சனி, 17 நவம்பர், 2012

ஜாதகத்தில் செவ்வாய் தோஷ நிர்ணயம்,செவ்வாய் பகவான் வழங்கும் நன்மை ! தீமை ? பகுதி 6


 

பொதுவாக சுய ஜாதக அமைப்பில் லக்கினத்திற்கு 2 ,4 ,7 ,8 ,12  பாவகங்களில் செவ்வாய் இருப்பின், அது செவ்வாய் தோஷம் என்று நிர்ணயம் செய்து , குறிப்பிட்ட ஜாதக அமைப்பை சார்ந்தவர்கள் இதே போன்றே செவ்வாய் லக்கினத்திற்கு 2 ,4 ,7 ,8 ,12  பாவகங்களில் இருக்கும் ஜாதகத்தை சார்ந்தவரையே திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்றும் பல ஜோதிடர்கள் தீர்மானம் செய்கின்றனர் , இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பற்றி இந்த பதிவில் சிந்திப்போம் . மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் தரும் நன்மை தீமையை பற்றி விரிவாக 12 லக்கினத்தை அடிப்படையாக வைத்து  பார்ப்போம் . 

ஐந்தாம் பகுதியின் தொடர்ச்சி ...


கும்ப லக்கினம் :

2 ம் பாவகம்  மீனத்தில் அமரும் செவ்வாய் , லக்கினம் மற்றும் ஜீவன ஸ்தானம் , சகோதர ஸ்தானம் என்ற அமைப்புகளுக்கு சற்றே சிரமத்தை தர கூடும் , தனது சகோதர வழியில் இருந்து சிறு சிறு இன்னல்களையும் , கருத்து வேறுபாட்டினையும் , மன ரீதியான போராட்டத்தையும் தர கூடும் , மேலும் எடுக்கும் முயற்ச்சிகளில் பல தடைகளையும் , தாமதத்தையும் தர கூடும் , நடை பெரும் நிகழ்வுகள் ஜாதகரின் மன நிலையையும் , உறக்கத்தையும் வெகுவாக பாதிக்கும் , மேலும் தனது தகப்பனார் வழியில் இருந்து அதிக சிரமங்களை எதிர்கொள்ள  வேண்டி வரும் , ஜீவன வழியில் பல சிரமங்களை அனுபவிக்க வேண்டி வரும் , செய்யும் தொழில்களில் அடிக்கடி தடைகளும் , முன்னேற்றம் அற்ற நிலையம் உருவாக  வாய்ப்பு அதிகம் உண்டு , ஜாதகர் நினைக்கும் காரியங்கள் அனைத்தையும் நடை முறையில் கொண்டு வர பல சிரமங்களை அனுபவிக்க வேண்டி வரும் , தன்னம்பிக்கை  வெகுவாக குறையும் , பயணங்களால் அதிக இன்னல்களுக்கு ஜாதகர் ஆளாகும் சூழ்நிலை வரலாம் , ஜாதக அமைப்பில் லக்கினத்திற்கு களத்திர பாவகம் நல்ல நிலையில் இல்லை எனில் ஜாதகர் சுய தொழில் மற்றும் கூட்டு தொழில் செய்வதால் தோல்வியை தழுவ வேண்டி வரும் , கும்ப லக்கினத்திற்கு 2 ல் மீனத்தில் அமரும் செவ்வாய்  லக்கினம் , சகோதர ஸ்தானம் , ஜீவன ஸ்தானம் ஆகிய அமைப்பிற்கு தீமையான பலனையும் , குடும்ப ஸ்தானம் , வருமானம் போன்ற அமைப்பிற்கு நன்மையான பலனையும் வாரி வழங்குவார் , எனவே செவ்வாய் மீனத்தில் அமர்வது கும்பலக்கினத்திர்க்கு அவ்வளவு நன்மையை தர வாய்ப்பில்லை .

4 ம் பாவகம் ரிஷபத்தில் அமரும் செவ்வாய் , சகோதர ஸ்தானத்திற்கும் , நான்காம் பாவகத்திர்க்கும் சில சிரமங்களை தந்த போதிலும் , லக்கினம் , ஜீவன ஸ்தான அமைப்பிற்கு மிகுந்த யோக  பலனையே வாரி வழங்குவார் , ஜாதகர் சுய தொழில் செய்வதால் வெற்றி மேல் வெற்றி கிட்டும் , நல்ல வாழ்க்கை துணை அமையும் , தனது தகப்பனார் வழியில் இருந்து  அதிக நன்மைகளை ஜாதகர் பெறக்கூடும் , ஜாதகர் இயற்கையாகவே வலி தாங்கும் உடல் அமைப்பை பெற்றிருப்பார் , செய்யும் தொழில் திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் வெற்றி பெறும் யோகம்  உண்டாகும் , பொருளாதார வசதியில்  ஜாதகருக்கு எவ்வித குறையும்  இருக்காது, நீண்ட ஆயுளை வாரி வழங்கி விடும் , ஆனால் உடலில் வடு தழும்பு ஏற்ப்படும்  அளவிற்கு காயத்தை உண்டு பண்ணும் , பயணங்களில் அதிக பாதுகாப்பாக இருப்பது ஜாதகருக்கு நன்மையை தரும் , குறிப்பாக வண்டி வாகனம் தனது பெயரில் வைத்திருப்பதை தவிர்ப்பது நல்லது , மேலும் சொந்தமாக வீடு கட்டும் முன் சரியான ஜோதிட ஆலோசனை பெற்று வீடு கட்டுவது நல்லது , ஜாதகருக்கு ஏற்ற சரியான திசை  அமைப்பில்  வீடு அமைய வில்லை எனில் ஜாதகர் பாடு படு திண்டாட்டமாக அமைந்துவிடும் , மேலும் பயணங்களில் ஜாதகருக்கு பல இன்னல்களே ஏற்ப்படும் , ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு செய்யும் தொழிலாக ஜாதகர் தேர்ந்தெடுப்பது நல்லது , ஆக கும்ப லக்கினத்திற்கு நான்கில் அமரும் செவ்வாய் , லக்கினம் , ஜீவனம் ஆகிய அமைப்பிற்கு நன்மையையும் , மூன்றாம் பாவகம் , நான்காம் பாவக அமைப்பிற்கு தீமையும் தரும் .

7 ம் பாவகம் சிம்மத்தில் அமரும் செவ்வாய் லக்கினம் , மூன்றாம் பாவகம் , களத்திர பாவகம் , ஜீவன ஸ்தானம் ஆகிய அனைத்து அமைப்பிற்கு 100 சதவிகித , நன்மையே வாரி நிச்சயம் வாரி வழங்கும் , ஜாதகர் எடுக்கும் அனைத்து காரியங்களும் வெற்றி மேல் வெற்றி கிட்டும் , முயற்சிகளில் நல்ல வெற்றி வாய்ப்பை தரும் , சகோதர அமைப்பில் இருந்து ஜாதகர் அதிக நன்மைகளை பெரும் யோகம் உண்டாகும் , சக்தி வழிபாட்டில் சிறந்து விளங்கும் தன்மை உண்டாகும் , இறை அருளின் ஆற்றல் ஜாதகருக்கு எப்பொழுதும் நிறைந்து நிற்கும் , மக்கள் ஆதரவு ஜாதகருக்கு பரிபூரணமாக கிடைக்கும் , ஜாதகர் நினைப்பதை நடத்தி காட்டும் ஆற்றல் இயற்கையாக அமைந்துவிடும் , தனது வாழ்க்கை துணையின் வழியில் இருந்து சகல யோகமும் ஜாதகர் நிச்சயம் பெறுவார் , மேலும் தனது தொழில் முறை கூட்டாளிகள் , நண்பர்கள் , பொதுமக்கள் ஆதரவு என ஜாதகருக்கு அனைத்து வழியில் இருந்தும் நன்மையான பலன்களே நடைபெறும் , கும்ப லக்கினத்திற்கு 7 ல் சிம்மத்தில் அமரும் செவ்வாய் பகவான் , லக்கினம் , மூன்றாம் பாவகம் , களத்திர பாவகம் , ஜீவன ஸ்தானம் என்ற அமைப்பிற்கு 100 சதவிகித நன்மைகளை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை .

8 ம் பாவகம் கன்னியில் அமரும் செவ்வாய் , லக்கினம் , மூன்றாம் பாவகம் , எட்டாம் பாவகம் , ஆகிய அமைப்பிற்கு தீமையன பலன்களையும் , ஜீவன ஸ்தானத்திற்கு 200 சதவிகித நன்மை மற்றும் வெற்றியை வாரி வழங்கும் , ஜாதகர் எடுக்கும் முயற்ச்சிகள் சில நேரங்களில் தோல்வியை தரக்கூடும் , தனது சகோதர அமைப்பில் இருந்து அதிக இன்னல்களை எதிர்கொள்ள வேண்டி வரும் , தொலை தொடர்பு விஷயங்களில் தோல்வியை தரும் , ஜாதகர் சில நேரங்களில் எதிர்பாராத இழப்புகளை தவிர்க்க இயலாது , உடல் ரீதியான தொந்தரவுகளும் ஜாதகரை அதிகமாக பாதிக்க கூடும் , குறிப்பாக வயிறு சம்பந்தபட்ட பிரச்சனைகளால் ஜாதகர் அதிகம் பதிக்க கூடும் , உடலில் சத்து பற்ற குறையினால் உடல் ரீதியான பிரச்சனைகள் அடிக்கடி வர கூடும் , இலக்கின அமைப்பிற்கு ஜாதகருக்கு அதிக கோப உணர்வை தூண்டி விடும் , இதனால் மன ரீதியான பிரச்சனைகளையும் ஜாதகர் அனுபவிக்க வேண்டி வரும் , ஆனால் ஜீவன வழியில் சகல நன்மைகளையும் வாரி வழங்கும் , செய்யும் தொழில் அடிக்கடி நல்ல முன்னேற்றத்தை தரும் , தொழில் அபிவிருத்தி என்பது ஜாதகருக்கு  வாழ்நாள் முழுவதும் இருந்துகொண்டே இருக்கும் , அல்லது அரசு துறையில் பணியாற்றும் யோகம் உண்டாகும் , பதவியில் அடிக்கடி உயர்வினை பெரும் யோகம் உண்டாகும் , வருமானம் என்பது ஜாதகருக்கு எப்பொழுதும் நிற்காமல் வந்துகொண்டே இருக்கும் , கும்ப லக்கினத்திற்கு கன்னியில் அமரும் செவ்வாய் ஜீவன ஸ்தானத்திற்கு மட்டும்  அதிக நன்மைகளை செய்வார் .

12 ம் பாவகம் மகரத்தில் அமரும் செவ்வாய் லக்கினம், சகோதர ஸ்தானம் ஜீவன ஸ்தானம் 12 ம் பாவகம் ஆகிய அனைத்து பாவாக அமைப்பிற்கும் நன்மைகளையே வாரி வழங்குவார், இலக்கின அமைப்பிற்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும் , சிறப்பான வளரும் சூழ்நிலையையும் , கல்வியில் நல்ல முன்னேற்றத்தையும் , சிறந்த நிர்வாக திறனையும் , அரசு பணியில் சிறப்பான முன்னேற்றத்தையும் வாரி வழங்கும் , மேலும் ஜாதகரின்  முயற்ச்சிகள் யாவும் வெற்றி மேல் வெற்றியை தரும் , மேலும் சிறப்பான தொழில் முன்னேற்றத்தை வாரி வழங்கும் , நல்ல சொத்து சுக சேர்க்கை ஜாதகருக்கு உண்டாகும் , தன்னம்பிக்கை மிகும் , ராணுவம் , காவல் துறை , அரசியல் , அரசு நிர்வாக பணிகளில் சிறந்து விளங்கும் தன்மை இந்த செவ்வாய் பகவானால் ஏற்ப்படும் , நல்ல மன நிம்மதியான வாழ்க்கை அமையும் , நல்ல உறக்கமும் சிறப்பாக சிந்திக்கும் ஆற்றலும், ஜாதகருக்கு இயற்கையாக அமைந்து விடும் , உண்மையில் கும்ப இலக்கின ஜாதக அமைப்பை பெற்றவர்களுக்கு செவ்வாய் பகவான் மகரத்தில் 12 ல் அமர்வது சகல நன்மைகளையும்  வாரி வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.


மீன லக்கினம் :

 2 ம் பாவகம் மேஷத்தில் அமரும் செவ்வாய் இரண்டாம் பவகத்தை 100 சதவிகிதம் கெடுத்து விடுவார் , இங்கே செவ்வாய் ஆட்சி பெற்றாலும் , இரண்டாம் பாவகத்திர்க்கு கடுமையான பாதிப்பையே தரும் , ஜாதகரின் பேச்சு பல இன்னல்களை தரும் , வருமானம் மற்றும்  குடும்பம் சிறப்பாக அமைய வாய்ப்பு ரொம்ப குறைவு , மேலும் இலக்கின அமைப்பில் இருந்து உடல் ரீதியான சிறு சிறு பிரச்சனைகளை கொடுக்க கூடும் , மேலும் வருமானம் என்பது எவ்வளவு வந்தாலும் பற்றா குறையான நிலையையே தரும் , குடும்ப வாழ்க்கையில் ஜாதகர் சற்றே கவனாமா இல்லையெனில் பல இன்னல்களை சந்திக்க வேண்டி வரும் , மன நிம்மதி கெடும் , ஆனால் பொது வாழ்க்கையில் ஜாதகருக்கு அபரிவிதமான வெற்றியை தரும் , பொதுமக்கள் ஆதரவினால் நல்ல பதவிகளை அலங்கரிக்கும் தன்மை ஏற்ப்படும் , மேலும் ஜாதகரின செயல்பாடுகள் யாவும் மக்களிடம் நற்ப்பெயரை  பெற்று தரும் , அரசியலில் திடீர் என சிறப்பான பதவிகளை பெற்று தரும் யோகம் உண்டாகும் , மீன லக்கினத்திற்கு 2ல் மேஷத்தில் அமரும் செவ்வாய் பொதுவாழ்க்கையில் வெற்றியை  தந்தாலும் , குடும்ப வாழ்க்கையில் பல இன்னல்களை தரும் , இலக்கின அமைப்பிற்கு தீமையே செய்யும் .

4 ம் பாவகம் மிதுனத்தில் அமரும் செவ்வாய் , லக்கினம் மற்றும் நான்காம் பாவக அமைப்பிற்கு மிகவும் சிறப்பான நன்மைகளை வழங்கும் , நல்ல குடும்பம் , சொத்து சுக சேர்க்கை , நல்ல வசதி மிக்க வண்டி வாகனம் , அனைத்து வசதிகளும் கொண்ட வீடு , தனது அறிவாற்றல் மூலம் சகல வசதிகளையும் பெரும் ஆற்றல் , கமிஷன் , ஒப்பந்த  தொழில்களில் வெற்றியையும் , புதிய அறிமுக தொழில்களில் வெற்றியை தரும் , இரு சக்கர , நான்கு சக்கர வாகனங்களில் இருந்து நல்ல வருமானம் , சுகமான வாழ்க்கை முறை , விவசயம் பண்ணை தொழில்கள் செய்வதால் நல்ல முன்னேற்றமும் , வெற்றியும் கிடைக்கும் , ஆனால் பாக்கிய ஸ்தான அமைப்பிற்கு அதிக தீமையான பலன்களையே வாரி வழங்கும், சரியான வாழ்க்கை பாதையை தேர்ந்தெடுக்க வில்லை என்றால் ஜாதகர் அதிக அவ பெயரை சந்திக்க வேண்டி வரும் , பொது வாழ்க்கையில் தோல்வியை தரும், மக்கள் ஆதரவின்மையை தரும் , எனவே ஜாதகர் தான் உண்டு தன் வேலை உண்டு இருப்பது சகல நன்மைகளையும் வழங்கும் .

7 ம் பாவகம் கன்னியில் அமரும் செவ்வாய் , இலக்கின அமைப்பிற்கும் , ஜீவன ஸ்தான அமைப்பிற்கும் 100 சதவிகித நன்மையை தரும் , ஆனால் களத்திர ஸ்தான அமைப்பிற்கு அதிக கெடுதலை  தரும் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் , செய்யும் காரியங்களில் வெற்றி , தன்னம்பிக்கை , சுய கட்டுப்பாடு , ஒழுக்கம் , தெளிவான சிந்தனை ஆகியவற்றை கொடுத்தாலும்  , களத்திர வழியில் இருந்து அதிக இன்னல்களை தரும் , நண்பர்களாலும் , பொதுமக்களாலும் அதிக இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலை உண்டாகும் , பொது வாழ்க்கையில் அதிக அவ பெயரை பெற்று தரும் , வெளிநாடுகள் , வெளியூர் செல்வது ஜாதகருக்கு அவ்வளவு நன்மையை தர வாய்ப்பு சிறிதும் இல்லை சொந்த ஊரில் நல்ல வாழ்க்கையை தரும் , ஆனால் வெளியூரில் கடுமையான தீமையை தரும் இழப்புகளை தவிர்க்க இயலாது , முன்னேற்றமும் தடை படும் , மக்களை தொடர்பு படுத்தி செய்யும் தொழில்களில் அதிக இடையூறுகளை தர கூடும் , எனவே மீன இலக்கின ஜாதகருக்கு கண்ணியில் அமரும் செவ்வாய் லக்கினம் , ஜீவன ஸ்தான அமைப்பிற்கு அதிக நன்மைகளையும் , களத்திர பாவக அமைப்பிற்கு அதிக தீமையையும் தர கூடும் .

8 ம் பாவகம் துலாம் ராசியில் அமரும் செவ்வாய் மீன இலக்கின ஜாதகருக்கு குடும்ப ஸ்தான அமைப்பிற்கு மிகவும் சிறப்பான பலன்களை வாரி வழங்கும் , கை நிறைவான வருமானமும்  அழகான குடும்பமும் அமையும் , சிறப்பான அடிமை தொழில் அமைவத்தர்க்கு உண்டான வாய்ப்பை தரும் , எவ்வித சிரமமும் இன்றி நிறைய வருமானத்தை வாரி வழங்கும் , தனது அறிவாற்றலின் காரணமாக ஜாதகர் அதிக யோக பலன்களை அனுபவிக்கும் தன்மை உண்டாகும் , நிலையான வருமானம் ஜாதகருக்கு சிறப்பாக அமைந்து விடும்  இதில் எவ்வித சந்தேகமும் இல்லை , உடல் ரீதியான தொந்தரவுகள் ஜாதகருக்கு கடுமையாக பாதிக்கும் , சரியான வாழ்க்கை துணை ஜாதகர் தேர்ந்தெடுக்க வில்லை எனில்  ஜாதகரின் வாழ்க்கை பல சிரமங்களை சந்திக்க வேண்டி வரும் , குடும்ப ஸ்தான அமைப்பிற்கு மட்டும் நன்மை தரும் செவ்வாய் , லக்கினம் , பாக்கிய ஸ்தானம் ஆகிய அமைப்பிற்கு  அதிக தீமையை வழங்குவார் , மற்றவர்கள் விஷயத்தில் ஜாதகர் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது , மற்றவர் விஷயங்களில் ஜாதகர் தலையிட்டால் ஜாதகரின் வாழ்க்கை  கேள்வி குறியாக மாறிவிட வாய்ப்பு அதிகம் .

12 ம் பாவகம் கும்பத்தில் அமரும் செவ்வாய் மீன இலக்கின அமைப்பிற்கு லக்கினம் , பாக்கியம் , 12 ம் பாவகம் ஆகிய மூன்று அமைப்பிற்கும் சகல நன்மைகளையும் வாரி வழங்குவார் , ஜாதகர் நல்ல வளரும் சூழ்நிலை , கல்வியில் முன்னேற்றம் , உடல் ஆரோக்கியம் , தொழில் முறையில் நல்ல வெற்றி , கூட்டு தொழில் செய்தால் நல்ல லாபம் , மன நிம்மதியான வாழ்க்கை முறை , சிறப்பு மிக்க பதவி , மக்கள் செல்வாக்கு , அளவில்லா சொத்து சுகம் வண்டி வாகன யோகம் , நினைத்ததை முடிக்கும் ஆற்றல் , ஆன்மீக வாழ்க்கையில்  மிக பெரிய வெற்றி , மக்கள் ஆதரவின் மூலம் சமுதயத்தில் பல மாற்றங்களை கொண்டுவரும் யோகம் , தனது சுய சிந்தனையால் நீடித்த நன்மை தரும் காரியங்கள்  , பரந்த மனப்பான்மை , தியாக குணம் , வாழ்க்கையில் எவரிடமும் அடிபணியாத நிலை , தனக்கென்று தனி பாதையை அமைத்துக்கொண்டு அதில் வெற்றி காணுதல்  , என ஜாதகருக்கு கும்பத்தில் அமரும் செவ்வாய் சகல நன்மைகளையும் வாரி வழங்குவார் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

1 கருத்து: