சனி, 6 ஜூலை, 2013

சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் வலிமை பெற்று இருந்தும், ஜாதகருக்கு திருமணம் நடைபெறாத நிலை ஏன்?



ஒருவருடைய சுய ஜாதகத்தில் பாவகங்கள் சிறப்பான நிலையில் இருக்கும் , ஆனால் ஜாதகர் அதற்குண்டான நன்மையான பலன்களை சிறிதும் அனுபவிக்க இயலாத நிலையில் இருப்பார் , எடுத்துகாட்டாக கிழ்கண்ட ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் .



லக்கினம் : கடகம் 
ராசி : கடகம் 
நட்சத்திரம் : பூசம் 4ம் பாதம் 

சுய ஜாதக அமைப்பின் படி ஜாதகருக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகமும் , களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமும் மிகவும் நல்ல நிலையில் இருக்கின்றன.

ஆனால் தற்பொழுது நடக்கும் சுக்கிரன் திசை ( 17/01/2007 முதல் 17/01/2027 வரை ) ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் எனும் 5ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200 சதவிகித தீமையான பலன்களை தந்துகொண்டு இருக்கிறது , ஒருவருடைய ஜாதகத்தில் இளம் வயதில் பாதக ஸ்தானத்தின் பலன் நடை பெரும் பொழுது சம்பந்த பட்ட பாவக வழியில் இருந்து ஜாதகர் அதிக இன்னல்களை அனுபவிக்க வேண்டி வரும் , குறிப்பாக இந்த ஜாதகருக்கு 11ம் பாவகம் என்பது காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷப ராசியாக வருவது ஜாதகருக்கு குடும்பம் என்ற அமைப்பில் இருந்தும், வருமானம் என்ற அமைப்பில் இருந்தும் , வாக்கு என்ற அமைப்பில் இருந்தும்  ஜாதகருக்கு 200 சதவிகித தீமையை தரும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.

பொதுவாக இவரது ஜாதகத்தை பாரம்பரிய முறையில் ஜோதிட பலன் கண்ட  ஜோதிடர்களின் கருத்து, சுக்கிரன் திசை மிகப்பெரிய முன்னேற்றத்தை வாரி வழங்கும் எனவே சுக்கிரன் திசையில் திருமணம் நடக்கும் , அதுவரை ஜாதகர் திருமணம் செய்யாமல் இருந்து அதற்க்கு பிறகு திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கையில் ஜாதகர் கொடி கட்டி பறப்பார் என்று தெரிவித்துள்ளனர், ஆனால் சுக்கிரன் திசை ஆரம்பித்த உடனே ஜாதகருக்கு செய்து கொண்டிருந்த வேலை பறிபோனது , வருமானம் இல்லாத சூழ்நிலையை தந்தது , இதன் காரணமாக ஜாதகரின் வாழ்க்கை வெகுவாக பாதிக்க ஆரம்பித்தது , கேது திசையில் ஜாதகர் பாதக ஸ்தானத்தின் பலனை அணிபவித்த போதிலும் தனது பூர்வீகத்தில் குடியிருந்து கொண்டு ஓரளவு நன்றாக இருந்தார்.

சுக்கிரன் திசை,சுக்கிரன் புத்தி  ஆரம்பித்தது பூர்வீக ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பிடத்தை விட்டே வெளியே துரத்தியது, வருமானத்தில் சிக்கல்களை உருவாக்கியது , பொருளாதார ரீதியான இன்னல்களை வாரி வழங்க ஆரம்பித்தது , ஜாதகரின் பேச்சே ஜாதகருக்கு எதிராக திரும்பியது 19/05/2010 வரை, அதன் பிறகு ஆரம்பித்த சூரியன் புத்தி ஜாதகருக்கு நல்ல வருமானத்தை தந்தது, காரணம் சூரியன் புத்தி 2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையான பலனை நடத்தியதால் இது சாத்தியம் ஆயிற்று, இந்த காலத்தில் ஜாதகருக்கு மன வாழ்க்கையை அமைத்து தர பெற்றோர்கள் எடுத்த முயற்சிகள் நல்ல முன்னேற்றம் கண்டது , இருப்பினும் ஜாதகர் அதை தவிர்த்தார் எனவே இந்தகாலத்தில் அமையவேண்டிய திருமண வாழ்க்கை தடை பெற ஜாதகரே காரணமாக இருந்தார் .

தற்பொழுது நடக்கும் சந்திரன் புத்தியும் ஜாதகருக்கு களத்திர ஸ்தான பலனை தருவதற்காக , பல வாய்ப்புகளை வாரி வழங்கியது இருப்பினும் ஜாதகர் அனைத்தையும் தவிர்த்தார் , இதற்க்கு காரணம் ஜாதகர் ஒரு பெண்ணை விரும்பியதே, முடிவில் அந்த பெண்ணும் வேறொருவருடன் திருமணம் செய்துகொண்டு இவரை வெகுவாக ஏமாற்றி விட்டார் , இதை ஜோதிட ரீதியாக ஆராயும் பொழுது திசையை மீறி புத்திகள் எவ்வித நன்மையான பலன்களையும்  வழங்க இயலவில்லை என்பது தெளிவாக தெரிகிறது , 200 சதவிகித தீமையை திசை செய்யும் பொழுது , 30 சதவிகித நன்மையை புத்தி செய்தால் ஜாதகருக்கு பெரிய நன்மைகள் எதுவும் நடை பெறுவதில்லை, அப்படியே நன்மை நடந்தாலும் அது ஜாதகருக்கு பெரிதாக தெரிவதில்லை நல்ல மாற்றங்களை வாழ்க்கையில் ஏற்படுத்துவதில்லை .

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் வலிமை பெற்று இருந்த பொழுதிலும் , ஜாதகரின் இளமை பருவத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானத்தின் பலனை ஏற்று சுக்கிர திசை பலனை தராததால் (சுக்கிர திசை தந்தது 5ம் வீடு பாதக ஸ்தான பலனை ) ஜாதகருக்கு 2,7ம் பாவக நன்மையை சிறிதும் அனுபவிக்க இயலவில்லை, எனவே ஒருவருடைய சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது மட்டுமே போதாது , சரியான நேரத்தில் சரியான வயதில், நல்ல நிலையில் இருக்கும் பாவகத்தின் பலனை, நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து நன்மை மற்றும் யோக வாழ்க்கையை பெற முடியும், மேலும் கேட்சார கிரகங்களின் ஆதரவும்  இருந்தால் மிகப்பெரிய நன்மைகளை ஜாதகர் நிச்சயம் பெற முடியும்  என்பது ஜாதக ரீதியான உண்மை .

இதை தவிர்த்து சுபகிரகங்களின் திசை,புத்திகள் நன்மை செய்யும் என்றும், அசுப கிரகங்களின் திசை புத்திகள் தீமை செய்யும் என்றும் பலன் காணுவது ஜோதிட கணிதத்தை முறையாக அறியாதவர்கள் சொல்லும் ஒரு வாய் ஜாலமே என்றால் அது மிகையாகாது .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக