புதன், 7 ஜனவரி, 2015

சாய கிரகமான ராகு கேது சுய ஜாதகத்தில் வழங்கும் தனிப்பட்ட பலாபலன்கள்!




ராகு கேதுவாக கிரக அந்தஸ்து பெற்ற சுவர்ணபானு பிறப்பில் அரக்க  குலத்தை சார்ந்தவராக இருந்த போதிலும், தனது அறிவு திறனாலும், மாறுபட்ட சிந்தனையாலும் தேவர்களுக்கு மட்டும் கிடைக்க இருந்த அமுதத்தை அருந்தி, தெய்வ நிந்தனைக்கு ஆளாகி, விடா முயற்ச்சியாக இறை அருளின் கருணையை பெற்று, எவருடனும் ஒப்பிட முடியாத வல்லமையை பெற்று "ராகு கேது" கிரகமாக அந்தஸ்த்து பெரும் அமைப்பை பெற்றனர், மேலும் ஜாதக அமைப்பில் சாயகிரகங்கள் என்று வழங்கப்பட்டும், மற்ற கிரகங்களுக்கு இல்லாத தனிப்பட்ட செயல்பாடுகளையும், வலிமையையும் பெரும் தன்மையை பெறுகின்றனர் இந்த நிழல் கிரகங்கள் என்றால் அது மிகையில்லை.

சுய ஜாதகத்தில் வலிமை அல்லது வலிமை அற்ற தன்மையில் இருந்தாலும் , சம்பந்தபட்ட ஜாதகருக்கு வாழ்க்கையில் சிறப்பாக வாழ்வதற்கு உண்டான வழிகாட்டுதலை சிறப்பாக எடுத்து சொல்லும் ஆற்றல் ராகுகேதுவுக்கு நிச்சயம் உண்டு, நல்ல நிலையில் உள்ள ஜாதகர் எவ்வளவு விரைவில் யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தருகிறார்களே, அதே அமைப்பை பாதிக்க பட்ட ஜாதகத்துக்கும் தங்கு தடையின்றி ராகு கேது வாரி வழங்கும், இருப்பினும் ஜாதகர் குறிப்பிட்ட பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு உண்டான சரியான வாய்ப்பை நிச்சயம் தருகின்றனர்.

ராகு கேது கிரகங்களால் பாதிக்க படும் அன்பர்கள்! நிச்சயம் அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு உண்டான வழிமுறையை இறை அருளின் கருணையினால் நிச்சயம் பெறுவார்கள், சில அன்பர்களின் விடா முயர்ச்சியும், மாறுப்பட்ட அறிவு திறனும் சிறப்பாக செயல்பட இந்த அமைப்பே காரணம், எவ்வித துன்பத்தையும் எதிர்கொள்ளும் வல்லமையை சாயகிரகங்கள் வாரி வழங்கிவிடுவார்கள், உடல் ரீதியாக வரும் இன்னல்களை ராகுவும், மன ரீதியாக வரும் இன்னல்களை கேதுவும் சிறப்பாக எதிர்கொண்டு ஜாதகரை வாழ்க்கையில் சிறப்பான யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை 100% விகிதம் வழங்கிவிடுவது கவனிக்க தக்க விஷயமாக ஜோதிடதீபம் கருதுகிறது.

உடல் ரீதியாக வரும் பொழுது ராகு பகவான் ஜாதகரை மிகுந்த அளவில் உடல் பலத்தையும், வலிதாங்கும் உடல் அமைப்பையும், எந்த ஒரு சூழ்நிலையையும், சீதோஷ்ண நிலையையும் தாங்கும் வலிமையை தருகிறார், இறுதி வரை போராடும் உடல் வலிமையையும், எளிதில் வெற்றிகொள்ளும் சூட்சம விஷயங்களையும், உடனுக்கு உடன் பரிசோதனை செய்துகொள்ளும் வாய்ப்பையும், சந்தர்ப்பத்தையும் அமைத்து கொடுப்பது ராகு பகவானின் தன்மையே, மேலும் ஜாதகர் ஆய்வு நோக்கத்திலோ, புதிய கண்டுபிடிப்பு  நோக்கத்திலோ செய்யும் விஷயங்கள் 100% விகித வெற்றி வாய்ப்பை தருவதற்கு உண்டான சந்தர்ப்பத்தை ஏற்ப்படுத்துவதும், ராகு பகவானே என்றால், அது மிகையில்லை, ஒரு ஜாதகர் போராடி வாழ்க்கையில் வெற்றி பெறுவது ராகுவின் கருணையினாலே.

மன ரீதியாக வரும் பொழுது கேது பகவான் ஜாதகருக்கு புலனுக்கு எட்டாத அறிவு சார்ந்த விஷயங்களை மிக எளிதாக உணரும் வண்ணம் வழிவகை செய்கிறார், சூட்சம அறிவு திறன் பிரபஞ்ச ரகசியம், தன்னிலை உணரும் ஆற்றல், தவ வலிமையின் மூலம் பல அறிய சாதனைகளை செய்யும் தன்மை, பின் வருவதை முன் உணரும் ஆற்றல், எடுத்த காரியத்தை சரியான திட்டமிடுதலுடன் சிறப்பாக நடத்தும் தன்மையை தருவது கேது பகவானே, பல மனிதர்களின் திட்டங்கள் அனைத்தும் நடைமுறைக்கு வாராமல், வெறும் திட்டத்துடனும் கற்பனையாகவும் நின்று விடுவதற்கு காரணகர்த்த கேது பகவானே என்றால் அது மிகையில்லை, அறிவு திறனையும் அது சார்ந்த மன ஆற்றலையும் பன்மடங்கு வலிமை சேர்க்கும் தன்மை பெற்றவர் கேது பகவான் என்றால் அது மிகையில்லை, ஜாதகரை மிக எளிமையாக வாழ்க்கையில் வெற்றி பெற செய்யும் தனித்துவமான ஆற்றல் கேது பகவானுக்கே நிச்சயம் உண்டு.

பொதுவாக ராகுகேது ஜாதகம், சர்ப்பதோஷம், நாக தோஷம், காலசர்ப்ப தோஷம் என்ற வார்த்தை விளையாடல்களை நம்பி, தங்களின் சுய ஜாதகத்தில் ராகு கேதுவின் வலிமையை உணராமல் வாழ்க்கையின் சிறப்பு முன்னேற்றங்களை தவறவிடாதீர்கள் அன்பர்களே! தாங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒருவகையில் நன்மையை தர சாயாகிரகங்கள் தயார் நிலையிலேயே உள்ளனர் என்பதை மறவாதீர்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக