பொதுவாக சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் மிக மிக வலிமையுடன் இருப்பது ஜாதகரின் சுபயோக வாழ்க்கைக்கும் முன்னேற்றம் நிறைந்த எதிர்கால வாழ்விற்கும் சிறந்த அடித்தளத்தை அமைத்து தரும், இது ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பு மிக்க யோக வாழ்க்கையை நல்கும் என்பதுடன், நன்மையான பலாபலன்களை வாரி வழங்கும். கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மாத்ரு ஸ்தானமான கடகம் சுய ஜாதகத்திலும் வலிமை பெற்ற பாவக தொடர்பை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தொடர்பு பெற்ற பாவக வழியில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்க தவறுவது இல்லை, அதே சமயம் வலிமை அற்ற பாவக தொடர்பை பெரும் பொழுது ஜாதகரின் வாழ்க்கையில் கடுமையான பாதிப்புக்களை வழங்குவதிலும் தவறுவது இல்லை, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.
லக்கினம் : தனுசு
ராசி : கன்னி
நட்ஷத்திரம் : அஸ்தம் 3ம் பாதம்
இந்த தனுசு லக்கின ஜாதகருக்கு கடக ராசியில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் 14 பாகைகளையும், ஆயுள் ஸ்தானம் எனும் 8ம் வீடு 16 பாகைகளையும் கொண்டு இருப்பது வரவேற்க தக்கது, இதில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெறுவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சங்களை வாரி வழங்கும், அதே சமயம் 16 பாகைகளை கொண்டுள்ள ஆயுள் பாவகம் ஜாதகருக்கு கடுமையான திடீர் பாதிப்புகளை வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் கடக ராசியில் பெரும் பகுதி 7ம் பாவக வழியில் இருந்து பெருவாரியான நன்மைகளை தருவது கவனிக்கத்தக்கது இது ஜாதகருக்கு, வியாபாரம், வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் நன்மைகளை அதிக அளவில் தரும், எதிர்பாலின சேர்க்கை மூலம் வாழ்க்கையில் சிறப்பான யோகங்களை பெறுவார், திருமணத்திற்கு பிறகான ஜீவன முன்னேற்றம் சிறப்பாக அமையும், வண்டி வாகனம் மற்றும் வீடு நிலம் சொத்து சுக சேர்க்கை சிறப்பாக அமையும், நல்ல நண்பர்கள் சேர்க்கை, சிறந்த வியாபர யுக்தி, பல தொழில் செய்யும் வல்லமை, மனதில் உள்ள எண்ணங்கள் மற்றும் ஆசைகள் யாவும் நிறைவேறும் தன்மையை தரும், சிறந்த வியாபாரி என்ற அந்தஸ்த்தை நல்கும், ஜாதகரின் முற்போக்கு சிந்தனை, நேர்மறை எண்ணங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும்.
குறிப்பாக நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 2,5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெறுவது 2,5,11ம் பாவக வழியில் இருந்து வருமானம், நல்ல குடும்ப வாழ்க்கை, வாக்கு வன்மை வழியில் இருந்து வரும் முன்னேற்றம், சிறந்த நல்லறிவு, சமயோசித புத்திசாலித்தனம், குழந்தைகள் வழியில் முன்னேற்றம், கற்ற கல்வி தரும் யோக வாழ்க்கை, கலைத்துறையில் பெரும் முன்னேற்றம், சாஸ்த்திர ஞானம், கலைகளில் தேர்ச்சி, தெய்வீக அனுக்கிரகம், குல தெய்வம் தரும் யோக வாழ்க்கை, சிறந்த புத்திசாலித்தனம், நுணுக்கமான அறிவு திறன் என்ற வகையிலும், நீடித்த அதிர்ஷ்டம், நிறைவான மனநிலை, நல்ல குணம், பெருந்தன்மையான மனநிலை, எதிர்ப்புகளை வென்று முன்னேற்றம் காணும் யோகம், புதிய வாய்ப்புகள் அல்லது புதிய சிந்தனை வழியில் வெற்றி பெரும் தன்மை என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும்.
குரு திசையில் தற்போழுது நடைபெறும் சுக்கிரன் புத்தி ( 25/05/2018 முதல் 23/01/2021 வரை ) ஜாதகருக்கு கடக ராசியில் வியாபித்து இருக்கும் 7ம் பாவக பலனை 7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, 10ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கான முன்னேற்றத்தை எதிர்பாராத அளவில் வாரி வழங்கும், ஜாதகருக்கு 7ம் பாவகம் சர நீர் ராசியாகவும், 10ம் பாவகம் சர காற்று ராசியாகவும் அமைவது வரவேற்கத்தக்கது, இது ஜாதகருக்கு மனம் அறிவு வழியில் இருந்து சுபயோகங்களை பரிபூர்ணமாக வாரி வழங்கும், மனதில் எண்ணிய எண்ணங்களை தனது அறிவார்ந்த முயற்சிகள் வழியில் மிகப்பெரிய வெற்றிகளாக மாற்றும் வல்லமையை தரும், குறிப்பாக ஜாதகர் தற்போழுது மேற்கொள்ளும் எவ்வித முயற்சிகளும் நல்ல பலனை தரும், மனம் அறிவு இரண்டும் சிறப்பாக ஒத்துழைப்பை நல்கி ஜாதகருக்கான யோக வாழ்க்கையை உறுதி செய்யும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை, கடக ராசியில் வியாபித்து நிற்கும் ஆயுள் பாவகம் ஜாதகருக்கான இன்னல்களை வெகு குறைவாகவே தரும் என்பது கவனிக்கத்தக்கது, ஜாதகர் மேற்கொள்ளும் சில அவசர முடிவுகள் மட்டுமே பெருத்த பின்னடைவை தரக்கூடும் என்பதால் பொறுமையாக சிந்தித்து செயலாற்றுவது நல்லது வாழ்த்துக்கள்.
குறிப்பு :
சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு கடுமையாக பாதிக்கப்பட்ட பாவகம் ஆயுள் ஸ்தானம் எனும் 8ம் பாவகம் ஒன்று மட்டுமே, இது ஜாதகருக்கு கடக ராசியில் 16 பாகைகளையும், சிம்ம ராசியில் 17 பாகைகளையும் கொண்டு இருப்பது சற்று கவலை தரும் விஷயமாகவே உள்ளது என்ற போதிலும், நடைபெறும் திசாபுத்திகள் வலிமை அற்ற ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்த வில்லை என்பது ஆறுதல் தரும் விஷயமாகும், மேலும் ஜாதகர் ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்தும் சூரியன் மற்றும் ராகு திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் மட்டும் மிகுந்த பாதிப்பை தரும் என்பதால் கவனமுடன் செயல்பட்டு நலம் பெறுவது அவசியமாகிறது.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
குறிப்பாக நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 2,5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெறுவது 2,5,11ம் பாவக வழியில் இருந்து வருமானம், நல்ல குடும்ப வாழ்க்கை, வாக்கு வன்மை வழியில் இருந்து வரும் முன்னேற்றம், சிறந்த நல்லறிவு, சமயோசித புத்திசாலித்தனம், குழந்தைகள் வழியில் முன்னேற்றம், கற்ற கல்வி தரும் யோக வாழ்க்கை, கலைத்துறையில் பெரும் முன்னேற்றம், சாஸ்த்திர ஞானம், கலைகளில் தேர்ச்சி, தெய்வீக அனுக்கிரகம், குல தெய்வம் தரும் யோக வாழ்க்கை, சிறந்த புத்திசாலித்தனம், நுணுக்கமான அறிவு திறன் என்ற வகையிலும், நீடித்த அதிர்ஷ்டம், நிறைவான மனநிலை, நல்ல குணம், பெருந்தன்மையான மனநிலை, எதிர்ப்புகளை வென்று முன்னேற்றம் காணும் யோகம், புதிய வாய்ப்புகள் அல்லது புதிய சிந்தனை வழியில் வெற்றி பெரும் தன்மை என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும்.
குரு திசையில் தற்போழுது நடைபெறும் சுக்கிரன் புத்தி ( 25/05/2018 முதல் 23/01/2021 வரை ) ஜாதகருக்கு கடக ராசியில் வியாபித்து இருக்கும் 7ம் பாவக பலனை 7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, 10ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கான முன்னேற்றத்தை எதிர்பாராத அளவில் வாரி வழங்கும், ஜாதகருக்கு 7ம் பாவகம் சர நீர் ராசியாகவும், 10ம் பாவகம் சர காற்று ராசியாகவும் அமைவது வரவேற்கத்தக்கது, இது ஜாதகருக்கு மனம் அறிவு வழியில் இருந்து சுபயோகங்களை பரிபூர்ணமாக வாரி வழங்கும், மனதில் எண்ணிய எண்ணங்களை தனது அறிவார்ந்த முயற்சிகள் வழியில் மிகப்பெரிய வெற்றிகளாக மாற்றும் வல்லமையை தரும், குறிப்பாக ஜாதகர் தற்போழுது மேற்கொள்ளும் எவ்வித முயற்சிகளும் நல்ல பலனை தரும், மனம் அறிவு இரண்டும் சிறப்பாக ஒத்துழைப்பை நல்கி ஜாதகருக்கான யோக வாழ்க்கையை உறுதி செய்யும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை, கடக ராசியில் வியாபித்து நிற்கும் ஆயுள் பாவகம் ஜாதகருக்கான இன்னல்களை வெகு குறைவாகவே தரும் என்பது கவனிக்கத்தக்கது, ஜாதகர் மேற்கொள்ளும் சில அவசர முடிவுகள் மட்டுமே பெருத்த பின்னடைவை தரக்கூடும் என்பதால் பொறுமையாக சிந்தித்து செயலாற்றுவது நல்லது வாழ்த்துக்கள்.
குறிப்பு :
சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு கடுமையாக பாதிக்கப்பட்ட பாவகம் ஆயுள் ஸ்தானம் எனும் 8ம் பாவகம் ஒன்று மட்டுமே, இது ஜாதகருக்கு கடக ராசியில் 16 பாகைகளையும், சிம்ம ராசியில் 17 பாகைகளையும் கொண்டு இருப்பது சற்று கவலை தரும் விஷயமாகவே உள்ளது என்ற போதிலும், நடைபெறும் திசாபுத்திகள் வலிமை அற்ற ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்த வில்லை என்பது ஆறுதல் தரும் விஷயமாகும், மேலும் ஜாதகர் ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்தும் சூரியன் மற்றும் ராகு திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் மட்டும் மிகுந்த பாதிப்பை தரும் என்பதால் கவனமுடன் செயல்பட்டு நலம் பெறுவது அவசியமாகிறது.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
ஐயா வணக்கம் ..
பதிலளிநீக்குநான் சிறு வயதிலிருந்து நிறைய பணப்பிரச்சணையை அடைந்துள்ளேன் ..மற்றும் மனதைரிய பிரச்சனை. ..பரிகாரம் உள்ளதா ஐயா..
பெயர் ..பிராபாகரன்
நேரம்..9:00a.m
தேதி..27.08.1987
ஊர்...திருப்பூர்