வெள்ளி, 25 மார்ச், 2022

ரிஷபம் 2022-2023 ராகுகேது பெயர்ச்சி பலன்கள் !




மேஷ ராசியில் ராகுபகவான் சஞ்சாரம் :

ரிஷப லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு அயன சயன ஸ்தானமான 12ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான ராகு பகவான், தான் சஞ்சாரம் செய்யும் 12ம் பாவகத்தை 100% விகிதம் வலிமை சேர்க்கும் அமைப்பில் தனது இயக்க நிலையை செயல்படுத்தும் காரணத்தால், ரிஷப லக்கினத்தை சாந்த அன்பர்களுக்கு மனநிறைவு என்பது வெகு சிறப்பாக அமையும், பொதுவாகவே ரிஷப லக்கின அன்பர்கள் தன்னை சார்ந்தவர்களின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை கொண்டவர்கள், மற்றவர்களை பராமரித்து காப்பதில் வல்லவர்கள் இவர்களின் கண்காணிப்பில் பாதுகாப்பில் இருக்கும் அன்பர்களின் வாழ்க்கை 100%விகிதம் பாதுகாப்பானது என்பதில் சந்தேகம் இல்லை, ராகுவின் சஞ்சாரம் ரிஷப லக்கின முதலீட்டாளர்களுக்கு செய்த முதலீடுகள் வழியில் இருந்து வரும் லாபம் என்பது மிக பெரிய அளவில் மகிழ்சியை தரும், திருப்திகரமான மனநிலையுடன் செய்யும் காரியங்கள் யாவிலும் வெற்றிமேல் வெற்றி உண்டாகும், தாம்பத்தியம் மகிழ்ச்சிகரமானதாக அமையும், இல்லற வாழ்க்கையில் தனது வாழ்க்கை துணை உடனான அன்னியோன்னியம் அதிகரிக்கும், புதிய தொழில்களிலும், புதிய சொத்துக்கள் மேலேயும் முதலீடு செய்யும் யோகம் உண்டாகும், புதிய இயந்திரங்கள் தொழில் சார்ந்த அமைப்புகளில் வாங்கும் யோகம் உண்டாகும், புதிய தங்க ஆபரங்கள் சேர்க்கை உண்டாகும், ஆன்மீக பயணங்கள் மேற்கொள்ளும் சந்தர்ப்பமும், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதமும் முழுமையாக கிடைக்கப்பெறுவீர்கள், ராகு பகவான் தங்களுக்கு புதிய முதலீடுகள் சார்ந்த அறிவையும் அந்த முதலீடுகள் வழியிலான மிக பெரிய லாபங்களை தன்னிறைவாக வாரி வழங்குவர் என்பதில் சந்தேகம் இல்லை. 

சில ரிஷப லக்கின அன்பரக்ளுக்கு போக வாழ்க்கையில் அதீத நாட்டத்தை  தரும் ராகுவின் சஞ்சாரம் மனமகிழ்ச்சிக்கு குறைவே வைக்கவாய்ப்பில்லை என்பது கவனிக்கத்தக்கது, தன்னுடைய பிதுரதிபதிகளின்  சொத்துக்களை ஏக காலத்தில் சுவீகரிக்கவும் ஆளுமை செய்யவும் தற்போழுது வாய்ப்புகளை வாரி வழங்குவர், கனவுகள் கற்பனைகள் ஆசைகள் அனைத்தும் முழுமையாக நிறைவேறும் யோகத்தை தரும், புதையல் யோகமும் கிடைக்க வாய்ப்பு உண்டு, தொழில் நுட்பம் சார்ந்த அமைப்புகளில் முதலீடு செய்யும் ரிஷப லக்கின அன்பர்களுக்கு இனிவரும் காலம் அதி அற்புதமான  சுபயோகங்களை வாரி வழங்க தயார் நிலையில் உள்ளார் என்பது  கவனிக்க தக்கது, கலைத்துறையில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் அன்பர்களுக்கு இது ஓர் அற்புதமான  நேரமாக கருதலாம், தனது மனதின் லட்சியங்களை நடைமுறைப்படுத்தும் அற்புதமான நேரமாக இது அமையும், இயக்குனர்கள் இணை இயக்குனர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய வாய்ப்புகளை ராகுபகவான் வாரி வழங்குவர், தொழில் துறையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவார், அதிகாரம் செய்யும் யோகமும் தான் பணியாற்றும் துறையில் சிறந்த நிர்வாக திறனை  வெளிப்படுத்தும் யோகத்தையும் தன்னிறைவாக வாரி வழங்குவார். 

 வெளிநாடு யோகம் ரிஷப லக்கின அன்பர்களுக்கு தற்ப்பொழு வெகு சிறப்பாக அமையும், வெளிநாடுகளில் இருந்து வரும் தொழில் வாய்ப்பு என்பது அபரிவிதமான தன்மையில் பொருளாதார சேர்க்கையை நல்கும், எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையும் நேரமிது, குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறையில் உள்ள அன்பர்களுக்கு இனிவரும் காலம் நீடித்த நன்மைகளை பெறுவதற்கான நல்ல அடித்தளத்தை அமைத்து தரும், எந்த ஒரு செயலையும் முழு மனதோடு செய்து வெற்றி பெறுவார்கள், தனது மேலதிகாரிகளின் முழு ஆதரவையும் அவர்களின் பரிபூரண ஒத்துழைப்பையும் பெற்று தனது வாழ்க்கையில் பல அற்புதமான முன்னேற்றங்களை சந்திக்க இருக்கின்றார், இளம்வயதினர் இனிவரும் காலங்களில் ராகு பகவான் தரும் இமாலய வெற்றிகளை சுவீகரிக்க இருக்கின்றனர் கல்வி உடல்நலம் விளையாட்டு தனித்திறன் முற்போக்கு சிந்தனை விழிப்புணர்வு தெளிந்த நல்லறிவு சிறந்த ஒழுக்கம் என  வாழ்க்கையில் இவர்களுக்கு வரும் சிறப்புகள் என்பது மிக அதிக அளவில் உண்டு, மனம் ஒருநிலையில் இயங்க ஆரம்பிக்கும், தன்னை சார்ந்தவர்களுடன் உறவுகளுடன் கருத்து ஒற்றுமையுடன் எதிர்பாராத சுபயோகங்களை சுவீகரிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை, எதிர்பாராத தன்மையில் இவர்களுக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்புகள் என்பது சமூகத்தில் நல்ல அந்தஸ்த்தை நல்குவதுடன் அரசு கவுரவத்தையும் பெற்றுத்தரும்.

ராகுவின் அயன சயன சஞ்சாரம் திருமண தடைகளை தகர்த்து எரிவதுடன், மனதிற்கு இசைந்த நல்ல இல்லறவாழ்க்கையை திடீரென அமைத்துத்தருவார், ரிஷப லக்கின அன்பர்களுக்கு முன் பின் அறிமுகம் இல்லாத நபர்கள் வழியில் இருந்து வாழ்க்கை துணை அமையலாம் அல்லது தனது தந்தை வழியில் இருந்து வரும் சொந்தங்கள் மூலம் அமையலாம், ராகு பகவானின் 12ம் இட சஞ்சாரம் ரிஷப லக்கின அன்பர்களுக்கு சிறந்த முதலீடுகளையும், எதிர்பாராத பொருளாதார முன்னேற்றத்தையும் இனிவரும் 18மாதமும் வழங்க இருக்கின்றார் என்பது கவனிக்கத்தக்கது.

துலாம் ராசியில் கேது பகவான் சஞ்சாரம் :

ரிஷப லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான கேது பகவான், தான் சஞ்சாரம் செய்யும் பாவகத்தை 100% விகிதம் பாதிப்பிற்க்கு ஆளாக்கும் காரணத்தால் உடல்நலம் மற்றும் கடன் சார்ந்த பிரச்சனைகள் அதிக அளவில் நடைமுறைக்கு வரும், எதிர்ப்புகளும் எதிரிகளும் தங்களை அதிக அளவில் சோதனைகளை தருவார்கள், வீண் வம்பு வழக்குகள் தங்களின் உடல்நலம் மனநலம் இரண்டையும் வெகுவாக பாதிக்கும், புதிய எதிரிகள் தங்களின் பொருளாதார முன்னேற்றத்தை கேள்விக்குறி ஆக்குவதுடன், அதீத சிக்கல்களையும் தருவார்கள், அதிக அளவில் கடன் பெரும் சூழ்நிலைகளை கேதுபகவான் தருவார் என்பதால் கடன் பெற்று முதலீடு  செய்யும் விஷயத்தை மட்டும் செய்துவிடாதீர்கள் இது தங்களின் முதலீட்டை முழுவதுமாக கபளீகரம் செய்து கடனை மட்டும் பரிசாக தந்துவிடும், முடிந்த அளவு யாரிடமும் பகைமை பாராட்டாமல் இணக்கமாக இருப்பது நல்லது. 

ரிஷப லக்கின அன்பர்களுக்கு கேதுபகவானின் 6ம் இட சஞ்சாரம் தனது சுய முயற்சி மற்றும் கடுமையான உழைப்பு ஆகிய இரண்டையும் பாதிப்படைய செய்வார் என்பதுடன் அனைத்திலும் சலிப்பையும் சகிப்பு தன்மை அற்ற மனநிலையும் தருவார், திடீர்  செலவினங்களை கடன் பெற்று நடத்த வேண்டிய கட்டாயத்தை தருவார், பூர்வீகத்தில் இருந்து தங்களுக்கு வரவேண்டிய சில வருவாய் சார்ந்த விஷயங்களை முடக்குவதுடன் பூர்வீகம் சார்ந்த சொத்து பிரச்சனைகளை அதிக அளவில் தருவார், தங்களின் நுண்ணறிவு திறன் பாதிக்கும், குலதெய்வ வழிபாடு ஒன்றே தீர்வாக அமையும், தனது ரத்த சம்பந்தஉறவுகள் மற்றும் தாய் மாமன் ஆகியோரின் வழியில் இருந்து வீண் செலவினங்களும், தவிர்க்க இயலாத தொல்லைகளையும் தரக்கூடும். 

கடினஉழைப்பு வீணாகும் சுய முயற்சி தடைகளை சந்திக்கும், அறிவு சார்ந்த செயல்பாடுகள் தங்களுக்கு பலன்தராது, ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்வோர் ஏதாவது ஒரு வகையில் சிக்கல்களை சந்திக்கவேண்டி வரும் அல்லது முன்னேற்ற தடைகளை எதிர்கொள்ள வேண்டி வரும், ஊடக துறையில் உள்ளோர் சந்திக்கும் இன்னல்கள் என்பது மிகுந்த மனஅழுத்தத்தை தருவதுடன் எதிர்மறையான விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் சூழ்நிலையை தரும், இயர்கையாகவே பயந்த சுபாவம் கொண்ட ரிஷப லக்கின அன்பர்களுக்கு இந்த கேதுவின் சஞ்சாரம் மிகுந்த மனபயத்தையும், மனக்கிலேசத்தையும் தரும் என்பதால் தேவையற்ற விஷயங்களில் தர்க்கம் செய்வதை தவிர்த்து, விழிப்புணர்வுடன் செயல்பட்டு நலம் பெறுங்கள்.  

குறிப்பு :

மேற்சொன்ன ராகுகேது பெயர்ச்சி பலன்கள் என்பது தங்களது சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா புத்தி அயன சயன ஸ்தானம் மற்றும் சத்ரு ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசா புத்தி அயன சயன மற்றும் சத்ரு  ஸ்தான பலனை ஏற்று நடத்தவில்லை எனில் கோட்சார ரீதியாக யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில்கொள்க 

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

09443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக