சனி, 16 ஏப்ரல், 2022

துலாம் 2022-2023 ராகுகேது பெயர்ச்சி பலன்கள் !


மேஷ ராசியில் ராகுபகவான் சஞ்சாரம் : 

 சாயா கிரகங்களான ராகுகேது பெயர்ச்சியின் மூலம் 100%சதவிகிதம் சுபயோக பலன்களை மட்டுமே சுவீகரிக்கும் லக்கினங்களில் ஒன்றான துலாம் ராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு இனிவரும் காலம் சுபயோக காலமே என்றால் அது மிகையில்லை, துலாம் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான ராகு பகவான், தான் சஞ்சாரம் செய்யும் 7ம் பாவகத்தை 100% விகிதம் வலிமை சேர்க்கும் அமைப்பில் தனது இயக்க நிலையை செயல்படுத்தும் காரணத்தால், துலாம் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு திருமண யோகம் வெகு சிறப்பாக அகைகூடி வரும், கூட்டு தொழில் வழியில் இருந்து அபரிவிதமான சுபயோகங்களும் லாபங்களும் வந்து சேரும், தனது தனி திறனை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் இனிவரும் காலங்களில் வெகு சிறப்பாக  அமையும், ஜாதகரின் செயல்திறனும் சுறுசுறுப்பும் மிகப்பெரிய வெற்றி வாய்ப்புகளை வாரி வழங்கும், அரசியல் ராணுவம் காவல் பாதுகாப்பு தீயணைப்பு மருத்துவம் போன்ற துறைகளில் பணியாற்றி கொண்டு இருக்கும் அன்பர்களுக்கு இனிவரும் காலம் அதீத வெற்றிவாய்ப்புகளுடன் கூடிய நன்மைகளையும் முன்னேற்றங்களையும் வாரி வழங்கும், தனது சுய சிந்தனை திறன் மேலோங்கும், மற்றவர்களை சார்ந்து  வாழாமல் தனது சுய உழைப்பின் மூலம் வெற்றிக்கொடி நாட்டும் யோகம் உண்டாகும், புதிய வாய்ப்புகள், புதிய சிந்தனைகள் தங்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை, எதிர்பாராத அதிர்ஷ்டம் தங்களின் வாழ்க்கையை பன்மடங்கு முன்னேற்றத்தை நோக்கி அழைத்து செல்லும், தன்னம்பிக்கை, மனோதைரியம், எதிர்ப்புகளை வெற்றிகொள்ளும் தன்மை, சுய முன்னேற்றத்தில் அதிக ஆர்வம், தொழில் நுட்பம் சார்ந்த அறிவு விருத்தி பெரும் தன்மை என்ற வகையில் சகல சௌபாக்கியங்களையும் ராகுவின் களத்திர ஸ்தான சஞ்சாரம் வழங்கும்.

 துலாம் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு 7ம் பாவக வழியில் இருந்து தனது  வாழ்க்கை துணை மூலம் மிக பெரிய நன்மைகள் நடைமுறைக்கு வரும், இல்லற வாழ்க்கையில் இன்னல்களை சந்தித்துக்கொண்டு இருந்த அன்பர்களுக்கு சிறப்பான இல்லற வாழ்க்கை அமையும், பிரிந்து இருந்த தம்பதியர் ஒன்று சேர்ந்து வாழ்க்கையை வெற்றிகொள்ளும் தருணம் இது புது வாழ்க்கை தங்களின் மகிழ்ச்சிக்கு அடிப்படை ஆதாரமாக அமைவதுடன், எதிர்பாராத நன்மைகளையும் பெறுவீர்கள் குறிப்பாக நல்ல புத்திர பாக்கியம், புதிய சொத்துக்களை வாங்கும் யோகம், புதிய தொழில் அல்லது வேலைவாய்ப்பை பெரும் யோகம் உண்டாகும், நண்பர்கள் உதவி, தொழிலாளர்கள் ஒத்துழைப்பு, கூட்டாளிகள் ஆதரவு என சிறப்பான யோக வாழ்க்கையை பெறுவதுடன், தனது திட்டமிடுதல்களை வெகு சிறப்பாக நிறைவேற்றும் யோகம் உண்டாகும், சுய சிந்தனை வழியிலான நடவடிக்கைகள் வெகு அற்புதமான நன்மைகளை முழுமையாக வாரி வழங்கும், எதிர்பார்ப்புகள் நிறைவேறும், முயற்சிக்கான பலன்கள் முழுமையாக வந்து சேரும், பொதுமக்கள் ஆதரவு வழியிலான வெற்றிகள் தங்களின் சமூக அந்தஸ்த்தை அதிகரிப்பதுடன் உயர் பதவிகளையும் அலங்கரிக்கும் யோகம் உண்டாகும், தன்னிடம் உள்ள தொழில்நுட்ப அறிவு துலாம் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு எதிர்பாராத புதிய வாய்ப்புகளை வழங்குவதுடன், பொருளாதார முன்னேற்றத்தை வெகு சிறப்பாக வாரி வழங்கும் என்பதில் சந்தேகமில்லை, வெளிநாடு பயணங்கள் மூலம் மிக பெரிய அளவிலான நன்மைகளையும் திறமைக்கான அங்கீகாரமும் நிச்சயம் கிடைக்க பெறுவீர்கள், ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியிலான நன்மைகள் என்பது வெகு அற்புதமாக அமைவதுடன், அதீத லாபமும் உண்டாகும், தொழில் வழியிலான நன்மைகள் பன்மடங்கு தங்களுக்கு முன்னேற்றத்தை வாரி வழங்கும், தனி திறமை கொண்டு இனிவரும் 18மாதமும் வெற்றிகளை சுவீகரிப்பீர்கள், ராகு பகவானின் களத்திர ஸ்தான சஞ்சாரம் தங்களுக்கு ராஜயோக பலன்களை தன்னிறைவாக வாரி வழங்கும்.

துலாம் ராசியில் கேது பகவான் சஞ்சாரம் :

துலாம் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு ஜென்ம லக்கினமான 1ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான கேது பகவான், தான் சஞ்சாரம் செய்யும் பாவகத்தை 100% விகிதம் வலிமை சேர்ப்பது வரவேற்கத்தக்கது, பொதுவாக ஜென்ம லக்கினத்தில் சாய கிரகமான ராகு மற்றும் கேது சஞ்சாரம் செய்தால் முழு அளவில் நன்மைகளை மட்டுமே வழங்கும், அது பிறப்பு ஜாதகம் என்றாலும் சரி, கோட்சார ரீதியாக என்றாலும் சரி, அந்த வகையில் ஜென்ம லக்கினத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் துலாம் லக்கின அன்பர்களுக்கு உடல் நலம் வெகு சிறப்பாக அமையும், மனவலிமை அதிகரிக்கும், சுய ஞானம் வெளிப்படும், அறிவு சார்ந்த முயற்சிகள் வெற்றியை வழங்கும், சமயோசித புத்திசாலித்தனம் வெகு அற்புதமாக வேலை செய்யும், இயற்கையாகவே சுய நலத்துடன் பொதுநலன் கலந்து சிந்திக்கும் துலாம் லக்கின அன்பர்களுக்கு கேதுவின் சஞ்சாரம் தானும் நலன் பெற்று தன்னை சார்ந்தவர்களும் நன்மை பெரும் அமைப்பிலான காரியங்களில் ஈடுபடுவார்கள், வியாபாரிகளுக்கு அற்புதமான ராஜயோக பலன்களை வழங்குவது கவனிக்கத்தக்கது, தொட்டது அனைத்தும் துலங்கும், வெற்றிபடிக்கட்டுகளில் வீறுநடையிட்டு செல்லும் யோகம் உண்டாகும், தன்னிறைவான வருமான வாய்ப்பை பெறுவதுடன், அனைவரையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் அற்புதமான வாய்ப்பை பெற்று மகிழ்வார்கள், இவர்களின் பேச்சுக்கு அனைவரும் செவி சாய்ப்பார்கள், மாற்று மதத்தினர் மூலம் மிகப்பெரிய அளவிலான ஜீவன  முன்னேற்த்தை பெரும் யோகம் உண்டாகும், அயல்நாடுகளில் தொழில் ரீதியான நடவடிக்கைள் மூலம் புதிய தொழில் முதலீடு செய்யும் யோகம், நீண்ட கால லட்சியங்களை தன்னிறைவாக வெற்றிகொள்ளும் வாய்ப்பு, கடல் கடந்து ஜீவனம் செய்யும் வாய்ப்பு, திரைகடல் ஓடி திரவியம் தேடும் தன்மை என்றவகையில் அபரிவிதமான யோகங்களை கேது பகவான் தனது ஜென்ம லக்கின சஞ்சார நிலையில் இருந்து வாரி வழங்குவர் என்பதில் சந்தேகம் இல்லை.

 ஜென்ம லக்கினத்தில் வலிமை பெற்று சஞ்சாரம் செய்யும் கேதுபகவான் துலாம் லக்கின அன்பர்களுக்கு நினைத்த காரியங்களில் வெற்றியை தருவதுடன் ஆன்மீகத்தில் அபரிவிதமான நன்மைகளையும் வழங்குவார், பல புண்ணிய திருத்தலங்களுக்கு மிக எளிதாக சென்றுவரும் யோகம் உண்டாகும், மனமும் உடலும் தங்களுக்கான ஒத்துழைப்பை வெகு அற்புதமாக வாரி வழங்கும், எதிரிகள் தொந்தரவு அகன்று அவர்களின் ஆதரவும் தங்களுக்கு கிடைக்கும், நேற்றுவரை எதிரியாக இருந்தவர்கள் இன்று நண்பர்களாவர், உதவி செய்ய யாருமற்ற நிலை மாறி சகல நிலைகளில் இருந்தும் உதவிகள் தேடிவரும், உடலிலும் முகத்திலும் புத்துணர்ச்சி அதிகரிக்கும், வருமுன் யூகிக்கும் அறிவுத்திறன் அதிகரிக்கும், விழிப்புணர்வு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு மேலோங்கும், பல தொழில் செய்யும் யோகமும், தெய்வீக ஆற்றல் மூலம் சுபயோகங்களை சுவீகரிக்கும் சந்தர்ப்பமும் தேடி வரும், பொது வாழ்க்கையில் வெற்றி உண்டு பொதுமக்கள் ஆதரவும் உண்டு, சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும், நிலையான அதிகார பதவியும் இந்த நேரத்தி கிடைப்பதற்கான யோகம் உண்டு, எதிர்பாலின சேர்க்கை வழியில் பல முன்னேற்றங்களை தாங்கள் சுவீகரிக்க முடியும், குழந்தைகள் வழியில் இருந்தும், வாழ்க்கை துணை வழியில் இருந்தும் சுபயோகங்கள் நடைமுறைக்கும் வரும், இருப்பினும் தோல் மற்றும் ஒவ்வாமை போன்ற தொந்தரவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு, நோய் எதிர்ப்பு திறன் அதிகரிப்பதுடன், உடல் நலம் வெகு அற்புதமாக அமையும், இதுவரை இருந்துவந்த உடல் வருத்தங்கள் யாவும் நீங்கும் என்பது கவனிக்கத்தக்கது, கேதுவின் ஜென்ம  லக்கின சஞ்சாரம் வியாபார விருத்தியை தருவதுடன், உடல் நலம் மனவலிமை மேம்பட செய்வார் இனிவரும் 18 மாதமும்.

குறிப்பு :

மேற்சொன்ன ராகுகேது பெயர்ச்சி பலன்கள் என்பது தங்களது சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா புத்தி களத்திர ஸ்தானம் மற்றும் ஜென்ம லக்கின பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசா புத்தி களத்திர ஸ்தானம் மற்றும் ஜென்ம லக்கின பலனை ஏற்று நடத்தவில்லை எனில் கோட்சார ரீதியாக யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில்கொள்க 

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

0944335569

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக