குறிப்பு : சனிதிசை, சனிபுத்தி, சனிஅந்தரம் மற்றும் சனிசூட்டசமம் நடைபெறும் சிம்மராசி அன்பர்களுக்கு மட்டும் இது பொருந்தும்.
சிம்ம ராசிக்கு 29.03.2025 அன்று இரவு 07:25க்கு கும்ப ராசியில் இருந்து மீனராசிக்கு பெயர்ச்சி அடையும் "சனிபகவான்" 03.06.2027 அன்று நள்ளிரவு 01:54 வரை, கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு பத்து மற்றும் பதினொன்றுக்கு அதிபதி என்ற நிலையில் சிம்ம ராசியினருக்கு அஷ்டம சனியாக தரும் பலன்கள் என்ன என்பதை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !
எதிர் வர்க்க கிரகமான சனி பகவான் சிம்ம ராசிக்கு ஆயுள் ஸ்தானமான 8ல் சஞ்சரிக்கு காலம் "அஷ்டம சனி" என்ற நிலையில் சிம்ம ராசி அன்பர்களுக்கு எதிர்பாராத சில திடீர் இழப்புகளை தனது வாழ்க்கை துணை, நண்பர்கள், ரத்த உறவுகள் மற்றும் சொந்த பந்தங்கள் மூலம் ஏற்படுத்த கூடும், தங்களது மேலதிகாரிகள் மூலம் வரும் எதிர்ப்புகளை தவிர்க்க இயலாது, இதனால் வரும் மனஅழுத்தம், மனப்போராட்டம் தங்களது சுய செயல்பாடுகளில் தடை தாமதங்களை தரக்கூடும் என்பதை அறிவுறுத்த கடமைப்பட்டு உள்ளோம், குறிப்பாக தங்களது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் இன்னல்கள் தங்களின் வாழ்க்கையில் பல பின்னடைவுகளை தரகூடும், மேலும் ஆண் நண்பர்கள் பெண் நண்பர்கள் எதிர்பாலினர் மூலம் வெகுவான பொருள் இழப்புகளை அல்லது நஷ்டங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரக்கூடும், உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட இன்னல்களில் இருந்து விடுபட மருத்துவ காப்பீடு மிக மிக முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு செயல்படுங்கள், வண்டி வாகனங்களில் பாதுகாப்பான பயணம் என்பது தங்களது வாழ்க்கையில் மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாகும், சிம்மராசி அன்பர்கள் அல்லது குழந்தைகள் நீர்நிலைகள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு செல்லும் பொழுது மிகுந்த பாதுகாப்புடன் சென்று வருவது அவசியமானது, உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை உடன் நடந்து கொள்ளவது சிறப்பு, நடைபெறும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது மேற்கண்ட இன்னல்கள் ஏற்படாமல் சுபயோக பலன்களே நடைமுறைக்கு வரும் என்பதால் சுய ஜாதக வலிமை உணர்ந்து வாழ்க்கையை வெற்றிகொள்ளுங்கள்.
சிம்மராசிக்கு வெளிநாடுகள் அல்லது வெளியூர் வழியில் இருந்து சில எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும், கூட்டு முயற்சி அல்லது கூட்டு தொழில் வழியில் இருந்து எதிர்பாராத சுபயோக பலன்கள் நடைமுறைக்கு வரும், மாற்று மதத்தினர் வழியிலான சுபயோக பலன்கள் அதிகரிக்கும், தெய்வீக காரியங்களில் ஆன்மீக வழிபாடுகள் வழியில் இருந்து ராஜயோக பலன்கள் நடைமுறைக்கு வரும், நிலவர்த்தகம் கனிம பொருட்கள் வழியிலான லாபங்கள் அதிகரிக்கும், ஆபத்தான நேரங்களில் நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள், பொருளாதார நிலைகளில் நல்ல முன்னேற்றமும், புதிய வீடு வண்டி வாகன யோகம் சார்ந்த விஷயங்களை முழுமையாக சுவீகரிக்கும் யோகம் உண்டு, வெகுநாளாக தடைபட்ட திருமணம் இனி சிறப்பாக நடைமுறைக்கு வரும், தாம்பத்திய வாழ்க்கை சிறப்படைய விட்டுக்கொடுத்து செல்லும் தன்மையை அதிகஅளவில் பின்பற்றி நலம் பெறுங்கள்.
தனது 6ம் பார்வையால் சிம்மராசி அன்பர்களுக்கு ஜென்ம ராசி எனும் 1ம் பாவகத்தை வசீகரிக்கும் ( சிம்ம ராசியை ) சனிபகவான் கலைத்துறை சார்ந்த வெற்றிகளை சிறப்பாக வாரி வழங்குவதுடன், புகழ்மிக்க பொறுப்புகளையும், அதிகார பதவிகளையும் சுவீகரிக்கும் யோகத்தை தருவது கவனிக்க தக்கது, மேலும் காதலில் வெற்றி காதல் திருமணம் கைகூடி வரும் யோகம், குறுகியகாலத்தில் பிரபல்ய யோகம் பெரும் அமைப்பு, தனது துறை சார்ந்த ஞானம் வழியிலான வெற்றிகள், செய்யும் தொழில் வழியில் இருந்து வரும் வெற்றிவாய்ப்புகள், முதலீடுகள் வழியில் இருந்து வரும் லாபம் அதிர்ஷ்டம், வாடிக்கையாளர்கள் மூலம் கிடைக்க பெரும் தொழில் வளர்ச்சி, புதிய சிந்தனை மற்றும் திட்டமிடுதல்கள் மூலம் பெரும் யோக வாழ்க்கை, திடீர் தன சேர்க்கை, பல தொழில் செய்யும் யோகம், வெளிநாடுகள் வழியில் திடீர் அதிர்ஷ்டம், சிறந்த நிர்வாக திறன்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுதல், புதிய நிறுவனம் மற்றும் புதிய தொழில் ஆரம்பிக்கும் யோகம், குலதெய்வ அனுகிரகத்தால் தொட்டதெல்லாம் வெற்றி பெரும் அமைப்பு என இனிவரும் காலங்களில் ஜென்ம ராசி வழியிலான நன்மைகள் அனைத்தும் தடையின்றி நடைமுறைக்கு வந்த போதிலும், அன்பு பாசம் ஆகிய விஷயங்களுக்கு ஏங்கி தவிக்கும் சூழ்நிலையை தரும், பெற்றோர்கள் கூட தங்களை சரியாக புரிந்துகொண்டு அன்பு பாராட்ட இயலாத சூழலைத்தரும், வாழ்க்கை துணை வழியிலான எதிர்ப்பு பெற்ற பிள்ளைகள் வழியிலான தொல்லைகள் அதிகரிக்கும், மனநிம்மதி தேடி அதிக அளவில் அலையும் நிலையை தரக்கூடும், எனவே குலதெய்வ வழிபாடும், பித்ரு வழிபாடும் முறையாக செய்யும் பொழுது சகல நிலைகளில் இருந்தும் நன்மைகளை தரும்.
தனது 7ம் பார்வையால் சிம்மராசி அன்பர்களுக்கு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தை வசீகரிக்கும் ( கன்னி ராசியை ) சனிபகவான் தனது வர்க்க வீடு என்பதால் சிம்மராசியினர் தனது சுய முயற்சி மற்றும் சுய தேடுதல் வழியிலான வருமான வாய்ப்புகளை தன்னிறைவாக பெரும் யோகம் காலம் இது, இதுவரை இருந்துவந்த நிதி சார்ந்த இன்னல்களில் இருந்து விடுபட்டு சரளமான பொருளாதரா வளர்ச்சியை பெரும் யோகத்தை தரும், தங்களின் பேச்சு மற்றும் வார்த்தைகளுக்கு மிகுந்த மதிப்பு மரியாதை உண்டாகும், செல்வாக்கும் சொல்வாக்கும் சமூகத்தில் மதிப்பு மிக்க மாமனிதாராக வலம்வரச்செய்யும், சொன்னதை செய்து வெற்றிகொள்ளும் யோகம் உண்டு, இருப்பினும் குடும்பத்தில் சில இன்னல்கள் இடர்பாடுகள் ஏற்படும், பொருளாதர தேவைகளை நிவர்த்தி செய்த போதிலும், குடும்ப உறுப்பினர்கள் ஏக்கங்களை நிவர்த்தி செய்ய இயலாத சூழல் ஏற்படும், வேலை நிமித்தம் காரணமாக குடும்பத்தை விட்டு வெளியில் சென்று ஜீவிக்கும் நிலை வரலாம் அல்லது பிரிந்து இருக்கும் சூழ்நிலையை தரக்கூடும், சுய முயற்சிகள் யாவும் வெற்றிமேல் வெற்றியை தரும், விவசாயம் மற்றும் பண்ணை தொழில்கள் தங்களுக்கு மிகுந்த லாபத்தை தரும், புதிய தொழில் செய்வதற்கான அத்துணை வாய்ப்புகளும் கைகூடி வரும், உணவு உடை இருப்பிடம் சார்ந்த தொழில் வழியில் அபரிவிதமான லாபம் உண்டாகும், அரசியல் ரீதியான முன்னேற்றம் மற்றும் அதிகார பதவிகளை மிக எளிதாக சுவீகரிக்கும் யோகத்தை சனிபகவான் இனிவரும் காலங்களில் பரிபூர்ணமாக வழங்குவார்.
தனது 10ம் பார்வையால் சிம்மராசி அன்பர்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தை வசீகரிக்கும் ( தனுசு ராசியை ) சனிபகவான், சிம்மராசி பெண்களுக்கு யோகம் நிறைந்த ஆண்வாரிசை வழங்குவதுடன், இதுவரை இருந்துவந்த ஏக்கங்கள் யாவற்றையும் பரிபூரணமாக நிறைவேற்றுவார், மேலும் மாணவர்களுக்கு தாங்கள் விரும்பிய கல்வியை தேர்வு செய்யும் யோகத்தையும், உயர்கல்வி அல்லது பட்டைய படிப்பு சார்ந்த வெற்றிகளை முழுமையாக சுவீகரிக்கும் யோகத்தை தருவார், கற்ற கல்வி வழியிலான தொழில் அல்லது வேலைவாய்ப்பை பெரும் யோகம், புது முயற்சிகள் சார்ந்த நிலைகளில் வெற்றிவாய்ப்பு, ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட முன்னேற்றம், கனவுகளும் லட்சியங்களும் நிறைவேறும் யோகம், எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் மூலம் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்லும் அமைப்பு, சமூக அந்தஸ்து, சமுதாய பெரிய மனிதர்கள் வழியிலான ஆதரவு, பொருளாதார உதவிகள், நீண்ட கால லட்சியங்களை வெற்றிகொள்ளும் யோகம், வெளியூர் வெளிநாடு பயணங்கள் வழியிலான லாபங்கள், ஏற்றுமதி இறக்குமதி தொழில் சார்ந்த அமைப்புகளில் சிறப்பான முன்னேற்றம், மருத்துவம் மருத்துவ துறை சார்ந்த கல்வியால் அதீத லாபம், தைரியமாக அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றி பெரும் யோகம், கூட்டு முயற்சி கூட்டு தொழில் வழியிலான லாபங்கள், எதிர்ப்புகள் யாவும் தங்களுக்கு சாதகமாக மாரி சுபயோகங்களை வழங்கும் அமைப்பு என மிகுந்த நன்மைகளை தரும்.
விபரீத ராஜயோகம் என்பது தங்களுக்கு இனிவரும் காலங்களில் எதிர்பாராத நன்மைகளையும், அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் முழுமையாக வழங்கும், பொதுகாரியங்களில் ஈடுபடும் பொழுது சற்று விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம், இதுவரை இருந்துவந்த தடைகள் நீங்கும், தயக்கங்கள் நீங்கி தெளிவு பிறக்கும், அறிவுபூர்வமான நடவடிக்கைகள் தங்களின் வாழ்க்கையில் ஓர் புதிய ஆரம்பத்தை தரும், மனதளவில் இருந்த பாதிப்புகள் நீங்கி, மனதைரியம், சுயசிந்தனை, சிறந்த திட்டமிடுதல்கள் தரும் வெற்றிகளை சுவீகரிக்கும் யோகம் உண்டாகும்.
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக