திங்கள், 25 மார்ச், 2013

2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா ? இது சர்ப்ப தோஷத்தை தருமா ?



பொதுவாக 

( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , 
( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது,
( 3 ) 5ம் மற்றும் 11ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , 
( 4 ) 6ம் மற்றும் 12ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, 

சர்ப்ப தோஷம் என்றும் , இந்த நிலையை பெற்றுள்ள ஜாதக அமைப்பை சார்ந்தவர்கள் அனைவரும் திருமண தாமதம் , மற்றும் குடும்ப வாழ்க்கையில் அதிக இன்னல்களையும் அனுபவிக்க வேண்டி வரும்என்றும்.

இதனால்  ஜாதகர் வாழ்க்கையில் அதிக துன்பங்களை ஜீவன வழியிலும் பொருளாதார ரீதியாகவும் அனுபவிக்க வேண்டிவரும் என்றும் பாரம்பரிய ஜோதிட முறையில் பலனாக பல ஜோதிடர்கள் சொல்வது உண்டு , இவை அனைத்தும் பொதுவாக சொல்லப்படும் கருத்தே அன்றி ஜாதகத்தை தெளிவாக ஆராய்ந்து கணிதம் செய்து சொல்லப்படும் பதில்கள் அல்ல என்பதே உண்மை .

 லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை வைத்து மேற்க்கண்ட பாவகங்களில்தான் ராகு கேது அமர்ந்திருக்கின்றனர என்று நிர்ணயம் செய்வது மிக முக்கியம் , ஏனெனில் சில ஜாதகங்களில் ராகு கேது கட்டங்களில் அமர்ந்திருக்கும் நிலையை வைத்து ராகு கேது கிரகங்களின் நிலையினை நிர்ணயம் செய்வது என்பது தவறான பலனை சொல்வதற்கு வழிகாட்டிவிடும் , ஆக லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை ஆதாரமாக வைத்து உண்மையில் ராகு கேது எந்த பாவகத்தில் அமர்ந்திருக்கிறார் என்பதை சரியாக நிர்ணயம் செய்வது ஒரு தலை சிறந்த ஜோதிடனின் கடமை.

 எடுத்துகாட்டாக :

கிழ்க்கண்ட சிம்ம இலக்கின ஜாதக அமைப்பில் மேலோட்டமாக பார்க்கும் பொழுது 6 ல் கேதுவும் 12 ல் ராகுவும் அமர்ந்திருப்பதை போன்ற தோற்றத்தை தரும் ஆனால் உண்மையில் பாவக அமைப்பின் படி கணிதம் செய்து பார்க்கும் பொழுது 5ல் கேதுவும் , 11ல் ராகுவும் அமர்ந்திருக்கிறார்கள் என்ற உண்மை புரியும் , பொதுவாக ஜோதிடத்தை பற்றிய அடிப்படை விஷயம் தெரியாதவர்கள் ஜாதக கட்டத்தை பார்த்த உடனே கேது 6லும் ராகு 12லும் அமர்திருப்பதாக கணித்து குத்து மதிப்பாக பலனை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள் , ஆனால் உண்மையில் ஜோதிட கணிதம் தெரிந்த ஜோதிடர்கள் கிரகங்களின் சரியான அமரும் நிலையை வைத்து பலன் காணுவார்கள் .



குறிப்பு : 

( 1 ) லக்கினம் என்பது சிம்மத்தில் 148.04.24 பாகை முதல் கன்னியில் 178.35.45 பாகை வரை வியாபித்து இருக்கிறது ,

( 2 ) ஜாதகரின் 5ம் பாவகம் தனுசுவில் 267.52.60 பாகை முதல் மகரத்தில் 297.40.34 பாகை வரை வியாபித்து இருக்கிறது , 

( 3 )ஜாதகரின் 11ம் பாவகம் மிதுனத்தில் 87.52.60 பாகை முதல் கடகத்தில் 117.40.34 வரை வியாபித்து இருக்கின்றது எனும் பொழுது,

( 4 ) மகரத்தில் 273.11.52 பாகையில் அமர்ந்திருக்கும் கேதுவும் கடகத்தில் 93.11.52 பாகையில் அமர்ந்திருக்கும் ராகுவும் எப்படி 6 மற்றும் 12 ம் பாவகத்தில் அமர்வதாக எடுத்துகொள்ள இயலும்.

 ( எனவேதான் இங்கு சரியான ஜோதிட கணிதத்தை பயன்படுத்தி பலன் காணவேண்டும் என்ற அவசியம் ஏற்ப்படுகிறது .) 

கணிப்பு என்பது எவரும் எளிதில் செய்துவிட முடியும் , கணிதம் என்பது முறையாக  ஜோதிட கணிதத்தை அறிந்தவர்களால் மட்டுமே செய்யகூடிய ஒரு விஷயம்  , எனவே இங்கே பலகாலமாக ஜாதகத்தில் ராகு கேது 6ல் மற்றும் 12ல் என்று நினைத்து கொண்டு பலன் சொல்லும் பொழுது , ஜாதகனுக்கு அந்த  பலன்கள் எப்படி பொருந்தும் மேலும் அது சரியான கணிதமும்  இல்லை என்பதே அடிப்படை விஷயமாக மாறிவிடுகிறது , இங்கே   ஏமாற்றம் பெறுவது  பலன் சொன்ன ஜோதிடனும் , பலன் காண வந்த ஜாதகனும்  என்பதை ஒரு சரியான கணித ஜோதிடன் மூலமாக மட்டுமே தெரிய  வரும் அதுவும் அந்த ஜாதகனுக்கு பிராப்தம் இருந்தால் .

எனவே முதலில் ஒரு கிரகம் எந்த பாவகத்தில் அமர்திருக்கிறார் என்ற அடிப்படை  விஷயம் கூட தெரியாத ஜோதிடனிடம் ஆலோசனை பெற்று ஒருஜாதகர்  தனது வாழ்க்கையை சரியான வழியில் நடத்தி செல்வது என்பது எப்படி ? என்ற  கேள்வி இங்கு தோன்றுகிறது .

நிறை ஜாதகங்களில் இதை போன்ற  குழப்பங்களை  காணமுடிகிறது , இதை பயன்படுத்திக்கொண்டு  சில ஜோதிடர்கள் ராகு கேது தோஷம் , சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம் , களத்திர தோஷம் என்று  மற்றவர்கள் வாழ்க்கையில் புகுந்து விளையாடி விடுகின்றனர் , இதை  உணராத  மக்கள் அனைவரும் தனக்கு எதோ பெரிய தோஷம் இருப்பதாக நினைத்துகொண்டு  தனது வாழ்க்கையை சரியாக நிர்ணயம் செய்ய இயலாமல்  தடுமாறுகின்றனர் என்பதே உண்மை .

அடுத்து மேற்கண்ட அமைப்பில் அமர்ந்த ராகு கேது கிரகங்கள் ஜாதகனுக்கு நன்மையை  செய்கிறனவா ? தீமையை செய்கிறனவா ? என்பதை நிரண்யம்  செய்யவேண்டும் . இதற்க்கு முறையான ஜோதிட கணிதம் பயின்றவர்கள் உடனடியாக பதில் சொல்விட முடியும் , ஆனால் ஜோதிடத்தை பற்றிய அடிப்படை விஷயம் அறியாதவர்களால் ஜாதகனை குழப்பம் பெற செய்ய முடியுமே  தவிர சரியான பலனை சொல்ல இயலாது. 

மகரத்தில் 5ல் அமர்ந்த கேது பகவான் 100 சதவிகித தீமையையும் , கடகத்தில் 11ல் அமர்ந்த ராகு பகவான் 100 சதவிகித நன்மையையும் செய்வார் என்பதே உண்மை , இந்த பலன்கள் எப்பொழுது நடை முறைக்கு வரும் என்பது அடுத்த கேள்வி ? 

 5 மற்றும் 11 ம் பாவகத்தின் பலனை ஏற்று நடக்கும் திசை எதுவென்று அறிந்து அதன்  பலனை சொல்ல வேண்டும் . ஒருவேளை ஜாதகத்தில் நடை பெரும் அனைத்து திசைகளும் இந்த பாவகத்தின் பலனை தரவில்லை ஏற்று நடத்தவில்லை எனில் ஜாதகன் மேற்கண்ட பாவகத்தின் நன்மை தீமை பலனை சிறிதும் அனுபவிக்க மாட்டார் என்பது குறிப்பிட தக்கது .

2ல் அல்லது 8ல் நல்ல நிலையில் அமரும் ராகு கேது கிரகத்தால் ஒருவருடைய வாழ்க்கை சிறிதும் பாதிக்க வாய்ப்பில்லை என்ற உண்மையை உணருவது அவசியம் , ஒருவேளை 2ல் அல்லது 8ல் பாதிப்பை தரும் நிலையில் அமரும் ராகு கேது கிரகத்தால் ஜாதகர் கடுமையாக மேற்கண்ட பாவக  வழியில் இருந்து இன்னல்களை அனுபவிக்க வேண்டி வரும் என்பதையும்  மறுப்பதற்கு இல்லை எனவே ஒருவருடைய ஜாதகத்தில் ராகு கேது கிரகங்கள் எங்கு அமர்ந்து இருக்கிறார்கள் , அவர்கள் ஜாதகருக்கு நன்மையை செய்துகொண்டு இருக்கிறார்களா இல்லையா ? என்பதை நிர்ணயம்  செய்து , நடப்பு திசையில் அதன் பலன்கள் நடை பெறுகிறத என்பதை  ஜோதிட கணிதம் செய்து தெளிவாக தெரிந்துகொண்டு பலன் சொல்வதே நம்மை நாடி வரும் அன்பர்களுக்கு நன்மை தரும் .

பொதுவாக 2ல் மற்றும் 8ல் அமரும் ராகு கேது நன்மை செய்யுமா ? தீமை செய்யுமா ? என்பதை பற்றிய ஒரு சிறு விளக்கம் .

ஒருவருடைய சுய ஜாதகத்தில் 2ம் பாவகம் மற்றும் 8ம் பாவகம் ரிஷபம் , மிதுனம், கன்னி  ( சூரியனுடன் 14 பாகைக்குள் சேராத புதன் ), கடகம் ( வளர்பிறை சந்திரன் ) துலாம் , தனுசு , மீனம் ராசிகளாக வந்து இங்கு அமரும் ராகு கேது 100 சதவிகித தீமையை செய்யும் .

ஒருவருடைய சுய ஜாதகத்தில் 2ம் பாவகம் மற்றும் 8ம் பாவகம் மேஷம் , மிதுனம்,கன்னி ( சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்த புதன் ) , கடகம் ( தேய் பிறை சந்திரன் ), சிம்மம் , விருச்சகம் , மகரம் , கும்பம் ராசிகளாக வந்து இங்கு அமரும் ராகு கேது 100 சதவிகித நன்மையை செய்யும் , என்பதே உண்மை எனவே சுய ஜாதகத்தில் ராகு கேது 2ல் 8ல் அமர்ந்திருக்கும் ஜாதக அமைப்பை பெற்றவர்கள் இதை வைத்து ராகு கேது நன்மை செய்கிறதா ? தீமை செய்கிறதா என்பதை  நிர்ணயம் செய்து கொள்ளலாம் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969


6 கருத்துகள்:

  1. Rassikkum Bavathirkum Ulla Thodarpai villakkiyatharku Nantri.."Raasiyil ulla ragu & kethu Konathin adipadayil Bavathil Marumpothu Athan Amsa nilay Maruma " ?

    பதிலளிநீக்கு
  2. ஒரு குழந்தை பிறக்கும் போதே அதன் ஜாதகம் கணிக்கப் படுகிறது. அப்படியானால் பித்ரு தோஷம் சென்ற பிறவியில் செய்த வினையின் பயனா? அப்படியானால் நாம் இந்த பிறவியில் என்ன தவறு வேண்டுமானாலும் கவலை படாமல் செய்யலாம் அடுத்த பிறவியில்தானே அதற்கு தண்டனை. பிறகு பார்த்து கொள்ளலாம். சரிதானே?

    - தளபதி நாகராஜ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் அடுத்த பிறவியில்தானே அதற்க்கு தண்டனை, உண்மைதான் ஆனால் அடுத்த பிறவியில் 6 அறிவு கொண்டவராக பிறவி எடுத்தால் தானே தண்டைனையை அனுபவிக்க இயலும் அதற்க்கு தீர்வு தேடி இறை அருளை பெற முடியும், ஒருவேளை 5 அறிவு ஜீவியாக படைத்து விட்டால் எதற்கு தண்டனை அனுபவிக்கிறோம் என்றே விஷயமே தெரியாமல் தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும், எனவே இந்த பிறவியிலே முற்ப்பிரவியில் செய்த விணை பதிவிற்கு தீர்வை தேடி, பிறவி அற்ற நிலையை பெற வழிகாட்டுவது " ஜோதிடம் " சரியான சுய ஜாதக பாலபலன்களை தெரிந்து கொள்ளவே இறை அருள் தேவைப்படும் என்பது அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய சூட்சும ரகசியம் ஆகும்.

      நீக்கு
  3. 2 ல் ராகு 8 ல் கேது,சந்திரன் தோஷம் மா

    பதிலளிநீக்கு
  4. ஜோதிடன் வர்ஷன்
    2-இல் ராகு(கடகம் 2 ஆம் இடமாக)  8-இல் கேது (மகரம் )
    எந்தபாவத்தில் உள்ளது என்று எப்படி காண்பது?இந்த மென்பொருள் விலை என்ன ?
    navaqc@gmail.com

    பதிலளிநீக்கு