ஞாயிறு, 21 செப்டம்பர், 2025

மேஷம் குருபெயர்ச்சி பலன்கள் ( 2025 - 2026 ) சுகபோக வாழ்வை பெரும் மேஷராசியினர் !

மேஷம் குருபெயர்ச்சி பலன்கள் 



 குருதிசை அல்லது குருபுத்தி தற்போழுது நடைமுறையில் உள்ள மேஷ ராசியினர் மட்டும் நிகழவிருக்கும் குருபெயர்ச்சியினை சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளவும், கடக ராசியில் புனர்பூசம்(குரு) பூசம்(சனி) ஆயில்யம்(புதன்) நட்சத்திரத்தில் ( 18/10/2025 முதல் 31/10/2026 வரை ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் குருதிசை அல்லது குருபுத்தி நடைமுறையில் உள்ள மேஷ ராசி அன்பர்களுக்கு வழங்கும் சுபயோகங்கள் என்ன என்பதை கருத்தில் கொள்வோம் அன்பர்களே !

 சுக ஸ்தானமான 4ம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குருபகவான் மேஷ ராசி அன்பர்களுக்கு நீண்ட நாள் கனவான சொந்த வீடு இடம் வண்டி வாகன யோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கிய போதிலும் ஆண்களுக்கு தனது தாய் வழியிலும், பெண்களுக்கு தமது தந்தை வழியிலும் இன்னல்களை வீண் செலவினங்களை தரக்கூடும், தங்களின் கண்காணிப்பு திறன் அதிகரிப்பதுடன், ஆளுமை திறனும் மேம்படும், தாய் வழி சொத்துக்கள் கிடைக்கும், புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு, எதிர்பாராத பதவி உயர்வு, மேலதிகாரி ஆதரவு, புதிய யுக்தி மூலம் பெரும் வருமான உயர்வு என்ற நிலையில் நன்மைகள் உண்டாகும், விவசாயம் செழிக்கும், விவசாயி வாழ்க்கை முன்னேற்றம் பெரும், திடீர் தன சேர்க்கை தங்களின் செல்வாக்கை உயர்த்தும், வெளிநாடு சென்றுவரும் யோகமும் அதன் மூலம் பொருளாதார முன்னேற்றமும் உண்டாகும், உறவுகளின் ஏளனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து அவர்களுக்கு தங்களின் பெருமையை உணர்த்துவீர்கள், இதுவரை மதிக்காத சொந்தபந்தம் தங்களின் உறவுக்காகவும் நட்புக்காகவும் ஏங்குவார்கள், குறிப்பாக காதலில் ஏமாற்றம் அடைந்தவர்கள் மேன்மை நிறைந்த இல்லற வாழ்க்கை துணையை பெரும் யோக காலமிது.

 குரு பகவான் தனது 5ம் சுபபார்வையை திடீர் அதிர்ஷ்டத்தை தரும் தனது வர்க கிரக (செவ்வாய் ) வீடான விருச்சிக ராசியை ( 8ம் பாவகம் ) வசீகரிப்பது தடைபட்ட திருமண வாழ்க்கையை சீரும் சிறப்புமாக நடைபெற வைப்பார், தங்களது வாழ்க்கை துணை மூலம் எதிர்பாராத மாற்றங்களைகளும் முன்னேற்றங்களையும் சுவீகரிக்கும் நேரமிது, தங்களுக்கு தொடர்ந்து துன்பத்தை தந்துகொண்டு இருந்த நபர்கள் அனைவரும் சிதறி ஓடுவர், எதிரிகளுக்கு தோல்வியை பரிசளிக்கும் அற்புதமான நேரமிது எதிர்த்தவர்கள் அனைவரும் உங்கள்முன் மண்டியிடும் சூழ்நிலை உருவாகும், அதிகாரமிக்க பொறுப்புகள் திடீர் என தங்கள் திறமைக்கும் கைவரப்பெறும், போட்டி பந்தயம் வம்பு வழக்குகள் மூலம் வெற்றிகள் வந்து சேரும், நல்ல நண்பர்கள் துணையிருப்பார்கள், தீயவர் விலகி ஓடுவார்கள், பொதுமக்கள் ஆதரவு பன்மடங்கு பெருகும், பிரிந்து இருந்த கணவன் மனைவி ஒன்றுசேரும் வாய்ப்பை தரும், காதலர்களுக்கு யோகமான காலமிது மனதில் நினைத்தவரையே  வாழ்க்கை துணையாக அடையும் யோகம் உண்டாகும், உறவுகள் ஆதரவு பெற்றோர் ஆதரவு திடீர் சொத்துக்கள், பூர்வீகத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வரும், கனவுகள் நனவாகும், அரசியல் ரீதியான உயர் பதவி தேடி வரும்.

 குரு பகவான் தனது 7ம் சுபபார்வையை தொழில் ஸ்தானமான தனது எதிர்வர்க்க கிரக ( சனி ) வீடான மகர ராசியை ( 10ம் பாவகம் ) வசீகரிப்பது தங்களுக்கு அதீத தனித்திறமை இருந்த போதிலும் வேலைப்பளுவின்  காரணமாக சற்று சோர்ந்து போக வாய்ப்பு உண்டு, தேவையில்லாத இடத்தில் தங்களின் கடின உழைப்பை நீங்கள் விரையம் செய்ய கூடும் என்பதால் சற்று விழிப்புணர்வுடன் இருப்பது நலம் தரும், தேங்கி இருக்கும் சரக்குகள் தங்களுக்கு தற்போழுது நல்ல லாபத்தை ஈட்டி தரும், வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், புதிய தொழில் வாய்ப்புகள், வியாபார யுக்திகள் தங்களை சிறந்த தொழில் அதிபராக பரிணமிக்க வைக்கும், வேறு எவரையும் சார்ந்து இல்லாமல் தனித்து இயங்கி வெற்றி பெரும் யோகம் உண்டாகும், கூட்டு முயற்சி சில நேரங்களில் தங்களுக்கு அதீத நெருக்கடியை தரக்கூடும், இதுவரை நல்ல தொழில் அல்லது வேலை அமையாமல் சிரமபட்டு கொண்டு இருந்த மேஷ ராசி அன்பர்களுக்கு தகுதி திறமைக்கான நல்ல வேலைவாய்ப்பும், தொழில் யோகமும் உண்டாகும், கவுரவமான யோக வாழ்க்கையை தொழில் வழியில் இருந்து இந்த குருமாற்றம் தங்களுக்கு தன்னிறைவாக வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஆண்கள் தனது தந்தை வழியிலும் பெண்கள் தனது தாய் வழியிலும் மிகப்பெரிய தனசேர்க்கையை பெரும் நேரமிது.

 குரு பகவான் தனது 9ம் சுபபார்வையை நிறைவான மனநிலையை தரும் தனது வர்க கிரக (குரு ) வீடான மீன ராசியை ( 12ம் பாவகம் ) வசீகரிப்பது முதலீடுகள் வழியிலான லாபத்தை அதிகரிப்பதுடன், புதிய முதலீடுகளில் தங்களின் ஆளுமையை செயல்படுத்தும் யோகத்தை தருவார், புதியவர்கள் வெளிநாட்டினர் தங்களின் முன்னேற்றத்திற்க்கு உறுதுணையாக அமைவர், உறவினர் ஆதரவு அதிகரிக்கும், இதுவரை இருந்துவந்த மனக்கவலை நீங்கி  நல்ல மனநிம்மதி கிட்டும், ஆன்மீகத்தில் மிகப்பெரிய வெற்றி கிட்டும், தெய்வீக அனுகூலமும், பெரியோர்களின் ஆசீர்வாதமும் சிறப்பான மாற்றத்தை தங்களுக்கு தருவதுடன் பொருளாதர தன்னிறைவை சுவீகரிக்கும் யோகத்தையும் வழங்கும், பங்கு வர்த்தகம், ரியல் எஸ்டேட் தொழில், இடம் வீடு வண்டி வாகன தொழில், ஆடை ஆபரண தொழில்களில் அபரிவிதமான முன்னேற்றங்கள் உண்டாகும், வியாபாரம் விருத்தி அடைவதுடன் ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் மிகப்பெரிய அதிர்ஷ்டம் உண்டாகும், கடன் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விரைவாக வெளியேறும் யோகமும், கைநிறைவான வருமான வாய்ப்பையும் பெறுவீர்கள்.

குறிப்பு : தங்களின் சுயஜாதக வலிமையை கருத்தில் கொண்டு ஜாதக பலன்களை காண்பதே 100% விகிதம் சரியான பலன்களாக அமையும். 

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

9443355696 

புதன், 2 ஜூலை, 2025

ஜென்ம லக்கினம் எனும் முதல் பாவகம் !

 


 ஜாதகரின் தலை மற்றும் மூளையை குறிக்கும், மேலும் அரசியல் ரீதியான ஜாதகரின் செயல்பாடுகள், சிறப்பு அந்தஸ்து மற்றும் அடையாளம், நேர்த்தியான அழகு, அமைதியான குணம், அரசியல் சார்ந்த அறிவாற்றல், நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம், தான் கொண்ட லட்சியம், இயல்பு வாழ்க்கை, இந்த பிறவியின் தன்மை மற்றும் நோக்கம், இளமை காலங்களில் ஜாதகர் பெரும் யோக வாழ்க்கை, உயிர்சக்தி மற்றும் அதன் செயல்திறன், உழைப்பின் தன்மை அதனால் பெரும் நன்மைகள், உடல் ரீதியான பாதிப்பில் இருந்து மீண்டுவரும் யோகம்,  உயிரின் வீரியம், உடல் வலிமை, நேர்த்தியான உருவ அமைப்பு, ஐம்புலன்கள் செயல்படும் தன்மை.

 ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை, கனவு நனவாக ஜாதகரின் உழைப்பு, கல்வியில் பெரும் வெற்றி, புகழ், கீர்த்தி குலபெருமை, குணநலன்கள், கவுரவம், சிந்தனை திறன், சூழ்நிலை, ஒரு செயலின் ஆரம்பம் மற்றும் துவக்கம், ஜாதகர் பெற்ற ஞானம், தலைமை பண்பு, தனி திறமை, திருப்தியான மனம், தீர்மானமான செயல்பாடுகள், தோற்ற பொலிவு, நன்னடத்தை, நிறம், பதவி சார்ந்த வெற்றிகள், தனித்துவமான படைப்பாற்றல், புகழ் மிக்க பொறுப்புகள் அதை சிறப்பாக கையாளும் வல்லமை, புகழ் பெரும் யோகம், மச்சம் மற்றும் அடையாளம், மகிழ்ச்சியான மனநிலை, மரியாதை நிறைந்த வாழ்க்கை, உடல் மின்னோட்டம்.

 முகபாவனை மற்றும் தேஜஸ், ஜாதகரின் முயற்சிக்கும் தன்மை, மூளையின் செயல்திறன், யோகவாழ்க்கையை சிறப்பாக சுவீகரித்தல், அதன் வழியிலான லாபங்களை முழுமையாக பெறுதல், வடிவமான உடல்கட்டு, வலிமையான தேகம், வாழ்க்கையை சிறப்பாக வாழும் முறை உணர்ந்து வெற்றி பெறுதல், ஆரம்ப கால வாழ்க்கையை சிறப்பாக துவங்குதல், உயர்வான வாழ்வை சுவீகரிக்க ஜாதகரின் உழைப்பின் தன்மையே காரணமாக அமைத்தல், தனது விருப்பங்களை மிக எளிதாக அடைதல், விவேகம் நிறைந்த செயல்பாடுகள் மூலம் அனைத்தையும் அடைதல், வீரியம் குறையாத யோக வாழ்க்கை என அனைத்தையும் ஒரு ஜாதகருக்கு "ஜென்ம லக்கினம்" எனும் முதல் பாவகமே வாரி வழங்கும்.

குறிப்பு : 

இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஜென்ம லக்கினம் நமது ஜாதகத்தில் வலிமை பெற்று இருக்கிறதா ? என்பதை பொறுத்தே நமது வாழ்க்கை யோகம் நிறைந்ததாக அமையும்.

ஜோதிடன் வர்ஷன் 

9443355696


செவ்வாய், 11 மார்ச், 2025

கன்னி சனிப்பெயர்ச்சி பலன்கள் ( 29.03.2025 முதல் 03.06.2027 )


 குறிப்பு :
 சனிதிசை, சனிபுத்தி, சனிஅந்தரம் மற்றும் சனிசூட்டசமம் நடைபெறும் கன்னிராசி அன்பர்களுக்கு மட்டும் இது பொருந்தும். 

 கன்னி ராசிக்கு 29.03.2025 அன்று இரவு 07:25க்கு கும்ப ராசியில் இருந்து மீனராசிக்கு பெயர்ச்சி அடையும் "சனிபகவான்" 03.06.2027 அன்று நள்ளிரவு 01:54 வரை, கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு பத்து மற்றும் பதினொன்றுக்கு அதிபதி என்ற நிலையில் கன்னி ராசியினருக்கு களத்திர சனியாக தரும் பலன்கள் என்ன என்பதை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

 தனது வர்க்க கிரகமான சனி பகவான் கன்னி ராசிக்கு களத்திர ஸ்தானமான 7ல் சஞ்சரிக்கு காலம் "சமசப்த சனி" என்ற நிலையில் கன்னி ராசி அன்பர்களுக்கு தனது தனித்திறமையை இந்த உலகிற்க்கு பிரபல்ய படுத்தும் தன்மையை வெளிப்படுத்துவார், இதுவரை சாதாரண மனிதர்களாக இருந்து வந்த கன்னி ராசி அன்பர்கள், இனிவரும் காலங்களில் சமூக அந்தஸ்து உள்ள பிரபல்யமாக திகழ வாய்ப்பு உண்டு, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் யோகம் உண்டு கலைகளில் தேர்ச்சி உண்டு, உயர்கல்வி பட்டய படிப்பு போன்றவற்றில் தேர்ச்சி பெறவும், உலக ஞானம் பெற்று தனது சுய வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளும் யோகம் உண்டாகும், கூட்டு முயற்சிகளில் அபரிவிதமான யோகங்களை தரும், தனது துறையில் சிறந்து விளங்கும் யோகம் உண்டாகும், தனது வார்த்தைக்கு மதிப்பு இருக்கும் என்பதால் செய்யும் காரியங்கள் யாவும் வெற்றிபெறும், நம்பிக்கையுடன் வாழ்க்கையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.

  இதுவரை இருந்து வந்த சிரமங்கள் உடல் உபாதைகள் பிணிகள் யாவும் நீங்கும், அதற்க்கான மருத்துவர் தங்களை தேடிவந்து தீர்வு தருவார், மனநிம்மதியும் நிறைவான யோக வாழ்க்கையையும் தேடிவரும், தங்களது வாழ்க்கை துணை வழியில் இருந்துவரும் இன்னல்கள் யாவும் நீங்கி ஒன்று சேர்ந்து வாழும் யோகம் உண்டாகும், உறவுகளை அனுசரித்து செல்லும் யோகம் உண்டு, பொதுவாழ்வில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும், பிரிந்து இருந்த கணவன் மனைவி உறவுகள் ஒன்று சேரும் யோகம் உண்டு, சந்ததி தழைப்பதற்க்கு நல்ல ஆண் வாரிசு உருவாகும், திருமண தடை அகன்று நல்ல இல்லற வாழ்க்கை அமையும், குறிப்பாக கன்னி பெண்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும், காதலில் வெற்றி பெறுவதற்க்கான யோகம் உண்டு, தங்களது தனி திறமையை பயன்படுத்தி வாழ்வில் வெற்றிகொள்ளும் யோக காலமாக இந்த சனி பெயர்ச்சி தங்களுக்கு அமைகிறது.

 தனது 6ம் பார்வையால் கன்னிராசி அன்பர்களுக்கு விரைய ஸ்தானம் எனும் 12ம் பாவகத்தை வசீகரிக்கும் ( சிம்ம ராசியை ) சனிபகவான் முதலீடுகள் வழியில் இருந்து சிரமங்களை தரக்கூடும், புதிய முதலீடுகளை தவிர்ப்பதும் தேங்கி இருந்த சரக்குகளையும், உற்பத்தி பொருட்களையும் முறையாக கையாண்டு வருமானத்தை அதிகரிப்பதும் அவசியம், சற்று விழிப்புணர்வு இல்லை என்றாலும், நிர்வாக திறன் இல்லை என்றாலும் முதலீடுகளில் இருந்துவரும் லாபம் குறைவதற்க்கும், நஷ்டங்கள் ஏற்படுவதற்கும் சந்தர்ப்பங்கள் உண்டு, சுய தொழில் புரிவோர் வாழ்க்கையில் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டு பொரளாதார சிக்கல்களில் இருந்து மீண்டு வருவது அவசியம், இனிவரும் காலங்களில் அலைச்சல் அதிகரிக்கும், நிம்மதி சார்ந்த விஷயங்களில் துன்பங்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், வாழ்க்கை துணை மற்றும் பெற்ற பிள்ளைகள் வழியிலான இன்னல்கள், சமயோசித அறிவாற்றலுடன் செயல்பட முடியாத சூழ்நிலையால் பொருளாதார இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு, உறவுகளுடன் அதிக அளவில் அனுசரித்து செல்வது நன்மையை தரும், பொதுமக்கள் ஆதரவு என்பது சற்று குறைவதற்க்கு வாய்ப்பு உண்டு, எனவே வார்த்தை பிரயோகங்களில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது நன்மையை தரும், விரையம் அனைவராலும் துன்பம், நிம்மதியின்மை போன்றவற்றால் தங்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கவும் வாய்ப்பு உண்டு.

 தனது 7ம் பார்வையால் கன்னிராசி அன்பர்களுக்கு ஜென்ம ராசி எனும் 1ம் பாவகத்தை வசீகரிக்கும் ( கன்னி ராசியை ) சனிபகவான் தனது வர்க்கம் என்பதால் வாழ்க்கையில் இதுவரை இல்லாத வெற்றிகள் மற்றும் புதிய சந்தர்ப்பங்கள் கைகூடிவரும், கடின உழைப்பை சிறப்பாக வெளிப்படுத்தி வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றங்களை  சுவீகரிக்கும் யோகம் உண்டாகும், தனித்திறமை அற்புதமாக வெளிப்படும், விவசாயம் பண்ணை தொழில் புரிவோருக்கு இனிவரும் காலங்கள் வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி என்ற அற்புதம் நடைமுறைக்கு வரும், பணியிட மாற்றம் பதவி உயர்வு, பொருளாதர வளர்ச்சி, புதிய வீடு வண்டி வாகன யோகம், தெய்வீக அனுக்கிரகம், உழைப்பிற்கான அங்கீகாரம் வருமான உயர்வு என்ற வகையில் சுபயோக பலன்கள் நடைமுறைக்கு வரும், தெளிவான சிந்தனை, சிறந்த உடல் வலிமை நீங்கள் நினைத்ததை சாதிக்கும் யோகத்தை தரும், புதிய தொழில் அல்லது வேலைவாய்ப்பை தற்போழுது பெறுவதற்க்கான சந்தர்ப்பம் உண்டாகும், அயல்நாடுகளில் நல்ல முன்னேற்றமும் தொழில் வளர்ச்சியும் வெகு சிறப்பாக கைகூடும், இதுவரை தங்களை மதிக்காதர்வர்கள் கூட தங்களின் திறமையை உணர்ந்து அதற்கான அங்கீகாரத்தை வழங்குவார்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் தங்களின் திறமையை உணர்ந்து உங்களுக்கான வெற்றியை உறுதி செய்வார்கள், வாழ்க்கை துணை மற்றும் பெண்நண்பர்கள் தங்களை சரியாக புரிந்துகொள்ளும் தன்மை வெளிப்படும், இதுவரை கிடைக்காத மதிப்பு மரியாதை தங்களை தேடிவரும், சிறு வியாபாரம் விருத்தி அடையும், தொழில் அபிவிருத்தி உண்டாகும், நினைத்த காரியங்கள் யாவும் வெற்றி மேல் வெற்றி தரும்.

தனது 10ம் பார்வையால் கன்னிராசி அன்பர்களுக்கு சுக ஸ்தானமான 4ம் பாவகத்தை வசீகரிக்கும் ( தனுசு ராசியை ) சனிபகவான், தனது எதிர் வர்க்க வீடு என்ற போதிலும் தங்களை சிறந்த நிர்வாக திறன் கொண்டவராக மாற்றும் வல்லமையை தருவார், மேலும் நீண்டகால லட்சியங்கள் ஆசைகள் யாவும் பரிபூரணமாக நிறைவேறும், குறிப்பாக உயர்கல்வி வெளிநாடு பயணம், சமூக அந்தஸ்த்து அதிகம் உள்ள பெரிய மனிதர்கள் அறிமுகம், சுய முன்னேற்றம் சார்ந்த தெளிவான விழிப்புணர்வு, செய்யும் தொழில் அல்லது வேலையில் திடீர் முன்னேற்றம், பயணங்கள் மூலம் கிடைக்க பெரும் அதிர்ஷ்ட வாய்ப்புகள், வெளிநாடு அல்லது வெளியூரில் புகழ் பெரும் யோகம், தெய்வீக அனுகூலம், செய்வதை சரியாக செய்யும் யோகம், பொது வாழ்வில் வெற்றி, அரசியல் ரீதியான செல்வாக்கு, தனிப்பட்ட முன்னேற்றம் என்ற வகையில் சிறப்பான யோக வாழ்க்கையை நல்கும், அதே சமயம் உடல் ரீதியாக உள்ளுறுப்புகள் சம்பந்தபட்ட இன்னல்களை தரக்கூடும், எனவே உடல் ஆரோக்கியத்தில் அதிக முக்கியதுவம் தருவதும், மருத்துவ காப்பீடு போன்றவற்றை முன்னெடுப்பதும் சரியான தீர்வாக அமையும், தங்களது குடும்பத்தில் உள்ள பெரிய மனிதர்கள் ஆசியை பெறுவது தங்களின் வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்கு தீர்வாக அமையும், பெண்கள் எனில் தனது தந்தையிடமும், ஆண்கள் எனில் தனது தாயிடமும் ஆசியையும் அரவணைப்பையும் பெறுவது நலம் தரும், மேலும் அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வது மேலும் சுபயோக வாழ்க்கையை வாரி வழங்கும். 

 கன்னி ராசி அன்பர்களுக்கு மனஆசைகள் நிறைவேறும், புதிதாக இடம் வீடு வாங்கும் எண்ணம் ஈடேறும், திருமண யோகம் கைகூடி வரும், நீண்ட கால ஏக்கமாக இருந்த புத்திர பாக்கியம் குலதெய்வ ஆசியால் உண்டாகும், சொந்தமாக சுய தொழில் ஆரம்பிக்கும் யோகம் உண்டு, உறவுகள் மரியாதை தருவார்கள், பொதுமக்கள் ஆதரவு தருவார்கள், தொழில் முன்னேற்றம் இதுவரை இல்லாத அளவில் மிகபெரிய வருமானத்தை பெற்று தரும். 

ஜோதிடன் வர்ஷன்

9443355696

சனி, 1 மார்ச், 2025

சிம்மம் சனிப்பெயர்ச்சி பலன்கள் ( 29.03.2025 முதல் 03.06.2027 )

குறிப்பு : சனிதிசை, சனிபுத்தி, சனிஅந்தரம் மற்றும் சனிசூட்டசமம் நடைபெறும் சிம்மராசி அன்பர்களுக்கு மட்டும் இது பொருந்தும். 

சிம்ம ராசிக்கு 29.03.2025 அன்று இரவு 07:25க்கு கும்ப ராசியில் இருந்து மீனராசிக்கு பெயர்ச்சி அடையும் "சனிபகவான்" 03.06.2027 அன்று நள்ளிரவு 01:54 வரை, கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு பத்து மற்றும் பதினொன்றுக்கு அதிபதி என்ற நிலையில் சிம்ம ராசியினருக்கு அஷ்டம சனியாக தரும் பலன்கள் என்ன என்பதை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

எதிர் வர்க்க கிரகமான சனி பகவான் சிம்ம ராசிக்கு ஆயுள் ஸ்தானமான 8ல் சஞ்சரிக்கு காலம் "அஷ்டம சனி" என்ற நிலையில் சிம்ம ராசி அன்பர்களுக்கு எதிர்பாராத சில திடீர் இழப்புகளை தனது வாழ்க்கை துணை, நண்பர்கள், ரத்த உறவுகள் மற்றும் சொந்த பந்தங்கள் மூலம் ஏற்படுத்த கூடும், தங்களது மேலதிகாரிகள் மூலம் வரும் எதிர்ப்புகளை தவிர்க்க இயலாது, இதனால் வரும் மனஅழுத்தம், மனப்போராட்டம் தங்களது சுய செயல்பாடுகளில் தடை தாமதங்களை தரக்கூடும் என்பதை அறிவுறுத்த கடமைப்பட்டு உள்ளோம், குறிப்பாக தங்களது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் இன்னல்கள் தங்களின் வாழ்க்கையில் பல பின்னடைவுகளை தரகூடும், மேலும் ஆண் நண்பர்கள் பெண் நண்பர்கள் எதிர்பாலினர் மூலம் வெகுவான பொருள் இழப்புகளை அல்லது நஷ்டங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரக்கூடும், உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட இன்னல்களில் இருந்து விடுபட மருத்துவ காப்பீடு மிக மிக முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு செயல்படுங்கள், வண்டி வாகனங்களில் பாதுகாப்பான பயணம் என்பது தங்களது வாழ்க்கையில் மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாகும், சிம்மராசி அன்பர்கள் அல்லது குழந்தைகள் நீர்நிலைகள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு செல்லும் பொழுது மிகுந்த பாதுகாப்புடன் சென்று வருவது அவசியமானது, உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை உடன் நடந்து கொள்ளவது சிறப்பு, நடைபெறும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது மேற்கண்ட இன்னல்கள் ஏற்படாமல் சுபயோக பலன்களே நடைமுறைக்கு  வரும் என்பதால் சுய ஜாதக வலிமை உணர்ந்து வாழ்க்கையை வெற்றிகொள்ளுங்கள்.


சிம்மராசிக்கு வெளிநாடுகள் அல்லது வெளியூர் வழியில் இருந்து சில எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும், கூட்டு முயற்சி அல்லது கூட்டு தொழில் வழியில் இருந்து எதிர்பாராத சுபயோக பலன்கள் நடைமுறைக்கு வரும், மாற்று மதத்தினர் வழியிலான சுபயோக பலன்கள் அதிகரிக்கும், தெய்வீக காரியங்களில் ஆன்மீக வழிபாடுகள் வழியில் இருந்து ராஜயோக பலன்கள் நடைமுறைக்கு வரும், நிலவர்த்தகம் கனிம பொருட்கள் வழியிலான லாபங்கள் அதிகரிக்கும், ஆபத்தான நேரங்களில் நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள், பொருளாதார நிலைகளில் நல்ல முன்னேற்றமும், புதிய வீடு வண்டி வாகன யோகம் சார்ந்த விஷயங்களை முழுமையாக சுவீகரிக்கும் யோகம் உண்டு, வெகுநாளாக தடைபட்ட திருமணம் இனி சிறப்பாக நடைமுறைக்கு வரும், தாம்பத்திய வாழ்க்கை சிறப்படைய விட்டுக்கொடுத்து செல்லும் தன்மையை அதிகஅளவில்  பின்பற்றி நலம் பெறுங்கள்.

தனது 6ம் பார்வையால் சிம்மராசி அன்பர்களுக்கு ஜென்ம ராசி எனும் 1ம் பாவகத்தை வசீகரிக்கும் ( சிம்ம ராசியை ) சனிபகவான் கலைத்துறை சார்ந்த வெற்றிகளை சிறப்பாக வாரி வழங்குவதுடன், புகழ்மிக்க பொறுப்புகளையும், அதிகார பதவிகளையும் சுவீகரிக்கும் யோகத்தை தருவது கவனிக்க தக்கது, மேலும் காதலில் வெற்றி காதல் திருமணம் கைகூடி வரும் யோகம், குறுகியகாலத்தில் பிரபல்ய யோகம் பெரும் அமைப்பு, தனது துறை சார்ந்த ஞானம் வழியிலான வெற்றிகள், செய்யும் தொழில் வழியில் இருந்து வரும் வெற்றிவாய்ப்புகள், முதலீடுகள் வழியில் இருந்து வரும் லாபம் அதிர்ஷ்டம், வாடிக்கையாளர்கள் மூலம் கிடைக்க பெரும் தொழில் வளர்ச்சி, புதிய சிந்தனை மற்றும் திட்டமிடுதல்கள் மூலம் பெரும் யோக வாழ்க்கை, திடீர் தன சேர்க்கை, பல தொழில் செய்யும் யோகம், வெளிநாடுகள் வழியில் திடீர் அதிர்ஷ்டம், சிறந்த நிர்வாக திறன்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுதல், புதிய நிறுவனம் மற்றும் புதிய தொழில் ஆரம்பிக்கும் யோகம், குலதெய்வ அனுகிரகத்தால் தொட்டதெல்லாம் வெற்றி பெரும் அமைப்பு என இனிவரும் காலங்களில் ஜென்ம ராசி வழியிலான நன்மைகள் அனைத்தும் தடையின்றி நடைமுறைக்கு வந்த போதிலும், அன்பு பாசம்  ஆகிய விஷயங்களுக்கு ஏங்கி தவிக்கும் சூழ்நிலையை தரும், பெற்றோர்கள் கூட தங்களை சரியாக புரிந்துகொண்டு அன்பு பாராட்ட இயலாத சூழலைத்தரும், வாழ்க்கை துணை வழியிலான எதிர்ப்பு பெற்ற பிள்ளைகள் வழியிலான தொல்லைகள் அதிகரிக்கும், மனநிம்மதி தேடி அதிக அளவில் அலையும் நிலையை தரக்கூடும், எனவே குலதெய்வ வழிபாடும், பித்ரு வழிபாடும் முறையாக செய்யும் பொழுது சகல நிலைகளில் இருந்தும் நன்மைகளை தரும்.

 தனது 7ம் பார்வையால் சிம்மராசி அன்பர்களுக்கு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தை வசீகரிக்கும் ( கன்னி ராசியை ) சனிபகவான் தனது வர்க்க வீடு என்பதால் சிம்மராசியினர் தனது சுய முயற்சி மற்றும் சுய தேடுதல் வழியிலான வருமான வாய்ப்புகளை தன்னிறைவாக பெரும் யோகம் காலம் இது, இதுவரை இருந்துவந்த நிதி சார்ந்த இன்னல்களில் இருந்து விடுபட்டு சரளமான பொருளாதரா வளர்ச்சியை பெரும் யோகத்தை தரும், தங்களின் பேச்சு மற்றும் வார்த்தைகளுக்கு மிகுந்த மதிப்பு மரியாதை உண்டாகும், செல்வாக்கும் சொல்வாக்கும் சமூகத்தில்  மதிப்பு மிக்க மாமனிதாராக வலம்வரச்செய்யும், சொன்னதை செய்து வெற்றிகொள்ளும் யோகம் உண்டு, இருப்பினும் குடும்பத்தில் சில இன்னல்கள் இடர்பாடுகள் ஏற்படும், பொருளாதர தேவைகளை நிவர்த்தி செய்த போதிலும், குடும்ப உறுப்பினர்கள் ஏக்கங்களை நிவர்த்தி செய்ய இயலாத சூழல் ஏற்படும், வேலை நிமித்தம் காரணமாக குடும்பத்தை விட்டு வெளியில் சென்று ஜீவிக்கும் நிலை வரலாம் அல்லது பிரிந்து இருக்கும் சூழ்நிலையை தரக்கூடும், சுய முயற்சிகள் யாவும் வெற்றிமேல் வெற்றியை தரும், விவசாயம் மற்றும் பண்ணை தொழில்கள் தங்களுக்கு மிகுந்த லாபத்தை தரும், புதிய தொழில் செய்வதற்கான அத்துணை வாய்ப்புகளும் கைகூடி வரும், உணவு உடை இருப்பிடம் சார்ந்த தொழில் வழியில் அபரிவிதமான லாபம் உண்டாகும், அரசியல் ரீதியான முன்னேற்றம் மற்றும் அதிகார பதவிகளை மிக எளிதாக சுவீகரிக்கும் யோகத்தை சனிபகவான் இனிவரும் காலங்களில் பரிபூர்ணமாக வழங்குவார்.

தனது 10ம் பார்வையால் சிம்மராசி அன்பர்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தை வசீகரிக்கும் ( தனுசு ராசியை ) சனிபகவான், சிம்மராசி பெண்களுக்கு யோகம் நிறைந்த ஆண்வாரிசை வழங்குவதுடன், இதுவரை இருந்துவந்த ஏக்கங்கள் யாவற்றையும் பரிபூரணமாக நிறைவேற்றுவார், மேலும் மாணவர்களுக்கு தாங்கள் விரும்பிய கல்வியை தேர்வு செய்யும் யோகத்தையும், உயர்கல்வி அல்லது பட்டைய படிப்பு சார்ந்த வெற்றிகளை முழுமையாக சுவீகரிக்கும் யோகத்தை தருவார், கற்ற கல்வி வழியிலான தொழில் அல்லது வேலைவாய்ப்பை பெரும் யோகம், புது முயற்சிகள் சார்ந்த நிலைகளில் வெற்றிவாய்ப்பு, ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட முன்னேற்றம், கனவுகளும் லட்சியங்களும் நிறைவேறும் யோகம், எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் மூலம் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்லும் அமைப்பு, சமூக அந்தஸ்து, சமுதாய பெரிய மனிதர்கள் வழியிலான ஆதரவு, பொருளாதார உதவிகள், நீண்ட கால லட்சியங்களை வெற்றிகொள்ளும் யோகம், வெளியூர் வெளிநாடு பயணங்கள் வழியிலான லாபங்கள், ஏற்றுமதி இறக்குமதி தொழில் சார்ந்த அமைப்புகளில் சிறப்பான முன்னேற்றம், மருத்துவம் மருத்துவ துறை சார்ந்த கல்வியால் அதீத லாபம், தைரியமாக அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றி பெரும் யோகம், கூட்டு முயற்சி கூட்டு தொழில் வழியிலான லாபங்கள், எதிர்ப்புகள் யாவும் தங்களுக்கு சாதகமாக மாரி சுபயோகங்களை வழங்கும் அமைப்பு என மிகுந்த நன்மைகளை தரும். 

 விபரீத ராஜயோகம் என்பது தங்களுக்கு இனிவரும் காலங்களில் எதிர்பாராத நன்மைகளையும், அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் முழுமையாக வழங்கும், பொதுகாரியங்களில் ஈடுபடும் பொழுது சற்று விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம், இதுவரை இருந்துவந்த தடைகள் நீங்கும், தயக்கங்கள் நீங்கி தெளிவு பிறக்கும், அறிவுபூர்வமான நடவடிக்கைகள் தங்களின் வாழ்க்கையில் ஓர் புதிய ஆரம்பத்தை தரும், மனதளவில் இருந்த பாதிப்புகள் நீங்கி, மனதைரியம், சுயசிந்தனை, சிறந்த திட்டமிடுதல்கள் தரும் வெற்றிகளை சுவீகரிக்கும் யோகம் உண்டாகும்.

ஜோதிடன் வர்ஷன்

9443355696

வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

கடகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் ( 29.03.2025 முதல் 03.06.2027 )

 


குறிப்பு : சனிதிசை, சனிபுத்தி, சனிஅந்தரம் மற்றும் சனிசூட்டசமம் நடைபெறும் கடகராசி அன்பர்களுக்கு மட்டும் இது பொருந்தும். 

கடக ராசிக்கு 29.03.2025 அன்று இரவு 07:25க்கு கும்ப ராசியில் இருந்து மீனராசிக்கு பெயர்ச்சி அடையும் "சனிபகவான்" 03.06.2027 அன்று நள்ளிரவு 01:54 வரை, கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு பத்து மற்றும் பதினொன்றுக்கு அதிபதி என்ற நிலையில் கடக ராசியினருக்கு பாக்கிய சனியாக தரும் பலன்கள் என்ன என்பதை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

எதிர் வர்க்க கிரகமான சனி பகவான் கடக ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9ல் சஞ்சரிக்கு காலம் "அஷ்டம சனியின்" பாதிப்பில் இருந்து கடக ராசியினர் அனைவரையும் மீட்டு எடுத்து பாக்கியங்களை நல்கும் சுப நேரமாகும், தங்களின் மனரீதியான கவலைகளும், அழுத்தங்களுக்கும் அறிவுபூர்வமான தீர்வுகளை முன்னெடுக்கும் காலம் இது, எதிர்ப்புகள் சார்ந்த பிரச்சனைகள் தங்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும், எதிராளிகள் வழியில் இருந்தும் நன்மைகள் கைகூடிவரும், மனதில் தெளிவு பிறக்கும், குழப்பங்கள் நீங்கி சரியான முடிவுகளை முன்னெடுக்கும் வாய்ப்பு உண்டு, பலபுண்ணிய திருத்தலங்களுக்கு சென்று வருவதன் மூலம் ஆன்மீக வெற்றி, ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம் முழுமையாக பெறுவீர்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்து அதன் வழியில் இருந்து நல்ல வருமானம் பெறுவதற்கு வாய்ப்பை நல்கும்.


புதிய முதலீடுகள் புதிய தொழில் வாய்ப்புகள் புதிய சந்தர்ப்பங்கள் யாவும் இனிவரும் காலங்களில் தங்களுக்கு முழுமையான வெற்றிகளை வாரி வழங்கும், உறவுகள் அனைவரும் தங்களுக்கு உதவி புரியும் நேரமிது, தம்பதியர் இருவரிடமும் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி ஒற்றுமையுடன் வாழ்க்கையை வெற்றிகரகமாக எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து குடும்பத்தை வெகு சிறப்பாக நடத்தும் வாய்ப்பு தங்களுக்கு அதீத மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும், பெற்றோர்கள் தங்களுக்கான நலம்தரும் விஷயங்களை சிறப்பாக முன்னெடுப்பார்கள், சொத்து வீடு வண்டி வாகனம் போன்ற விஷயங்களை தங்களது உடைமையாக்கி மகிழ்ச்சி பெற செய்வார்கள், ஆன்மீகத்தில் நாட்டத்தையும் இறையருளின் கருணையையும் பரிபூர்ணமாக சுவீகரிக்கும் அற்புதமான நேரமிது  என்பதை கடக ராசியினர் உணரும் நேரமிது, தங்களது கல்விஞானம் சமயோசித அறிவுத்திறன் சிறப்பாக செயல்பட்டு எதிர்பாராத வெற்றிகளை வாரி வழங்கும்.

தனது 6ம் பார்வையால் கடகராசி அன்பர்களுக்கு குடும்பஸ்தானமான 2ம் பாவகத்தை வசீகரிக்கும் ( சிம்ம ராசியை ) சனிபகவான் தங்களுக்கு வருமான வாய்ப்பை மிக பெரிய அளவில் வழங்குவது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சம் ஆகும், பேச்சில் உறுதி, குடும்பத்தில் மகிழ்ச்சி, திடீர்திருமண யோகம், காதலில் வெற்றி, கலைத்துறையில் மிகப்பெரிய சாதனைகளை முன்னெடுக்கும் யோகம், திடீர் பிரபல்யம், பொதுமக்கள் வழியிலான செல்வாக்கு, பொதுமக்கள் ஆதரவு வழியிலான பதவிகள், அரசியல் ரீதியான வெற்றிகள் அதிகார பதவிகளை மிக எளிதாக சுவீகரிக்கும் யோகம் என்ற வகையில் அளவிலா நன்மைகளை வாரி வழங்குவார், சத்ரு மற்றும் களத்திர ஸ்தான அதிபதி என்ற வகையில் மிகுந்த சுபயோகங்களை தன்னிறைவாக  மேற்கண்ட பாவக வழியில் முழுமையாக வாரி வழங்குவார், இருப்பினும் தங்களது குழந்தைகள் வாழ்வில் அதீத அக்கறையுடன் செயல்படுவது அவசியம், அவர்களது உடல் ஆரோக்கியம், மனவலிமை சார்ந்த விஷயங்களில் ஆறுதல், நடவடிக்கை சார்ந்த விஷயங்களில் கண்காணிப்பு, ஒழுக்கம் சார்ந்த விஷயங்களில் கண்டிப்பு, கல்வி மற்றும் உயர்கல்வி சார்ந்த விஷயங்களில் சரியான வழிகாட்டுதல்கள் இவையனைத்தும் அவர்களின் எதிர்கால வாழ்க்கையை வெகு சிறப்பாக மேம்படுத்தும், குடும்பத்தில் வீண் வாக்குவாதம் தவிர்த்தல், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தங்களுக்கு வெகு சிறப்பான எதிர்காலத்தை நல்கும்.

தனது 7ம் பார்வையால் கடகராசி அன்பர்களுக்கு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்தை வசீகரிக்கும் ( கன்னி ராசியை ) சனிபகவான் தனது வர்க்க வீடு என்பதால் முதல்தரமான யோகங்களை வாரி வழங்குவார், சுய முயற்சி சார்ந்த விஷயங்களில் எதிர்பாராத வெற்றிகள், தைரியம் தன்னம்பிக்கை விடாமுயற்சி மூலம் அபரிவித முன்னேற்றம், கல்வியில் ஆர்வம், நேர்த்தியான செயல்பாடுகள், தெளிவான சிந்தனை திறன், கற்பனை வளம், கலைத்துறையில் புகழ் பெரும் யோகம், தான் ஏற்றுக்கொண்ட காரியங்களில் திட்டமிட்டு செயல்படும் யோகம், எதிர்ப்புகளை துச்சமாக கருதி வெற்றிகொள்ளும் அமைப்பு, சர்வ சாதாரணமாக பல காரியங்களை சாதிக்கும் யோகம், பூமிக்கு கீழ் இருந்து கிடைக்கும் கனிம பொருட்கள் வழியில் இருந்து மிகுந்த லாபம், விவாசாயம் சார்ந்த தொழில்கள் வழியில் கிடைக்கப்பெறும் அதீத முன்னேற்றம், உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் வழியில் இருந்து வரும் லாபங்கள், அன்றாட தேவைகள் வழி பொருட்கள் மூலம் கிடைக்க பெரும் லாபங்கள் என மிகப்பெரிய தனசேர்க்கையை பெறுவீர்கள், மேலும் பிரச்சனைக்கான சரியான தீர்வுகளை முன்மொழிவதன் மூலம் கிடைக்க பெரும் பிரபல்ய யோகம், சரியான திட்டமிடல் மூலம் கிடைக்க பெரும் வெற்றி என தங்களின் வாழ்க்கையில் இதுவரை இல்லாத சுபயோகங்கள் யாவும் நடைமுறைக்கும் வரும், இளைய சகோதரன் சகோதரி வழியில் கிடைக்க பெரும் அதிர்ஷ்டம், ஒத்துழைப்பு, பாகப்பிரிவினை சார்ந்த நன்மைகள் தங்களுக்கு அதீத தைரியத்தை தரும், எதிலும் வெற்றிபெறும் யோகம் உண்டு என்பதால் தன்னம்பிக்கை குறையாமல் வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள் வாழ்த்துக்கள்.

தனது 10ம் பார்வையால் கடகராசி அன்பர்களுக்கு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்தை வசீகரிக்கும் ( தனுசு ராசியை ) சனிபகவான், செய்யும் தொழில் அல்லது வேலை சம்பந்தப்பட்ட நிலைகளில் சற்று கடுமையான சிக்கல்களை தந்து வெற்றிபெரும் யோகத்தை நல்குவார், மற்றவர்கள் விஷயங்களில் தேவையின்றி தலையீடு செய்வதன் மூலம் தங்களின் கவுரவம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், சற்று விலகி நிற்பது நன்மையை தரும், தெய்வீக அனுகிரகம் தங்களின் கடுமையான உழைக்கும் திறனுக்கான அங்கீகாரத்தை வெகு சிறப்பாக நல்குவார், பதவி உயர்வு ஊதிய உயர்வு, அதிகாரம் சார்ந்த விஷயங்களில் தங்களின் கருத்துக்கள் இல்லாமல் வெற்றிகாண முடியாத வாய்ப்புகள், எதிலும் தனிமரியாதை, அயலதேச பயணங்கள் வழியிலான முன்னேற்றங்கள், உயர்கல்வி பட்டய படிப்பு போன்ற விஷயங்களில் மிகப்பெரிய வெற்றிகள், உடல்நலன் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஆரோக்கியம் மேம்படுதல், கடன் சார்ந்த இன்னல்களில் இருந்து விரைவாக மீண்டு வரும் யோகம், தனது தேவைகளுக்கான நிதியை எந்த தடையும் இன்றி பெரும் வல்லமை, வங்கி கடன் பொருளாதார உதவிகள் தேடிவரும் யோகம் என்ற வகையில் சகல சௌபாக்கியங்களையும் 10ம்  சனிப்பார்வை தங்களுக்கு வெகு சிறப்பாக வாரி வழங்கும் என்பதை கருத்தில் கொண்டு நலம் பெறுங்கள். 

இனிவரும் காலங்களில் கடக ராசி அன்பர்களுக்கு சமூகத்தில் மதிப்பு மிக்க உயர்பதவிகளை அலங்கரிக்கும் யோகம் உண்டு, உறவுகள் வழியில் ஆதாயம் உண்டு, உண்மையான உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைப்பதுடன், அதிகாரம் மற்றும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட பதவிகள் தங்களை தேடி வரும் என்பதை கருத்தில் கொள்க, எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருப்பதால் வாழ்க்கையை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்.

ஜோதிடன் வர்ஷன்

9443355696

செவ்வாய், 17 டிசம்பர், 2024

மிதுனம் சனிப்பெயர்ச்சி பலன்கள் ( 29.03.2025 முதல் 03.06.2027 )

 குறிப்பு : சனிதிசை, சனிபுத்தி, சனிஅந்தரம் மற்றும் சனிசூட்டசமம் நடைபெறும் மிதுனராசி அன்பர்களுக்கு மட்டும் இது பொருந்தும். 

 மிதுன ராசிக்கு 29.03.2025 அன்று இரவு 07:25க்கு கும்ப ராசியில் இருந்து மீனராசிக்கு பெயர்ச்சி அடையும் "சனிபகவான்" 03.06.2027 அன்று நள்ளிரவு 01:54 வரை, கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு பத்து மற்றும் பதினொன்றுக்கு அதிபதி என்ற நிலையில் மிதுன ராசியினருக்கு ஜீவன சனியாக தரும் பலன்கள் என்ன என்பதை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

 தனது வர்க்க கிரகமான சனி பகவான் மிதுன ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10ல் சஞ்சரிக்கு காலம் தொழில் யோகத்தை சிறப்பாக வழங்கும் காலமாக அமையும், தனது தகுதி திறமைக்கான வேலை வாய்ப்பு, சுய தொழில் அல்லது கூட்டு தொழில் நிச்சயம் அமையும், வெளிநாடுகளில் வேலைவாய்ப்பை பெறுவதற்கான சந்தர்ப்பமும் கைகூடி வரும், சமூகத்தில் தங்களது கவுரவம் மற்றும் அந்தஸ்த்து அதிகரிக்கும், அரசியல் ரீதியான வெற்றிகள், பதவிகள் தேடிவரும், உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்க பெறுவீர்கள், எதிலும் முதன்மை முன்னேற்றம், புதிய வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் சாதகமாக மாறுதல், அரசுத்துறை சார்ந்த பணி அல்லது ஒப்பந்தங்கள் கிடைக்க பெறுவீர்கள், தனது பெற்றோர்கள் ஆண்கள் தமது தந்தை, பெண்கள் தமது தாய் வழியிலான சுபயோகங்களை உதவிகளை சிறப்பாக பெறுவீர்கள்.

 தங்களது நீண்டகால ஆசைகள் லட்சியங்கள் கைகூடி வரும், வாழ்க்கையில் இருந்து வந்த சிரமங்களை தகர்த்தெறிந்து வெற்றிநடை போடும் யோகம் உண்டாகும், எதிலும் வெற்றி, வருமான வாய்ப்புகள், கடன் சார்ந்த இன்னல்களில் இருந்து மீண்டு வரும் யோகம், வங்கிகளில் இருந்து வரும் பொருளாதர உதவிகள், புதிய தொழில் துவங்க சந்தர்ப்பங்கள், தங்களது புத்திசாலித்தனமும் நுண்ணறிவு திறனும் தங்களை மேம்பட்ட ஒரு மாமனிதனாக பரிணமிக்க செய்யும் ஓர் அற்புதமான காலம் இது அன்பர்களே, நீண்ட கால லட்ச்சியமான சொந்த வீடு கனவு இந்த நேரத்தில் பரிபூர்ணமாக நிறைவேறும், குடும்பத்தில் கவுரவம் அதிகரிக்கும், இதுவரை தங்களை ஏளனமாக பார்த்தவர்கள் முன்பு மதிப்புமிக்க மாமனிதனாக விளங்கும் யோகத்தை சனிபகவான் ஜீவன ஸ்தான சஞ்சார நிலையில் இருந்து வழங்குவார், இனிவரும் இரண்டைரை ஆண்டுகள் தங்களின் தொழில் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெரும் வருமானம் தன்னிறைவாக வந்து சேரும், நிலையான தொழில் யோகம் உண்டு.

 தனது 6ம் பார்வையால் மிதுனராசி அன்பர்களுக்கு வீரியஸ்தானமான 3ம் பாவகத்தை வசீகரிக்கும் ( சிம்ம ராசியை ) சனிபகவான் தங்களுக்கு அதீத தைரியத்தையும், விடாமுயற்சியையும், வீரியம்மிக்க செயல்திறனையும் தொடர்ந்து வழங்குவார், பொதுவாக நவகிரகங்கள் 3,11ம் வீடுகளை வசீகரித்தாலும், சஞ்சாரம் செய்தாலும் சுபயோக பலன்களையே நல்குவார்கள், அந்த வகையில் சனிபகவான் தங்களது 3ம் வீட்டை வசீகரிப்பது கலைகளில் தேர்ச்சியை தரும், விளையாட்டுகளில் மிகபெரிய வெற்றியை தரும், சாதனைபுரியும் யோகம் உண்டு, அரசு துறை வேலைவாய்ப்பை பெறுவதற்கு சரியான நேரம் இதுவே ஆகும், குறிப்பாக மிதுன ராசி பெண்களுக்கு இந்த அமைப்பு வெகு விரைவாக கைகூடி வரும், மாணவமணிகள் கல்வியில் பலசாதனைகளை புரியும் அற்புத நேரமிது, தயக்கம் யாவும் நீங்கி, அறிவில் தெளிவும், கல்வியில் ஞானமும், எதையும் திட்டமிட்டு செயல்படுத்தும் யோகமும் உண்டாகும், கடின உழைப்பை வெகு அற்புதமாக வெளிப்படுத்துவீர்கள், அதற்கான பலன்கள் உடனடியாக கிடைக்கும், சிறு வியாபாரிகள் மிகபெரிய அளவிலான வளர்ச்சியை பெறுவீர்கள், தன்னம்பிக்கை சரியான விஷயங்களை புரிந்துகொள்ளும் யோகம், தகவல் தொழில் நுட்பம், இயல் இசை நாடகம் போன்ற துறைகளில் எதிர்பாராத வெற்றிகளை பெறுவீர்கள், இளைய சகோதர உதவிகள் வந்து சேரும், ஏஜென்சி, பயணசீட்டு, தரகு, போக்குவரத்து தொழில்களில் மிகப்பெரிய தனசேர்க்கை வந்து சேரும்.

 தனது 7ம் பார்வையால் மிதுனராசி அன்பர்களுக்கு சுக ஸ்தானமான 4ம் பாவகத்தை வசீகரிக்கும் ( கன்னி ராசியை ) சனிபகவான் தனது வர்க்க வீடு என்பதால் முதல்தரமான யோகங்களை வாரி வழங்குவார், தங்களின் குணநலன்களில் சிறப்பான முன்னேற்றம் வந்து சேரும், பொது வெளியில் நீங்கள் செய்யும் காரியங்கள் பாராட்டுதல்களையும் கவுரவத்தையும் தரும், சிறந்த நிர்வாகத்திறமையை வெளிப்படுத்துவீர்கள், தங்களது தாய் வழி சொத்துக்கள் கிடைக்க பெறுவீர்கள், பெண்களுக்கு தனது தகப்பனார் வழியில் சீர் கிடைக்கும், விவசாயம் பண்ணை தொழில் அமைப்புகளில் எதிர்பாராத தனசேர்க்கை கிடைக்க பெறுவீர்கள், முதல் தரமான சொகுசு வாழ்க்கை அமைய வாய்ப்பு உள்ளது, குறிப்பாக ஆடை ஆபரணம் வீட்டிற்கு தேவையான அதிநவீன கருவிகள் வாங்கும் யோகம், திட்டமிட்டு ஓர் காரியத்தை வெற்றிகரமாக செய்து முன்னேற்றம் பெரும் தன்மை, மருத்துவம் சம்பந்தப்பட்ட தொழில் வழியில் அபரிவிதமான வளர்ச்சி, கடின உழைப்பின் மூலம்  தங்களுக்கான தொழிலை விரிவுபடுத்தும் யோகம், மனக்கவலை நீங்கி தெளிவான சிந்தனை பிறக்கும், மிதுன ராசி பெண்களுக்கு திருமண யோகமும், சிறந்த புத்திரபாக்கியமும் கிடைக்கப்பெறுவீர்கள், உடல்ரீதியாக இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும், வாகன யோகம் புதிய வீடு சொத்துக்கள் வாங்குவதற்கான சந்தர்ப்பங்கள் கைகூடிவரும், எதிர்பாராத பொருளாதார வளர்ச்சி தங்களுக்கு மிகுந்த மனமகிழ்வை தரும்.

 தனது 10ம் பார்வையால் மிதுனராசி அன்பர்களுக்கு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தை வசீகரிக்கும் ( தனுசு ராசியை ) சனிபகவான், கணவன் மனைவி உறவு நிலைகளில் திடீர் பிணக்குகளை தரக்கூடும் என்பதனால், வாழ்க்கை துணையுடன் சற்று இணக்கமான சூழலை கடைபிடிப்பது நலம் தரும், வீண் வாக்குவாதம் பிரிவினையை தரக்கூடும், எதிர்பாலின சேர்க்கை வழியில் இருந்து வரும் இன்னல்கள் அதிகரிக்கும், வீண் அவப்பெயர் தங்களது வாழ்க்கையின் முன்னேற்றத்தை கடுமையாக பாதிக்கும், குடும்பத்தில் உள்ள பெரியோர்கள் மற்றும் பெரியமனிதர்களிடம் மிகுந்த கவனத்துடன் நடந்துகொள்வது நலம் தரும், குறிப்பாக அரசுத்துறை அதிகாரிகளிடம் நேர்த்தியாக நடந்துகொள்வது சிறப்பை தரும், சட்டசிக்கல்களை தவிர்க்க தங்களது நடவடிக்கைகளில் சத்தியத்தை கடைபிடிப்பது நலம் தரும், உறவுகளுடன் பகைமை பாராட்டாமல் இருப்பது உங்களுக்கான வெற்றிவாய்ப்பை அதிகரிக்கும், காதல் திருமணம் விருப்ப திருமணம் போன்ற விஷயங்களில் அவசரபட்டு எடுக்கும் முடிவுகள் மிகபெரிய சிரமங்களையே உருவாக்கும், தனிமையில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் தவறான முடிவாகவே அமையும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள், கூட்டாளிகள், நண்பர்கள் வாழ்க்கை துணை பொதுமக்கள் வழியில் இருந்து அதீத நெருக்கடிகளையும், போராட்டங்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையே தரும், உதவி செய்ய யாரும் அற்ற சூழல் உருவாக கூடும், பேச்சில் நிதானம் தேவை, வெளிநாடு பயணம் செய்வோர் உரிய ஆவணங்களை பத்திரமாக வைத்திருப்பது நலம் தரும், உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட இன்னல்கள் உண்டாகும், சரியான மருத்துவ சிகிச்சை தங்களுக்கு தீர்வை தரும்.

ஜோதிடன் வர்ஷன்

9443355696