வெள்ளி, 16 நவம்பர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - கடகம் )



( குரு பெயர்ச்சியின் வழியில் 100% விகித பரிபூர்ண சுபயோக பலனை சுவீகரிக்கும் வல்லமை பெற்றவர்கள்  என்கிற முறையில் 3ம் இடத்தை பெறுபவர்கள் கடக லக்கின அன்பர்களே என்றால் அது மிகையில் ) சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : கடகம்

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் ராசியாகவும், சர  நீர் தத்துவ தன்மையை பெற்றதுமான கடக ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, தனது சுய வர்க்க வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் நல்லதொரு மாற்றங்களை தனது சஞ்சார நிலையில் இருந்தும், பார்வை செய்யும் பாவக வழியில் இருந்தும் வாரி வழங்குவது வரவேற்க்கதக்கது, கடக இலக்கின அன்பர்கள் இனிவரும் ஒவ்வொரு நாட்களும் முன்னேற்ற பாதையில் வெற்றிகரமாக நடைபோடும் வாய்ப்பை நல்கும், குறிப்பாக லக்கினத்தில் இருந்து 5ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் தனது வர்க்க கிரகம் என்பதால், ஜாதகரின் சிந்தனை திறனும் செயல் திறனும் ஒரே நேர்கோட்டில் இயங்கி வெற்றிகளை பெற்று தரும், புதிய சிந்தனை புதிய செயல்பாடுகள் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், தனது நுண்ணறிவு திறன் மற்றும் ஆராய்ச்சி அறிவு இதுவரை இல்லாத புதிய மாற்றங்களையும், நிறைவான வருமான வாய்ப்பையும் வாரி வழங்கும், நல்ல ஆண் வாரிசு அமையும், தனது குழந்தைகள் வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கையை வெகு சிறப்பாக கொண்டாடும் வல்லமையை தரும், லாட்டரியில் யோகம் பங்கு சந்தை லாபம், குல தெய்வ ஆசி, ஆன்மீக பெரியோர் மற்றும் ஆன்மீக குரு வழியில் இருந்து சுபயோகங்களை பரிபூர்ணமாக அனுபவிக்கும் வல்லமை கொண்டவர்களாக கடக இலக்கின அன்பர்கள் திகழ்வார்கள், " மனமது செம்மையானால் " மந்திரம் செபிக்க தேவையில்லை என்பதற்கு இணங்க கடக இலக்கின அன்பர்களின் மனம் தெளிந்த நீரோடை போன்று ஓர் சீரான கட்டுபாடுடன் இயங்கும் என்பதால், இவர்களின் ஆசை மற்றும் லட்சியங்கள் மிக விரைவில் நடைமுறைக்கும் வந்து வெற்றியை வாரி வழங்கும், இதுவரை மனதில் இருந்த நிறைவேறாத ஆசைகள் யாவும் நிறைவேறும் என்பதுடன், மங்களகரமான நிகழ்வுகளில் வழியில் கடக இலக்கின அன்பர்களுக்கு மனமகிழ்வு அதிகரிக்கும், திருமணம், குழந்தை பாக்கியம், நல்லோதோர் வேலை அல்லது தொழில், புதிய சொத்துகள் வண்டி வாகனம், வீடு நிலம் போன்றவை அமைய அதிக வாய்ப்பு உண்டு என்பதை கருத்தில் கொண்டு நலம் பெறுங்கள்.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் கடக லக்கின அன்பர்களுக்கு பாக்கிய  ஸ்தானமான 9ம் பாவகத்தை கோண பலம் பெற்று வசீகரிப்பது, 100% விகித யோக வாழ்க்கையை வாரி வழங்கும், இதுவரை உதவி செய்யாதவர்கள் கூட தேடி வந்து உதவி செய்வார்கள், இறை அருளின் கருணையினால் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும், பல ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டு, தங்களின் அறிவு திறன் தங்களுக்கு வியக்கத்தக்க நல்ல மாற்றங்களை வாரி வழங்கும், மதிநுட்பம் கொண்டு வாழ்க்கையில் சுபயோகங்களை மிக எளிதில் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும், அறிவார்ந்த செயல்கள் மூலம் பொது மக்களிடமும், மேல் அதிகாரிகளிடமும் நற்ப்பெயர் உண்டாகும், அரசியல், ஆசிரிய பணியில் உள்ளோருக்கு இனிவரும் காலம் சிறந்த மாற்றங்களை வாரி வழங்கும்.தெய்வீக அனுபவம் தங்களின் வாழ்க்கையை புத்துணர்வு மிக்கதாக மாற்றும் என்பதுடன், புதுவித அறிமுகங்களை வழங்கும், காதல் வெற்றி பெரும், திருமண வாழ்க்கை கைகூடிவரும், தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக அமையும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவார்கள், வாழ்க்கையில் புதுவித மாற்றங்களை சந்திக்கும் யோகம் உண்டு என்பதுடன், முதலீடுகளில் இருந்து வரும் லாபம் தங்களின் பொருளாதர சிக்கலுக்கு நல்ல தீர்வை தரும், வெளியூர் வெளிநாடு செல்ல விரும்பும் அன்பர்கள் தனது முழு முயற்சியின் வழியில் இருந்து வெற்றி காண்பார்கள், சமூக மதிப்பும், அந்தஸ்துடன் கூடிய பதவிகளை அலங்கரிக்கும் யோகம் உண்டாகும்  என்பது கவனிக்கத்தக்கது.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் கடக லக்கின அன்பர்களுக்கு லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்தை வசீகரிப்பது, அதிர்ஷ்டத்தின் தாக்கத்தை முழு அளவில் வாரி வழங்கும், தனது வருமானம் என்பது கடக லக்கின அன்பர்களுக்கு கை நிறைவாகவும், மிதம்மிஞ்சியதாகவும் அமையும் என்பது வரவேற்கத்தக்கது, தன்னம்பிக்கையும், மனோ தைரியமும் செயற்கரிய காரியங்களை சாதிக்கும் வல்லமையை தரும், பொது காரியங்களில் நன்மதிப்பும், புதிய உத்வேகமும் உண்டாகும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், எதிர்ப்புகள் யாவும் தங்களுக்கு சாதகமாக மாறும், எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வீர்கள், அதிர்ஷ்ட தேவதையின் அருள் கடாட்சம் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகளையும், பொருளாதர தன்னிறைவையும் வாரி வழங்கும், உடல் நலம் மனநலம் மேலோங்கும், தங்களின் வாக்கு வன்மை சிறக்கும் என்பதனால் அனைவரும் தங்களின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு செயலாற்றுவார்கள், எல்லையில்லா சந்தோஷமும், சுபயோகத்தின் தாக்கமும் தங்களின் வாழ்க்கையில் ராஜ யோக பலன்களை அனுபவிக்க வைக்கும் என்பதுடன், திருமணம் மற்றும் வாழ்க்கை துணை வழியில் இருந்து நன்மைகளை சுவீகரிக்கும் யோகத்தை தரும், எதையும் துணிந்து சாதிக்கும் வல்லமையை தரும் என்பதுடன், புதுவித யுக்தி மற்றும் புதுவித தொழில் நுட்பம் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவது தங்களுக்கே சற்று வியப்பை தரும், வாழ்க்கை துணை, பொதுமக்கள், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் வாழ்க்கையில் சகல நலன்களையும் தன்னிறைவாக பெறுவீர்கள் என்பதுமட்டும் உறுதி வாழ்த்துக்கள்.

குரு பகவான் தனது 9ம் பார்வையால் கடக லக்கின அன்பர்களுக்கு லக்கினம் எனும் 1ம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் ராஜ யோக பலன்களை தரும் உடல் நலம், மன நலம் மேலோங்கும், சுகபோக யோக வாழ்க்கைக்கான அடித்தளத்தை இனிவரும் காலம் சிறப்பாக அமைத்து தரும், புதிய சொகுசு வண்டி வாகனம், வீடு, சொத்து சுக சேர்க்கை மூலம் வாழ்க்கையில் அந்தஸ்தும் கவுரவமும் அதிகரிக்கும், புதிய மாற்றங்களும், புதிய சந்தர்ப்பங்களும் கடக லக்கின அன்பர்களுக்கு சந்தோஷம் மிக்க யோக வாழ்க்கையை தரும், புதிய தொழில்  முயற்சிகள் வாழ்க்கையில் நல்ல வெற்றிகளையும், வருமான வாய்ப்பையும் தரும், நீர் தத்துவ சார்ந்த தொழில்களில் உள்ளோருக்கு இனிவரும் காலம் யோக காலமாக அமையும், மருத்துவ துறையில் உள்ளோருக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டு, ஏற்றுமதி இறக்குமதி தொழில் புரிவோர், வண்டி வாகன தொழில் புரிவோர், கட்டடம் மற்றும் கட்டுமான தொழில் செய்வோர் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டமும், பொருளாதர முன்னேற்றமும் பரிபூர்ணமாக அமையும், பண்ணை தொழில் மற்றும் விவசாயம் சார்ந்த துறையில் உள்ளோருக்கு ஏற்றமிகு யோக காலமாக அமையும், பால் பண்ணை மற்றும் பால் பொருட்கள் சார்ந்த வியாபாரம் விருத்தி அடையும் என்பதுடன் அதிர்ஷ்டகரமான நன்மைகளையும் சுவீகரிக்கும் வல்லமை உண்டாகும், மனதளவில் நல்ல மாற்றங்களும், செயல்பாட்டில் நல்ல முன்னேற்றத்தையும் தரும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் என்பதுடன் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும்.

குறிப்பு :

கடக லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 5,9,11,1ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 5,9,11,1ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்

9443355696


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக