வெள்ளி, 30 நவம்பர், 2012

ஜோதிட ஆலோசனை : தொழில் விருத்தி பொருளாதார முன்னேற்றம் தரும் யோக ஜாதக நிலை !




ஜாதக பொது பலன்கள் 

ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் இருக்கும் பாவகங்கள் :

1,7 ம் வீடுகள் களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகருக்கு மிகுந்த யோக வாழ்க்கையை அளிக்கும் ஒரு சிறந்த அமைப்பாகும் , இதனால் ஜாதகருக்கு இருக்கும் எதிர்ப்புகள் அகலும் , நண்பர்கள் கூட்டாளிகள் மூலம் லாபம் ஏற்ப்படும் , தனது வாழ்க்கை துணையின் வழியில் இருந்து மிகுந்த யோக வாழ்க்கையை பெறுவார் , ஆண் பெண் நண்பர்களுடன் கலகலப்பாக பழகும் வாய்ப்பு உண்டாகும் , ஜாதகருக்கு மக்கள் ஆதரவு எப்பொழுதும் உண்டு , ஜாதகரின் தொழில் முறை கூட்டாளி மிகவும் சக்தி வாய்ந்தவராகவும் , பொருளாதரத்தில் தன்னிறைவு பெற்றவராகவும் திகழ்வார் , கூட்டு தொழில் செய்வதால் ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளே உண்டாகும் .

2 ம் வீடு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகதுடன் சம்பந்தம் பெறுவது , வாழ்க்கையில் அளவற்ற செல்வத்தையும் , குடும்ப ஒற்றுமையும் , குடும்பத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சியும் , பொருளாதரத்தில் படிப்படியான முன்னேற்றத்தையும் தந்துகொண்டே இருக்கும் , ஜாதகருக்கு நல்ல உணவு எங்கு சென்றாலும் கிடைக்கும் , வருமானத்திற்கு எவ்வித பிரச்சனையும் வாழ்நாள்  முழுவதும் இருக்காது , வாழ்க்கை துணை வழியில் இருந்து அழகான குடும்ப வாழ்க்கை அமையும், நிம்மதியான குடும்ப வாழ்க்கை ஜாதகருக்கு நிச்சயம் உண்டு .

3,5,8 ம் வீடுகள் ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , மூன்றாம் பாவக வழியில் இருந்து நிலையான முன்னேற்றம் , சுலப பொருள் வரவு , சகல சௌபாக்கியம் , இசையில் ஈடுபாடு , மின்துறை மற்றும் பொறியியல் துறைகளில் பணியாற்றும் யோகம் நினைத்ததை சாதிக்கும் பேராற்றல் , பெரியோரிடம் மதிப்பு மரியாதை , புத்தி கூர்மை , சாஸ்திர ஆராய்ச்சி , லாட்டரி யோகம் , வழக்கில்  வெற்றி , கோவில் தரிசனம் , வெளிநாடுகளில் செல்வ சேர்க்கை , புகழ் பணம் கிடைத்தல் , போன்ற நன்மைகளும் , ஐந்தாம் பாவக வழியில் கலைகளில் ஆர்வம் , சினிமா மற்றும் திரைப்பட துறையில் இருந்து மிகுந்த லாபம் , தனது குழந்தைகளால் யோக வாழ்க்கை , வியாபாரத்தில் மிகுந்த வெற்றி மற்றும் முன்னேற்றம் உண்டாகும்  தனது பூர்வீகத்தில் இருப்பதால் நன்மை உண்டாகும் , எட்டாம் பாவக வழியில் இருந்து , நல்ல அந்தஸ்தை வசதி வாய்ப்பினை விரைவில் அடைதல் , வசதியான  உத்தியோகம் , பதவி உயர்வு , தொழில் ரீதியான வெற்றிகள் , வெளிநாடுகளில் யோக வாழ்க்கை அமையும் .

4,9 ம் வீடு பாக்கிய ஸ்தானம் எனும் ஒன்பதாம் பாவகதுடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகரை உயர்கல்வி பயில்வதால் மிகப்பெரிய வெற்றிகளை தரும் , விஞ்ஞான ஆராய்ச்சி வெளிநாடுகளில் தொழில் செய்யும் யோகம் சமுதயத்தில் நல்ல மதிப்பு மரியாதை , ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் வெற்றிமேல் வெற்றி , பொது வாழ்க்கையில் சாதிக்கும் யோகம் தன்னம்பிக்கை  , சுய கட்டுபாடு என ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளையே வாரி வழங்கும் .

10 ம் வீடு ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் வீட்டுடன் தொடர்பு பெறுவது சுய தொழில் செய்வதால் மிக பெரிய வெற்றியை ஜாதகர் பெறுவார் காரணம் ஜீவன ஸ்தானம் கலபுருஷ தத்துவ அமைப்பிற்கும் , இலக்கின அமைப்பிற்கும் ஜீவன ஸ்தனமாகவே வருவதும் , ஜீவன ஸ்தானம் மகரத்தில் அமர்ந்து சர நில ராசியாக வருவது 200 சதவிகித வெற்றியை வாரி வழங்கும் , ஜாதகர்  செய்யும் தொழில்கள் யாவும் வெற்றி மேல் வெற்றி தரும் , பல தொழில் செய்யும் யோகம் உண்டாகும் , தங்களின் ஜாதக அமைப்பில் மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து தாங்கள்  மிகுந்த நன்மைகளை பெறுவீர்கள் அன்பரே !

ஜாதக அமைப்பில் பாதிக்க பட்ட பாவகங்கள் :

6,11,12 ம் வீடுகள் ஆயுள் பாவகமான 8 ம் பாவகதுடன் சம்பந்தம் பெறுவது 6 ம் பாவக வழியில் இருந்து அதிக கோப உணர்வினையும் , மன உளைச்சலையும் ,தேவையில்ல விசயங்களை மனதில்  போட்டு குழப்பி கொண்டு மன நிம்மதியை கெடுத்து கொள்ளும் தன்மையை உருவாக்கும் , எதிரிகளால் சில நேரங்களில் அதிக இன்னல்களை சந்திக்க வேண்டி வரும் , உடல் நிலை கடுமையாக  பாதிக்க வாய்ப்பு உண்டு , குறிப்பாக வயிறு சம்பந்த பட்ட தொந்தரவுகள் ஏற்ப்பட வாய்ப்பு உண்டு , லாப ஸ்தான அமைப்பில் இருந்து ஜாதகர் கவனமாக இருக்க்க வில்லை  எனில் ஜாதகருக்கு வர வேண்டிய நன்மைகள் யாவும் மற்றவர்கள் தட்டி பறிக்க வாய்ப்பு உண்டு , அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஜாதகர் வீண் விரையம் செய்யும் தன்மை உண்டாகலாம் , வண்டி வாகனங்களில் செல்லும்பொழுது அதிக கவனமும் பாதுக்காப்பாகவும் பயணம் மேற்கொள்ளுவது அவசியம் , மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து ஜாதகருக்கு தீமையான  பலன்கள் நடை பெற வாய்ப்பு உண்டு என்பதால் 8 ம் பாவக வழியில் ஜாதகர் அதிக கவனமாக இருப்பது நல்லது 8 ம் பாவகம் திடீர் இழப்பு , விபத்து , ஏமாற்றம் ,அதிக மன உளைச்சல்  , அதிக கோப உணர்வினை தரும் .

தற்பொழுது நடை பெரும் சுக்கிரன் திசை தரும் பலன்கள் : ( 03/10/2008 முதல் 03/10/2028 வரை )

1,7 ம் வீடுகள் களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் ,10 ம் வீடு ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் வீட்டுடன் தொடர்பு பெற்றும் சுக்கிரன் திசை நன்மையான பலன்களையே  வாரி வழங்கி கொண்டு இருக்கிறது எனவே ஜாதகர் 7 ம் பாவக வழியிலும் 10 ம் பாவக வழியிலும் 100 சதவிகித நன்மையை பெரும் யோகம் உண்டாகும் , குறிப்பாக கூட்டு தொழில்  , சுய தொழில் , வெளிநாடுகளில் தொழில் அல்லது வேலை செய்வதால் வாழ்க்கையில் அளவில்லா முன்னேற்றம் , திருமணம் மூலம் யோக வாழ்க்கை , வாழ்க்கை துணையின்  வழியில் இருந்து  மிகுந்த நன்மைகளையும் , கூட்டு நண்பர்கள் வழியில் இருந்து அதிக நன்மைகளையும் பெரும் யோகம் உண்டாகும் , ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் ஜாதகருக்கு அபரிவிதமான  வளர்சியும் முன்னேற்றமும் உண்டாகும்  ஆக சுக்கிரன் திசை யோக பலன்களையே வாரி வழங்கி கொண்டு இருக்கிறது என்பது ஜாதகருக்கு மகிழ்ச்சியான விஷயம் வாழ்த்துகள்  அன்பரே !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக