திங்கள், 28 மார்ச், 2022

மிதுனம் 2022-2023 ராகுகேது பெயர்ச்சி பலன்கள் !

 


மேஷ ராசியில் ராகுபகவான் சஞ்சாரம் :

"திர்ஷ்டம்" என்பது கண்ணுக்கு தெரிந்து வரும் சுபயோகம்,

"அதிர்ஷ்டம்" என்பது கண்ணுக்கு தெரியாமல் வரும் ராஜயோகம்,

ராகுகேது பெயர்ச்சியினால் முழு அளவில் சுபயோகங்களை சுவவீகரிக்கும் ராசிகளில் முதன்மை பெறுவது மிதுனமே என்றால் அது மிகையில்லை, மிதுன லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு லாப ஸ்தானமான 11ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான ராகு பகவான், தான் சஞ்சாரம் செய்யும் 11ம் பாவகத்தை 100% விகிதம் வலிமை சேர்க்கும் அமைப்பில் தனது இயக்க நிலையை செயல்படுத்தும் காரணத்தால், அதிர்ஷ்டம் என்பது இவர்களுக்கு அளவில்லாதன்மையில் சுபயோகங்களை வாரி வழங்கும், இதுவரை சந்தித்துவந்த விரயங்களும் கவலைகளும் நீங்கி, லாபமும் மனமகிழ்ச்சியும் உண்டாகும், தெய்வீக சக்திகள் தங்களுக்கான வாழ்க்கை வழிகாட்டுதல்களை பரிபூர்ணமாக வாரி வழங்க ஆரம்பிக்கும், மனதில் உள்ள பிற்போக்கு தனமான எண்ணங்கள் நீங்கி முற்போக்கு சிந்தனையுடன் வாழ்க்கையில் வெற்றிநடை போடும் நேரமிது, தங்களின் சிந்தனைத்திறன் ஏதாவது ஒருவகையில் தங்களுக்கான நலவாழ்வினை சீர்படுத்தும், புதிய நபர்கள் தங்களின் முன்னேற்றத்திற்கு வெகுவாக உதவி செய்வார்கள், எல்லா நேரமும் நல்ல நேரமாக தங்களுக்கு சுபயோகங்களை வாரி வழங்க ஆரம்பிக்கும், நீங்கள் நினைக்கும் காரியங்கள் தங்களுக்கு நடைமுறைக்கு வரும்.

 இதுவரை தங்களின் கற்பனையில் இருந்த திட்டமிடல்கள் யாவும் சரியாக நடைமுறைக்கு வர ஆரம்பிக்கும், தங்களின் அண்ணன் அக்காள் இருவர் வழியில் இருந்து வரும்  அதிர்ஷ்டவாய்ப்புகள் தங்களது தங்களது வாழ்க்கையில் வியக்கத்தக்க முன்னேற்றங்களை வாரி வழங்கும் என்பதால் அவர்களுடன் அதீத இணக்கத்தையும் அன்பையும் பகிர்ந்துகொள்வது நல்லது அவர்கள் வழங்கும் அறிவுரைகளை முழுமையாக ஏற்றுக்கொள்வது சிறப்பை தரும், கணினி மென்பொருள் கட்டுமான தொழில்களில் உள்ள அன்பர்களுக்கு அதிர்ஷ்டம் அதிக அளவில் கைகொடுக்கும், பதவி உயர்வு வெகு சிறப்பாக வந்து சேரும், மருத்துவ துறை வல்லுநர்கள், பொறியியல் துறை வல்லுநர்கள், அரசுத்துறையை சார்ந்த அன்பர்கள் அனைவருக்கும் பதவி உயர்வுடன் கூடிய பாராட்டுதல்கள் முழுமையாக வந்து சேரும், அறிவு சார்ந்த உழைப்பாளர்கள் தங்களின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை துவங்கும் சுபயோகமான நன்நேரமிது, எதிர்ப்புகள் வெகுவாக குறைந்து ஆதரவுகள் பெருகும், உலகில் தனித்துவம் வாய்ந்த தனக்கான இடத்தை உறுதி செய்துகொள்ளும் அற்புதமான நேரமிது, அதிர்ஷ்டங்களை முழுவீச்சில் வழங்கும் ராகு பகவான் தங்களுக்கு, தேவையற்ற விஷயங்களையும், முறையற்ற உறவுகளையும் தங்களுக்கு வழங்குவதில் பாரபட்சம் காட்டமாட்டார், இருப்பினும் தங்கள் விழிப்புணர்வுடன் செயல்படவில்லை எனில் அடுத்த சாயா கிரகங்களின் பெயர்ச்சியில் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தரும்.

வருமானம் என்பது திருப்திகரமானதா அமைந்த போதிலும், முறையற்று வரும் செல்வம் தங்களின் உடல்நலனை வெகுவாக பாதிக்கும் என்பதை கவனத்தில் கொள்க எதிர்பாராத விபத்துகளை தந்து அதீத செலவினங்களை ஏற்படுத்தலாம் என்பதை கவனத்தில் கொள்க, புது வாழ்க்கை தங்களின் மனதில் அதீத புத்துணர்ச்சியை நல்கும், வரும் செல்வம் அனைத்தையும் சேமித்து வைப்பது எதிர்காலத்தில் தங்களுக்கான ஒரு சொகுசு வாழ்க்கையை நல்கும், வீண் விரையம் செய்வது அடுத்த சாயாகிரகங்களின் பெயர்ச்சியின் பொழுது தங்களுக்கு தாங்கஇயலாத தன்மையிலான துன்பங்களை தரும் என்பதால் சற்று விழிப்புணர்வுடன் நிதி திட்டமிடுதல்களை செயல்படுத்துவது நன்மைகளுடன் கூடிய சுபயோகங்களை வாரி வழங்கும், எதிர்பாராத அதிர்ஷ்டம் தங்களுக்கான பொருளாதார தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதுடன், பொருளாதார தன்னிறைவையும் வாரி வழங்கும், "பலகோடிகள் செலவு செய்தாலும் 1ரூபாய் கூட விரையம் செய்யாதே" என்ற முன்னோர்களின் செலவேந்திரத்தை சிந்தனையில் நிறுத்துவது, மிதுன லக்கின அன்பர்களுக்கு மிக மிக நல்லது என்பதுடன் எதிர்கால வாழ்க்கையை வெகு சிறப்பாக அமைத்துத்தரும் வல்லமை பெற்றது என்பதை கருத்தில் கொள்க, தங்களைவிட வயதில் அதிகம் உள்ள உறவுகள் அல்லது பெரிய மனிதர்கள் சொல்லும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்வது நல்லது, இனிவரும் 18மாதமும் ராகுவின் சஞ்சாரம் தங்களுக்கு தொடர்ந்து நன்மைகளையும் சிறப்பான வாய்ப்புகளையும் வாரி வழங்கிக்கொண்டே இருக்கும் என்பதை கருத்தில்  கொள்க இவற்றை விழிப்புணர்வுடன் இருந்து முழுமையாக சுவீகரிப்பது தங்களது கடமை என்பதை கருத்தில் கொள்க.

துலாம் ராசியில் கேது பகவான் சஞ்சாரம் : 

மிதுன லக்கினத்தை சாந்த அன்பர்களுக்கு "பூர்வ புண்ணிய" ஸ்தானமான 5ம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் மேற்கண்ட பாவகத்தை முழு அளவில் வலிமை சேர்க்கும் தன்மையில் இயங்குவதால், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைமுறைக்கு வரும் திருமணம், புத்திர பாக்கியம், புதுவீடு புகுவிழா, புதிய வண்டி வாகனம், தொழில் மற்றும் வியாபாரத்தில் அதீத லாபங்களை சமயோசித புத்திசாலித்தனம் கொண்டு சுவீகரிக்கும் தன்மை என மிகுந்த நன்மைகள் நடைமுறைக்கு வரும், பொதுவாக "பூர்வபுண்ணிய" ஸ்தானமான 5ம் இடத்தில் சாயா கிரகமான "ராகு கேது" அமர்ந்து இருப்பது சஞ்சாரம் செய்வது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு புத்திர பாக்கியத்தை நல்காது என்பது ஒரு சாராரின் கருத்து இது முற்றிலும் சுய ஜாதக வலிமைக்கு புறம்பானது, ஏனெனில் ஒருவரது சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமாக ரிஷபம், மிதுனம் (சூரியனுடன் சேராத புதன்), கடகம் (வளர்பிறை சந்திரன்), கன்னி (சூரியனுடன் சேராத புதன்), துலாம், தனுசு மற்றும் மீன ராசிகள் அமைந்து அந்த பாவகத்தில் அமரும் சாயா கிரகமான ராகு கேது சம்பந்தப்பட்ட பாவகத்தை 100% விகிதம் வலிமை சேர்த்து நல்ல யோகம் மிக்க ஆண் வாரிசை வழங்குவார்கள் என்பதை கருத்தில் கொள்வது அவசியமானது, எனவே 5ல் ராகுகேது அமர்ந்தாலே புத்திர பாக்கியத்தை தடை செய்யும் என்ற தவறான கருத்தை புறம்தள்ளுவது நல்லது, அந்த வகையில் மிதுன லக்கினத்திற்கு 5ம் பாவகமான துலாம் ராசியில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் திருமணம் ஆன இளம் தம்பதிகள், வெகு காலமாக புத்திர பாக்கியம் அமையாத தம்பதிகளுக்கு நல்ல யோகம் மிக்க சிறப்பான ஆண் வாரிசை திடீரென நல்குவார், பிறக்கும் யோகம் மிக்க அந்த குழந்தை வழியில் இருந்து மிதுன லக்கினத்தை சார்ந்த அன்பர்கள் அனைவரும் சுபயோகங்களை முழுமையாக பெற்று மகிழ்வார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

கேது பகவானின் 5ம் பாவக சஞ்சாரம் மிதுன லக்கின அன்பர்களுக்கு காதல் வாழ்க்கையை சுவீகரிக்கும் யோகத்தை நல்குவார், இந்த சூழ்நிலையில் இவர்களுக்கு வரும் காதல் என்பது ஒரு புரிதல்களுடன் கூடிய வலிமை மிக்க காதலாக அமையும், இந்த  காதல் என்பது மிதுன லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு 

“யாயும் ஞாயும் யாராகியரோ 

எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் 

யானும் நீயும் எவ்வழி அறிதும் 

செம்புலப் பெயல்நீர் போல 

அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!’’

என்ற "குறுந்தொகை" பாடலுக்கு நிகரான ஒரு வலிமை மிக்க புரிதலுடன் கூடிய காதலாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை பார்த்த அடுத்த வினாடியே காதலில் விழுந்தேன் என்ற பினாத்தலுடன் சுற்றிவரும் அருமையான நேரமிது, எனவே மிதுன லக்கின யுவதிகளும் யுவன்களும் தங்களுக்கான வாழ்க்கை துணையை இந்த கேதுவின் துலாம் ராசி (5ம் பாவக)சஞ்சாரத்தில் பெற்று 100%விகித யோக வாழ்க்கையை சுவீகரித்து நலம் பெறுக, என்ன ஒரு சிக்கல் எனில் தங்களின் காதலி அல்லது காதலன் வேற்று மாதத்திலோ, இனத்திலோ அல்லது வேறு சமூகத்திலோ இருப்பார்கள் என்பது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயமாகும். 

கல்வி கேள்விகளில் சிறப்பான தேர்ச்சியை தரும் கலைத்துறையில் உள்ள நபர்களுக்கு எதிர்பாராத சுபயோகங்களை பரிபூர்ணமாக வாரி வழங்கும், உலக பிரபல்யம் அடையும் யோகம் உண்டாகும், கற்ற கல்விக்கான முழு அங்கீகாரம் கிடைக்கும், கல்வியில் நல்ல தேர்ச்சியையும், கலைகளில் நல்ல ஞானத்தையும் வாரி வழங்கும், தங்களது திறமைக்கான அங்கீகாரம் சிறப்பாக கிடைப்பதுடன், முழு திறமையும் பயன்படுத்தி தங்களது வாழ்க்கையை வெகு சிறப்பாக நிலைநிறுத்திக்கொள்ள நல்ல சந்தர்ப்பங்கள் கிட்டும், அந்நிய தேசங்களில் இருந்து வரும் ஆதரவு தங்களது வாழ்க்கையில் பொருளாதார சுபயோகங்களை முழுமையாக சுவீகரிக்க உதவும், அறிவு வெகு சிறப்பாக செயல்படும் என்பதால் பல புதுமைகளை தங்களது துறையில் பரீக்ஷித்து பார்க்கும் யோகம் உண்டாகும், எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு அங்கீகாரம் தங்களுக்கு தேடிவரும், "கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு " என்ற வார்த்தைகள் தங்களது வாழ்க்கையில் பல மாற்றங்களை நிகழ்த்தும், கலைத்துறையில் அபரிவிதமான முன்னேற்றமும் மக்கள் ஆதரவும் வெகு சிறப்பாக அமையும், குறிப்பாக வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து வரும்  சுபயோகங்களை முழுமையாக சுவீகரிக்க தயாராகுங்கள்.  

ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்யும் அன்பர்களுக்கு இனிவரும் 18மாதமும் தன்னிறைவான வருமான வாய்ப்பை தனது சமயோசித புத்திசாலித்தனம் கொண்டு சுவீகரிக்கும் யோகத்தை நல்கும், துணிந்து செய்யும் எந்த காரியமும் தங்களுக்கு முழு அளவிலான நன்மைகளை பரிபூரணமாக வாரி வழங்கும், தங்களின் தனித்திறமை அபரிவிதாமாக வெளிப்படும், வெளிநாடு பயணம் மற்றும் வெளிநாடுகளில் குடி உரிமை பெரும் யோகம் இந்த கேதுவின் சஞ்சாரம் தங்களுக்கு வெகு சிறப்பாக பெற்றுத்தரும், வாழ்க்கை துணை மற்றும் தங்களின் வாரிசு வழியில் இருந்து வரும் சுபயோகங்கள் தங்களுக்கு எதிர்பாராத நன்மைகளை வாரி வழங்கும் உறவுகள் ஆதரவும் வாழ்க்கை துணையின் ஆதரவும் தங்களை ஊர் சாதனையாளராக மற்றும் என்பதில் மாற்று கருத்து என்பதே இல்லை, குல தேவதையின் முழு ஆசிர்வாதமும் தங்களுக்கு இந்த காலத்தில் முழுமையாக கிடைக்கும் என்பதால் குலதெய்வ வழிபாட்டில் அதிக அக்கறை செலுத்துங்கள், குறிப்பாக அமாவாசை  தினத்தில் அன்னதானம் வஸ்த்திரதானம் செய்து வழிபடுவது சிறப்பான சுபயோகங்களை வாரி வழங்கும்.

குறிப்பு :

மேற்சொன்ன ராகுகேது பெயர்ச்சி பலன்கள் என்பது தங்களது சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா புத்தி லாப ஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணியஸ்தான பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசா புத்தி லாப ஸ்தான மற்றும் பூர்வபுண்ணிய  ஸ்தான பலனை ஏற்று நடத்தவில்லை எனில் கோட்சார ரீதியாக யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில்கொள்க 

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

09443355696




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக