சனி, 23 பிப்ரவரி, 2019

தொழில், திருமண யோகம் சுய ஜாதக ரீதியான ஆய்வு !


சுய ஜாதக பலாபலன்கள்

" அவனின்றி ஓர் அணுவும் அசையாது " என்பதற்கிணங்க சுய ஜாதக வலிமை இன்றி யாதொரு நிகழ்வுகளும் நிகழ வாய்ப்பில்லை என்பதே உண்மை நிலை, பொதுவாக சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையை அடிப்படையாக கொண்டே யாவருக்கும் நன்மை தீமைகளோ, யோக அவயோகங்களோ நடைமுறைக்கு வருகின்றது, கீழ்கண்ட உதாரண ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலை என்ன ? அது தரும் யோக அவயோகம் என்ன ? நவ கிரகங்கள் தனது திசாபுத்திகளில் தரும் பலாபலன்கள் என்ன என்பதனை இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : மகரம்
ராசி : மீனம்
நட்ஷத்திரம் : ரேவதி 4ம் பாதம்

ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் :

1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சுய ஜாதகத்தில் மிகவும் சிறப்பான அம்சமாகும், 1ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் வெற்றி புகழ், கீர்த்தி, சுய முன்னேற்றம், தெளிந்த நல்லறிவு, எதிர்ப்புக்களை களைந்து நலம் பெரும் தன்மை, முற்போக்கு சிந்தனை, நல்ல நண்பர்கள், பொதுமக்கள் ஆதரவு, சிறந்த கூட்டாளிகள், எதிர்பாராத முன்னேற்றம், வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் யோக வாழ்க்கை, எதிர்பாலின சேர்க்கை வழியில் ஜாதகர் பெரும் முன்னேற்றம், தெய்வீக சிந்தனை, சமயோசித அறிவு திறன், உடல்நல குறைவில் இருந்து விரைவாக குணம் பெரும் யோகம், யோக உடற்பயிற்சியில் ஆர்வம், புதிய சிந்தனை, பொது வாழ்க்கையில் வெற்றி, அரசியல் ஆதாயம், நட்பு வழியில் இருந்து ஜாதகர் பெரும் நன்மைகள் மற்றும் முன்னேற்றம் வெகு சிறப்பாக அமையும், பொதுமக்கள் சார்ந்த தொழில், வியாபாரம் அல்லது சேவைகள் மூலம் ஜாதகருக்கு அபரிவிதமான நன்மைகள் வந்து சேரும், வியாபார விருத்தி சிறப்பாக அமையும், ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நல்ல ஞானம் உண்டாகும் என்பது கவனிக்க தக்க சிறப்பு அம்சமாகும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல நண்பர்கள் சேர்க்கை, சிறந்த கூட்டாளிகள், சிறப்பான வெளிவட்டார பழக்க வழக்கங்கள், வியாபார முன்னேற்றம், சிறந்த தொழில் ஞானம், பல தொழில் புரியும் யோகம், எதிர்ப்புகள் அனைத்தும் ஜாதகருக்கு சாதகமாக மாறும் தன்மை, எண்ணத்தின் வழியில் சிறப்பான யோக வாழ்க்கையை பெரும் நிலை, தெய்வீக சிந்தனை, ஆன்மீகத்தில் ஈடுபாடு, வண்டி வாகன யோகம், கூட்டு தொழில் வழியிலான முன்னேற்றம், வெளிநாடு யோகம், பொதுமக்கள் வழியில் இருந்து வரும் ஆதரவு, அந்நியர் மூலம் ஆதாயம், வலிமை மிக்க கூட்டாளி, யோகமிக்க வாழ்க்கை துணை, வியாபார ரீதியான அபரிவித வளர்ச்சி, பொது வாழ்க்கையில் வெற்றி, அரசியல் ஆதாயம், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் தன்மை, கூட்டு முயற்சியின் மூலம் அபரிவித லாபம் என வாழ்க்கையில் சகல சௌபாக்கியமும் வந்து சேரும்.

2,6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியிலான முன்னேற்றம், எழுத்து வழியில் லாபம், பத்திரிகை துறையில் முன்னேற்றம், இனிமையான பேச்சு திறன், பயணங்கள் வழியிலான லாபம், வெளிநாட்டார் மூலம் முன்னேற்றம், ஆராய்ச்சி மனப்பான்மை, ஆன்மீகத்தில் தெளிவு, அரசியல் ஆளுமை, சாஸ்த்திரம், மருத்துவம் மற்றும் ஜோதிடத்தில் தேர்ச்சி, செயற்கரிய காரியங்களை சரியான திட்டமிடுதல்களுடன் செய்யும் வல்லமை, புதிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றிகொள்ளும் தன்மை, வாக்கு வன்மை, எதிலும் தெளிவு என்ற வகையில் நன்மைகளை தரும்.

6ம் பாவக வழியில் இருந்து மருத்துவ துறையில் நல்ல ஞானம், பயணம் மூலம் லாபம் மற்றும் அதிர்ஷ்டம், வருமுன் உணரும் சக்தி, முன்னோர் செய்த புண்ணியத்தின் பலனை சுவீகரிக்கும் தன்மை, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம், கடன் சார்ந்த இன்னல்களில் இருந்து விரைவாக வெளியேறும் தன்மை, மற்றவர் பணம் கையிருப்பு, போட்டி பந்தயங்களில் வெற்றி, வழக்குகளில் வெற்றி, எதிர்ப்புகளை சமாளிக்கும் வல்லமை என சிறப்பான நன்மைகளை சத்ரு ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கும்.

9ம் பாவக வழியில் இருந்து நல்ல கல்வி ஞானம், சிறந்த அறிவாளி, ஆய்வு கல்வியில் தேர்ச்சி, பயணங்கள் மூலம் நல்ல லாபம், சாஸ்திரத்தில் தேர்ச்சி, எதிர்பாராத முன்னேற்றம், பெரிய மனிதர்கள் ஆதரவு, பல தொழில் வழியிலான வருமான வாய்ப்பு, மண் தத்துவம் சார்ந்த விஷயங்களில் நல்ல ஞானம், தெய்வீக ஞானம், சூழ்ந்தநிலை மற்றும் இடமாற்றத்தில் விருப்பம், அனைவரிடமும் நற்ப்பெயர் பெரும் தன்மை, அனைவரையும் அனுசரித்து செல்லும் மனப்பக்குவம், எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக வாழும் தன்மையை தரும், பாதிப்புகள் தானாக விலகும்.

சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக தொடர்புகள் :

3,5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தரும், குறிப்பாக 3ம் பாவக வழியில் இருந்து முயற்சிக்கும் காரியங்களில் தொய்வு, சகோதர வழி ஆதரவு இன்மை, செயல்பாடுகளில் வீரியமின்மை, தோல்வியால் துவண்டு போகும் தன்மை, சரியான விஷயங்களை கிரகிக்க இயலாத நிலை, தன்னம்பிக்கை பாதிக்கும், சுய முன்னேற்றம் தடை படும், உறவுகள் வழியிலான இன்னல்கள், எதையும் விரைவாக பெற இயலாமல் தடுமாறும் நிலையை உருவாக்கும்.

5ம் பாவக வழியில் இருந்து பூர்வீகத்தில் ஜீவனம் மேற்கொள்வதால் வரும் தொந்தரவுகள், சமயோசித அறிவு திறனில் பாதிப்பு, நுண்ணறிவு தன்மையில் குறைபாடு, ஆழ்ந்து சிந்திக்கும் வல்லமை அற்ற நிலை, குல தெய்வ சாபம், முன்னேற்ற தடைகள், எதிர்ப்புகளை கண்டு அஞ்சும் நிலை, சரியான முடிவுகளை எடுக்க இயலாமல் தடுமாறும் தன்மை, சரியான வழிகாட்டுதல் இல்லாமல் இன்னலுறும் நிலை, சரியான முடிவுகளை மேற்கொள்ள இயலாமல் போராட்ட வாழ்க்கையை சுவீகரிக்கும் தன்மை என ஜாதகருக்கு அதீத துன்பங்களை தருவதுடன், முதலில் பெண் வாரிசை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டத்தின் தன்மை வெகுவாக குறையும், சுய உழைப்பு மட்டுமே ஜாதகருக்கான வாழ்க்கையினை உறுதி செய்யும், முற்போக்கு சிந்தனை குறைந்து பழமை வாதங்களில் ஆர்வம் அதிகரிக்கும், மனம் வெகுவாக பாதிக்கும், குழப்பமும் சந்தேக எண்ணங்களும் ஜாதகரின் வாழ்க்கையில் அதீத இன்னல்களை தரும், சில நேரங்களில் ஜாதகர் மேற்கொள்ளும் முடிவுகள் யாவும் பேரிழப்பை தரக்கூடும் என்பதை கருத்தில் நலம் பெறுவது அவசியமாகிறது.

8,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை பெறுவது, 8ம் பாவக வழியில் இருந்து விபத்து, மருத்துவ செலவினங்கள்,  எதிர்பாராத மருத்துவ செலவுகள், அனைத்திலும் ஏமாற்றம், மனக்குழப்பம்,தலைவலி சார்ந்த இன்னல்கள், உடல் நல குறைபாடுகள், அதீத மனப்போராட்டம், அனைவராலும் ஏமாற்றம், அறுவை சிகிச்சை, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பொருளாதார இழப்புகள், முன்னேற்ற தடை என்ற வகையில்  இன்னல்களை தரும்.

10ம் பாவக வழியில் இருந்து வெளியூர் அல்லது வெளிநாட்டில் வேலை அல்லது தொழில் அமையும் தன்மை, போதிய வருமானம் இன்மை, அடிக்கடி இடமாற்றம் அல்லது தொழில் மாற்றம், வரவைவிட செலவு அதிகம், முரண்பட்ட கருத்துக்கள் மூலம் தொழில் அமைப்பில் சிக்கல்கள், கவுரவ குறை ஏற்படும் நிலை, நிலையற்ற தொழில், செய்யும் தொழிலில் அதிக போராட்டங்களை சந்திக்கும் நிலை, தனித்து செயல்படும் காரியங்களில் தொடர்ந்து இன்னல்களை சந்திக்கும் நிலை என்ற வகையில் துன்பங்களை தரக்கூடும்.

12ம் பாவக வழியில் இருந்து நிறைய செலவினங்கள், பங்கு சந்தை லாட்டரி தொழில் வழியில் இழப்புகள், சூது மூலம் பெரும்நஷ்டம், திருப்தி இல்லா வாழ்க்கை, அனைவராலும் நஷ்டம், விபத்து அதீத துன்பங்களை சந்திக்கும் நிலை, போதிய விழிப்புணர்வு அற்ற தன்மை, எதிர்ப்புகள் வழியில் இருந்து வரும் தொல்லைகள் என்ற வகையில் இன்னல்களை தரும்.

நடைபெறும் சூரியன் திசை தரும் பலன்கள் : ( 05/12/2018 முதல் 04/12/2024 வரை)

ஜாதகருக்கு நடைபெறும் சூரியன் திசை 2,6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக தொடர்பை பெற்று வலிமையான யோக பலனை தருவது வரவேற்கத்தக்கது, இது ஜாதகருக்கு குடும்ப வாழ்க்கையில் சிறப்பு, கைநிறைவான வருமானம், இனிமையான இல்லற வாழ்க்கை, வாக்கு வன்மை மூலம் சகல சௌபாக்கியம் என்ற வகையில் யோக வாழ்க்கையை தரும், மேலும் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம், சத்ரு வழியில் ஆதாயம், மருத்துவ துறையில் சீரிய முன்னேற்றம், தெய்வீக அனுக்கிரகம், ஆன்மீக பெரியோர்கள் வழியில் வாழ்க்கையில் வெகு சிறப்பு, தனது சுய அறிவு திறன் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெரும் தன்மை என்ற வகையில் சுபயோகங்களை  வாரி வழங்கும்.

அடுத்து வரும் சந்திரன் திசையும் ஜாதகருக்கு மேற்கண்ட 2,6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக தொடர்பை பெற்று வலிமையான யோக பலனை தருவது வரவேற்கத்தக்கது, எனவே எதிர் வரும் சந்திரன் திசையும் ஜாதகருக்கு மிகுந்த சுபயோக பலாபலன்களை வாரி வழங்கும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை வாழ்த்துக்கள்.

குறிப்பு :

சுய ஜாதக பலன் காண மூன்று விதி முறைகளை கையாள்வது அவசியமாகிறது, 1) சுய ஜாதகத்தில் 12 பாவகங்களின் வலிமை நிலையை பற்றி தெளிவாக உணர்வது, 2) நடைபெறும் திசைபுத்திகள் 12 பாவகங்களில் எந்த பாவக தொடர்பை பெற்று பலனை தருகிறது என்பதை பற்றி தெளிவாக உணர்வது, 3) திசை புத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு கோட்சார கிரகங்கள் தரும் வலிமை வலிமை இன்மையை பற்றிய தெளிவு பெறுவது ஆகியவை சுய ஜாதக பலாபலன் துல்லியமாக கண்டுணர வாய்ப்பை வழங்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக