செவ்வாய், 11 டிசம்பர், 2012

காற்று தத்துவ ராசிகளின் தன்மையும், சுய ஜாதகத்தில் வலிமை பெரும் பொழுது தரும் நன்மைகள் !



கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மிதுனம் உபய காற்று தத்துவ ராசியாகவும், துலாம் சர காற்று தத்துவ ராசியாகவும், கும்பம் ஸ்திர காற்று தத்துவ ராசியாகவும் இயற்கையால் வகைபடுத்த படுகிறது , ஒருவருக்கு சுய ஜாதக அமைப்பில் மேற்கண்ட காற்று  தத்துவ ராசிகள் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் பெரும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் .

பொதுவாக சுய ஜாதகத்தில் மேற்கண்ட ராசிகள் ஜாதகருக்கு நல்ல நிலையில் இருந்தால் , ஜாதகரின் அறிவாற்றல் மிகவும் சிறப்பாக அமைந்து விடும் , தனது அறிவாற்றல் துணை கொண்டு சாதிக்காத விஷயங்களே இல்லை எனலாம் , சிறுவயதில் கல்வியில் சிறந்து விளங்கும் தன்மையை இயற்கையாக தந்துவிடும் , மேலும் விளைவு அறிந்து செயல்படும் நுணுக்கமான அறிவை பெற்றிருப்பது இவர்களின் தனி தன்மை , மேலும் கணிதம் , மற்றும் அறிவியல் , விண்வெளி ஆராய்ச்சி போன்ற துறைகளில் இவர்களின் பங்களிப்பை தவிர்க்க இயலாது , மேலும் மருத்துவ துறையில் தலை சிறந்த மருத்துவர்களின் ஜாதக அமைப்பில் இந்த காற்று தத்துவ ராசிகள் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை .

தனது வாரிசுகள் எந்த துறையில் சிறந்து விளங்குவார்கள் என்பதை பற்றி தெளிவாக பெற்றோர்கள் தெரிந்து கொள்ள உதவும் ராசிகள் இந்த காற்று தத்துவ ராசிகள் என்றால் அது மிகையாகாது , இதன் மூலம் ஒவ்வொருவரும் தன்னை பற்றிய சுய மதிப்பீடு செய்ய இந்த காற்று தத்துவ ராசிகள் நிச்சயம் உதவி புரியும் .

மிதுனம் உபய காற்று ராசி ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகருக்கு  தரும் நன்மைகள் :

தனது அறிவாற்றல் மூலம் மக்களுக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் , மிகுந்த நன்மைகளை செய்யும் அமைப்பை தரும் , இருப்பினும் ஜாதகருக்கு  சுயநலம் அதிகமாக மேலோங்கி இருக்கும் மற்றவருக்கு உதவினாலும்  அதில் தனக்கு ஏதாவது நன்மை இருக்குமாறு பார்த்துகொள்ளும்  தன்மை பெற்றவர்கள் , அதிக சுதந்திர மன நிலை கொண்டவர்கள் , கணித துறையில் சிறந்து விளங்கும் தன்மையை தரும் , வாழ்க்கையில் முன்னேற்றம்  என்பது சிறிது தாமதமாகவே கிடைக்கும் இருப்பினும் நிலைத்து  நிற்கும் , சமுதயாத்தில் சில மாற்றங்களை செய்யும்  தன்மையை ஜாதகருக்கு உண்டு .

 இவர்களின் அறிவாற்றல் நிச்சயம் மற்றவருக்கு  நன்மையை மட்டுமே செய்யும் என்பது தனி சிறப்பாக கருதலாம் , தான் நினைப்பதை நடத்தி முடிக்கும் தன்மை பெற்றவர்கள் , இளம் வயதில் கல்வியில் சிறந்து விளங்கும் தன்மை உண்டாகும் , கலைகளில் சிறந்து விளங்கும் தன்மை உண்டாகும் , குறிப்பாக , ஓவியம் வரைதல் , இசை கோர்த்தல் , இசை கருவிகளை சிறப்பாக இயக்கும் ஆற்றல், மனதில் உள்ளதை கலை நயமாக மக்களுக்கு  விரும்பும் விதம் விருந்தளிக்கும் படைப்பற்றல் ஜாதகருக்கு சிறப்பாக  அமைந்து விடும், மிதுனம் ஒருவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் அமர்வது  ஜாதகருக்கு தனது அறிவாற்றல் மூலம் எவ்வித பிரச்சனைகள்  வந்தாலும் எளிதாக சாமாளிக்கும் ஆற்றலை வழங்கி விடும் .

துலாம் சர காற்று ராசி ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகருக்கு  தரும்  நன்மைகள் :

ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் அமர வேண்டிய ராசி இதுவே , குறிப்பாக  சூரியன் , சந்திரன் , சனி , புதன் இந்த ராசியில் நல்ல நிலையில் அமரும் பொழுது ஜாதகரின் புகழ்  எட்டு திக்கும் எங்கும் உலகம் முழுவது  பரவும் , மக்களுக்கு பயன்படும் பல புதிய கண்டு பிடிப்புகளுக்கு சொந்தகாரர்கள்  இவர்களே , சிறந்த வியாபார நுணுக்கங்களையும் , நிர்வாக  திறமையையும் வாரி வழங்கி விடும் , புதுமை விரும்பிகள் வாழ்க்கையில் புதிய சூழ்நிலை மற்றும்  பொழுது போக்கில் அதிக நாட்டம் கொண்டவர்கள் , கலை துறையில் நீங்க இடம் பிடிக்கும் அளவிற்கு  புதிய சிந்தனைகளை சமுதாயத்திற்கு கொடுக்கும் படைப்பாற்றல்  பெற்றவர்கள் , இவர்களின் உதவி இல்லாமல் கலை துறையில்  எவ்வித புதிய படைப்புகளும் வர வாய்ப்பில்லை .

 மற்றவர்கள் வியக்கும் வண்ணம் ஒன்றும் இல்ல விஷயத்தை  வைத்துக்கொண்டே அதில் பல புதுமைகளை கொடுக்கும் சிந்தனை மற்றும்  அறிவாற்றல் இவர்களுக்கு இறைவன் கொடுத்த வர பிரசாதமே அன்றி வேறேது ? இந்த துலாம்  ராசி நல்ல நிலையில் இருப்பவர்களின் வசீகர சக்தி என்பது சற்று அதிகமே , இவர்களை விரும்பாத பிடிக்காத நபர்கள் மிக குறைவே , தன்னம்பிக்கை  , சுய கட்டுபாடு , எல்லோருக்கும் பிரதி பலன் பாராமல் உதவும் தன்மை , பொது மக்கள் சேவையில் சிறந்து விளங்கும் கடமை தவறாத  அரசு உழியர்கள் , மருத்துவ சேவையில் புதுமை மற்றும் உயிர்க்காக்கும் சிறப்பு சிகிச்சையில் பல விஷயங்களை அறிமுகம்  செய்யும் சிறந்த மருத்துவரகள் என இவர்களின் பட்டியல் நீளம் மிக மிக அதிகம் ஒருவருடைய சுய ஜாதகத்தில் இந்த துலாம் ராசி வலிமையாக இருந்தால்  அந்த ஜாதகர் வாழ்க்கையில் மிக விரைவாக முன்னேற்றம் பெரும் தன்மையை நிச்சயம் தரும் .

கும்பம் ஸ்திர காற்று ராசி ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகருக்கு  தரும் நன்மைகள் :

அதிர்ஷ்டம் மற்றும் அளவில்லா அறிவாற்றல் இரண்டும் ஒருங்கே அமைந்தவர்கள்  , குறிப்பாக தொழில் நுட்ப அறிவு மற்றவர்களை காட்டிலும் இந்த ஜாதக அமைப்பை பெற்றவர்களுக்கு ரொம்ப அதிகம் , புதிய வண்டி வாகனம் , புதிய தொழில் நுட்பம் வாய்ந்த கருவிகள் , மக்களுக்கு பயன்படும்  வீட்டு உபகரண பொருட்கள் தாயாரிப்பு , மோட்டார் எஞ்சின் தயாரிப்பில் புதுமை செய்யும் தன்மை , பழமையான பொருட்களை  தனது அறிவாற்றல் மூலம் சிறந்த பொக்கிஷமாக மாறும் திறன்  , கட்டிட கலை , சிற்ப கலை , கற் சிலை வடிக்கும் சிற்ப கலை வல்லுனர்கள் , மக்களை சந்தோஷ படுத்தும் இசை , திரைப்படம் , நடாகம் , போன்ற துறைகளிலும் சிறப்பான முன்னேற்றத்தை தரும் .

 ஜாதகரின்   புத்திசாலித்தனம் பலரது வாழ்க்கையில் நிலையான நல்ல மாற்றங்களை தரும் , இதனால் ஜாதகருக்கும் ஜாதகரை சார்ந்தவருக்கும் பல முன்னேற்றங்கள் உண்டாகும் , புதை பொருள் ஆராய்ச்சி , பழமையான புராதன பொருட்கள் மீதான ஆய்வுகள் , சரித்திர சம்பந்தம் பட்ட ஆய்வுகளில் உண்மை விஷயங்களை உலகிற்கு எடுத்து சொல்லும் ஆற்றல் , உயிரியல் , மருத்துவ ஆய்வு , வேதியல் , புவியல் ஆய்வுகள் போன்ற விஷயங்களில்  சிறந்து விளங்கும் தன்மை என ஜாதகருக்கு சிறப்பான ஆய்வுகளில் சிறந்து விளங்கும் அறிவு ஆற்றலை இந்த கும்ப ராசி நல்ல நிலையில் இருந்தால் ஜாதகருக்கு எவ்வித தடையும் இல்லாமல் வாரி வழங்கும் .

ஒருவருடைய ஜாதகத்தில் காற்று தத்துவ ராசிகள் சிறப்பாக அமைய பெற்றால் அறிவாளியாகவும் , காற்று தத்துவ ராசிகள் கடுமையாக பாதிக்க பட்டால் அறிவிலியாகவும் ஜாதகர் காணப்படுவார் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக