திங்கள், 15 ஜனவரி, 2024

கடகராசி ஆயில்யம் நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!

 


கடகராசி "ஆயில்யம்" நட்சத்திரம் பொதுநல வாழ்வில் புகழ் பெரும் யோக நட்சத்திரம், தனித்திறமை கொண்டு எவராலும் சாதிக்க இயலாத சாதனைகளை மிக எளிதாக சாதிக்கும் வல்லமை பெற்ற நட்சத்திரம், பொதுமக்கள் ஆதரவு என்பது மிக குறுகிய காலத்தில் கிடைக்கப்பெற்று வாழ்வில் மிகப்பெரிய அதிகார பதவிகளை சுவீகரிக்கும் நட்சத்திரம், தெய்வீகத்தில் ஆன்மீகத்தில் அதீத ஈடுபாடு கொண்டுள்ள நட்சத்திரம்,  சுயநலம் இன்றி செயல்படும் பொழுது இறையருளின் கருணையினை பரிபூர்ணமாக பெரும் நட்சத்திரம், அன்பு கருணை மற்றும் அனைத்து உயிர்களையும் தனது உயிர்போல் பாவிக்கும் மனப்பான்மை, எதிர்ப்புகளை கண்டு அஞ்சாத மனநிலை, அறிவில் விழிப்புணர்வு பகுத்தறிதல் உணர்வுக்கு முக்கியத்துவம் தராமல் அறிவுக்கு முக்கியத்துவம் தருதல், பொறுப்பான செயல்பாடுகள், கவனம் கனிவாக நடந்துகொள்ளுதல், அனைவரையும் சரியான வழிப்பாதையில் நடத்திச்செல்லும் அறிவாற்றல், இன்னலுறும் அனைவரையும் தனது அரவணைப்பின் மூலம் மீட்டு எடுக்கும் வலிமை, எதையும் சிறப்பாக செய்யும் வல்லமை என்ற வகையில் மேன்மையை தரும்,  இவர்களது  தமது வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

 ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள "திருக்காளத்தி " கோவிலில் அருள்பாலிக்கும்  "காளத்தியப்பர்" பெருமானை ராகு கால வேளையில் அபிஷேகம் வெந்நிற பட்டு சாற்றி வழிபாடு செய்யும் ஆயில்ய நட்சத்திர அன்பர்களுக்கு ஒரு மண்டல காலத்தில் சகல ஐஸ்வர்யங்களும் வந்து சேரும், பிறவியின் அருமை உணர்ந்து அறிவுக்கு முக்கியத்துவம் தந்து செயற்கரிய காரியங்களை மிக சிறப்பாக செயலாற்ற வைக்கும், தனது ஆன்ம ஒளி பிரகாசிக்கும், அறிவில் தெளிவு, விழிப்புணர்வு, விளைவறிந்து செயல்படுதல், வருமுன்காக்கும் வல்லமை, தெய்வீக அனுகிரகம், அனைவரையும் வசீகரிக்கும் யோகம், மனிதசக்தியை பயனுள்ளதாக மாற்றும் வல்லமை, பொதுமக்களின் வாழ்வை மேம்படுத்தும் தன்மை, மருத்துவத்தில் தேர்ச்சி, கலைகளில் புகழ்மிக்க பொறுப்புகளை பெறுதல், அரசியல் வழி ஆதாயம், சமூக செயல்பாடுகள், பொதுவாழ்வில் வெற்றி, தனது தனித்திறமையை முழுவதுமாக பிரயோகம் செய்வதால் வரும் வெற்றி வாய்ப்புகள், பல்வகைத்தொழில் புரிதல், மிதமிஞ்சிய வருமான வாய்ப்புகள், பொதுநலம் சார்ந்த காரியங்களில் புகழ்மிக்க பொறுப்புகள் தேடி வருதல், எந்த தொழில் செய்தாலும் அதில் முதன்மை பெறுதல், அதிகாரமும் ஆளுமை திறனும் ஒருங்கே அமையப்பெற்று மக்களுக்கு வழிகாட்டியாக திகழும் யோகம் உண்டாகும்.

ஆயில்யம் நட்சத்திர அன்பர்கள் வருடம் ஒருமுறை "காளத்தியப்பர்" பெருமானை ராகு கால வேளையில் தரிசனம் செய்யும் பொழுது வாழ்வில் முன்னேற்றம் என்பது படிப்படியாக உயர்ந்து உச்சநிலையை அடைவார்கள், மனித வாழ்விற்கு தேவையான அனைத்தும் பரிபூரணமாக கிடைக்கும், உடல்நலம் மனவலிமை, கல்வியில் தேர்ச்சி தொழில்யோகம், திருமணத்தடை அகன்று தனக்கான பொருத்தமான வாழ்க்கை துணையை பெறுதல், சந்ததி தழைக்க நல்லதொரு வாரிசுகள், வசதிவாய்ப்புகள், வண்டி வாகன யோகம், சொத்தது சுக சேர்க்கை, குடியிருக்க நல்ல வசதியான சொந்த வீடு, உறவுகள் ஆதரவு பொதுமக்கள் பேராதரவு, உயர்கல்வி பட்டைய படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு, சுய தொழில் புரிவதற்கான சந்தர்ப்பங்கள், துறைசார்ந்த ஞானம், எதையும் முற்போக்கு சிந்தனை மற்றும் நேர்மறை எண்ணம் கொண்டு வெற்றி பெறுதல், மக்கள் சக்தியை ஒருங்கிணைக்கும் வல்லமை, சாதனை புரிவதன் மூலம் பொதுவாழ்வில் வெற்றிபெறுதல் என்றவகையில் மிகுந்த சிறப்புகளை வாரி வழங்கும்.

 குறிப்பு :

கடகராசியில் "ஆயில்யம்" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள், ஆன்மிகம் மற்றும் பொதுவாழ்வில் மிகப்பெரிய உச்சத்தை தொடும் யோகம் உண்டு, சுய தொழில் மற்றும் அரசியலில் சார்ந்த அமைப்புகளில் நிச்சய வெற்றிபெறுவார்கள், திடீர் தனயோகம் அதிர்ஷ்ட வாய்ப்புகள், பல்வகை தொழில் வழியிலான லாபங்கள், தனது நிர்வாக திறமை கொண்டு தொழில் வளர்ச்சி  பெரும் வல்லமை, எதிர்பாராத செல்வாக்கு, பொது சேவையை செய்வதின் வழியில் வரும் புகழ்மிக்க பொறுப்புகள், உடல் ஆரோக்கியம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தெய்வீகஅனுகூலம், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் என்ற வகையில் மிகுந்த சுபயோக பலாபலன்களை சுவீகரிக்க, மேற்சொன்ன இறை வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன்வர்ஷன் 

9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக