புதன், 18 மார்ச், 2015

சுய ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்ற கிரகத்தின் திசாபுத்தி நடைமுறைக்கு வரும் பொழுது யோகபலன்களை வாரி வழங்குமா ?




 ஒருவரின் சுய ஜாதகத்தில் ராசி அல்லது அம்ச நிலையிலோ  ஆட்சி, உச்சம் பெற்று இருக்கும் கிரகங்களின் திசாபுத்திகள் நடைமுறைக்கு வரும்பொழுது, ஜாதகர் யோக பலன்களை அனுபவிப்பார், பகை நீச்சம் பெற்று இருக்கும் திசாபுத்திகள் நடைமுறைக்கு வரும்பொழுது, ஜாதகர் அவயோக பலன்களை அனுபவிப்பார், என்பது பொதுவான கருத்தாக உள்ளது, கிரகங்களின் ஆட்சி,உச்சம்,சமம்,நட்பு,பகை,நீச்ச நிலைகளுக்கும், சுய ஜாதகத்தில் தனது திசாபுத்தி காலங்களில் அவர்கள் தரும் பலாபலன்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பதே உண்மை.

 மேலும் கிரகங்களின் ஆட்சி,உச்சம்,சமம்,நட்பு,பகை,நீச்ச நிலைகள் யாவும் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு உண்டான வலிமை அமைப்பே அன்றி, சுய ஜாதகத்திற்கு அவர்கள் தரும் பலன் அல்ல வலிமையையும் அல்ல, ஒருவரின் சுய ஜாதக அமைப்பில் லக்கினத்தை அடிப்படையாக கொண்டே கிரகங்களின் வலிமையை நிர்ணயம் செய்ய இயலும், மேலும் 12பாவகங்களின் தன்மையை நிர்ணயம் செய்ய இயலும், பொதுப்படையாக சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் ஆட்சி உச்ச நிலையில் உள்ளதால் யோகத்தை செய்யும் என்று முடிவு செய்வதும், பகை நீச்சம் பெற்று உள்ளதால் தீமையை செய்யும் என்று முடிவு செய்வதும் சரியான ஜாதக கணித பலனாக இருக்க வாய்ப்பில்லை என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து.

மேற்கண்ட கருத்தை உறுதி செய்யும் விதத்தில் சரியான உதாரண ஜாதகம் கொண்டு விளக்கம் தர ஜோதிடதீபம் கடமைபட்டுள்ளது.

உதாரண ஜாதகம் 1



லக்கினம் : மகரம் 
ராசி : கடகம் 
நட்சத்திரம் : ஆயில்யம் 4ம் பாதம் 

இந்த மகர இலக்கின ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை மீனத்தில் உச்சம் பெற்று  தனது  திசாபுத்தி  பலன்களை 17/03/1997 முதல் 17/03/2017 வரை வழங்குகிறார், பொதுவாக இவரது ஜாதகத்தை ஆய்வு செய்யும்  அன்பர்கள் அனைவரும் 5,10க்கு உடைய சுக்கிர பகவான் திசை 3ம் பாவகமான மீனத்தில் உச்சம் பெற்று நடத்துவதால் ஜாதகருக்கு சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் உண்டாகும் 5,10ம் பாவக வழியில் இருந்தும் 3ம் பாவக வழியில் இருந்து மித மிஞ்சிய யோக பலன்களை, மகர லக்கினத்திற்கு யோக காரனான சுக்கிரன்  வாரி வழங்குகிறார் என்ற கருத்தை பலனாக சொல்லியிருக்கின்றனர், ஜாதகரும் இதை நம்பி செய்த காரியங்கள் யாவும் தோல்வி மேல் தோல்வியே கிடைத்து இருக்கின்றது, ஜீவன வழியில் இருந்து அதிக சிரமங்கள், திடீர் சொத்து இழப்புகள், சுய தொழில் செய்யும் நோக்கத்தில்  வாங்கிய கடன் தொல்லைகள், மூட நம்பிக்கையின் பெயரில் இழந்த பொருள் இழப்புகள் என ஜாதகர் தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை, ஜோதிடர்கள் கூறிய பலனுக்கு நேர்எதிரான பலாபலன்களை அனுபவித்து கொண்டு  இருக்கிறார், ஜாதகரின் இந்த நிலைக்கு காரணம் என்ன ?

சுய ஜாதகத்தில் சுக்கிரன் உச்ச நிலையில் இருந்தாலும் கூட, அவர் தனது திசாபுத்தி காலங்களில் ஏற்று நடத்தும் பாவக பலன்களை பற்றி தெரியாமல் பலன் கண்டதே இதற்க்கு காரணம், இந்த ஜாதகருக்கு உண்மையில் சுக்கிரன் மீனத்தில் உள்ள 2ம் பாவகத்தில் அமர்ந்து  தனது திசையில் 6,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும், 4,10ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும் பலன்களை தருவது, ஜாதகருக்கு வந்த இந்த மோசமான சூழ்நிலைக்கு காரணமாக கொள்ளலாம்.

ஜாதகருக்கு 4,10ம் வீடுகள் 8ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது 4ம் பாவக வழியில் இருந்து தனது சொத்து வண்டி வாகனம் என அனைத்தையும் திடீரென இழந்து வாடும் சூழ்நிலையை தந்தது, சுக போக வாழ்க்கைக்கு ஆசைபட்டு சொத்து சுகத்தை அனைத்தையும் இழக்கும் தன்மையையும், தனக்கு உள்ள சொத்துகளை துச்சமென மதித்து, அதன் மதிப்பு தெரியாமல் ஜாதகர் அனைத்தையும் இழந்து நிற்கும் தன்மையை தந்தது, 10ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் சொந்த தொழில் செய்யும் உத்தேசத்தில் செய்த காரியங்கள் யாவும் பெரிய பின்னடைவையும், பெருத்த நஷ்டத்தையும் தந்தது, தனது முன்னோர்கள் சேர்த்து வைத்திருந்த ஜீவன கௌரவத்தையும் இழந்து, தொழில் முறையில் ஜாதகர் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்தார், உச்சம் பெற்ற சுக்கிரன் திசை என்று உசுபேத்திய ஜோதிடர்களின் வழிகாடுதல்களின் பெயரில் அகல கால் வைத்து மிகப்பெரிய நஷ்டங்களை ஜாதகர் சந்தித்தை இவரது நலம் விரும்பிகாளால் கூட தடுக்க இயலவில்லை, மேற்க்கண்டவை  சுக்கிரன் திசை ஜாதகருக்கு 4,10ம் வீடுகள் 8ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றதால் ஏற்ப்பட்ட 80% விகித இழப்புகள்.

ஜாதகருக்கு 6,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றதே 200% சதவிகித இன்னல்களை வாரி வழங்கியது, அதாவது ஜாதகர் 6ம் பாவக வழியில் இருந்து ஜீவனம் மேற்கொள்வதற்காக வாங்கிய கடனே  வட்டி குட்டி போட்டு கடன்தொகையை விட 10 மடங்கு அதிகரித்து நின்றது, இதன் காரணமாக ஜாதகர் தனது முன்னோர்களின் ஜீவன சொத்துகளையும், பாரம்பரிய சொத்து, பூர்வீக பூமி ஆகியவற்றை அனைத்தும் இழந்து செய்வது அறியாமல் திகைக்க வைக்க, உடல் ரீதியான பிரச்சனைகளுக்காக மருத்துவ செலவுகள் ஒருபக்கம் ஜாதகரை வேறு வழியில் இன்னல்களை வாரி வழங்கியது, 11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் எவ்வித அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் பெற இயலாமல், பிற்போக்கு சிந்தனையுடனும், அறிவார்ந்த செயல்பாடுகள் இல்லாமலும், எவர் எதை சொன்னாலும் அதை உண்மை என நம்பி செய்த காரியங்களில் ஏற்ப்பட்ட பொருள் இழப்புகள் என்பதும் மிக மிக அதிகம், ஜாதகரின் சிந்தனை திறனின் செயல்பாடுகள் முடங்கியதற்கு இதுவும் ஓர் காரணமாகவே கருதலாம், ஆக உச்சம் பெற்ற சுக்கிரன் திசை ஜாதகருக்கு பாதிப்படைந்த பாவக தொடர்புகளை பெற்றதால் ஜாதகருக்கு எவ்வித யோக பலன்களையும் சுக்கிரன் திசை வழங்க வில்லை என்பதே முற்றிலும் உண்மை , பொதுவாக சுய ஜாதகத்தில் கிரகங்கள்  ஆட்சி உச்ச நிலையை கருத்தில் கொண்டு பலன் காணாமல், தனது திசாபுத்தி காலங்களில் எந்த பாவகத்தின் பலனை தருகிறது என்ற உண்மை நிலையை உணர்ந்து ஜாதக பலன் காணும் பொழுதே, சம்பந்தபட்ட ஜாதகருக்கு மிக துல்லியமான ஜாதக கணித பலன்களை சொல்ல இயலும் என்பது மறுக்க இயலாத உண்மை.

 உதாரண ஜாதகம் 2

லக்கினம் : மிதுனம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : அவிட்டம் 2ம் பாதம் 

இந்த மிதுன இலக்கின ஜாதகருக்கு மகரத்தில் நீச்ச நிலையில் அமர்ந்த குரு பகவானின் திசை 26/05/2007 முதல் 26/05/2023 வரை நடைபெறுகிறது, தற்பொழுது நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று, ஜாதகருக்கு 1ம் பாவக வழியில் இருந்து நல்ல உடல் நலம், மன நலம், புகழ், வெற்றி, கீர்த்தி ஆகியவற்றை வாரி வழங்குவதுடன், ஜாதகர் தனக்கு வரும் அதிர்ஷ்ட வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகத்தை தருகிறது, 5ம் பாவக வழியில் இருந்து இறை அருளின் கருணையை பரிபூரணமாக பெரும் யோகத்தையும், தனது பூர்வீகத்தில் இருந்துகொண்டே வாழ்க்கையில் சகல யோகத்தையும் பெரும் தன்மையை தருகிறது, ஜாதகரின் நுண்ணறிவு திறன் ஜாதகர் செய்யும் சுய தொழில் அமைப்பில் மிகுந்த அதிர்ஷ்டத்தை வாரி வழங்குகிறது, ஜாதகரின் புதிய சிந்தனையும் செயல்பாடுகளும், மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை உறுதி செய்கிறது.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்து அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கிறது, ஜாதகரின் நண்பர்கள் தொழில் முறை கூட்டாளிகள் மூலம் மிகுந்த அதிர்ஷ்ட வாய்ப்பையும், சிறந்த உதவிகளையும், எதிர்பாராத வருமான வாய்ப்பையும் பெரும் யோகத்தை தருவது சிறப்பான விஷயமாக கருதலாம், ஜாதகர் செய்யும் ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் சிறந்து விளங்கும் தொழில் திறமைகளை பெற்று இருப்பது மேற்க்கண்ட 7ம் பாவக வழியில் இருந்தே என்றால் அது மிகையில்லை. 

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நீடித்த அதிர்ஷ்டத்தையும், முற்போக்கு சிந்தனையுடன் அனைத்தையும் எதிர்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகத்தை தருவது கவனிக்க தக்கது, ஜாதகர் நினைக்கும் எண்ணங்கள் யாவும் நடைமுறைக்கு வருவதும், செய்யும் காரியங்கள் யாவும் நல்ல அதிர்ஷ்ட வாழ்க்கையை தருவது 11ம் பாவக வழியில் இருந்தே, மேலும் ஜாதகருக்கு உதவி செய்ய பலர் காத்து இருப்பது வரவேற்க தக்கது, ஜாதகரின் தேவையும், ஜாதகருடைய தேவைகளையும் நிறைவேற்றும் விதத்தில், ஜாதகரை சுற்றி உள்ளவர்கள் இருப்பது 11ம் பாவகத்தின் வலிமையே, ஆக நீச்சம் பெற்ற குரு திசை ஜாதகருக்கு 1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று, மிக பெரிய  யோக வாழ்க்கையை தனது திசையில் வாரி வழங்குவது ஆட்சி,உச்சம்,பகை,நீச்சம் என்ற வலிமையின் நடைமுறையில் வழங்கும், முரண்பட்ட பலாபலன்களின் தன்மையை மேற்கண்ட உதாரண ஜாதகம் மூலம் நாம் உணர்ந்து கொள்ள இயலும் அன்பர்களே!

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக