திங்கள், 14 செப்டம்பர், 2015

ஜாதக ஆலோசனை : சுய ஜாதக வலிமையும், நடைபெறும் திசை தரும் பலன்களும் !




ஒருவரின் சுய ஜாதகத்தில் பாவக வலிமைக்கு ஏற்ப்பவே யோக அவயோக பலன்கள் சம்பந்தபட்ட ஜாதகருக்கு வழங்குகிறது, சுய ஜாதகத்தில் ஒருவருக்கு உள்ள யோக அவயோக பலன்கள் நடைபெறும் காலம் எதுவென்று துல்லியமாக அறிந்துகொள்வதும், அதன் அடிப்படையில் தமது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள திட்டமிடுவதும், குறிப்பிட்ட ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை தரும், இதற்க்கு சுய ஜாதகத்தில் யோக அவயோக பலன்கள் நடைபெறும் காலநேரம் எதுவென்று அறிந்துகொள்வது மிக மிக அவசியமானது, நமது நண்பரின் ஜாதகத்தை இதற்காக ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : கடகம் 
ராசி : கன்னி 
நட்சத்திரம் : சித்திரை 2ம் பாதம் 

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற பாவகங்கள் :

1,3,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்,
4,10ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்,
ஜாதகத்தில் உள்ள வலிமை பெற்ற பாவகங்கள்.

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவகங்கள் :

2,8ம் வீடுகள் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்,
6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்,
ஜாதகத்தில் உள்ள வலிமை அற்ற பாவகங்கள்.

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை அற்ற பாவகங்கள் :

5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகத்தில் மிகவும் வலிமை அற்ற கடுமையான இன்னல்களை தரும் பாவகங்கள் ஆகும்.

ஜாதக பொது பலன்கள் :

1,3,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது 1ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நல்ல குணமும், சிறந்த அறிவு திறனையும் ஒருங்கே அமைய பெற்றவர், ஜாதகரின் மனம் மிகவும் பெருந்தன்மையானது, இயற்கையாக ஜாதகருக்கு நல்ல ஆரோக்கியமும், நிறைவான கல்வி அறிவும் கிடைக்க பெற்றவர், சிறந்த நிர்வாக திறமைகளை தன்னகத்தே கொண்டவர், தனது உறவுகள் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றமும், நன்மையையும் பெரும் யோகம் கொண்டவர், 3ம் பாவக வழியில் இருந்து தான் மனதில் நினைத்த லட்சியங்களை அடைய விடா முயற்சியுடன் போராடும் குணமும், இடைவிடாத உழைப்பையும் வெளிபடுத்தும் ஆற்றல் பெற்றவர், புதிய மனிதர்கள், வெளிநாட்டவர், நண்பர்கள் வழியில் இருந்து ஆதரவையும் வாய்ப்புகளையும் பெரும் யோகம் கொண்டவர், ஆராய்ச்சி மனபாண்மையும், சிறந்த புத்திசாலித்தனமும் கொண்டவர், சிறந்த திட்டமிடுதல்களுடன் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றங்களை பெரும் யோகம் பெற்றவர், சிறந்த வாதத்திறமை ஜாதகரின் வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும், தரகு அல்லது ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் மிகுந்த லாபத்தை பெரும் யோகம் உண்டாகும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் வாழ்க்கை துணையுடன் சிறப்பான இல்லற வாழ்க்கையை பெரும் யோகத்தை தரும், தனது நண்பர்களுக்கு யோகத்தையும் லாபத்தையும் தரும் வல்லமை பெற்றவர், புனித திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகமும், மிகசிறந்த ஆன்மீகவாதிகளின் அருளாசியும் பெரும் யோகம் பெற்றவர், தான் செய்யும் தொழிலில் நல்ல நுண்ணறிவும், சிறந்த நிர்வாகத்தை கையாளும் வல்லமை பெற்றவர், பொதுமக்கள் மற்றும் பெரியமனிதர்களின் ஆதரவை ஒருங்கே பெரும் யோகம் கொண்டவர், சமூகத்தில் நல்ல மனிதர் என்ற அங்கீகாரத்தை மிக விரைவில் பெற்று வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றங்களை அடையும் யோகம் உண்டாகும், 9ம் பாவக வழியில் இருந்து சிறந்த அறிவு திறனும், நிர்வாக திறனும் ஜாதகருக்கு வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை வாரி வழங்கும், செய்த புண்ணியத்தின் பலன்களை ஜாதகர் பரிபூர்ணமாக அனுபவிக்கும் யோகம்  உண்டாகும், அனைவரிடத்திலும் நல்ல பெயர் கிடைக்கும், இடமாற்றம் மற்றும் சூழ்நிலை மாற்றத்தில் விருப்பம் கொண்டவர், சந்தர்பங்களையும் சூழ்நிலைகளையும் தனக்கு சாதகமாக மாற்றி கொள்ளும் அதிபுத்திசாலித்தனம் ஜாதகருக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும்.

4,10ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, ஜாதகருக்கு 4ம் பாவக வழியில் இருந்து மிதமிஞ்சிய சுகபோக வாழ்க்கையை வாழும் யோகம் உண்டாகும், கற்பனையிலும் நினைத்திராத யோகங்களும் சுக போகங்களும் ஜாதகரை தேடி வரும், மிகப்பெரிய சொத்து சுக சேர்க்கைகள் மிக எளிதில் ஜாதகருக்கு கிடக்க பெரும், ஜாதகரின் நல்ல குணம் எங்கு சென்றாலும் வரவேற்ப்பும் சிறப்பான ஆதரவையும் பெற்று தரும், சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் சகல வசதிகளையும் அனுபவிக்கும் தன்மையையும், மிகப்பெரிய சொத்துகளை வாங்கும் யோகத்தையும் தரும், கல்வியில் வெற்றி, சொந்த ஊரில் ஜீவிக்க விருப்பமும் கொண்டவர், மண் மனை வண்டி வாகன யோகம் இயற்கையாகவே அமைய பெற்றவர், கல்வி துறையில் மிகப்பெரிய வெற்றிகளை ஜாதகருக்கு வாரி வழங்கும், 10ம் பாவக வழியில் இருந்து தனது சொத்துகளை மிக எளிதாக விருத்தி செய்தல், வண்டி வாகன தொழில்களில் எதிர்பாராத லாபம், ஆயுள் காப்பீடு மற்றும் வண்டி வாகனத்திற்கு காப்பீடு செய்யும் தொழில் மூலம் அபரிவிதமான முன்னேற்றம், நிரந்தரமான தொழில் மூலம் கை நிறைவான வருமானம் பெரும் யோகம், தனது சொத்துகள் வழியில் இருந்து மிகுந்த லாபத்தையும் அதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கும் தன்மையை தரும், மேற்கண்ட யோக பலன்கள் யாவும் ஜாதகருக்கு நடைபெற ஜாதகர் வடக்கு திசை வாயிற்படி கொண்ட வீட்டில் குடியிருந்தால் மட்டுமே சாத்தியப்படும், குடியிருக்கும் வீடு வேறு திசையில் வாயிற்படி அமைந்து இருப்பின் ஜாதகரின் வாழ்க்கை மிகுந்த போராட்டங்களையே சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

2,8ம் வீடுகள் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் வருமானம் அனைத்தும் திடீர் இழப்பை சந்திக்க கூடும், குடும்பத்தில் அதிக இன்னல்களும், வாக்குவாதமும் ஜாதகரின் வருமானத்தை வெகுவாக பாதிக்கும், உயில் மூலம் லாபமும், இன்சுரன்ஸ் மூலம் திடீர் லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், வணிக துறையில் ஜாதகருக்கு நல்ல வருமானம் கிடைக்கும், சில நேரங்களில் ஜாதகரின் பேச்சு மிகப்பெரிய இன்னல்களை வாரி வழங்கிவிடும், பண விஷயத்தில் மிகவும் கவனமாக  இருப்பது ஜாதகருக்கு மிகுந்த நன்மையை தரும், 8ம் பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுளையும், வாழ்க்கையில் சில எதிர்பாராத ஏமாற்றங்களையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும், எதிர்பாராத விபத்து, மருத்துவ செலவினங்களை தவிர்க்க இயலாது, மற்றவருக்கு பண உதவி செய்வது ஜாமீன் போடுவது போன்ற விஷயங்களை தவிர்த்துவிடுவது நல்லது, ஜாதகருக்கு செல்வத்தை முறையாக கையாளும் தன்மையை கற்று வைத்துகொள்வது மிகுந்த நன்மையை தரும்.

6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, 6ம் பாவக வழியில் இருந்து கடன் வாங்குவது கொடுப்பது இரண்டும் ஜாதகரை வெகுவாக பாதிக்கும், தனக்கு கிழ் பணியாற்றும் வேலை ஆட்களுடன் சமாதன போக்கை கடைபிடிப்பது நல்லது, தேவையற்ற வீண் செலவுகளை தவிர்ப்பதும், மருத்துவ செலவினங்களை தவிர்ப்பதும் ஜாதகருக்கு நல்லது, 12ம் பாவக வழியில் இருந்து அதிக மன உளைச்சல்களையும், மனபோரட்டங்களையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும், வீண் மன கவலை ஜாதகரை தீய பழக்க வழக்கங்களுக்கு ஆர்படுத்தும் எனவே ஜாதகர் மிக எச்சரிக்கையாக இருப்பது நல்லது, எந்த ஒரு தீய பழக்கமும் இல்லாமல் இருப்பது ஜாதகரின் உடல் மற்றும் மனம் இரண்டையும் காப்பற்றும், நல்ல ஆன்மீகவாதிகளின் ஆசிர்வாதம் ஜாதகரின் வாழ்க்கையில் சுபிட்சத்தை வழங்கும்.

5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகத்தில் மிகவும் இன்னல்களை தரும் அமைப்பாக கருதலாம், 5ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று ஜீவனம் தேடும் சூழ்நிலையை உருவாக்கும், குல தெய்வத்தின் நிந்தனை ஜாதகரை வெகுவாக பாதிக்கும், புத்திர பாக்கியத்தில் ( ஆண்வாரிசு ) இன்னல்களை தரும், ஜாதகரின் கல்வி மற்றும் அறிவு திறன் சரியான நேரத்தில் பலன் தாராது, சிறு முன்னேற்றத்திற்கு ஜாதகர் மிகப்பெரிய உழைப்பை தரும் சூழ்நிலையை வரக்கூடும், மன அமைதி கெடும், திட்டமிட்ட செயல்கள் சில நேரங்களில் பெரிய தோல்விகளை தரக்கூடும், சுதந்திரமாக செயலாற்ற இயலாமல் மற்றவர்களுக்கு கட்டுபட்டு இயங்கும் சூழ்நிலையை தரும், பூர்வீகத்தில் ஜீவனதிர்க்கு மிகுந்த இன்னல்களை அனுபவிக்கும் நிலை உருவாகும், தெளிவில்லாத மன நிலையுடன் ஜாதகர் பல போராட்டங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டம் ஜாதகருக்கு பயன்படாமல், ஜாதகரை சார்ந்தவர்களுக்கு பலன் தரும், ஜாதகரின் திட்டமிடுதல்களை மிக எளிதாக முடக்கி வைக்கும், எதை எடுத்தாலும் தடை, தொந்தரவு, போராட்டம் என ஜாதகரை முழு வீச்சில் எதிர்ப்புகளை வழங்கும், தன்னம்பிக்கையை இழக்கும் சூழ்நிலையும், மன நிம்மதி இழப்பையும் வெகுவாக தரும், அதிர்ஷ்டமில்லா போராட்ட வாழ்க்கையை ஜாதகருக்கு தரக்கூடும், திறமை இருந்தும் வெற்றி வாய்ப்புகள் ஜாதகருக்கு எட்டாக்கனியாகவே அமைந்துவிடும்.

மேற்கண்ட யோக அவயோக பலன்கள் ஜாதகருக்கு நடைமுறையில் வரும் கால நேரங்கள் :

ஜெனனத்தில் செவ்வாய் திசை ஜாதகருக்கு 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களையும்,

செவ்வாய் திசைக்கு அடுத்து வந்த ராகு திசை ஜாதகருக்கு 10ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களையும்,

ராகு திசைக்கு அடுத்து தற்பொழுது நடைமுறையில் உள்ள குரு திசை ஜாதகருக்கு 3ம் வீடு பாக்கய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களையும்,

குரு திசைக்கு அடுத்து வரும் சனி திசை ஜாதகருக்கு 5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும், 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும் அவயோக பலன்களையும்,

சனி திசைக்கு அடுத்து வரும் புதன் திசை ஜாதகருக்கு 5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று அவயோக பலன்களையும்,

புதன் திசைக்கு அடுத்து வரும் கேது திசை ஜாதகருக்கு 2,8ம் வீடுகள் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று அவயோக பலன்களையும்,

கேது  திசைக்கு அடுத்து வரும் சுக்கிரன்  திசை ஜாதகருக்கு 10ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களையும்,

சுக்கிரன் திசைக்கு அடுத்து வரும் சூரியன் திசை ஜாதகருக்கு 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களையும்,

சூரியன் திசைக்கு அடுத்து வரும் சந்திரன் திசை ஜாதகருக்கு 3ம் வீடு பாக்கய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களையும், வாரி வழங்குகின்றது.

ஜாதகருக்கு சூரியன்,சந்திரன்,செவ்வாய்,ராகு,குரு,சுக்கிரன் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம் யோக பலன்களையும்,

சனி,புதன்,கேது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம் அவயோக பலன்களையும், வாரி வழங்குவது தெளிவாகிறது.

எனவே ஜாதகர் யோக பலன்கள் நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் சிறப்பான முன்னேற்றம் மற்றும் நன்மைகளையும், அவயோக பலன்கள் நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் அதிக அளவில் இன்னல்களையும்,போராட்டங்களையும் சந்திக்க வேண்டி வரும் என்பதால், தனது வாழ்க்கை முன்னேற்றங்களை சிறப்பான கால நேரத்தில் திட்டமிட்டும், சிறப்பற்ற கால நேரத்தில் தவிர்த்தும் நன்மை அடையலாம்.

குறிப்பு :

மேற்கண்ட பாவக தொடர்புகள் தரும் பலன்களுடன் கோட்சார கிரக பலன்களையும் கருத்தில் கொள்வது இன்னும் சிறப்பை தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன்
9443355696



5 கருத்துகள்: