புதன், 30 மார்ச், 2022

கடகம் 2022-2023 ராகுகேது பெயர்ச்சி பலன்கள் !

 


மேஷ ராசியில் ராகுபகவான் சஞ்சாரம் : 

 கடக லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான ராகு பகவான், தான் சஞ்சாரம் செய்யும் 10ம் பாவகத்தை 100% விகிதம் வலிமை சேர்க்கும் அமைப்பில் தனது இயக்க நிலையை செயல்படுத்தும் காரணத்தால், கடகலக்கின அன்பர்களுக்கு தொழில் மேன்மை என்பது அபரிவிதமான தன்மையில் பிரகாசிக்கும், இதுவரை ஜீவன ரீதியாக போராடிக்கொண்டு இருந்த கடகலக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பை பெறுவதற்கான சந்தர்ப்பம் தேடி வரும், அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த அன்பர்களுக்கு எதிர்பாராமல் அரசு பணியை அலங்கரிக்கும் யோகம் உண்டாகும், தனியார் துறையில் தனது தகுதிக்கான சரியான வேலைவாய்ப்பும், திறமைக்கான பதவி உயர்வும் உறுதியாக கிடைக்க பெறுவார்கள், குறிப்பாக தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம், மக்கள் சேவை, வண்டி வாகனம், வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு, பயண சேவை, உணவு தானியம், கனிம பொருட்கள், சுரங்க தொழில்கள், எரிபொருள் போன்ற துறைகளில் உள்ள கடகலக்கின அன்பர்களுக்கு காய் நிறைவான வருமான வாய்ப்பும், பதவி உயர்வும், பொருளாதர முன்னேற்றமும் உண்டாகும், பாதுகாப்பு துறை, ராணுவம், காவல்துறை, தீயணைப்பு துறை, உயிர்காக்கும் மருத்துவ துறையில் உள்ள அனைவருக்கும் எதிர்பாராத வகையிலான பதவி உயர்வும், ஊதிய உயர்வும் நிச்சயம் உண்டு, தான் பணிபுரியும் இடத்தில் நல்ல கவுரவமும் அந்தஸ்தும் தேடிவரும், இதுவரை இல்லாத மதிப்பும் மரியாதையும் தங்களுக்கான இடத்தை உறுதி செய்வதுடன் மேலிடத்தில் நம்பிக்கைக்கு உரிய அன்பராக திகழ்வதற்க்கான சந்தர்ப்பங்கள் உண்டு, அரசு கவுரவமும், அரசு மரியாதையுடன் கூடிய அங்கீகாரமும் தங்களுக்கு தேடிவரும் என்றால் அது மிகையில்லை.

 ராகுவின் ஜீவன ஸ்தான சஞ்சாரம் முழு அளவில் நன்மைகளை வாரி வழங்குவது மேஷ லக்கின அன்பர்களுக்கு முன் எப்பொழுதும் இல்லாத சுறுசுறுப்பையும், உடல் ஆரோக்கியத்தையும் வாரி வழங்கும், தனக்கு வழங்கப்பட்ட கடமையை வெகு சிறப்பாக கையாளும் சந்தர்ப்பம் உண்டாகும், தொழில் ரீதியாக இதுவரை இருந்த தடைகள் நீங்கி வெற்றிகள் கைகூடும், தங்களின் மனதில் உள்ள திட்டமிடுதல்கள் அனைத்தும் இந்த நேரத்தில் செயல்பாட்டுக்கு வருவதற்கான சந்தர்ப்பங்களை அதிக அளவில் வழங்கும், இயற்கையாகவே அதீத கருணை உள்ளம் கொண்ட கடகலக்கினத்தை சார்ந்த அன்பர்களின் மனம் வெகுவாக பரோஉபகரமான செயல்களில் தீவிரம் காட்டும் நல்ல வாய்ப்பை தரும், உறவுகள், நண்பர்கள், தன்னை சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கான சேவையை வெகு சிறப்பாக செய்வதற்கான சந்தர்ப்பங்கள் கைகூடும், தங்களால் பலரது குடும்பம் தழைத்து ஓங்கும் வாய்ப்பை பெறுவார்கள், இது தங்களுக்கான புண்ணிய பதிவை அதிகரிக்கும், தொழில் முறையில் உள்ள கூட்டாளிகள் தங்களால் லாபம் பெறுவதுடன் தங்களுக்கான அங்கீகாரத்தை உறுதி செய்வார்கள், தங்களை அதிகார பதவியில் அமரவைத்து அழகு பார்க்கும் யோகம் உண்டாகும், தன்னை சார்ந்தவர்கள் தரும் உற்சாகமும், உத்வேகமும் தங்களின் செயல்திறனை தொழில் வழியில் இருந்து வெகு சிறப்பான வெற்றிகளை பெற்றுத்தரும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை என்பதை கருத்தில் கொள்க. 

 கடக லக்கினத்தை சார்ந்த ஆண் அன்பர்களுக்கு தனது தகப்பனார் வழியில் இருந்தும், பெண் அன்பர்களுக்கு தனது தாயார் வழியில் இருந்தும், சுபயோகங்கள் கைகூடிவரும் தனது பரம்பரை தொழிலை தான் முன் நின்று நிர்வகிக்கும் யோகம் அமைவதுடன், அதில் தனது தனித்திறனை வெளிப்படுத்தும் சந்தர்ப்பமும் உண்டாகும், தொழில் முறை பணியாளர்களுடன் ஒரு இணக்கமான சூழ்நிலையில் வெகு அற்புதமான முன்னேற்றங்களை சுவீகரிப்பதற்கான ஒரு அற்புதமான வாய்ப்பாக அது அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, ராகு ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த 18 மாதமும் கடகலக்கின அன்பர்கள் அனைவரும் ஏதாவது ஒருவகையில் பதவி உயர்வு அல்லது முன்னேற்றம் போன்ற சுபயோக பலன்களை சிறப்பாக பெறுவதற்கான சந்தர்ப்பத்தை தருவதுடன், அதிகாரமிக்க பதவிகளை மிக எளிதாக பெறுவதற்கான வாய்ப்பையும் வழங்குவார், மிகவும் விழிப்புணர்வுடன் இருந்து சாயா கிரகம் தரும் இந்த சுபயோக பலனை சிறப்பாக சுவீகரித்து நலம் பெறுக, தனது துறை சார்ந்த கவுரவம் அந்தஸ்து சிறப்பு அங்கீகாரம் போன்றவற்றை வெகு எளிதாக பெற்றுத்தருவார் இந்த ராகு பகவான், எங்கும்  வெற்றி எதிலும் வெற்றி என்ற அமைப்பில் எண்ணத்தின் வலிமையின் தன்மை கடகலக்கின அன்பர்களுக்கு விண்ணளவு உயர்வை பெறுவதற்கான அற்புதமான சந்தர்ப்பங்களை வாரி வழங்கும் நேரமிது, எதிர்பாராத சுபயோகங்கள் தங்களுக்கு அதிகார பதவியை பெறுவதற்கு உறுதுணையாக அமைவதுடன், புதிய தொழில், புதிய வேலைவாய்ப்பு, கூட்டு தொழில் யோகம், அரசு பதவி, வெளிநாடுகளில் இருந்துவரும் தொழில் வாய்ப்புகள் என்ற அமைப்பில் சிறப்புகளை கடக லக்கினத்தை பெற்ற தங்களுக்கு 100%விகிதம் வாரி வழங்கும்.

துலாம் ராசியில் கேது பகவான் சஞ்சாரம் :

கடக லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான கேது பகவான், தான் சஞ்சாரம் செய்யும் பாவகத்தை 100% விகிதம் பாதிப்பிற்க்கு ஆளாக்கும் காரணத்தால், ஆண்கள் என்றால் தனது தாயார் வழியில் இருந்து வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும் குறிப்பாக தாயராது உடல் ஆரோக்கியத்தில் அதீத அக்கறை எடுத்துக்கொள்ளும் சூழ்நிலை தரும், அவர்களது தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் கடமை தங்களுக்கு உண்டு என்பதை கவனத்தில் நிலை நிறுத்துவது அவசியமானது, ஏனெனில் தாயாரின் வாழ்த்துக்கள் தங்களுக்கான சுகபோகங்களை அதிகரிப்பதுடன், தற்போழுது கேதுபகவானின் சஞ்சார நிலையில் இருந்துவரும் இன்னல்களுக்கு சரியான தீர்வாகவும் அமையும், தாயாரை பேணிப்பாதுகாப்பது கேது தரும் இன்னல்களுக்கு பரிகாரமாக அமையும், தங்களது பெயரில் உள்ள சொத்துக்கள் வண்டி வாகனங்கள் இடம் பொருள்கள் ஏதாவது விரைய செலவுகளை தரக்கூடும், குறிப்பாக தனது பெயரில் உள்ள சொத்துக்களை பாதுகாப்பதில் அதிக அக்கறை கொள்வது நல்லது ஏதாவது வில்லங்கம் பிரச்சனைகள் இருப்பின் மிக நேர்த்தியாக கையாண்டு அந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவது நல்லது இல்லை எனில் சொத்துக்களை இழந்து நிற்கும் சூழ்நிலையை தரும், புதிய சொத்துக்களை வாங்கும் பொழுது அதிக விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது, தேவையற்ற வீண் செலவுகளை அது தவிர்க்க உதவும், மேலும் தனது குணநலன் சார்ந்த விஷயங்களில் ஒரு சுய மதிப்பீடு செய்து கொள்வது நல்லது இல்லை எனில் தன்னை சார்ந்தவர்கள் வழியில் இருந்து வெறுப்புக்கும் ஏளனத்துக்கும் ஆளாகும் சூழ்நிலையை தரக்கூடும், குறிப்பாக அனைவரிடமும் அன்பு பாராட்டுவது அவசியமானது, தங்களின் கருத்தை திணிப்பதற்கு பதிலாக தங்களை சார்ந்தவர்களுடன் கருத்து ஆலோசனையில் ஈடுபடுவது தங்களின் தனி திறமையை வெகு அற்புதமாக வெளிப்படுத்தும், அனைவரின் கருத்துக்கும் மதிப்பளித்து அரவணைத்து செல்லுங்கள். 

 கேதுவின் 4ம் பாவக சஞ்சாரம் பெண்களுக்கு தனது தகப்பனார் வழியில் இருந்து கிடைக்க வேண்டிய நன்மைகளை தாமதப்படுத்தும், தனது தந்தைக்கும் தனக்கும் கவுரவ குறைவான செயல்களில் ஈடுபடாமல் இருப்பது அவசியமானது, கேதுவின் சஞ்சாரம் தங்களை வெகு விரைவில் பிரச்சனைகளை தந்து வீண் அவப்பெயரை தந்துவிடும் என்பதால் சற்று விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமானது, அந்நியர்களிடம் எச்சரிக்கை உணர்வுடன் பழகுவது நல்லது, இல்லை எனில் உடலுக்கும் மனதுக்கும் துன்பம் இழைப்பதுடன் தங்களின் எதிர்கால வாழ்க்கையை பாழாக்கிவிடுவார், இதில் ஆண் பெண் பாகுபாடு இல்லை என்பதை கவனத்தில் கொள்க, தகப்பனாரின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்க, பெற்றோர்கள் தங்களுக்கு வழங்கிய அன்பையும் பாசத்தையும் பன்மடங்கு திருப்பி தரவேண்டிய அருமையான சந்தர்ப்பம் இது என்பதை கவனத்தில்  கொள்ளுங்கள், இது தங்களுக்கான கவுரவம் மற்றும் தொழில் மேன்மையை  வாரி வழங்கும்.

கடக லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு இனிவரும் 18 மாதமும் வண்டி வாகனங்களில் பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ளும் தன்மையை உறுதி செய்ய வேண்டி வரும், எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் கையாள்வதற்கான ஆயத்த நிலையில் தாங்கள் இருப்பது அவசியமானது, துணிவும், தெளிவான மனநிலையும் தங்களுக்கு அதிக அளவில் தேவைப்படும், கேது தரும் சோதனை சுகஸ்தான நிலையில் இருந்து வருகின்றது என்பதால் தங்கள் அதிக அளவிலான சுகபோகங்களில் ஈடுபாடு பாடு  காட்டுவதை விடுத்து, உணவு கட்டுப்பாடு, உடல் ஆரோக்கியத்தில் கவனம், புலன் இன்பங்களில் அதீத கட்டுப்பாடு, ஒழுக்கம், கடமை உணர்வு, சரியான புரிதல், வீண் வாக்குவாதத்தில் ஈடுபடாமை, தன்னை பற்றிய சுய மதிப்பீடு ஆகியவை தங்களின் வாழ்க்கையில் கேது பகவான் தரும் இன்னல்களில் இருந்து மீட்டு எடுக்கும், கடகலக்கின அன்பர்களே இனிவரும் 18 மாதம் தாங்கள் அனைவரும் ஆன்மீக (MODE) "மோடுக்கு" சென்றுவிடுவது நல்லது, இது தங்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.

குறிப்பு :

மேற்சொன்ன ராகுகேது பெயர்ச்சி பலன்கள் என்பது தங்களது சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா புத்தி ஜீவன ஸ்தானம் மற்றும் சுக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசா புத்தி ஜீவன ஸ்தானம் மற்றும் சுக ஸ்தான பலனை ஏற்று நடத்தவில்லை எனில் கோட்சார ரீதியாக யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில்கொள்க 

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

09443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக