வெள்ளி, 1 மே, 2015

திருமணத்திற்கு பிறகு அவயோக பலன்களை அனுபவிக்கும் ஜாதக நிலை !


தனது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் முன் ஓவ்வொருவரும் தனது ஜாதக நிலையை கருத்தில் கொண்டு தேர்வு செய்வது, ஜாதகரின் வாழ்க்கையில் ஏற்ப்படும் இன்னல்களில் இருந்து வெகுவாக காப்பாற்றும், ஒருவரின் சுய ஜாதகத்தில் உள்ள பலன் தான் நடைமுறைக்கு வரும் என்றாலும் கூட, தன்னுடன் சேர்ந்து இல்லற வாழ்க்கையை மேற்கொள்ளும் ஜாதகத்தை பொருத்தும் சிலரது வாழ்க்கை நிர்ணயம் செய்யபடுகிறது, உதாரணமாக பொருத்தம் காணும் பொழுது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும், களத்திரம் எனும் 7ம் பாவகமும், ஆயுள் ஸ்தானம் எனும் 8ம் பாவகமும் , வலிமையுடன் இருப்பது திருமண வாழ்க்கையில் சீரும் சிறப்பையும் வாரி வழங்கும்.

இதில் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,7,8ம் பாவகங்கள் 6,8,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெற்று இருப்பது ஜாதகருக்கு 2,7,8ம் பாவக வழியில் இருந்து இன்னல்களை தந்த போதிலும் அது பெரிய அளவில் ஜாதகரை பாதிப்பதில்லை, மாறாக ஒருவரது ஜாதகத்தில் 2,7,8ம் பாவகங்கள் பாதக ஸ்தானம் எனும் 11,9,7 ( சரம் 11, ஸ்திரம் 9, உபயம் 7 ) பாவகங்களுடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகரின் திருமண வாழ்க்கைக்கு பிறகு வரும் காலங்களை சோதனைக்கு ஆளாக்கும், தம்பதியரின் ஒற்றுமை குறைவு, விபத்து, பொருள் இழப்பு, மனோரீதியான போராட்டம் மற்றும் மன அழுத்தம், நிம்மதியின்மை, உடல் மனம் இரண்டும் வெகுவாக பாதிக்கும் தன்மை, தனது ஜாதகத்தில் யோக நிலை இருந்த போதிலும், அதை அனுபவிக்க இயலாத தன்மை, முரண்பட்ட கருத்து வேறுபாடு, மன வாழ்க்கையில் பிரிவு, தவறான உறவுகள், அதன் வழியில் இருந்து வரும் தொல்லைகள் துன்பங்கள், உறவுகள் மற்றும் சமூக அமைப்பில் இருந்து வரும் எதிர்ப்புகள், தனது குழந்தைகளின் எதிர்காலமும் கடுமையாக பாதிக்கும் தன்மை, சுமுகமாக தீர்வு காணும் பிரச்சனைகளை பெரிதாக்கி அதன் வழியில் துன்பம் காணும் மன நிலை, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் சுமைகள், மற்றும் துன்புறுத்தல், உதவி செய்பவரின் மூலம் பெரும் அவயோக நிலை என ஜாதகரை வாட்டி வதைத்து விடும், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவடைவது சிறப்பானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

  
ஜாதகி லக்கினம் : மிதுனம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : திருவோணம் 3ம் பாதம் 

அடிப்படையில் இந்த ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானத்தை குறிக்கும் 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சுய ஜாதக ரீதியாக ஜாதகி திருமணத்திற்கும் குடும்ப வாழ்க்கைக்கும் யோகம் அற்றவர் என்பது 200% விகிதம் உறுதியாகிறது, ஆனால் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமான துலாம் நல்ல வலிமை பெறுவது, ஜாதகிக்கு திருமணம் செய்யும் வாய்ப்பை வழங்கியது, ஆயுள்  பாவகமான 8ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெற்று இருப்பது, ஜாதகிக்கு தன் கணவர் வழியில் இருந்து வரும் நல்ல யோக வாழ்க்கையையும், பெருளாதார வசதியும், நல்ல வருமான வாய்ப்பையும் வாரி வழங்கியது, இருப்பினும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு குடும்ப ஸ்தானம் ஆனா ரிஷபம் ஜாதகிக்கு 12ம் வீடாக அமைந்து விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று இருப்பது குடும்ப வாழ்க்கையில் ஜாதகி பெரும் மன நிம்மதி இழப்பையும், வீண் விரையங்களையும், உடல் மற்றும் மன நலமின்மையையும்,  அனைவராலும் தொல்லைக்கு ஆளாகும் சூழ்நிலையை  உறுதி செய்தது.

ஆக ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமான துலாம் வலிமை பெற்றது திருமண வாழ்க்கையை சர காற்று தத்துவ அமைப்பில் நின்று 100% யோகமுள்ள கணவனை ( ஜாதகியின் கணவர் அரசு துறை பணியாளர் ) திருமணம் செய்யும் வாய்ப்பை வழங்கிய போதும், சுய ஜாதகத்தில் பாதிக்க பட்ட 2,7ம் பாவகமும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு குடும்ப ஸ்தானமான ரிஷபமும், ஜாதகியின் திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியது, மேலும் பாதக ஸ்தான பலனை நடத்தும் ராகு திசையில் ஜாதகிக்கு திருமணம் நடந்தது மிகுந்த துன்பத்தை அனுபவிக்கும் சூழ்நிலையை தந்தது, 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனை ஏற்று நடத்தும் குரு திசையில் குரு புத்தியில் ஜாதகியின் கணவருக்கு விபத்து ஏற்ப்பட்டு, கணவருக்கு வைத்தியம் செய்யும் சூழ்நிலையை தந்தது, வைத்தியம் பலன் தாராமல், 2,7ம் வீடுகள் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தும் குரு திசை கேது புத்தியில் ஜாதகி கணவனை இழக்கும் சூழ்நிலையை தந்தது, அவரது மறைவுக்கு பிறகு ஜாதகியின் ஜீவன ஸ்தானம்  நல்ல நிலையில் இருப்பதால் அவரது அரசுப்பணி ஜாதகிக்கு கிடைத்தது.

இந்த சூழ்நிலையில் ஜாதகிக்கு வேறு தொடர்புகள் ஏற்ப்பட ( 3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு  ) தேவையில்லாத அவ பெயர்களை சந்திக்கும் சூழ்நிலையை தந்தது, இதனால் உறவுகளுடன் இணக்கமில்லாத சூழ்நிலை, மன நிம்மதி இழப்பு, பொருள் இழப்பு உடல் நலக்குறைவு ஏற்ப்பட்டது, ஜாதகிக்கு எத்தனை சிரமங்கள் வந்த போதிலும், சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் வலிமை பெற்று இருப்பதால் ஜாதகியின் குழந்தைகள் ஜாதகிக்கு அதரவாக நின்றது, இறை அருளின் கருணையும், சமயோசித புத்திசாலித்தனமும் பாதக ஸ்தான வழியில் இருந்து வரும் இன்னல்களை களையும் வாய்ப்பினை ஜாதகிக்கு வாரி வழங்கியது.

ஜாதகிக்கு 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களை வழங்கிய போதும், தன் கணவன் மூலம் பெரும் வருமானம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை குறிக்கும் ஆயுள் பாவகமான 8ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, தனது கணவனின் மறைவுக்கு பிறகும் வசதி வாய்ப்புடன் வாழும் யோகத்தை தந்தது, மேலும் தற்பொழுது நடைபெறும் குரு தசை ஜாதகிக்கு 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஸ்திரமான மன கவலை, குடும்ப வாழ்க்கையில் இன்னல்களை தந்த போதிலும், எதிர் வரும் சனி திசை 11ம் வீடு பாக்கிய ஸ்தான பலனை ஏற்று நடத்துவதும், பாக்கய ஸ்தானம் ஜாதகிக்கு மகரம் மற்றும் கும்ப ராசிகளுடன் சம்பந்தம் பெறுவது சிறந்த யோக வாழ்க்கையை வாரி வழங்கும் என்பதும், 5ம் பாவக வழியில் இருந்து தான் பெற்ற குழந்தைகள் ஜாதகிக்கு முழு ஆதரவாக நிற்பார்கள் என்பது வரவேற்க தக்கதே, மேலும் இந்த ஜாதகி களத்திர வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும் யோகம் அற்றவர் என்பது உறுதியாகிறது.

இந்த ஜாதகியின் வாழ்க்கை துணைவரின் ஜாதகத்திலும், 2,7ம் வீடுகள் கடுமையாக பாதிக்கபட்டு இருப்பதும், 8ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பதும் கவனிக்க தக்கது, லக்கினம் அல்லது ஆயுள் பாவகம் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்ற ஜாதகத்தை பெற்றவர்கள், எவ்வித தீய பழக்கத்திற்கும் ஆற்ப்படாமல் இருப்பது நல்லது ( ஜாதகர் குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை சந்தித்தார் ) ஏனெனில் இவர்களது வாழ்க்கை முடிவிற்கு இவர்களது செய்கையே காரணமாக அமைந்துவிடும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக