புதன், 9 ஜனவரி, 2013

நீர் தத்துவ ராசிகளின் தன்மையும் , சுய ஜாதகத்தில் வலிமை பெரும் பொழுது தரும் நன்மையும் !



பொதுவாக கால புருஷ தத்துவ அமைப்பிற்கு கடகம் சர நீர் தத்துவ ராசியாகவும், விருச்சிகம் ஸ்திர நீர் தத்துவ ராசியாகவும் , மீனம் உபய நீர் தத்துவ ராசியாகவும் , இயற்கையால் வகை படுத்த படுகிறது , ஒருவருடை சுய ஜாதகத்தில் மேற்கண்ட நீர் தத்துவ ராசிகள் நல்ல நிலையில் அமரும் பொழுது ஜாதகர் பெரும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்திப்போம் .

சுய ஜாதக  ரீதியாக ஒருவருக்கு நீர் ராசிகளான கடகம் , விருச்சிகம், மீன ராசிகள் நல்ல நிலையில் இருந்தால் , ஜாதகர் நல்ல மனம் கொண்டவராகவும், பரந்த மனப்பான்மை உள்ளவராகவும் , தனது எண்ணத்தால் அனைத்ததையும் சாதிக்கும் பேராற்றல் கொண்டவராகவும் இருப்பார் , குறிப்பாக ஜாதகரின் மன நிலையை பற்றி தெளிவாக தெறிந்து கொள்ள இந்த பாவகங்கள் மிகுந்த உதவி புரியும் , சிறந்த ஆன்மீகவாதிகள் , தன்னம்பிக்கையாளர்கள் , மனோ தத்துவ நிபுணர்கள் , சிறந்த பேராசிரியார்கள் , கல்வியாளர்கள் , மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசு அதிகாரிகள் , அரசியல்வாதிகள் , சிறந்த தலைமை பொறுப்பை வகிக்கும் தலைவர்கள் போன்ற அமைப்பில் பெரிய பதவிகளை மேற்க்கண்ட ராசிகள் சுய ஜாதகத்தில் வலிமை பெறும் பொழுது , மிக எளிமையாக பெற்று தந்துவிடுகிறது .

கடகம் சர நீர் ராசி சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் பெரும் யோக பலன்கள் :

ஜாதகர் மிகுந்த யோகசாலி , பெருந்தன்மையான குணம் ஜாதகருக்கு சிறு வயது முதற்கொண்டே அமைந்து விடும் , தனது நடத்தையாலும் , செய்கையாலும் அனைவராலும் விரும்ப படும் குணத்தை பெற்று இருப்பார் , மேலும் ஜாதகர் மனதில் நினைக்கும் எண்ணங்கள் யாவும் எவ்வித தடையும் இல்லாமல் வெற்றி பெறும் , குறிப்பாக ஆய கலைகள் 64 லும் சிறந்து விளங்கும் ஆற்றல் இயற்கையாக அமைந்து விடும் .

 பூலோகத்தில் வாழ்வதற்கு உண்டான சொகுசு வீடு , வண்டி வாகனம் , நல்ல உணவு , மன மகிழ்விற்கு உண்டான வசதிகள் , நான்குகால் ஜீவன்கள் பெருக்கம் , குதிரை , செல்ல பிராணிகள் வாங்கும் யோகம் , மன திருப்தியுடன் செய்யும் காரியங்கள் , பொன் பொருள் சேர்க்கை , ஆடம்பர பொருட்களின் சேர்க்கை , போதும் என்ற மன நிலை , பொது மக்கள் நீடித்த ஆதரவு என சகல வழிகளிலும் , சகல வசதி வாய்ப்புகளையும் அள்ளித்தரும் ராசியாக கடகம் அமைகிறது , ஒருவருடைய சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டிய ராசிகளில் முதன்மை வகிப்பது இந்த கடக ராசியே என்றால் அது மிகையாகாது , ஆனால் சர லக்கினத்திற்கு இது பொருந்தாது .

விருச்சகம் ஸ்திர  நீர் ராசி சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் பெரும் யோக பலன்கள் :

 குடும்ப வாழ்க்கையில் ஜாதகர் நல்ல நிலையில் இருக்கவும் , இல்லறவாழ்க்கையில் இருந்து கொண்டே ஆன்மீகத்தில் சிறந்து விளங்கும் அமைப்பை  தரும் , திருமண வாழ்க்கையில் நிறைவான மகிழ்ச்சியையும் , திருமணத்தின் மூலம் யோக வாழ்க்கையையும் தரும் ராசி இந்த விருச்சக ராசியாக கருதலாம் , விருச்சககத்தில் நீர் தத்துவம் நல்ல நிலையில் இருப்பின் , ஒன்று நல்ல இல்லற வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தரும் அல்லது ஆன்மீக வாழ்க்கையில் மிக பெரிய வெற்றியை தரும் , மனித வாழ்க்கையின் சூட்சம விஷயங்களை புரிய வைக்கும் ராசி. 

மனதில் தெளிவையும் , மன உறுதியையும் , தார்மீக சிந்தனையும் , இறை நிலையின் புரிதலையும் தரும் , ஜாதகருக்கு இவை அனைத்தும் திடீர் எனவே நிகழும் , வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை ஜாதகருக்கு திடீர் திடீர் எனவே நிகழ்த்தும் , நேற்றுவரை சாமான்யவராக இருந்த நபர் , இன்று உலகம் போற்றும்  நபராக வளம் வரும் யோகம் உண்டாகும் , பொதுமக்கள் ஆதரவை அளவில்லாமல் பெற்று தரும் , இவரின் பேச்சுக்கு மக்கள் அனைவரும் கட்டுப்படும் தன்மை உண்டாகும் , வெளிநாடுகளில் இருந்து வெளி ஊர்களில் இருந்தும் ஜாதகருக்கு பெயரும் புகழும் உண்டாகும்  ஆனால் ஸ்திர லக்கினத்திற்கு இது பொருந்தாது .

மீனம் உபய நீர் ராசி  சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் பெரும் யோக பலன்கள் :

வாழ்க்கையை வாழ பிறந்தவர்கள் , இவர்களின் மன நிலை எதையும் தாங்கும் தன்மை கொண்டது , சாதாரண மனிதனாக இருந்து வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனைகளை படைக்கும் பேராற்றல் கொண்டவர்கள் , மேலும் தனது மன ஆற்றல் மூலம் புதிய பல கண்டுபிடிப்பை உலகிற்கு தரும் தன்மை கொண்டவர்கள் , இவர்களின் கண்டு பிடிப்பு , மக்களுக்கு அன்றாட தேவைகளை சிறப்பாக நிறைவேற்றி கொண்டு இருக்கிறது , எதற்கும் அஞ்சாதவர்கள் , தைரியம் , துணிவு , தன்னம்பிக்கை மிகுந்தவர்கள் , சுயநலம் பாராமல் பொது சேவையில் சிறந்து விளங்கும் தன்மை பெற்றவர்கள் .

ஆசிரிய பணிகளில் சிறந்து விளங்கும் யோகம் பெற்றவர்கள் , சமுதயத்தில் பல மாற்றங்களுக்கு அடிகோலும் நபர்கள் , மக்களின் சிந்தனையும் , நோக்கத்தையும்  எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள் , இவர்களின் பேச்சும் , செயல்களும் அனைவருக்கும் நன்மையே வாரி வழங்கும் , குறிப்பாக பெண்களின் ஜாதகத்தில் இந்த ராசி நல்ல நிலையில் இருப்பது அவசியம் , இல்லை எனில் குடும்பத்தில் மன நிம்மதி என்பதே இருக்காது , போற்றுவார் போற்றட்டும் , தூற்றுவார் தூற்றட்டும் போகட்டும் எல்லாம் கண்ணனுக்கே  என்ற எண்ணம் கொண்டவர்கள் , இருப்பதை வைத்து  நிறைவாக வாழும் தன்மை பெற்றவர்கள் ஆனால் உபய லக்கினத்திற்கு இது பொருந்தாது .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக