புதன், 11 மே, 2016

சுய ஜாதகங்களில் யோகங்களும், ஜாதகரின் விழிப்புணர்வும்!

 

சுய ஜாதகத்தில் ராஜ யோகங்கள் 12 பாவகங்கள் வழியில் பலனை தரும் பொழுது ஜாதகர் விழிப்புணர்வுடன் இருந்து நன்மைகளையும், அதிர்ஷ்டங்களையும் பெறவேண்டும், மாறாக வரும் நன்மைகளையும் யோகங்களையும் ஜாதகர் உதறும் பொழுது, சுய ஜாதகத்தில் யோகங்கள் இருந்த போதிலும் ஜாதகருக்கு அதனால் எவ்வித பலாபலனும் அனுபவிக்க இயலாத நிலையை தரும், இயற்கையாகவே சுய ஜாதகத்தில் உடல் உயிர் ஆகிய லக்கினம் எனும் முதல் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் மிகவும் விழிப்புணர்வுடன் செயலாற்றும் தன்மையை தரும், மேலும் சுய ஜாதகத்தில் 12 பாவக வழியில் இருந்து வரும் யோக பலன்களை சிறிதும் விரையம் இன்றி ஜாதகர் அனுபவிப்பர், தங்கு தடையின்றி ராஜ யோக பலாபலன்கள் ஜாதகருக்கு நடைமுறைக்கு வரும், உடல்உயிராகிய லக்கினம் எனும் முதல் பாவகம் ஏதாவது ஒரு வகையில் பாதிக்க படும்பொழுது, ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ராஜ யோகங்கள் இருந்த போதிலும் அதன் பலாபலன்களை ஜாதகர் அனுபவிக்கும் நிலையை தாராது, ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவகத்திர்க்கு ஆதிபத்தியத்திற்கு உற்பட்ட உறவுகள் அனுபவிக்கும் நிலையை தந்துவிட வாய்ப்புள்ளது.

சுய ஜாதகத்தில் சிறப்பான ராஜ யோகங்கள் இருந்து, உடல் உயிராகிய லக்கினம் பாதிக்க படும்பொழுது, ஜாதகர் லக்கின பாதிப்பில் இருந்து வெளிவருவதற்கு உண்டான வாய்ப்புகளை தீவிரமாக ஆராய்வது சாலசிறந்தது, இலக்கின பாதிப்பு எத்தகையது, அதன் வீரியம் என்ன என்பதை ஜாதகர் தெளிவாக உணர்வது அவசியமாகிறது, இலக்கினம் மறைவு ஸ்தானமான 6,8,12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நிச்சயம் பாதிப்பை தரும், லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு கடுமையான பாதிப்பை மிக பெரிய அளவில்  வழங்கும், மேற்கண்ட அமைப்பு சுய ஜாதகத்தில் இருப்பின் ஜாதகர் அவ்வித பாதிப்பில் இருந்து வெளிவருவதற்கு உண்டான விஷயங்களில் ஆர்வம் செலுத்துவது சுய ஜாதகத்தில் உள்ள யோகங்களையும், அதிர்ஷ்டங்களையும் முழுமையாக அனுபவிப்பதற்கு உண்டான வாய்ப்புகளை நிச்சயம் வாரி வழங்கும், ஜாதகரின் முயற்ச்சி நிச்சயம் நல்ல வெற்றிகளை தரும்.

மேற்கண்ட விஷயங்களை பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !


லக்கினம் : மீனம் 
 ராசி : மீனம்
நட்சத்திரம் : ரேவதி 1ம் பாதம்

ஜாதகருக்கு மிகவும் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

5,8,11ம் வீடுகள் அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகத்தில் மிதமிஞ்சிய யோகங்களை தரும்.

10ம் வீடு குடும்பம் மற்றும் தன  ஸ்தானமான 2ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகத்தில் மிதமிஞ்சிய யோகங்களை தரும்.

ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

4ம் வீடு சுக  ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகத்தில் மிதமான யோகங்களை தரும்.

2,3,6,9,12ம் வீடுகள் தொழில் ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகத்தில் மிதமான யோகங்களை தரும்.

ஜாதகருக்கு மிகவும் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

1,7 ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிக கடுமையான பாதிப்புகளை வாரி வழங்கும் .

மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 2,11ம் பாவக தொடர்புகளை பெரும் வீடுகள் வழியில் இருந்து மிதமிஞ்சிய யோக பலன்கள் நடைபெறும், ஜாதகரின் வாழ்க்கையில் 5பாவக வழியில் இருந்து நல்ல அறிவு திறனும், புத்திசாலித்தனமும், 8ம் பாவக வழியில் இருந்து திடீர் அதிர்ஷ்டமும் புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையையும், 10ம் பாவக வழியில் இருந்து மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தையும், 11ம் பாவக வழியில் இருந்து முற்போக்கு சிந்தனையையும், நீடித்த மிகப்பெரிய அளவிலான அதிர்ஷ்டங்களையும் வாரி வழங்கும், ஜாதகருக்கு 5,8,10,11ம் பாவகங்கள் தனது அமைப்பிலான யோகங்களை விரைந்து வாரி வழங்கும், தன்னிறைவான முழுமை நிறைந்த யோகங்களையும் நன்மைகளையும் 5,8,10,11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நிச்சயம் அனுபவிக்கலாம் என்பது மேற்கண்ட ஜாதகருக்கு உள்ள சிறப்பு தன்மை ஆகும்.

ஆனால் ஜாதகரின் லக்கினமும், களத்திர பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதால், மேற்கண்ட யோக பலன்களை அனுபவிப்பதற்கு  தடையாக ஜாதகரும், ஜாதகரின் வாழ்க்கை துணையும், ஜாதகரின் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளும் இருப்பார்கள் என்பது கவனிக்க தக்க அம்சமாகும், அடிப்படையில் லக்கினம் பாதிப்பது, ஜாதகரின் வளர்ந்த சூழ்நிலை சரியில்லை என்பதையும், ஜாதகரின் உடல் மற்றும் மனம் சார்ந்த விஷயங்கள் ஜாதகருக்கு ஒத்துழைப்பை வழங்காது என்பதையும், ஜாதகரின் எண்ணமும் செயலும் சரியான பாதையில் செல்லாது என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

களத்திர பாவகம் பாதிப்பது, ஜாதகர் தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது மிகுந்த கவனத்தையும், ஜாதகருக்கு சாதகமாக இருக்கும் விஷயங்களில் ஆர்வம் செலுத்தி தேர்வு செய்வது நன்மையை தரும் என்பதனையும், தமது நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளை தேர்வு செய்யும் பொழுது மிகுந்த எச்சரிக்கையையும், ஜாதகருக்கு பாதகமில்லாத நபர்களையும் தேர்வு செய்வது அவசியமாகிறது, ஜாதகர் மேற்கண்ட விஷயங்களில் கவனம் செலுத்த வில்லை எனில் ஜாதகரின் வாழ்க்கை மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகும் என்பதனை கருத்தில் கொள்வது, ஜாதகருக்கு நன்மைகளை தரும்.

மேலும் ஜாதகர் உடல்,மனம்,புத்தி மற்றும் செயல்களால் தனக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் பாதிப்பில்லாத செயல்களை செய்வதும், உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவதும், செய்யும் செயல்களில் விளைவறிந்து செயல்படும் தன்மையையும், அறிவில் விழிப்புணர்வும் தெளிவான சிந்தனையையும் தனது துணையாக கைகொள்வது சகல நிலைகளில் இருந்தும் நன்மைகளை தரும்.

இந்த ஜாதகருக்கு கடுமையாக பாதிக்க பட்ட பாவக பலனை ஏற்று நடத்தும் திசா புத்தி காலங்களில் ஜாதகர் மிகுந்த கவனமுடன் நடந்துகொள்வது அவசியமாகிறது, ஏனெனில் பாதிக்க பட்ட பாவகங்களின் பலன்களை ஏற்று நடத்தும் திசா புத்திகளே ஜாதகருக்கு கடுமையான நெருக்கடிகளையும், சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களையும் வாரி வழங்கும், இதை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது ஜாதகருக்கு கேது,சுக்கிரன்,சூரியன் மற்றும் செவ்வாய் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவதால், இந்த காலகட்டங்களில் ஜாதகர் மிகுந்த கவனமுடன் இருப்பது ஜாதகருக்கு நன்மைகளை தரும், மேலும் யோகங்களை தரும் பாவக வழியிலான பலாபலன்களை அனுபவிப்பதற்கு உண்டான வழிமுறைகளை ஜாதகர் கையாள்வது சிறப்பானதாக அமையும்.

அடுத்து வரும் சுக்கிரன் திசை 5,8,11ம் வீடுகள்  அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்ற பலனையும், 1,7 ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்ற பலனையும் கலந்து நடத்துவது ஜாதகருக்கு 11ம் பாவக வழியில் இருந்து மிதமிஞ்சிய யோகங்களையும், பாதக ஸ்தான வழியிலான கடுமையான பாதிப்புகளையும் வாரி வழங்கும் என்பதால், ஜாதகர் மிகுந்த விழிப்புணர்வுடன் நடந்துகொண்டு யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை பெறுவதும், பாதக ஸ்தான வழியிலான இன்னல்களில் இருந்து விடுபடுவதற்கு உண்டான விஷயங்களில் அதிக ஆர்வமும் கொள்வது, ஜாதகருக்கு மிகசிறந்த யோக வாழ்க்கையயை வாரி வழங்கும்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் ராஜயோகங்கள் இருந்த போதிலும், லக்கினம் வலிமை இழப்பது ஜாதகருக்கு நல்லதல்ல, யோகபலன்களை ஜாதகர்  பரிபூர்ணமாக அனுபவிக்க இயலாத சூழ்நிலையை உருவாக்கும், இருப்பினும் ஜாதகர் விழிப்புணர்வுடன் இருந்தால், இந்த நிலையை ஜாதகரே மாற்ற இயலும் என்பதை கருத்தில் கொள்வது நல்லதென " ஜோதிடதீபம் " உறுதியாக பதிவு செய்கிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக