வெள்ளி, 30 நவம்பர், 2012

சுய ஜாதகத்தில் ஒரு பாவகம் பாதிக்கபட்டு இருக்கும்பொழுது , அந்த பாவக அமைப்பில் இருந்து ஜாதகர் நன்மை பெறுவது எப்படி ?



பொதுவாக ஒரு சில ஜாதகங்களில் சில பாவகங்கள் சிறிய பாதிப்பை பெற்று இருக்கும் அல்லது பெரிய பாதிப்பை பெற்று இருக்கும் , மேலும் 100 சதவிகிதம் கடுமையாக பதிப்பையும் பெற்றிருக்கும் , அப்பொழுது அந்த ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து இழப்புகளையும் ,கடுமையான பாதிப்பையும் சந்திக்க வேண்டி வரும் , குறிப்பாக அந்த பாவக பலன்களை நடை முறையில் நடை பெரும் திசை மற்றும் புத்திகள் நடத்தினால் .

அப்படி பட்ட திசை மற்றும் புத்திகள் தீமையான பலன்களை தந்து கொண்டு இருக்கும் பொழுது ஜாதகர் என்ன செய்தாலும் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க இயலாது எனும் பொழுது ஜாதகர் அந்த பாவக வழியில் இருந்து நன்மை அடைய என்ன வழி , இதற்க்கு ஜோதிட சாஸ்திரம் என்ன ? சொல்கிறது என்பதை பற்றி நாம் இந்த பதிவில் காண்போம்.




மேற்கண்ட ஜாதக அமைப்பில் 1 ம் வீடு எனும் லக்கினம் மற்றும் 9 ம் வீடு எனும் பாக்கிய ஸ்தானம் ஆகியவை பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று 200 சதவிகிதம் பாதிப்படைந்து இருக்கிறது , 4,6,10,12 வீடுகள் முறையே விறைய ஸ்தானமான 12 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பாதிப்படைந்து இருக்கிறது.

தற்பொழுது நடக்கும் சந்திரன் திசை ஜாதகருக்கு 4,6,10,12 வீடுகள் முறையே விறைய ஸ்தானமான 12 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் , 3,7 வீடுகள் களத்திர பாவகத்துடன் சம்பந்தம் பெறும் பலனை தந்து கொண்டு இருக்கிறது எனவே ஜாதகர்  3,7 வீடுகள் களத்திர பாவகத்துடன் சம்பந்தம் பெறும் அமைப்பில் இருந்து 100 சதவிகித நன்மைகளையும் , 4,6,10,12 வீடுகள் முறையே விறைய ஸ்தானமான 12 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் அமைப்பில் இருந்து தீமையான பலன்களையும் அனுபவிக்க வேண்டி வரும்.

 எடுத்து காட்டாக :

ஜாதகருக்கு இருக்கும் நிலம் , இடம் , வண்டி வாகன அமைப்பில் இருந்தும் , கடன் கொடுத்தல் வாங்குதல் என்ற அமைப்பில் இருந்தும் , செய்யும் தொழில் அமைப்பில் இருந்தும் , அதிக முதலீடு செய்யும் அமைப்பில் இருந்து , விறைய பலன்களை எதிர்கொள்ள வேண்டி வரும் , ஆனால் இந்த ஜாதகத்தை சரியாக கணித்து உண்மையான பலன் சொல்லும் , புத்திசாலித்தனமான ஜோதிடன் நினைத்தால் ( இதற்க்கு ஜோதிடனின் ஜாதகத்தில் ராகு கேது அதிக வலிமையுடன் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் தன்னை நம்பி வருவோர்க்கு சரியான வழியை காட்ட இறை நிலை அருள் புரியும் )ஜாதகருக்கு சில அறிவுரை கூறுவதின் மூலமாகவும் ஜாதகரின் சில நடவடிக்கை எடுக்க வைப்பதின் மூலமாகவும்  மேற்க்கண்ட பாவக அமைப்பில் இருந்து ஜாதகரை நன்மை பெற செய்ய இயலும் .

எப்படி எனில் ஜாதகத்தில் தீமை தரும் பாவகமான 4,6,10,12 வீடுகள் வழியில் இருந்து நன்மை பெற , சுய ஜாதகத்திலும் , தற்பொழுது நடக்கும் திசை தரும் வீடுகள் அமைப்பிலும்  நல்ல நிலையில் இருக்கும் பாவகங்களை கவனிக்க வேண்டும்  , அப்படி கவனிக்கும் பொழுது சுய ஜாதகத்திலும் , தற்பொழுது நடக்கும் திசை அமைப்பிலும் 3,7 வீடுகள் களத்திர பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையை தருகிறது , 2,5,11 வீடுகள் லாப ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று  நன்மையை தருகிறது இதில் அதிக வலிமையை 3,7 வீடுகள் களத்திர பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதாலும் களத்திர பாவகம் ஸ்திர ராசியாக இருப்பதாலும் , களத்திர பாவகமே பெறுகிறது .

எனவே ஜாதகர் 4,6,10,12 வீடுகள் வழியில் இருந்து நன்மை பெற தனது வாழ்க்கை  துணை , அல்லது கூட்டாளிகள் பெயரில் , வண்டி வாகனம் வாங்குவது , நிலம் வீடு , சொத்து வாங்குவது , கடன் பெறுவது , தான் நிர்வகிக்கும் தொழில்களை அவர்களை நிவகிக்க சொல்வதாலும் , அவர்கள் பெயரில்  முதலீடுகளை செய்வதாலும் மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து 100 சதவிகித நன்மையை பெற முடியும் , இது நடை முறையில் கண்ட உண்மை , குறிப்பாக ஜாதகர் தனது வாழ்க்கை துணையின் பெயரில் மேற்கண்ட  விஷயங்களை செய்யும்பொழுது ஜாதகருக்கு களத்திர வழியில் இருந்து நன்மையையும் , அதன் வழியே மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து 100 சதவிகித நன்மையையும் பெற முடியும் என்பது உறுதி .

ஆக ஜோதிட கலை ஜாதகரை எந்த ஒரு மோசமான நிலையில் இருந்தும் மீட்டு  எடுக்கும் , சரியான வழிகாட்டியாக அமையும் என்பது உறுதி , இதுவே ஜோதிட கலையின்  சிறப்பு .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


1 கருத்து: