கூட்டு முயற்ச்சி மற்றும் கூட்டு தொழிலில் வெற்றி பெறுபவர் என்பதனையும், செய்யும் தொழில் வழியில் நல்ல முன்னேற்றமும் விருத்தியும் பெரும் யோகம் கொண்டவர் என்பதனையும் தெளிவுபடுத்துகிறது, 9ம் வீடு சத்ரு ஸ்தானத்துடன்  சம்பந்தம் பெறுவது குறுகிய கால ஜீவன வெற்றிகளையும், சமூக தொழில் முறை அந்தஸ்த்தையும் பெறுபவர் என்பதனையும் உறுதி செய்கிறது.

11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் 100% சதவிகித தொழில் வெற்றியையும், அளவில்லா லாபம் மற்றும்  அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்குவது, ஜாதகத்திற்க்கே சிகரம் வைத்தார் போல் சிறப்பான யோக வாழ்க்கையை தரும் அமைப்பாகும், மேலும் ஜாதகரின் எண்ணங்கள் மற்றும் கனவுகள் யாவும் நடைமுறைக்கு வரும், தொழில் ரீதியான பெரும் வெற்றிகளை ஜாதகர் பெறுவார், ஜாதகரின் லாப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியாகவும், சர காற்று ராசியாகவும் அமைவது ஜாதகரின் வாழ்க்கையில் வாழ்க்கை துணை,பொதுமக்கள்,நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து சிறப்பான முன்னேற்றங்களையும் அதிர்ஷ்ட வாழ்க்கையையும் பெறுவார் என்பதை  உறுதி செய்கிறது.

தற்போழுது நடைபெறும் சனி திசை ( 06/11/2010 முதல் 06/11/2029 வரை ) வலிமை பெற்ற குடும்பம்,பூர்வபுண்ணியம் மற்றும் லாப ஸ்தான பலன்களையே ஏற்று நடத்துவது ஜாதகரின் தொழில் விருத்தியை பன்மடங்கு வாரி வழங்கும், சகல விஷயங்களில் இருந்து ஜாதகர் அதிர்ஷ்ட வாயுப்புக்களையும், கை நிறைவான வருமான வாய்ப்புகளையும் தங்கு தடையின்றி வழங்கும், சனி திசை ஜாதகருக்கு தொழில் ரீதியாக 100% விகித வெற்றிகளை வழங்குவது வரவேற்க தக்கது, வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 8 நவம்பர், 2016

ராகு திசை வழங்கும் கலைத்துறை வாழ்வு, திரைபட துறையில் ஜாதகரின் வெற்றிகள் !

 
 
இறை அருளின் கருணையினால், கலை துறையில் பல சாதனைகளையும், வெற்றிகளையும் குவித்த பல அன்பர்கள் இருப்பினும், திரையுலக மார்க்கண்டேயர் என்று அழைக்கப்படும் அன்பரின் புதல்வர்களில் முன்னவரின் ஜாதகம் இது, பொதுவாக திரைபட துறையில் பிரபல்யம் பெறுவது என்பது எளிதான ஒன்று அல்ல என்றே சொல்லலாம், கலை துறையில் திரைபட துறை மட்டுமல்ல ஆய கலைகள் 64 ற்கும் இது பொருந்தும், கலைத்துறையில் பிரகாசிக்க இறை அருளின் பரிபூர்ண கருணை நிச்சயம் தேவை, மேலும் சுய ஜாதகம் வலிமை பெறுவது மிக மிக முக்கியம் என்பதில் மாற்று கருத்து இல்லை, இந்த பதிவில் திரையுலக மார்க்கண்டேயரின் புதல்வர்களில் முன்னவரின் ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!


லக்கினம் : ரிஷபம் 
ராசி : மகரம் 
நட்ஷத்திரம் : உத்ராடம் 2ம் பாதம் 

ஜாதகருக்கு ரிஷப லக்கினம், சுய ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானம் என்று அழைக்கப்படும் 8ம் பாவாகத்தை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் மிகவும் வலிமை பெற்று இருப்பது வரவேற்கத்தக்க அமைப்பாகும்,பொதுவாக சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் எனும் 5ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகருக்கு இருக்கும் கலை ஆர்வத்தை தெளிவு படுத்தும், மேலும் ஜாதகர் கலைத்துறையில் பெரும் வெற்றிகளை குறிக்கும், மேற்கண்ட ஜாதகருக்கு 5,11ம் வீடுகள் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெறுவது ஜாதகர் கலைத்துறையில் அதிர்ஷ்டவாழ்க்கையை பெறுபவர் என்பதை உறுதி படுத்துகிறது, 5ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகரை கலைத்துறையில் ஆர்வத்தையும், கடின உழைப்பின் மூலம் வெற்றிகளை பெரும் யோகத்தை தந்தது, மேலும் சுய அறிவு திறன், சமயோசித புத்திசாலித்தனம், தனது செயல்களில் விவேகம் மற்றும் விழிப்புணர்வுடன் செயல்படும் தன்மை, எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு செயல்படுத்தும் வல்லமை, சுய அறிவு கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகம், கற்ற கல்வியை தனது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு சிறப்பாக பயன்படுத்தும் நுண்ணறிவு திறன், அதிபுத்திசாலித்தனம், நல்ல குணங்கள், குல தேவதை மற்றும் கலைமகளின் பரிபூர்ண நல்லாசிகளை பெரும் யோகம் என்ற வகையில் சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், சிறப்பான நினைவு திறனும், அறிவார்ந்த செயல்களும் ஜாதகரின் வாழ்க்கையில் அளவில்லா யோகங்களை வாரி வழங்கும்.

கலைத்துறையில் மக்கள் செல்வாக்கையும், பிரபல தன்மையை பெறுவதற்கு களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் வலிமை பெறுவது அவசியமாகிறது, ஜாதகருக்கு 1,2,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று வலிமை பெறுவது ஜாதகர் லக்கின வழியில் இருந்து மக்கள் செல்வாக்கையும், பொதுமக்களுடனான தொடர்பையும் சிறப்பாக வழங்குகிறது, 2ம் பாவக வழியில் இருந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரம் மூலம் வருமான வாய்ப்பை பெரும் யோகத்தை வழங்குகிறது, ஜாதகரின் பேச்சு மற்றும் இயக்கம் மூலம் வருமான வாய்ப்பை பெரும் யோகத்தை தருகிறது, 7ம் பாவக வழியில் இருந்து மக்கள் தொடர்பு, மக்கள் ஆதரவு, வெகுஜன வசீகரம், பொதுமக்களிடம் பிரபல்யம் அடைதல், வியாபர விருத்தி, வாழ்க்கை துணை ஆதரவு, கூட்டு முயற்ச்சி வெற்றி பெறுதல், கலைத்துறை பிரபல்ய யோகம், எதிர்பாராத வெற்றிகள், தன்னம்பிக்கை மிக்க செயல்பாடுகள், அனைவராலும் விரும்பப்படும் தன்மை, பொறுப்பு மிக்க செயல்கள், நல்ல மனம், சமூக அந்தஸ்து, சமூக நலனில் அக்கறை, சுய முன்னேற்றம், தடைகளை தகர்த்து வாழ்க்கையில் வெற்றி பெரும் யோகம், வெளிநாடுகளில் பிரபல்யம் மற்றும் வியாபர விருத்தி, மக்கள் தொடர்புள்ள பணிகளில் வெற்றிமேல் வெற்றி என்றவகையில் யோகங்களை வாரி வழங்கும், கலைத்துறையில் ஜாதகரின் வெற்றிக்கு மிக முக்கிய காரணிகள் 1,2,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது என்றால் அது மிகையில்லை.

3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் கொண்ட லட்ச்சியங்களில் வெற்றிபெறும் தன்மையை குறிக்கும், ஜாதகருக்கு  வீரிய ஸ்தானம் வலிமை பெறுவது மிகசிறந்த வியாபர நுணுக்கம் பெற்றவர் என்பதும், " காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்ளும் " வல்லமை பெற்றவர் என்பதையும் உறுதிப்படுத்துகிறது, மேலும் ஜாதகர் செய்யும் விஷயங்கள் யாவிலும் வெற்றியை வாரி வழங்கும், ஜாதகரின் முயற்சிகள் எந்த காரணத்தைக்கொண்டும் தோல்வியை தர வாய்ப்பில்லை என்பதால், ஜாதகர் தொடர் வெற்றிகளை பெறுவதற்கு அருகதை பெற்றவர் ஆகிறார், மேலும் கணிதம்,ஜோதிடம்,கலை,இசை போன்றவற்றில் ஈடுபாட்டையும் தேர்ச்சியையும் தரும், தன்னம்பிக்கை மிதமிஞ்சிய அளவில் காணப்படும், ஜாதகர் பெரும் வெற்றிகளுக்கு வீரியஸ்தான ( கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் ராசியாக வருவதும், சர நீர் தத்துவ ராசியாக அமைவதும் கலை துறை வெற்றிகளை வழங்குகிறது ) வலிமையையும் மிக முக்கிய காரணியாக அமையும், மேலும் ஜாதகருக்கு 6,9,12ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, சத்ரு ஸ்தான வழியில் இருந்து எதிர்ப்புகளை வெற்றிகொள்ளும் யோகத்தையும், குறுகிய கால லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை பெரும் நிலையை தருகிறது, பாக்கிய ஸ்தான வழியில் இருந்து ஜாதகருக்கு நற்பெயரும், பெருந்தன்மையான செயல்பாடுகளையும் தருகிறது, அனைவரிடமும் இணக்கமான செயல்பாட்டினையும், அறிவுபூர்வமான செயல்திறனையும் வாரி வழங்கும், பெரியோர் ஆதரவும், நல்ல மனிதர்களின் சேர்க்கையும் ஜாதகரின் வாழ்க்கையில் யோகங்களை வாரி வழங்கும், அயனசயன ஸ்தான வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல நிம்மதியான வாழ்க்கையும், முதலீடுகளில் வரும் திடீர் லாபத்தையும் தரும், போதும் என்ற மனமும், நிம்மதி மிக்க யோக வாழ்க்கையையும் தரும், நிம்மதியான உறக்கம் கிட்டும், யோக கலையில் தேர்ச்சியை தரும், மனதில் நினைத்த எண்ணங்கள் மற்றும் லட்ச்சியங்கள் யாவும் நிறைவேறும்.

தொழில் வெற்றிகளை பெறுவதற்கு சுய  ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது அவசியமாகிறது, இவரது ஜாதகத்தில் 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் ஜீவன வெற்றிகளை உறுதி செய்கிறது, மேலும் ஜாதகர் தனது பெற்றோர்கள் வழியில் இருந்து பெரும் யோகத்தையும் சிறப்பாக நிர்ணயம் செய்கிறது, தன்னிகரில்லா ஜீவன முன்னேற்றத்தை ஜீவன ஸ்தான வலிமையே ஜாதகருக்கு வாரி வழங்குகிறது, 4ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் சுயமாக சொத்து சுக சேர்க்கையை பெரும் வல்லமையை பெறுகிறார், மேலும் ஜாதகருக்கு  சுக ஸ்தானமும், ஜீவன ஸ்தானமும் வலிமை பெற்று ஸ்திர ராசியில் அமைவது நிலையான ஜீவனத்தை வழங்கும் அமைப்பை தருகிறது,மேலும் ஜாதகர் தனது ஜீவன வாழ்க்கையில் தனித்திறமையுடன் செயல்படும் வல்லமையும், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்பினை பெரும் யோகத்தையும் தருகிறது.

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நீண்ட ஆயுளை தந்த போதிலும், வாழ்க்கை துணை வழியில் இருந்து  சிறு சிறு இழப்புகளை தரும், விபத்துகள் மற்றும் மருத்துவ செலவுகளை தரும் என்பது மட்டும் மேற்கண்ட ஜாதகத்தில் உள்ள ஒரே ஒரு குறை எனலாம், ஆனால் இதனால் பெரிய பாதிப்புகள் ஜாதகருக்கு இல்லை.

மேற்கண்ட ஜாதகத்தில் பெரும்பாலும் அனைத்து பாவகங்களும் வலிமை பெற்று இருப்பது சிறப்பான யோகம் என்ற போதிலும், ஜாதகர் கலை துறையில் வாழ்க்கையை துவங்கியதில் இருந்து இன்று வரை தொடர் முன்னேற்றத்தை வழங்கி கொண்டு இருப்பதற்கு காரணம், 19/02/1996 முதல் 19/02/2014 வரை நடைபெற்ற ராகு திசை 3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 5,11ம் வீடுகள் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் 3,11ம் பாவக பலனை ஏற்று நடத்தியதே காரணமாக அமைந்தது, ஜாதகர் கலைத்துறையில் கால் பதித்த நாள் முதல் ராகு திசை முடியும் வரை 3,11ம் பாவக வழியில் இருந்து முழு அளவில் யோக பலன்களை வாரி வழங்கியது ஜாதகரின் கலைத்துறை வெற்றிகளை 100% விகிதம்  உறுதிப்படுத்தியது, மேலும் தற்போழுது நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 6,9,12ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 5,11ம் வீடுகள் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் 3,11ம் பாவக பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருப்பது, ஜாதகர் கலைத்துறையில் குருதிசை முழுவதும் தொடர் வெற்றிகளை எதிர்காலத்திலும் வழங்கும் என்பது ஜாதகருக்கு இறைஅருள் கொடுத்த வரமே, மேலும் இனிவரும் எதிர்காலம் ஜாதகரை தனது துறையில் பன்முகம் கொண்ட திறமைசாலியாக மாற்றி அமைக்கும் என்பது மட்டும் உறுதி, மேலும் ஜாதகருக்கு பாவக அதிபதிகள் என்ற முறையில் செவ்வாய்,குரு,புதன் மற்றும் சுக்கிரன் வலிமை பெற்று யோக பலன்களை வழங்குவது வரவேற்க தக்க அம்சமே, மேலும் குரு திசைக்கு அடுத்து வரும் சனி திசை மட்டுமே ஜாதகருக்கு இன்னல்களை தரக்கூடும்.


குறிப்பு :

கலைத்துறையில் சிறப்பான வெற்றிகளை பெறுவதற்கு சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் மிக மிக வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, மேலும் சுய ஜாதகம் வலிமை பெறுவது ஜாதகரை கலைத்துறையில் புகழ் மிக்க கலைஞனாக நிலை நிறுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 5 நவம்பர், 2016

சுய தொழில் அல்லது அடிமைத்தொழில் எதை தேர்வு செய்வது?


கேள்வி :

வணக்கம், கடந்த 10 வருடங்களுக்கு முன் சுயமாக தொழில் செய்து, மிகப்பெரிய நஷ்டம், தற்போழுது திருப்தி இன்றி ஓர் நிறுவனத்தில் பணியாற்றி கொண்டு இருக்கின்றேன், வருமான பற்றாக்குறை, பொருளாதார சிக்கல்கள் அதிகம் உள்ளது, சுய தொழில் செய்ய வாய்ப்பு தற்போழுது நண்பர்கள் வழியில் இருந்து வருகின்றது, துணிந்து செய்யலாமா? அல்லது தற்போழுது உள்ள வேலையிலேயே தொடர்ந்து இருக்கலாமா ? தெளிவான விளக்கம் தேவை.


பதில் :

ஒருவரது சுய ஜாதகத்தில் தொழில் வெற்றிகளை வழங்கும் பாவகங்கள் (1,4,7,10,11 ) வலிமை பெற்று இருந்தால் நிச்சயம் சுய தொழில் செய்யலாம், தட்டாமல் செய்யும் தொழிலில் வெற்றிகளை வாரி குவிக்கும், அபரிவிதமான தொழில் வளர்ச்சியை வாரி வழங்கும், குறிப்பாக ஒருவரது ஜீவன ஸ்தானம் உபய ராசியில் அமைந்து ( உபய லக்கின அன்பர்கள் அனைவரையும் சாரும் ) வலிமை பெற்றும்,  லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் வீடு தனது பாவகத்துடன் தொடர்பு பெற்றும் வலிமையுடன் இருந்தால் ஜாதகர் சுய தொழில் செய்வதற்கு யோகம் பெற்றவர் எனலாம், தங்களது ஜாதக வலிமை நிலை மிகவும் அபரிவிதமாக உள்ளது தெளிவாகிறது, பெரும்பாலான பாவகங்கள் தங்களுக்கு மிகவும் வலிமையுடன் காணப்படுகிறது, தொழிலை குறிக்கும் 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம், லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடனே சம்பந்தம், இது தங்களது ஜாதகத்தில் சுய தொழில் செய்வதற்கு உகந்த அமைப்பாகும், எனவே தங்கள் சுய தொழில் செய்ய வல்லமை உடையவர் எனலாம்.

மேலும் தங்களது ஜாதகத்தில் சுய தொழில் செய்வதற்கு வலிமை சேர்க்கும் பாவகங்களான லக்கினம் எனும் முதல் வீடு வலிமை பெறுவது, தங்களின் தொழில் ஆர்வத்தையும், முழு வீச்சில் செயல்படும் தன்னம்பிக்கையும்  தெளிவு படுத்துகிறது, நான்காம் பாவகம் வலிமை பெறுவது வண்டி வாகன தொழில் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தையும், எதிர்காலத்தையும் தரும் என்பதை தெளிவு படுத்துகிறது, களத்திர ஸ்தானம் வலிமை  பெறுவது நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் வாழ்க்கையில் தொழில்  முன்னேற்றங்களை பெறுபவர் என்பதை தெளிவு படுத்துகிறது, ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஓர் இடத்தில் பணியாற்றுவதைவிட, சுய தொழில் செய்வதே தங்களுக்கு பொருத்தமானது என்பதை தெளிவு படுத்துகிறது, லாப ஸ்தானம் வலிமை பெறுவது செய்யும் தொழிலில் அபரிவிதமான  அதிர்ஷ்டத்தையும் மிகப்பெரிய லாபங்களை பெரும் யோகம் கொண்டவர் என்பது 100% சதவிகிதம் தெளிவாகிறது, மேற்கண்ட விஷயங்கள் ஒருவரது ஜாதகத்தில் சுய தொழில் செய்ய வல்லமை உள்ளவரா? என்பதை உறுதி படுத்த பயன்படும்.

மேலும் தங்களின் ஜாதகத்தில் வீரிய ஸ்தானம் வலிமை பெறுவது, சிறந்த  வியாபார நுணுக்கம் பெற்றவர் என்பதும் செய்யும் தொழிலில் நல்ல விருத்தியை  பெறுபவர் என்பதும் தெளிவாகிறது, சரியான திடடமிடுதல்களுடன் தனது தொழிலினை முன்னேற்ற பாதையில் நடத்திச்செல்லும், தன்மை பெற்றவர் என்பதும் தெளிவாகிறது, பூர்வ  புண்ணியம் வலிமை பெறுவது தங்களின் அறிவு திறனும், புத்திசாலித்தனமும், தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்ஷ்ட வாய்ப்புகளை நல்கும் என்பதை தெளிவுபடுத்துகிறது, சத்ரு ஸ்தானம் வலிமை  பெறுவது தொழில் முறை எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும், எதிரிகளின் வழியில் நன்மையை அனுபவிக்கும் யோகம் பெற்றவர் என்பதனையும், பாக்கிய ஸ்தானம் வலிமை பெறுவது செய்யும் தொழிலில் நற்பெயரும், பிரபல்யமும் வழங்கும் என்பது உறுதியாகிறது.

தங்களது சுய ஜாதகம் சுய தொழில் செய்வதற்கு முழு தகுதி கொண்டதாக இருப்பதால் 100% சதவிகிதம் தங்கள் சுய தொழில் செய்வதே சாலசிறந்து, ஓர் இடத்தில் பணியாற்ற உகந்தது அல்ல என்பதை ஜோதிடதீபம் தெளிவுற விளக்கம்  தர கடமைப்பட்டுள்ளது, அடுத்து சுய ஜாதகம் மிகவும் வலிமை பெற்று இருந்தும் இதற்க்கு முன் செய்த தொழில் பெரும் நஷ்டத்தை வழங்கியதற்கு இரண்டு காரணங்களை சொல்லாம்,

1) தாங்கள்  தொழில் துவங்கிய நேரத்தில் தங்களுக்கு நடைபெற்ற சந்திரன் திசை  2,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, 8ம் பாவக பலனை ஏற்று நடத்தியது, இதன் காரணமாகவே தாங்கள் செய்த தொழிலில் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க நேர்ந்தது, ஒருவரது சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெறுவது முக்கியம் அல்ல, நடைமுறையில் உள்ள திசையும், எதிர்வரும் திசையும் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டும் அதற்குண்டான யோக பலன்களை ஜாதகர் அனுபவிக்க இயலும், தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசையும், எதிர்வரும் ராகு மற்றும் குரு திசையும் தங்களுக்கு மிகப்பெரிய அளவிலான நன்மைகளையும் அதிர்ஷ்டத்தையும்  தர தயாராக உள்ளதால், இதுவே தாங்கள் சுய தொழில் செய்ய சரியான நேரம் எனலாம்.

2) தங்களது சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் எனும் 5ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது சிறப்பான நன்மைகளை தரும் அமைப்பாகும், தங்கள் இதற்க்கு  முன் துவங்கிய தொழில் தங்களது பூர்வீகத்தில் இல்லமால், வெகு தொலைவு சென்று வேறு மாவட்டத்தில் ஆரம்பித்தது தவறு, சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் வலிமை பெற்று இருப்பின், ஜாதகர் எந்த ஒரு தொழிலையும் தனது பூர்வீகத்திர்க்கு உற்ப்பட்ட இடத்திலேயே நிர்வகிப்பது நல்ல முன்னேற்றத்தை தரும், தங்களுக்கு நடந்த சந்திரன் திசை சிறப்பான நன்மைகளை தாராததும், செய்யும் தொழில் பூர்வீகத்தில் அமையாததும் மட்டுமே தங்களுக்கு திடீர் பேரிழப்பை தந்தது என்று தெளிவுற சொல்லலாம், இனிவரும் காலங்களில் இந்த தவறை செய்யாமல் நன்மை பெறுக.

சுய தொழில் செய்ய தகுதி உள்ள ஜாதகம் என்ற போதிலும், தங்களது ஜாதகத்தில் 2ம் பாவகம் பாதிக்கப்படுவது, தங்களுக்கு வாக்கு வழியில் இன்னல்களையும், வரும் வருமானத்தை வீண் செலவு செய்யும் தன்மையையும் தெளிவுபடுத்துகிறது, 8ம் பாவகம் பாதிக்கப்படுவது மற்றவர்களை நம்பி முதலீடு செய்வது உகந்தது அல்ல, தங்களின்  கட்டுப்பாட்டில் அனைத்தையும் நிர்வகிப்பதே சாலசிறந்தது, மேற்க்கண்ட இரண்டு விஷயங்களிலும் தங்கள் அதிக கவனமுடன் செயல்படுவது தங்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், நீர்த்துவம் சார்ந்த தொழில்களை தவிர்ப்பது நலம் தரும், வண்டி வாகனம் மற்றும் கட்டுமான துறை தங்களுக்கு அளவில்லா தொழில் வளர்ச்சியை வாரி வழங்கும்.


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 4 நவம்பர், 2016

கிரக சேர்க்கை மற்றும் பார்வை மூலம் ஜாதகத்தில் சுபயோகங்களை நிர்ணயம் செய்வதும், அதன் வழியில் யோக பலன்களை எதிர்பார்ப்பதும் உகந்ததா ?



பெரும்பாலும் சுய ஜாதகங்களில், சுப கிரகங்கள் சேர்க்கை மற்றும் பார்வையை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுபயோகங்கள் இருப்பின், யோகங்களை தரும் கிரகமும், அந்த கிரகங்களின் திசா புத்திகளும் ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும் என்று நிர்ணயம் செய்வது முற்றிலும் தவறான அணுகுமுறை என்றே "ஜோதிடதீபம்" கருதுகிறது, மேலும் சில பாவகங்களின் சுப கிரகங்கள் அமர்வதை கருத்தில் கொண்டு யோக பெற்ற ஜாதகம் என்றும், அசுப கிரகங்கள் அமர்வதை கருத்தில் கொண்டு அவயோகம் பெற்ற ஜாதகம் என்றும் நிர்ணயம் செய்வதில் உண்மை இல்லை என்பதை தெளிவு படுத்தவும் விருப்பம் கொள்கிறது.

உதாரணமாக ஒரு நிமிட வித்தியாசத்தில் பிறக்கும் இரட்டையர் ஜாதகங்களில் ஒரேமாதிரியான கிரக அமர்வு இருப்பினும், இருவரின் வாழ்க்கை முறை ஒரேமாதிரியான அமைப்பில் இருப்பதில்லை, இருவருக்கும் அவரவர் ஜாதகங்களில் ஒரே மாதிரியான கிரக சேர்க்கை, கிரகங்களின் பார்வை, கிரகங்களின் யோக அமைப்புகள் இருப்பினும், நடைமுறையில் அவரவர் வாழ்க்கையில் முற்றிலும் வித்தியாசனமான பலாபலன்களே நடைமுறைக்கு வருகிறது, எனவே சுய ஜாதகங்களில் உள்ள கிரக சேர்க்கையையும், பார்வையும் வைத்து இது யோக ஜாதகம் என்று முடிவு செய்வதும், அவயோக ஜாதகம் என்று முடிவு செய்வதும் முற்றிலும் ஜோதிட கணிதத்திற்கு முரணான தவறான அணுகுமுறை என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே!

அடிப்படையில் மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு மனிதர்களுக்கு தனிப்பட்ட சுய ஜாதகம் உண்டு என்பதனையும், அந்த ஜாதகம் ஒருவருக்கு இருப்பதுபோல் மற்றவருக்கு இருக்காது என்பதும் மாற்ற இயலாத விதி மேலும் இதை ஒவ்வொருவரின் கைரேகைக்கு ஒப்பிடலாம், ஒருவருக்கு உள்ளதுபோல் மற்றவர்க்கு கைரேகை அமைய வாய்ப்பில்லை என்பதுபோல், ஒருவரது ஜாதகம் போல் மற்றோருவருக்கு இருக்க வாய்ப்பே இல்லை எனலாம், மேலோட்ட்மாக கிரகங்களின் அமர்வு நிலை மற்றும் பார்வையை வைத்து காணும் பொழுது இந்த விஷயங்கள் பிடிபட வாய்ப்பு இல்லை, சுய ஜாதக பாவக வலிமைக்கு முக்கியத்துவம் தந்து ஜாதகத்தை ஆய்வு செய்யும் பொழுது நிச்சயம் நம்மால் உணர இயலும்.

கிரக அமர்வு நிலை, கிரக சேர்க்கை நிலை, கிரகங்களின் பார்வை நிலை, மற்றும் நவ கிரகங்கள் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பெரும் ஆட்சி,உச்சம்,நட்பு,சமம்,பகை,நீசம் ஆகியவைகளை கொண்டு சுய ஜாதகத்திற்கு பலன் நிர்ணயம் செய்வது மண் குதிரையை நம்பி நடு ஆற்றில் இறங்குவதற்கு பொருத்தமானது, மேலும் சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமையை பற்றியும், நவகிரகங்கள் தனது திசையில் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமை பற்றியும், அது தரும் பலாபலன்கள் பற்றியும் கருத்தில் கொள்ளாமல் பலன் கூறுவது என்பதும் முற்றிலும் தவறான அணுகுமுறையே, இதனால் நிச்சயம் தவறான பலாபலன்களை கூற அதிக வாய்ப்பு உண்டு, சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு பலன்காண முற்படுவதே வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு சிறப்பான நல்வழியை காட்டும், அதுவே நமது வாழ்க்கையில் விழிப்புணர்வை தந்து வெற்றிகரமான யோக வாழ்க்கையை நல்கும்.

சுய ஜாதகத்தில் பாவக வலிமையையும், நவகிரகங்கள் தனது திசையில் ஏற்று நடத்தும் பாவகங்களின் தன்மையையும், அது தரும் பலன்கள் பற்றியும், தெளிவான விளக்கம் ஒரு ஜாதகருக்கு கிடைக்குமெனில், அந்த ஜாதகர் நிச்சயம் தமது வாழ்க்கையை சிறப்பாக முன்னேற்ற பாதையில் அமைத்துக்கொள்ள இயலும் உதாரணமாக, ஒருவருக்கு எதிர்வரும் திசை ஏற்று நடத்தும் பாவக பலனை பற்றி தெளிவாக தெரிந்து இருப்பின் நன்மை நடைபெறும்  பொழுது ஜாதகர் அதை பரிபூர்ணமாக ஏற்றுக்கொள்ளவும், தீமை நடைபெறும் பொழுது ஜாதகர் விழிப்புணர்வுடன் செயல்பட்டு திட்டமிட்ட வாழ்க்கையை பெறுவதற்கும் உதவும் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், இதற்க்கு ஓர் உதாரண ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


ஜாதகருக்கு லக்கினம் : மீனம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : திருவோணம் 3ம் பாதம்

ஜாதகரின் கேள்வி :

1) நடைபெறும் ராகு திசையில் சந்திரன் புத்தி தரும் பலன்கள் யாது? அடுத்து வரும் குரு திசை தரும் பலன்கள் என்ன?

நடைபெறும் ராகு திசையில் சந்திரன் புத்தி 7,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது தங்களுக்கு உகந்தது அல்ல, எனவே சந்திரன் புத்தி நடைபெறும் காலத்தில் தங்கள் களத்திர ஸ்தான வழியில் இருந்து தாமத திருமணம், எதிர்ப்பால் அமைப்பினரிடம் இருந்து இன்னல்கள், நண்பர்கள் வழியில் இருந்து துன்பங்கள் என மனநிம்மதி இழப்பையும், மனபோராட்டத்தையும் வாரி வழங்கும், மேலும் மேற்கண்ட பாவக வழியில் இருந்து வீண் விரையங்களும், துன்பங்களும், மருத்துவ செலவினங்களும் ஏற்பட்ட வாய்ப்பு உண்டாகும் என்பதால் சந்திரன் புத்தியில் தங்கள் 7,12ம் பாவக வழியில் இருந்து எச்சரிக்கை உடன் நடந்து கொள்வது நல்லது.

எதிர் வரும் குரு திசை தங்களுக்கு உடல் உயிராகிய 1ம் வீடு லக்கினத்துடன் சம்பந்தம் பெற்று முதல் பாவக பலனையே ஏற்று நடத்துவது வரவேற்க தக்கது, குரு திசை 16 வருடங்களும் தங்களுக்கு லக்கின வழியில் இருந்து புகழ்,வெற்றி,கீர்த்தி என அனைத்து நன்மைகளும் நடைமுறைக்கு வரும், தங்களது லக்கினம் மீனத்தில் 340:45:13 பாகையில் ஆரம்பித்தது மேஷத்தில் 014:16:57 பாகையில் முடிவு பெறுவதால் உபய நீர் தத்துவத்திற்கு உண்டான பரந்த மனபக்குவத்தையும், மனதில் நினைக்கும் காரியங்களில் வெற்றிகளையும், சர நெருப்பு தத்துவத்திற்க்கான வீரியம் மிக்க செயல்பாடுகளையும், சுய கட்டுப்பாட்டுடன் கூடிய ஒழுக்க நெறியையும் பேணும் வல்லமையை வாரி வழங்கும், மேலும் சுறு சுறுப்புடன் செயல்பட்டு நினைத்த  காரியத்தை வெற்றி கொள்ளும் வல்லமையை வாரி வழங்கும், லட்சியங்கள் யாவும் நிறைவேறும், எதிர்பார்ப்புகள் நிறைவேறும், திருப்தியையும் போதும் என்ற மன நிறைவையும் நல்கும், எனவே குரு திசை தங்களுக்கு யோகம் மிகுந்த நல்வாழ்க்கையை லக்கின வழியில் இருந்து வாரி வழங்கும்.

மேற்கண்ட ஜாதகருக்கு உண்டான பலன்கள் பாவக வலிமையை அடிப்படையாக கொண்டும், திசை,புத்தி ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமை அடிப்படையாக கொண்டு தெளிவாக விளக்கம் தர சுய ஜாதக கணிதம் நமக்கு மிகவும் உதவியாக அமைந்தது, இதன் அடிப்படையில் ஜாதகர் துல்லியமாக தமது வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக்கொள்ள இயலும்,

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய் மற்றும் ராகுகேது தோஷம் திருமண தடைகளை தருமா? திருமணம் தாமதம் ஆக காரணம் என்ன ?


கேள்வி :

எனது ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் மற்றும் ராகு கேது தோஷம் உள்ளதால் திருமணம் தாமதம் ஆகின்றது என்கின்றனர், இது உண்மையா? எனக்கு வரும் வாழ்க்கை துணை பற்றி விளக்கம் தருக.


பதில் :

தங்களது சுய ஜாதக அமைப்பின் படி பெரும்பாலான பாவகங்கள் நல்ல வலிமையுடன் இருப்பது வரவேற்க தக்க அமைப்பாகும், தங்களது சுய ஜாதகத்தில் ராகு கேது முறையே ஆயுள் பாவகமான 8ம் பாவகத்திலும், குடும்ப ஸ்தானமான 2 ம் பாவகத்திலும் அமர்ந்து இருப்பது உறுதியாகிறது, ஆனால் செவ்வாய் தங்களுக்கு மிதுன ராசியில் அமர்ந்து இருந்த போதிலும் நான்காம் பாவகத்தில் அமரவில்லை, மிதுன ராசியில் மூன்றாம் பாவகத்திற்கு உற்ப்பட்ட பாகையில் அமர்ந்து இருக்கின்றார் ( தங்களுக்கு மூன்றாம் பாவகம் ரிஷப ராசியில் 41:48:06 பாகையில் ஆரம்பித்து மிதுனம்  ராசியில் 68:13:04 பாகையில் முடிவடைகிறது, மேலும் செவ்வாய் மூன்றாம் பாவகத்திற்கு உற்ப்பட்ட 60:57:24 பாகையில் அமர்ந்து இருக்கின்றார் ) எனவே  அடிப்படையில் தங்களது ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இல்லை  என்பதே உண்மை நிலை ( செவ்வாய் தோஷம் என்பது ஆய்வுக்கு உரிய விஷயம் ) தங்களது ஜாதகத்தில் ராகுகேது மட்டும் முறையே 8,2ம் பாவகங்களில் அமர்ந்து இருக்கின்றனர், செவ்வாய் 3ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றார்.

தங்களது கேள்விக்கு வருவோம் திருமண தாமதத்திற்கு காரணமாக தங்களது ஜாதகத்தில் 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை இழப்பதும், தங்களின் ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமாக அமைவதையும் காரணமாக எடுத்துக்கொள்ளலாம், ஆனால் இதற்க்கு காரணமாக சர்ப்ப கிரகங்கள் மீது குற்றம் சாற்ற இயலாது ஏனெனில் 2,8ம் வீடுகளுக்கு அதிபதி புதன், 2ம் பாவகத்தில் அமர்ந்த கேது தனது நிலையில் இருந்து  குடும்ப ஸ்தானத்திற்கு வலிமையை தருகிறார், 8ம் பாவகத்தில் அமர்ந்த ராகு மட்டும் தனது நிலையில் இருந்து ஆயுள் ஸ்தானத்திற்கு முழுவீச்சில் இன்னல்களை தருகிறார், செவ்வாய் அமர்ந்த 3ம் பாவகம் தங்களது ஜாதகத்தில் மிகுந்த வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்கது, எனவே செவ்வாய் பகவானால் தங்களுக்கு திருமணம் தடைபெற வாய்ப்பு இல்லை என்பது தெளிவான உண்மை, தங்களின் கேள்வியில் உள்ளது போல் ராகுகேது, செவ்வாய் தங்களது திருமண வாழ்க்கையில் யாதொரு தடைகளையும் தரவில்லை.

திருமணம் தாமதம் ஆக  காரணம் என்ன ?

தங்களுக்கு கடந்த சந்திரன் திசையே திருமண வாழ்க்கையை அமைத்து தரவில்லை  எனலாம், திருமணம் செய்ய வேண்டிய பருவ வயதில் நடைபெற்ற சந்திரன்  திசை ( 01/02.2006 முதல் 01/02/2016 வரை ) 10 வருடங்களும் தங்களுக்கு 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை இழந்த ஆயுள் ஸ்தான பலனை ஏற்று நடத்தியதே காரணமாக அமைந்தது, சந்திரன் திசை ஏற்று நடத்திய ஆயுள் பாவகம்  கால புருஷ தத்துவத்திற்கு களத்திர ஸ்தானமாக அமைந்ததால், கடந்த சந்திரன் திசை காலத்தில் தாங்கள் திருமணத்திற்க்காக எடுத்த முயற்ச்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது, நல்ல நண்பர்கள் சேர்க்கையை தரவில்லை, நல்ல வேலை மற்றும் ஊதியம் அமையவில்லை, வரும் வருமானம் அனைத்தும் வீண் விறையத்தை தந்தது, மேலும் எதிர்பால் அமைப்பினரிடம் இருந்து வரும் இன்னல்கள் மூலம் எதிர்பாராத இழப்புகளை தந்தது, மேலும் சிந்திக்கும் திறனை குறைத்து, மன நிம்மதியிழப்பையும், மன போராட்டத்தையும் அதிகரித்தது, இதனால் தங்களின்  வாழ்க்கை சந்திரன் திசை காலத்தில் ( 10 வருடங்களும் ) அதிக துன்பங்களும், காரிய தடைகளையும், ஜீவனம் முன்னேற்றம் அற்ற நிலையையும் வழங்கியது, தங்களின் திருமண வாழ்க்கை தடைபட இதுவே காரணமாக அமைந்து விட்டது, எனவே தங்களின் திருமணம் தடைபெற ராகுகேது  மற்றும் செவ்வாய் தோஷம் காரணம் அல்ல என்பதில் தெளிவு பெறுங்கள்.

தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசை ( 01/02/2016 முதல் 01/02/2023 வரை ) தங்களுக்கு 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை இழந்த ஆயுள் ஸ்தான பலனை ஏற்று நடத்துவது மேற்கண்ட பாவக வழியில் இன்னல்களை தந்த போதிலும், 1,3,7,12ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெற்ற வீரிய ஸ்தான பலனையும் ஏற்று நடத்துவது தங்களின் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை தரும் எனவே செவ்வாய் திசையில் 7ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதால், தங்களின் திருமண முயற்ச்சிகள் உடனடி  வெற்றியை தரும், சிறப்பான வாழ்க்கை துணை நிச்சயம் அமையும், மேலும் தங்களின் வாழ்க்கை துணை வடகிழக்கு திசையில் வெகு தொலைவிற்கு அப்பால்  இருந்து வரும் வாய்ப்பு உண்டாகும், வரும் வாழ்க்கை துணை சிறந்த நிர்வாக திறனும், ஆளுமையும் கொண்டு இருப்பர், இருப்பினும் பேச்சு அதிகமிருக்கும், வரும் வார்த்தைகள் தங்களை சிறிது  பாதிக்கும், செவ்வாய் திசையில் தற்போழுது நடைபெறும் ராகு புத்தியில் நிச்சயம் தங்களுக்கு திருமணம் சிறப்பாக நடைபெறும். ( எந்த ஒரு ஜாதகருக்கும் திருமணம் தாமதம் ஆனால் அதற்க்கு காரணமாக நிச்சயம் சுய ஜாதகத்தில் 2,7,12ம் பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் அல்லது நடைபெறும் திசை பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருக்கும், எனவே அதன் நிலை அறிந்து அதற்கான பரிகாரங்களை நாடினால் நிச்சயம் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நன்மை உண்டாகும், சிறப்பான இல்லற வாழ்க்கை அமையும் ) 

குறிப்பு :

அடுத்து வரும் ராகு திசையும், குரு திசையும் தங்களுக்கு அபரிவிதமான ராஜயோக பலன்களை தர காத்துகொண்டு இருக்கின்றது என்பது, தங்களின் வாழ்க்கையில் வரும் பின் யோகத்திற்கு எடுத்துக்காட்டு, தங்களின் வாழ்க்கையில் தற்போழுது நடைபெறும் செவ்வாய், அடுத்தது வரும் ராகு, அதற்க்கு  அடுத்து வரும் குரு திசை வலிமைபெற்ற சில பாவகங்களின் பலனை மட்டும் ஏற்று நடத்துவது, தங்களின் வாழ்க்கையில் மறக்க இயலாதாக முன்னேற்றத்தையும், ராஜ யோக பலன்களையும் வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்க அமசமாகும், இதன் பலாபலன்களை தெளிவாக உணர்ந்து சகல நலன்களும் பெற்று வாழ்க, வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 1 நவம்பர், 2016

பெண்கள் ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் வலிமையும் திருமண தடைகளும் !



சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பது மிக மிக அவசியமாகிறது, இதில் ஆண் பெண் வேறுபாடுகள் எதுவும் இல்லை எனலாம், இருப்பினும் பெண்களின் ஜாதகத்தில் திருமண வாழ்க்கையயை நிர்ணயம் செய்யும், குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும்  7ம் பாவகமும் வலிமை இழப்பது சம்பந்தப்பட்ட ஜாதகிக்கு உகந்தது அல்ல, மறைவு ஸ்தான தொடர்பை பெறுவது திருமண வாழ்க்கையில் தடைகளையும் வெகு தாமாதத்தையும் வழங்கும், மேலும் தாமதமாக திருமணம் நடைபெற்றாலும், இல்லற வாழ்க்கையில் தொல்லைகளையும் துன்பங்களையும் தரும், மன வாழ்க்கையில் பிரிவு, தம்பதியர் ஒற்றுமை இன்மை, பொருளாதார சிக்கல்கள், உறவுகள் ஆதரவின்மை சிரமங்களை அதிக அளவில் தரக்கூடும், பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ஜாதகியின் திருமண வாழ்க்கைக்கே தடைகல்லாக மாறிவிடும் வாய்ப்பு உண்டு, மேலும் எதிர்பால் அமைப்பினரிடம் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க ஜாதகி பெரிய அளவில் போராடும் சூழ்நிலையை தரும்.

மேற்கண்ட பாதிப்புகள் ஆணின் ஜாதகத்தில் இருப்பின் ஜாதகர் சமூகத்தின் விமர்சனத்தில் இருந்து தப்பிக்கும் வழி உண்டு, ஆனால் பெண்களின் ஜாதகத்தில் இருப்பின் சமூகத்தின் விமர்சனத்தில் இருந்து தப்புவது என்பது இயலாத காரியம், ஜாதக வலிமை இன்மை பெண்களின் மன பாதிப்புகளை வெகுவாக அதிகரிக்க வாய்ப்பு உண்டு, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : மிதுனம் 
ராசி : மீனம் 
நட்சத்திரம் : ரேவதி 3ம் பாதம் 

ஜாதகிக்கு வயது 41 முடிவடைந்து விட்டது, இதுவரை திருமணத்திற்கு எடுத்த முயற்ச்சிகள் யாவும் தோல்வியை தழுவின, ஜாதகிக்கு வரும் வரன்கள் யாவும் ஏதாவது ஒரு வழியில் தட்டி சென்றது, திருமணத்திற்கு உண்டான முயற்ச்சிகள் யாவும் பெரிய பின்னடைவை சந்தித்தது, எவ்வித பரிகாரமும் பலன் தரவில்லை, இதற்கு காரணம் என்ன? என்பதை அவரது ஜாதக ரீதியாக ஆய்வு செய்வோம் அன்பர்களே.

1) ஒருவரது சுய ஜாதகத்தில் திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் பாவகங்கள் குடும்பம்,களத்திரம் மற்றும் விறையம் என்று அழைக்கப்படும் 2,7,12 ம் வீடுகளாகும், மேற்கண்ட ஜாதகத்தில் 2,7,12 ம் வீடுகள் பெரும் தொடர்பை ஆய்வு செய்வோம் அன்பர்களே, குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம், களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம், அயன சயன ஸ்தானம் எனும் 12ம் வீடு விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.

2) ஜாதகிக்கு 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது குடும்பம் மற்றும் களத்திர ஸ்தான வழியில் இருந்து 200 சதவிகித இன்னல்களை வாரி வழங்கும் அமைப்பாகும், 12ம் வீடு விறைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது மன நிம்மதி இழப்பையும், தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி அற்ற நிலையையும் தரும் அமைப்பாகும்.

3) மேற்கண்ட பாதிப்புகள் ஜாதகிக்கு இருந்த போதிலும் திருமண வயதில் ( 18 முதல் 27 வயது வரை ) நடைமுறையில் இருந்த திசை வழங்கிய பலன்களை சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, ஜாதகிக்கு ( 08/08/1989 முதல் 08/08/2009 வரை ) நடைபெற்றது சுக்கிரன் திசை, இந்த சுக்கிரன் திசை 2௦ வருடமும்  ஜாதகிக்கு 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தி உள்ளது என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்திய சுக்கிரன் திசை ஜாதகிக்கு திருமணத்திற்கு உண்டான வாய்ப்பை சிறிதும் வழங்கவில்லை, நடைபெற்றது சுக்கிரன் திசை என்றாலும் அவர் ஏற்று நடத்தியது பாதக ஸ்தான பலன் என்பதால் ஜாதகிக்கு, திருமண வாழ்க்கை அமையவில்லை என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

4) சுக்கிரன் திசைக்கு பிறகு நடைபெற்ற சூரியன் திசை 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடனே தொடர்பு பெற்று பலனை நடத்தியது, ஜாதகிக்கு கல்வியில் நல்ல யோகத்தை மட்டும் தந்தது இல்லற வாழ்க்கை சார்ந்த யாதொரு நன்மையையும் தர வில்லை, தற்பொழுது நடைபெறும் சந்திரன் திசை ஜாதகிக்கு விறைய ஸ்தான பலனையே ஏற்று நடத்துவதும் ஜாதகிக்கு உகந்தது அல்ல என்பதை தெளிவு படுத்த விரும்புகிறோம்.

எனவே சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை கருத்தில் கொண்டு, நடைபெறும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமையையும் தெளிவாக தெரிந்துகொண்டு, இல்லற வாழ்க்கையினை அமைத்து கொள்வதே சால சிறந்தது, மேற்கண்ட ஜாதகி தனது சுய விருப்பங்களுக்கு முன் உரிமை தாராமல், தனக்கு வரும் கணவரின் சுய ஜாதகத்தில் 2,7,12ம் பாவகங்கள் வலிமை பெற்ற ஓர் வரனை சரியான வயதில் தேர்வு செய்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்பதை, ஜாதகி உணர்ந்து செயல்பட்டு இருப்பின், திருமணம் தாமதம் ஆகியிருக்க வாய்ப்பில்லை, இல்லற வாழ்க்கையும் சிறப்பாக அமைந்து இருக்கும், மாறாக ஜாதகி தனது சுய விருப்பங்களுக்கும், கற்பனை வாழ்க்கை துணைக்கும் முன்னுரிமை தந்ததால், பெண்களுக்கு சரியான வயதில் நிகழ வேண்டிய திருமண வாழ்க்கை இந்த பெண்ணிற்கு இதுவரை நிகழவில்லை என்பதை தவிர வேறு எதுவும் இல்லை.

திருமண வாழ்க்கை பொறுத்தவரை வரனோ, வதுவோ தமது சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டே இல்லற வாழ்க்கையை தேர்வு செய்வது அவசியமாகிறது, இல்லை எனில் இல்லற வாழ்க்கையில் வரும் மன கசப்பையும், பிரிவையும் தவிர்க்க இயலாது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696