வியாழன், 22 ஜனவரி, 2015

சனி பெயர்ச்சி, விருச்சிக ராசிக்கு செல்லும் சனிபகவான் லக்கின வாரியாக தரும் பலன்கள் - மகரம்



சனி பகவான்  திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 02-11-2014 ஞாயிறு கிழமை அன்று இரவு 08-54 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். விருச்சிக ராசியில் சனி சுமார் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார், இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கும் சனி பகவான் வழங்கும் யோக அவயோக பலன்களை பற்றி நாம் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!   

ஜோதிடதீபம் ராசியை அடிப்படையாக வைத்து சனி பெயர்ச்சி பலன்களை வழங்காமல், ஏன் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் சொல்லுகிறது என்ற சந்தேகம் சிலருக்கு வரக்கூடும், லக்கினம் என்பதே ஜாதகத்திற்கு அடிப்படையானது, இந்த லக்கினம் எனும் முதல் பாவகத்தை வைத்தே ஒருவருக்கு சரியான ஜாதக பலன்களை சொல்ல இயலும், ராசியை வைத்து சொல்வது என்பது, பொது பலன்களாகவே இருக்குமே தவிர ஒரு ஜாதகருக்கு தெளிவான பதிலையும், பலன்களையும் தர வாய்ப்பில்லை என்பதால் ஒவ்வொரு லக்கினத்தருக்கும், இந்த சனி பெயர்ச்சி எவ்வித பலன்களை தருகிறது என்று தெளிவாக இனி வரும் பதிவுகளில் காண்போம்.

அடிப்படையில் ஒரு விஷயத்தில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே! சனி பகவான் தற்பொழுது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார், இனி வரும் 30 மாதங்கள் சனி பகவான் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார், விருச்சிகத்தில் அமர்ந்து  6ம் பார்வையாக மேஷ ராசியையும், 7ம் பார்வையாக ரிஷப ராசியையும், 10ம் பார்வையாக சிம்ம ராசியையும் பார்ப்பதால் இந்த ராசிகளுக்கு திருஷ்டி பலன் என்ற அமைப்பில் பலன் தருகிறார்.

இலக்கின ரீதியாக பலன்கான முனையும் அன்பர்கள் அனைவரது ஜாதகத்திலும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தும் பாவகம் கிழ்கண்ட ராசிகளில் அமைந்தால் மட்டுமே( அதாவது விருச்சிகம்,மேஷம்,ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் எந்த எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலனை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை தொடர்பு பெறுதல் ) ஜாதகருக்கு தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனிபகவான் நன்மையையோ, தீமையையோ செய்வார் என்பதை கருத்தில் கொள்க, எனவே தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட ராசிகளுடன் தொடர்பு பெருகின்றத என்பதை கவனிப்பது மிக முக்கியமானதாக ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது . 

மகர லக்கினம் :

மகர லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு 11ல் அமரும் சனி பகவான் மகர லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளை வழங்குகிறார், எண்ணம் போல் வாழ்க்கை என்பதற்கு இணங்க ஜாதகர் நினைக்கும் நல்ல காரியங்கள் யாவும் தங்கு தடையின்றி நடைபெறும், இதுவரை இல்லாத செல்வாக்கு மக்கள் ஆதரவு ஜாதகருக்கு திடீரென தேடிவரும், மனதில் நினைத்த எண்ணங்கள் யாவும் நடைபெறும் லட்சியங்கள் கைகூடும், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கை உண்டாகும், ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து 100% விகித யோக வாழ்க்கையை பெரும் நல்ல நேரமாக இதை கருதலாம், ஜாதகர் தான் செய்யும் தொழில் வழியில் இருந்து மிகுந்த முன்னேற்றத்தை இனிவரும் காலங்களில் பெறுவார் குறிப்பாக உணவு சார்ந்த தொழில்கள் அல்லது விவாசாய உற்பத்தி பொருட்கள், நீர் தத்துவம் சார்ந்த தொழில்களில் இருப்பவர்களுக்கு மிகுந்த அதிர்ஷ்டமும் லாபமும் உண்டாகும்.

4ம் பாவகத்தை பார்வை செய்யும் சனி பகவான் ஜாதகருக்கு திடீர் சொத்து சுகத்தை வாரி வழங்குகிறார், தனது பெயரில் உள்ள சொத்து அல்லது வண்டி வாகன விருத்தி பெரும் யோகத்தை தருகிறார், இருப்பினும் இது சார்ந்த தொந்தரவுகளும் ஏற்ப்படும் வண்டி வாகனத்தில் பழுது, சொத்து அல்லது வீடு போன்றவற்றில் பழுது ஏற்ப்பட்டு சரி செய்யும் தன்மையை தருகிறார், விரையத்தின் பேரில் லாபம் உண்டாகும் , ஜாதகர் பயணங்களில் அதிக கவனமாக இருப்பது நலம் தரும், வண்டி வாகன அமைப்புகளில் பயணிக்கும் பொழுது பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்துகொள்வதும், எதிரில் வரும் வாகனங்களை கருத்தில் கொண்டு இயக்குவதும் அவசியம், கவனக் குறைவுடனும் தூக்க கலக்கத்துடன் வாகங்களை இயக்குவது பெரிய ஆபத்தில் சிக்க வைக்கும், இது தங்களுக்கும் தங்களை சார்ந்தவர்களுக்கும் பாதிப்பை தரக்கூடும், வண்டி வாகனங்களுக்கு சேதாரத்தை தர கூடும், தனது பெயரில் உள்ள சொத்துகளை கவனமாக பாதுக்கக்க வேண்டி வரும்.

5ம் பாவகத்தை பார்வை செய்யும் சனி பகவான் தங்களுக்கு அறிவு சார்ந்த விஷயங்களில் சிறு சிறு தொந்தரவுகளை தந்த போதிலும், நிறைவான வருமான வாய்ப்பை தங்கு தடையின்றி செய்வார், கல்வி காலங்களில் உள்ள அன்பர்கள் மிக கவனமுடன் தேர்வுகளை எதிர்கொள்வது நலம் தரும், சிந்தனை ஆற்றல் சில நேரங்களில் பாதிப்பை பெறுவதற்கு உண்டான சூழ்நிலைகள் உருவாகும் என்பதால் நன்கு ஆலோசனை செய்து எந்த ஒரு முடிவையும் எடுப்பது நலம் தரும், குடும்ப வாழ்க்கையில் உள்ள நபர்கள் தேவையற்ற விஷயங்களை விவாதிப்பதை தவிர்ப்பது நலம் தரும், சிறு சிறு பிரச்சனைகளை உடனடியாக பேசி தீர்வு காண்பது  நலம் தரும் அலட்சியமாக இருந்தால், பின்னாளில் பெரிய பாதிப்பை தரும், வருமானம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகளை சரியாக கையாள்வது சால சிறந்தது, சரியான திட்டமிடுதல் தங்களுக்கு மிகுந்த நன்மையை வாரி வழங்கும், குடும்ப உறவுகளுடன் ஒற்றுமை காண்பது அவசியம், விட்டுகொடுத்து செல்வது சகல நிலைகளில் இருந்தும் நன்மை தரும்.

8ம் பாவகத்தை வசீகரிக்கும் சனி பகவான் தங்களுக்கு எதிர்பாராத சோதனைகளை தரக்கூடும், முன் பின் யோசிக்காமல் எடுக்கும் அத்தனை முடிவுகளும் தங்களுக்கு எதிராக திரும்பும், மேலும் சிந்தித்து செயல்படும் தன்மையை வெகுவாக குறைக்கும், தங்களுது உழைப்பிற்கு உண்டான ஊதியம் கிடைப்பது சற்றே கடினம், தங்களது குல தெய்வத்தை முறையாக வழிபடுவது சகல நிலைகளில் இருந்தும் நன்மை தரும், எடுத்த காரியங்கள் செவ்வனே நடைபெற இறை அருளின் கருணையை நாடுவது நலம், கோவில் வழிபாடுகளில் அதிக கவனம் செலுத்துவதும், சிறந்த ஆன்மீக குருவை நாடி சரியான வழிகாட்டுதல்களை பெறுவதும் தங்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை பெற்று தரும், சிந்திக்கும் திறனை கடுமையாக பாதிப்பதால் தாங்கள் அதிகாலையில் எழுந்து சூர்ய நமஸ்காரம் தொடர்ந்து அனுதினமும் செய்துவருவது சகல நன்மைகளையும் தரும், மனதை ஒரு நிலை படுத்தி சுய கட்டுபாடுடன் நடந்து கொள்வது தங்களின் கடமை.

மகர இலக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை மற்றும் புத்தி மேற்கண்ட 11,4,5,8ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட  சனிபகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசை 11,4,5,8ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க, வாழ்த்துகள் . 

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக