சனி, 2 ஏப்ரல், 2022

சிம்மம் 2022-2023 ராகுகேது பெயர்ச்சி பலன்கள் !



மேஷ ராசியில் ராகுபகவான் சஞ்சாரம் : 

 சிம்ம லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான ராகு பகவான், தான் சஞ்சாரம் செய்யும் 9ம் பாவகத்தை 100% விகிதம் பாதிப்பிற்கு ஆளாக்கும் அமைப்பில் தனது இயக்க நிலையை செயல்படுத்தும் காரணத்தால், சிம்ம லக்கின அன்பர்களுக்கு இனி வரும் 18 மாதமும் உடல் மனம் தனித்திறன் மற்றும் செயல்பாடுகள் போன்றவற்றில் பாதிப்பை தரக்கூடும், சிந்தனை திறன் பாதித்து அவசரகதியில் செய்யக்கூடிய காரியங்களில் பெரிய பாதிப்புக்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், பித்ரு தோஷம் குலதெய்வ சாபம் போன்றவை தங்களுக்கு நிகழவிருக்கின்ற சுபகாரியங்களை வெகுவாக பாதிக்கும் என்பதால், பித்ரு வழிபாடு, குலதெய்வ வழிபாடு போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது, எதிர்பாராமல் வரும் தொல்லைகள் தங்களின் மனதை வெகுவாக பாதிக்கும், இயந்திரங்களில் வெகு பாதுகாப்பாக பணியை மேற்கொள்வது நல்லது இல்லை எனில் விபத்தின் மூலம் மருத்துவ செலவினங்களை சந்திக்க நேரும், கவனம் இல்லாமல் வாகனங்களை இயக்குவதும் தங்களுக்கு இன்னல்களை தருவதுடன் வீண் விரயங்களை ஏற்படுத்தும், அதீத கோபமும், அதிக மனஉளைச்சலும் தங்களின் அன்றாட செயல்பாடுகளை கடுமையாக பாதிப்பதுடன் உடல்நலத்தையும் சீர்குலைக்கும் என்பதை கருத்தில் கொள்க, மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையீடு செய்வது என்பது தங்களுக்கு யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக்கொண்டதற்கு சமமான பலன்களை தரும், சம்பந்தம் இல்லாமல் வீண் அலைச்சல், வீண் அவப்பெயர் உண்டாகும், எதிர்ப்புகள் எதிராளிகள் தொல்லை தங்களை கடுமையாக பாதிப்பதுடன், சமூகத்தில் மதிப்பு மரியாதையை கெடுக்கும், எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களுக்கு ஜாமீன் தருவது, தங்களின் குடும்ப வாழ்க்கையை வெகுவாக பாதிப்பதுடன், வாழ்க்கை துணையின் வழியில் விரிசல்களை ஏற்படுத்தும், ராகுவின் சஞ்சாரம் தங்களுக்கு குடும்ப அன்பர்கள், பெரிய மனிதர்கள், ஆன்மீக பெரியோர்களின் வெறுப்புக்கும், சாபத்திற்கும் ஆளாக்கும் என்பதால், பொறுமையை கடைபிடிப்பதுடன் நாவடக்கத்தையும் கையாள வேண்டும் என்பதை தங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

 ராகுவின் பாக்கிய ஸ்தான சஞ்சாரம் சிம்ம லக்கின அன்பர்களுக்கு ஞானம் அறிவார்ந்த செயல்பாடுகளில் பாதிப்பை தருவதுடன், ஆன்மீக வழியில் வெறுப்புணர்வை தரும், இறைநம்பிக்கை பாதிக்கும், நாத்தீக எண்ணங்கள் மேலோங்கும், வாக்குவாதங்களில் ஈடுபாடும் அதனால் வரும் இன்னல்களும் அதிகரிக்கும், பிற்போக்கு தனமான எண்ணங்கள் மேலோங்குவதுடன் மூடநம்பிக்கைகளில் மனம் ஈடுபாடுகாட்டும், ஞானத்தின் தன்மை வெகுவாக பாதிக்கும், அனைவராலும் தொல்லை துன்பங்கள் உண்டாகும், பெரியோர்கள் சொல்லும் அறிவுரைகளை ஏற்பது தங்களுக்கு வரும் இன்னல்களில் இருந்து மீட்டு எடுக்கும், செயற்கரிய காரியங்களை செய்து வெற்றி பெரும் சிம்ம லக்கின அன்பர்களுக்கு இனிவரும் காலம் சற்று சோதனைகளை தரக்கூடும் என்பதை கருத்தில் கொள்க, தாங்கள் நினைத்ததை போல காரியங்கள் நடைபெறாது வெகு தாமதம் ஆகும், தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளில் உள்ள அன்பர்களுக்கு இந்த நேரம் சிறிதும் நன்மையை தர வாய்ப்பில்லை என்பதை கருத்தில் கொள்க, முன்னேற்பாடுகள் சிறப்பாக இல்லை எனில் அனைத்தும் தோல்வியில் முடியும் என்பதை கருத்தில் கொள்க. 

 பாக்கியஸ்தானம் 100% பாதிப்படைவதால் பித்ரு வழிபாடு தங்களுக்கான நெருக்கடிகளை குறைப்பதுடன், சுபகாரியங்கள் வெகு சிறப்பாக நடைமுறைக்கு வரும் குறிப்பாக கல்வியில் வெற்றி, நல்ல வேலைவாய்ப்பு தொழில் முன்னேற்றம், திருமணயோகம், புத்திரபாக்கியம், புதிய வீடு வண்டிவாகனம் சொத்து சுக சேர்க்கை போன்றவை பரிபூர்ணமாக கிடைக்க ஆரம்பிக்கும், தூர தேச பிரயாணங்களை முற்றிலும் தவிர்த்துவிடுவது நல்லது, வெகுதூர பயணங்களை அவசியம் இருந்தால் மட்டும்  மேற்கொள்ளவும், பயணங்களில் பாதுகாப்பு என்பது முக்கியமானது என்பதை கருத்தில் கொள்ளுங்கள், சிறு கவனக்குறைவும் தங்களின் வாழ்க்கையை வெகுவாக பதம்பார்த்துவிடும், மீண்டுவருவதற்கு வெகு காலம் பிடிக்கும் என்பதால் மிக கவனமாக செயல்படுங்கள், பெரியோர் சொல்லும் அறிவுரைகளை ஏற்பதும் ஆன்மீக பெரியோர்கள் ஆசிர்வாதமும், பேராசிரியர்கள் வழங்கும் தீட்சையும் தங்களுக்கு சுபயோகங்களை நல்கும், ராகு தரும் பாதிப்பை வெகுவாக குறைக்கும், கூரிய ஆயுதங்களால் பாதிப்பு உண்டு என்பதால் மிக கவனமுடன் இருப்பது நல்லது, விளையாட்டாக செய்யும் காரியம் பெருவினையமாக முடிந்துவிடும் என்பதை கருத்தில் கொள்க, பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை மட்டுமே தங்களுக்கு சிறப்புகளை தரும்.

துலாம் ராசியில் கேது பகவான் சஞ்சாரம் :

சிம்ம லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான கேது பகவான், தான் சஞ்சாரம் செய்யும் பாவகத்தை 100% விகிதம் வலிமை சேர்ப்பதால், சிம்ம லக்கின அன்பர்களுக்கு தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும், துணிச்சல் மேலோங்கும், எதையும் எதிர்த்து போராடும் குணம் அதிகரிக்கும், எண்ணத்தின் வலிமை மேலோங்கும் மதிப்பு மிக்க செயல்கள் மூலம் நல்ல அங்கீகாரம் கிடைக்கும், எதிர்பாலின சேர்க்கை வழியில் இருந்து பெரும் லாபம் மிக அதிக அளவில் இருப்பதுடன், தங்களின் திட்டமிடுதல்கள் சிறப்பாக நடைமுறைக்கு வரும், வெகு நாள் லட்சியங்கள் யாவும் தங்களுக்கு நிறைவேறும் அற்புதமான நேரமிது, கூட்டுத்தொழில் வழியில் இருந்து வரும் அபரிவிதமான முன்னேற்றம் வெகு சிறப்பாக அமையும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் சார்ந்த அன்பர்களுக்கு இனிவரும் காலம் அபரிவிதமான முன்னேற்றத்துடன் கூடிய வருமான வாய்ப்பை பெரும் அளவில் வாரி வழங்கும், தனித்திறமை வெகு சிறப்பாக வெற்றிகளை வாரி வழங்கும், கூட்டு முயற்சி கூட்டுத்தொழில் போன்றவற்றில் அபரிவிதமான லாபமும் எதிர்பாராத அதிர்ஷ்டமும் வந்து சேரும், வெளிநாடுகளில் இருந்துவரும் தொழில் வாய்ப்புகள் தங்களுக்கான அங்கீகாரத்தை உறுதி செய்யும், தங்களின் உழைப்புக்கான உயர்வும் பொருளாதார சிறப்புகளும் கைகூடி வருவதுடன் புதிய வாய்ப்புகள் தங்களுக்கு வெகுவாக கைகொடுக்கும்.

கமிஷன், எஜென்ஜி, தரகு, காப்பீடு துறை சார்ந்த அன்பர்களுக்கு வருமானம் என்பது கைநிறைவானதாக அமையும், புதிய நபர்கள் மூலம் தொழில் முன்னேற்றம் என்பது தன்னிறைவாக அமைவதுடன் எதிர்பார்த்த லாபமும் வந்துசேரும், பெண்களுக்கான ஆடை ஆபரண தொழில்களில் உள்ள அன்பர்களுக்கு நல்ல விருத்தியை தரும், வரவேற்புடன் கூடிய வருமானம் வெகு சிறப்பாக வந்து சேரும், புதிய தொழில் முனைவோர், புதிய தொழில் செய்ய விருப்பம் கொண்டோருக்கான அற்புதமான நேரம் இது அதற்க்கான சந்தர்ப்பம் மற்றும் வாய்ப்புகள் முழு அளவில் கைகொடுக்கும், இதுவரை இல்லாத முன்னேற்றம் இனிவரும் காலங்களில் தொடர்ச்சியான வெற்றி வாய்ப்புகளை வாரி வழங்கும், பொதுவாக சுய ஜாதகத்தில் வீரிய ஸ்தானமான 3ம் பாவகம் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சகல சௌபாக்கியத்தையும் தனது எண்ணத்தின் வலிமையின் அடிப்படையில் சுவீகரிப்பார்கள், சிம்ம லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு தற்போழுது கோட்சார ரீதியாக கேதுபகவான் 3ம் பாவகத்தை வலிமை சேர்ப்பதால் தங்களின் திட்டமிட்ட செயல்கள் யாவும் முழுமையாக நடைமுறைக்கு வர ஆரம்பிக்கும், கண்ணுக்கு தெரிந்து வரும் சுபயோகங்கள் அனைத்தும் தங்களின் ஆசைகளை நிறைவேற்றும், புதிய சொத்து, புதிய வீடு, புதிய வண்டி வாகனம் யாவும் தங்களுக்கு பரிபூர்ணமாக கிடைக்கும், தனது இளைய சகோதர வழியில் இருந்து வரும் உதவிகள் என்பது தங்களின் வாழ்க்கையில் அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்லும், உறவுகளின் அரவணைப்பு தங்களுக்கு புதிய நம்பிக்கையையும், புதிய உத்வேகத்தையும் முழுமையாக தரும, தொழில் முயற்சி வெற்றி, வேலைவாய்ப்பில் வெற்றி, கல்வியில் வெற்றி என்ற அமைப்பில் தங்களுக்கான சுபயோகங்களை கேதுபகவான் வாரி வழங்க தவறமாட்டார் என்பது உறுதி.

 விளையாட்டு மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் உள்ள சிம்ம லக்கின அன்பர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி வாய்ப்புகள்  முழுமையாக கிடைப்பதுடன், மனவிருப்பங்கள் நிறைவேறும், கேதுவின் சஞ்சாரம் தங்களுக்கு ஒரு வீரியமிக்க செயல்திறனை முழுமையாக வழங்குவதுடன் வெற்றிக்கான அனைத்து கதவுகளையும் திறந்து வைக்கும், துணிச்சல் மிக்க மனோநிலையை பெற்ற சிம்ம லக்கின அன்பர்களுக்கு எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும், பதவி உயர்வு, சமூக மதிப்பு, அரசு அங்கீகாரம் மற்றும் உலகப்பிரபல்யம் ஆகியவை தங்களை தேடிவரும் என்பதால் சற்று பொறுமை காப்பது மட்டுமே தங்களுடைய கடமை என்பதை கருத்தில் கொள்க, எதிர்பாராமல் நிகழும் சிறு மாற்றம் தங்களை வானளவு உயரத்திற்கு எடுத்து செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை, கடின உழைப்பை முன்னெடுக்கும் சிம்ம லக்கின அன்பர்களுக்கு அதற்கான முழு பலன்களையும் கேதுபகவான் வாரி வழங்குவார், தொழில் நுட்ப அறிவை தன்னிறைவாக வாரி வழங்கும் கேது தங்களை விளையாட்டு மற்றும் தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட துறைகளில் ராஜாவாக பரிணமிக்க செய்வார் என்பதில் சந்தேகம் இல்லை, வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வது தங்களின் விழிப்புணர்வு சார்ந்த விஷயம் என்பதை அறிவுறுத்த "ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது.

குறிப்பு :

மேற்சொன்ன ராகுகேது பெயர்ச்சி பலன்கள் என்பது தங்களது சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா புத்தி பாக்கிய ஸ்தானம் மற்றும் வீரிய ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசா புத்தி பாக்கிய ஸ்தானம் மற்றும் வீரிய ஸ்தான பலனை ஏற்று நடத்தவில்லை எனில் கோட்சார ரீதியாக யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில்கொள்க 

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

09443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக