ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

ஒருவரது சுய ஜாதகத்தில் 4,10 ம் வீடுகள் பாதக ஸ்தான அமைப்புடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகர் அனுபவிக்கும் இன்னல்கள் என்ன ?



 பொதுவாக சுய ஜாதகத்தில் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல, அதிலும் குறிப்பாக 1,4,7,10 வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த இன்னல்களை ஜாதகருக்கும், ஜாதகரை சார்ந்தவர்களுக்கும் வாரி வழங்கும், ஒரு வேலை மேற்கண்ட 1,4,7,10ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றாலும், நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் ஆகியவை  பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தாமல் இருப்பது சால சிறந்தது.

 கேள்வியில் ஜாதகர் 4 மற்றும் 10 ம் வீடுகள் பாதக ஸ்தான அமைப்புடன் சம்பந்தம் பெற்றால் ஜாதகர் எவ்வித பலனை அனுபவிப்பர் என்பதனை இனி ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே! 

 4ம் வீடு பாதக ஸ்தான அமைப்புடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் ஆண் எனில் தனது தாயர் அமைப்பில் இருந்து பெரும் யோக பலன்களை அனுபவிக்க இயலாத சூழ்நிலையை தரும்,  பெண் எனில் தகப்பனார் அமைப்பில் இருந்து பெரும் யோக பலன்களை அனுபவிக்க இயலாத சூழ்நிலையை தரும் , உதாரணமாக தாயாரின் அரவணைப்பில் வளரும் சூழ்நிலை தராது, தாயின் அன்பினை பரிபூரணமான அனுபவிக்க இயலாத சூழ்நிலையை தரும், வளரும் காலத்தில் பெரிய அளவில் சுகமான வாழ்க்கையை அனுபவிக்க இயலாத தன்மையை தரும்.

  நல்ல வீடு, வண்டி வாகனம், சொத்து சுக அமைப்பை பரிபூரணமாக பெற இயலாத தன்மையை தரும், வளரும் காலத்தில் ஜாதகர் அதிக இன்னல்களையும், கல்வியில் தடை மற்றும் முன்னேற்றம் அற்ற தன்மையையும் தரும், ஜாதகர் தனது பெயரில் வைத்திருக்கும் சொத்து சுகங்களை திடீர் என இழக்கும் அமைப்பை தரும், திருமண வாழ்க்கையில் நிம்மதி அற்ற நிலையும், இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி அற்ற தன்மையையும் கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்ப்பட அதிக சந்தர்ப்பங்களை உருவாக்கும்.

 சுருக்கமாக ஜாதகரின் சுக வாழ்க்கை கேள்விக்கு உரியதாக மாறிவிட வாய்ப்பு உண்டு, மேற்கண்ட ஜாதக அமைப்பை பெற்றவர்கள் தனது தாயாரை
 ( பெண்கள் எனில் தகப்பனாரை )  மிகவும் சிறப்பு கவனம் எடுத்து பார்த்துகொள்வது மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை வெகுவாக குறைக்கும் .

 10 ம் வீடு பாதக ஸ்தான அமைப்புடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் ஆண் எனில் தகப்பனார் வழியில் இருந்தும், பெண் எனில் தாயர் வழியில் இருந்தும் அதிக இன்னல்களை அனுபவிக்கும் சூழ்நிலையை தரும், மேலும் ஜாதகரின் அடிப்படை விஷயமாக கருதும் தொழில் அல்லது வேலை சரியாக அமையாமல், ஜாதகரை ஜீவன வாழ்க்கைக்காக போராடும் சூழ்நிலையை தொடர்ந்து தந்துகொண்டே இருக்கும், ஜாதகர் ஒரு இடத்தில் ஜீவன வாழ்க்கை மேற்கொள்ளுவது என்பது குதிரை கொம்பாகவே இருக்கும், பரதேச ஜீவனம் அமைவதற்கு வழிவகுத்துவிடும்.

சிறு வயதிலேயே தனது தகப்பனாரை விட்டு பிரிந்து வாழும் அல்லது இழந்து வளரும் சூழ்நிலையை தரும் ஜாதக அமைப்பில் இந்த 10ம் வீடு பாதக ஸ்தான அமைப்புடன் தொடர்பு பெற்று இருக்கும் என்பது கவனிக்க தக்கது, மேலும் ஜாதகரின் கௌரவமான வாழ்க்கை கடுமையாக பாதிக்க படுவதிர்க்கு மேற்கண்ட அமைப்பே காரணம், தேவையில்லா விஷயங்களில் தலையிடுவதாலும், மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையீடு செய்வதாலும், ஜாதகரின் கௌரவம் ஆதால பாதாளத்திற்கு செல்லும் என்பது மட்டும் 100%ம்  உறுதி, எனவே ஜாதகர் மற்றவர் விசயத்தில் தலையீடு செய்யாமல் இருப்பது, சகல நிலைகளில் இருந்தும் நன்மை தரும்.

மேற்கண்ட அமைப்பை பெற்ற எந்த ஒரு ஜாதகரும் சுயமாக முதலீடு செய்து தொழில் துவங்குவதை கனவில் கூட நினைத்து பார்க்காமல் இருப்பது மிக்க நல்லது ஏனெனில் ஜாதகர் துவங்கும் தொழில் எதுவென்றாலும், அந்த தொழில் பாதியிலே முடங்கும் அல்லது பெருத்த நஷ்டம் ஏற்ப்பட வாய்ப்பளிக்கும், அல்லது பணியாற்றும் வேலையாட்களால் அதிக இன்னல்களுக்கும், துன்பத்திற்கும் ஆளாகும் சூழ்நிலையை தந்துவிடும்.

மேற்கண்ட அமைப்பை பெற்ற ஜாதகர் தனது தகப்பனாரை சிறப்பு கவனம் எடுத்து கவனித்துகொள்வது  ஜீவன அமைப்பில் இருந்து ஜாதகருக்கு மிகுந்த யோகத்தை வாரி வழங்கும், கௌரவமான வாழ்க்கையையும், அந்தஸ்து மிகுந்த மக்கள் செல்வாக்கினையும் வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 

9443355696
9842421435







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக