புதன், 13 டிசம்பர், 2017

கிரகமாலிகா யோகம் ஜாதகருக்கு பலன் தருமா? சுய ஜாதக வலிமை ஜாதகருக்கு பலன் தருமா ?


கேள்வி :

 கிரகமாலிகா யோகம் உள்ளதால் எனது வாழ்க்கையில் சுபயோகங்கள் நடைமுறைக்கு வரும் என்கின்றனர், நடைபெறும் குரு திசை சிறப்பான நன்மைகளை தரும் என்கின்றனர், ஆனால் குரு திசை கடந்த 5 வருடமாக மிகுந்த சிரமங்களையே வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது, யாதொரு முன்னேற்றமும் இல்லை, எடுக்கும் முயற்சிகள் தோல்வியை தருகின்றது, தன்னம்பிக்கையுடன் போராடி வருகின்றேன், வெற்றி கிட்டுமா ? எதிர்காலம் சிறப்பாக அமையுமா? கிரகமாலிகா யோகம் எனக்கு பலன்தருமா? பலன் தாராத விளக்கம் தர வேண்டுகின்றேன்.

பதில் :

 சுய ஜாதக வலிமை நிலையை பற்றிய தெளிவு இல்லாமல் கூறப்படும் கட்டுக்கதைகளில் ஒன்று இந்த கிரகமாலிகா யோகம், கிரகங்கள் தொடர்ச்சியாக வீடுகளில் அமர்ந்து இருப்பது மேற்கண்ட கிரகமாலிகா யோகத்தை தரும் என்று கூறுவது சுய ஜாதக வலிமை அமைப்பிற்கு சற்றும் பொருந்தாத விஷயம் என்பதை முதலில் நாம் தெளிவாக உணர்ந்துகொள்வது நல்லது, நமது சுய ஜாதகம் என்பது பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் ஆகிவற்றின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுவதாகும், கிரகமாலிகா யோகம் , கஜகேசரி யோகம், குருமங்கள யோகம், சந்திர மங்கள யோகம் என்பதெல்லாம் கிரகங்களின் சேர்க்கை நிலை, அமர்ந்த நிலை மற்றும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு கிரகங்கள் பெற்ற வலிமையை கருத்தில் கொண்டு கற்பனையாக சொல்லப்படும் விஷயங்களாகும், இவையெல்லாம் ஜோதிடம் கேட்க வந்தவரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துமே அன்றி நடைமுறையில் பயனேதும் தாராது என்பதே உண்மையாகும், தங்களது ஜாதகத்தில் உள்ள கிரக மாலிகா யோகம் என்பது தங்களின் சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது யாதொரு நன்மைகளையும் சுபயோகங்களையும் தாராது என்பதை பதிவு செய்ய விரும்புகிறோம் அன்பரே !

இனி தங்களது சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையை கருத்தில் கொண்டு சுய ஜாதக பலாபலன்களை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.


லக்கினம் : சிம்மம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : அவிட்டம் 1ம் பாதம்

ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் :

1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.
4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம்.

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

2,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.
8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம்.

ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவக தொடர்புகள் :

3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.

 தங்களது சுய ஜாதகத்தில் 1,4,5,7,11ம் வீடுகள் சற்று வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், மேற்கண்ட பாவக வழியில் இருந்து தாங்கள் நிச்சயம் சுபயோக பலாபலன்களை நடைபெறும் எதிர்வரும் திசா புத்திகள் ஏற்று நடத்தினால் சுவீகரிக்க அதிக வாய்ப்பு உண்டு அதில் மாற்று கருத்து இல்லை, ஆனால் 8ம் பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களுக்கும், 2,6,10,12ம் பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களும் தங்களை  படுத்தி எடுக்கும் என்பதுடன் 3,9ம் பாவக வழியில் இருந்து வரும் துன்பங்களை தங்களால் தாங்க இயலாது என்பது வருந்தத்தக்க விஷயமாகும், கிரகமாலிகா யோகம் என்று யாரவது வாயில் வந்ததை உளறி வைத்திருக்க கூடும் அதை நம்பிக்கொண்டு தாங்கள் செய்யும் காரியங்கள் யாவும் தாங்க இயலாத துன்பத்தையும், படுதோல்விகளையும் தரும் என்பதை தாங்கள் இதுவரை நடைமுறையில் உணர்ந்து இருக்க கூடும், சுய ஜாதகம் வலிமை பெறாமல் தங்களால் ஓர் அணுவையும் அசைக்க இயலாது இது இறையருள் நிர்ணயம் செய்த விதி, தங்களது லக்கினம் லாப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு மிதம் மிஞ்சிய தன்னம்பிக்கையை தரும் என்பதில்  மாற்று கருத்து இல்லை, ஆனால் தங்களது ஜாதகத்தில் இல்லாத ஓர் விஷயத்தை நம்பிக்கொண்டு வீணாக நேர விரயத்தையும், பொருள் விரயத்தையும் செலவு செய்வது தங்களது முன்னேற்றத்திற்கு உகந்தது அல்ல என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

 பொதுவாக தங்களது சுய ஜாதகத்தில் வீரிய ஸ்தானமான 3ம் பாவகமும், பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது  தங்களின் முயற்சிகள் யாவினையும் தடை செய்து கடும் நெருக்கடிகளை தரும், தங்களின் அறிவு திறன் தங்களுக்கு பயன் தாராது, பித்ரு சாபம் சார்ந்த இன்னல்களையும், அதன் தாக்கத்தால் தொடர் தோல்விகளையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும் தங்களது சுய ஜாதகத்தில் 1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று  வலிமை பெற்று இருப்பினும் 11ம் பாவகம் உபய ராசியில் அமைவது லாப  ஸ்தான வழியில் இருந்து முழு யோக பலன்களை தாராது, மேலும் லாப ஸ்தானம் என்பது மிதுன ராசியில் 9 பாகைகளையும், கடக ராசியில் 21 பாகைகளையும் கொண்டு இருப்பது உபய காற்று தத்துவத்தில் சிறிதும், சர நீர் தத்துவ அமைப்பில் அதிக அளவும் வலிமை பெற்று நிற்பது மனம் சார்ந்த வலிமையை தருமே அன்றி, அறிவு,உடல் மற்றும் செயல்திறன் சார்ந்த நன்மைகளை தாராது, தங்களின் சுய ஜாதகத்தில் நீர் தத்துவ அமைப்பே மேலோங்கி நிற்கிறது, தங்களின் மனஎண்ணத்தின் வீரியத்தை அதிகரிப்பதை மட்டுமே இது குறிக்கின்றது, மற்ற பாவக தொடர்பு வழியில் இருந்து  தங்களுக்கு செயல் திறன், உடல் திறன் மற்றும் அறிவு திறனை  வெகுவாக பாதிக்கின்றது என்பதே நிதர்சனமான உண்மை, சுய ஜாதகத்தில் நெருப்பு, நிலம், வாயு மற்றும் நீர் தத்துவ ராசிகள் வலிமை பெற்றால் மட்டுமே சம்பந்தப்பட்ட ஜாதகம் தனது பரிபூர்ண இயக்கத்தை பெரும், தங்களது சுய ஜாதகத்தில் நெருப்பு மண் தத்துவ ராசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது  உடல் மற்றும் செயல் திறனில் தடைகளை தரும் அமைப்பாகும், காற்று  தத்துவ ராசி பாதிக்கப்படுவது தனது அறிவார்ந்த முயற்சிகளில் வரும் பின்னடைவை உறுதிப்படுத்துகிறது.

 எனவே தங்களின் மன எண்ணத்தின் ஆசைகளை நிறைவு செய்ய நெருப்பு,மண் மற்றும் காற்று தத்துவ ராசிகள் தங்களுக்கு ஒத்துழைப்பை நல்கவில்லை என்பதால் தங்களது ஜாதகத்தில்  உள்ள " கிரகமாலிகா " யோகம் என்பது வாய் ஜாலமே அன்றி தங்களுக்கு எந்தவிதத்திலும் பயன்தராது  என்பதை கருத்தில் கொண்டு, சுய ஜாதகத்தில்  வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து வரும் நன்மைகளை மட்டும் சுவீகரிப்பது தங்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை தரும் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள், சுய ஜாதகத்தில் கிரகமாலிகா யோகம் உள்ளதால் தங்களுக்கு எதிர்பாராத யோகங்கள் கிட்டும் என்ற கனவை தவிர்த்து, சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையை கருத்தில் கொண்டு தங்களது வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லுங்கள், மற்றவர்கள் சொல்லும் வாய் ஜாலங்களை நம்பி செயல்பட்டால் மண்குதிரையை நம்பி நடு ஆற்றில் இறங்கியதற்கு பொருத்தமான பலாபலன்களை தாங்கள் அனுபவிக்க நேரும் என்பதை மனதில் நிலை நிறுத்தி வாழ்க்கையில் நலம் பெறுங்கள்.

 தங்களது சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் குரு திசை களத்திர ஸ்தான வழியில் இருந்து அதிர்ஷ்டங்களையும், குரு திசை சனி புத்தி பூர்வ புண்ணிய ஸ்தான வழியில் இருந்து சுபயோகங்களையும் நல்குவது தங்களுக்கு 7,5ம் பாவக வழியில் இருந்து நன்மைகளை தரும் என்பதால் களத்திரம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தான வழியிலான பலாபலன்களை சுவீகரித்து வளமான வாழ்க்கையை சிறப்பாக வாழுங்கள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக