வெள்ளி, 1 மார்ச், 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : துலாம் லக்கினம் ( 2019-2020 )


 துலா லக்கின அன்பர்கள் சகல சௌபாக்கியங்களையும் பரிபூர்ணமாக பெரும்  நேரமிது, நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

 லக்கினம் : துலாம் 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமாகவும், சர காற்று ராசியாகவும் விளங்கும் துலாம் ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்திலும், வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகங்கள் இனிவரும் 18 மாதங்கள் வழங்கும் பலாபலன்கள் பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, ராகுவின் சஞ்சாரம் பாக்கிய ஸ்தானத்தில் அமைவது மிகசிறந்த யோக பலன்களை தரும் என்ற போதிலும், புதன் கோணாதிபதியாக சூரியனுடன் 14 பாகைக்கு மேல் சேராமல் சஞ்சாரம் செய்யும் நிலையில் மட்டுமே சுபயோக பலாபலன்கள் துலா லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும். தனது அறிவு திறன் கொண்டு வாழ்க்கையில் வரும் இன்னல்களை வெகு எளிதாக கடந்து செல்லும் வாய்ப்பை தரும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், முயற்சிக்கும் காரியங்கள் இறை அருளின் கருணையினால் சிறப்பான வெற்றிகளை வாரி  வழங்கும், உயர் கல்வி சார்ந்த விஷயங்களில் எதிர் பாராத நன்மைகளையும் பாராட்டு மற்றும் பரிசுகளையும் பெறுவதற்கான வாய்ப்பை வாரி வழங்கும், முன்னோர்கள் ஆசிர்வாதம், பெரியமனிதர்கள் ஆதரவு, மக்கள் செல்வாக்கு, பிரபல்ய யோகம், பல ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்றுவரும் வாய்ப்பு, சரியான வழியில் வாழ்க்கையில் முன்னேற்றங்களை பெரும் தன்மை, அதீத போராட்டங்களை கடந்து சிறப்பான யோக வாழ்க்கையை பெரும் தன்மை, நல்ல மனிதர்களின் சேர்க்கை, ஆன்மீக பெரியோர்களின் சந்திப்பு, அவர்கள் வழியிலான வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், புதுவித சிந்தனைகளின் வழியில் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளும் தன்மை என முழு அளவில் நன்மையான பலன்கள் நடைமுறைக்கு வரும், பயணங்கள் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம், எதிர்பாராத சந்திப்புகள் மூலம் நலம் பெரும் தன்மை, அந்நியர் மற்றும் மேல்நாட்டினர் மூலம் வழியில் இருந்து பெரும் ஆதாயம் என ராகுவின் சஞ்சாரம் சுபயோகங்களை வாரி வழங்கும்.

 அதே சமயம் புதன் கேந்திர அதிபதியாக 14 பாகைக்குள் சஞ்சாரம் செய்யும் நிலையில்  துலா லக்கின அன்பர்களுக்கு சற்று இன்னல்களை வெகுவாக தரக்கூடும், குறிப்பாக பெயருக்கு களங்கம் ஏற்படும் விதத்தில் செயல்படுவதை தவிர்ப்பது நல்லது, பெரியோர்களை மதித்து நடப்பதும், அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதும் சிறப்பான நன்மைகளை தங்களுக்கு வாரி வழங்கும், முறையான பித்ரு காரியங்களை மேற்கொண்டு அவர்களின் ஆசியின் மூலம் நன்மைகளை சுவீகரிப்பது அவசியமாகிறது, மிக சிறந்த ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று முறையான நிவர்த்தி பரிகாரங்களை மேற்கொண்டு சகல சௌபாக்கியங்களையும் பெற "ஜோதிடதீபம்" அறிவுறுத்துகிறது.

 வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் துலாம் லக்கின அன்பர்களுக்கு இனிவரும் 18 மாதங்கள் தான் சஞ்சரிக்கும் 3ம் பாவக வழியில் இருந்து மிதமிஞ்சிய சுபயோகங்களை வாரி வழங்குவார் என்பதில்  சந்தேகம் இல்லை, எடுக்கும் காரியங்கள் யாவும் வெற்றி மேல் வெற்றி தரும், வியாபார துறையில் உள்ள அன்பர்களுக்கு இது ஒரு யோக காலமாக கருதலாம், தெய்வீக சிந்தனை மேலோங்கும், கமிஷன் அல்லது தரகு வழியில் ஜீவனம் மேற்கொள்ளும் அன்பர்களுக்கு திடீர் யோக வாழ்க்கை அமையும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும், லட்சியம் மற்றும் அபிலாசைகள் அனைத்தும் கைகூடி வரும் சுபயோக நேரமிது, புதிய சிந்தனைகள் அறிவார்ந்த செயல்பாடுகள் அனைத்தும் தங்களுக்கு வெகுவாக கைகொடுக்கும், சகோதர வழி ஆதரவு, உறவுகள் வழியில் இருந்து வரும் உதவிகள் என ஒவ்வொரு நாளும் தங்களுக்கு வெகு சிறப்பான நன்மைகளையும், முன்னேற்றங்களையும் பரிபூர்ணமாக வாரி வழங்கும், இதுவரை இல்லாத அதிர்ஷ்ட வாழ்க்கையை அனுபவிக்கும் யோகம் உண்டாகும், கல்வி துறையில் அரசு பணியில் உள்ள அன்பர்களுக்கு எதிர்பாராத நன்மைகளும் முன்னேற்றங்களும் கிடைக்க பெறுவார்கள், வியாபாரிகளுக்கு லாபம் பன்மடங்கு கூடி வரும், புதிய தொழில் செய்வோருக்கு இனிவரும் காலம் மிகுந்த சிறப்புக்களையும், அதிர்ஷ்டம் நிறைந்த நல்ல வாய்ப்புக்களையும் வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்பதனால் முயற்சித்து சகல சௌபாக்கியங்களையும் பரிபூர்ணமாக பெறுங்கள்.

தகவல் தொழில் நுட்பம், உயர் கல்வி, பட்டய படிப்பு என துலா லக்கின  அன்பர்களுக்கு கேது பகவானின் சஞ்சாரம் வெகுவான சிறப்புகளை வாரி வழங்கும், புதிய யுக்தியை கையாண்டு குறுகிய காலத்தில் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும், சுய அறிவு வெகுவாக பிரகாசிக்கும், பல தொழில் செய்யும் யோகம் உண்டாகும், நல்லவர்கள் சேர்க்கை தங்களின் வாழ்க்கையில் வெகுவான நன்மைகளை வாரி வழங்கும், உயர் ரக தொழில் நுட்பம் சார்ந்த உபகரணங்கள் மூலம் அதீத லாபம் உண்டாகும், வெளிநாடுகளில் இருந்துவரும்  பொருட்கள் மூலம் நல்ல லாபம் உண்டாகும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்யும் அன்பர்களுக்கு மிதம் மிஞ்சிய லாபம் கிட்டும், சுய உழைப்பிற்க்கான பாராட்டுதல்கள் ஊக்குவிப்பு தங்களுக்கு பரிபூர்ணமாக கிடைக்கும், எழுத்து சார்ந்த துறை பத்திரிக்கை துறையில் உள்ள அன்பர்களுக்கு சீரிய முன்னேற்றம் உண்டாகும், கேது பகவானின் வீரிய ஸ்தான சஞ்சாரம் துலா லக்கின அன்பர்களுக்கு சாதிக்க இயலாதது எதுவும் இந்த உலகில் இல்லை என்பதை உறுதி செய்து வெற்றியாளனாக பரிணமிக்க செய்யும் அன்பர்களே, வாழ்த்துக்கள்.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 9,3ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் துலா லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 9,3ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து துலா லக்கின அன்பர்களுக்கு யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக