சனி, 12 ஜனவரி, 2013

சந்திரன் அமர்ந்த ராசியும் ஜாதகரின் மன இயல்பும் - பகுதி 2



ஒருவரின் மன ஆற்றலை நிர்ணயம் செய்யும் சந்திரன் , மேஷம் முதற்கொண்டு மீனம் வரை அமரும் பொழுது , ஜாதகரின் மன நிலையையும், என்ன ஆற்றல்களையும் , எவ்விதம் செயல்படுத்துகிறார் என்பதை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்திப்போம் .

சிம்மம் :

சந்திரன் இங்கு அமர்ந்து நல்ல நிலையில் இருப்பின் ஜாதகரின் மனம் மிகவும் பரிசுத்தமான கள்ளம் கபடம் அற்று ஒரு குழந்தையின் மன நிலையை ஒத்து இருக்கும், சந்திரன் சூரியன் சேர்க்கை நிலையில் இருந்து தரும் யோக பலன்களை நடைமுறை படுத்தும், முற்ப்போக்கு சிந்தனையும் ஆராய்ச்சி மனநிலையும் தரும், நான் யார் என்ற உண்மையின் விளக்கத்தை பெற மனம் எப்பொழுதும் ஒரு தேடுதல் உடனே இருக்கும், தன்னம்பிக்கை, சுய கட்டுபாடு, ஸ்திரமான மனநிலை , முடிவு செய்த பின் மாறாத தன்மை, தர்மம் நியாயம் போன்ற உண்மை விஷயங்களுக்கு கட்டுப்படும் தன்மை, சூரியனை போன்று அக இருளை அகற்றி, மற்றவருக்கும் தெளிவை தரும் யோக வாழ்க்கையில் வெற்றியை தரும் . 

 தனக்கு எவ்வித துன்பம் வந்த போதிலும் தன்னை நம்பியவர்களை காப்பாற்றும் தயாள குணத்தை தரும் தனக்கு சாதகமானதை செய்யாமல் மற்றவருக்கும்  சரியென்பதை செய்யும் உயர்ந்த குணத்தை தரும் , இதன் காரணமாகவே பல நேரங்களில் பல எதிர்ப்புகளை ஜாதகர் சந்திக்க வேண்டி வரும் , இருப்பினும் எதற்க்கும் அஞ்சாத நேர்மையில் இருந்து மாறாத குணத்தை தரும் , இவர்கள் அனைவரும் சிறு வயது முதற்கொண்டே ஏதாவது நிறைவேறாத ஆசைகளுடனே வாழ்க்கையை எதிர்கொள்ளும் அமைப்பை தருகிறது , நிறைய திறமைகள் இருந்தும் வெளி உலகிற்கு தெரியாமல் தன்னடக்கத்துடன்  வாழும் தன்மை பெற்றவர்கள் , இங்கு அமரும் சந்திரன் சுய ஜாதக ரீதியாக சிறப்பாக இருந்தால் ஜாதகரின் வாழ்க்கையில் சாதிக்க இயலாதது ஒன்றும்  இல்லை எனலாம் .

கன்னி :

சந்திரன் இங்கு அமர்ந்து நல்ல நிலையில் இருப்பின் தன்னை எதிர்பவர்க்கும் நன்மை செய்யும் மன பக்குவத்தை தரும் , எதற்க்ககவும்  எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது சுய உரிமையையும் , சுய மரியாதையையும் விட்டுகொடுக்க ஜாதகருக்கு  மனம் வராது , எதிர்ப்புகளை  ஜாதகர் தனக்கு சாதகமாக மாற்றி கொள்ளும் தனி திறமை இயற்கையாக  அமைந்திருக்கும் , பூமிக்கு அடியில் உள்ள நீர் மற்றும்  புதையல்கள் விஷயங்களை தனது மன ஆற்றல் கொண்டு சரியாக  கண்டுபிடிக்கு தன்மை ஜாதகருக்கு ஏற்ப்படும் மேலும் வரலாற்று விஷயங்களை சரியாக கணிக்கும் பேராற்றல் இயற்க்கை இவர்களுக்கு கொடுத்த கொடை எனலாம்,  இந்த குறிப்பிட்ட திறமையை  ஜாதகர் வளர்த்து கொள்வது அவசியம் .

சிறந்த மனோ தத்துவ நிபுணராக ஜாதகர் ஜொலிக்க இங்கு அமரும் சந்திரன் 100 சதவிகிதம் உதவி செய்வார் , மேலும் மற்று மருத்துவ முறைகளில் சிறந்து விளங்கும் தன்மையை தரும் , ஜாதகரின் மன ஆற்றல்  மூலமாகவும் , எண்ணத்தின் மூலமாகவும் மக்களுக்கு ஏதாவது ஒரு  வகையில் உதவி செய்து கொண்டு இருக்கும் தன்மையில் தனது தொழில் மற்றும் பணியை  அமைத்துகொள்ளும் வாய்ப்பை தரும் , இதை தவிர  மற்றவர்களின் மனதில் உள்ள விஷயத்தை உணர்ந்து கொள்ளும் ஆற்றல்  உண்டாகும் , இங்கு அமரும் சந்திரன் பிரபஞ்சத்தை உணர்ந்து கொள்ளும் விழிப்பு நிலையை தரும் .

துலாம் :

சந்திரன் இங்கு அமர்ந்து நல்ல நிலையில் இருப்பின் ஜாதகர் கலகலப்பாக  அனைவருடன் பழகும் தன்மையை தரும் , ஜாதகருக்கு பொது மக்களின்  ஆதரவு எப்பொழுதும் நிறைந்திருக்கும் , கலைகளில் சிறந்து  விளங்கும் பேராற்றலை வாரி வழங்கி விடும் , கலை துறையில் நல்ல பெயரும்  புகழும், சாதனை செய்யும் யோகம் உண்டு, குறிப்பாக இசையில்  சிறந்து விளங்கும் தன்மையும்  நல்ல ஞானத்தை தரும், ஒரு சிறந்த  சமுகத்தை உருவாக்கும் தன்மையும் உண்டாகும் , தனது சிறப்பான  சிந்தனை ஆற்றல் மூலம் தன்னை சார்ந்த மக்களுக்கு   முன்னேற்றமான எதிர்காலத்தை அமைத்து தரும் சக்தியினை தரும்.

இங்கே அமரும் சந்திரன் ஜாதகருக்கு சிறந்த நுணுக்கமான அறிவாற்றலை  தந்துவிடும் , எந்த ஒரு சூழ்நிலையையும் தனது அறிவாற்றல்  மூலம் சிறப்பாக எதிர்கொண்டு வெற்றியை பெரும் யோகம் உண்டு , செய்யும் தொழில் நேரம் காலம் பார்க்காமல் அயராது பாடு படும் குணத்தை தரும் , ஜாதகரை நம்பியவர்கள் நிச்சயம் நன்மையடைவார்கள் , தானும் முன்னேற்றம் கண்டு தன்னை நம்பியவர்களின் வாழ்க்கையிலும் முன்னேற்றத்தை  தரும் தன்மை கொண்டவர்களாக காணப்படுவார்கள் சந்திரன்  இங்கு அமர்வது அழியா உலக புகழ் பெரும் யோகத்தை தரும் .

விருச்சிகம் :

சந்திரன் இங்கு அமர்ந்து நல்ல நிலையில் இருப்பின் ஜாதகர் அதிக அளவில் மன  போராட்டத்தை எதிர்கொள்ளும் தன்மை பெற்றவராக இருப்பார் , மக்கள் நலனுக்காக போராடும் தன்மை பெற்றவர்கள் , எதிர்பாராத  நிகழ்சிகளால் சமுதயாத்தில் முக்கிய பதவிகளை ஏற்றுகொள்ளு  சூழ்நிலை ஏற்படும் , பெரிய மனிதர்களின் ஆதரவு , அவர்களின் மனதை  எளிதில் கவரும் தன்மை , அரசு வழிகளில் இருந்து வரும்  ஆதரவு , வேற்று இனத்தவர்களின் ஆதரவு மூலம் வாழ்க்கையில் மிக பெரிய பதவியை  பெற்றுத்தரும் , அந்த பதவிகளை நீடித்து சிறப்பாக செய்யும் யோகம்  உண்டாகும் , தனது சிறப்பன நடவடிக்கையின் மூலம் மக்கள் அனைவரிடமும் நல்ல பெயரும் புகழும் உண்டாகும் .

தனிபட்ட முறையில் ஜாதகரின் குணாதிசியத்தை எவராலும் கணிக்க இயலாது , இவரின் மனதில் உதிக்கும் எண்ணங்கள் யாவும் ஜாதகருக்கும், ஜாதகரை  சார்ந்தவர்களுக்கும் மிகப்பெரிய நன்மைகளை தொடர்ந்து வழங்கி கொண்டே இருக்கும் , குறிப்பாக ஜாதகர் பொது வாழ்க்கையில் வெற்றி பெரும் அளவிற்கு குடும்ப வாழ்க்கையில் நன்மை மற்றும் வெற்றி பெற இயலுவதில்லை , இருப்பினும் எதையும் தங்கும் இதயமாக ஜாதகர் இருப்பது  இறைவன் கொடுத்த வரமே , இங்கும் அமரும் சந்திரன் ஜாதகருக்கு  வாழ்க்கையின் உண்மை நிலையை உணர வைத்தது , பக்தி நிலைக்கு  எடுத்து செல்லும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக