சனி, 16 பிப்ரவரி, 2013

உச்ச சுக்கிரன் குருவின் ஆட்சி வீட்டில் அமர்ந்து உடன் நீச புதன் இருக்கும் துலா லக்ன ஜாதகருக்கு நன்மை விளையும அல்லது தீமையா?




கேள்வி :

உச்ச சுக்கிரன் குருவின் ஆட்சி வீட்டில் அமர்ந்து உடன் நீச புதன் இருக்கும் துல லக்ன ஜாதகருக்கு நன்மை விளையும அல்லது தீமையா? ஏனென்றால் அது அவருக்கு 6 இடம் மற்றும் 12 , 6, 8 வீடுகளின் சம்பந்தம் உண்டாகிறது .இது என் நெடு நாள் ஐயம் .விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும் .

பதில் :

ஒருவருடைய சுய ஜாதகத்தை பற்றி பலன் சொல்லும் பொழுது அந்த ஜாதகரின் பிறந்த தேதி , நேரம் , இடம் ஆகியவை தெளிவாக தெரிந்து கொண்டு , அதனை அடிப்படையாக வைத்து , ஜாதக கணிதம் செய்து , பிறந்த நேரத்தின் படி ஜாதகருக்கு லக்கினம் எதுவென்று தெளிவாக தெரிந்து கொண்டு , லக்கினம் ஆரம்பிக்கும் பாகை வைத்து , பனிரெண்டு வீடுகளின் நிலையை அறிந்து பலன் சொல்லும் பொழுதே , ஜாதகருக்கு தெளிவான பதிலை சொல்ல இயலும் , தாங்கள் கேள்வியில் இருந்து நான் அறிந்துகொள்ள இயலுவது ஒன்று மட்டுமே , அது ஜாதகருக்கு துலா லக்கினம் , லக்கினதிபதியான சுக்கிரன் குருவின் வீடான மீனத்தில் உச்சம் பெற்று அமர்ந்து இருக்கிறார் , இவருடன் புதன் நீச்சம் பெற்று அமர்ந்து இருக்கிறார் இதனால் துலா இலக்கின ஜாதகருக்கு நன்மை விளையுமா ? தீமை விளையுமா ?  என்பது தங்களின் கேள்வி.

 இதற்க்கு உண்டான பதில் சொல்ல வேண்டும் எனில் முதலில் துலா லக்கினத்திற்கு அதிபதியான சுக்கிரன் ஆறாம் பாவகத்தில் தான் அமர்ந்திருக்கிறார் என்றால் நிச்சயம் , ஜாதகருக்கு தீமைதான் செய்வார் , அவர் உச்சம் பெற்று அமர்ந்திருந்தாலும் எவ்வித நன்மையையும் ஜாதகருக்கு இல்லை , ஒருவேளை சுய ஜாதகத்தில் பாவக அமைப்பின் படி மீனத்தில் உள்ள ஐந்தாம் பாவகத்தில் ( இதை லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை வைத்து நிர்ணயம் செய்ய வேண்டும் ) உச்சம் பெற்று அமர்ந்து இருக்கின்றார் என்று வைத்து கொள்ளுங்கள் , ஜாதகர் லக்கினத்திற்கு 100 சதவிகித நன்மையை செய்வார் .

எப்படி எனில் பாவக அமைப்பின் படி சுக்கிரன் ஆறில் அமர்ந்தால் , ஜாதகர் தனது மன நிம்மதியை தானே கெடுத்து கொள்வார் , ஜாதகர் எதிரிகளின் சூழ்சி வலையில் தானே சென்று மாட்டிக்கொள்ளும் மன நிலையை தரும் , மேலும் ஜாதகர் ஒரு மன நிம்மதியற்ற சூழ்நிலையிலேயே ஜீவித்து இருக்க வேண்டி வரும் , ஜாதகர் செய்யும் அனைத்து செயல்களுக்கும் அனைவரிடமும் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பும் , ஜாதகரால் அதை சமாளிக்க  இயலாமல் மனதை கெடுத்து கொண்டு லாகிரி வஷ்துகளுக்கு அடிமையாகும் சூழ்நிலையை தரும் , இதானால் ஜாதகரின் உடல் நிலை கடுமையாக பாதிக்க படும் .

 பாவக அமைப்பின் படி சுக்கிரன் ஐந்தில் அமர்ந்தால் , ஜாதகர் தனது மனதில் நினைக்கும் காரியங்களை சாதிக்கும் வல்லமையை தரும் , பரந்த மனம் , நன்மை தீமையை ஒன்றாகவே கருதும் மனநிலை , குலதேவதையின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் தன்மை , பெண் தெய்வங்களின் அருளாசி விரைவில் கிடைக்கும் யோகம் , எப்பொழுதும் சந்தோசமான மனநிலையுடன்  ஜாதகர் வாழும் தன்மை , மன நிலையை சிறப்பாக இருப்பதால் ஜாதகரின் உடல் நிலையில் எவ்வித  பாதிப்பையும் சந்திக்காத தன்மை என சுக்கிரனால் ஜாதகர் அதிக நன்மைகளை  பெறுவார் , குறிப்பாக சிறந்த சிந்தனை ஆற்றலும் , தன்னம்பிக்கையும் , உறுதியான  மனநிலையையும் ஜாதகர் எப்பொழுதும் கொண்டு இருப்பார் .

மேற்கண்ட பலன்கள் யாவும் ஜாதகருக்கு நடை பெற வேண்டும் எனில் தற்பொழுது நடக்கும் திசை மற்றும் புத்தி  எதுவென்றாலும் , லக்கினத்துடன் தொடர்பு பெற்று பலனை தரவேண்டும் அப்பொழுதுதான்  ஜாதகருக்கு மேற்கண்ட நன்மையோ ! தீமையோ ! நடை முறையில் வரும் , ஒரு வேலை  மேற்கண்ட அமைப்பில் ஜாதகம் அமைந்து நடை பெரும் திசை மற்றும் புத்திகள் வேறு வீடுகளின் ( பாவகத்தின் ) பலனை நடத்தினால் லக்கினத்திற்கு உண்டான பலனை ( நன்மையோ தீமையோ ) ஜாதகர் சிறிதும் அனுபவிக்க மாட்டார் .

அடுத்த கேள்வி நீச்சம் பெற்ற புதன் என்ன செய்வார் என்பதை பார்ப்போம் , மீனத்தில் நீச்சம் பெரும் புதன் துலா லக்கினத்திர்க்கு 12 ம் வீட்டிற்கு அதிபதியாக வருகிறார் , இவர் சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்து அமர்ந்திருந்தால் மீனத்தில் தனது வீட்டிற்கு ஏழில் அமர்ந்து,  நீச்சம் பெற்றிருந்தாலும் ஜாதகர் 12 ம் பாவக அமைப்பில் இருந்து அதிக நன்மைகளை பெறுவார் எடுத்துகாட்டாக , நல்ல மனநிம்மதி , எதிரிகளை பந்தாடும் வல்லமை , நல்ல நிம்மதியான தூக்கம் , அதிக முதலீடு செய்வதால் லாபம் , திருமண வாழ்க்கையில் நல்ல இல்லற சுகம் , தம்பதியர் ஒற்றுமை , பிறவி  பயனை முழுவதுமாக அடையும் யோகம் என அதிக நன்மைகளை பெறுவார் .

 ஒருவேளை சுய ஜாதகத்தில் பாவக அமைப்பின் படி மீனத்தில் ( புதன் தனது பாவகத்திர்க்கு ) உள்ள ஆறாம்  பாவகத்தில்  ( இதை லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை வைத்து நிர்ணயம் செய்ய வேண்டும் ) நீச்சம் பெற்று அமர்ந்து இருக்கின்றார் என்று வைத்து கொள்ளுங்கள் , ஜாதகர்  12 ம் பாவக அமைப்பில் இருந்து அதிக இன்னல்களை அனுபவிக்க வேண்டி வரும் , மேற்சொன்ன  நன்மையான பலன்களுக்கு எதிர்மறையான பலன்கள் நடைபெறும் .


மேலும் துலா லக்கினத்திர்க்கு 12 ம் வீட்டிற்கு அதிபதியாக வரும் புதன் ஒரு வேலை சூரியனுடன் 14 பாகைக்கு மேல் சேராமல் இருப்பின் ஜாதகருக்கு மீனத்தில் நீச்சம் பெற்று தனது வீட்டிற்கு  7 ல் அமர்வது மேற்க்கண்டவாறு தீமையான பலன்களையும் , 6 ல் அமருவது மேற்க்கண்டவாறு  நன்மையான பலன்களையும் வாரி வழங்கும் , இங்கே புதன் என்ற கிரகம் தனது  பாவகத்திர்க்கு இரண்டு விதமான தன்மையும் , நான்கு விதமான பலனையும் தரும் என்பதனை சிறந்த  ஜோதிட அறிவு கொண்டவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள இயலும் .

ஜோதிட தீபம் மேற்சொன்ன அனைத்து பலன்களும் சுய ஜாதகத்தை அடிப்படையாக கொண்டே நிர்ணயம்  செய்ய இயலும் , மேலும் தற்பொழுது நடக்கும் திசை மற்றும் புத்திகள் மேற்கண்ட பாவகத்தின் பலனை தொடர்பு படுத்தி நடத்தினால் மட்டுமே இது நடைமுறைக்கு வரும் , இல்லை  எனில் இவையாவும் சுய ஜாதகத்தில் நீறு பூத்த நெருப்பாக இருக்குமே அன்றி , எவ்வித  நன்மை தீமையும் தர வாய்ப்பில்லை என்பதை உணர வேண்டும் .

ஆகவேதான் ஜோதிட தீபம் தங்களது சுய ஜாதகத்தை பற்றி தெளிவு பெற , ஜாதகத்தின் உண்மை  நிலையை உணர்ந்து , அதன் வழியில் வாழ்க்கையை செம்மையாக அமைத்துக்கொள்ள  தனிப்பட்ட முறையில் ஜோதிட ஆலோசனை பெற்று கொள்ளுங்கள் என்று  அறிவுறுத்துகிறது , இப்படி பொதுவாக கேள்விகள் கேட்டால் , சரியான பதில் சொல்ல இயலாது என்பதை அன்பர்கள் அனைவரும் உணரவேண்டு என்று  பணிவுடன் வேண்டுகிறது .

எந்த ஒரு நல்ல விஷயங்களையும் முறைப்படி தெரிந்து கொள்வது , அதன் படி நடப்பதும் சம்பந்தபட்ட நபர்களுக்கு முழுமையாக  பலன்தரும் .

இதைதான் பெரியவர்கள் " மூத்தோர் சொல்லும் , முதிர்ந்த நெல்லிக்கனியும் , முன்னால் கசக்கும் பின்னல் இனிக்கும் " என்றனர் .

அதாவது பெரியவர்கள் கூறும் அறிவுரை முதலில் கேட்க்கும் பொழுதும் , முதிர்ந்த நெல்லிக்கனியும்  உண்ணும் பொழுதும் கசப்பாக தெரியும் , அதை அனுபவத்தில் உணரும் பொழுது இனிமையாக இருக்கும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969


4 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. hello sir,

    sorry forgot to mention time it is 17;46pm.these details for ur research oly.
    Regards,

    Eshwa Vijay

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அன்பரே !

      தனிப்பட்ட முறையில் ஜோதிட ஆலோசனை பெற , தாங்கள் எங்களது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் , மேலும் ஜோதிட ஆலோசனை கட்டணத்தை செலுத்தி முறையாக ஆலோசனை பெற்று கொள்ளுங்கள் , மேலும் விபரங்களுக்கு மின்னஞ்சல் அல்லது அலை பேசியில் தொடர்பு கொள்ளுங்கள் .

      நீக்கு