புதன், 12 மார்ச், 2014

1,7,10ம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜீவன வழியில் இருந்து ஜாதகர் பெரும் வெற்றி வாய்ப்புகள் !



 சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது, சம்பந்தபட்ட ஜாதகரின் வாழ்க்கையில் தொழில் மற்றும் வேலை வாய்ப்பில் மிகுந்த முன்னேற்றத்தை வாரி வழங்கும், தங்கு தடையின்றி ஜீவன முன்னேற்றத்தை தரும், ஜாதகர் எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளித்து வெற்றி காணும் யோக வாழ்க்கையை பெற்று தரும்.

 கிழ்கண்ட மகர இலக்கின ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே !




லக்கினம் : மகரம் 
ராசி : மீனம் 
நடசத்திரம் : ரேவதி 4ம் பாதம் 

 ஜாதகருக்கு 1,7,10ம் பாவகங்கள் ஜீவன ஸ்தானமான 10 ம் வீட்டுடனே தொடர்பு பெறுவது மிகுந்த யோகத்தை தரும் அமைப்பாக கருதலாம் , இதில் ஜீவன ஸ்தனத்துடன் தொடர்பு  பெரும் 1,7,10 ம் பாவகங்கள் ஜாதகருக்கு எவ்வித யோக பலன்களை வாரி வழங்கும் என்பதனை சற்று ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே !

 உடல், உயிராகிய லக்கினம் ஜீவன ஸ்தானமான 10 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பான ஒரு விஷயமே, ஜீவன ஸ்தானம் ஜாதகருக்கு துலாம் ராசியில் அமைவதும், அந்த துலாம் ராசி கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் பாவகமாக வருவதும், சர காற்று தத்துவ அமைப்பை ஏற்று நிற்பதும் ஜாதகருக்கு பரிபூரண யோகத்தை வழங்கும , பொதுவாக சர காற்று தத்துவ ராசி நல்ல நிலையில் இருப்பது ஜாதகருக்கு தன்னிறைவான அறிவாற்றலை வாரி வழங்கும் , அடிப்படையில் இந்த ஜாதகருக்கு லக்கினம் ஜீவன ஸ்தனத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் சிறு வயது முதல் தந்தையின் அரவணைப்பில் கட்டுப்பாட்டில் வளரும் சூழ்நிலையை தரும், மேலும் கௌரவமான வாழ்க்கை மேற்கொள்ளும் யோகத்தை தரும், தனது சுய அறிவாற்றல் கொண்டும், சுய உழைப்பை கொண்டும் வாழ்க்கையில் முன்னேற்றம் பெற்றவராக இருப்பார்.

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு  7ம் வீடான துலாம் ராசியுடன் ஜாதகரின் லக்கினம் தொடர்பு பெறுவதால், ஜாதகருக்கு அமையும் வாழ்க்கை துணை மிகுந்த யோகம் கொண்டவராக காணப்படுவார், ஜாதகரின் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதே திருமண வாழ்க்கைக்கு பிறகுதான் என்றால் அது மிகையில், மேலும்  ஜாதகரின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பவர்கள் மனைவி, நண்பர்கள், பொது மக்கள் என்ற அமைப்பில் ஜாதகருக்கு இலக்கின வழியில் இருந்து பலன் தரும்.

 களத்திர ஸ்தானமான 7ம் பாவகம் 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, ஜாதகர் மனைவி வழியில் இருந்து யோக வாழ்க்கையை பெறுபவர் என்ற அமைப்பையும் தரும், மேலும் ஜாதகரின் வெளி வட்டார பழக்க வழக்கங்கள் மற்றும் தொடர்புகள் அனைத்தும் மிக பெரிய அந்தஸ்து கொண்ட நபர்களுடன் இருக்கும் என்பதே குறிப்பிடத்தக்கது, மேலும் அரசியல்வாதிகளின் அதாரவும் ஜாதகருக்கு பரிபூரணமாக கிடைக்கும், அரசு சார்ந்த அமைப்புகளில் இருந்து லாபம் பெரும் யோகத்தை தரும், குறிப்பாக ஜாதகர் வியாபாரம் செய்தால் பொதுமக்கள் ஆதரவும், அரசு ஆதரவும் தடையின்றி கிடைக்கும், மேலும் வாழ்க்கை துணை, நண்பர்களின் ஆதரவும் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.

 ஜாதகருக்கு வெளிநாடுகளில் இருந்து நிறைவான பொருள் வரவு உண்டாகும், வெளிநாடுகள் பலவற்றிற்கு சென்று வரும் யோகத்தை தரும், ஜீவன வாழ்க்கை வெளிநாடுகளில் அமைந்தால் ஜாதகர் பொருளாதார ரீதியான தன்னிறைவை குறுகிய காலத்தில் பெரும் யோகம் உண்டாகும், அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களை வாங்கி விற்பனை செய்தாலோ, ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில்களை மேற்க்கொண்டாலோ கை நிறைவான வருமானம் தடையின்றி 100 சதவிகிதம் கிடைக்கும், ஜாதகரின் வாழ்க்கை குறுகிய காலத்தில் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும்

 ஜீவன ஸ்தானம் 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் சுய தொழில் செய்வதே வெற்றி மிகுந்த வாழ்க்கை பெற்றுத்தரும் என்பது உறுதியாகிறது, மேலும் ஜாதகர் வேறு ஒரு இடத்தில் பணியாற்றுகிறார் என்றால் ஜாதகரின் வெற்றி வாய்ப்புகள் யாவும், அவர் வேலை செய்யும் தொழில் நிறுவனத்திற்கு சென்று விடும், குறிப்பிட்ட நிறுவனத்திற்கு  மிக பெரிய முன்னேற்றத்தை பெற்று தந்து விடும், மாறாக ஜாதகர் சுயமாக தொழில் செய்தால் ஜாதகருக்கே பரிபூரண வெற்றிகளை வாரி வழங்கிவிடும், இந்த கருத்தை இங்கே பதிவு செய்ய காரணம் ஜாதகரின் ஜீவன ஸ்தானம் சர ராசியாக அமைவதாலும், துலாம் காற்று தத்துவ ராசியா இருப்பதாலுமே இதை குறிப்பிடுகிறோம், சர ராசி ஜாதகருக்கு 100 சதவிகித வெற்றியை தரும், காற்று தத்துவம் ஜாதகருக்கு செலவில்லா மக்கள் விளம்பரத்தையும், தொழில் நேர்மையையும் உலகுக்கு எடுத்து சொல்லும், துலாம் ராசி உலக புகழ் பெற வைக்கும்.

மேலும் ஜாதகரின் ஜீவன ஸ்தானம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடாக வருவது ஜாதகர் தனித்தும் தொழில் செய்து வெற்றி பெற முடியும், கூட்டு முயற்ச்சி, அல்லது கூட்டு தொழில் மூலமாகவும் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற இயலும், ஜாதகர் சுய தொழில் ஆரம்பிக்க சரியான நேரம் எதுவென்றால் மேற்கண்ட 1,7,10ம் பாவகங்கள் ஜீவன ஸ்தானமான  10ம் வீட்டுடன் தொடர்பு பெற்று பலனை நடத்தும், திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் இவைகளில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து தொழில் துவங்கினால் ஜாதகருக்கு நிச்சயம் 100 சதவிகித தொழில் வெற்றியை வாரி வழங்கும் என்பது நிச்சயம்.

ஜோதிடன் வர்ஷன் 
வாழ்க வளமுடன் 
9443355696,9842421435


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக