சனி, 1 செப்டம்பர், 2018

சகோதர ஸ்தானத்தில் பகை பெற்று அமர்ந்த ராகு திசை துன்பத்தை தருமா ?



 இயற்கையில் சாயா கிரகங்களான ராகு கேது சுய ஜாதகத்தில் வலிமை பெற்று இருப்பது ( தான் அமர்ந்த பாவகத்தை வலிமை பெற செய்வதின் மூலம் பெரும் வலிமை ) சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சாயா கிரகங்கள் அமர்ந்த பாவக வழியில் இருந்து மிகுந்த சுபயோகங்களை வாரி வழங்கும், மேலும் உயர் கணித சார ஜோதிட அமைப்பின் படி சாயா கிரகங்கள் அமர்ந்த வீடுகள் வலிமை பெற்ற பாவக தொடர்பை பெறுவது ஜாதகருக்கான யோக வாழ்க்கையை உறுதி செய்யும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே, கீழ்கண்ட ஜாதகர் சகோதர ஸ்தானத்தில் பகை பெற்று அமர்ந்த ராகு திசை துன்பத்தை தருமா ? என்ற கேள்வியை முன்வைத்திருக்கிறார், இதற்கான பதில் என்ன ? மேலும் சுய ஜாதகத்தில் சாயா கிரகங்கள் வலிமை பெறுவதால் சம்பந்தப்பட்ட ஜாதகர் பெரும் நன்மைகள் என்ன ? என்பதனை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.


லக்கினம் : தனுசு 
ராசி : சிம்மம் 
நட்ஷத்திரம் : பூரம் 3ம் பாதம்

மேற்கண்ட ஜாதகர் தனது கேள்வியில் சகோதர ஸ்தானத்தில் பகை பெற்று ராகு அமர்ந்து இருப்பதாக குறிப்பிட்டு இருக்கின்றார், இது மேலோட்டமாக காணும் பொழுது தனுசு லக்கினத்திற்கு கும்பத்தில் ராகு அமர்வது சகோதர ஸ்தானமான 3ம் வீடாக கருதுவது இயற்கையே, இருப்பினும் ஜாதகத்தில் பாவக கணிதத்தின் அடிப்படையில் காணும் பொழுது சகோதர ஸ்தானமான 3ம் பாவகம் கும்ப ராசியில் 326:19:46 பாகையில் ஆரம்பித்து மீன ராசியில் 359:08:15 பாகையில் நிறைவு பெறுகின்றது, இதற்க்கு உற்பட்ட பாகையில் ராகு அமரவில்லை மாறாக, கும்ப ராசியில் உள்ள 2ம் பாவகத்திற்க்கு உற்பட்ட 322:55:04 பாகையில் ராகு அமர்ந்திருப்பது கவனிக்கத்தக்க உண்மை நிலை, எனவே ஜாதகருக்கு கும்ப ராசியில் ராகு அமர்ந்து இருந்தாலும் அது 2ம் பாவகத்திலேயே அமர்ந்திருக்கின்றது, மேலும் கேது பகவான் சிம்மராசியில் அமர்ந்து இருந்தாலும், அவரும் சிம்மத்தில் உள்ள 8ம் பாவகத்திலேயே அமர்ந்து இருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

அடிப்படையிலேயே ஜாதகருக்கு சாயா கிரகங்களான ராகு கேது முறையே 2ம் பாவகம் மற்றும் 8ம் பாவகத்தில் அமர்ந்திருப்பதே உண்மை நிலை, மேலும் தான் அமர்ந்த பாவகத்திற்கு சாயா கிரகங்கள் 100% வலிமையை தரும் அமைப்பில்  காணப்படுவது ஜாதகருக்கு மிகுந்த யோக வாழ்க்கை தரும் அமைப்பாகும், மேலும் சுய ஜாதகத்தில் 2ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவக தொடர்பை பெறுவது வரவேற்கத்தக்கது, ஜாதகர் இரண்டாம் பாவக வழியில்  இருந்து இசையில் ஆர்வம், இனிமையான பேச்சு திறன், கலைத்துறையில்வெற்றி, நிறைவான வருமான வாய்ப்புகள், பொழுது போக்கு அம்சங்களில் ஆர்வம், குழந்தைகள் வழியிலான யோக வாழ்க்கை, தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகள், இனிமையான இல்லற வாழ்க்கை, தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்களில் தனி திறன், சிறந்த நிர்வாக திறன் என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும், 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நீண்ட ஆயுளை  தரும் என்பது கவனிக்கத்தக்கது.

இனி ஜாதகரின் கேள்விக்கான பதிலை கருத்தில் கொள்வோம்.

நடைபெறும் ராகு திசை  தரும் பலன்கள் : ( 23/12/2016 முதல் 23/12/2034 வரை ) 

ராகு தனது திசையில் 6ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவக தொடர்பை பெற்று பாதக ஸ்தான பலனை சத்ரு ஸ்தானமான 6ம் பாவக வழியில் இருந்து  தருவது ஜாதகருக்கு உகந்தது அல்ல ஏனெனில் ஜாதகருக்கு வரும் எதிர்ப்புகள் மிகவும் அதிக அளவில் இருக்கும், ஜாதகரின் பாதக ஸ்தானம் பெரும் பகுதி சர நீர் ராசியான கடகத்தில் வியாபித்து நிற்பது மிகுந்த மன உளைச்சலையும், போராட்டங்களையும் தரும், ஜாதகருக்கு வரும் எதிர்ப்புகள் மனதளவில் வெகுவான பாதிப்புகளை தரக்கூடும், மேலும் கடன் , உடல் நலம் சார்ந்த விஷயங்களில் அதீத கவனம் செலுத்துவது அவசியமாகிறது, குறிப்பாக செலவுகளை கட்டுக்குள் வைப்பது மிகுந்த நன்மைகளை ஜாதகருக்கு வாரி வழங்கும், சிறந்த நிதி நிர்வாகம் ஜாதகரின் வாழ்க்கையில் வரும் நெருக்கடிகளை வெகுவாக குறைக்கும், சுய ஜாதகத்தில் ராகு பகவான் 2ல் வலிமை பெற்று அமர்ந்த போதிலும், தனது திசா புத்தியில் 6ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு சற்று இன்னல்களை தரும் அமைப்பாகவே கருத வேண்டியுள்ளது, ராகு திசை ராகு புத்தியில் மட்டும் ஜாதகர் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டு, தனக்கு வரும் சத்ரு ஸ்தான இன்னல்களில் இருந்து விடுபடுவது அவசியமாகிறது, யாரிடமும் பகைமை பாராட்டாமல், நட்பு கொள்வது மிகுந்த யோகத்தை தரும், மேலும் தனது முயற்சியில் சற்றும் மனம் தளராமல் மீண்டும் மீண்டும் போராடுவது நல்ல வெற்றிகளை வாழ்க்கையில் வாரி வழங்கும்.

சுய ஜாதகத்தில் 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவக தொடர்பை பெறுவது வெளிநாடு சார்ந்த வகையில் இருந்து இன்னல்களை தரக்கூடும் என்பதால் அது சார்ந்த முயற்சியை கைவிடுவது நல்லது, சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற பாவக தொடர்பான ( 2,11ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவக தொடர்பு, 3,9ம் வீடுகள் அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பு ) 2,3,5,9ம் பாவக வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கையை சுவீகரிக்கும் தன்மையை ஆய்வு செய்து அதனை நடைமுறைப்படுத்துவதே ஜாதகருக்கு உகந்த நன்மைகளை தரும்.

குறிப்பு :

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகு கேது வலிமை பெற்று 2,8ம்  பாவகத்தில் அமர்ந்த போதிலும், ராகு தனது திசையில் 6 ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெற்று  பலாபலனை தருவது உகந்தது அல்ல, கேது தனது திசையில் 4,10ம்  வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக தொடர்பை பெற்று யோக பலனை தருவது மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும் அமைப்பாகும், நவகிரகங்கள் சுய ஜாதகத்தில்  வலிமை பெற்ற பாவக தொடர்பை ஏற்று நடத்தினால் ஜாதகரின் வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும் என்பதில் மாற்று கருத்தென்பதே இல்லை எனலாம், வலிமை அற்ற பாவக பலனை தரும் பொழுதே ஜாதகர் சம்பந்த பட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார், " வாழ்த்துக்கள் "

 வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக