புதன், 2 ஜூலை, 2014

ராகு கேது பெயர்ச்சி சுய ஜாதகத்தில் இலக்கின ரீதியாக வழங்கும் நன்மைகள் ! - பகுதி 2



 சாய கிரகமான ராகு கேது தற்பொழுது கால புருஷ தத்துவத்திற்கு 6ம் ராசியான கன்னியிலும் 12ம் ராசியான மீனத்திலும் பெயர்ச்சி பெறுகின்றனர், பெயர்ச்சி பெற்ற நாளில் இருந்து 18 மாதங்கள் மேற்க்கண்ட ராசிகளில் கேட்சர ரீதியான நன்மை தீமை பலன்களை ஒவ்வொரு அன்பர்களுக்கும் வாரி வழங்க காத்து இருக்கின்றனர், மேலும் சந்திரன் அமர்ந்த ராசியை அடிப்படையாக வைத்து ராகு கேது பெயர்ச்சி பலன்களை கணிதம் செய்வதை விட லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, பலன்களை நிர்ணயம் செய்வதே சால சிறந்தது, இதன் அடிப்படையில் ஒவ்வொரு லக்கினத்திற்கு ராகு கேது கிரகங்கள் எவ்வித யோக, அவயோக பலன்களை வழங்குகிறார்கள், என்பதை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே!

மிதுன லக்கினம் : 


 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மூன்றாம் ராசியான மிதுனத்தை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி தரும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம் அன்பர்களே! ஜோதிடதீபம் ராகு கேது கிரகங்கள் பற்றி இதற்க்கு முன் பதிவு செய்த பதிவுகளில் ராகு கேது தான் அமரும் இடத்திற்கு உண்டான பலன்களை தானே ஏற்று நடத்தும் என்பதிற்கு இணங்க தற்பொழுது மிதுன லக்கினத்திற்கு ராகு 4ம் பாவகத்திலும், கேது 10ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்கின்றனர்.


 மிதுன லக்கினத்திற்கு 4ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் புதிய சொத்து, வண்டி, வாகனம், நில புலன்கள், இடம் வாங்கும் யோகத்தை தருவார், மேலும் கன்னி உபய மண் தத்துவ ராசி என்பதால் மிதுன இலக்கின அமைப்பை சார்ந்தவர்களுக்கு உடல் நிலை மிகவும் சிறப்பாக அமையும், உடல் ரீதியான பிரச்சனைகளில் வருத்தபடுவோர்களுக்கு, நல்ல ஆரோக்கியத்தையும், உடல் நலனில் முன்னேற்றத்தையும் வழங்குவார், வட்டி, வரவு செலவு, வங்கிகள் மூலம் ஆதாயம், கடன் கொடுப்பது, பெறுவது ஆகியவற்றால் நன்மை என்ற வகையில் மிதுன லக்கினத்தாருக்கு யோகத்தை வாரி வழங்குவார்.


இதுவரை சொந்தமாக வீடு இல்லாதவர்களுக்கு திடீர் என வீடு கட்டும் யோகத்தை வழங்குவார், புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகத்தை தருவார், போக்குவரத்து தொழில் செய்வோர்களுக்கு தமது தொழில் எதிர்பாராத முன்னேற்றத்தை பெறுவதை காணலாம், குறிப்பாக சரக்கு வாகனம் வைத்திருப்போருக்கு திடீர் முன்னேற்றம் உண்டாகும், வண்டி வாகன தொழில் செய்வோருக்கு அபரிவிதமான தொழில் விருத்தியை ராகு பகாஅன் வழங்குவார் இனி வரும் 18 மாதங்களுக்கு என்றால் அது மிகையில்லை, மேலும் சிமெண்ட்,செங்கல்,ஜல்லி,பெய்ன்ட் போன்ற பொருட்களை வியாபாரம் செய்பார்களுக்கும், கட்டிட தொழில் செய்பவர்களுக்கும் அபரிவிதமான வளர்ச்சியை தங்கு தடையின்றி தருவார்.

 மிதுன லக்கினத்திற்கு 10ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவான், ஜாதகருக்கு ஜீவன வழியில் இருந்து  மன நிம்மதி இழப்பை தருவார், எதிர்பாரத வகையில் மற்றவர் செய்யும் தவறுகளுக்கு தான் பொறுப்பு ஏற்க்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளபடுவர், மேலும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைப்பது அரிது, தனக்கு மேல் இருக்கும் அதிகாரிகளிடம் பகைமை பாராட்டாமல் இருப்பது சால சிறந்தது, இல்லை எனில் தேவையில்லாத மன கசப்பு ஏற்ப்பட வாய்ப்பு உண்டு, இனி வரும் 18 மாதங்களும் மிதுன லக்கினத்தை சார்ந்தவர்கள் மற்றவர்களிடம் பணிபுரியும் அமைப்பில் இருப்பின் அதிக கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது நலம் தரும்.

 மேலும் தமது கௌரவத்திற்கு இழுக்கு ஏற்ப்படும் தன்மை வரக்கூடும் என்பதால் மிதுன லக்கினத்தை சார்ந்தவர்கள், எதிர் பாலினரிடம் அதிக கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது நலம் தரும், மேலும் பொது காரியங்களில் முன் நிற்ப்பதை தவிர்ப்பது ஜாதகரின் கௌரவத்திற்கு எவ்வித பங்கத்தையும் விளைவிக்காது, ஆக மிதுன லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு கேதுபகவன் எதிர்வரும் 18 மாதங்கள் தீமையான பலன்களை தரக்கூடும் என்பதால் அதிக கவனமுடன் இருப்பது நலம் தரும்.

கடக லக்கினம் :

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் ராசியான கடகத்தை   லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி தரும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம் அன்பர்களே! கடக லக்கினத்திற்கு 3ல் ராகுவும், 9ல் கேதுவும் இனி வரும் 18 மாதங்கள் சஞ்சாரம் செய்ய இருக்கின்றனர், இந்த 18 மாதங்களிலும் கடக இலக்கின ஜாதகர்களுக்கு எவ்வித யோக அவயோக  பலன்களை வழங்க இருக்கின்றனர் என்பதை பார்ப்போம்.

 தற்பொழுது பெயர்ச்சி பெற்றிருக்கும் ராகு கேது எனும் சாய கிரகங்களால் அதிக அளவிற்கு யோக பலன்களை அனுபவிக்கும் மற்றொரு லக்கினம் இந்த கடக லக்கினத்தை சார்ந்தவர்களே என்றால் அது மிகை இல்லை, குறிப்பாக லக்கினத்தில் இருந்து 3ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் கடக  லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு எடுக்கும் காரியங்களில் வெற்றியையும், நினைத்த எண்ணங்களை வெற்றிகரமாக முடிக்கும் வாய்ப்பையும் வாரி வழங்குவார், எதிர்பாராத லாபங்களை வாரி வழங்குவார், முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு முயற்ச்சிக்கும் காரியங்களில் யாவிலும் வெற்றி மேல் வெற்றியை வாரி வழங்குவார்.

 சகோதர வழியில் இருந்து நல்ல ஆதரவினை  பெரும் யோகம் உண்டாகும், கமிஷன் தரகு தொழில் செய்வோருக்கு இது ஒரு பொற்காலமாக கருதலாம், வீரியமிக்க செயல்களால் மக்களால் போற்ற படுவார்கள், விளையாட்டு வீரர்கள் மிகப்பெரிய வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் பெறுவார்கள், தன்னம்பிக்கை அதிகரிக்கும், ஏஜென்சி எடுத்து நடத்தும் அன்பர்களுக்கு செல்வ செழிப்பை வாரி வழங்கும், எதிரிகளை வெல்லும் ஆற்றல் அபரிவிதமாக உண்டாகும், பயணங்களினால் மிகப்பெரிய ஆதாயங்களை மிதுன  லக்கினத்தை சார்ந்தவர்கள் பெறுவார்கள் என்பது உறுதி.

 9ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் கடக லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு மதிப்பிற்கு உரிய செயல்களையும், புகழ் மிக்க பொறுப்புகளையும் வாரி வழங்குவார், வெகுமதி கெளரவம் சமூக அந்தஸ்து என்ற வகையில் மிகுந்த நன்மைகளையும், தொழில் துறையில் நல்ல வளர்ச்சியையும் வாரி வழங்குவார், ஆன்மீகத்தில் கடக லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு இனி வரும் 18 மாத காலமும் சிறப்பான முன்னேற்றத்தை வாரி வழங்கும், குறிப்பாக இதுவரை செல்ல இயலாத புண்ணிய திரு தளங்களுக்கு சென்று வரும் யோகத்தை வாரி வழங்கும், ஆன்மீகத்தில் சிறந்து விளங்கும் குரு மகான்களின் தரிசனமும், ஆசிர்வாதமும் ஒருங்கே கிடைக்கும் யோகம் உண்டாகும்.

 மேலும் கடக லக்கினத்தை சார்ந்தவர்களின் அறிவாற்றலும், சிந்தனை திறனும் கேது பகவானால் பன்மடங்கு உயர்ந்து நிற்கும், எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் சரியான தீர்வு சொல்லும் அளவிற்கும் தனி திறமையும், சமயோசித புத்திசாலிதனத்துடன் விளங்கும் யோகத்தை கேது பகவான் வாரி வழங்குவார், நல்ல ஆரோக்கியம் விரைவாக முடிவெடுக்கும் தன்மை, பல துறைகளில் ஆராய்ச்சி, உயர்கல்வி அல்லது ஆராய்ச்சி கல்விகளில் தேர்ச்சி, இடமாற்றம் மற்றும் சூழ்நிலை மாற்றத்தில் விருப்பம், புதிய கண்டுபிடிப்பு, வெளிநாடுகள் செல்லும் யோகம், புதை பொருட்கள் மூலம் லாபம், லாட்டரியில் அதிர்ஷ்டம் என்ற வகையில் நன்மையை வாரி வழங்குகிறார்.

குறிப்பு :

 அன்பர்களே மேற்கண்ட யோக அவயோக பலன்கள் யாவும், சுய ஜாதகத்தில் மிதுன  லக்கினத்திற்கு தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம், 4,10ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், இதை போன்றே யோக அவயோக பலன்கள் யாவும், சுய ஜாதகத்தில் கடக லக்கினத்திற்கு தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம், 3,9ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒரு வேலை தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம் மேற்கண்ட பாவாக பலன்களை நடத்த வில்லை எனில் மேற்கண்ட யோக அவயோக பலன்கள் யாவும் நடைபெறாது என்பதை நினைவில் நிறுத்தவும்.

 மேலும் சுய ஜாதகரீதியாக லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை அடிப்படையாக கொண்டு ராகு கேது பெயர்ச்சி பலன்களை நிர்ணயம் செய்வது, ஜாதக பலன்களை மிகவும் துல்லியமாக கணிதம் செய்ய உதவி புரியும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக