திங்கள், 3 பிப்ரவரி, 2014

நான்காம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் பெரும் சுக வாழ்வும், வசதி மிக்க இருப்பிடமும்!




சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு நான்காம் பாவகமான சுக ஸ்தானம் வலிமை பெரும் பொழுது, ஜாதகர் பெரும் பொழுது ஜாதகர் சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து பெரும் நன்மைகளையும், சுப யோக வாழ்க்கையை பற்றி இந்த பதிவில் ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!

  சுய ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் வீடான கடகம் வலிமை பெரும் பொழுதும், லக்கினத்திற்கு 4ம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் முதலில் தனது தாய் வழியில் இருந்து நிறைவான யோகத்தை பெறுபவராக இருப்பார், குறிப்பாக சிறு வயது முதல் தாயின் அரவணைப்பில் வளரும் சூழ்நிலையை தரும், அன்பு பாசம் நிறைந்த குழந்தை பருவத்தை ஜாதகருக்கு தந்துவிடும், "எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே" என்ற புலமை பித்தன் வரிகளுக்கு பொருத்தமாக, ஜாதகர் நல்ல குணங்களை பெறுவதற்கும், பரந்த மனதை பெறுவதற்கும் இந்த நான்காம் பாவகமே முழு காரணமாக அமைகிறது.

 பொதுவாக ஒருவரின் சுய ஜாதகத்தில் நீர் ராசிகள் வலிமை பெரும் பொழுது ஜாதகரின் மனம் மிகவும் நல்ல நிலையில் இருக்கும், சிறந்த நல்ல எண்ணங்களால் சூழப்பட்ட சூழ்நிலையில் வளரும் தன்மையை தரும், பறந்து விரிந்த மன ஆற்றலின் காரணமாக ஜாதகர் நினைக்கும் எண்ணங்கள் யாவும் நிறைவேறும், ஜாதகர் மன ஆற்றல் மிக சிறப்பாக செயல் படும், தன்னம்பிக்கை மற்றும் சுய கட்டுப்பாட்டை நிறைவாக நிலையாக தரும்.

 ஆக சுய ஜாதகத்தில் நான்காம் பாவகம் மேற்கண்ட நன்மைகளை தரும் பொழுது ஜாதகருக்கு பொருளாதார முன்னேற்றம் என்பது ஜாதகரின் மன இயல்புக்கு ஏற்றவாறு அமைந்துவிடும், பொதுவாக நான்காம் பாவகம் சுக ஸ்தானம் என்று வர்ணிக்க படுகிறது, எங்கே சுகம் நிறைந்து நிற்கும் எங்கு மனம் ஒரு நிலை படுகிறதோ அங்கெ சுகம் நிறைந்து நிற்கும் என்பதற்கு இணங்க ஜாதகரின் நான்காம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் மனம் ஒரு நிலையாக ஒடுங்கி நிற்கும், ஒரு நிலையான மனம் சகல வெற்றிகளுக்கும் காரணமாக அமையும், நினைத்ததை அனைத்தும் பெரும் யோகத்தை தரும்.

சுய ஜாதகத்தில் நான்காம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் முதலில் நல்ல தாய் அன்பையும் அரவணைப்பையும் பெரும் யோகத்தை தரும், இதனால் ஜாதகரின் மனம் பண்பட்டதாக மாறும், அடுத்து ஜாதகரின் வளரும் சூழ்நிலையில் நல்ல நண்பர்களின் ஆலோசனையை பெரும் யோகத்தை தரும், இளமை பருவத்தில் சிறந்த கல்வியை பெரும் யோகத்தை வாரி வழங்கும், தனது வளரும் காலத்தில் அடிப்படை வசதிகளை குறைவின்றி பெரும்  யோகத்தை தரும், கேட்க்கும் பொருட்கள் யாவும் ஜாதகருக்கு தடையின்றி கிடைக்கும்.

 மனிதனுக்கு அடிப்படை தேவைகளில் முதன்மையானது, குடியிருப்பதற்கு தேவையான நல்ல வசதி மிக்க ஒரு வீடு, ஜாதகத்தில் நான்காம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகருக்கு இயற்கையாக சகல வசதிகளும் நிறைந்த வீடு சிறு வயதிலேயே அமைந்துவிடும், இதன் காரணமாக ஜாதகருக்கு வளரும் பருவத்தில் கல்வியிலே அல்லது சுகமான வாழ்க்கையிலோ எவ்வித தடையும் இன்றி நிறைவான சுக வாழ்வை தங்கு தடையின்றி தரும், அடிப்படையில் நல்ல வீடு ஒருவருக்கு அமைந்துவிட்டால் ஜாதகருக்கு சகல தேவைகளும் பூர்த்தியாகும்.

 " இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே " என்ற கவிஞரின் வரிகளுக்கு ஏற்ப, சுக ஸ்தானம் வலிமை பெரும் பொழுது நல்ல வசதி மிக்க வீடு அமைந்து, ஜாதகரின் வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்க ஆரம்பித்து விடும்.

 ஒருவரின் சுய ஜாதகத்தில் நான்காம் பாவகம் லக்கினத்துடன் தொடர்ப்பு பெரும் பொழுது ஜாதகருக்கு "கிழக்கு திசை" வாயிற்படி கொண்ட வீட்டில் குடியிருந்தால் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் உண்டாகும், வாழ்க்கையில் சகல செல்வங்களையும் பெரும் யோகத்தை தரும்.
 ஒருவரின் சுய ஜாதகத்தில் நான்காம் பாவகம் சுக ஸ்தானமான 4ம் வீட்டுடன் தொடர்பு  பெரும் பொழுது ஜாதகருக்கு "வடக்கு திசை" வாயிற்படி கொண்ட வீட்டில் குடியிருந்தால் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் உண்டாகும், வாழ்க்கையில் சகல செல்வங்களையும் பெரும் யோகத்தை தரும்.

ஒருவரின் சுய ஜாதகத்தில் நான்காம் பாவகம் களத்திர ஸ்தானமான 7ம் வீட்டுடன் தொடர்பு  பெரும் பொழுது ஜாதகருக்கு "மேற்கு  திசை" வாயிற்படி கொண்ட வீட்டில் குடியிருந்தால் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் உண்டாகும், வாழ்க்கையில் சகல செல்வங்களையும் பெரும் யோகத்தை தரும்.

ஒருவரின் சுய ஜாதகத்தில் நான்காம் பாவகம் ஜீவன ஸ்தானமான 10ம் வீட்டுடன் தொடர்பு  பெரும் பொழுது ஜாதகருக்கு "தெற்கு திசை" வாயிற்படி கொண்ட வீட்டில் குடியிருந்தால் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் உண்டாகும், வாழ்க்கையில் சகல செல்வங்களையும் பெரும் யோகத்தை தரும்.

 எந்த ஒரு ஜாதகத்திலும் சுக ஸ்தானமான நான்காம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நன்மை தருவதில்லை, குறிப்பாக குடியிருக்க நல்ல வீடு அமைவதில்லை, நல்ல வண்டி வாகன யோகத்தை தருவதில்லை, சொத்து சுக அமைப்பை தருவதில்லை, இதே போன்று சுக ஸ்தானம் 5,6,8,12ம் வீட்டுடன் தொடர்பு பெறுவதும் நல்லதல்ல, ஜாதகரின் சுகமான வாழ்க்கை என்பது பெரிய கேள்வி குறியாக மாறிவிடுகிறது .

குறிப்பு :
 சுய ஜாதக ரீதியாக ஒருவரின் நான்காம் பாவகம் எந்த வீட்டுடன் தொடர்பு பெறுகிறதோ அந்த திசையை குறிக்கும் வாயிர்ப்படி அமைத்த வீட்டில் ஜாதகர் குடியிருக்கும் பொழுது, சகல செல்வங்களையும், படிப்படியான முன்னேற்றங்களையும், வண்டி வாகன யோகத்தையும் பெற்று நிறைவாக வாழும் யோகத்தை தருகிறது .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
9842421435


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக