செவ்வாய், 3 ஏப்ரல், 2018

சுய ஜாதக பலாபலன்கள் : சுப, அவயோக பலனை ஏற்று நடத்தும் திசா புத்திகள் !



சுய ஜாதகத்தில் சுபயோகங்கள் அல்லது அவயோகங்கள் இருப்பது முக்கியமல்ல, நடைபெறும் திசா புத்தி, எதிர்வரும் திசா புத்தி சுபயோக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து நன்மைகளையும் அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும், அதுபோன்றே பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களையும், துன்பங்களையும் நடைபெறும் திசா புத்தி அல்லது எதிர்வரும் திசா புத்திகள் ஏற்று நடத்தினால் மட்டுமே அவயோக பலாபலன்கள்  நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

 கீழ்கண்ட ஜாதகருக்கு, 1,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பாபந்தம் பெறுவதும், 6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் அவயோக அமைப்பாகும், 2,5,8,11ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 3ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 4ம் வீடு சுக ஸ்தானமான நான்காம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 10ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் சுபயோகங்களை நல்கும் அமைப்பாகும், தற்போழுது நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து உடல் நல குறைவை தந்த போதிலும், 9 பாவக வழியில் இருந்து சுபயோகங்களை பரிபூரணமாக வாரி வழங்கிக்கொண்டு இருப்பது வரவேற்க தக்க சிறப்பு அம்சமாகும், எதிர் வரும் சனி திசை ஜாதகருக்கு 10ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சுபயோகங்களை தருவது ஜாதகரின் வாழ்க்கையில் மிகுந்த அதிர்ஷ்டத்தை தரும் அமைப்பாகும்.


லக்கினம் : தனுசு
ராசி : கன்னி
நட்ஷத்திரம் : சித்திரை 2ம் பாதம்

ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பாபந்தம் பெறுவது ஜாதகருக்கு 1ம் பாவக வழியில் இருந்து அருங்கலைகளில் ஆர்வத்தை தரும், யோகம் பக்தி போன்ற விஷயங்களில் தேர்ச்சியை தரும், தனிமை விருப்பம், தொலைதூர பயணங்களில் அதீத ஆர்வம், முதலீடுகளில் அதிக விருப்பம் என்றவகையில் நன்மைகளை தந்த போதிலும், அனைவராலும் தொல்லை மற்றும் துன்பத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், மறைமுக எதிரிகள் தொந்தரவு, தடங்கல், அடிக்கடி வைத்திய செலவு, ஏமாற்றம், துன்பம், சதி வேலைகளால் இன்னலுறும் தன்மையை தரும், தன்னம்பிக்கை வெகுவாக குறையும், நல்லவர்களை காண்பது ஜாதகருக்கு அரிதிலும் அரிதாக அமையும், தேவையற்ற குழப்பமும் நிம்மதியின்மையும், ஜாதகரின் வாழ்க்கையில் பெரும் துன்பங்களை தரும், வீண் கற்பனை ஜாதகரின் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றும், சுய ஜாதகத்தில் மற்ற பாவக வழியில் இருந்து வரும் சுபயோகங்களை சுவீகரிக்க இயலாத நிலையை தரும், தன்னம்பிக்கையையும், சுய கட்டுப்பாட்டையும் ஜாதகர் அதிகம் வளர்த்துக்கொள்வது நல்லது, எந்த ஓர் காரியத்தையும் பலமுறை ஆலோசனை செய்து முடிவெடுப்பதே சகல நிலைகளில் இருந்தும் நன்மைகளை தரும், சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை இழப்பது கடுமையான பின்னடைவுகளை ஜாதகருக்கு  தரும் என்பதால் முறையான பரிகாரங்களை மேற்கொண்டு சகல நலன்களையும் பெறுக.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நிறைய விரைய செலவுகளை தரும், சேமிப்பு எதிர்பாராத விஷயங்களால் வீணடிக்கப்படும், தாம்பத்திய வாழ்க்கையில் எதிர்பாராத துன்பங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், நல்ல உறக்கம் அமைவது கேள்விக்குறியே, மனநிம்மதி இழப்பு, மனஅழுத்தம், மனப்போராட்டம் என சகல நிலைகளில் இருந்தும் பெருத்த துன்பத்தை தரும், மனஒருமைப்பாடு ஜாதகரின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடும், தெளிவில்லாத மனநிலை மற்றும் சிந்தனை ஆகியவை ஜாதகருக்கு பெருத்த சேதாரங்களை வழங்கக்கூடும், பங்கு சந்தை, சூது மூலம் நஷ்டத்தை தரும், அனைவராலும் தொல்லை மற்றும் எதிர்பாராத விபத்தை ஏற்படுத்தும், விடாமுயற்சியுடன் போராடி வாழ்க்கையில் வெற்றி பெரும் சூழ்நிலையை தரும்.

2,5,8,11ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 2ம் பாவக  வழியில் இருந்து எழுத்து பேச்சு, கலைத்துறை போன்ற அமைப்புகளில் சிறப்பான முன்னேற்றத்தை தரும், எண்ணத்தின் வலிமை அதிகமாகும், கைநிறைவான வருமான வாய்ப்புகள் வந்து சேரும், நிலையான வருமான வாய்ப்பு ஜாதகருக்கு தேடி வரும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் சகல சம்பத்தும் பெறுவதற்கான யோகம் உண்டு,  விளம்பர துறை, இலக்கியம், எஜென்ஜி, கமிஷன், தரகு தொழில், எதிர்பாராத லாபம், இனிமையான பேச்சு திறன் மூலம் பெரும் வியாபார விருத்தி என சகல சௌபாக்கியங்களையும் நல்கும்.

5ம் பாவக வழியில் இருந்து எஜென்ஜி விளையாட்டு உபகரணம், இசைக்கருவிகள்,  தைரிய செயல்பாடுகள், எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வல்லமை, இறுதி நேரத்தில் பிரச்சனைகளில் இருந்து விடுபடுதல், மந்திர உபதேசம் பெறுதல், வாக்கு வன்மை குல தெய்வ ஆசிர்வாதம், தெய்வீக அனுக்கிரகம், நினைத்தைதை சாதிக்கும் யோகம், பெரும் செல்வாக்கு, தீர்வுகளை அறியும் யோகம், பொதுவாழ்க்கையில் பெயரும் புகழும் உண்டாகும் தன்மை என்ற வகையில் சிறப்புகளை தரும்.

8ம் பாவக வழியில் இருந்து லாட்டரியில் அதிர்ஷ்டம், சுலப வழி வருமானம், இன்சூரன்ஸ் போனஸ் போன்றவற்றில் நல்ல லாபம், திடீர் அதிர்ஷ்டம், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பொருளாதார தன்னிறைவு, திடீர் பதவி மற்றும் அந்தஸ்து தேடி வரும் யோகம் என்ற வகையில் சிறப்புகளை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து பயணங்களில் விருப்பம், எழுத்து மற்றும் புத்தம் எழுதும் ஆற்றல், மாற்றத்தை முன்னெடுக்கும் வல்லமை, வெளிநாடுகளில் இருந்து வரும் செல்வாக்கு, கமிஷன், எஜென்ஜி மூலம் அபரிவித லாபம், மனோதைரியம், தன்னம்பிக்கை ஓங்கும் குணாதிசயம், எதையும் அதிர்ஷ்டம் மூலம் பெரும் ஆற்றல், பொது வாழ்க்கையில் வெற்றி என்றவகையில் சிறப்புகளை தரும், வியாபாரத்தில் மிகுந்த லாபத்தை தரும்.

3ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மருந்துகள் மூலம் மிகுந்த லாபத்தை தரும், அரிய கலைகளில் ஜீவித மேன்மையையும், விட்டுக்கொடுக்கும் தன்மையால் மிகுந்த லாபத்தையும் ஜாதகர் பெறுவார், அயல் தேசம் மற்றும் அயலார் மூலம் சிறந்த நன்மைகள் தேடி வரும், புதிய கண்டுபிடிப்பு, சட்டம் மூலம் நன்மை, தர்ம சிந்தனை, நேர்மையான வழியில் முன்னேற்றங்களை பெரும் யோகம் என்ற வகையில் சிறப்புகளை தரும்.

4ம் வீடு சுக ஸ்தானமான நான்காம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு மண் மனை வண்டி வாகன யோகம், சொந்த ஊரில் ஜீவிக்கும் தன்மை, கல்வி மற்றும் நிர்வாக துறையில் சிறந்து விளங்கும் தன்மை, வடக்கு வாயிற்படி கொண்ட வீடுகளில் ஜீவனம் செய்யும் பொழுது சிறப்பான முன்னேற்றங்களை பெரும் யோகத்தை நல்கும்.

6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு தேர்வு போட்டி பந்தயங்களில் வெற்றி, உடல் நல பாதிப்பு தொடர் சிகிச்சை மேற்கொள்ளும் சூழ்நிலை, வியாதியை எதிர்க்கும் தன்மை அற்ற நிலை, சிறந்த வேலை வாய்ப்பு மூலம் முன்னேற்றம் பெரும் யோகம், பிறரால் கடுமையான தொல்லைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலை, முன்னேற்றம் என்பது எதிரிகளால் வெகுவாக பாதிக்கப்படும் தன்மை, உடல் மனம் சார்ந்த சிக்கல்களில் சிரமப்படும் நிலை என பாதிப்புகளை தரும்.

7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு கடுமையான இன்னல்களை வாழ்க்கை துணை வழியில் இருந்து வாரி வழங்கும், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் எதிர்பாராத இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும் வெளிவட்டார பழக்க வழக்கம் கடுமையாக பாதிக்கப்படும், வாழ்க்கை துணைக்கு கடுமையான இன்னல்களை உருவாக்கும், திருமண வாழ்க்கையில் கடுமையான பாதிப்பு மற்றும் இல்லற வாழ்க்கையில் துன்பங்களை வாரி வழங்கும், பொது வாழ்க்கையில் எதிர்பாலினத்தல் வீண் அவப்பெயரை சந்திக்கும் சூழ்நிலையை தரும், சுய ஜாதகத்தில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவகத்தில் களத்திர ஸ்தானமே முதலிடம் பெறுகிறது என்பதால், மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை ஜாதகர் மிக கவனமுடன் எதிர்கொள்வதே சால சிறந்தது மேலும் ஜாதகர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க முறையான பிரீத்தி பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது, இல்லை எனில் இல்லற வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிட வாய்ப்பு உள்ளது.

9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மிகுந்த அறிவு திறனை வாரி வழக்கும், எதையும் தனது அறிவு திறன் கொண்டு வெற்றிகொள்ளும் வாய்ப்பை தரும், முன்னேர்களின் ஆசிர்வாதம் சிறந்த வாழ்க்கை பாதையை அமைத்து தரும், தெய்வீக தரிசனம், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம் ஜாதகரின் வாழ்ககையில் பல மாற்றங்களை வாரி வழங்கும், யோகம் மற்றும் தெய்வீகம் ஜாதகருக்கு சிறந்த நன்மையை வாரி வழங்கும்.

10ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு செய்யும் தொழில் அல்லது வேளையில் மிகுந்த லாபத்தை தரும், குறுகிய காலத்தில் தொழில் வெற்றிகளை சுவீகரிக்கும் வல்லமை உண்டு, பல தொழில் செய்யும் யோகத்தை நல்கும், எதிர்பாராத அதிர்ஷ்டம் மூலம் கை நிறைவான வருமான வாய்ப்புகளை ஜாதகர் பெறுவார், பெற்றோர் வழியிலான நன்மைகளை ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமையும், சுய உழைப்பில் வாழ்க்கையில் பெருத்த நன்மைகளை அனுபவிக்கும் தன்மையை தரும், கவுரவம் குறையாத தொழில் வாய்ப்புகளை வாரி வழங்கும்.

நடைபெறும் குரு திசை ராகு புத்தி தரும் பலாபலன்கள் : ( 02/05/2017 முதல் 26/09/2019 வரை )

நடைபெறும் குரு திசை ராகு புத்தி ஜாதகருக்கு 2,5,11ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், சுபயோக பலன்களை தருவதால் ஜாதகர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து சுபயோக பலன்களை வெகுவாக அனுபவிக்கும் தன்மையை தரும், எடுக்கும் காரியங்கள் வெற்றி தரும், முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் சுபயோகங்கள் ஜாதகருக்கு தேடி வரும், வெகுநாள் பிரச்சனைகள் விரைவில் முடிவுக்கு வரும்.

எதிர்வரும் சனி திசை தரும் பலாபலன்கள் : ( 26/09/2019 முதல் 05/09/2038 வரை )

எதிர்வரும் சனி திசை ஜாதகருக்கு 10ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது ஜாதகர் எதிர்பாராத தொழில் வெற்றிகளை அனுபவிக்கும் யோகத்தை தரும், சுய சிந்தனை மற்றும் சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் மிகப்பெரிய தொழில் வெற்றிகளை பெறுவார், ஜாதகரின் லாப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடான துலாம் ராசியில் அமைவது ஜாதகரின் வியாபார விருத்தி 100% விகிதம் மிகவும் சிறப்பான முன்னேற்றங்களை பெரும், தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும், வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தும் சனி திசை ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை லாப ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கும், ஜாதகர் தனது அறிவு திறன் மூலம் லாபங்களை அதிர்ஷ்டங்களை முழுவீச்சில் சனிதிசையில் பெறுவார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், வாழ்த்துக்கள்.

குறிப்பு :

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட வீடுகள் இருப்பினும் நடைபெறும், எதிர்வரும் திசாபுத்திகள் வலிமையான பாவக பலனை ஏற்று நடத்துவதால், ஜாதகர் சுபயோக பலன்களையே அனுபவிப்பார் என்பது கவனிக்க தக்க சிறப்பு அம்சமாகும், எனவே சுய ஜாதகத்தில் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவாக பலன்கள் என்ன என்பதில் தெளிவு பெறுவதே சகல நிலைகளில் இருந்து சிறப்புகளை தரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக