சனி, 14 மே, 2016

தொழில் ஸ்தான வலிமையையும், பாதக ஸ்தான தொடர்புகளும், திசா புத்திகள் வழங்கும் பலாபலன்களும்!


 சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை பெறுவது என்பது மிக மிக அவசியமாகிறது "எண்சான் உடம்புக்கு சிரசே பிரதானம்" என்பதற்கு இணங்க சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பான வளரும் சூழ்நிலையையும், சிறந்த உடல் ஆரோக்கியத்தையும், நல்ல சிந்தனைகளையும், அறிவு திறன் மற்றும் மன ஆரோக்கியத்தையும் வாரி வழங்கும், லக்கினம் வலிமை இழப்பது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை வழங்குவதில்லை, மேலும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியிலான நன்மைகளையும், யோகங்களையும் அனுபவிக்க இயலாத சூழ்நிலை மற்றும் சந்தர்ப்பங்களை ஜாதகருக்கு வழங்குகிறது, லக்கினம் பாதிக்க படுவதே ஜாதகருக்கு நன்மைகளை வழங்குவதில்லை என்ற நிலையில், லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது என்பது ஜாதகரின் வாழ்க்கையில் தாங்க இயலாத இன்னல்களை கடுமையாக வாரி வழங்கும், மேலும் நடைமுறையில் உள்ள திசா புத்திகள் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் வாழ்க்கை அந்தோ பரிதாபம் என்ற நிலைக்கு எடுத்து செல்லும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே!

கிழ்கண்ட ஜாதகருக்கு லக்கினம் மட்டுமல்ல மேலும் சில பாவகங்களும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாழ்க்கையை எவ்வித பாதிப்புகளை வழங்குகிறது என்பதை பற்றியும், ஜாதகருக்கு நடைமுறையில் உள்ள திசாபுத்திகள், எதிர்வரும் திசாபுத்திகள் வழங்கும் பலாபலன்கள் பற்றியும், இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!


லக்கினம் : சிம்மம் 
ராசி : கடகம் 
நட்சத்திரம் : பூசம் 2ம் பாதம் 

பாவக தொடர்புகள் :

1,2,5,6,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 200% விகித கடுமையான பாதிப்புகளை 1,2,5,6,9ம் வீடுகள் வழியில் இருந்து நடத்தும்.

8,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 100% விகித கடுமையான பாதிப்புகளை 8,10,12ம் வீடுகள் வழியில்  இருந்து நடத்தும்.

3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 3ம் பாவக வழியில் இருந்து நன்மைகளையும், 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 4ம் பாவக வழியில் இருந்து நன்மைகளையும்,7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 7ம் பாவக வழியில் இருந்து நன்மைகளையும்,11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 11ம் பாவக வழியில் இருந்து நன்மைகளையும் சிறப்பாக வாரி வழங்கும்.

சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையாக பாதிக்க படுவது, ஜாதகருக்கு சுய தொழில் மூலம் ஜீவனம் இல்லை என்பதை தெளிவு படுத்துகிறது, 7ம் பாவகம் வலிமையுடன் இருப்பதால் ஜாதகர் கூட்டு தொழில் செய்வதற்கு உகந்தவர் என்பது உறுதியாகிறது, இருப்பினும் ஜாதகர் ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார், பணிபுரியும் இடத்தில் அதிக இன்னல்களை தற்ப்போழுதும் சந்தித்து கொண்டு இருக்கிறார் என்பதை ஜீவன ஸ்தான வலிமை இன்மை காட்டுகிறது.

மேலும் சுய ஜாதகத்தில் பெருவாரியான வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதும், பாதக ஸ்தான தொடர்புகளை பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் சிறு வயது முதல் பல இன்னல்களுக்கு ஆளாக்கி  உள்ளது, ஜாதகரும் தனது செய்கையினாலே பல இன்னல்களை எதிர்கொண்டுள்ளார், 1ம் பாவக வழியில் இருந்து உடல்நலம், மன நலம் மற்றும் வளரும் சூழ்நிலை சிறப்பற்ற தன்மையையும், 2ம் பாவக வழியில் குடும்ப வாழ்க்கையில் சிக்கல்களையும், வரும் வருமானம் ஜாதகருக்கு பாதகமான பலன்களையும், தனது பேச்சினால் இன்னல்களையும், 5ம் பாவக வழியில் இருந்து கற்ற கல்வி வழியில் இருந்து பலன் அற்ற நிலையையும், பூர்வீகத்தில் இருந்து பரதேச ஜீவனம் மேற்கொள்ளும் சூழ்நிலையையும், குல தெய்வ ஆசி அற்ற நிலையையும், 6ம் பாவக வழியில் இருந்து கடுமையான உடல் நல பாதிப்புகளையும், எதிரிகள் தொந்தரவு மற்றும் கடன் சார்ந்த இன்னல்களையும், 9ம் பாவக வழியில் இருந்து பித்ரு சாபங்களையும், சுய அறிவு திறன் மற்றும் புத்திசாலித்தனம் ஜாதகருக்கு பயன் தாராமல் மற்றவர்களுக்கு பயன்படும் சூழ்நிலையும் ஏற்ப்படுகிறது.

மேலும் ஜாதகர் 8ம் பாவக வழியில் இருந்து திடீர் இழப்புகளையும், எதிர்பாராத மருத்துவ செலவினங்களையும், அனைவராலும் தொல்லைகளையும், எதிர்பாராத விபத்துகளையும், மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களையும் தருகிறது, 10ம் பாவக வழியில் இருந்து அடிக்கடி ஜீவன வழியில் தொந்தரவுகளையும், பணியிட மாறுதல்களையும், உயர் அதிகாரிகளின் கடுமையான கண்டிப்புகளுக்கும், ஆளாகும் சூழ்நிலையை தருகிறது, 12ம் பாவக வழியில் இருந்து அனைவராலும் தொல்லைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலையையும், நல்ல உறக்கமின்மையும், ஜாதகரின் வாழ்க்கையில் வரும் திடீர் நிம்மதி இழப்பும் கடுமையாக பாதிப்பை தருக்கிறது, வீண் மன பயம், பிற்போக்கு சிந்தனைகள், ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கிறது, திடீர் இழப்புகள் ஜாதகருக்கு மிகப்பெரிய நெருக்கடிகளை கடுமையாக தருவது வருந்தத்தக்கது.

சுய ஜாதகத்தில் 8வீடுகள் கடுமையாக பதிக்க படுவது ஜாதகரின் வாழ்க்கையில் மிகப்பெரிய இன்னல்களை வாரி வழங்கிக்கொண்டு இருப்பது கண்கூட உள்ளது, சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை நிலை இப்படி இருக்க நடைபெறும் திசா புத்திகள் எவ்வித பலன்களை தருகிறது என்பதை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே! 

தற்பொழுது ஜாதகருக்கு நடைபெறுவது புதன் திசை, இந்த புதன் திசை ஜாதகருக்கு 3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வீரிய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது வரவேற்க தக்க அம்சமாகும், சுய ஜாதகத்தில் பல பாவகங்கள் கடுமையாக பாதிக்கப் பட்ட போதிலும், தற்பொழுது நடைபெறும் புதன் திசை வலிமை பெற்ற 3ம் பாவக பலனை ஏற்று நடத்தியது வரவேற்க தக்க அம்சமாகும், எனவே புதன் திசை ஜாதகருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் நன்மைகளை வழங்கியது எனலாம், அடுத்து வரும் கேது திசை ஜாதகருக்கு 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகசிறப்பான நன்மைகளையே தரும் என்பது கவனிக்க தக்கது, கேது திசை காலங்களில் ஜாதகருக்கு திருமணம் சிறப்பாக நடைபெறும், நல்ல வாழ்க்கை துணை அமைவார், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து யோக பலன்களை தங்குதடையின்றி பரிபூரணமாக அனுபவிக்கும் யோகத்தை தரும், திருமணத்திற்கு பிறகு ஜாதகருக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

கேது திசைக்கு பிறகு வரும் சுக்கிரன் திசை ஜாதகருக்கு 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மைகளை தருவது வரவேற்க தக்க அம்சமாகும், சுக்கிரன் திசை முழுவதும் ஜாதகருக்கு நல்ல வீடு வண்டி வாகனம் மற்றும் சுக போகங்களையும் 4ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், மேலும் வாழ்க்கை துணை வழியில் இருந்தும் ஜாதகருக்கு பொருள் சேர்க்கை உண்டாகும்.

மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் பெரும்பாலான வீடுகள் கடுமையான பாதிப்பை பெற்ற போதிலும் ( 8 வீடுகள் பாதிக்க பட்டுள்ளது ) நடைபெறும் திசா புத்தி, எதிர்வரும் திசாபுத்தி ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்துவது சாதகமாக அமைந்துவிடுகிறது, சுய ஜாதகத்தில் பாவகங்கள் பாதிக்கப்பட்ட போதிலும், நடைமுறை எதிர்வரும் திசா புத்தி ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதால் ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து யோக பலன்களே நடைமுறைக்கு வரும், எனவே ஜாதகர் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தும் திசா புத்தி காலங்களில் மட்டும் எச்சரிக்கையாக இருப்பது சகல நலன்களையும் தரும்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் லக்கினம் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ஜாதகருக்கு   உகந்தது அல்ல, வலிமை பெற்ற பாவக வழியிலான நன்மைகளை  முழுமையாக பெற, வலிமை பெற்ற பாவக வழியிலான உறவுகளின் தொடர்பை ஜாதகர் நட்பு பாராட்டுவது நல்லது, மேலும் சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு நன்மைகளை தருவோர், 3ம் பாவக வழியில் சகோதரம், 4ம் பாவக வழியில் தாயார், 7ம் பாவக வழியில் வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள், 11ம் பாவக வழியிலான மூத்த சகோதரம் ஆகியோரிடம் ஜாதகர் எப்பொழுதும் சுகுமானபோக்கை கடைபிடிப்பது மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும், நடைபெறும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகருக்கு நன்மையே நடைபெறும், பாதிக்கப்பட்ட பாவக வழியிலான பலாபலன்கள் ஜாதகருக்கு நடைபெறாது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக