கிராமங்களில் ஒரு செலவாடை ஒன்று உண்டு அது " எண்ணம் போல் வாழ்க்கை " என்று பெரியவர்கள் சொல்லி கேட்பது உண்டு , இதற்க்கு உதாரணமாக ஒரு சிறு கதை ஒன்று சொல்வது உண்டு , சிவ பெருமான் கோவிலுக்கு , விசேஷ காலங்களில் வழிபாடுகளில் பயன்படுத்த ஒரு சிறிய குட்டி யானையை , வாங்கி வருகின்றனர் , அதை கட்டுபடுத்த ஒரு பாகனும் , யானையின் காலில் கட்டிபோட ஒரு சிறு சங்கிலியும் பயன்படுத்துகின்றனர் .
சிறு சங்கிலியால் யானையை கட்டி போட்ட உடன் யானை அந்த சங்கிலியை இழுத்து பார்கிறது , அதனால் அந்த சங்கிலியை அறுக்க இயலவில்லை , மீண்டும் முயற்ச்சிக்கிறது ஆனால் அந்த முயர்ச்சியும் வெற்றி பெறவில்லை , தொடர்ந்து ஒரு மாத காலம் முயற்ச்சிக்கிறது , யானையின் செயல் வெற்றி பெறவில்லை , எனவே குட்டி யானை ஒரு முடிவுக்கு வருகிறது, தன்னால் இந்த சங்கிலியை அறுக்க இயலாது என்று , அதன் பிறகு அந்த குட்டியானை சங்கிலியை அறுப்பதற்கு உண்டான எந்த ஒரு முயர்ச்சியும் செய்வதில்லை , காலங்கள் செல்கிறது .
குட்டியானை பெரிய யானையாக வளர்கிறது , இருப்பினும் சங்கிலியை அறுப்பதற்கு உண்டான எந்த ஒரு முயர்ச்சியும் இந்த யானை செய்வதில்லை , காரணம் யானையின் மனதில் சிறு வயதில் தனது முயற்ச்சி தோல்வி அடைந்ததை நினைத்தே எவ்வித முயர்ச்சியும் எடுப்பதில்லை , இப்பொழுது அந்த யானை முயற்ச்சித்தால் எவ்வளவு பெரிய சங்கிலியையும் அறுத்து எரியும் தன்மை உண்டு , எதையும் உடைக்கும் பலம் யானைக்கு உண்டு , ஆனால் யானை எவ்வித முயற்சியும் செய்வதில்லை , காரணம் யானையின் மனதில் சிறு வயதில் விழுந்த அந்த எண்ணம் யானையை செயல்பட மறுக்க வைக்கிறது , தற்பொழுது அந்த யானையின் காலில் இருப்பது , யானையின் சிறுவயதில் கட்டிய அந்த சிறு சங்கிலியே என்பதை உணராமலேயே அதன் வாழ்க்கை நகர்கிறது .
மேற்கண்ட கதையை போன்றதே நமது நிலையும் , சில விஷயங்கள் சில காலங்களில் தோல்வி அடைந்த காரணத்தால் , எவ்வித முயற்சியும் செய்யாமல் தன்னுள் உள்ள மிகப்பெரிய மனோ ஆற்றலை பயன்படுத்தாமலேயே உள்ள மனிதர்கள் 70 சதவிகிதம் பேர் என்பது ஆராய்ச்சி முடிவு , கன்றை ஈன்ற பசுமாடு தனது கன்றை சில மணி துளிகள் மட்டுமே தனது நாவால் வருடி கொடுக்கிறது , அதன் பிறகு அந்த பசு கன்றுகுட்டி தானாகவே சுயமாக எழுந்து நிற்கிறது , நடக்கிறது , துள்ளி குதிக்கிறது , பிறகு ஓடுகிறது , ஆனால் நமது பெற்றோர்கள் நம்மை எப்பொழுதுமே பிறந்த கன்றாகவே நினைத்து வருடி கொடுத்துகொண்டே இருக்க வேண்டு என்று நினைக்கின்றனர் , சுயமாக நாம் சிந்தித்தாலும் அதை செயல் படுத்த முடியாத சிறு வயது சங்கிலியாக மாறிவிடுகின்றனர் .
நமது குழந்தைகள் செய்யும் செயல்களை பெற்றோர்கள் நன்றாக கவனிக்க வேண்டு , அவர்கள் செய்வது தவறு என்று தெரிந்தால் கண்டிப்பதுடன் , சரியான வழியை காட்டுவது அவர்களின் கடமை , இதில் இருந்து பெற்றோர்கள் விலகி நிற்கும் பொழுது , அதன் விளைவுகளை தனது வயதானகாலங்களில் அனுபவிக்க நேர்கிறது என்பதே உண்மை , இதனால் தனது சந்ததியும் பாதிக்கிறது , இவர்களும் பாதிக்க படுகின்றனர் என்பதே உண்மை .
தனது குழந்தையின் நிலை என்ன ? என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள அவர்களின் ஜாதகம் பெற்றோர்களுக்கு மிகுந்த உதவி செய்கிறது , குறிப்பாக ஜாதகத்தில் லக்கினம் இருக்கும் நிலையை வைத்து ஜாதகரின் உடல் , மனம் , வளரும் சூழ்நிலையை தெளிவாக நாம் தெரிந்துகொள்ள முடியும் , சந்திரனின் நிலையை வைத்து லக்கினத்தின் வழியில் ஜாதகன் செய்யும் செயல்பாடுகளின் தன்மையை தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் , இதன் அடிப்படையில் தனது குழந்தையை நிச்சயம் விழிப்புணர்வுடன் வளர்த்து , சமுதாயத்தில் ஒரு தனி திறன் வாய்ந்த மனிதனாக சிறப்பாக வாழ்க்கையை அமைத்து கொள்ள வைக்க இயலும் , இது பெற்றோர்களால் மட்டுமே முடியும், இதை ஒவ்வொரு பெற்றோரும் உணருவது அவசியம் .
தனது குழந்தைகளை கட்டுபாடுடன் கூடிய சுதந்திரத்தை சரியான வயது வரும் வரை தருவது அவசியம் , அதன் பிறகு அவர்களின் வாழ்க்கையை நிச்சயம் சிறப்பாக அவர்களே அமைத்து கொள்வார்கள் , கண்டிக்கிறேன் என்ற பெயரில் குழந்தைகளை அடக்கி ஆள்வதும் , சுதந்திரம் தருகிறேன் என்ற பெயரில் அவர்களின் பெயரில் அலட்சியமாகவும் இருப்பது மிகுந்த பாதிப்பையே தரும் .
குறிப்பாக சர ராசி லக்கினத்தை பெற்ற குழந்தைகளின் வாழ்க்கையில் அதிக கவனம் பெற்றோர்கள் செலுத்த வேண்டி வரும் , அடுத்ததாக உபய ராசி லக்கினத்தை பெற்ற குழந்தைகளின் வாழ்க்கையில் சிறு அக்கறை பெற்றோர்கள் எடுத்துகொள்வது அவசியம் , ஸ்திர ராசி இலக்கின அமைப்பை பெற்ற குழந்தைகளின் வாழ்க்கையில் சரியான வழியை காட்டினால் போதும் அவர்களே தனது சிறப்பான வாழ்க்கையை அமைத்துகொள்வார்கள் , இதில் மேற்கண்ட லக்கினம் ராசி நிலைகள் நல்ல நிலையில் இருப்பது அவசியம் .
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443306969
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக