வியாழன், 7 ஏப்ரல், 2022

கன்னி 2022-2023 ராகுகேது பெயர்ச்சி பலன்கள் !

 


மேஷ ராசியில் ராகுபகவான் சஞ்சாரம் : 

 கன்னி லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான ராகு பகவான், தான் சஞ்சாரம் செய்யும் 8ம் பாவகத்தை 100% விகிதம் வலிமை சேர்க்கும் அமைப்பில் தனது இயக்க நிலையை செயல்படுத்தும் காரணத்தால், கன்னி லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்கள் வந்து சேரும், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கை உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது என்பதை எண்ணி கன்னி லக்கின அன்பர்கள் மகிழ்ச்சி கொள்ளலாம், தனது வாழ்க்கை துணை, தனது நண்பர்கள் கூட்டாளிகள், பொதுமக்கள், தனது தனி திறமை கொண்டு சுபயோகங்களை முழுமையாக சுவீகரிக்கும் யோகத்தை ராகு பகவான் வாரி வழங்குவது வரவேற்கத்தக்கது, மேலும் கன்னி லக்கினத்தை சார்ந்த அன்பர்களின் தொழில்நுட்ப அறிவு இவர்களுக்கு மேலைநாடுகளில் அதீத செல்வாக்கையும் வரவேற்பையும் தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதால் பொறியியல் துறை மற்றும் தகவல் தொழிநுட்ப துறை சார்ந்தவர்களுக்கு இது ஒரு அற்புதமான நேரம், தங்களின் புதிய முயற்சிகள் யாவும் மிகப்பெரிய அளவிலான வெற்றிகளை தரும், ராணுவம், காவல், தீயணைப்பு, மருத்துவம் மற்றும் பாதுகாப்பு துறையை சார்ந்த கன்னி லக்கின அன்பர்களுக்கு திடீர் பதவி உயர்வும், எதிர்பாராத அதிர்ஷ்டவாய்ப்பும் மிகப்பெரிய நன்மைகளை வாரி வழங்கும், போராட்ட வாழ்க்கையை எதிர்கொண்டு இன்னல்களை அனுபவித்த கன்னி லக்கின அன்பர்களுக்கு இனிவரும் காலம் மிகுந்த சுபயோகங்களை நல்கும், தங்களது வாழ்க்கை துணை மற்றும் நண்பர்கள் வழி ஆதரவும் ஒத்துழைப்பும், இனிவரும் காலங்களில் தங்களை ஓர் சாதனையாளராக மாற்றும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, ஆயுள் விருத்தி பெரும், உடல்நலம் மேலோங்கும், எதிர்பாராத சுப நிகழ்வுகள் தங்களுக்கு அதீத மனமகிழ்வை தரும். 

 எதிர்பாலின சேர்க்கை வழியிலான பொருளாதார முன்னேற்றமும், தனது வாழ்க்கை துணையிலான வருமான வாய்ப்பும் தேடிவரும், தனது உறவுகள் வழியில் இருந்து வரும் சொத்துக்களை ஆளுமை செய்யும் யோகம் உண்டாகும், உயில் கிரசுவிட்டி போனஸ் போன்ற நிலைகளிலும் காப்பீடு மற்றும் லாட்டரி யோகம் போன்றவற்றில் இருந்தும் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும், புதிய நிலையான சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டு, அதிகாரம் கொண்டு அனைத்தையும் சாதிக்கும் வல்லமையை ராகு பகவான் இனிவரும் காலங்களில் தங்களுக்கு வாரி வழங்குவார், எதிர்ப்புகள் அனைத்தும் தங்களுக்கு சாதகமான பலன்களை வழங்கும், சுரங்கம் மற்றும் கனிம பொருட்கள், கனரக வாகன பொருட்கள், எரிபொருள் சார்ந்த அனைத்து பொருட்கள் வழியில் இருந்தும் தங்களுக்கு வருமானம் அபரிவிதமானதாக வந்து சேரும் , பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு தாங்களே எதிர்பாராத வண்ணம் பொறுப்புகளை வழங்கி தங்களுக்கான அங்கீகாரத்தை உறுதி செய்வதுடன் அதிகாரத்தையும் சிறந்த நிர்வாக திறனையும் மேம்படுத்துவார், வெளிநாடுகளில் இருந்து வரும் தொழில்நுட்ப கருவிகள் மூலம் தொழில் வளர்ச்சியுடன் கூடிய வருமான வாய்ப்பும் அதிகரிக்கும், மருத்துவ உபகரணம் சார்ந்த தொழில் செய்வோருக்கான யோககாலம் இதுவே, மறைமுக தொழில்களில் பணவரவையும், சட்டவிரோத செயல்கள் மூலம் செல்வசேர்க்கையையும் தன்னிறைவாக வாரி வழங்குவதுடன், புராதான பொருட்கள் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்பை வாரி வழங்குவார், ரத்தினம் தங்கம் வெள்ளி போன்ற பொருட்கள் மூலம் தங்களின் வாழ்க்கை வெகு பிரகாசம் அடையும்.

அந்தரங்க வாழ்க்கை தங்களுக்கு எதிர்பாராத நன்மைகளை செய்வதுடன், ரகசியங்கள் காக்கப்படும், ஆழ்மனம் தியானம் போன்றவற்றால் வாழ்க்கையில் உண்மையான ஆன்மீகத்தை கண்டுணரும் வாய்ப்பும் உண்டாகும், செய்தொழிலில் வழியிலான முன்னேற்றம் வெகு சிறப்பாக அமையும், தங்களின் செயல்பாடுகள் அனைத்தும் மற்றவர்களின் பரராட்டுக்குரியதாக மாறும், தெய்வீக அனுக்கிரகம் தங்களுக்கு அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து புத்தம் புது நல்வாழ்க்கையை வாரி வழங்கும், தன்னிலை உணர்ந்தாலும், சுயமதீப்பீடு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு காட்டும் யோகமும் உண்டாகும், குழப்பம் அற்ற சூழ்நிலைகள் தங்களின் முன்னேற்றத்திற்கு உதவிகரமானதாக அமையும், அருங்கலைகளில்  அதீத நாட்டமும், வருமுன் உணரும் மனநிலையும் தங்களின் முன்னேற்றத்திற்கு அடிப்படை ஆதாரமாக அமையும், தங்களின் உடல்நலம் சார்ந்த அனைத்து இன்னல்களும் விரைவாக குணமாகி, சமூகத்தில் மீண்டும் வெற்றிநடை போடும் யோகத்தை ராகு பகவான் வாரி வழங்குவார், தங்களின் சரித்திரத்திற்க்கு முடிவுரை காணவிரும்பிய எதிர்ப்பாளர்களுக்கு பேரிடியாகவும், அவர்களுக்கு  சிம்மசொப்பனமாகவும் திகழ்வதற்க்கான வாய்ப்பை ராகுபகவான் நிச்சயம் தங்களுக்கு தருவார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம், செயல்களில் அதீத சுறுசுறுப்பு, தீர்க்கமான முடிவுகளை கையாளும் தன்மை, சமயோசித அறிவு திறன் போன்றவை இனிவரும் காலங்களில் வெகு அற்புதமாக பிரகாசிக்கும், தெய்வீக ஆற்றல் தங்களின் வாழ்க்கையை வெகு அற்புதமாக ஆளுமை செலுத்தும், குறிப்பாக காளி துர்க்கை போன்ற உக்கர தெய்வங்களின் ஆசிர்வாதம் தங்களது வாழ்க்கையில் வியக்கத்தக்க மாற்றங்களை தன்னிறைவாக வாரி வழங்கும்.

துலாம் ராசியில் கேது பகவான் சஞ்சாரம் :

கன்னி லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான கேது பகவான், தான் சஞ்சாரம் செய்யும் பாவகத்தை 100% விகிதம் பாதிப்பிற்க்கு ஆளாக்கும் காரணத்தால், குடும்பத்தில் பிரச்சனை, வருமானத்தில் பாதிப்பு, பேச்சில் தடுமாற்றம், வாக்குறுதியை நிறைவேற்ற இயலாத சூழ்நிலை, உறவுகளுடன் சுமூக போக்கை கடைபிடிக்க இயலாத தன்மை, கண்களில் பாதிப்பு, பார்வை குறைபாடு தலை சம்பந்தப்பட்ட நோய் தொந்தரவுகள், குழப்பம் நிறைந்த இல்லற வாழ்க்கை, புரிந்துகொள்ளாத வாழ்க்கை துணை, ஞானம் அற்ற வார்த்தைகள், வீண் வாக்குவாதம், வருமானம் அனைத்தும் வீணாகும் சூழ்நிலை, பொருளாதார சிக்கல்கள், வாழ்க்கையில் வரும் இன்னல்கள், அறிவு சார்ந்த முயற்சிகள் யாவும் பின்னடைவை தரும் சூழ்நிலை, குடும்பத்தில் உள்ள நபர்கள் மூலம் மனநிம்மதி இழப்பு போன்ற இன்னல்களை எவ்வித பார்ப்பட்டசமும் பார்க்காமல் கேது பகவான் வாரி வழங்குவார் என்பதால் கன்னி லக்கின அன்பர்கள் சற்று கவனமாக இருப்பது சிறப்பை தரும், பொதுவெளியில் காரசாரமான விவாதம் மற்றும் வார்த்தை பிரயோகத்தை தவிர்த்து விடுவது நல்லது, ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்யும் அன்பர்கள் இனிவரும் காலங்களில் அதீத எச்சரிக்கை உடன் ஜீவனத்தை மேற்கொள்வது நல்லது, அந்நிய நபர்கள் மூலம்  தங்களின் வாழ்க்கை முடங்கிவிடும் அபாயம் உண்டு என்பதால், முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள் அனைவரிடமும் கவனமாக இருப்பது நல்லது குறிப்பாக பணம் சம்பத்தப்பட்ட  விஷயங்களில் அதீத கவனம் தேவை, கேதுவின் சஞ்சாரம் தங்களின் வருமானம் அனைத்தையும் முடக்குவதற்கான அனைத்து வேலைகளையும் செய்யும் என்பதால், மாற்று வருமானம் சார்ந்த அமைப்புகளில் தங்களின் ஆர்வத்தை செலுத்துவது நல்லது, இதனால் தங்களின் வாழ்ககையில் வரும் பொருளாதர சிக்கல்களுக்கு சரியான தீர்வுகளை தாங்கள் பெற இயலும், நிம்மதி அதிகரிக்கும். 

கன்னி லக்கின அன்பர்களுக்கு இனிவரும் காலங்களில் தங்களின் குலத்தொழில் முடங்கும் அபாயகர உள்ளதால், சிறு கவன குறைவும் தங்களுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும், மற்றவர்களின் குறுக்கீடுகளை தங்களது சொந்த விஷயங்களில் அனுமதிக்க வேண்டாம் என்பதை தங்களுக்கு அறிவுறுத்த விரும்புகிறோம், மேலும் தங்களின் குடும்ப விவகாரங்களில் மற்றவர்களின் தன்னிலையீடு என்பது தங்களுக்கு பிரிவினையை தருவதுடன், இல்லறவாழ்க்கையை கடுமையாக பாதிக்கும், எனவே தங்களின் பிரச்சனைகளை தாங்களே பேசி ஒரு சுமுகமான முடிவுக்கு வருவதும், மற்றவர்களுக்காக சற்று விட்டுக்கொடுத்து செல்வதும் குடும்பம் மற்றும் இல்லற வாழ்க்கையை வெகு சிறப்பாக நடத்தி செல்ல ஓர் வாய்ப்பாக அமையும், கருத்து வேறுபாடு என்பது தங்களுக்கு இந்த நேரத்தில் வீண் வாக்குவாதத்தை பெரிய அளவிலான சண்டை சச்சரவுக்கு காரணமாக அமைந்துவிடும், எனேவ நாவடக்கம் என்பதை  கையாள்வதே சாலச்சிறந்தது, ஆன்மீகத்தில் ஈடுபாடு, ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம் போன்றவை தங்களின் வாழ்க்கையில் புது புத்துணர்ச்சியை தந்து, அகமகிழ்வின் மூலம் சுபயோகங்களை வாரி வழங்கும், எதிர்பார்ப்புகளை வெகுவாக  குறைத்துக்கொள்வதும், இருப்பதை வைத்து திருப்தி அடைவதும் தங்களுக்கான மனநிம்மதியை அதிகரிக்கும், இந்த நேரத்தில் தாங்கள் வைக்கும் அகலகால் மீண்டுவர முடியாத ஆதாளபாதாளத்தில் தள்ளிவிடும் என்பதால் எவரின் கருத்துக்கும், ஆசை வார்த்தைக்கும் செவிசாய்க்காமல், தங்களின் அறிவு சொல்லும் வழியில் நேர்மையாக நடைபோடுவது நல்லது, பொது வாழ்க்கையில் உள்ளோர் மிக கவனமாக இயங்குவது நல்லது இல்லையெனில் வீண் அவப்பெயர் உண்டாக வாய்ப்பு உள்ளது.

குறிப்பு :

மேற்சொன்ன ராகுகேது பெயர்ச்சி பலன்கள் என்பது தங்களது சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா புத்தி ஆயுள் ஸ்தானம் மற்றும் குடும்ப ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசா புத்தி ஆயுள் ஸ்தானம் மற்றும் குடும்ப ஸ்தான பலனை ஏற்று நடத்தவில்லை எனில் கோட்சார ரீதியாக யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில்கொள்க 

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

0944335569

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக