ஞாயிறு, 29 நவம்பர், 2015

ஜாதக ஆலோசனை : சனி மஹா திசை நரக வாழ்க்கையை தருமா ?

கேள்வி : 

என் பெயர் கார்த்திக்
நான் நேற்று முன்தினம் ஒரு ஜோதிடரை பார்த்தேன் அவர் என்னுடைய ஜாதகத்தை கணித்து உங்களுக்கு இபொழுது நடக்கும் திசை குரு திசை சுகர புத்தி அதனால் உங்களுக்கு இந்த குருதிசை ஓரளவு நல்ல பலன் தருவார்,
அடுத்து வரும் சனி மகா திசை 19 ஆண்டு காலம் அதில் நீங்கள் பல பிரச்னையை மற்றும் துன்பங்களை  நீங்கள் சந்திக்க கூடும் அது மற்றும் இன்றி நீங்கள் ஒரு சன்யாசி வாழ்க்கை  வாழ நேரிடும் (திருமணம் ஆகாது) என்று சொன்னார்

நான் சொந்த தொழில் செய்யலாமா என்று கேட்டேன் அதற்க்கு நீங்கள் சொந்த தொழில் செய்ய கூடாது செய்தால் அது உங்களுக்கு மிக பெரிய இளப்பை தரும், மற்றும் நீங்கள் கூட்டு சேர கூடாது .... யாருக்கும் ஜாமீன் கையப்போம் போடகூடாது என்று  சொன்னார், கடைசியாக உங்களுக்கு குரு திசை முடிந்தவுடன் உங்கள் வாழ்க்கை ஒரு நரகம் ஆகிவிடும் என்று  சொல்லி ஜாதகத்தை மூடிவிட்டார்,அதில் இருந்து தூக்கம் வரவில்லை, தயவு செய்து ஒரே வரியில் பதிலை முடித்து விடுங்கள்

நன்றி.


பதில் : 

தங்களது ஜாதகத்தில் தற்பொழுது நடைமுறையில் உள்ள குரு திசை மற்றும் எதிர்வரும் சனி திசை தங்களுக்கு ஏற்று நடத்தும் பாவக பலன்களை ஆய்வு செய்வோம் அன்பரே !

குரு திசை தங்களுக்கு ஜீவன ஸ்தானமான 10ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது தங்களுக்கு குரு திசையில் சரியான உத்தியோகம் இல்லாத சூழ்நிலையை தந்தாலும், வியாபாரம் அல்லது விபாரம் சார்ந்த ஆலோசனை வழங்கும் துறையில் சிறந்த ஜீவனத்தை தரும், மற்றும் மற்றவருக்கு உதவி செய்வதின் மூலம் லாபம் பெரும் யோகத்தை தரும் என்பதால், தரகு சார்ந்த தொழில்களை தேர்வு செய்து வாழ்க்கையில் முன்னேற்றம் காணலாம்.

குரு திசையில் சுக்கிரன் புத்தியும் ஜீவன ஸ்தானமான 10ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது வரவேற்க தக்க அம்சமாகவே கருதலாம், திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் 2,7ம் வீடுகளில் 2ம் வீடு மட்டும் சிறு பாதிப்பை பெற்று இருப்பது திருமணத்தை தாமதம் செய்யும், ஆனால் நிச்சயம் திருமண வாழ்க்கை அமையும், 7ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது கூட்டு தொழில் அல்லது கூட்டு முயற்ச்சியின் மூலம் நல்ல லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், சிறந்த வாழ்க்கை துணை அமையும், நண்பர்கள் மற்றும் வாழ்க்கை துணை வழியில் இருந்து சிறந்த முன்னேற்றங்களை பெரும் யோகம் உண்டாகும், வெளிநாடுகளிலும் வியாபரத்திலும் தாங்கள் மிகப்பெரிய வெற்றிகளை பெறுவதற்கு சந்தர்ப்பங்களை வாரி வழங்கும்.

பொதுவாக சனி திசை என்றாலே தீமையை மட்டுமே செய்யும் என்ற கணிப்பின் படியே தங்களுக்கு மேற்கண்ட பலன்களை அந்த ஜோதிடர் கூறியிருக்க வேண்டும், தங்களது ஜாதகத்தில் சனி மஹா திசை எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்ற விஷயம் தெரியாமல், அந்த ஜோதிடரும் குத்து மதிப்பாக தங்களுக்கு பலன்களை சொல்லியிருக்க கூடும், உண்மையில் தங்களுக்கு எதிர் வர இருக்கும் சனி மஹா திசை உயிர் உடலாகி 1ம் வீடு இலக்கின பாவகமான 1ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது சனி திசை நடைமுறையில் உள்ள 19 வருடங்களுக்கும் மிகுந்த யோக பலன்களையே நடைமுறை படுத்துவார் என்பது 100% மறுக்க இயலாத உண்மை, மேலும் தங்களது லக்கினம் சர நெருப்பு தத்துவத்தில் 3 பாகைகளும், ஸ்திர மண் தத்துவத்தில் 25 பகைகளும் வியாபித்து இருப்பது, சனி திசை முழுவதும் ஸ்திரமான நன்மைகளை விரைவாக வாரி வழங்கும், தங்களின் லக்கினம் பெரும்பாலும் ரிஷப ராசியிலேயே அதிகம் வியாபித்து இருப்பது மிகுந்த நன்மைகளையும், சிறந்த வருமான வாய்ப்புகளையும், வாக்கு அல்லது பேச்சு திறமையின் மூலம் அபரிவிதமான வெற்றிகளை வாரி வழங்கும்.

தங்களது சுய ஜாதக அமைப்பின் படி எதிர்வரும் சனி திசை இலக்கின பாவக பலனையே ஏற்று நடத்துவதால் சிறந்த உடல் மற்றும் மன நிலையை தரும், எடுக்கும் காரியங்களின் வெற்றியையும், கீர்த்தியையும் தரும், நோய் எதிர்ப்பு சக்தி கூடும், எனவே சனி திசை தங்களுக்கு தீமையை செய்யும் என்ற பொய்யான ஜாதக பலன்களை நம்பி, சிறந்த எதிர்கால வாழ்க்கையை தாங்களே கெடுத்து கொள்ள வேண்டாம், வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றங்களை பெறுவதற்கு உண்டான ஆயத்த வேளைகளில் ஸ்திரமாக பணியாற்றி நன்மையை பெறுங்கள்.

தங்களது ஜாதக ரீதியான மேற்கண்ட பலன்களுக்கு முறையான ஜோதிட ஆலோசனை, நேரிலோ அல்லது மின் அஞ்சல் வழியாகவோ முறையாக பெற்று கொள்ளவும்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


1 கருத்து:

  1. எனது மகனுக்கு கடகராசி பூசம் நட்சத்திரம். குடும்பத்தில் கஷ்டம் கடன் தொல்லை தீர வேண்டும்.

    பதிலளிநீக்கு