ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

பன்முக தொழில் திறமை கொண்ட ஒரு ஜாதகர்,செய்யும் தொழிலிலும், பொருளாதார ரீதியாகவும் வெற்றி பெறாமல் போவதற்கு என்ன காரணம் ?



 பொதுவாக ஒருவருடைய சுய ஜாதகத்தில் கர்ம ஸ்தானம் எனும் 10ம் பாவகம் ஜாதகர் செய்யும் தொழில் அமைப்பை பற்றியும் , அதில் ஜாதகரின் தனி திறமையை பற்றியும் தெளிவாக தெரிவிக்கும் , ஜாதகர் எவ்வகையான தொழில் செய்தால், செய்யும் தொழிலில் வெற்றி கிடைக்கும் என்பதனையும் அறிவுறுத்தும், ஆக ஒருவருக்கு ஏற்ற தொழில் நிலையை உணர்ந்துகொள்ள ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்தை வைத்து நிர்ணயம் செய்துவிட முடியும் அவர் செய்யும் தொழில் அமைப்பில் ஜாதகரின் திறமையை பற்றியும் தெளிவாக தெரிந்துகொள்ள இயலும், ஆனால் ஜாதகரின் தொழில் திறமை ஜாதகருக்கும் ஜாதகரை சார்ந்தவர்களுக்கும் பயன்படுமா ? என்பத்தை பற்றி வேறு சில பாவக நிலையை வைத்தே நிர்ணயம் செய்ய இயலும் .

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் 100 சதவிகிதம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் தான் செய்யும் தொழில் அமைப்பில் பன்முக திறமையும், தனது உழைப்பை, கடமையை 100 சதவிகதம் செய்பவராக இருப்பார் , ஜாதகரின் உழைப்பும் பன்முக திறமையும் , ஜாதகருக்கு பயனளிக்க வேண்டும் எனில் அவரது ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் பாவகம் நல்ல நிலையில் இருப்பது அவசியம் , லக்கினம் 2,6,8,12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் , பாதக ஸ்தான அமைப்புடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகரின் உழைப்பும், தொழில் திறமையும் ஜாதகருக்கு பயன்படாமல் வீணடிக்கப்படும், அல்லது வேற்று நபர்களுக்கு ஜாதகரின் தொழில் திறமையும், உழைப்பும் பலன் தரும், எனவே ஜாதகரை பணிக்கு அமர்த்தும் முதலாளிக்கு மிகுந்த நன்மைகள் கிடைக்கும் .

சுய தொழில் செய்யும் அன்பர்கள் தொழில் துவங்கிய  நான்கு வருடங்களுக்குள் பொருளாதார ரீதியான தன்னிறைவு பெற இயலவில்லை எனில் ஜாதகர் தனது சுய ஜாதகத்தை பரிசோதித்து கொள்வது சால சிறந்தது , ஏனெனில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்ற போதிலும், ஜீவன ஸ்தான வழியில் இருந்து கிடைக்க வேண்டிய நன்மைகளை ஜாதகருக்கு தருவது லக்கினமும், களத்திர பாவகமுமே இவை இரண்டும் பாதிக்கும் பொழுது ஜாதகர் தனது தொழில் திறமையின் மூலம் அடையவேண்டிய நன்மைகளை அனுபவிக்க இயலாது , மேலும் நான்காம் பாவகம் வலிமை பெறவில்லை எனும் பொழுது ஜாதகர் தான் ஈட்டிய வருமானத்தை, அழியா சொத்தாக மாற்ற இயலாது அனைத்து வருமானத்தையும் வீண் செலவுகளிலும் , கேளிக்கைகளிலும் இழக்கும் சூழ்நிலையை தரும் .

 எந்த ஒரு ஜாதகத்திலும் 1,4,7,10ம் பாவகங்கள், 2,6,8,12ம் வீட்டுடனோ , பாதக ஸ்தான அமைப்புடனோ தொடர்பு கொள்ளும் பொழுது , ஜாதகரின் தொழில் அமைப்பும், வாழ்க்கை முறையும் கேள்விக்குறியாக மாறிவிடும் , சுயமாக ஜாதகர் செயல்பட முடியாத சூழ்நிலையை தரும் , ஜாதகரின் முன்னேற்றம் வெகுவாக பாதிக்க படும் , பொருளாதார ரீதியான சிக்கல்களை அதிகம் சந்திக்க வேண்டிய சூழ்நிலையை தரும், மேலும் ஜீவன ஸ்தானம் மட்டும் வலிமை பெற்று மேற்கண்ட பாவகங்கள் வலிமை இழக்கும் பொழுது , ஜாதகரின் உழைப்பும் திறமையும் ஜாதகருக்கு பயன்படாமல் வீண் விரையத்தை தரும் .

குறிப்பாக ஒருவருடைய சுய ஜாதகத்தில் லக்கினம், சுக ஸ்தானமான நான்காம் பாவகம், பொதுமக்கள் நண்பர்கள் ஆதரவை தரும் களத்திர பாவகம், மற்றும்  ஜாதகரின் ஜீவனத்தை தரும் கர்ம ஸ்தானமான 10ம் பாவகம் ஆகியன உபய ராசியுடன் தொடர்பு பெற்று ( தொடர்பு பெரும் உபய ராசி பாதக ஸ்தானமாக அமையாத நிலையில் ) லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் பாவகம் சர ராசிகளான மேஷம்,கடகம்,துலாம்,மகரம் தொடர்பு பெரும் பொழுது ஜாதகரின் வாழ்க்கை பொருளாதார ரீதியாகவும், ஜீவன அமைப்பின் வழியில் இருந்தும் மிகப்பெரிய முன்னேற்றத்தை எவ்வித தங்கு தடையின்றி வாரி வழங்கும், திடீரென வாழ்க்கையிலும் ஜீவன நிலையிலும் முன்னேற்றம் பெற மேற்கண்ட  அமைப்பை சுய ஜாதகத்தில் பெற்றிருப்பது அவசியம் , ஜாதகரின்  உழைப்பு 33 சதவிகிதமாகவும் , ஜாதகரின் வருமானம் 100 சதவிகிதமாகவும் அமையும் யோக நிலையை தரும் .

ஒரு ஜாதகருக்கு தொழில் திறமை இருந்தாலும் கூட சுய ஜாதகத்தில் 1,4,7,11ம் பாவகங்கள் வலிமை பெரும் பொழுதே அந்த ஜாதகர் அதற்க்கு உண்டான முழு நன்மைகளையும் பலன்களையும் 100 சதவிகிதம் அனுபவிக்க இயலும் இல்லை எனில் ஜாதகர் உழைப்பு வீணடிக்க படும் அல்லது ஜாதகர் திட்டம் மட்டும் வகுத்துக்கொண்டு இருக்கும் சூழ்நிலையை தரும் , நடைமுறையில் எவ்வித செயல்பாட்டிற்கும் கொண்டு வர இயலாத சூழ்நிலையை தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, எனவே சுய ஜாதக நிலையை நன்கு உணர்ந்து ஜாதகர் செய்யும் தொழில் 100 சதவிகித வெற்றியை வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

1 கருத்து: