புதன், 9 ஜனவரி, 2013

சந்திரன் அமர்ந்த ராசியும் ஜாதகரின் மன இயல்பும் - பகுதி 1




ஒருவரின் மன ஆற்றலை நிர்ணயம் செய்யும் சந்திரன் , மேஷம் முதற்கொண்டு மீனம் வரை அமரும் பொழுது , ஜாதகரின் மன நிலையையும், என்ன ஆற்றல்களையும் , எவ்விதம் செயல்படுத்துகிறார் என்பதை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்திப்போம் .

மேஷம் : 

சந்திரன் இங்கு அமர்ந்து நல்ல நிலையில் இருப்பின் ஜாதகரின் மனம் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டே இருக்கும் , அதிரடியான பல முடிவுகளை சரியான நேரத்தில் சரியான விதத்தில் எடுக்கும் தன்மை பெற்றவர்கள் , தனது மன நிலையை எப்பொழுதும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆற்றல் பெற்றவர்கள் , சுய கட்டுபாடு , செயல்களில் வேகம் , நினைத்ததை சாதிக்கும் ஆற்றல் நினைத்ததை அடையும் யோகம் , சிறந்த நிர்வாக திறன் , அதிகாரம் செய்யும் மனோ நிலை , தனது கட்டுப்பாட்டில் அனைவரையும் வைத்திருக்கும் ஆற்றல், சமுகத்தில் சிறப்பான பதவி மற்றும் உயர்ந்த அந்தஸ்து , ஊர் மரியாதை நியாய தர்மங்களை எடுத்து உரைக்கும் பெரிய மனித தன்மை , பொது மக்களுக்கு காவல் செய்யும் யோகம் , அதிக மன வலிமை தேவை படுகிற காவல் துறை , ராணுவம் , தீயணைப்பு துறை , மக்களை பாதுகாப்பாக எடுத்து செல்லும் ஓட்டுனர் பணி போன்ற அமைப்புகளில் சிறந்து விளங்க செய்யும் , மேலும் ஸ்திரமான மன நிலை, அபரிவிதமான மன  ஆற்றலை இங்கு அமரும் சந்திரன் வாரி வழங்கி விடுவார் .

ரிஷபம் : 

சந்திரன் இங்கு அமர்ந்து நல்ல நிலையில் இருப்பின் ஜாதகர் நிலையான முடிவுகளை தெளிவாக எடுக்கும் ஆற்றல் பெற்றவர்கள் , கொஞ்சம் பயந்த சுபாவம் இருந்த போதிலும் , அதுவே ஜாதகருக்கு பாதுகாப்பாக அமையும் , தான் எடுத்த முடிவுகளை மறு பரிசிலனை செய்யாதவர்கள் , இறைவன் இவர்களுக்கு அதிக அதிர்ஷ்டங்களை வாழ்நாள் முழுவதும் தந்து கொண்டே இருப்பார் , எளிதில் மனம் கனியும் தன்மை பெற்றவர்கள் , ஏழை எளியவர்களுக்கு ஓடி வந்து உதவி செய்யும் மனம் கொண்டவர்கள் , தனது அன்பால் அனைவரையும் ஆதரிக்கும் தன்மை பெற்றவர்கள் , இவர்களை வீணாக சீண்டினால் கோபத்தின் உச்சத்திற்கே சென்றுவிடுவார்கள் , மனித உணர்வுக்கு மதிப்பு தரும் மென்மையானவர்கள் , இவர்களால் அதிகம் எவரும் பாதிக்க படுவதில் மற்றவர்களால் அதிகம் இவர்களே பாதிக்க படுகிறார்கள் , இருப்பினும் அனைத்தையும் பொறுமையாக ஏற்றுகொள்ளும் தன்மை பெற்றவர்கள் , நிலையான சொத்து சுக சேர்க்கையையும் சிறப்பான வாழ்க்கையையும் இங்கு அமரும் சந்திரன் வாரி வழங்கிவிடுவார்  .

மிதுனம் : 

சந்திரன் இங்கு அமர்ந்து நல்ல நிலையில் இருப்பின் ஜாதகர் சுதந்திரமே வாழ்க்கையில் சகல நன்மைகளையும் பெற்று தரும் என்ற மனபக்குவத்தை கொண்டவர்கள் , தனது பேச்சுக்கு அங்கீகாரம் எப்பொழுதும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் தன்மை பெற்றவர்கள் , இவர்களின் பொது நலத்திலும் ஒரு சுய நலம் கலந்தே நிற்கும் , பரந்த மனப்பான்மை பெற்று இருந்த  போதிலும் அதில் சுய லாபம் பார்க்கும் தன்மை இயற்கையாக ஜாதகருக்கு அமைந்துவிடும் , தனது மன ஆற்றல் மூலம் சகல கலைகளிலும் பல புதுமைகளை படைக்கும் தன்மை பெற்றவர்கள் , வாழ்க்கையில் எவ்வித சூழ்நிலையையும் சமாளிக்கும் மன நிலையை பெற்றவர்கள் , எதற்கும் கலங்காமல் எதிர்நீச்சல் போடும் மன நிலையை பெற்றவர்கள் , குறிப்பாக கல்வியில் சிறந்து விளங்கும் ஆற்றலை மிக அதிகமாக இங்கு அமரும் சந்திரன் வழங்குவார் , இவர்களின் செயல்களும் எண்ணங்களும் மற்றவர்களுக்கு எவ்விதத்திலாவது உதவிகரமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை , தனது அறிவாற்றலை முழுவதுமாக மன நிலையின் உதவி கொண்டு காரியம் சாதிப்பவர்கள் என்றால் அது மிகை ஆகாது , சிறப்பான புத்திசாலித்தனத்தையும் நுணுக்கமான அறிவாற்றலையும் இங்கு அமரும் சந்திரன் வாரி வழங்கிவிடுவார்  .

கடகம் :

சந்திரன் இங்கு அமர்ந்து நல்ல நிலையில் இருப்பின் ஜாதகர் பரிபூரண அதிர்ஷ்டத்தை முழுவதும் அனுபவிக்கும் யோகத்தை தரும் , ஜாதகரின் மன நிலையானது எப்பொழுதும் நேர்மறையான எண்ணங்களால் நிரம்ப பெற்று இருக்கும் , அந்த எண்ணங்கள் யாவும் ஜாதகருக்கு வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் விரைவான முன்னேற்றத்தை வாரி வழங்கும் , குறிப்பாக வண்டி வாகனம் , சொத்து சுக சேர்க்கை , நிலபுலன் சேர்க்கை , மக்கள் செல்வாக்கு , அரசியல் ஆதாயம் , பெரிய சொத்து சுக சேர்க்கை , உலகம் முழுவதும் சுற்றி வரும் யோகம் , பெண்கள் வழியில் இருந்து வரும் பேராதரவு , மக்கள் விரும்பும் பொருட்களின் வியாபாரம் மூலம் ஜாதகர் விரைவான முன்னேற்றத்தை பெரும் யோகம் , தன்னம்பிக்கை , நிலையான நிறைவான மன நிலை , தன்னால் இயன்ற அளவிற்கு பொது மக்களுக்கும்  உறவினர்களுக்கும் உதவி செய்யும் குணம் , இங்கு அமரும் சந்திரன் ஜாதகருக்கு விரைவான வளர்ச்சியையும் , உறுதியான மன நிலையையும் , நீடித்த அதிர்ஷ்ட வாழ்க்கையையும் 100 சதவிகிதம் நிச்சயம் பெற்று தருவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக