புதன், 26 மார்ச், 2014

உச்சம் பெற்ற சனி திசை ஜாதகருக்கு நன்மை வழங்க இயலாததிர்க்கு காரணம் என்ன ?





 பொதுவாக துலாம் ராசியில் உச்சம் பெரும் சனி பகவான், தனது திசை மற்றும் புத்தி காலங்களில் ஜாதகருக்கு மிகுந்த யோக பலன்களை வாரி வழங்கும் என்பது பாரம்பரிய ஜோதிடத்தின் கணிப்பு கிழ்கண்ட ஜாதகத்தில் சனி உச்சம் பெற்று வக்கிரக நிலையில் இருப்பதால் நன்மை தர இயலாது என்பதும் பாரம்பரிய ஜோதிடத்தின் கணிப்பு, ஆனால் உண்மை நிலை என்ன என்பதை பற்றி இந்த பதிவில் சற்று ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!




நமது ஜோதிட முறை படி ஒரு கிரகம் சுய ஜாதகத்தில் எப்படி பட்ட நிலையில் இருந்தாலும் லக்கினத்திற்கு எவ்விதமான பலன்களை தருகிறார் என்பதை முதன்மையாக எடுத்துகொள்ள வேண்டும் என்பதே அடிப்படி விதி, பொதுவாக ஜாதகத்தில் கிரகங்கள் ஆட்சி,உச்சம்,சமம்,நட்பு,பகை,நீச்சம் போன்ற நிலைகளில் அமர்வது காலபுருஷ தத்துவ அமைப்பிற்கே, இந்த நிலை சுய ஜாதகத்தில் லக்கினத்தை எவ்விதத்திலும் கட்டுபடுத்தாது என்பதே உண்மை, குறிப்பாக சில ஜாதகத்தில் சுப கிரகங்கள் ஆட்சி உட்சம் பெற்று இருக்கும், ஆனால் தனது திசை மற்றும் புத்திகளில் எவ்வித யோக பலன்களையும் தராமல் அவயோக பலன்களையே தரும்.

மேற்கண்ட ஜாதகத்தில் சனி ஆட்சி உச்ச நிலையில் இருந்தாலும் ஜாதகருக்கு தனது திசை மற்றும் புத்தி காலங்களில் நன்மையை தராமல் இருப்பதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம், சுய ஜாதகத்தில் சனி உச்ச நிலையில் இருந்தாலும் தனது திசையில் 1,7ம் வீடுகள் பதாக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்த பெற்று பலனை நடத்துவதே இதற்க்கு காரணம், பொதுவாக சுய ஜாதகத்தில் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது 200 மடங்கு இன்னல்களை தரும், தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து.  

 இந்த ஜாதகத்தில் லக்கினம் மற்றும் களத்திரம் எனும் இரண்டு பாவகமும் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து 200 சதவிகித இன்னல்களை தரும் மேற்கண்ட பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தும் திசை மற்றும் புத்தி காலங்களில், இந்த ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை சனி மற்றும் செவ்வாய் திசை,புத்தி காலங்களில் பாதக ஸ்தான பலனை நடத்துவதால் இங்கே உச்சம் பெற்ற சனி பகவானாலும் தனது திசையில் நன்மை செய்ய இயலாது, சமம் என்ற நிலையில் இருக்கும் செவ்வாய் பகவனாலும் தனது திசை,புத்தி காலங்களில் நன்மை செய்ய இயலாது என்பது உறுதியாகிறது.

 மேலும் ஜாதகருக்கு எவ்வித அமைப்பில் இருந்து தீமை நடை பெரும் என்பதை ஆய்வு செய்யும் பொழுது, ஜாதகரின் பாதக ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் வீடாகவும், உபய நெருப்பு ராசியாகவும் வருவதால், ஜாதகர் தனது அவசர செய்கையினாலும், சுய கட்டுப்பாடு அற்ற தன்மையினாலும், பெரியவர்களின் சொல் பேச்சு கேளாமல் நடப்பதாலும், பெயருக்கும் புகழுக்கும் தனது ஆண் பெண் நண்பர்களால் அவ பெயர் உண்டாகும், இதனால் ஜாதகரின் முன்னேற்றம் வெகுவாக பாதிக்க படும், எனவே இந்த காலகட்டங்களில் ஜாதகர் பெரியோர் சொல் பேச்சு கேட்டு நடப்பது மிகுந்த நன்மை தரும், மேலும் தனது பித்ருகளுக்கு முறையான தர்ப்பன வழிபாட்டினை மேற்கொள்ளுவது மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும்.

மேற்கண்ட சனி திசை ஜாதகருக்கு சரியான பருவ வயதில் வருவதால், களத்திர பாவகம் வலிமை பெற்ற வாழ்க்கை துணையை தேர்வு செய்து திருமணம் செய்து கொள்வதும், நல்ல நண்பர்களின் சேர்க்கையை வைத்துகொள்வதும், முடிந்த அளவிற்கு நண்பர்களின் தயவினை எதிர்பாராமல் வாழ்க்கை நடத்துவது நல்லது, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் இன்னல்களை ஏற்றுக்கொண்டு அனுசரித்தது செல்வது சகல நிலைகளில் இருந்தும் நன்மையை  தரும்.

குறிப்பாக மேற்கண்ட சனி திசை காலங்களில் கூட்டு முயற்ச்சியினை தவிர்ப்பது சால சிறந்து, கூட்டு தொழில் செய்வதால் ஜாதகருக்கு கடுமையான பாதிப்பை வாரி வழங்கும், நண்பர்கள் வழியில் இருந்து அதிக இன்னல்களையும், துன்பத்தையும் தரும், மேலும் ஜாதகரின் லக்கினமும் பாதிக்க படுவதால் ஜாதகர் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் தோல்வியையே தரும், தன்னம்பிக்கை குறையும் சகோதர வழியில் இருந்து செலவுகள் வர கூடும்.

ஆக மேற்க்கண்ட சனிதிசை உச்சம் பெற்று வக்கிரகம் பெற்றதால் நன்மையை தரவில்லை என்று கணிப்பது முற்றிலும் தவறானது, சனி திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவதாலேயே தீய பலன்கள் நடை பெரும் என்பதே முற்றிலும் உண்மை.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக